“ஹலோ கார்த்தி எப்படி இருக்கீங்க..?” என்று மிகவும் குழைவாக மயக்கும் குரலில் பேசினாள். இனி எல்லாம் அப்படித்தானே..! ஏனென்றால் அவளது மொத்த சொத்தும் அவனின் பேரில் அல்லவா இருக்கின்றது.
இனி சொத்தை தன் பேரில் மாற்றும் வரைக்கும் அவனைக் காந்தக் குரலில் பேசி மயக்கத்தானே வேணும்.
கார்த்திகேயனிடம் இருந்தோ, “என்ன விஷயம்..” என்ற இரண்டு வார்த்தைகள் மட்டுமே வந்தது.
“சரியான சிடு மூஞ்சு ஒரு அழகான பொண்ணு வந்து அன்பா பேசினா இப்படியா மூஞ்சில அடிச்ச மாதிரி என்ன விஷயம்னு கேட்கிறது..” என்று முணுமுணுத்தாள் நிவேதா.
“ஹலோ..”
“ம்… லைன்ல தான் இருக்கேன்..”
“என்ன விஷயம்னு கேட்டேன் அது காதில விழல்லையா..?”
“எல்லாம் நல்ல்ல்ல்லா விழுந்துச்சு இன்னைக்கு நைட் எட்டு மணிக்கு நான் பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்கேன் நீங்க கட்டாயம் வரணும்..”
“சாரி நிவேதா நீங்க கூப்பிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் ஆனா என்னால வர முடியாது..”
“ஏன்..? ஏன்..?”
“நாளைக்கு நம்மளோட கல்யாணம் அது ஞாபகம் இருக்கா..?”
“அதைத்தான் மறக்கணும்னு நினைக்கிறேன் முடியல..” என்று முனுமுனுத்தாள் நிவேதா.
“என்னது..?”
“ஞாபகம் இருக்கு அதுக்கு என்ன இப்போ..?”
“கல்யாண வேலைகள் எல்லாம் உங்க வீட்ட பார்த்துக்கிறதுக்கு ஆட்கள் இருக்காங்க ஆனா எனக்குன்னு அம்மா மட்டும்தான் இருக்காங்க அவங்களுக்கும் உடம்புக்கு முடியல..”
“அதுக்கு..”
“என்ன நிவேதா கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம பேசுற என்னோட கல்யாண வேலைகளை நான் தான் பாத்துக்கணும் எனக்கு தலைக்கு மேல வேலை கிடக்கு நீ முதல் போன வை..”
“ஹலோ.. ஹலோ.. கார்த்தி போன வைக்காதிங்க இன்னைக்கு நைட் நான் பேச்சுலர் பார்ட்டி வச்சிருக்கேன் அந்த பார்ட்டிக்கு நீங்க கட்டாயமா வரணும் உங்கள என்னோட ஃப்ரெண்ட்ஸ்க்கு நான் இண்ட்ரடியூஸ் பண்ணி வைக்கணும் ..”
“இதெல்லாம் ஒரு முக்கியமான விஷயமா நிவேதா இந்தச் சில்லி தனமா விஷயங்களுக்கு எல்லாம் என்ன கட்டாயப்படுத்த வேணாம்..”
“இது எனக்கு முக்கியமான விஷயம் தான் கார்த்தி ப்ளீஸ் எனக்காக ஒரு கொஞ்ச நேரம் வந்து முகத்தை காட்டிட்டு போனா காணும்..”
“இல்ல நிவேதா என்னால முடியாது..”
“நான் இவ்வளவு கேட்கிறேன் ஒரு தடவை வந்துட்டு போனா என்ன ஓவரா தான் சீன் போடுறீங்க இப்பவே என்னோட விருப்பத்துக்கு நீங்க சம்மதிக்கிறீங்க இல்ல நாளைக்கு கல்யாணமான பிறகு என்னோட விருப்பத்தை நீங்க மதிப்பீங்கன்னு என்ன நிச்சயம்..?
என்னோட சின்ன சின்ன ஆசைகளுக்கெல்லாம் இப்பவே நீங்க முட்டு கட்ட போட்டா எப்படி..” என்று நிவேதா நீளமாக பேசிக்கொண்டு போக மறுபக்கம் பதிலே இல்லை.
‘என்ன சத்தத்தையே காணும்..’ என்று கையில் போனை எடுத்துப் பார்த்தால், அவன் அழைப்பை துண்டித்து ஒரு நிமிடமாகி இருந்தது.
