அத்தியாயம் 9
“என்ன பங்கு யோசனையாவே இருக்க அம்மா திட்டுனதைப் பற்றியா?” என்ற திலீப்பிடம், “இல்லை” என்றான் ராகவ்.
“அப்பறம் என்ன” என்ற திலீப்பிடம் , “ஹாஸ்பிடலுக்கு அங்கிள், ஆண்ட்டி, சாம்பவி மூன்று பேரும் வந்தாங்க ஆனால் பல்லவி வரவே இல்லை ஏன்” என்றான் ராகவ்.
“இவன் ஏன் அடிக்கடி என் ஆளையே கிராஸ் பண்ணிட்டு இருக்கிறான் இது தப்பாச்சே” என்று யோசித்தவன், “டேய் பல்லவி ஏன் வரணும் உன்னை பார்க்க” என்றான் திலீப்.
“அவள் என்னோட ஃப்ரெண்ட் தானே எனக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்தும் பார்க்க வில்லை அது வருத்தமா இருக்கு” என்றான் ராகவ்.
“அவளுக்கு தெரியாமல் கூட இருக்கலாமே” என்று திலீப் கூறிட, “ஆமாம்ல அதை மறந்துட்டேன் பாரு” என்றான் ராகவ்.
“ஆமாம் நீ ஏன் பல்லவி பற்றியே யோசிக்கிற உன் ஆளு சாம்பவி தானே” என்றான் திலீப்.
“பல்லவி என் ஃப்ரெண்ட்” என்ற ராகவ் ஏதோ யோசனையாக கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டான். அதை திலீப் கவனித்தாலும் கண்டு கொள்ளாமல் அவனிடம் பேச்சுக் கொடுத்தான்.
“திலீப் அண்ணா” என்று வந்த பூர்வியிடம், “ஹாய் பூர்வி” என்ற திலீப், “எத்தனை மாசம்” என்றான். “ஐந்து மாசம் அண்ணா” என்றாள் பூர்வி தன் மேடிட்ட வயிற்றில் கை வைத்து.
“மருமகனே சீக்கிரம் வந்துரு மாமா உன்னை ஊரெல்லாம் சுத்தி காட்டுறேன்” என்றான் திலீப். “ஏன்டா மருமகன் மருமகளா இருக்க கூடாதா?” என்றான் ரஞ்சித்.
“ஏன் என் மருமகளை கல்யாணம் பண்ணிக்க ப்ளான் பண்ணுறியா ஊருக்குள்ள ஒருத்தனும் உனக்கு பொண்ணு கொடுக்க மாட்டேங்கிறான்னு என் மருமகளை கட்டிக்க ப்ளான் பண்ணுறியா பிச்சுருவேன் மருமகன் தான்” என்றான் திலீப்.
“அட ஏன் திலீப் நீங்க வேற என் பொண்ணை ஒரு கிழவனுக்கா கட்டிக் கொடுப்பேன்” என்றபடி வந்தான் பூர்வியின் கணவன் விக்ரம்.
“அடப் பாவமே அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்” என்று சிரித்தான் திலீப். அவனை முறைத்த ரஞ்சித் ஏதோ சொல்ல வர, “கிழவனா போனாலும் என் ரஞ்சித் அண்ணா தாய்மாமன் தானே அதெல்லாம் என் பொண்ணை ரஞ்சித் அண்ணாக்கு தான் கல்யாணம் பண்ணிக் கொடுப்பேன்” என்றாள் பூர்வி.
“கேட்டுக்கோங்க மாப்பிள்ளை என் தங்கச்சியே சொல்லிட்டாள்” என்ற ரஞ்சித்திடம் , “மகாராணி சொல்லுக்கு மறு பேச்சு ஏது மச்சான்” என்றான் விக்ரம்.
