31. காதலோ துளி விஷம்

4.6
(179)

விஷம் – 31

சற்று நேரத்தில் யாழவனின் வீட்டிற்கு வந்த மருத்துவரோ அவனைக் கேள்வி கேட்டு குடைந்து எடுத்து விட்டார்.

அவர் கட்டுப்போட்டிருந்த கையில் அல்லாமல் மற்றைய கரத்திலும் காயம் இருப்பதைப் பார்த்து கவனமாக இருக்கும் படி அவனை எச்சரித்தவர் மீண்டும் அவனுடைய உடைந்த கரத்திற்கு கட்டுப்போட்டு முடித்துவிட்டு அவர் சென்றுவிட அவனை விட்டு விலகி தனியாக வந்த அர்ச்சனாவுக்கோ யாரிடமாவது இந்த விடயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் போல இருந்தது.

அவளால் தனியாக சிந்திக்க முடியவில்லை.

எந்த ஒரு முடிவையும் உறுதியாக எடுக்கவும் முடியவில்லை.

தன்னிடம் பொய் கூறியதற்காக கையையே உடைத்துக் கொண்டு வந்து நிற்கின்றானே

இந்த நினைவே அவளை பெரிதாக அதிரச் செய்தது.

என்னைப் பார்ப்பதற்காக கையை உடைத்துக் கொண்டவன் ஒருவேளை நான் மொத்தமாக விலகிச் சென்றால் மறுபடியும் ஏதாவது செய்து விடுவானோ என்ற அச்சம் அவளுக்குள் வேகமாக பரவியது.

அவனுக்கு ஒன்றென்றால் பதறித் துடிக்கும் தன் இதயத்தை உணர்ந்து கொண்டவள் விழிகளை மூடிக் கொண்டாள்.

விழிகளை மூடிக் கொண்ட அடுத்த நொடியே அவனுடைய காதல் முகம் தெரிய,

ஏனோ அவன் மீது இரக்கம் சுரந்தது அவளுக்கு.

இன்னும் அவன் சாப்பிடவில்லை என்பதை நினைவு கூர்ந்தவள் அவனுடைய இரண்டு கரங்களிலும் காயம் இருப்பதால் அவனால் தனியாக சாப்பிட முடியாது என்பதை உணர்ந்து மீண்டும் உணவு எடுத்து வரச் சென்றாள்.

சற்று நேரத்தில் உணவு தட்டோடு அவனுடைய அறைக்குள் சென்றவளுக்கு அவனுடைய இறுகிப் போயிருந்த தோற்றம் பாதித்தது.

“என்னாச்சு யாழன் ரொம்ப பெயினா இருக்கா..?” எனக் கேட்டாள் அவள்.

“பெயினைப் பத்தி நான் யோசிக்கவே இல்ல.. நம்ம லைஃப் பத்திதான் யோசிச்சிட்டு இருக்கேன்.. டெய்லி இப்படி பிரச்சனையோடயே வாழ்க்கையை கொண்டு போக முடியாதில்லையா..?” என்றான் அவன்.

“சரி சாப்பிடுங்க.. நாம அப்புறமா இத பத்தி பேசலாம்..” என்றவள் உணவைப் பிசைந்து அவனுக்கு ஊட்டி விடத் தொடங்க மறுக்காமல் அவளுடைய கரத்தால் உணவை உண்ண தொடங்கினான் அவன்.

அதே கணம் அர்ச்சனாவிற்கோ அவளுடைய சகோதரி கீர்த்தனாவிடம் இருந்து அழைப்பு வர உணவுத் தட்டுடன் இருந்தவள் ஃபோனை எடுத்து அவுட் ஸ்பீக்கரில் போட்டுவிட்டு “சொல்லுடி எப்படி இருக்க..?” எனக் கேட்டாள்.

“நான் நல்லா இருக்கேன்கா.. நீ எப்படி இருக்க..?”

“எனக்கென்ன..? நான் நல்லா இருக்கேன்..” என்றவளுடைய போலி வார்த்தைகள் கீர்த்தனாவுக்கு புரிந்ததோ என்னவோ “உன்னோட குரல் ஏன் இவ்ளோ டல்லா இருக்கு..?” என அடுத்த கேள்வியைக் கேட்டாள் அவள்.

“இங்க கிளைமேட் கொஞ்சம் சேஞ்ச் ஆயிருக்கு கீர்த்தனா.. அதனாலதான் அப்படி இருக்குன்னு நினைக்கிறேன்..” என சமாளித்தாள் அவள்.