“என்னது நிவேதாட கால கட் பண்ணிட்டானா..? இன்னைக்கு நீ பார்ட்டிக்கு வரலைன்னா நான் உன்னை தூங்கவே விட மாட்டேன் இன்னைக்கு இந்த நிவேதா யாருன்னு காட்டுறேன்..” என்று கருவிக்கொண்டு காரை வேகமாக ஓட்டத் தொடங்கினாள்.
பல தடவைகள் அவள் அழைப்பெடுத்தும் அவன் அதனை ஏற்கவே இல்லை. அந்த உதாசீனம் அவள் மீது கோபத் தீயைக் கொழுத்திப் போட்டது.
விஷமமாக சிரித்த நிவேதா சென்ற பாதையில் இருந்து காரை திருப்பி நேரே வந்து காரை நிறுத்தியது கார்த்திகேயனின் வீட்டின் முன்பு.
அவனது வீட்டு வாசலில் காரை நிறுத்தி வைத்தவள், இடைவிடாது ஹாரன் அடித்துக் கொண்டே இருந்தாள்.
அவளது இம்சை தாங்க முடியாமல் வெளியே வந்த கார்த்திகேயன்,
“என்ன நிவேதா இது சின்ன புள்ளத்தனமா இருக்கு உன்னோட பிடிவாதத்துக்கு அளவே இல்லையா..?
நான் தான் சொன்னேன்ல வீட்ட கல்யாண வேலைகள் எவ்வளவோ இருக்கு அதனால வர முடியாதுன்னு அதை காதிலையே வாங்காம நீ இப்படி பண்ணிக்கிட்டு இருக்க
என்னால வர முடியாதுன்னா வர முடியாது தான் கட்டாயப்படுத்தாத..” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே உள்ளிருந்து வெளியே அவனது தாய் வடிவாம்பிகை கையில் ஊன்றுகோலுடன் மெதுவாக நடந்து வந்தார்.
“என்னப்பா கார்த்தி என்ன பிரச்சனை..?” என்று சாந்தமாகக் கேட்டார் வடிவாம்பிகை.
“அதெல்லாம் ஒண்ணுமே இல்லம்மா நீங்க உள்ள போய் உட்காருங்க இப்போ எதுக்குமா எழும்பி வந்தீங்க..?” என்று அன்பாக கனிந்த குரலில் கேட்க, கார்த்திகேயனுக்கு இப்படியெல்லாம் பேசத் தெரியுமா என்று நிவேதா ஆச்சரியமாகப் பார்த்தாள்.
“இல்லப்பா ஏதோ சத்தம் கேட்டுச்சு அதுதான் வந்தேன்..” என்று கூறிக் கொண்டிருந்தவர் அப்போதுதான் அங்கு நிற்கும் நிவேதாவைப் பார்த்தார்.
“ஆஹ்… நிவேதாவா வந்திருக்கிறது உள்ள வாம்மா ஏன் வெளிய நிக்கிற..?”
“இல்ல ஆன்ட்டி அதெல்லாம் பரவால்ல இன்னைக்கு நைட் நான் என்னோட ஃப்ரண்ட்ஸ்க்கு பார்ட்டி வச்சிருக்கேன் அதுதான் கார்த்திகையும் கூட்டி போவோம்னு வந்தேன்..”
“அதுக்கு என்னமா கூட்டிட்டு போ அவனும் காலையிலிருந்து வேலை செஞ்சு செஞ்சு ரொம்ப டயர்டா இருக்கான் பார்ட்டிக்கு வந்தான்னா கொஞ்சம் ரிலாக்ஸா இருப்பான்..” என்று புன்னகையுடன் கூற, கார்த்திகேயன் உடனே தன் தாயைத் திரும்பி பார்த்து,
“என்னம்மா நீங்களும் அவளோட சேர்ந்துகிட்டு இப்படி பேசுறீங்க கல்யாண வேலைகள் எல்லாம் இன்னும் முடியல..” என்று கூற,
“அதெல்லாம் பரவால்லப்பா நான் பார்த்துக்கிறேன் உன்னோட ஃப்ரண்ட்ஸும் இருக்காங்க தானே மீதி வேலையை அவங்க கவனிச்சு கொல்லுவாங்க நான் வேணும்னா அவங்கள மேற்பார்வை பார்க்கிறேன்..” என்று கார்த்திகேயனை சமாதானப்படுத்த முயன்றார் வடிவாம்பிகை.
