“ஏன்டி அமைதியா வேலை செய்யமாட்டியா ஒரு கட்டு புல் அறுக்கலை… அதுக்குள்ள ஓராயிரம் வார்த்தை பேசுற…
“உன்னை யாரு இன்னைக்கு டியூட்டி மாற்ற சொன்னது.”
“அம்மாவுக்காகதான்”.
“வேலைக்கு சேர்ந்த இரண்டாவது நாளில் ட்யூட்டி மாத்திருக்க, உன்னை என்ன பண்றது”.
“ஒன்னும் பண்ண வேணாம். ஒழுங்கா வேலையை பாரு. அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு காலையில் எழுந்துக்கவே இல்லை. அதான் மாற்றினேன்.” என்றாள் செம்பா.
“அந்த ஒரு காரணத்துக்காகதான் உன்னை மன்னிச்சி விடுறாள் இந்த கோகி. திருவிழாவையும் பார்க்கவிடாமல் புல்லு அறுக்க கூப்பிட்டு வந்திருக்க.”
“இன்னைக்கு நைட்தானடி திருவிழா”
“அதையும்தான் பார்க்க முடியாதே. சாமி அருள்வாக்கு சொல்லும். பார்க்கவே அம்பூட்டு அழகா இருக்கும்.” என கண்ணத்தில் கை வைத்து ஆகாயத்தை பார்க்க…
“அம்மா தாயே! நீ வேணும்னா கிளம்பி வேலைக்கு போ. உன்னை போகவேண்டாம்னு நான் சொல்லல. நீதான் நான் உன் கூடவே டியூட்டி பாக்குறேன் சொன்ன. மறந்துடுச்சோ உன் மரமண்டைக்கு”
என்ன பண்றது. அந்த மருது பேசினதுல இருந்து உன்னை விட்டு தனியாக போக பயமா இருக்கு என மனதிற்குள் நினைத்தாள் கோகி.
“வாய்க்காலில் விழுந்துட்டாங்க போல என செம்பா சொல்ல…
“அப்படி தான் தெரியுது, கால் தடுமாறி இருக்கும் என்ற தோழிகள் இருவரும் அவர்கள் வேலையை பார்க்க.. தட்டு தடுமாறி எழுந்து நின்றால் ஆத்விகா.
காலையில் எழுந்த ஆத்விகா தன் வீட்டிலிருந்து போன் வர பேசிய படியே வயலின் ஓரம் நடந்து வந்தவள், குகனின் தோட்டத்திற்குள் வந்து வரப்பில் ஏறியவள், வாய்க்காலில் கால் வைக்க, இடறி சகதி வயலுக்குள் விழுந்தாள்.
கீழே விழுந்ததில் அவள் கால் முழுவதும் சகதி ஆகிவிட்டது.
அங்கே புல் அறுத்து கொண்டிருந்த இரு பெண்கள் தன்னை பார்த்துவிட்டு மீண்டும் வேலை செய்வதை கவனித்தவள் அவர்களை அழைத்தாள்.
“இந்த பொண்ணு எதுக்கு செம்பா நம்மளை கூப்பிடுது.?”
“என்னன்னு கேளுடி” என்ற செம்பா அவள் வேலையை பார்த்தாள்..
அதேபோல் கோகி “என்ன” என கேட்க,
இங்கே வான்னு கூப்பிடுறேன்ல்ல காது கேட்கலையா, அங்கே நின்று எதுக்குன்னு கேட்கிற? என்ற ஆத்விகாவை,
“பாத்தியா செம்பா திமிர, வா என்னனு கேட்டுட்டு வருவோம்” என இருவரும் ஆத்வியிடம் வர செம்பாவிற்கு பக்கத்தில் செல்லவும் அன்று சமருடன் பார்த்த பெண் என தெரிந்துவிட்டது.
“என்ன? எதுக்கு கூப்பிட்ட…?”
