வில்விழியை பொறுத்தவரை அவள் வில் வித்தைக்கு என்றே பிறந்தவள் என்று தான் சொல்லவேண்டும்.. இயல்பாகவே அவளுக்குள் வில் வித்தையின் மேல் இருந்த ஆர்வம் எளிதில் விரைவாக அதே நேரம் நேர்த்தியாக சிறப்பாக ஒவ்வொரு பயிற்சியையும் மேற்கொண்டு கற்று அதில் தொடர்ந்து சிறந்து விளங்கவும் வைத்தது..
விஷ்வஜித் அகடமியில் அவள் சேர்ந்த நாளிலிருந்து அவளுக்கு பயிற்சி கொடுத்த பயிற்சியாளர் உட்பட அனைவருமே அவளின் அம்பு எய்யும் திறமையை பார்த்து பிரமித்து தான் போனார்கள்….
அவள் வில்லையும் அம்புகளையும் கையாளும் நேர்த்தி இலக்கை நோக்கிய அவளின் கூர்பார்வை அவளுக்கு இருக்கும் சிதறாத கவனம் ஒவ்வொரு முறையும் குறி தவறாமல் இலக்கை அம்பெய்து தகர்த்து விடும் அவளுடைய உறுதி இது எல்லாமே அங்கு இருந்த அத்தனை பேருடைய மெச்சுதலையும் பாராட்டையும் அவளுக்கு பெற்று தந்திருந்தது எனலாம்..
எந்த ஒரு போட்டிக்கு போனாலும் முதல் பரிசை தட்டிச் செல்வதையே வழக்கமாக வைத்திருந்தாள் அப்போது மலர்விழி என்று அழைக்கப்பட்டிருந்த வில்விழி..
இந்த்ரதனுஷ் அகாடமியிலும் அவள் போட்டியை தொடங்கும் போது எய்த அம்புகள் அத்தனையும் சரியாக இலக்கை நோக்கி பயணித்து அதிக புள்ளிகளை தரும் தங்க நிற வளையத்துக்குள் தவறாமல் சென்றடைந்து அவளை வெற்றிப் பாதையை நோக்கி இழுத்துச் சென்று கொண்டிருந்தது..
அந்த வில்லும் அம்பும் அவள் கைகளில் இருப்பதற்காகவே பிறந்தது போல அவள் அதை கையாண்ட விதம் அவளின் இலக்கை நோக்கிய தீர்க்கமான பார்வை அவள் நின்றிருந்த மிடுக்கான தோரணை ஒவ்வொரு முறையும் அவள் அம்பை இலக்கு நோக்கி செலுத்திய நேர்த்தி எப்படியும் என் அம்பு சரியான இடத்தை பாய்ந்து சென்றடையும் என்று அவளுக்கு இருந்த உறுதி இதெல்லாமே இந்த்ரதனுஷை வியப்புக்குள்ளாக்கியது..
அது அவனுக்குள் அவள் முகத்தை பார்த்து விட வேண்டும் என்ற ஒரு ஆர்வத்தை தூண்டிவிட போட்டியாளர்களுக்கு பின்னே அமர்ந்திருந்தவன் முன்னே வந்து அவள் முகம் பார்க்க முனைந்தான்..
ஆனால் அந்த குறுகுறு பார்வையோ அவளை மொத்தமாய் வெற்றிப் பாதையில் இருந்து விலக்கி இருந்தது..
அதுவரை அவள் மூளை இதயம் கண்கள் கைகள் கால்கள் என உடலின் ஒவ்வொரு அணுவையும் ஒரே இடத்தில் ஒருங்கே குவித்து கவனம் முழுவதும் இலக்கின் மேல் வைத்து தன்னுடைய அம்பை தான் குறி வைத்த இடத்தில் சொல்லி அடிப்பது போல் எய்துக் கொண்டிருந்தவள் அவன் விழி பார்வையில் மொத்தமாய் தடுமாறி போக அவள் எய்த அம்புகளோ தடம் மாறி போயின..
அவள் முகத்தை குறுகுறுவென பார்த்திருந்த அவன் பார்வையின் தீரத்தில் அவள் இதயமோ படபடத்து போனது.. முதல் முதலாய் வில்விழியின் விழிகள் அவள் அம்பு போய் சேரும் இடத்திற்கான இலக்கை விட்டு தன் இதயம் போய் சேரும் இடத்திற்கான இலக்கை குறி வைத்து பார்த்திருந்தது..
