எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே

4.5
(13)

புயல் – 5

“சரி என்ன பண்ணனும்னு சொல்லுங்க என்னால முடிஞ்சா நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன் என் பிரெண்டோட வாழ்க்கை இப்படியே போவதை பார்க்கும் போது எனக்கும் கஷ்டமா தான் இருக்கு”.

“பேசாம எனக்கு ஹார்ட் அட்டாக் வந்த மாதிரி நடிப்போமா.. என்னோட கடைசி ஆசையா அவனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்போம்” என்று அவர் குதூகலமான குரலில் கூறவும்.

“செத்தா சாகட்டும்னு ஹாஸ்பிடல் கொண்டு போய் அட்மிட் பண்ணிட்டு நான் என் வேலையை பார்க்க ஆரம்பிச்சிடுவேன்” என்ற கம்பீர குரல் எதிர் முனையில் கேட்கவும் தாத்தாவிற்கு தூக்கி வாரி போட்டது.

ராம்குமாருக்கு திருடனுக்கு தேள் கொட்டிய நிலை தான். திரு திருவென விழித்தபடி நின்றிருந்தான்.

“கொஞ்சம் கூட வயசுக்கு தகுந்த பேச்சே கிடையாது. இன்னொரு தடவை இவனுக்கு நீங்க கால் பண்றதை பார்த்தேன் அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்” என்று கடுமையாக பேசியவன் பட்டென்று அழைப்பை துண்டித்து விட்டான்.

“ஏன்‌ டா இப்படி இருக்க.. தாத்தா பாவம் வயசான காலத்துல அவரை ஏன் இப்படி படுத்தி எடுக்குறியோ தெரியல” என்று தன்னிடம் பொறிந்த ராம்குமாரை முறைத்தவன், “எல்லாம் எனக்கு தெரியும். நீங்க ரெண்டு பேரும் உங்க வேலையை பாக்க வேண்டியது தானே.. எதுக்காக என்னை பத்தி பேசிக்கிட்டு இருக்கீங்க”.

“டேய் அவர் உன் தாத்தா டா.. உன் வாழ்க்கையை பத்தி அவர் கவலைப்பட மாட்டாரா? பாவம், இந்த வயசான காலத்துல அவருக்கு உன்னை விட்டா வேற யாரு இருக்கா.. உன்னை பத்தி யோசிக்காமல் வேறு யாரைப் பற்றி அவர் யோசிப்பாரு” என்றதுமே சூரிய பிரசாத்தின் முகம் இறுகியது.

“நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத டா சூர்யா.. ஒரே பொண்ணு அவங்களுடைய வாழ்க்கையும் வீணா போயிடுச்சு. இப்போ நீ ஒரே பேரன் எங்க உன் வாழ்க்கையும் அவங்க வாழ்க்கை மாதிரி ஆகிடுமோனு அவர் ரொம்ப பயப்படுறாரு அது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது. எவளோ ஒருத்தி துரோகம் பண்ணிட்டானா எல்லா பொண்ணுங்களும் அப்படியே தான் இருப்பாங்கனு நினைக்காத”.

“போதும்.. என் லைஃபை பாத்துக்க எனக்கு தெரியும் நீங்க எல்லாம் எதுக்காக என் வாழ்க்கைக்குள்ள மூக்கை‌ நுழைக்கிறிங்க.. எனக்கு எப்போ என்ன பண்ணனும்னு தெரியும். நீங்க எல்லாம் உங்க வேலையை பாருங்க” என்று முகத்தில் அடித்தது போல் கூறியவன் விறுவிறுவென அங்கிருந்து வெளியேறி விட்டான்.

அதன் பிறகு இருவருக்குள்ளும் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இல்லை.

மணி ஆறை நெருங்கவும் ராமை அழைத்த சூர்யா, “ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்குடா வா பப்புக்கு போகலாம்”

“நீங்க போயிட்டு வாங்க சார் எனக்கு இங்க நிறைய வேலை இருக்கு” என்றான் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு.

“என்ன மரியாதை எல்லாம் ஓவரா இருக்கு” என்றவாறு தன் ஒற்றை புருவத்தை ஏற்றி அவனை கேள்வியாக பார்க்கவும்.

“என்ன இருந்தாலும் நான் உங்ககிட்ட வேலை பார்க்கிறேன் அந்த மரியாதையை கொடுத்து தானே சார் ஆகணும்” என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு.

“சரி நீ என்கிட்ட வேலை பாக்குற தான அப்போ நான் எது சொன்னாலும் நீ கேட்டு தானே ஆகணும். இப்போ என் கூட வெளியில் வர!” என்றவன் விறுவிறுவென முன்னே நடக்கவும்.

அவனை பார்த்து சலிப்பாக தன் தலையை இருபக்கமும் ஆட்டியவன் அவனை பின் தொடர்ந்து நடக்க தொடங்கினான்.

