காளையனை இழுக்கும் காந்தமலரே : 27

5
(1)

காந்தம் : 27

துர்க்கா பெருந்தேவனாரிடம், “அப்பா என்னோட பொண்ணு மலர்னிகா, இந்த வீட்டு மருமகளா இருக்கணும்னு நினைக்கிறேன்.” என்று அவர் சொன்ன உடனே ராமச்சந்திரன், “ரொம்ப சந்தோஷம் துர்க்கா. அதுக்கு என்ன என் தங்கச்சியோட பொண்ணு, எங்க வீட்டுக்கு மருமகளா வர்றது எங்களுக்கும் சந்தோசம் தானே.” என்றார். 

அப்போது பெருந்தேவனார், ” நல்லது தானே சபாபதி எப்போ வருவான்னு தெரியலை. தேவா அவனுக்கு போன போட்டு வரச் சொல்லு. பேசி முடிச்சிடலாம் ரெண்டு பேருக்கும். ” என்றார். அதற்கு துர்க்கா, கொஞ்சம் இருங்க அப்பா, நான் என் பொண்ணுக்கு கேட்டது சபாபதியை இல்லை. காளையனை.” என்றார். 

இதைக் கேட்ட எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். “துர்க்கா நீ புரிஞ்சுதான் பேசுறியா? காளையன் குணத்துல நல்ல பையன். அவனை ஒருகுறையும் சொல்ல முடியாது. ஆனால் மலர்னிகாவைப் போல அவன் படிக்கலையே. ஆனால் சபாபதி நல்லா படிச்சிருக்கான். பெரிய வேலையிலும் இருக்கிறான்.” என்றார். 

துர்க்கா, “அண்ணா பெரிய வேலையோ இல்லை நல்லா படிச்சிட்டு இருந்தா மட்டும் போதுமா? என் பொண்ணை நல்லா பார்த்துக்க நல்ல மனசு இருந்தால் போதாதா? எனக்கு என்னவோ காளையன் என் பொண்ணை பத்திரமா பார்த்துக் கொள்வான் என்று தோணுது. அப்பா, அண்ணா தயவுசெய்து என் பொண்ணு மலர்னிகாவிற்கும் காளையனுக்கும் கல்யாணம் செஞ்சு வச்சுடுங்க. ” என்று கைகூப்பினார். 

அவரது கையை இறுக்கிப்பிடித்த விசாகம் என்னடி இது கையேந்திக்கிட்டு நிக்கிற? உனக்கு என்ன இப்போ மலருக்கும் காளையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் சரியா?”என்றார். 

குணவதியும் நேசமதியும் பேசாமல் அமைதியாக இருப்பதை பார்த்தவர், “என்ன நீங்க ரெண்டு பேரும் எதுவும் சொல்லவே இல்லை. “என்றார். 

அதற்கு அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டு, “நாங்கள் ரெண்டு பேரும் காளையனுக்கு மலரை கேட்கலாம் என்று நினைத்தோம். ஆனால் நீ எப்படி நினைப்பியோன்னு தெரியலை. அதனாலதான் நாங்க அதை பற்றி பேசலை. எங்களோட ஆசையை மனசுக்குள்ளே வச்சுக்கிட்டோம்.” என்றார்கள். 

அப்போ ராமச்சந்திரன், “நல்ல வேளை துர்க்கா கேட்டுச்சு. இல்லைன்னு சொன்னால் நம்ம மலரை யாருக்காவது பேசி முடித்திருப்போம். என்று சொன்னார். அதற்கு பெருந்தேவனார், “யாருக்கு யார் என்று எழுதி இருக்கோ அவங்களுக்கு தான் அவங்களோட கல்யாணம் நடக்கும். ராமச்சந்திரா, அடுத்தது என்ன யோசியரை வரவச்சு நாள் பார்க்க வேண்டியது தான்.” என்றார். 

விசாகம், “அது எப்படி? முதல் பையன் சபா இருக்கும்போது, காளையனுக்கு எப்படி பண்றது?” என்று கேட்டார். அதற்கு பெருந்தேவனார்,” விசாகம் சொல்றதும் சரிதான். சரி முதல்ல போனை போட்டு நாளைக்கு சபாபதி வர சொல்லுங்க…” என்றார் தேவச்சந்திரனும் சபாபதிக்கு போன் அடித்து அவனை நாளை எந்தவித மறு பேச்சும் பேசாமல் ஊருக்கு வரச்சொன்னார் சபாவும் வருவதாக கூறி போனை வைத்தார். 

மாலை நேரம் கேசவனை சந்திப்பதற்காக வீட்டுக்கு வந்தான் சபாபதி. வந்த சபாபதியை வரவேற்று உட்கார வைத்து விட்டு, கேசவன் நேரடியாக தான் பேச வேண்டியதை பேச ஆரம்பித்தார். “மாப்பிள்ளை மோனி சொன்னா உங்களுக்கு சொந்தமா பிசினஸ் ஆரம்பிக்கிறது தான் பெரிய கனவு என்று சொல்லி உங்களுக்கு உதவி பண்ண சொன்னா. 