சிரமப்பட்டு அவனிடம் இருந்து தன் பார்வையை அவள் அகற்றி இருந்தாலும் அவள் மனக்கண்கள் மீண்டும் மீண்டும் அந்தப் விழிப்பார்வையின் பிம்பத்தை அவள் மனதில் திரையிட்டு அவளை பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது.. அவள் அவனின் புறம் பார்க்காமலேயே அவன் பார்வையின் பிம்பத்துகள் அவளுக்குள் ஊடுருவி அவளை மொத்தமாய் தன்னகத்தில் சிறை செய்திருந்தது..
கவனத்தை இலக்கை நோக்கி திருப்ப முடியாமல் அவள் மனமோ அவனை பார் அவனைப் பார் என்று சத்தமிட்டு அவளுக்குள் போராட்டம் நடத்த அதன் விளைவாய் மூளைக்கும் இதயத்துக்கும் நடந்த போரில் இறுதியாக இதயம் வென்றிருந்தது..
இங்கே இந்தருக்கும் அதே நிலைதான்.. அவள் முகத்தை பார்த்த நொடி அவன் கண்கள் அவளின் அழகு முகத்தோடு ஒட்டிக் கொண்டார் போல அவனால் தன்னுடைய பார்வையை இம்மி அளவு கூட அவளிலிருந்து விலக்க முடியவில்லை..
அவளையே பார்த்திருந்தவன் அவளுடைய இரண்டு அம்புகள் குறிதவற அதை அறிவிப்பாளர் அறிவிக்கும்போதுதான் தான் அவளுக்குள் என்ன தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று புரிந்தது அவனுக்கு..
அதை உணர்ந்தவன் அங்கிருந்து மறுபடியும் தன் இடத்திற்கு வந்து அமர ஆனாலும் வழக்கமாக அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் போட்டிகளில் பரிசுகளை வென்று குவிப்பவள் இன்று வித்யாவிற்கு சமமான புள்ளிகளையே எடுத்திருந்தாள்..
அதன் பிறகு வேறு வழியின்றி இரண்டு பேரில் யார் நடுப் புள்ளிக்கு மிக அருகில் அம்பை செலுத்தி இருக்கிறார்கள் என்று பார்த்து அதை வைத்து வித்யாவிற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது..
முதல் முறையாய் தோற்றிருந்தாள்.. அதனால் தானோ என்னவோ தோல்விக்கு காரணமாய் இருந்த இந்திர தனுஷ் மேல் அவளுக்கு ஒரு சிறு கோபம் முகிழ்த்தது உள்ளுக்குள்..
அவன் புறம் காந்தத்தின் ஈர்ப்பு சக்திக்கு இழுத்துச் செல்லப்படும் இரும்பாய் ஒரு புறம் அவள் மனம் ஓடிக்கொண்டிருக்க இன்னொரு புறம் அவளின் தோல்விக்கு காரணமான அவனை அவள் இதழ்களோ இயந்திரத்தனமாய் திட்டிக் கொண்டிருந்தது..
“ஐயோ. இவனை யாரு என் முன்னாடி வர சொன்னா? என் இத்தனை வருஷம் ரெக்கார்டை உடைச்சிட்டான்.. மூணு வருஷமா நான் எந்த இவன்ட்லயும் தோத்ததில்லை.. இன்னைக்கு இவன் மூஞ்சில முழிச்சேன்.. எல்லாம் முடிஞ்சு போச்சு.. இனிமே எந்த காரணத்தைக் கொண்டும் இவனை என் வாழ்க்கையில மீட் பண்ணவே கூடாது கடவுளே..” இப்படித்தான் வேண்டிக் கொண்டாள் அவள்.. ஆனால் கடவுளுக்கு அப்படியே அந்த வேண்டுதல் எதிர்மாறாக கேட்டதோ என்னவோ..