தன் எதிரே அமர்ந்து மதுவை அருந்தி கொண்டிருந்தவனின் கிளாசை எட்டிப் பிடித்த ராம், “போதும் சூர்யா.. இன்னைக்கு ரொம்ப அதிகமாயிடுச்சு”.

“விடுடா.. என்னை நீங்க யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்க என் மனசுல இருக்க கஷ்டத்தை இது மட்டும் தான் புரிஞ்சுக்குது” என்றான் தன் கையில் இருக்கும் மது கோப்பையை கண்களால் காண்பித்தபடி.

“ம்ம்ச்ச்.. உளறாத” என்று சலிப்பாக ராம் கூறவும்.

“ஆமா டா உங்களுக்கெல்லாம் என்னை பாத்தா உலறுர மாதிரி தான் தெரியும். ஏன்னா நான் தான் ஒரு ஏமாளி ஆச்சே..” என்றவனை பாவமாக தழுவியது ராமின் விழிகள்.

“சொல்லுடா.. நான் ஏமாளி தானே.. அதான் சின்ன வயசுல இருந்து ஒவ்வொருத்தரா என்னை ஏமாத்திக்கிட்டே இருக்காங்க. முதல்ல என் அப்பா.. அப்புறம் என் அம்மா.. அப்புறம் பாட்டி.. அப்புறம் அவ..” என்று குரல் இறுக கூறியவனின் கையும் அந்த மது குவலையை இறுக்கமாக பற்றியது.

“காம் டவுன் சூரியா.. இன்னும் எத்தனை நாளைக்கு தான் நீ அவளை பத்தியே யோசிச்சிட்டு இருக்க போற.. அவளை வேண்டாம்னு தூக்கி போடுடா”.

“எப்படிடா.. எப்படி போட சொல்ற.. அவளை நான் எவ்வளவு நம்பினேன் தெரியுமா.. நான் கேட்டேனா.. அவளே தானே என் கிட்ட வந்தா அவ தான் வேணும்னு நான் நினைக்கும் போது என்னை அப்படியே விட்டுட்டு போயிட்டா.. எனக்கு எவ்வளவு வலிச்சது தெரியுமா.. அதுவும் அவளை பாக்குற நேரம் எல்லாம் யாரோ என் ஹார்டை கத்தியால் குத்துற மாதிரி வலிக்குதுடா.. அவ வேணும்னே என் முன்னாடி வந்து என்னை வெறுப்பேத்துறா”.

“தெரியுதுல.. அப்புறம் ஏன்டா அவளை பத்தியே யோசிக்கிற.. நீ இந்த அளவுக்கு பீல் பண்றதுக்கு எல்லாம் அவ வொர்த் இல்லடா மச்சான்”.

“தெரியும்டா.. ஆரம்பத்துல தான் அவ மேல இருந்த காதல் ரொம்ப வலிச்சது. ஆனா இப்போ காதல் எல்லாம் இல்லடா ஏமாந்துட்டோம் என்ற வருத்தம்.. ஆதங்கம் தான் ரொம்ப வலிக்குது. என்னை ஏமாத்திட்டடா.. அவ நம்ப வச்சு கழுத்தறுத்துட்டா.. ஐ அம் அ ஃபூல்.. அவளை போய் நம்பி ஏமாந்து இருக்கேன் பாத்தியா நான் தான் டா பெரிய முட்டாள்”.

அதற்குள் அவனின் தாத்தா ராம்குமாரின் எண்ணுக்கு அழைத்து விட, “ஹலோ தாத்தா இதோ வீட்டுக்கு தான் வந்துக்கிட்டு இருக்கோம். இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்துடுவோம்” என்று விட்டு அழைப்பை துண்டித்த ராம் தன் எதிரே புலம்பிக்கொண்டு அமர்ந்திருப்பவனை பரிதாபமாக பார்த்தவன், “சரி போதும் வா வீட்டுக்கு போகலாம் தாத்தா வேற வெயிட் பண்ணிட்டு இருக்காங்க” என்று அவனின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

வெளியே வந்தவனோ குளறியபடி பேசிக் கொண்டே ராமின் கை தாங்கலில் நடந்து வந்து கொண்டிருந்தவன் சட்டென்று அவனின் கையை விலக்கி விட்டபடி, “விடுடா.. ஐ அம் ஓகே.. நான் தனியாவே நடந்து வரேன் நான் ஸ்டெடியா தான் இருக்கேன்” என்றவன் ஒரு புறம் நடக்க அவனின் காலோ வேறொருபுறம் நடந்தது.

தடுமாறி சென்று தன் எதிரே நடந்து வந்தவளின் மேலேயே விழுந்து வைக்க.

“டேய்.. டேய்.. பார்த்துடா..” என்று கத்திக்கொண்டே ஓடிச் சென்று அவனை பிடித்து நிறுத்தினான் ராம்.

