தேவை எல்லாம் தேவதையே…

4.6
(19)

தேவதை 14

வீட்டுக்குள் ஓடி சென்றவளுக்கு பைத்தியம் பிடிக்காத குறை தான்.. லூசு லூசு எப்படி டி ரோடு னு கூட பாக்காம அவன் இடுப்புல கைய போட்டு தூங்கியிருக்க.. பாவம் என்ன பண்ணிருப்பான் ரொம்ப நேரம் எழுப்ப ட்ரை பண்ணிருப்பான்..நா அசைஞ்சிருக்கவே மாட்டேன் அதான் ஒன்னும் செய்ய முடியாம எப்ப எழுந்திருப்பேன்னு பாத்துட்டு நின்றிருப்பான்… ஐயோ ஐயோ என தலையில் அடித்து ச் ச் ச வென வெறித்தனமாக நகத்தை கடித்து யோசித்துக் கொண்டிருந்தாள்…

தேவா விசில் அடித்தப் படியே சந்தோசமாக வீட்டிற்குள் நுழைந்தவன், டைனிங் டேபிளில் சாப்பாட்டு பையை வைத்து.., மா மா என சத்தம் போட்டு அழைக்க.. கலாவதி கிட்சேனில் இருந்து மகனின் குரல் கேட்டு ஓடி வந்தார்..

மகனின் முகத்தில் தெரியும் சந்தோசத்தைப் பார்த்தவர்.. புன்னகையுடன் அவன் அருகில் சென்று அமர்ந்து…

சார் என்ன செம ஜாலி மூட்ல இருக்குற மாதிரி தெரியுது.. என கிண்டல் அடிக்க

ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஜாலி தான் என தலையை ஆட்டி முடியை கோதிக் கொண்டவன், மா அப்புறம் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.. இன்னைக்கு தர்ஷி ஒரு சீனியர் பையன போட்டிங்கு கூப்பிட்டு வந்தா மா..

அவன் செம ரிச், உன் சாப்பாட சாப்பிட்டு பாராட்டி தள்ளிட்டான்..

நிஜமாவா டா!? என கலாவதி கேட்க

ஆமா மா, எனக்கு 1st டைம் உன்ன புகழறப்ப ரொம்ப சீன் மாதிரி தெரிஞ்சிது, ஆனா போக போக தான் அவன் உண்மையாவே ஆழ் மனசுல இருந்து அனுபவிச்சு சொல்லிருக்கானு புரிஞ்சிக்கிட்டேன்..

கலாவதி அவனை புரியா பார்வை பார்க்க… ஆமா மா அவனுக்கு சின்ன வயசுலேந்து அம்மா இல்லயாம், அவன் பிறந்தப்பவே இறந்துட்டாங்கலாம்.. இது வரைக்கும் யார்கிட்டயும் அத அவன் பெருசா ஷேர் பண்ணது இல்லயாம், எங்ககிட்ட தான் முதல் முறையா சொல்லிருக்கானாம்… பாவம் மா அம்மா இல்லாத வாழ்க்கை யாருக்கு பிடிக்கும்? என உணர்ச்சியில் பேச….

ஹ்ம்ம் அம்மானு ஒருத்தி இல்லனா ரொம்ப கஷ்டம் தான் பா… சரி அத விடு.. இது வரைக்கும் நீ இந்த பையன பத்தி அம்மாகிட்ட சொன்னதே இல்ல… தர்ஷினி கூப்பிட்டு வந்தான்ற.. அப்ப இந்த பையன் தர்ஷிக்கு புது பிரெண்டா? காலேஜ் போனதும் புது பிரெண்ட்ஸ்லாம் புடிக்கிறீங்க போல! அதும் சீனியர என சந்தேகமாய் கேட்க… தேவா என்ன சொல்வதென தெரியாமல் முழித்தான்…

என்னனு சொல்வான், தர்ஷினி அந்த வசியிடம் நன்றாக பழகி பேசிக் கொண்டிருப்பதை எப்படி சொல்வான்.. அவன் தாயின் மன ஓட்டம் தான் அவனுக்கு தெரியுமே! அவரையும் குழப்ப வேண்டாம் என எண்ணியவன்,