போட்டி முடிந்த பிறகும் கூட இருவர் இதயத்திலும் ஒருவரை ஒருவர் கண்ட படபடப்போ அலைப்புருதலோ அடங்கவே இல்லை.. போட்டி முடிந்து பரிசை வழங்கும்போது அவள் முன்னே நின்றிருந்த தனுஷின் பார்வை அவள் கண்கள் வழி ஊடுருவி இதயம் என்னும் நிலப்பரப்பை மொத்தமாய் உழுது அதில் ஆசை விதைகளை விதைத்திருக்க அங்கே காதல் பயிர் மெதுவாக துளிர்விட்டது…
தலைநிமிர்ந்து பார்த்து அவன் பார்வையை சந்திக்க திராணியில்லாமல் தலை குனிந்தபடியே பரிசுகளை வாங்கிக் கொண்டாள் அவள்.. அவளுக்குள் என்ன நடக்கிறது என்று அவளுக்கே புரியவில்லை..
போட்டி நடத்திய அகாடமி என்ற ரீதியில் இந்த்ர தனுஷ் போட்டியாளர்களை பாராட்டி பேசும்போது மலர்விழி பற்றி பேச தொடங்க அவன் இதழிலிருந்து மலர்விழி என்று அவள் பெயரை உச்சரித்த போது ஏனோ அந்தப் பெயரை திரும்ப உச்சரிக்க அவன் இதழ்கள் தீரா ஏக்கம் கொண்டது..
அந்த உந்துதலில் மலர்விழி.. என்று அவள் பெயரை ஒருமுறை சொன்னவன் மலர் என்று ரசனையோடு மென்மையாய் அந்த பெயருக்கு வலிக்காமல் மைக்கில் சொல்லி இருக்க அங்கு இருந்தவர்கள் அத்தனை பேருமே அவனை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தனர்.. அதில் அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தவளுக்கோ அவனின் ரசனையான பார்வை அவள் உடலெங்கும் பூ பூக்க செய்து இருந்தது..
எதுவுமே அவள் கட்டுப்பாட்டிலும் இல்லை அவன் கட்டுப்பாட்டிலும் இல்லை.. இருவருமே அவர்கள் இயல்புக்கு முரணான நிலையில் தான் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.. இருவருக்குமே மூளை செயல் இழந்து இதயம் அதிவேகமாய் செயல்பட்டுக் கொண்டிருந்தது..
அவனும் தட்டு தடுமாறி ஒரு வழியாக சமாளித்து தன் பேச்சை முடித்தான் அவன்..
போட்டி முடிந்து அவர்கள் எல்லோரும் கிளம்பும் நேரம் அவள் பைக்குள் தன் உடைமைகளை வைத்து கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருக்க அவள் அருகில் வந்தான் இந்தர்..
அவளோ மும்முரமாக பைக்குள் பொருள்களை அடுக்கி வைக்கும் வேலையில் இருக்க அவனோ மெல்ல மலர் என்று அழைத்த நேரம் குனிந்திருந்த அவள் இதயத்தில் தடக்தடக்கென ரயில் ஓசை கேட்டது..
“ஐயோ வந்துட்டானே படுபாவி.. மலரு.. ஸ்டெடியா இருடி.. ஏதாவது சொதப்பி வச்சிறாத..”
தனக்கு தானே சொல்லி சிரமப்பட்டு தன்னையே நிலைப்படுத்திக் கொண்டவள் அவனை நிமிர்ந்து பார்த்த நொடி மொத்தமாய் அத்தனை நேரமாக திரட்டி மனதை சமன்படுத்தி வைத்திருந்த அவளுடைய உறுதி அத்தனையும் சுக்கு நூறாய் நொறுங்கிப் போனது…
அவனைப் பார்த்த கணம் மனம் நாலு கால் பாய்ச்சலில் அவனை நோக்கி பாயத் தொடங்கி இருந்தது.. அதை கட்டுப்படுத்தியவள் தடுமாறாத பார்வையோடு அவன் பார்வையை சந்தித்து “ஹலோ சார்.. சொல்லுங்க.. என்ன விஷயம்?” சாதாரணமாக பேசினால் எங்கே அவன் முன்னே பனிக்கூழாய் உருகி உறைந்து விடுவேனோ என்று சற்று இறுக்குமாய் தான் அவனோடு பேசினாள்..
அவனும் தன்னுடைய பார்வை அவளுக்குள் என்னென்ன மாற்றங்களை எதிர்வினைகளை நிகழ்த்துகிறது என்று தெளிவாக உணர்ந்திருந்தான்.. ஆனாலும் தன் திமிரையும் மிடுக்கையும் குறைக்காமல் ஆளுமையோடு பேசியவளை இன்னும் இன்னும் தன்னகத்துக்குள் பூட்டிக்கொள்ள தோன்றியது ஆண் அவனுக்கு..