“ஆக மொத்தம் உன் மகளை ஒரு கிழட்டு பயலுக்கு கட்டிக் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்ட” என்ற திலீப்பிடம், “யாரு மகளைடா கிழட்டு பயலுக்கு கட்டிக் கொடுக்கப்போறாங்க” என்ற படி வந்தார் சிவச்சந்திரன்.
“எல்லாம் என் மருமகளை தான் அப்பா இந்த ரஞ்சித் அங்கிளுக்கு தான் பூர்வி அவளோட பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்க போறாளாம்” என்றான் திலீப்.
“ஏன் இந்த கொலைவெறி நீ கவலைப்படாதே ரஞ்சித் உனக்கு நல்ல கிழவியா பார்த்தே அப்பா அறுபதாம் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் குழந்தை பிள்ளை எல்லாம் உனக்கு வேண்டாம்” என்று சிவச்சந்திரன் கூறிட அனைவரும் சிரித்தனர்.
“குடும்பமாடா இது நான் பாட்டுக்கு சிவனேன்னு தானேடா இருந்தேன். மருமகள் வேணும்னு சொன்னது ஒரு குத்தமாடா குடும்பமா சேர்ந்து இப்படி கும்மியடிக்கிறீங்களேடா நான் காசிக்கு சன்னியாசம் போகப் போறேன்” என்றான் ரஞ்சித்.
“அகோரியா மாறப் போறீங்களா மச்சான்” என்ற விக்ரமிடம் , “ஆமாம் அகோரியா மாறி ஃப்ரெண்ட்னு சொல்லி ஃபாரின்ல இருந்து வந்திருக்கானே இந்த குரங்கு இவனை கடிச்சு திங்கப் போறேன்” என்று கூறி திலீப்பை விரட்டினான் ரஞ்சித். ஒருவழியாக அனைவரும் கலகலப்பாக இருந்தனர்.
ராகவ் தான் அவர்களின் பேச்சில் கலந்து கொள்ளாமல் எதையோ யோசித்துக் கொண்டே இருந்தான்.
“என்ன பல்லவி ரொம்ப டயர்டா இருக்க” என்ற வைதேகியிடம் , “அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை சித்தி” என்றாள் பல்லவி. “சரி இந்த காஃபியை குடி” என்று காஃபி கோப்பையை அவளிடம் நீட்டினார் வைதேகி.
“என்ன இது நான் கேட்காமலேயே இவங்க காஃபி கொடுக்கிறாங்க என்னவா இருக்கும்” என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்க , “பவிமா” என்று வந்தார் அவளது அத்தை செல்வராணி.
“அத்தை” என்று தன் அத்தையைக் கட்டிக் கொண்டாள் பல்லவி. வைதேகி காஃபி கொடுத்த காரணம் புரிந்தது பல்லவிக்கு.
“அம்மு நிஜமாகவே நீ இருட்டில் வழி மாறி தான் அந்த அறைக்குள்ளே போனியா?” என்ற செல்வராணியிடம், “ஆமாம் அத்தை” என்றவள் பேச்சை மாற்ற நினைத்து , “நீங்க மட்டும் தான் வந்திருக்கீங்களா அத்தாச்சி வரலையா” என்றாள் பல்லவி.
“வராமல் இருப்பேனா” என்ற குரலில் புன்னகையுடன் திரும்பிய பல்லவி, “அத்தாச்சி” என்று ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள் அங்கு நின்றிருந்த சங்கவியை.
“எப்படி இருக்க பவி” என்ற சங்கவியிடம், “எனக்கென்ன நல்லா தான் இருக்கேன்” என்றவள் , “அண்ணனும், பசங்களும் எங்கே?” என்றாள்.
“உன் அண்ணன் ஆஃபீஸ் வேலையா கல்கத்தா போயிருக்காரு வர ஒரு வாரம் ஆகும். பசங்களுக்கு எக்ஸாம் டைம் அதான் அவங்க அப்பத்தா கிட்ட விட்டுட்டு வந்திருக்கேன்” என்றாள் சங்கவி.