மா எங்களுக்கு நோட்ஸ் குடுத்து வசி தான் மா ஹெல்ப் பண்றான்.. அவன் கிட்ட பேசாம எப்புடி மா.. ரொம்ப நல்ல பையன் மா வீட்டுக்கு அடிக்கடி வரேன்னு சொல்லிருக்கான்.. அப்டி வந்தான்னா நல்லா பாத்துக்கோங்க என்றதும்,,

தன் மகனின் நல்லெண்ணெம் நினைத்து மெச்சிக் கொண்டவர் சரி டா இப்ப போ போய் குளிச்சிட்டு வா என சொல்லவும், சரி மா என்றவன் தன் அறைக்கு சென்று குளியல் அறைக்குள் புகுந்துக் கொண்டான்…,

தெரு முக்கில் நின்றிருந்தவன் ஹலோ ஹலோ ஹல்லல்லோ…. என போனில் ஜெய் கத்தி அழைக்க…

எதுக்கு லோ லோ னு கத்துற மெதுவா தான் பேசேன் என்றாள் எதிர் முனையில் அந்த மர்ம பெண்…

ஏன் புள்ள கால் பண்ணிட்டு எதுமே பேசலனா பின்ன என்ன பண்றதாம்.. சரி காலைல தான உன்ன திட்டிட்டு வச்சேன்.. திரும்ப எதுக்கு கால் பண்ற? உனக்கு சூடு சொரணை இல்ல? என்றான் ஜெய்

வாய உடைச்சிருவேன் என்றாள் அவள்..

ஏதேய் வாய உடைப்பியா? கொழுப்பா புள்ள உனக்கு.. நேர்ல இருந்த நா உடைச்சிருப்பேன் உன் வாய என பதிலுக்கு ஜெய்யும் கத்த, இருவரும் மாறி மாறி சண்டையிடவும்…

இறுதியில் ஜெயித்தது என்னவோ அந்த தெரு முக்கில் ஒரு ஓரமாய் படுத்திருக்கும் அந்த வாயில்லா ஜீவன் நாய் தான்.. வ்வ்வவ் வவ் வவ் என ஜெய்யை பார்த்து இடை விடாமல் சத்தம் போட்டு குறைக்க.. ஜெய் பயந்து போனவன், சாரி டா உன் தூக்கத்த டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? நீ தூங்கு தூங்கு நா அங்குட்டு போய்க்கிறேன், என்றவன் நகர்ந்து வேறு இடத்திற்கு, முக்கியமாக யாரும் இல்லா இடத்தில் சென்று அமர்ந்துக் கொண்டான்…

அவன் நாயிடம் மன்னிப்பு கேட்டத்தில் மர்ம பெண்ணிற்கு சிரிப்பு வர, சத்தமாக சிரித்து விட்டாள்… ஜெய்யும் தான்…

யாரு புள்ள நீ? இல்ல என்ன ஏதும் பிராங்க் பண்றியா? என ஜெய் கேட்க…

சத்தியமா இல்ல… என்றாள் அவள்

அம்புட்டு பேர் இருக்கிறப்ப என் நம்பர மட்டும் எதுக்கு புள்ள எடுத்த? என்றதும் எதிர் முனையில் அமைதி…

சொல்லு புள்ள இப்டி சும்மா சும்மா அமைதியாகிடுற… உன்கிட்ட தான பேசுறேன்…

அ அ அது எனக்கு உங்க கூட பிரெண்ட் ஆகணும் என்றாள் அவள்…

பிரண்டு தான வா காசா, பணமா!!பிரெண்டாகிரலாம், நாளைக்கு காலேஜ் வரப்ப என்கிட்ட வந்து பேசு என்ன?

ஹ்ம் மாட்டேன், நா அந்த அளவுக்கு அழகு இல்ல.. என்ன உனக்கு பிடிக்காம போயிரும் என குரலில் தடுமாற்றம் தெரிய….

ஏன் புள்ள பிரெண்டா இருக்கிறதுக்கு அழகு எதுக்கு? மனசு தான முக்கியம்..