“பரவாயில்லையே மிஸ் மலர்.. இதுவரைக்கும் யாருமே பீட் பண்ண முடியாத எங்களோட பெஸ்ட் ஸ்டூடண்ட் வித்யா.. அவளுக்கே டஃப் கொடுத்துட்டீங்க.. நைஸ் பெர்ஃபாமென்ஸ்.. ஐ லைக் யுவர் கான்ஃபிடன்ஸ்.. ஆனா நீங்க இந்திர தனுஷ் அகடமியில இருந்திருந்தா எனக்கு என்னவோ நீங்க இவ்ளோ நேரம் நேஷனல் லெவல் சாம்பியன் ஆயிருப்பிங்களோன்னு தோணுது.. யூ அர் இன் த ராங் ஹேன்ட்ஸ்..”
இந்த்ரதனுஷ் ஒரு சிறந்த பயிற்சியாளன்.. அவனுக்கு ஏனோ வில்விழியை இந்திரதனுஷ் அகாடமியில் சேர சொல்லி அவளுக்கு தானே பயிற்சி கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.. அவளுக்கு ஒரு சில நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்திருந்தால் இந்நேரம் அவள் முன்னேற்றம் மிக அதிகமாக இருந்திருக்கும் என்று தோன்றியது அவனுக்கு..
அதனாலேயே அவனுடைய பயிற்சி கொடுக்கும் திறனின் மேலிருந்த அதீத நம்பிக்கையில் அவன் அப்படி பேசி இருக்க அவளோ “ஓ.. அப்படியா சார்.. அப்படின்னா இவ்ளோ நாள்ல வித்யா நேஷனல் சாம்பியன் ஆகி இருக்கணுமே… அவங்க ஏன் இன்னும் டிஸ்டிரிக்ட் லெவல் சாம்பியன்ஷிப்பே தாண்டாம இருக்காங்க..?” அவளும் திமிராய் தான் கேட்டாள்..
“நல்ல கேள்விதான்.. நீங்க சொல்றதும் கரெக்ட் தான்.. நான் வித்யாவையே ட்ரெயின் பண்ணிக்கிறேன்… நீங்க கிளம்புங்க.. அண்ட் ஆல் த பெஸ்ட்..”
அவனும் அவளிடம் இறங்கி போகவில்லை.. திமிராய் தான் பதில் சொன்னான்..
“அப்புறம்.. மிஸ். மலர்விழி இங்க டிஸ்டர்ப் ஆன மாதிரி வேற எங்கேயும் யாரை பார்த்தும் டிஸ்டர்ப் ஆகிடாதீங்க..”
அவன் சொன்னதை கேட்டு நிமிர்ந்தவள் அவன் கன்னத்தின் உள் பகுதியில் நாக்கை துழாவி ஒரு கேலி புன்னகையோடு அவளை ஆழமாய் பார்த்திருக்க அந்தப் பார்வையில் சிறிது தடுமாறி தான் போனாள்..
அவனுக்கும் அவள் விழிகளை பார்த்த நொடி தன்னை மறந்த மயக்கம் தான்.. அந்த விழி வில்லின் அம்புகளை விரும்பியே தன் மீது வாங்கிக் கொண்டான் அவன்.. அந்த விழிவில் வட்டத்திலிருந்து அகலவே மனம் வரவில்லை அவனுக்கு..
கோவமாக தன் பையின் சிப்பை சர்ரென இழுத்து மூடி அதை மாட்டிக் கொண்டு வெடுக்கென முகத்தை திருப்பிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள் விழி..
“போடி போ.. என்னை தவிர உன்னை இந்த மாதிரி வேற எவனும் டிஸ்டர்ப் பண்ண மாட்டான்.. வேற எவன் கிட்டயும் டிஸ்டர்ப் ஆகவும் உன்னை விடமாட்டேன்.. வாழ்க்கை முழுக்க என் கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும்… இல்ல இல்ல… தப்பு… உன் கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் இந்த இந்தர் மட்டும் தான் உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டே இருப்பான்.. கூடிய சீக்கிரம் உன்னை தேடி வரேன் டி சரவெடி..”