“அக்கா உன்கிட்ட ஒரு ஹேப்பி நியூஸ் சொல்லணும்..” என்ற கீர்த்தனாவின் குரலில் இருந்த உற்சாகம் அர்ச்சனாவையும் தொற்றிக் கொண்டது.

“ஹேய் என்னடி சொல்லு..?” என ஆர்வமாகக் கேட்ட அர்ச்சனாவின் முகத்தில் புன்னகை அப்பிக் கொண்டதை இரசித்துப் பார்த்தவாறு அவள் கொடுத்த உணவை மென்றான் யாழவன்.

“அக்கா..! அக்கா..! சீட் கிடைச்சிருச்சுக்கா…

கிரேஸன்ட் மெடிக்கல் யூனிவர்சிட்டி–ல ஃபைனல் ஷார்ட் லிஷ்டில் என் பேரு இருக்கு…

நாம நாளைக்கு போனோம்னா டைரக்ட் ஜானிங்தான்..” என்றாள் கீர்த்தனா.

“வாவ்.. என்னடி சொல்ற..? நிஜமாதான் சொல்றியா..? வாழ்த்துக்கள் கீத்தூமா.. இவ்வளவு நாள் நீ கஷ்டப்பட்டு படிச்சதுக்கு கை மேல பலன் கிடைச்சிருக்கு..” என குதூகளித்தாள் அர்ச்சனா.

மறுபுறம், சிரிப்பும் மகிழ்ச்சியும் கலந்து ஒலித்த கீர்த்தனாவின் குரல் திடீரென மெளனமாயிற்று.

“ஹேய் கீத்தூ..? என்னடி ஏன் சைலன்டா இருக்க..?”

“இ… இல்லக்கா Management quota–வாலதான் சீட் கிடைச்சுருக்கு.

காலேஜ் ஃபீஸ் மட்டும் இருபத்திரண்டு லட்சம்…

அதை முழுசா நாளைக்குள்ள டெபாசிட் பண்ணனும்.. இல்லனா என் பேர் ஆட்டோவா கேன்சல் ஆயிடும்னு சொல்லிட்டாங்க.” என்றாள் சோர்வோடு.

அவளுடைய குரல் நம்பிக்கை இன்மையோடு ஒலித்தது.

அர்ச்சனா பேச முடியாமல் திணறிப் போனாள்.

அவர்களின் குடும்பத்திற்கு அப்பாற்பட்ட பணமல்லவா அது..?

அவள் இத்தனை ஆண்டுகளாக சேர்த்து வைத்த நகைகளை சேர்த்தால் கூட இந்த வெகுமதி வராது என்பதை புரிந்து கொண்டவளுக்கு முகம் வாடிப் போனது.

“அக்கா எனக்கு நம்ம வீட்டோட நிலைமை தெரியும்கா.. நீ கவலைப்படாத.. பாத்துக்கலாம்… இது இல்லைன்னா கூட அடுத்த முறை இன்னும் நல்லா ட்ரை பண்ணலாம்..” என சோர்வான குரலில் கீர்த்தனா கூறிவிட்டு சிறிது நேரம் பேசிவிட்டு அலைபேசியை துண்டித்து விட, இவளிடமோ பெரு மூச்சு.

ஒன்றிரண்டு இலட்சங்கள் என்றால் கூட பரவாயில்லை 22 லட்சம் என்பது எவ்வளவு பெரிய தொகை.

அதை எப்படி புரட்ட முடியும்..?

யாழவனுக்கு ஊட்டி முடித்துவிட்டு தட்டை எடுத்துக்கொண்டு வெளியேற முயன்றவளை அழைத்தான் அவன்.

“சொல்லுங்க..?”

“நீ சாப்பிடலையா அச்சு..?”

“இல்ல பசிக்கல..”

“கொஞ்சமாவது சாப்பிடுமா…”

“சரி..” என ஒற்றை வார்த்தையில் பதில் கூறிவிட்டு அவள் வெளியே சென்று விட அவளுடைய சிரித்த முகம் வாடிப் போனதில் அவனும் சோர்ந்துதான் போனான்.

அதன் பின்னர் அவள் அவனுடைய அறைக்கு வரவே இல்லை.

