அத்தியாயம் 6
அறைக்குள் நுழைந்த தெய்வானை தன் கணவனைத் தேடிட அவனோ ஏதோ கணக்கு புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு வரவு, செலவு கணக்கு பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவளது கொலுசு சத்தம் கேட்டதும் நிமிர்ந்தான் கார்த்திகேயன். அவளைப் பார்த்து புன்னகைத்தவன் தன் கையில் வைத்திருந்த கணக்கு புத்தகத்தை ஓரமாக எடுத்து வைத்து எழுந்து நின்றான்.
அவளுக்கு கூச்சமாக இருந்தது. முதல் முதலாக ஒரு ஆணின் முன் அலங்காரத்துடன், கையில் பால் சொம்புடன் வெட்கம் பிடுங்கித் திங்க மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்தாள்.
மனைவி அவளை வைத்த கண் எடுக்காமல் ரசித்துக் கொண்டு நின்றிருந்தான் அவளது மணவாளன்.
அவனிடம் பால் சொம்பினை நீட்டினாள் தெய்வானை. அதை வாங்கும் போது அவனது கை விரல் அவளது கை விரலைத் தீண்டிட பெண்ணவளோ தன் உடலில் மின்சாரம் பாய்ந்ததைப் போலத் துள்ளினாள்.
அவனுக்கும் அதே நிலை தான் அவள் அவனது பாதம் பணிந்திட, “தெய்வானை என்ன பண்ணுற” என்று மனைவியை தூக்கி நிறுத்தியவன், “இதெல்லாம் எதுக்குமா” என்றான்.
“மீரு எப்புடு சினிமா குடலேடா பாவா? (நீங்கள் சினிமா எல்லாம் பார்த்ததில்லையா பாவா?)” என்றாள் தெய்வானை.
“சினிமா பார்த்து தான் என் காலில் விழுந்தியா?” என்ற கார்த்திகேயன் தெய்வானையின் தோளைப் பற்றி தன் அருகில் அமர வைத்தான். அவனது தொடுதல் அவளை ஏதோ செய்தது. சொல்ல முடியாத உணர்வில் தத்தளித்தாள் அவனது நெருக்கத்தில்.
அவளது கையை எடுத்து தன் கைக்குள் வைத்தவன், “உனக்கு என்னை நிஜமாகவே பிடிச்சுருக்கா தெய்வானை” என்றான் கார்த்திகேயன்.
“பிடிக்காமல் தான் நீங்க கட்டுன தாலியை கழுத்தில் சுமந்து கிட்டு ஃபர்ஸ்ட் நைட் ரூம்ல உங்க பக்கத்தில் உரசிக் கிட்டு உட்கார்ந்து இருக்கேனாக்கும்” என்றாள் தெய்வானை.
அவள் சொன்ன பதிலிலும், சொன்ன விதத்திலும் சிரித்து விட்டான் கார்த்திகேயன்.
“எனக்கும் உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு தெய்வானை” என்றவன் அவளது கை விரலில் முத்தமிட்டான். அவளது உடலோ ஒரு நிமிடம் சிலிர்த்துப் போனது.
அவளைப் பார்த்து அழகாக புன்னகைத்தவன் அவளது கழுத்தில் ஒரு செயினை அணிவித்து விட்டான். “என்ன செயின் பாவா” என்ற தெய்வானையிடம், “நான் ஃபாரின்ல இருந்து வரும் போது என் மனைவியாக வரப் போற பொண்ணுக்கு வாங்கின செயின் கிட்டத்தட்ட பத்து வருசமா உனக்காக காத்துட்டு இருந்துச்சு இனி உன் கழுத்தில் இருக்கும். எப்போதும் கழட்டவே கூடாது” என்று அவன் கூறிட ,அவளோ சிரித்துக் கொண்டே தலையை ஆட்டினாள்.
“பாவா உங்க கையை நீட்டுங்க” என்ற தெய்வானையிடம் தன் கையை நீட்டினான் கார்த்திகேயன். அவனது கையில் ‘KD’ என்ற இன்சியல் போட்ட மோதிரத்தை அணிவித்தாள் தெய்வானை.
“இது என்னோட சம்பாத்தியத்தில் வாங்கினது என்னோட பாவாவுக்கு” என்ற தெய்வானை யின் நெற்றியில் முத்தமிட்டான் கார்த்திகேயன்.
அவனது முத்தத்தை கண் மூடி அவள் ரசித்திட புன்னகைத்தவன் அவளது கன்னத்தை கையில் தாங்கி அவளது விழிகளை பார்த்தான்.
அவளது விழிகள் முழுவதும் அவனுக்கான காதல் ததும்பிக் கொண்டு இருக்க அவனது இதழ்கள் அனிச்சையாக தேன் சொட்டும் அவளது செவ்விதழை நோக்கி பயணிக்க தன் கரத்தை அவனது இதழில் வைத்து தடுத்தாள் தெய்வானை.
