உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

4.4
(12)

அத்தியாயம் 9

அடுத்த நாள்  காலை 7 மணி இருக்கும்…

அரவிந்த் வீட்டில்,

அபிஷேக் நக்ஷ் பேபியை தூக்கிக்கொண்டு கீழே வந்தான்..

ஹாலில் பெற்றோர் இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்…

மகளை மடியில் அமர வைத்து கொண்டே அம்மா காஃபி, பேபிக்கு என்று ஆரம்பிக்க

பாட்டி எனக்கு பூஸ்ட் என்றாள் மழலை மொழியில்..

திவ்யா எங்க டா ?

அம்மா அவ குளிச்சிட்டு இருக்கா என்று சொல்ல.

குழந்தையோ பாட்டி அம்மா தூங்கி என தூங்குவது‌ போல செய்கை செய்ய அவனை முறைத்தார் தேவகி…

ம்மா அவளுக்கு கொஞ்சம் டயர்டு.. இப்ப வருவா என்று  அசடு வழிந்து கொண்டு அபிஷேக் சொல்ல …

விசேஷ வீட்டில இவ்வளோ நேரம் தூங்கினா என்ன பண்றது..

மூத்த மருமக தான் எல்லாம் முன்னாடி நிக்கனும் ஒரு  நாளுக்கே டயர்டா?என்று சலித்துக் கொண்டே சமையலறை சென்று விட்டார்…

அப்பா நீங்க காஃபி குடிச்சிட்டிங்களா?

ஆமா பா இப்ப தான் என்றார்..

காலையிலேயே சம்பந்தி வீட்டில இருந்து கால் செய்தாங்க ப்பா…

என்னப்பா சொன்னாங்க?

அது நம்ம பக்கம் எவ்வளவு பேர் வர்றாங்க னு கேட்டாங்க..

ஈவினிங் தானே என்கேஜ்மெண்ட்,

அதனால நாம இருவது பேர் மட்டும் மதியம் மண்டபம் வர மாதிரி 

சொல்லிட்டேன்..பிறகு எல்லாம் ஈவினிங் தான் வருவாங்கன்னு சொல்லிட்டேன். மொத்தம் நம்ம சைடு ஒரு 50 பேரு.. மீதி எல்லாம் மேரேஜ் அப்ப சொல்லிக்கலாம்ன்னு இருக்கேன் என்றார்..

ம்ம் ஓகே ப்பா , நம்ம சைடு எதாவது அரேன்ஜ்மெண்ட் செய்யனுமா என்று கேட்க..

நமக்கு இப்ப எதும் இல்லை..

நம்ம கெஸ்ட இன்வைட் பண்ணா போதும் என்று சொல்லிக்கொண்டே காஃபியை மகனிடம் கொடுத்தார் தேவகி…

காஃபி குடித்துக்கொண்டே, அரவிந்த் எங்க என்று கேட்க?

அவன் இன்னேரம் கனவு உலகத்தில இருப்பான் என்று அவனை பற்றி கிண்டல் செய்ய…

இவன் விட்டா அந்த பொண்ண இப்பவே இங்கே கூட்டிட்டு வந்திடு வான் போல அவ்வளவு அவசரம்…

நிச்சயம் அப்ப என்னென்ன செய்யப் போறானோ தெரியல என்று கூறி பேத்தியை மடியில் வைத்து பூஸ்ட் குடிக்க செய்தார்..

ஓகே மா நான் போய் குளிச்சிட்டு வரேன்.. போய் இன்வைட் பண்ண போகலாம் என்று எழுந்து அவன் அறையை நோக்கி செல்ல..

டாடி நானு நானு என்று குழந்தை வர.

நீ தாத்தா கூட விளையாடு நான் வரேன் என்று சொல்ல.. அவளோ அழுக ஆரம்பித்து இருக்க..

தாத்தா கூட வாங்க நாம கடைக்கு போலாம் என்று பேத்தியை அவர் அழைத்துச் செல்ல…

அவன் தன் அறைக்கு சென்று விட்டான்…

இப்படி பிரிஞ்சு இருக்கிறதுக்கு கூடவே பெங்களூர் கூட்டிட்டு போலாம்..  கேட்டா தானே ஆகும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு காலை டிபன் செய்ய சென்றார்..

தூக்கிக் கொண்டிருந்த மனைவியை பார்த்தான் அபிஷேக்..

அவளருகில் படுத்துக்கொண்டு அவள் காதுகளில் முத்தமிட்டான்…

மீண்டும் மீண்டும் முத்தமிட்டான்..

