உயிர் தொடும் உறவே 23

4.9
(7)

உயிர் 23

 

நேஹாவோ பதறியபடி மீனாட்சியின் அலைப்பேசிக்கு அழைப்பு விடுத்தாள்.

கிட்டத்தட்ட ஆதியை ஒருவழி செய்திருந்தான் ஈஸ்வரன்.

அவ்வளவு ஆத்திரம் அவனுக்கு.

உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த அனல் மொத்தமும் ஆதியிடம் தீப்பிழப்புகளாக வெடித்துச்‌ சிதறியது.

நேஹாவிற்கோ இவனுக்கு இவ்வளவு கோபம் வருமா…?எனத் தோன்றியது.

மீனாட்சியின் அலைப்பேசி ஐந்தாறு முறைக்கு மேல் அடித்து ஓய்ந்தது.

சங்கர பாண்டியனுக்கு அழைக்க முயன்று அந்த முயற்சியை கைவிட்டாள்.

மருத்துவர்கள்‌ அவனுக்கு முதலுதவி அளித்தனர்.

“ எப்படி இப்படி ஆச்சு…?” என்றார் ‌மருத்துவர்.

“ அது வந்து…” என நேஹா ஆரம்பிக்கும்‌ முன்பே , “வண்டில இருந்து விழுந்துட்டேன் சார்…ஸ்..ஸ்..ஆ..” என வலியில் முகம்‌ சுளித்தான்.

“ பார்த்தா அப்படி தெரியலையே…?”

“ சார்‌ ஃபர்ஸ்ட் அவருக்கு டிரிட்மெண்ட்டை ஆரம்பிங்க…அவனால கையை அசைக்கக் கூட‌ முடியலை…ப்ளீஸ்…என்னாச்சுன்னு பாருங்க..” என்றாள்.

“ ஓகே…ஓகே… நர்ஸ்… எமர்ஜென்சி வார்டுக்கு அழைச்சிட்டு போங்க…* என்றார்.

மீனாட்சி வேலையாக இருந்ததால்  அலைப்பேசியின் ஒலி அவள் காதில் விழவில்லை.

சமையலை முடித்து விட்டு வந்தவள் தனது அலைப்பேசியை பார்த்தாள் .‌

நேஹா ஐந்திற்கும் மேற்பட்ட அழைப்புகளை விடுத்திருந்தாள்.

“ ஏன் இம்புட்டு தரம் கூப்ட்ருக்கா‌.?” என யோசித்தபடியே அவளுக்கு அழைப்பு விடுத்தாள்.

முதல் அழைப்பிலேயே எடுத்த நேஹா பதட்டத்துடன்,” மீனாட்சி…எங்க இருக்க? என்ன பிரச்சினைன்னு தெரியலை…ஈஸ்வரன் ஆதியை போட்டு‌அடி அடின்னு அடிசசிட்டார். ஆதிக்கு ரொம்ப அடி…இங்க ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்…நீ‌ கொஞ்சம் வர்றியா..? ஆதியால கை, காலை அசைக்கவே முடியல….ப்ளீஸ் மீனாட்சி….” என்றாள்.

மீனாட்சியோ சற்று திகைத்தாலும்‌ ஈஸ்வரனின் நியாமான கோபத்தை அறிந்தவள்‌ தானே…அவன் செய்தது நியாயமாகவே தோன்றியது.

“ மீனாட்சி…. மீனாட்சி…. லைன்ல இருக்கியா…?” என்றாள் நேஹா…

மீனாட்சியோ சாதாரணமாகவே, “ இப்ப என்ன பண்ணனும் நேஹா…?அவரு பண்ண தப்புக்கு தான் மாமா அடிச்சிருப்பாக. கண்டிப்பா உயிரு போயிடாது…கை காலை அசைக்க கொஞ்சம் நாளாகும் அம்புட்டுதேன்…நீ வடிவத்தைக்கு ஃபோன் போடு…அவுக வந்து பாத்துப்பாக…அவங்க மவனை…” என எள்ளலுடன் கூறினாள்.