அ அ அப்போ லவ் பண்றதுக்கு அழகு பார்ப்பீங்களோ! என எதிர் கேள்வி கேட்டாள்…

அதெல்லாம் இல்ல மா எல்லாத்துக்கும் மனசு தான் முக்கியம்.. சரி உன் பேர சொல்லு…

ஹான் வாயேன், என்ன கண்டு பிடிச்சிருவ ஈஸியா… நா சொல்ல மாட்டேன் பா…

அப்புறம் எப்படி தான் உன்ன கூப்பிடுறது என சிறிது கடுப்பாய் கேட்டான் ஜெய்…

எங்க வீட்ல என்ன அமுலுனு கூப்பிடுவாங்க.. வேணும்னா அப்டி கூப்பிடேன் என்றாள் அந்த பெண்…

சரி பால் டின்னு….

என்னாது பால் டின்னா? என கேட்க

ஆமா புள்ள, அமுல் பால் டின்னு..கேள்வி பட்டது இல்ல…!

இல்ல… சரி சாப்டியா? என்றதும் அதெல்லாம் எப்பவோ சாப்டாச்சு, என்றவன் சரி நாளைக்கு காலேஜ்ல பாப்போம்… இப்ப நா வூட்டுக்கு போறேன். எங்கப்பா பாத்தாரு இந்நேரம் யாருகிட்ட பேசுறேன்னு விசாரணை கைதிய விட மோசமா கேள்வி கேட்கும்.. வச்சிரட்டா? என வினவ

ஹ்ம்ம் பை குட் நைட், என அமுலு போனை வைக்கவும்… ஜெய் சிரித்துக் கொண்டான்…. இதுவும் நல்லா தான் இருக்கு என்றெண்ணியவன் தன் வீட்டிற்கு சென்று விட்டான்…

தர்ஷினி வசிக்கு போன் செய்து அவனிடம் பேசிக் கொண்டிருந்தாள்… எதுக்கு என்கிட்ட அன்னைக்கு உங்கம்மா ஒர்க் பண்றாங்கனு பொய் சொன்னீங்க

நா தான் சொன்னேன்ல எனக்கு இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்ல பிடிக்காதுன்னு,

ஹ்ம்ம் என்றவள், அப்புறம் இன்னைக்கு ரைடு பிடிச்சிருந்ததா? என ஆர்வமாய் கேட்கவும்…

அதற்கு வசி ரொம்ப டி.. தேவா ஜெய் சப்பை எல்லாரையுமே ரொம்ப புடிச்சிருக்கு…

ஹ்ம்…..

என்னடி சுருதி குறையுது வெறும் ஹ்ம்ம் மட்டும் சொல்ற….

ஒன்னும் இல்ல….

அப்ப கண்டிப்பா ஏதோ இருக்கு… சும்மா சொல்லு என்றான் வசி…

அவங்கள மட்டும் தான் புடிச்சிருக்கா? என கேட்டு விட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்…

ஆமா டி வேற யார பிடிக்கணும் சிரிப்பை அடக்கி கீழ் உதட்டை கடித்த படி கேட்கவும்… தர்ஷிக்கு உண்மையாவே கோவத்தில் மூக்கு சிவந்து விட்டது…

சரி நா வைக்கிறேன்…

ஹாஹாஹா என சத்தமாக சிரித்தான் வசி… அவனின் சிரிப்பு சத்தம் கேட்கவே தர்ஷிக்கு மிகவும் பிடித்து போனது…

அதை ரசித்தவள் உங்க சிரிப்பு சத்தம் நல்லா இருக்கு சீனியர் என்றாள்…

ஓஹ் தேங்க்ஸ் டி…. அப்புறம் உன்னையும் ரொம்ப பிடிக்கும் பை குட் நைட் என போனை உடனடியாக வைத்து விட்டான் வசி …

தர்ஷி புன்னகையுடன் சென்று உறங்க..

வசியும் தன் நெஞ்சை நீவிக் கொண்டவன், ரொம்ப புடிக்கும் டி உன்ன பாத்ததுமே விழுந்துட்டேன்… என இன்று போட்டிங் செல்லும் போது எடுத்த போட்டோஸை தனது மொபைலில் பார்த்தவன் அவளின் முகத்தை ஜூம் செய்து வருட… பின்னால் சிறிதாக தேவாவின் கண்கள் அவனை பார்ப்பது போல் இருக்கவும், பெரு மூச்சை இழுத்து விட்டவன் மொபைலை ஆப் செய்தான்….

 

படிச்சி பாத்துட்டு staars குடுங்க 🙏🙏

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!