“பாவா நீங்க இன்னும் பால் குடிக்கவே இல்லை” என்று அவள் டேபிளில் இருந்த சொம்பினை காட்டினாள். அவளைப் பார்த்து புன்னகைத்தவன் அந்த பால் சொம்பினை எடுத்து பாதி பாலை அருந்தி விட்டு மீதியை அவளிடம் நீட்டினான். அதை வாங்கி குடித்தவள் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவன் அவளிடம் இருந்து காலி சொம்பினை வாங்கி ஓரமாக வைத்து விட்டு மனைவி அவளின் அருகில் நெருங்கினான். அவளது வெண் பிஞ்சு விரல்களை தன் விரல்களால் வருடிக் கொடுத்தவன் அவளது கை விரல்களில் முத்தமிட்டு அவளது வலது கையை எடுத்து தன் நெஞ்சினில் வைத்தான்.
“உனக்கு ஒரு வாக்கு தரேன் தெய்வானை இந்த ஜென்மத்தில் உன்னைத் தவிர வேற எந்த பொண்ணையும் கனவுல கூட நினைக்க மாட்டேன். என் வாழ்க்கை முழுவதும் உன்னோட இருப்பேன். உனக்காக இருப்பேன். எந்த சந்தர்ப்பத்திலும் உன்னை யார்கிட்டேயும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்றான் கார்த்திகேயன்.
“நீ என்னோட மகாராணி” என்றவனின் தோளில் சாய்ந்து கொண்ட தெய்வானை, “பாவா நீங்க இதெல்லாம் சொல்லனும்னு எந்த அவசியமும் இல்லை” என்றாள்.
“இல்லை தெய்வானை அவசியம் தான் என்னை நம்பி தான் நீ கழுத்தை நீட்டின உனக்காக நான் உயிரையே கொடுக்கலாம்” என்று அவன் கூறிட அவனது விழிகளை பார்த்தவள் “எனக்காக வேண்டாம் நமக்காக உங்க உயிரை எனக்குள்ள நீங்க தாராளமா கொடுக்கலாம் பாவா” என்று வெட்கத்துடன் அவள் கூறிட முதலில் புரியாதவன் அவள் சொன்ன வார்த்தையின் அர்த்தம் புரிய அவளது கைகளை பிடித்திட வர அவளோ வெட்கத்தில் எழுந்து ஓடப் பார்க்க எட்டி அவளது புடவையை பிடித்து விட்டான்.
“எங்கே ஓடப் பார்க்கிற” என்ற கார்த்திகேயன் அவளது புடவையை பிடித்தபடி அவளை நெருங்கி வந்து அவளது முந்தானையை விட்டு அவளை கைகளில் ஏந்திக் கொண்டான்.
அவளோ வெட்கத்தில் தன் கரம் கொண்டு முகத்தை மூடிக் கொள்ள, “தெய்வானை கையை எடு” என்றான். “மாட்டேன்” என்று அவள் தலையை ஆட்டிட அவளது கைகளில் அவன் முத்தமிட அவள் கூச்சத்தில் கைகளை விலக்கிட அவன் கொடுத்த அடுத்த முத்தம் அவளது இதழில் பதிந்தது.
அவளோ விழிகளை விரித்து அதிர்ந்து போக அவனுமே அவள் கைகளை விலக்கி விடுவாள் என்று எதிர்பார்க்க வில்லை.
அவளது இதழை அவன் மெல்ல விடுவித்தவன் அவளை மெத்தையில் கிடத்தி அவளருகில் படுத்துக் கொண்டான்.
அவளது முகத்தை தன் புறம் திருப்பியவன் அவளது கண்களில் முத்தமிட்டான். அவளது நெற்றியில் தொடங்கி கண், காது, மூக்கு, கன்னம் என்று அவள் முகம் முழுவதும் முத்தமிட மங்கை அவளது சிவந்த முகமோ வெட்கத்தில் மேலும் மேலும் சிவந்தது.
உச்சி வகுடில் அவனுக்காக அவள் குங்குமம் வைத்திருக்க தன் இதழ் முத்தத்தை அவளது உச்சி வகுடிலும் ஆசையாக பதித்தான்.
மங்கை அவளது கூந்தலில் சூடி இருந்த மல்லிகை பூவின் மணம் அவனை பித்துக் கொள்ளச் செய்தது.
மங்கை அவளின் தேன் சொட்டும் கோவைப்பழம் போல சிவந்த இதழில் தேனைக் குடிக்க வண்டாக மாறியவன் அவள் இதழில் முற்றுகையிட்டான்.
கணவன் அவனின் இதழ் முத்தம் அவளையும் பித்துக் கொள்ளச் செய்தது. அவனது சட்டையை இறுக்கிக் கொண்டாள் தெய்வானை.