“ஏன் அத்தாச்சி” என்ற பல்லவியிடம், “உனக்கு நிச்சயதார்த்தம் நடந்திருந்தால் உன் அண்ணன், பசங்க எல்லோரையும் கூட்டிட்டு வந்து ஒரு மாதம் தங்கி கல்யாணத்தை முடிச்சு கொடுத்துட்டு தான் போவோம். இப்போ நடக்கிற நிச்சயதார்த்தத்திற்கு வந்ததே மாமாவுக்காக மட்டும் தான்” என்றாள் சங்கவி.
“இவளுங்க வரலைன்னு இங்கே யார் அழுததாம்” என்று முனங்கினார் வைதேகி. “என்ன அம்மா ஏன் முனங்கிட்டு இருக்கீங்க” என்று வந்தாள் சாம்பவி.
“எல்லாம் உங்க அப்பாவோட அக்காவும், அவங்க மகளும் பண்ணுற அலப்பறை தான் தாங்க முடியாமல் முனங்கிட்டு இருக்கேன்” என்று வெங்காயத்தை வெட்டினார் வைதேகி.
“பவி உனக்காக உன் அண்ணன் இந்த புடவையை எடுத்துட்டு வந்தாரு” என்று ஒரு அழகான பட்டுப் புடவையை கொடுத்தாள் சங்கவி. அதை வாங்கிக் கொண்ட பல்லவி, “ரொம்ப அழகா இருக்கு அத்தாச்சி அண்ணன் கிட்ட ரொம்ப தேங்க்ஸ்னு சொன்னேன்னு சொல்லுங்க” என்றாள்.
“இது என்னோட கிஃப்ட்” என்று ஒரு அனார்கலி சுடியை கொடுத்தாள் சங்கவி. அதை வாங்கிக் கொண்டவள், “இதை சாம்பவி என்கேஜ்மென்ட்டுக்கு போட்டுக்கிறேன்” என்றாள் பல்லவி.
“உனக்கு கஷ்டமா இல்லையா பவி உன்னை நிச்சயம் பண்ண வந்த அந்த ராகவ் சாம்பவியை பிடிச்சிருக்குன்னு சொல்லி இப்போ அவன் கூட அவளுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ண போறாங்க” என்ற சங்கவியிடம், “அத்தாச்சி நீங்க தான் எனக்காக ரொம்ப வருத்தப் படுறீங்க போல” என்று சிரித்தாள் பல்லவி.
“சரி சரி பேசிட்டு இருக்காமல் கிளம்புங்க நேரத்தோடு ஷாப்பிங் எல்லாம் முடிக்கனும்ல” என்று செல்வராணி சங்கவி, பல்லவி இருவரையும் தயாராக சொல்லவும் இருவரும் தயாராகினர்.
“நிச்சயதார்த்தம் எனக்கா இல்லை அந்த குண்டச்சிக்கா இப்போ தான் படையே திரட்டி ஷாப்பிங் போக” என்று சிலுத்துக் கொண்டாள் சாம்பவி.
“சாம்பவி கொஞ்சம் பொறுமையா இரு உன் அத்தை இருக்கிற வரை நாம கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது தான் எல்லாத்துக்கும் நல்லது” என்றார் வைதேகி.
“ஹாய் பவி என்ன ஷாப்பிங்கா” என்று வந்தான் திலீப் வர்மன்.
“யாரு பவி இது” என்ற சங்கவியிடம் , “என்னோட காலேஜ் மெட் அத்தாச்சி அப்பறம் ராகவ்வோட ஃப்ரெண்ட்” என்றாள் பல்லவி.
“அத்தாச்சியா அப்போ நமக்கு அக்கா” என்று யோசித்தவன், “ஹாய் அக்கா நான் திலீப் வர்மன் எல்லோரும் திலீப்னு கூப்பிடுவாங்க” என்றான்.