“இதோ இந்த செருப்பை கொஞ்சம் கழுவிக் கொடு…” என்றாள் ஆத்வி.
“எது உன் செருப்பை நாங்க கழுவனுமா…?” என செம்பா கேட்க…
“ஹூ ஸ் அன் இடியட்? பி பொலைட். டாக் டூ சம்ஒன் யு நௌவ். ஐ வில் ட்யர் யுவர் மௌவுத் அபார்ட். இப் யு கம் டு டவுன் அன்ட் லுக் அரௌவுண்ட் தி டவுன். யு வில் ஜஸ்ட் லீவ். ஐ வில் கில் யு பார் திங்கிங் தட் யு ஆர் ஆரோக்கன்ட்” என்றவளை ஆவென பார்த்தாள் கோகி.
( யாரு இடியட். ஆளைப்பாரு, யாருகிட்ட பேசுறோம்னு பார்த்து பேசு. வாயை கிழிச்சிடுவேன். ஊருக்கு வந்தியா ஊரை சுற்றி பார்த்தியா அப்படியே போய்ட்டு இருக்கனும். உன் திமிரை என்கிட்ட காட்டனும்னு நினைச்ச மூஞ்ச பேத்துடுவேன்.)
“யாரைடி எதிர்த்து பேசுற” என ஆத்வி செம்பாவை பார்த்து கையை ஓங்க
செம்பா தடுக்கும் முன் இன்னொரு கரம் தடுத்திருந்தது.
கண்கள் சிவக்க கோபமாக நின்றிருந்தான் குகன். அவள் கையை பிடித்து தள்ளி விட கீழே விழுந்தாள் ஆத்வி.
“யாரு மேல் கையை வைக்கிற கையை உடைச்சிடுவேன் ராஸ்கல். பொம்பள பசங்க மேல் கையை வைக்கிற பழக்கம் எனக்கு இல்லை. இதே இடத்துலே ஆம்பள இருந்திருந்தால் உடம்புல உசுரு மட்டும்தான் இருந்திருக்கும். ஊருக்கு வந்த வேலையை மட்டும் பார்த்தால் ரொம்ப நல்லது இல்லை தொலைச்சிடுவேன்” என குகன் மிரட்ட…
ஆத்வி கீழே விழுந்தவள் எழுந்து மூவரையும் முறைத்து கொண்டு கிளம்பினாள்.
“நீங்க வேலைக்கு போகலையா செம்பா.?”
“போகனும் மாமா. மதியத்துக்கு மேலதான் டியூட்டி.”
“சரிம்மா. அப்போ இன்னைக்கு ராத்திரி திருவிழா பார்க்க இருக்க மாட்டிங்களா…?”
“ஆமா மாமா”.
“இன்னைக்குதானே செம்பா சாமி அருள்வாக்கு சொல்லும்.”
‘என்ன சொல்லி என் தலையெழுத்து மாறிடுமா என்ன?’ என மனதிற்குள் நினைத்தவள் ‘வருஷா வருஷம் சொல்றதுதானே மாமா” என்றவள் நேரம் ஆகிடுச்சி நாங்க கிளம்புறோம் மாமா’ என இருவரூம் வயலை விட்டு வெளியேற, குகன் பார்வை ஆத்வி மேல் சென்றது. இப்போதும் போனை பேசியபடி நடந்தவள், தடுமாறி கிழே விழ அதை பார்த்தவன் சிரித்தபடி நகர்ந்தான்.
நள்ளிரவு உச்சிகால பூஜை. அப்படியொரு அமைதி. மக்களின் கூட்டத்தில் கோவில் வளாகமே நிரம்பி வழிந்தது. ஆனால் சத்தம் இல்லை. எல்லோரும் கை கூப்பியபடி அம்பாளையே பார்த்தபடி இருந்தனர்.