இரவு நேரம் வந்த பின்பு கூட அவனுடைய வெண்ணிலவை அவனால் காண முடியாது போக படுக்கையில் இருந்து எழுந்து கொண்டவன் அவளுடைய அறையை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

அறைக் கதவைத் திறந்ததும் படுக்கையில் சுருண்டு படுத்திருந்த அர்ச்சனாவின் தோற்றம் அவனைப் பாதித்தது.

ஏதோ ஆதரவற்ற குழந்தை தனியாக இருப்பது போன்ற உணர்வு அவனைத் தாக்க வேகமாக அவளை நெருங்கிச் சென்றான் அவன்.

கதவு திறந்த சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தவளுக்கு தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த யாழவனின் முகம் விழிகளில் விழ, அதிர்ந்து எழுந்து அமர்ந்தாள் அவள்.

“என்ன யாழவன்..? ஏதாவது வேணுமா..?”

“இல்லடி..”

“ம்ம்…”

“கீர்த்தனாவுக்கு இப்போ பணம் தேவைப்படுதுல்ல என்கிட்ட கேட்கணும்னு உனக்கு தோணவே இல்லையா..?” என ஆற்றாமையுடன் கேட்டான் அவன்.

“உங்ககிட்டயா..? உங்க கிட்ட நான் எதுக்குங்க கேட்கணும்..? இன்னும் கொஞ்ச நாள்ல நான் இங்கே இருந்து போயிருவேன்.. நமக்கு டிவோர்ஸ் கூட ஆகலாம்… அப்படி இருக்கும்போது இவ்வளவு பெரிய அமௌன்ட் நீங்க எதுக்கு எனக்காகத் தரணும்..?”

“ஏன்டி என்ன விட்டு பிரிஞ்சு போகணும்னு முடிவே பண்ணிட்டியா..?”

“சேர்ந்து வாழ முடியும்னு தோணலை யாழவன்..”

“சரி விடு நம்ம பிரச்சனையை அப்புறமா பாத்துக்கலாம்.. நான் பணம் தர்றேன்.. அதை கீர்த்தனாவுக்கு அனுப்பிடு.. அவ பீஸ் கட்டட்டும்..”

“இல்ல எனக்குப் புரியல.. இந்த பணத்தை கொடுத்தா நான் உங்க கூட இருப்பேன்னு நினைக்கிறீங்களா? நீங்க என்ன பண்ணாலும் உங்க மேல இருக்க வெறுப்பு எனக்கு மாறாது.. உங்களோட உதவி எனக்கு தேவலை..” என்றாள் அவள்.

அவனுக்கு வெறுத்துப் போனது.

அதற்கு மேல் எதுவும் கூறாமல் அவளுடைய படுக்கையில் வந்து அமர்ந்தவன் அப்படியே அவள் அருகில் படுத்துக்கொள்ள,

“இப்ப எதுக்கு இங்க வந்தீங்க..?” என அதற்கும் சீறினாள் அர்ச்சனா.

“ஏய் நான் ஒன்னும் உன் மேல பாஞ்சு உன்ன ரேப் பண்ணிட மாட்டேன்.. கத்தாம தூங்கு..” என அதட்டி விட்டு அவன் விழிகளை மூடிக்கொள்ள பெருமூச்சோடு மறுபக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டாள் அவள்.

அவனுக்கோ அவள் அருகே இருந்தும் தனிமை சூழ்ந்தது.

அவளுக்கோ விழிகளில் நீர் பெருகியது.

அவன் கோபப்பட்டு கத்தியிருந்தாலும் அவனுடைய குரல் தடுமாறி கரகரத்து ஒலித்ததிலேயே அவனுடைய மனம் காயப்பட்டு விட்டது என்பதை புரிந்து கொண்டவளுக்கு மேலும் அழுகைதான் வந்தது.

இங்கே இருந்து தானும் கஷ்டப்படுவதுடன் அவனையும் நோகடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டவள் மௌனமாக கண்ணீர் வடித்தாள்.

****

காலையில் மெல்ல கண்விழித்தவள் தனக்கு அருகில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த யாழவனைப் பார்த்தவாறே அசையாது படுத்து இருந்தாள்.

அவளுடைய பார்வை அவளையும் மீறி அவனுடைய கரங்களின் மீது படிந்தது.

அருகில் இருந்த அலைபேசியை சார்ஜ் போடுவதற்காக எடுத்தவள் நிறைய தவறவிட்ட அழைப்புகள் இருப்பதைக் கண்டு புருவங்களை சுருக்கியவாறு அழைப்பு வரலாறைப் பார்த்தாள்.

