மலர்னிக்காவை பற்றி நிஷா சொன்னதைக் கேட்டவர்களுக்கு மலர்னிகாவை நினைத்து மிகவும் பெருமையாகவும் அதே நேரம் அவளுக்கு நடந்த அநியாயத்தை நினைத்து கவலையாகவும் இருந்தது. காளையன் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றான்.
காமாட்சி,” நிஷா அண்ணி எவ்வளவு உறுதியானவங்களாக இருந்திருக்கிறாங்க என்பதை நினைக்கும் போது அப்படியே புல்லரிக்குது. அவங்களை நாம எப்படியாவது பழையபடி மாத்தணும்.” என்றாள். நிஷாவும் மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.
அறைக்கு வந்த சபாபதி, மோனிஷாவிற்கு கால் பண்ணி ஊருக்கு வந்து விட்டதாக சொன்னான். அவளும்,” சரி சபா, அங்க என்ன நடக்குதுனு சொல்லு. அப்புறம் நம்மளோட விசயத்தை சொல்ல சரியான நேரம் வந்தால் சொல்லிடு. “என்றாள். அதற்கு அவனும், “கண்டிப்பா சொல்றன் மோனி, எனக்கு ரொம்ப களைப்பாக இருக்கு நான் குளிச்சிட்டு சாப்பிட்டு தூங்கணும். ஈவ்னிங் உனக்கு கால் பண்றன்.” என்றான். அவளும்,” சரி சபா டேக் கேர். ஐ மிஸ் யூ “என்று சொல்லி போனை வைத்தாள்.
காலையில் கேசவன், முகேஷ், மோனிஷா எல்லோரும் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது முகேஷ்,” அப்பா நான் தேன்சோலையூருக்கு போகணும். ” என்றான். அதற்கு கேசவன்,” என்ன தேன்சோலையூருக்கா? அங்க எதுக்கு நீ போகணும்? “என்றார்.
கேசவனிடம் முகேஷ், “போகணும்பா எனக்கு அங்க முக்கியமான வேலை இருக்கு.” என்றான். மோனிஷா, “அண்ணா சபாவோட ஊரும் அதுதான். நீங்க ஏன் அங்க தங்கக்கூடாது? அவன்கிட்ட கேட்டா நோ சொல்லமாட்டான்.” என்றார். கேசவன்,” இல்லை மோனி. அது சரிபட்டு வராது. மோனி நீ கம்பனிக்கு போ. முகேஷ் என்கூட ஒரு இடத்திற்கு வா. போங்க ரெண்டு பேரும் ரெடியாகுங்க “என்றார். அவர்களும் எதுவும் பேசாமல் சென்றனர்.
முகேஷ் தனது போனை எடுத்துப் பார்க்க நிறைய மிஸ்ட் கால் ஒரு நம்பரில் இருந்து வந்திருந்தது. உடனே அந்த நம்பருக்கு போன் பண்ணினான்.” ஹலோ. எதுக்கு இத்தனை தடவை கால் பண்ணி யிருக்க? “என்றான். மறுபக்கம் இருந்தவன்,” சார் முக்கியமான விசயம் சொல்லணும்னு தான் கால் பண்ணினேன்.”
“சரி சீக்கிரமா சொல்லு” என்று முகேஷ் சொன்னான். அதற்கு கால் பண்ணியவன், “சார் நீங்க கொலை பண்ணச் சொல்லியிருந்த மலர்னிகா பொண்ணுக்கும் காளையன் என்று சொல்ற ஒருத்தனுக்கும் கல்யாணம் முடிவாகி இருக்கு.” என்றான்.
இதைக் கேட்ட முகேஷ்க்கு அதிர்ச்சியாக இருந்தது. அவளுக்கு யாரோட சப்போர்ட்டும் கிடைக்கக் கூடாது என்றுதான் அவன் பாடுபடுறான். அப்படி யாரும் உதவிக்கு வந்தால் மலர்னிகா மீண்டும் பிஸ்னஸ்க்கு வருவாள் என்று அவனது உள்மனசு சொல்லியது. இதை நடக்க விடவே கூடாது. என்று நினைத்தவனுக்கு கொடூர எண்ணம் தோன்றியது.
“சார் லைன்ல இருக்கிறீங்களா?” என்றான். அதற்கு முகேஷ், “ஆ, இருக்கிறன். எனக்கு அந்த காளையனோட போன் நம்பரை உடனே எனக்கு அனுப்பி வை. நான் அப்புறம் கூப்பிடறேன் ” என்றான். அவனும் நம்பரை அனுப்பி வைத்தான்.