எந்த ஒரு  உயிரையும் சிரமப்படுத்த நினைக்காதவள்… எள் என்றால் எண்ணெய்யாக இருப்பவள் இன்று தாலி கட்டிய கணவன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் இருப்பது அவளை பெரிதாக பாதிக்கவில்லை போலும்…செய்த தவறுக்கு ஈஸ்வரன் தண்டனை கொடுத்துள்ளான் என்று தான் நினைத்தாள்.

 

நேஹாவிற்கோ பொறுமை எல்லை மீறியது…” என்ன பேசுறீங்க மீனாட்சி…?பிடிக்காதவனா இருந்தாலும் அவனும்‌ மனுஷன்  தானே…உங்களை கல்யணாம் பண்ணிக்க‌ சில தவறுகள் அவன் செஞ்சிருக்கான் தான்…இல்லைன்னு சொல்லல…ஆனா ஏன் இப்படி ஈவு இரக்கம் இல்லாம பேசுறீங்க..?  எனக்கு தெரிஞ்சு…நான் பாத்த மீனாட்சி நீங்க இல்லை…மாறீட்டீங்க…ரொம்பவே சுயநலமா மாறீட்டீங்க…ஆதி செஞ்சது தப்பு தான் ஆனா அவன் இவ்வளவு அடி பட்டு படுத்துருக்குற நேரமும் உங்க கோபத்தை காட்டனுமா…? ரோட்ல போற யாருக்கோ ஹெல்ப்‌‌ பண்ற மாதிரி நினைச்சுக்கோங்களேன்…ஏன் இவ்வளவு வீம்பு புடிக்கிறிங்க…நீங்க…?” என்றாள்.

“ஆமா அம்புட்டு வீம்பு‌தேன் எனக்கு…அவரு என்ன பண்ணுனாருன்னு உங்களுக்கு தெரியுமா…? சாதாரண தவறா இருந்தா கூட மன்னிச்சிடுவேன்…பாவம் பண்ணிருக்காக…. அதுவும் ஏற்கனவே மனசொடிஞ்சி போன மனுசனை இன்னும் மண்ணுக்குள்ள தள்ளப் பாத்துருக்காக….புரியலையா..? ஈஸ்வரன் மாமாவோட நிலத்துக்கு நெருப்பு வச்ச மகராசனுக்கு இந்த மரியாதை தான் கிடைக்கும் . யாருக்கும் ஒன்னுன்னா நாங்கதேன் முன்ன‌ வந்து நிப்போம்…அதுவே எங்க பிழைப்புல கை வச்சா சும்மாவா விடுவோம்…? அது யாரா இருந்தாலும் சரி..பண்ணுன தப்புக்கு தண்டனை அனுபவிச்சே தான் ஆகனும்…” என மூச்சு வாங்கியபடி பேசினாள் மீனாட்சி.

அவளுக்கு ஆதியின் செயலை ஏற்கவே முடியவில்லை.

மனிதனின் வீழ்ச்சிக்கு காரணம் பொன்னாசை மற்றும் பெண்ணாசை.

இதில் இரண்டாவது வகையில் மாட்டிக்கொண்டு தன் தவறுக்கான தண்டனையை அனுபவித்து வருகிறான் ஆதி.

நண்பனின் செயலைக் கண்டு கோபப்படுவதா மீனாட்சியை பிடிவாதத்தை நினைத்து வியப்பதா என நேஹாவிறகு தெரியவில்லை.

இந்தளவிற்கு இரக்கமின்றி பேசுவதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை நேஹாவால்.‌

இலகுவில் ஆறக் கூடிய ரணம் அல்லவே…! ஆற நெடுங்காலம் எடுக்கும்.

மருத்துவர் மற்ற பரிசோதனைகளை செய்து விட்டு நேஹாவிடம் வந்தார்.