ஒவ்வொரு வருடமும் ஒவ்வொருவரின் மீது அம்பாள் இறங்கி அருள்வாக்கு சொல்லுவாள். அந்தநாள் ரொம்ப விஷேசமானது. அதற்காகவே பக்கத்து ஊரில் இருந்து எல்லாம் மக்கள் குவிவார்கள். இன்று யார் மீது வரும் என தெரியவில்லை. யார் வந்தாலும் அந்த உச்சிகாலை பூஜை முடியும் வரை அவர்கள்தான் அந்த ஊரின் தெய்வம். அம்பாள் கிரிடம், வாள், கும்பம், தீச்சட்டியுடன், சலங்கையும் காத்திருந்தன. அம்பாள் அருளுடன் அருள்வாக்கு முடிந்ததும் தீ மிதிக்கவேண்டும். நேரம் கடந்து கொண்டேயிருந்தது.
ஊரின் தலைவர் “என்ன பூசாரி இன்னூம் ஆத்தாளை காணும்”
“வருவாய்யா! அவளுக்கானவரை தேடுவாளா இருக்கும். வந்துடுவாள்.”
“ஏய் என்ற அதித சத்தத்துடன் ம்ஹிம்.. ம்ஹூம்.. ம்ஹிம்.. என்ற வித்தியாசமான மூச்சினை விட்டு அம்பாளின் முன் அங்கிருந்த வாளை எடுத்து நின்றான் குகன். கைகள் இரண்டும் வானத்தை பார்ப்பது போல உயர்த்தி, கண்களில் கருவிழி தெரியாமல் விழிகள் முழுவதும் மாறி வெண்மையாய் தெரிந்தன. கண்கள் உக்கிரத்தையும் இதழ்கள் புன்சிரிப்பினையும் காட்டியது. பெண்கள் குலவை சத்தம் விண்ணை முட்டியது. ஆத்தா, அம்மா, தாயே என்ற வார்த்தைகள் மட்டுமே மந்திரமாய் உச்சரிக்க பட்டன.
அங்கேயும் இங்கேயுமாய் ஆங்காரமாய் நடந்தான். “ஹாஹாஹா” என்ற சிரிப்பு சத்தத்தோடு ம்ஹிம்… ம்ஹிம்..ம்ஹிம்..ம்ஹிம்… ஏய்..ம்ஹிம்… ம்ஹிம் என முனங்கியபடி அங்கிருந்த அம்பாளுக்கான நாற்காலியில் ஒரு காலை நீட்டி, ஒரு காலை மடக்கி கையில் வாளை ஏந்தியவன், அப்படியே தரையில் வாளின் முனையை குத்தினான். அதை பார்க்கவே அத்தனை கம்பிரமாய் இருந்தது. அந்த நாற்காலியில் அமர்ந்ததும் அம்பாளிற்கான கிரிடத்தை அவன் தலையில் தூக்கி வைத்தனர். சலங்கையை காலில் கட்ட ஜல்..ஜல்.. என சலங்கை சத்தம் அந்த இடத்தையே நிறைத்தது.
முதல்முதலில் அம்மனின் அருள்வாக்கு அருள்வந்து ஆடுபவரின் குடும்பத்தினருக்குதான். குகனுக்கு அவன் அம்மா மட்டும்தான். அவர் முன்னால் வந்து மடியேந்தி கண்கலங்கி நின்றார்.
“ஹாஹாஹா… ஏன் கலங்குற”
“உனக்கு தெரியாதாம்மா?”
“ம்ஹூம்.. நேரம் நெருங்கி வந்துடுச்சி. போ” என அவன் கழுத்தில் இருந்த எலுமிச்சை மாலையில் உள்ள எலுமிச்சம்பழம் ஒன்றை, அவர் மடியில் விபூதியுடன் வைத்தான். கையெடுத்து கும்பிட்டு விட்டு நகர்ந்தார் குகனின் அம்மா.
ஒவ்வொருவராய் அருள்வாக்கு கேட்டு இருக்க, பாலாவின் குடும்பம் வந்தது.