“ஹாய் தம்பி” என்ற சங்கவி , “உங்க பேரை சொன்னதும் தான் நியாபகம் வருது பல்லவியை ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணினது நீங்க தானா” என்றாள் சங்கவி.
“அடியேன் தான் அக்கா” என்ற திலீப்பிடம், “ரொம்ப தேங்க்ஸ் தம்பி மாமா உன்னை பற்றி சொன்னதில் இருந்து நேரில் பார்த்து நன்றி சொல்லனும்னு நினைச்சேன் இப்போ சொல்லிட்டேன்” என்றாள் சங்கவி. “அக்கா வித் யுவர் பர்மிஷன் பல்லவி கிட்ட கொஞ்சம் பேசணும் பேசலாமா” என்றான் திலீப். “பேசலாமே பர்மிஷன் க்ராண்டட்” என்ற சங்கவி சென்று விட பல்லவியை பார்த்து கண்ணடித்தான் திலீப்.
“என்ன வேணும் திலீப் உனக்கு ஏன் எப்போ பாரு நான் இருக்கிற இடத்திற்கு வந்துட்டே இருக்க , ஆஃபீஸ் வந்த ஓகே இப்போ சாம்பவி என்கேஜ்மென்ட்டுக்கு ஷாப்பிங் வந்திருக்கோம். அதுவும் என் கசின் கூட இருக்கும் போது தனியா பேசணும்னு சொல்லுற” என்றாள் பல்லவி. “உன்னை பார்க்க தான் வந்தேன் பார்த்து விட்டு பேசலாம்னு அந்த அக்கா கிட்ட பர்மிஷன் கேட்டேன் தப்பா பவி” என்ற திலீப்பை அவள் முறைத்திட, “இப்போ எதுக்கு முறைச்சுட்டு இருக்க எனக்கு உன் கிட்ட பேசணும். என் பெங்களூர் தக்காளியோட கையை பிடிச்சுட்டு இந்த மால் முழுக்க சுத்தனும் சுத்தலாமா?” என்றான் திலீப்.
“விளையாடுறீயா?” என்ற பல்லவியிடம் , “நான் சீரியஸா தான் சொல்லுறேன் பல்லவி நான் நேரடியாகவே கேட்கிறேன் நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்டான் திலீப்.
“என்ன?” என்ற பல்லவியிடம் , “நாம இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றான் திலீப் மீண்டும் அழுத்தமாக.
அவள் அதிர்ந்து போய் அவனைப் பார்த்திட, “பதில் சொல்லு பவி” என்றவன், “உன் அப்பா கிட்ட நாளைக்கு நான் நம்ம கல்யாணம் பற்றி பேசலாம்னு இருக்கேன்” என்றான் திலீப்.
“அந்த மாதிரி எந்த கிறுக்குத்தனமும் பண்ணிராதே” என்று கூறிய பல்லவி கிளம்பிட அவளது கையை எட்டிப் பிடித்தான் திலீப்.
“என்ன பதிலே சொல்லவில்லை” என்ற திலீப் பிடித்திருந்த தன் கையை உதறி எடுத்து விட்டு அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்த பல்லவி கோபமாக அங்கிருந்து சென்று விட்டாள்.
“பாதகத்தி பளார்னு அறைஞ்சுட்டு போறாளே நல்லவேளை ஒருத்தனும் பார்க்க வில்லை தனியா பேசணும்னு இங்கே தனியா அழைச்சிட்டு வந்தது கூட நல்லது தான்” என்று நினைத்து அவன் திரும்பிட அவனைப் பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டு நின்றான் ரஞ்சித்.
“என்ன மச்சி கன்னம் ஒரு பக்கம் கோனிக்கிட்டு இருக்கு அடி பலமோ” என்று நக்கலடித்தான் ரஞ்சித்.
(…அடியே..)