சபாபதி தனது எண்ணத்தை மோனிஷாவிடம் சொல்ல நினைத்தான், “மோனிஷா நான் கேட்டால் தப்பா நினைக்க மாட்டே இல்லை.” என்றான். அதற்கு அவளும், “என்ன சபா இப்படி கேட்டுட்ட? என்னன்னு சொல்லு.” என்றாள். அதற்கு சபாபதி, “இல்லை மோனிஷா எனக்கு சொந்தமா கம்பெனி ஆரம்பிக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. அதுக்கு உங்க அப்பாவால் எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா?” என்று கேட்டான்.
அதற்கு மோனிஷா ,”உனக்கு ஹெல்ப் பண்ணாம வேற யாருக்கு சபா ஹெல்ப் பண்றது, சரி நமக்கு நிறைய கம்பெனி இருக்கும்போது நீ எதுக்கு சொந்தமாக கம்பனி ஆரம்பிக்க நினைக்கிற? நம்மளோட கம்பெனியையே பார்த்துக் கொள்ளேன்.” என்று சொன்னாள்.
அதற்கு சபாபதி, “இல்ல மோனிஷா, எனக்கு நான் ஆரம்பத்தில் இருந்து உழைச்சு சுயமா ஒரு கம்பெனி ஆரம்பிக்கணும் என்றது என்னோட சின்ன வயசுல இருந்து ஆசை.” என்றான் கண்களில் கனவு மின்ன.
அவனது ஆசையை கேட்ட மோனிஷாவும், “சரி சபா, நான் அப்பாகிட்ட பேசிட்டு சொல்றேன். ஆமா நீ என்ன கம்பெனி ஆரம்பிக்கலாம்னு இருக்கே.” என்று கேட்டாள். அதற்கு சபாபதியும் எனக்கு ஆர்ட் அண்ட் டிசைனிங்ல இன்ட்ரஸ்ட் இருக்கு. அதனால கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கம்பெனி ஒன்று ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறன் மோனி. என்றான்.
மோனிஷா,”வாவ் சூப்பர் சபா உன்னோட டிசைன்ஸ் எல்லாம் நானும் பார்த்திருக்கேன், சூப்பரா இருக்கும். கண்டிப்பா இந்த வொர்க் உனக்கு ஷூட்டா இருக்கு. சரி நான் டாடி கிட்ட பேசிட்டு உனக்கு சொல்றேன்.” என்றாள்.
அதற்கு சபாவும், “தேங்க்ஸ் செல்லம்.” என்றான். அவளும் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டாள்.
பின்னர் மாலையில் கேசவனுடன் பேசி விட்டு சபாவிடம் சொல்லலாம் என்று நினைத்தாள். மோனிஷா போனை எடுத்து சபாவின் கனவையும் அவன் ஆரம்பிக்கப் போகும் பிசினஸ் பற்றியும் கேசவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“எதுக்கு மோனிஷா மாப்பிள்ளை இன்னொரு கம்பெனி ஆரம்பிச்சுட்டு, இருக்கிற நம்மளோட கம்பெனியை பார்த்துக்க சொல்லுமா.” என்று சொன்னார். அதற்கு அவளும், “இல்லப்பா நான் இதை முன்னாடியே கேட்டேன். ஆனால் அவர் சுயமாக ஆரம்பிக்கணும்னு நினைக்கிறாரு. உங்களால ஹெல்ப் பண்ண முடியுமா? ” என்று கேட்டாள்.
அதற்கு மோனிஷாவின் அப்பா, “மாப்பிள்ளை ஆசைப்பட்டுட்டாரு அது செஞ்சு கொடுக்கிறது நம்மளோட கடமை. அவர் வந்து என்ன ஈவினிங் சந்திக்க சொல்லு.” என்றார். மோனிஷாவும் சரி அப்பான்னு சொல்லிவிட்டு, சபாவதியிடம் ஃபோனை எடுத்து கேசவன் சொன்னதை சொன்னாள். அவன் மகிழ்ச்சியுடன் ரொம்ப சந்தோஷம் மோனிஷா நான் ஈவினிங் போய் மாமாவை பார்க்கிறேன் என்று சொன்னான்.
அருவிக்கரைக்கு வந்த மலர்னிகாவின் மலர்ந்த முகத்தை பார்த்துக்கொண்டு நின்றான் காளையன். “அம்மணி நீங்க இப்படி சிரிச்ச முகமா இருக்கும்போது ரொம்ப அழகா இருக்கிறீங்க.” என்று சொன்னான் காளையன். அப்படியா என்று கேட்டு திருப்பிக்கொண்டாள் மலர்னிகா. “இங்க வாங்க அம்மணி, இந்த பாறையில் உட்கார்ந்துகொள்ளுங்க. நல்லா உட்கார்ந்திட்டு காலை தண்ணீரில் போட்டுக்கோங்க, நல்லா இருக்கும். என்று சொன்னான்.