கற்பகத்தை பார்த்து எக்காளமிட்டு சிரித்தான் குகன்.
“என்னம்மா? வருஷா வருஷம்! எனக்கு உன் சிரிப்பையே பதிலாக தாறியே, என் பையனுக்கு எப்போது திருமணம் நடக்கும்.”
“வா, என பக்கத்தில் அழைத்து இரண்டு எலுமிச்சை கனிகளை கையில் கொடுத்து போ” என்றான்.
“இதை எதுக்கும்மா கொடுக்குற, போன தடவை ஒரு கனி கொடுத்த இப்போ ரெண்டு கொடுக்குறியே?
“போ, சீக்கிரம் பதில் தெரியும்” என்றதும் அதற்குமேல் நிற்க முடியாது என்பதால் நகர்ந்தார் கற்பகம்.
அடுத்தது பாலா வந்தான்.
“எவ்வளவு நாள் மறைக்க முடியும். இன்னும் கொஞ்ச நாள்தான். எல்லாமே வெட்ட வெளிச்சமாக போகுது, என்ன பண்ண போற”
அ…அம்மா..
“ஹா.. ம்ஹூம் போய்ட்டு சீக்கிரம் வா. என்னை பாக்கனும்ல”
“ஆமாம்மா” என்றான் பாலா.
“சந்தோஷமா போ” என்றதும் அடுத்து செம்பாவின் அம்மா சந்திரமதி வந்தார்.
நாராயணன் தங்கையை பார்த்தும் பார்க்காது போல திரும்பி கொல்ல, மங்கையும், கற்பகமும் அவரை கேலியாக பார்த்து சிரித்தனர்.
“வா என்ன வேணும்” என்றான் இவ்வளவு நேரம் இருந்த புன்னகை முகம் மறைந்து.
“நான் என்னம்மா கேட்கபோறேன், என் பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கனும்.”
“ம்ம்ம் நல்லா இருக்கும். முடிவுலதான் தொடக்கம் இருக்கு. விதி வலியது. ஏத்துக்க தயாரா இரு” என அவருக்கு விபூதி கொடுத்தான்.
அடுத்து சமரை அழைத்துகொண்டு சென்றான் பாலா.
“வா.. வா மகனே… என் கோட்டைக்கு இத்தனை வருஷம் கழிச்சி வந்திருக்க, நீ நினைச்சி வந்தது நடக்கும். கலங்காதே, கவலைபடாதே என்னைதானே சாட்சியா வச்சிட்டு போன, மறந்துட்டியா ?
“மறக்கவில்லை” என தலையசைத்தான் சமர்.
“ஹாஹாஹா.. வா” என பக்கத்தில் அழைத்தவன் அவன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டி அவன் கையில் கொடுத்தான். அதை வாங்கிகொண்டு சமர் நகர அவன் பின்னால் வந்ததால் ஆத்வியும் அங்கே நின்றாள்.
“அவளை இங்கே வா” என்க சமரை பார்த்தாள்.
“போ” என கண் அசைக்க குகன் முன் நின்றாள். உள்ளுக்குள் உதறலாகவும் பயமாகத்தான் இருந்தது. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் நின்றாள்.
“எங்கேயோ பிறந்து, எங்கேயோ வாழப்போற, உன்னோட ஆங்காரம், அகம்பாவம் எல்லாத்தையும் இழந்து நிற்கதியா உன் வாழ்க்கைக்காக நீயே போராடுவ மகளே, என விபூதியை அவள் நெற்றியில் வைத்தவன் போ” என கர்ஜிக்க பயந்தபடி நகர்ந்தாள்.