“அம்மா உங்களை டாக்டர் நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காங்க ஞாபகத்துல இருக்கட்டும்..”
“அட போடா என்னோட பையன்ட கல்யாணத்தை நான்தான் முன்னுக்கு நின்று நடத்தணும் எனக்கென்ன நான் நல்லாத்தான் இருக்கேன் நீ முதல் அந்த பொண்ணோட போயிட்டு வா பிடிவாதம் பிடிக்காத கார்த்தி அம்மா சொல்றேன்ல்ல..” என்று வடிவாம்பிகை அதட்ட,
அவரின் கண்டிப்பான குரலில் எதுவும் பேச முடியாமல் தலையசைத்து விட்டு, “சரிமா..” என்று கூறியவன் வேறு வழி இல்லாமல் உடனே புறப்பட்டு அவளுடன் சென்றான்.
காரில் அவள் அருகில் இருந்து அவன் ஏதோ ஒரு சிந்தனையில் இருக்க,
நிவேதாவோ ‘என்னால முடியாதது எதுவும் இல்லை..’ என்று மனதிற்குள் கூறியபடி வெற்றிப் பார்வை பார்த்து கர்வமாகச் சிரித்தாள்.
அவனுக்கோ மனதிற்குள் நிவேதாவை எண்ணி மிகவும் எரிச்சலாக இருந்தது.
‘காரியம் சாதிக்க வேண்டும் என்றால் தலைகீழாகவும் நடப்பாள் என்ன பெண் இவள் ச்சே எல்லாம் என் நேரம் எங்க அம்மாவை சொல்லணும்..’ என்று நிவேதாவை பற்றி மனதுக்குள் வறுத்து எடுத்து கொண்டிருந்தான் நமது நாயகன்.
பார்ட்டி நடைபெறும் ஹோட்டலும் வந்தது. அந்த மிகப்பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டலில் பத்தாவது தளத்திலே பார்ட்டிக்கான ஒழுங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
கார்த்திகேயன் நிவேதாவுடன் உள்ளே செல்லும் போதே நிவேதாவை பார்த்து,
“நிவேதா லிசின் டு மீ நான் 20 நிமிஷம் மட்டும் தான் இங்க இருக்க முடியும் அதுக்கப்புறம் நான் கிளம்பிடுவேன் நோ ஆகியூர்மென்ட ஓகே…” என்று நிவேதாவிடம் கண்டிப்பாக கூறிவிட்டான் கார்த்திகேயன்.
“ஓகே கார்த்தி ஓகே கூல் கூல்..” என்று அவனை சமாதானப்படுத்தி விட்டு, அவள் உணவு ஏனைய குளிர் பானங்கள் அனைத்தும் ஆர்டர் செய்து கொண்டிருக்க அவளது நண்பர்களோ
கார்த்திகேயன் எட்டரைக்கு செல்வதாக இருந்தவன் இன்னும் அவரது அவளது நண்பர்கள் வராமல் இருக்க அவர்களை எதிர்பார்த்த வண்ணம் அமைதியாக காத்திருந்தான்.
ஆனால் அவளது நண்பர்கள் பார்ட்டிக்கு வந்த நேரமோ 9 மணி. அங்கு வந்தவர்கள் உணவு, மதுபானம், ஆட்டம், பாட்டம் என்று அதிலேயே தங்களது முழு நேரத்தையும் செலவழித்தனர்.
கார்த்திகேயனுக்கோ கோபம் உச்சாணிக் கொம்பில் நின்றது. ஏனென்றால் அங்கு இருந்தவர்கள் யாருமே கார்த்திகேயனை திரும்பிக் கூட பார்க்கவில்லை.
இன்று பார்ட்டிக்கு வந்தே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த நிவேதா கூட நண்பர்களை கண்டதும் கார்த்திகேயனை கணக்கிலும் எடுக்கவில்லை. அங்கு அப்படி ஒருவன் இருப்பதாகவும் காட்டிக் கொள்ளவில்லை.
நிவேதாவின் பிடிவாதமும், பொறுப்பற்ற குணமும் அவளை எங்கு கொண்டு போய் சேர்க்கப் போகின்றதோ தெரியவில்லை.
நிவேதா இவ்வளவு மோசமாக நடந்து கொண்டும் கார்த்திகேயன் அமைதியாக இருப்பதற்கு காரணம் என்ன..?