கீர்த்தனாவிடம் இருந்துதான் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட தவறவிட்ட அழைப்புகள் வந்திருந்தன.

அவள் அனுப்பிய குறுஞ்செய்திகளும் வாட்ஸ் அப்பில் நிறைந்து கிடக்க அதனை திறந்து பார்த்தவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

‘அக்கா மாமா காலேஜுக்கு பீஸ் கட்டுவாருன்னு நீ சொல்லவே இல்லையே… நான் எதிர்பார்க்கவே இல்லை அக்கா… தேங்க்யூ சோ மச்… ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அக்கா.. லண்டன்ல இருந்து பே பண்ணி இருக்காங்கன்னு சொல்லி மெசேஜ் வந்ததும் எனக்கு எதுவுமே புரியல… அதுக்கப்புறம்தான் மாமா பேர்ல கேஷ் டெபாசிட் ஆயிருக்குன்னு சொன்னாங்க.. இது ரொம்ப பெரிய உதவிக்கா.. இது என்னோட கனவுன்னு உனக்கே தெரியும்ல… மாமாகிட்ட தேங்க்ஸ் சொல்லணும்.. நீ இப்ப தூங்கிட்டு இருப்பேன்னு தெரியும் பட் எக்சைட்மென்ட் தாங்க முடியாம நிறைய தடவை கால் பண்ணிட்டேன் சாரி.. நீ எழுந்ததும் எனக்கு கால் பண்ணு..” என்ற தங்கையின் மெசேஜை படித்தவளுக்கு உள்ளம் உறைந்து போனது.

பணத்தைக் கட்டி விட்டானா..?

ஆனால் ஏன்..?

அவன் எதற்கு கட்ட வேண்டும்..?

அவனை வேண்டாம் என நான் அவ்வளவு கூறிய பின்பும் ஏன் இப்படி எல்லாம் செய்கின்றான்..?

அவளுக்கோ கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது.

மெல்ல எழுந்து கொண்டவள் அந்த அறையில் இருந்த பல்கனியில் சென்று நின்று கொண்டாள்.

வெளியே தெரிந்த அதிகாலைக் காட்சி மிகவும் ரம்யமாக இருந்தாலும் அவளுக்கோ மனம் அதில் லயிக்கவே இல்லை.

சற்று நேரம் அங்கேயே நின்றவள் யாழவன் எழுந்து விட்டான் என்பதைப் பார்த்ததும் மீண்டும் அவனை நெருங்கிச் சென்றான்.

“குட் மார்னிங் அச்சு..”

“எதுக்கு நீங்க பணம் கட்டுனீங்க..?” சுத்தி வளைக்காமல் நேரடியாக கேட்டாள் அவள்.

“ஏன்டி நான் பண்ணாம வேற யார் பண்ணுவா..?” என ஆதங்கத்துடன் கேட்டான் அவன்.

“நான்தான் உங்களை வேணாம்னு சொல்லிட்டேனே… அதுக்கப்புறம் உங்க வாழ்க்கைல நிலையா இல்லாம போற இந்த உறவுக்காக எதுக்கு பணத்தை அதுவும் அவ்வளவு பெரிய தொகையை வேஸ்ட் பண்ணீங்க..?”

“நேத்து கீர்த்தனாக்கு சீட் கிடைச்சிடுச்சுன்னு சொன்னதும் நீ அவ்வளவு சந்தோஷப்பட்ட.. பணம் இல்லைன்னு தெரிஞ்சதும் உன்னோட முகம் அப்படியே வாடிப் போயிருச்சு.. அந்த சந்தோஷம் மறுபடியும் உன்னோட முகத்துல வரணும்கிறதுக்காக மட்டும்தான் நாம் பணம் கட்டினேன்.. உன்னோட முகத்துல சிரிப்பு வரும்னா 22 லட்சம் இல்ல என்னோட மொத்த சொத்தையும் கொடுக்கிறதுக்கும் நான் தயார்தான்..” என்றான் அவன்.

அவனுடைய காதலின் ஆழம் கண்ட வார்த்தைகளில் அவள்தான் திகைத்துப் போனாள்.

🌻🌻

அடுத்த அத்தியாயம் இன்றே வர 150 star ratings

Deal 🤝 ??

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 179

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!