அதுக்கு என்னால முடிஞ்ச உதவியை கண்டிப்பா செய்றேன். உங்களுக்கு நான் என்ன செய்யணும்?” என்று கேட்டார். அதற்கு சபாவும், “மாமா எனக்கு ஒரு கம்பெனி ஸ்டார்ட் பண்றதுக்கு கொஞ்சம் பினான்சியலா ஹெல்ப் பண்ணினா போதும்.” என்று சொன்னதும், உடனே, “அதுக்கு என்ன பண்ணிடா போச்சு. நாளைக்கு போறோம் ஒரு இடத்தை பார்க்கிறோம். உங்களோட கம்பெனிக்கான வேலையே ஸ்டார்ட் பண்றோம்.” என்று சொன்னார். 

சபாபதிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. தான் பிசினஸ் செய்ய போவதாக கூறிய போது அது செய்ய வேண்டாம் என்று கூறிய வீட்டினர்களும் ஆனால் நாளையே போய் பிசினஸ் வேலையை பார்ப்போம். என்ற கேசவனையும் நினைத்துப் பார்த்தான். 

சபாபதி கேசவன் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது சபாபதிக்கு போன் வந்தது. எடுத்து பார்க்க ராமச்சந்திரன் தான் அழைத்திருந்தார். போனை எடுக்கவில்லை. ஆனால் கேசவன் யாரு மாப்பிள்ளை போன்ல என்ற, அதற்கு சபாபதி, “என் வீட்டில் இருந்து தான் மாமா” என்றான். “சரி எடுத்து பேசுங்க ஏதாவது முக்கியமான விஷயம் இருக்கப்போகின்றது” என்றார். 

உடனே சபாவதியும், “பரவாயில்லை நான் அப்புறம் பேசிக் கொள்கிறேன்.” என்று சொல்ல,, “அட பேசுங்க மாப்பிள்ளை. பரவாயில்லை. அப்பாதானே போன் பண்றாங்க. ” என்று கேட்க, அவனும், “ஆமாம் மாமா” என்றவன் ஃபோனை எடுத்தான். 

“சொல்லுங்கப்பா” என்றான். ராமச்சந்திரனும், “சபா ஒரு முக்கியமான வேலை இருக்கு. நாளைக்கு நீ கட்டாயம் ஊருக்கு வரணும்.” என்றார். “என்னப்பா எதுக்கு நான் வரணும்? என்ன வேலை? என்று கேட்டான். அதற்கு ராமச்சந்திரன், “கேள்வி எதுவும் கேட்காத, நாளைக்கு காலையில நீ ஊர்ல இருக்கணும்.” என்று சொல்லி போனை வைத்தார். 

சபாவதியும் சரி என்று சொல்லிவிட்டான். “என்ன மாப்பிள்ளை” என்று கேட்டார் கேசவன்.” என்னன்னு தெரியல மாமா நாளைக்கு ஊருக்கு வரச் சொல்லி போன் பண்ணாங்க அப்பா.” 

“அப்படியா மாப்பிள்ளை? நாளைக்கு நான் உங்க கம்பெனிக்கு இடம் பார்க்க போகலாம்னு நினைச்சேன். சரி பரவாயில்லை. முதல்ல ஊருக்கு போயிட்டு வாங்க. அப்புறம் கம்பெனியை பற்றி பார்க்கலாம்.” என்றார்.” சரி மாமா நான் போயிட்டு வரேன். நான் ஒரு ரெண்டு நாள்ல வந்துடுவேன். “என்று சொல்லிக் கொண்டிருந்தான். 

அப்போது அங்கே மோனிஷா வந்தாள்.” எங்க போற சபா? ” என்றாள். “ஊருக்கு போறன் மோனி. ” என்று சொல்லி போன் வந்தது முதல் நடந்ததை சொன்னான். அப்போ மோனி சபா, இது நல்ல சான்ஸ் தானே, நீ வேணும்னா நம்ம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டதை உங்க வீட்டுல சொல்லிப்பாரு. ” என்றாள். 

அதற்கு கேசவனும்,”ஆமா சபா இதுவும் நல்ல ஐடியா தான். நிலைமையை பார்த்து உங்க ரிஜிஸ்டர் மேரேஜ் விஷயத்தை, வீட்ல சொல்லி பாருங்க.” என்றார். சபாவும்,” சரி மாமா சந்தர்ப்பம் கிடைச்சா நிச்சயமா பேசுறேன்.” என்று சொல்லிவிட்டு மோனிஷாவிடமும் சொல்லிவிட்டு சென்றான். 

காமாட்சியையும் நிஷாவையும் தேடி ஊரெல்லாம் திரிந்தான் கதிர். அவனுக்கு காளையன் சொன்னதை கேட்டதில் இருந்தே பயமாக இருந்தது. கடைசியாக அவர்கள் ஒரு மாந்தோப்பில் இருப்பதைப் பார்த்து அங்கே செல்ல முயன்றான். 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!