தன் மீது விழுந்தவனையும் அவன் அருகே நின்றிருந்தவனையும் அதிர்ந்த பார்வை பார்த்தாள் வேதவள்ளி.

வேதவள்ளியை இங்கே சற்றும் எதிர்பார்க்காத ராமும் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டே சூரிய பிரசாத்தை அவளிடமிருந்து பிரித்து நிறுத்தினான்.

சூர்யாவின் எதிர்பாராத பாரத்தில் நிலை தடுமாறிய வேதவள்ளி ராமின் உதவியால் தன்னை நிலை படுத்திக் கொண்டாள்.

வேதவள்ளியிடமிருந்து பிரிந்து நின்ற சூர்யாவோ அவளின் முகத்தை உற்றுப் பார்த்தவன் தன் தலையை உலுக்கிக்கொண்டு, “என்னடி இப்போ எதுக்காக இங்க வந்து இருக்க.. திரும்பவும் என்னை ஏமாற்றலாம்னு வந்திருக்கியா.. இனி என் கண்ணு முன்னாடியே நிக்க கூடாது போடி இங்க இருந்து” என்று கண்டமேனிக்கு வேதவள்ளிக்கு திட்ட தொடங்கி விட்டான்.

வேதவள்ளியோ ஒன்றும் புரியாமல் திருதிருவென விழித்துக் கொண்டு நிற்க.

“சாரி.. சாரிங்க..” என்று வேதவள்ளியிடம் கூறிக்கொண்டே சூர்யாவை காரில் அமர வைத்த ராம் மீண்டும் வேதவள்ளியை நோக்கி ஓடிவந்தவன், “சாரிமா வேற யாரோன்னு நினைச்சு உங்க கிட்ட அப்படி எல்லாம் பேசிட்டான் எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க”.

“அது சூர்யா சார் தானே.. என்னாச்சு சாருக்கு?” என்றவளுக்கு அத்தனை அதிர்ச்சி.

காலையில் எப்படி எல்லாம் பேசினான். ஆனால் இப்பொழுது இப்படி ஒரு நிலையில் அவனை பார்க்கவே அவளுக்கு மிகவும் சங்கடமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

ராம் தன் நெற்றியை தேய்த்தவன், “அது ஒன்னும் இல்லம்மா கொஞ்சம் ஸ்ட்ரெஸ்ஸா இருந்தான் அதான்..” என்று இழுத்தவன், “நீங்க எங்க இங்க?” என்று பேச்சை மாற்றினான்.

“நான் இங்க தான் பக்கத்துல ஒரு ஐஸ்கிரீம் பார்லர்ல பார்ட் டைம் வேலை  பார்த்துக்கிட்டு இருக்கேன் அண்ணா”.

அதற்குள் காரில் அமர்ந்திருந்த சூரிய பிரசாத், “டேய் இப்ப நீ வரியா இல்ல நானே வண்டியை எடுத்துக்கிட்டு போகவா” என்று குளறியபடி குரல் கொடுக்கவும்.

“சரி மா நாங்க கிளம்புறோம்” என்று அவசரமாக அவளிடம் இருந்து விடை பெற்று காரை நோக்கி ஓடினான்.

கார் அவர்களின் வீட்டை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தது. வீட்டை அடையும் வரையிலும் சூரிய பிரசாத் புலம்பி கொண்டே வந்தான்.

“என்னை போய் ஏமாத்திட்டாளே டா.. அது கூட பரவாயில்ல.. என்னை பத்தி என்ன எல்லாம் பேசிட்டா.. அவளுக்கு எவ்வளவு தைரியம்” என்று திட்டிக்கொண்டே வந்தான்.

வேதவள்ளிக்கோ சூரிய பிரசாத்தை புரிந்து கொள்ளவே முடியவில்லை. காலையில் அத்தனை கம்பீரமாக இருந்தவனை அன்றைய இரவே மற்றொரு அவதாரத்தில் பார்த்தவளிற்கு இரண்டுமே ஒருவன் தானா என்ற சந்தேகமே எழுந்து விட்டது.

இறுதியில், “அவர் எப்படி இருந்தா நமக்கு என்ன.. நமக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம். நம்ம வேலையை மட்டும் நம்ம பார்ப்போம். எப்படி இருந்தாலும் ராம் அண்ணா கொஞ்சம் நல்லவரா தான் இருக்காரு.. அதுவரைக்கும் பரவாயில்லை சூரியா சாருக்கு நம்மை அசிஸ்டென்ட் ஆக்காமல் ராம் அண்ணாவுக்கு அசிஸ்டென்ட் ஆக்கி இருக்காரு” என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டு நடந்தாள்.

வாழ்க்கை முழுக்க அவனிடம் சிக்க போகிறோம் என்பதை அறியாத பேதையின் மனமோ இப்பொழுது சிக்கவில்லையே என்பதை எண்ணி பெருமூச்சு விட்டுக் கொண்டது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!