“ மேடம் இடது கை , வலது கால் இரண்டும் ஃப்ராக்ச்

சர் ஆகியிருக்கு…கட்டு போட்டுருக்கோம்… சரியாக எப்படியும் குறைஞ்சது இரண்டு மாசம் ஆகும். ரொம்ப ஸ்டெர்ய்ன் பண்ண சொல்லாதீங்க…. பத்து நாளாவது ஹாஸ்பிட்டல்ல இருக்கனும்…. டேப்லெட் எழுதி தரேன். கொஞ்சம் ஒகே ஆனதுக்கப்பறம் பிசியோ பண்ணலாம். கவலைப்படாதீங்க சீக்கிரம் ரிக்கவர் ஆகிடுவார்.” என்றார்.

நேஹாவிற்கவோ அடுத்து என்ன செய்வது எனப் புரியவில்லை.

இருப்பினும் கோமதியிடமும் வடிவாம்பாளிடமும் தெரிவித்தாள்.

கோமதிக்கு உண்மையான நிலவரம் தெரியாத நிலையில் மீனாட்சியை ஆதியை பார்த்துக் கொள்ள வற்புறுத்தினார்.

அவளோ சிறிதும் தயவு தாட்சண்யமினறி மறுத்தாள்.

வேறு‌வழியின்றி அவரே உணவினை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்.

சற்று நேரத்திற்கெல்லாம் ஆதியை சாதாரண அறைக்கு மாற்றிவிட்டார்கள்.

கை , கால்களில் கட்டு…முகம் முழுவதும் வீங்கி உடலும் மனமும் இறுகிப் போய் படுத்திருந்தான் .

கோமதி , நேஹாவுடன் உள்ளே நுழைந்தார்.

“ அய்யோ…! என்னாச்சு..?ரொம்ப அடிப்பட்டுருக்கே…!என்னாச்சு மா நேஹா..? “ எனப் பதறினார் .

அவளை பதிலேதும் கூறாமல் அமைதியாக நின்றிருந்தாள்.

“ஈஸ்வரனோட நிலத்துக்கு நான் தான் நெருப்பு வச்சேன்..அதுக்கான பரிசு தான் இது…எல்லாமே மீனாட்சிக்காக தான்…அவளை கல்யாணம் பண்ண எந்த எல்லைக்கும் தயாராகிட்டேன். முடிஞ்சா என்னை மன்னிக்கச் ‌சொல்லுங்க.” என வேதனையுடன் கண்களை மூடிக் கொண்டான்.

கோமதியோ அதிர்ந்து போய் அவனைப்‌ பார்த்தார்.

அவருக்கும் கோபமாக தான் வந்தது.

இருப்பினும் வயதிற்கேற்ற முதிர்வு அவரை அமைதியாக இருக்க வைத்தது.

ஈஸ்வரனை நினைத்து வருத்தமாக இருந்தது‌.

செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பவனிடம் முகத்தை திருப்பிக் கொள்ள முடியவில்லை.

“மீ…மீனாட்சி…வரலையாத்தை…” என்றான்.

ஒருவேளை மனம் ‌கேளாமல் வந்திருப்பாளோ…?என நப்பாசையுடன்‌ கேட்டான்.

கோமதிக்கோ தர்மசங்கடமான நிலை. இல்லையென தலையாட்டினார்.

நொறுங்கிப்போனான் ஆதி.

இந்தளவிற்கு மீனாட்சியின் கோபத்தை அவன் எதிர்பார்க்கவேயில்லே என்பதை அவனது முகமே காட்டிக்கொடுத்தது.

உடல் வலியோடு மனவலியும் சேர்ந்து கொண்டு ஆயாசமாக இருந்தது.

தொழில் வட்டாரத்தில் எவ்வளவு கடினமான காலத்திலும் இவ்வளவு மன அழுத்தத்தை அவன்‌ உணர்ந்ததேயில்லை.

ஒரு பெண்ணின் வைராக்கியம் அவனை ஆச்சர்யப்படுத்தியது.

சராசரி பெண்களிடமிருந்து அவளை வேறுபடுத்திக் காட்டியது இந்த குணமே.

அவளது அன்பு கிடைக்கவில்லையே என வருத்தமாக இருந்தாலும்… அவளது வைராக்கியமும் அழுத்தமுமே அவனை ஈர்த்தது தான்.