எல்லாருக்கும் அருள்வாக்கு சொல்லி முடிக்கவும், இருந்த இடத்திலேயே மஞ்சள் நீரால் அபிஷேகம் ஆரம்பமானது. இடுப்பில் அம்பாளுக்கு அணிவிக்கும் புடவையை கட்டி விட்டனர். பூக்களால் ஜோடிக்கபட்ட கும்பம் அவன் தலையில் ஏற்றபட்டது. ஒரு கையில் வாளுடன், இன்னொரு கையில் தீச்சட்டியுடன் ஆங்காரமாய் நடந்தவன் நான்கு பேர் மட்டுமே அவன் பின்னால் செல்ல ஊரை சுற்றினான். ஒரு மணி நேரம் தாண்டிய பின் கோவிலுக்குள் வந்தவன், அம்பாள் சன்னதியை மூன்றுமுறை சுற்றி வந்து அங்கிருந்த தீக்குழியில் இறங்கினான். அவன் நடக்க நடக்க அவன்மீது மலர்களாய் கொட்டினர். அப்படியொரு சிரிப்பு அவன் முகத்தில். தீக்குழியை மிதித்து முடித்ததும் எக்காளமிட்டு சிரித்தவன் “நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் மனசு குளுந்துடுச்சி, அதுபோல என் ஊரையும் குளிர்விப்பேன் என் மக்கா” என அம்மன் சன்னதியின் முன் விழுந்து மயங்கினான் குகன்.
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.9 / 5. Vote count: 10
No votes so far! Be the first to rate this post.
Post Views:756
1 thought on “இதயமே இளகுமா அத்தியாயம் 11”
DEEPA V
ஆரம்பமே அமர்க்களம்…
ஆசையில பாத்தி கட்டி களையை தானே அறுக்க வந்தேன் நான் கோகி😅😅😅😅🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌👌👌👌👌👌..
செம்ம செம்ம கலக்கிட்டீங்க…
அந்த பாடலையே திரும்ப திரும்ப படித்தேன்…
கற்பனை அருமை…
கோகி உனக்கு இன்னுமா புரியலை ,இரவு கோயில் திருவிழாவிற்கு போக கூடாது என்று தான் செம்பா duty மாற்றி இருக்கிறாள்..
எனக்கு என்னமோ ஆத்விகா தான் குகன் ஜோடியாக வருவாள் என்று தெரிகிறது…
குகன் அருள்வாக்கு சொன்ன விதம் அருமை..அனைத்துமே ஒரு வித கேள்வியும்,எதிர்பார்ப்பும் கொண்ட அறுள்வாக்காக உள்ளது….
செம்பாவின் அம்மாவிற்கு சொன்ன வாக்கு தான் சற்று பயத்தை ஏற்படுத்துகிறது…
அவள் வாழ்க்கையில் என்ன நடக்க போகிறதோ ,பொறுத்திருந்து பார்ப்போம்…
ஆரம்பமே அமர்க்களம்…
ஆசையில பாத்தி கட்டி களையை தானே அறுக்க வந்தேன் நான் கோகி😅😅😅😅🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌👌👌👌👌👌..
செம்ம செம்ம கலக்கிட்டீங்க…
அந்த பாடலையே திரும்ப திரும்ப படித்தேன்…
கற்பனை அருமை…
கோகி உனக்கு இன்னுமா புரியலை ,இரவு கோயில் திருவிழாவிற்கு போக கூடாது என்று தான் செம்பா duty மாற்றி இருக்கிறாள்..
எனக்கு என்னமோ ஆத்விகா தான் குகன் ஜோடியாக வருவாள் என்று தெரிகிறது…
குகன் அருள்வாக்கு சொன்ன விதம் அருமை..அனைத்துமே ஒரு வித கேள்வியும்,எதிர்பார்ப்பும் கொண்ட அறுள்வாக்காக உள்ளது….
செம்பாவின் அம்மாவிற்கு சொன்ன வாக்கு தான் சற்று பயத்தை ஏற்படுத்துகிறது…
அவள் வாழ்க்கையில் என்ன நடக்க போகிறதோ ,பொறுத்திருந்து பார்ப்போம்…