ஆழியின் துறைவனவன் 

5
(6)

ஆழியின் துறைவனவன் 

 

நடு ராத்திரியில் இருளைக் கிழித்து சாலையில் தேங்கி நின்ற நீரை சிதறடித்தபடி க்ரீச்சிட்டு நின்றது பகாட்டி லா. இருட்டின் அடர்த்தியான கரிய நிறத்தை கெடுக்காது அதுவும் டார்க் பிளாக் கலரில் மேட்ச் ஆனது. 

காரின் கதவு ஆட்டோமேட்டிக்காக மேல் நோக்கி உயர்ந்து திறந்திட, அதிலிருந்து இறங்கிய நெடியவன், “கோ” ஒற்றை வார்த்தையை காரை டிரைவ் பண்ணி வந்தவன் மீது துப்பிவிட்டு, அகன்றான். 

இருளை ஊடுருவியவனின் இரக்கமற்ற விழிகளில் எந்தத் தேடலுமில்லை. 

அகன்று விரிந்த மார்பு, முறுக்கேறிய புஜங்கள் எதிரியை தாக்குவதற்கென்றே பயிற்சி பெற்றிருந்தது. 

நெடிய வலுவான கால்களை தரையில் அழுத்தமாய் பதித்து நடக்க, தரையில் பாவியிருக்கும் நீரின் சளக் சளக் என்ற சப்தம் கூட எதிரொளிக்கவில்லை. ஓசையெழுப்பாமல் நடந்தாலும் அவனது காலடியின் அழுத்தத்தில், கல்லாய் இறுகிய முகத்தில், அவனது ஆறடிக்கும் மேற்பட்ட உருவம் மொத்தத்திலும் அவனது அலட்சியமும் திமிரும் ஓவர் லோட் ஆகியிருந்தது. 

அவன் எங்கிருந்து வருகிறான் என்ற கேள்விக்கு பதில் சொல்ல அவனுக்கு விருப்பமுமில்லை. கேட்டாலும் தெரிஞ்சு என்னத்த கிழிக்கப் போற என்ற பதிலை கடித்து துப்புவான். அவன் இருக்குமிடத்தில் அவனுக்கான சூழ்நிலை தானாகவே பொருந்தி நிற்கும். 

அந்தப் பகுதிக்கு பொருத்தமேயில்லாம, சாலை வீடு. அதை நோக்கித்தான் சென்றது அவனது நெடிய கால்கள். பக்கத்திலிருந்த உயர்ந்த கட்டிடத்துக்கும் அந்த சாலைக்கும் தொடர்பேயில்லாத ஒரு தோற்றம். கோபுரத்தினருகே ஒரு குப்பைத் தொட்டி. 

இரவின் இருளோடு கூடல் புரியும் ஆசையில் மேகங்கள் வானில் அடர்ந்தது. இன்னும் மழை வரப்போகிறது என்ற அறிகுறி வீசும் காற்றில் தென்பட்டாலும் அவனது நடையில் தொய்வில்லை.

தெருவிளக்குகள் ஒன்று இரண்டு மட்டும் தான் உயிரோடு இருந்தன. 

காம்பவுண்ட் சுவற்றில் தாவி ஏறியவன் மறுபுறம் எட்டிக் குதித்தான், குதித்தவன் சற்று நகர்ந்து மறைவாக நின்று சுற்றிலும் நோட்டமிட்டான் யாரேனும் வருகிறார்களா என்று. நாய்கள் கூட இல்லாமலிருக்க, இகழ்ச்சிப் புன்னகையொன்றை அவனது உதடுகள் உதிர்த்தது. 

பைப்பில் சரசரவென கால்களைப் பதித்து கைகளால் உடும்பாய் பற்றிக் கொண்டு ஏறியவன், ஜன்னல் வழியே கண்ட காட்சியில் திகைத்துப் போனான்.

அங்கே ஏற்கனவே இறந்து கிடந்தார், அதித்யாராஜ். இந்தியாவில் முக்கியப் பிரஜை.

ஒரு யுவதியின் கையில் கத்தி, அதிர்ச்சியில் விரிந்த பூனை விழிகள், அவளது கைகளில் ரத்தக் கரைகள், பார்த்தவனுக்கு தன் வேலை முடிந்தது என்ற எண்ணம் உதிக்க, தோள்களை அலட்சியமாய் குலுக்கிவிட்டு வந்த வழியே இறங்கப் போக.

“ஹேய் மேன். டோன்ட் மூவ்” அவனை நோக்கி சுட்டுவிரலை உயர்த்திக் கூறியவள், அங்கே வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கைகளை சுத்தமாக கழுவிவிட்டு, அவனிருந்த திசையில் பாய்ந்து வந்தாள். 

அவனோ அவளது மொழியை காதில் வாங்காது இறங்கிட, அவனது முதுகில் வவ்வால் போலத் தாவி அமர்ந்தாள். 

“ஹேய்!” சீறியவன் அவளை உதறித் தள்ளிட முயன்றான். 

“ஹேய் ஹேய் ப்ளீஸ். கால்ல அடிபட்டிருக்கு. இங்கருந்தா மாட்டிப்பேன். ஹெல்ப் ஹெல்ப்” அவனது இடையில் தன் கால்களை பின்னிக் கொண்டு, தோள்களைக் கட்டிக் கொண்டு கெஞ்சியவளை ஏதும் செய்ய முடியாத சூழ்நிலை அவனுக்கு.மூன்றாவது மாடியின் பைப்பில் அவன் தொங்கிக் கொண்டிருக்க, அவனது முதுகில் அவள். உள்ளேயோ கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த டெட் பாடி. 

இந்த இடத்திலிருந்து விரைவாக செல்வதே நலம். 

அதனால் புதிதாக தோளில் விழுந்த சுமையையும் சுமந்தவன் வந்த வழியே வெளியேறினான்.

‘வாட் எ மேன்!’ அவனது வீர தீரத்தை மெச்சியது அவள் உதடுகள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!