அவளது இதழில் என்ன கண்டானோ பிரிய மனம் இல்லாமல் மேலும் மேலும் அவளது இதழை தன் இதழுக்குள் சிறைப்படுத்தி வைத்துக் கொண்டான். மங்கை அவளோ மன்னவனின் இதழ் முத்தம் கொடுத்த போதையில் அவனை தன்னோடு அணைத்துக் கொண்டாள்.
நிமிடங்கள் கடந்த இதழ் முத்தமோ மனைவி அவள் மூச்சு விட சிரமம் கொள்கிறால் என்பதை அவன் உணர்ந்த பிறகே முற்றுப் பெற்றது.
அவனது கண்களில் அளவில்லாத காதலும், காதலுடன் சேர்ந்த காமமும் போட்டி போட மங்கை அவளோ நாணத்தில் முகம் சிவந்து அவனைக் காண முடியாமல் தலை கவிழ்ந்தாள்.
அவளது முகத்தை நிமிர்த்தியவன், “உனக்கு சம்மதம் தானே” என்று கேட்டிட அவளே நாணத்தை துறந்து அவனது வன் இதழை தன் மென் இதழால் சிறைபிடித்தாள்.
அது போதாதா அவளது மன்னவனோ அவள் இதழில் விட்ட யுத்தத்தை மீண்டும் தொடர்ந்தான். அவளும் அவனுக்கு சளைத்தவள் இல்லை என்பது போல அவனது இதழில் யுத்தம் செய்தாள் தன் இதழ் கொண்டு.
அவளது இதழை மெல்ல விடுவித்தவன் மங்கை அவளின் கழுத்து வளைவில் முகம் புதைக்க அவளோ சிலிர்த்து விட்டாள்.
அவனது கைகளோ புடவை விலகிய இடையை பிடித்திட அவள் மேனியெங்கும் மின்சாரம் பாய்வதைப் போல உணர்வுகள் பரவியது. மெல்ல மெல்ல அவனது கைகள் முன்னேறி மங்கை அவளது மேனி எனும் பொன் வீணையை மீட்டிட ஆரம்பிக்க அவளோ சொல்ல முடியாத உணர்வில் தத்தளித்தாள்.
“பாவா” என்று அவள் அணத்திக் கொண்டே இருக்க, அவனோ அவளது உடைகளுக்கு மெல்ல மெல்ல விடை கொடுத்திட அவளும் அவனது உடைகளுக்கு விடுதலை கொடுத்தாள்.
மங்கை அவளது பொன் மேனியில் தானே உடையாக மாறிப்போனான் காளையவன்.
தனது முப்பத்தேழு வயது சன்னியாச வாழ்க்கையை கலைக்க வந்த மேனகையாய் அவள் தோன்றிட அவளால் அவனது உடலில் ஏற்பட்ட ரசாயன மாற்றத்தை போக்கிட அவளிடமே தன் தேடலைத் தொடங்கினான் அவளது மன்னவன்.
ரதியைப் போல இருக்கும் மனைவி அவளை மன்மதனாய் மாறி காதல் கனைகளை தொடுத்தான் காளையவன் . அவன் தொடுத்த காதல் கனைகளை தாங்க முடியாமல் அவனுள் மேலும் மேலும் ஒன்றிப் போனாள் மங்கை. அவளுள் அவன் நிறைந்து அவளை தனக்குள் மேலும் அணைத்துக் கொண்டு அவளுள் அவன் புதைந்து கிடந்தான். தன் நெஞ்சோடு அவனை அணைத்துக் கொண்டு அவனிடம் மெல்ல மெல்ல தோற்றுப் போனாள் அவனது ஆசை மனைவி.
திறந்திருந்த ஜன்னல் வழியாக இவர்களின் மோன நிலையைக் கண்டு நிலவும் வெட்கம் கொண்டு மேகத்திற்குள்
மறைந்து கொண்டது.
இந்த இரவு நீளாதா என்று இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியாமல் மீண்டும் மீண்டும் காதல் கொண்டு ஒருவரில் ஒருவர் கலந்து சங்கமித்தனர்.
அவனைப் பிரிந்து அவள் எழப் பார்க்க அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டவன் அவளது நெஞ்சத்தை மஞ்சமாக்கி உறங்க ஆரம்பித்தான்.
அவனது தலை முடியை கோதி விட்டவள் அவனது நெற்றியில் முத்தமிட்டு அவனை அணைத்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தாள்.
இல்லற பந்தத்தின் இன்பத்தில் இருவரும் நிறைந்திருக்க ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டு நித்திரா தேவியின் ஆதிக்கத்தில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
நிலவு மகள் வெளிச்சம் நடு உச்சி நேரம் என்பதால் பகல் போல காட்சியளிக்க இங்கோ ஒருத்தி தூக்கமில்லாமல் நகத்தைக் கடித்துக் கொண்டு இருந்தாள்.
(….மயக்கியே..)