இவன் இப்படி என்றால் அங்கே வில்விழிக்கோ வீட்டிற்கு போய் இரண்டு நாட்கள் ஆகியும் அவன் நினைவாகவே இருந்தது.. வேலையே ஓடவில்லை..
“அவனாலதான் முதல் முதல்ல நான் ஒரு இவன்ட்ல தோத்து இருக்கேன்.. ஆனாலும் அவனை மறக்கவும் முடியல.. வெறுக்கவும் முடியல.. அவன்தான் கேட்டான்ல அந்த அகாடமில வந்து சேர்ந்துக்கன்னு.. பெரிய இவ மாதிரி அவனை எதிர்த்து கேள்வி கேட்டுட்டு இப்போ உட்கார்ந்து புலம்பிகிட்டு இருக்கேன்..”
நிஜமாகவே தவித்து போனாள் அவள்.. திரும்பவும் அவனை பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கவும் ஆரம்பித்திருந்தாள்..
அன்று முதல் முதலில் அவள் வில்லில் இருந்து அம்பை தொடுத்த போது அவளுடைய மிடுக்கையும் கம்பீரத்தையும் திமிரையும் பார்த்து அவளில் மொத்தமாய் விழுந்திருந்தவன் இப்போது அவள் புல்லட் ஓட்டி வந்த அழகில் இன்னுமே மயங்கி போனான்..
“ஹப்பா.. அந்த ஸ்ட்ரென்த் அந்த கட்ஸ் நாளுக்கு நாள் கூடிக்கிட்டே போகுது.. இது தான் என் மலரோட ப்ச்.. வில்லியோட அழகு.. அழகான ராட்சசி டீ நீ..”
இந்த்ரதனுஷ் அகாடமி அவள் எப்படி விட்டு சென்றாளோ அப்படியே தான் இருந்தது.. ஆங்காங்கே ஒரு நாலைந்து மாணவர்கள் பயிற்சி மேற்கொண்டு இருந்தார்கள்.. அவர்களை பார்த்தபடியே நகர்ந்தவள் கண்ணில் அவள் பட்டாள்..
வித்யா..
அவளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவள் சட்டென திரும்பி இந்தரை பார்த்து “இவ எதுக்கு இங்க இருக்கா? அவ்வளவு பண்ணியும் இவளை மறுபடியும் எதுக்கு அகடமில சேர்த்துக்கிட்டு இருக்க. உனக்கு என்ன பைத்தியமா? இவளால நாம எவ்வளவு மன உளைச்சலுககு ஆளானோம்? அதுக்கு அப்புறமும்..” அவள் கோவமாய் கேட்டாள்..
“ஹேய் படபடன்னு பொரியாதடி.. இன்னும் அதே சரவெடியா தான் இருக்கே.. நான் சொல்றதை முதல்ல கேளு.. அவ அன்னைக்கு வராததற்கு காரணம் இருக்கு..”
“அப்படி மிரட்டி இருந்தா கூட அவ வந்து இருப்பா.. ஆனா விஷயம் அது இல்லை..”
“பின்ன?”
“அவங்க அன்னைக்கு நடந்ததை வீடியோ எடுத்து வெச்சு அவளை மிரட்டி இருக்காங்க.. அவ என்ன பண்ணுவா? அவ கோர்ட்டுக்கு வந்தா அந்த வீடியோவை லீக் பண்ணுவோம்னு சொல்லி இருக்காங்க.. வேற வழி இல்லாம..”
“ஷிட்.. ராஸ்கல்ஸ்.. ஏன் இந்தர் இவங்க இப்படி இருக்காங்க.. ஒரு அகடமியோட லெவல்.. அவங்களோட க்ரோத் இதெல்லாம் அவங்க ஸ்டுடென்ட்ஸோட ட்ரெயினிங் அன்ட் பர்ஃபார்மன்ஸ் மூலமா இம்ப்ரூவ் பண்ணனும்.. ஆனா இவங்க ஏன் இந்த இவ்வளவு கேவலமா..”
“என்ன செய்ய? எல்லாருமே மார்க்கண்டேயனோட பிள்ளைங்க மாதிரி இருப்பாங்களா?”
