உள்ளத்தின் உள்ளர்த்தம்
உணர வழி தேடும்
உனதிரு விழிகளுக்கு
எப்படியடி புரிய வைப்பேன்?
உயிரில்லா என்மொழிகளிலேயே
உயிருள்ள என்னுணர்வுகள்
உருகிக் கிடக்கிறதென்பதை!!!
———————