வழமை போல எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பெருந்தேவனார் அவருக்கு அருகே இடது புறம் விசாகம், துர்க்கா, மலர்னிகா, காமாட்சியும் அவருக்கு வலது பக்கம் ராமச்சந்திரன், தேவச்சந்திரன், சபாபதி, காளையனும் அமர்ந்திருக்க குணவதியும் நேசமதியும் பார்த்துப் பார்த்து கவனித்தனர். எல்லோரும் சேர்ந்து உண்பதைப் பார்க்க அத்தனை நிறைவாக இருந்தது.
சாப்பிட்டு விட்டு, கூடத்தில் பேசிக் கொண்டு இருந்தனர் ஆண்கள் அனைவரும். விசாகம் மாலை கோயிலில் நடைபெற இருக்கும் பூசைக்கு தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தனர் பெண்கள். மலர் மட்டும் அறைக்குள் சென்றுவிட்டாள். அவளை யாரும் எதுவும் சொல்லவில்லை.
இதுதான் சரியான சந்தர்ப்பம் என நினைத்த பெருந்தேவனார் சபாபதியிடம் பேச ஆரம்பித்தார். “சபா நம்மளோட காளையாக்கும் மலருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு துர்க்கா ஆசைப்படுறா. எல்லோரும் இந்த கல்யாணத்ததில சந்தோசம். ஆனால் மூத்தவன் நீ இருக்கும் போது, அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது சரியில்லை. அதனால முதல்ல உனக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பார்க்கலாம்னு இருக்கிறம். நீ என்னப்பா சொல்ற? “என்றார்.
சபாபதிக்கு கடவுளே என்ன இது? இந்த தாத்தா இப்படி திடீர்னு கல்யாணப் பேச்சு பேசுறாரு. வேணும்னா அவனுக்கு பண்ண வேண்டியதுதானே. என்று மனசுக்குள் பேசிக் கொண்டான்.” இல்லை தாத்தா, இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்? ” என்றான்.
ராமச்சந்திரன்,” சபா தாத்தாகிட்ட இப்படியா பேசுவ?” என்றார். அவனும் “இல்லை அப்பா நான் தப்பா பேசலையே. இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொல்றன். அவ்வளவு தான். எனக்கு சொந்தமா பிஸ்னஸ் ஆரம்பிச்சு, நிறையபேருக்கு வேலை குடுக்கணும்னு ஆசை. அது நிறைவேறாமல், என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. ” என்று சபாபதி சொல்லவும் பெருந்தேவனாருக்கு கோபம் வந்தது.
“இங்க பாரு சபா, உனக்கு கம்பனியில வேலை பார்க்கணும்னு ஆசைனு சொன்னதாலதான் நாங்க உன்னை அனுப்பி வைச்சோம். சொந்தமா கம்பெனி ஆரம்பிக்கணும்னு நினைக்காத சபா. அதனாலதான் துர்க்கா அவளோட புருஷனை இழந்திட்டு இருக்கிறாள்.” என்றார்.
அதற்கு சபாபதி ஏதோ பேச வர, விசாகம் அங்கே வந்தார்.” முதல்ல எல்லோரும் பூஜைக்கு ஆகவேண்டிய வேலையை பாருங்க. ராத்திரி வந்து அதைப் பற்றி பேசிக்கலாம். ” என்றார். அவரது பேச்சிற்கு எதிர்ப்பேச்சு யாரும் பேசாமல் கோயிலுக்குச் சென்று, அங்குள்ள வேலைகளை பார்க்க ராமச்சந்திரனும் தேவச்சந்திரனும் செல்ல, காளையன் மில்லுக்குச் சென்றான். சபாபதி ஊரிலுள்ள அவனது நண்பனை பார்க்கச் சென்றான்.
அறையில் படுத்திருந்த மலரது மனம் ரணமாகி இருந்தது. துர்க்காவும் அவளை புரிந்து கொள்ளாமல் கல்யாணத்திற்கு கட்டாயப்படுத்தியது அவளை மேலும் கஷ்டப்படுத்தியது. அவளது மனம் தந்தையை நினைத்து ஏங்கியது. “அப்பா,நீங்க என்கூட இருந்திருந்தா இப்படி கஷ்டம் வந்திருக்குமா? என்னால அழவும் முடியலை. உங்களை பார்க்கணும் போல இருக்கு அப்பா, உங்களோட மடியில் தலை வைத்து தூங்கணும் போல இருக்கு.” என்று பேசிக் கொண்டிருந்தாள்.
மில்லுக்குச் செல்லும் வழியில், காளையனுக்கு பணம் எடுத்து வராதது ஞாபகம் வரவும் , திரும்ப வீட்டிற்கு வந்தவன். பணம் எடுக்க அவனது அறைக்குள் செல்லும் போது, மலர்னிகா பேசுவதை கேட்டவன், அவளது அறைக்குள் சென்றான்.
கட்டிலில் படுத்துக் கொண்டு இருந்த மலர்னிகா அருகில் சென்ற காளையன் செய்த செயலில் பதறி எழுந்தாள் மலர்னிகா.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