அவளோ பேபி அம்மா கொஞ்ச நேரம் தூங்கறேன் நீயும் வா என்று கண்ணை திறக்காமலேஅவளை தேடினாள் திவ்யா…

பாப்பா அப்பா கூட கடைக்கு கிளம்பிட்டா என்று சொல்ல அவள் சடாரென்று கண்ணை திறந்து பார்த்தாள்..

எ.. என்ன பாப்பா முழிச்சுட்டாளா ? டைம் என்ன என்று கேட்க?

7.30 என்றான்.

அத்தை என்னை திட்டலயா? 

அதெல்லாம் இருக்கட்டும்  ..

நாம கொஞ்சம் நேரம் ரொமேன்ஸ் பண்ணலாம் என்று ஆரம்பிக்க..

இப்பவா என்று கேட்டாள் திவ்யா?

ம்ம்ம்ம் என்றான் ஹஸ்கி வாய்ஸில்…

அவளோ வெட்கத்துடன் போர்வையை தலை வரை போர்த்திக்கொண்டு படுத்தாள்…

இரு டி 

நான் உள்ளே வரேன் என்று அவனும் போர்வைக்குள் சென்றான்..

டேய் டைம் ஆச்சு நீ என்ன பண்ற என்று தள்ளி விட..

ம்ம் சரித்தான் போடி நான் போறேன் என்று விலகி செல்ல..

அவன்  டிஷர்டை பிடித்து இழுக்க ..சாரி டா என்றாள்… 

சும்மா விளையாட்டுக்கு டி என்று சொன்னவன்.. நான் குளிச்சிட்டு வரேன், நிறைய வொர்க் இருக்கு… நீயும் சீக்கிரம் ரெடியாகு உங்க வீட்டுக்கு போகலாம் என்றான்..

நெஜமா வா டா .. அம்மா வீட்டுக்கு போய் ரொம்ப நாளாச்சு..

வெயிட் பண்ணு நான் பஸ்ட் போய் குளிச்சிட்டு வரேன் என்று குளியலறை நோக்கி ஓடினாள்…

அம்மா வீட்டுக்கு போறதுன்னு சொன்னா போதும் மின்னல் மாதிரி ரெடி ஆயிடுவா என்று கூற..

ஏதாவது சொன்னீங்களா என்று அவள் கேட்க? 

அது ஒன்னும் இல்லம்மா மின்னல் வற மாதிரி இருந்துச்சு அப்படி சொன்னேன் என்றான் சிரித்துக் கொண்டே..

கணவன் மனைவி இருவரும் ரெடியாகி கீழே வந்தனர்…

அபிஷேக் இந்த அரவிந்த் இன்னும் ஆபீஸ்  கிளம்பல .கீழ வந்து காபி கூட குடிக்க வரல நீ ரூம் போய் பாத்துட்டு வா என்று தேவகி அவனை அனுப்பி வைத்தார்…

திவ்யா வை பார்த்து

ஏம்மா நம்ம வீட்டு பங்க்ஷன் நீங்கதான் முன்னாடி நின்னு செய்யணும் அந்த நெனப்பு கொஞ்சமாவது இருக்கா! என்று கேட்டார் தேவகி…

ஏன் அத்தை இப்படி சொல்றீங்க..

கொஞ்சம் டயர்டு ஆ இருந்தது கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் இது எல்லாம் தப்பா என்று சொல்லிக் கொண்டு காபி குடிப்பதற்கு கிச்சனுக்குள் சென்றாள்..

திவ்யா காபி  குடிக்க வேண்டாம் டைம் ஆச்சு டிபன் சாப்பிடு அப்புறம் காபி குடி என்று மருமகளை அதட்டி பேச சரிங்க அத்தை என்று முனுமுனுத்துக் கொண்டே  சாப்பிட அமர்ந்தாள்…

ஹாட்பாக்ஸ் திறந்தவள் , இன்னும் யாரும் சாப்பிடலையா என்று கேட்க? 

ஆமா மாமா இப்ப கடையில இருந்து வந்திடுவார் ‌.. இந்த அரவிந்த் பையன் காலையிலிருந்து கீழே வரவே இல்லை..

பாப்பா வர்றதுக்குள்ள நீ சாப்பிட்டுவிட்டு ரெடி ஆகு உன் அம்மா வீட்டுக்கு போய் இன்வைட் பண்ணிட்டு வந்துடலாம் என்றார்…

ம்ம் என்று சொல்லிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள்….

அத்தை உங்களுக்கு ஒன்னு தெரியுமா? நேத்து கொழுந்தனார் டென்ஷனா இருக்கிறத பார்த்து அந்த பொண்ணு யாருக்கும் தெரியாம இரண்டு ஷர்ட் வாங்கி கொழுந்தனாருக்கு கிப்ட் பண்ணா..