அதைக் கேட்டு அவனை முறைத்தவள் “அது என்ன மார்க்கண்டேயனோட புள்ளைங்க.. ஏன்..? சகுந்தலாவோட பிள்ளைங்கன்னு சொல்லலாமே.. நீங்க அத்தைக்கும் பையன் தானே..? நான் இப்ப சொல்றேன்.. அத்தையோட வளர்ப்புனால தான் நீங்க பொண்ணுங்க கிட்ட இவ்வளவு நல்ல விதமா நடந்துக்கிறீங்க? மாமாவை ஃபாலோ பண்ணி இருந்தீங்கன்னா இத்தனை நேரம் இந்த்ரதனுஷ் அகடமியில ஒரு பொண்ணு கூட இருந்திருக்க மாட்டா..”
அவள் சொன்னதை கேட்டு சத்தமாக சிரித்து விட்டான் அவன்..
“இன்னும் அதே சரவெடியா தாண்டி இருக்க வில்லி.. அதனாலேயே உன்னை இன்னும் இன்னும் ரொம்ப பிடிக்குது..”
அவன் சொல்ல வெட்கப்பட்டு தலையை குனிந்து கொண்டாள் அவள்..
“இதுவும் அழகா இருக்கே.. நான் என்னடி பண்ணுவேன்? மேடம் கண்டிஷன் வேற போட்டு இருக்கீங்க.. இதுக்கு மேல தாங்காது.. வா போலாம்..” என்றான் அவன்..
“நீங்க போங்க.. நான் வித்யா கிட்ட பேசிட்டு வரேன்” என்றாள் அவள்..
பயிற்சி செய்து கொண்டிருந்த வித்யாவின் தோளை தொட்டவள் அவள் திரும்பியதும் “எப்படி இருக்க டா.. நல்லா இருக்கியா?” என்று பரிவோடு கேட்க
“அக்கா..” என்று வியப்போடு அழைத்தவள் “எப்படி இருக்கீங்க கா? சாரி கா.. அன்னைக்கு கோர்ட்டுக்கு வந்து என்னால அவங்களுக்கு எதிரா சாட்சி சொல்ல முடியல.. அவங்களை ஒண்ணுமே பண்ண முடியல கா..”
“பொண்ணுங்க வளர்றதை தடுக்குறதுக்கு எப்படி எல்லாம் என்னல்லாம் செய்றாங்க பாத்தியா? நான் அந்த விஷ்வஜித் அகடமியில தான் ஸ்டுடென்ட் இருந்தேன்னு நினைக்கிறதுக்கே அவமானமா இருக்கு.. உனக்கு எவ்வளவு பெரிய கொடுமையை பண்ணி இருக்காங்க… அவங்கள இப்படி தண்டிக்க முடியாம போச்சே..”
அன்று நடந்த கொடுமையான விஷயங்கள் அவள் நினைவில் வந்து போயின..
“நீ ஒன்னும் கவலைப்படாத.. உனக்கு இவ்வளவு பெரிய கொடுமையை பண்ணவங்களுக்கு தண்டனை கிடைக்காம நான் விடமாட்டேன்.. அந்த விஷ்வாவையும் அவன் ஃப்ரெண்ட்ஸையும் ரேப் கேஸ்ல உள்ள தள்ளல.. என் பேரு வில்விழி இல்ல..”
பெண் சிங்கமாய் கர்ஜித்தாள் அவள்..
“வில்விழியா? உங்க பேரு மலர்வழி தானே கா?”
“அது ரொம்ப சாஃப்ட்டா இருக்குல்ல.. அவ்வளவு சாஃப்டா இருந்தா எல்லாரும் கசக்கி போட்டுருவாங்க நம்மை.. அதான் கொஞ்சம் கெத்தா இருக்கட்டுமேன்னு வில்விழின்னு எனக்கு பிடிச்ச மாதிரி என் பேரை மாத்திக்கிட்டேன்..”
“வாவ் சூப்பரா இருக்கு கா இந்த புது பேரு.. இனிமே நானும் உங்களை வில்லக்கான்னே கூப்பிடுறேன்..”
அதைக் கேட்டு சிரித்த வில்விழி “உங்க சார் என்னை வில்லினு கூப்பிடுறார்..” என்று அவளிடம் ரகசியமாய் சொல்ல அவளோ மனம் விட்டு சிரித்தாள் அதைக் கேட்டு..
இந்தப் பெண்ணை அந்த ஒரு நிமிடமாவது மனம் விட்டு சிரிக்க வைத்தோமே என்று சற்று நிம்மதியாய் இருந்தது வில்விழிக்கு..