அவளும் காளையன் சொன்ன மாதிரியே பாறையில் இருந்து கொண்டு காலை தண்ணீருக்குள் விட்டுக்கொண்டு இருந்தாள். அதே பாறையில் காளையன் சற்று தள்ளி உட்க்கார்ந்தான்., “அம்மணி நாங்க இங்கதான் சின்ன வயசில் விளையாடிட்டு இருப்போம். அதிலும் இந்த பாறையில் இருந்து இந்த அருவியோட சத்தத்தை ரொம்ப நேரம் கேட்டுட்டு இருப்பேன். அதுவும் பௌர்ணமி நேரத்தில இங்க வந்தா ரொம்ப அருமையா இருக்கும். அது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.” என்று அவனுக்கு பிடித்த விசயங்களை சொல்லிக் கொண்டு இருந்தான்.
மலர்னிகாவும் அதை அமைதியாக இருந்து கேட்டுக் கொண்டு இருந்தாள். பின்னர் அவள் புறம் திரும்பிய காளையன்,” உங்களுக்கு பிடிச்சதை பற்றி சொல்லுங்க அம்மணி “என்றான். அதற்கு அவள்,” அப்பா, அம்மா, நிஷாவை ரொம்ப பிடிக்கும். அவங்களுக்கு அடுத்து எனக்கு பிடிச்சது பிஸ்னஸ் பண்றது. என்று சொல்லும் போதே முகேஷ் செய்தது ஞாபகம் வர, அவளது முகம் மாறியது.
இதை கவனித்த காளையன் சட்டென்று அவளை திசைதிருப்பும் வகையில், “சரி அம்மணி நாம வந்து ரொம்ப நேரமாச்சு. வீட்டில தேடுவாங்க. போகலாமா?” என்று சத்தமாக கேட்க, சுயநினைவுக்கு வந்த மலர்னிகா, “போகலாம்” என்றாள். இருவரும் வீட்டுக்கு திரும்பிச் சென்றனர்.
மதிய நேரம் வீட்டிற்கு சாப்பிட வந்த ராமச்சந்திரனும், தேவ சந்திரனும் கூடத்தில் அமைந்திருந்தனர். விசாகம் பாட்டியும் பெருந்தேவனாரும் வந்து அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். சமையலறையில் குணவதியுடனும் நேசமதியுடனும் சேர்ந்து துர்க்கா பேசிக்கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது துர்க்கா கூடத்தில் எல்லோரும் இருப்பதை பார்த்தார். இதுதான் தான் பேசுவதற்கு சரியான சந்தர்ப்பம் என்று நினைத்தவர் அண்ணிகள் இருவரையும் அழைத்துக் கொண்டு கூடத்திற்கு வந்தார். எல்லோரையும் தயக்கத்துடன் பார்த்து, “அப்பா அம்மா நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அண்ணா அண்ணி நீங்களும் இங்க இருக்கனும்னு நினைக்கிறேன்.” என்றார்.
உடனே, “என்ன துர்க்கா இது? அனுமதி எல்லாம் கேட்டுட்டு இருக்க, உனக்கு என்ன வேணும்? என்ன கேட்கணுமோ தாராளமா பேசலாம், கேட்கலாம்.” என்ற பெருந்தேவனார். சிரித்துக் கொண்ட துர்க்கா, “இத்தனை நாள் உங்களை எல்லாம் பிரிந்து ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்.
ஆனால் இதுக்கு மேல என்னால உங்களை விட்டு இருக்க முடியாது. நான் உங்க கூட இருந்திடுறன் அப்பா. “என்றார். அதற்கு அவர்கள், “நீ இங்கிருந்து போகணும்னு நினைச்சாலும், உன்னை நாங்க அனுப்புறதா இல்லைம்மா. நீ எப்பவும் போல எங்க தங்கச்சியா எங்க கூட இருக்கலாம். மலர்னிக்காவுக்கும் நிஷாவுக்கும் நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கிறது எங்களோட பொறுப்பு.” என்றார் ராமச்சந்திரன்.
துர்க்கா, “ஆமா அண்ணா அதைப் பற்றித்தான் நான் இப்போ பேச நினைக்கிறேன். ” என்றார். ராமச்சந்திரனும் பெருந்தேவனாரும்,” என்ன துர்க்கா ஒரு மாதிரி இருக்கிறா, ஏதாவது பிரச்சனையா? “என்றார். அதற்கு துர்கா,” ஒன்னும் இல்லைப்பா. எனக்கு மனசுல ஒன்னும் பட்டுச்சுது. அதுதான் உங்ககிட்ட பேசி பார்க்கலாம் என்று நினைத்தேன். ” என்றார்.
பெருந்தேவனார், “அதற்கு என்ன துர்க்கா. நம்மகிட்ட சொல்ல என்ன தயக்கம்? உனக்கு என்ன தோணுச்சு? ” என்று கேட்டார். ” அது வந்து அப்பா, மலர்…. என்று இழுத்தார். தேவச்சந்திரன், “எதுக்கு இப்போ தயங்கிட்டு இருக்க? நாங்க யாரு உன்னோட அப்பா அம்மா தானே ஏன் இவ்வளவு தயங்கிட்டு இருக்க? நீ சொல்ல வந்தது என்னவோ அதை சொல்லிடு துர்க்கா” என்றார். அதற்கு துர்க்கா பட்டென்று விசயத்தை போட்டு உடைத்தார்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