என்னடி சொல்ற எங்களுக்கு தெரியாம இது எப்ப நடந்துச்சு? 

எல்லாருக்கும் டிரஸ் செலக்ட் பண்ணிட்டு இருக்கும்போது தான்..

எனக்கு தெரிஞ்சு கொழுந்தனார் இப்ப  அந்த ஷர்ட் வச்சு தான் ட்ரீம்ஸ்ல இருப்பார் என்று சொல்ல.

இவன் என்ன இப்பவே இப்படி இருக்கான்… கல்யாணத்துக்கு அப்புறம் நாம எல்லாம் கண்ணுக்கு தெரிவோமா என்று கிண்டல் அடித்துக் கொண்டிருந்தார்..

திவ்யா சொன்னது போலவே பிரகதி வாங்கி கொடுத்த ஷர்ட் போட்டு பார்ப்பதும் கழட்டி வைப்பது மாதிரி இருந்தான்…

அவன் அறைக்கதவை திறந்து கொண்டு அபிஷேக் உள்ளே நுழைந்தவன், இன்னும் ஆபீஸ்க்கு கிளம்புங்க என்னடா பண்ற.. காபி குடிக்க கூட கீழே வரல அம்மா உன்ன கேட்டுட்டு இருக்காங்க மேல என்னடா பண்ற..

அது வந்து இது பிரகதி வாங்கி கொடுத்த ஷர்ட் சும்மா போட்டு பார்த்தேன் என்றான்…

என்ன ஒரு அம்பது தடவை போட்டு பார்த்து இருப்பியா ..

எப்படி ப்ரோ இவ்வளவு கரெக்டா சொல்ற?

அப்போ நெஜமாவே 50 தடவை தான் ட்ரைல் பாத்தியா என்று கேட்டான்?

உன்னோட முடியலடா…

ஆபீஸ் தான் ரெடி ஆயிட்டு இருக்கேன்…

அதுக்குள்ள சும்மா போட்டு பார்த்தேன் என்றான்…

போதும் டைம் ஆச்சு கிளம்பி வா….

நாங்க இன்னைக்கு திவ்யா வீட்டுக்கு போய் அவங்க பேரன்ட்ஸ் 

இன்வையிட் பண்ணிட்டு வரோம்….

ஆபீஸ் போகும்போது கொஞ்சம் கேர்ஃபுல்லா போ கனவு கண்டுட்டு எங்கேயாவது போய் வண்டியை விடாதே… கொஞ்ச நாளைக்கு பாஸ்டா டிரைவ் பண்ணாத என்று ஆயிரத்துக்கு அட்வைஸ்களை சொல்லிக்கொண்டே இருவரும் கீழே வந்தனர்…

அரவிந்த் யார் முகத்தையும் பார்க்கவில்லை.. கோபமாக இருப்பது போல் காட்டிக் கொண்டான்…

அப்பொழுது சுகுமாரும் பேத்தியோடு கடையிலிருந்து வந்தவர் 

மருமகளிடமும் குழந்தை கொடுத்து கொஞ்சமா ஜூஸ் குடிச்சா லைட்டா சாப்பிட வை போதும்மா என்றார்… சரிங்க மாமா என்று குழந்தையை தூக்கிக்கொண்டு உடை மாற்ற அறைக்கு தூக்கிச் சென்றாள்…

என்னவாம் புது மாப்பிள்ளைக்கு, கல்யாணம் ஆகப்போகுது கொஞ்சம் ஆவது பொறுப்பா இருக்கச்சொல்லு… இப்படி சொல்றதுக்கெல்லாம் மூஞ்சி தூக்கி வெச்சிக்கிட்டு இருந்தா இவனை நம்பி எப்படி பொண்ணு கட்டி கொடுப்பாங்க …

இவனோட சேட்டை எல்லாம் தூக்கி ஓரமாய் வச்சுட்டு இன்னும் பொறுப்புடன் நடந்துக்க சொல்லு என்றார்….

அவனோ யாரையும் பார்க்காமல் எனக்கு ஆபீஸ் டைம் ஆச்சு நான் கிளம்புறேன் என்று பைக் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்….

அனைவரும் சுகுமாரை பார்க்க இப்ப என்ன சொல்லிட்டேன் சாப்பிடாமல் போறோன்.‌‌..

எல்லாம் உங்க ரெண்டு பேர சொல்லணும்… சரி சரி சாப்பிடுங்க டைம் ஆச்சு இப்போ எல்லாரையும்

அழைக்கனும் இல்ல.. அடுத்த அரை மணி நேரத்தில் கரூரில் இருக்கும் திவ்யா வீட்டிற்கு சென்றனர்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!