கோமதி உணவினை கொடுத்துக்கொண்டு இருக்கும் போதே ஏதோ சலசலத்து கொண்டே உள்ளே வந்தார் வடிவாம்பாள்.

ஆதியை கண்டதும், “அய்யோ….! என் ராசா.. எவ்வளவு பெரிய கட்டு போட்ருக்காப்பல…? என்ன ஆச்சு…அப்பு…என் நெஞ்செல்லாம் பதறுதே…ஆனா‌ இங்கன இருக்குறவகளுக்குயெல்லாம் பதட்டமே இல்லை போலவே…பாரு…இப்படி அடிப்பட்டு கிடக்கிறான் பொண்டாட்டிகாரியை காணோம்….அவ எப்படி வருவா…? என் மவன் மூஞ்சில காபி தண்ணிய ஊத்துனவளாச்சே…பாத்தாலும் பாத்தேன் இந்த மாதிரி ஒரு பொம்பளைய பாத்ததேயில்ல மா….” என்று அங்கலாய்த்தார்.

“ அம்மா….நிறுத்துங்க…ஸ்…ஆ…” என கத்தினான் ஆதி..

அதையெல்லாம் கண்டுகொள்ளாமல்,  “அய்யோ…! ராசா…வலிக்குதா…மருந்தெல்லாம் கொடுத்தாகளா நேஹா…” என கவலையுடன் நேஹா விடம் விசாரித்தார்.

கோமதியுமே அதற்கு மேல் அங்கிருந்தால் தானும் பதிலுக்கு பதில் வடிவாம்பாளிடம் பேசி சண்டை இழுத்து விடுவோம் என‌ பயந்து வெளியேறி விட்டார்.

தனது மகன் அருகிலேயே அமர்ந்து கொண்டு அவனது கேசத்தை வருடினார்.

ஏதோ சரியில்லை என்று மட்டும் தெரிந்தது.

மீனாட்சியை பற்றியும் தெரியும்…தனது மகனைப் பற்றியும் அவருக்கு நன்றாக தெரியும்…சீக்கிரம் அனைத்தும் சரியாக வேண்டுமென வேண்டிக் கொண்டார்.

மீனாட்சியின் அலட்சியம் அவரை அதிகம் பாதித்தது என்றே சொல்லலாம்.

கிட்டத்தட்ட பத்து நாட்கள் மருத்துவமனையில் ஆதியின் அருகிலியே இருந்து வடிவாம்பாள் பார்த்துக் கொண்டார்.

அவ்வபோது கோமதி வந்து பார்த்தார்.

அவர் வரும்போது வடிவாம்பாள் முகத்தை திருப்பிக் கொண்டு வெளியே சென்று விடுவார்.

சிறிது நேரம் ஆதியிடம் பேசிட்டுச் செல்வார் கோமதி.

தன்னுடைய வேலைகளை செய்து கொள்ள மிகவும் சிரமப்பட்டான் ஆதி.

“ கட்டுன‌ புருஷன் ஆசுபத்திரில கிடக்கான். போய் பக்கத்துல இருந்து பணிவிடை செய்ய பொம்பிளைக்கு வலிக்குதா..?” என‌ ஆற்றாமை தாங்காமல் சங்கர பாண்டியன் வாயை விட ,கோமதியோ , “ என் பொண்ணு எது செஞ்சாலும் அதுல‌ ஒரு நியாயம் இருக்கும். அவ இந்தளவுக்கு பாவம் பாக்காம இருக்குறன்னா அவ எவ்வளவு மனசு வெசனப்பட்டு‌ போயிருப்பா….என்னையோ…இல்ல எம் பொண்ணையோ குறை சொல்ற தகுதி உங்களுக்கு கிடையாது….அம்புட்டுதேன் சொல்லுவேன்…”எனக் காரமாக பதிலளித்து விட்டு சென்றார் கோமதி..

சங்கர பாண்டியனோ முறைத்துக் கொண்டு நின்றிருந்தார்.

மனைவியின் கூரிய‌ப் பேச்சு அவரை வாயடைக்க வைத்தது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!