உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

5
(6)

அத்தியாயம் 23

அவள் மேல் பாரமாக இருப்பதை உணர்ந்த பிரகதி கண் விழித்து பார்த்தாள்… அரவிந்த் அவள் மேல் காலைப் போட்டு படுத்திருந்தான்..மணியை பார்க்க ஆறு என்றிருந்தது..

அவனை விலக்கி விட்டு குளித்து முடித்து தலையை துவட்டிக் கொண்டிருந்தாள்..

கண்விழித்த அரவிந்த்.. குளிச்சிட்டயா?

ம்ம் இப்ப தான்..

எழுப்பி விட்டிருக்கலாம் நானும் வந்திருப்பேன்..

மாமு காலையில ஏன் இப்படி பேசறிங்க..

அப்போ நைட் பேசட்டுமா?

ச்சீ போங்க என்று நெற்றியில் குங்குமம் வைக்கப் போனாள்..

நான் வெச்சு விடறேன் என்று வைத்து விட்டான்..

அவளருகில் கை நீட்ட அவளோ பின்னோக்கி நகர்ந்தாள்…

ஹேய் தாலிக்கு குங்குமம் தான் வைக்கப் போனேன்..

அப்படியா நான் பயந்துட்டேன்..

நீ ரொம்ப பயப்படற.‌. நான் உன்னை நிறையா மாத்தனும்…

தாலிக்கு குங்குமம் வைத்து விட்டு 

” ஐ லவ் யூ சோ மச் டி”

இன்னைக்கு மேக்கப் இல்லாம ரொம்ப அழகா இருக்க என்று கன்னத்தில் முத்தம் கொடுத்தான்..

நீங்க இன்னும் ப்ரஷ் பண்ணல.‌

சோ வாட்.. நீ தான் அழகா இருக்கயே என்று காதுக்குள் ரகசியம் பேசினான்…

ச்சீ போங்க என்று அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்…

மேடம் போதும் விடுங்க ஐ ம்ம் லூசிங் மை கண்ட்ரோல்…

அவனை விட்டு பதறி விலகி , நான் கீழே போறேன் நீங்க வாங்க என்று கூறி வேகமாக  வெளியே சென்று விட்டாள்…

அதே சமயம் திவ்யாவும் வெளியே வந்தாள்..

என்ன சீக்கிரம் எழுந்துட்டயா?

ஆமா அக்கா ..

என்ன சொல்ற அப்போ ஏதும் என்று தொடங்க..

இல்லை என்று தலையாட்டினாள்.‌‌

சரி சரி; வேற யாரும் கேட்க எதும் சொல்லிட்டு இருக்காத.. சும்மா தலைய மட்டும் ஆட்டி வை …

இருவரும் பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு … சமையலறைக்கு வந்தனர்…

மாமா நேரத்துல கடைக்கு போயிடுவாங்க… அரவிந்த் 9 மணிக்கு கிளம்பிடுவார்… லன்ச் எடுத்து போயிடுவாங்க…

நமக்கு மட்டும் சாதம் வெச்சா போதும்..

போகப் போக நீயே செய்து பழகிடுவ…

எல்லாம் கிளம்பி போனதுக்கு அப்புறம் பக்கத்தில் கோவில் இருக்கு… தினமும் போகனும் அத்தையோட ஆர்டர்…

வீடு வேலை செய்ய ஒருத்தங்க வருவாங்க…

ம்ம் சரி அக்கா என்றாள்..

திவ்யா காலை

உணவை தயாரித்துக் கொண்டிருந்தாள்.

அக்கா நானும் ஹெல்ப் பண்றேன் என்று பிரகதியும் உதவிக் கொண்டிருந்தாள்..

திடீரென திவ்யாவிற்கு கீழ்வயிற்றில் கூர்மையான வலி.

அவள் கைகளால் வயிற்றை பிடித்துக்கொண்டு, “ஆஹ்…” என்று சத்தம் போட்டாள்..

பிரகதி அருகில் நின்று இருக்க

அக்கா  என்னாச்சு?”

அவள் கீழே உட்கார்ந்தவாறு, முகம் சுருங்கியபடி, “எனக்கு ரொம்ப  வயிறு வலிக்குது …” என்றாள்.

வலி தாங்க முடியாமல் ஆஹ் என கத்திக் கொண்டே படுத்து விட்டாள்..

தேவகி அறையிலிருந்து ஓடி வந்தார்

அப்பொழுது தான் அபிஷேக் கீழே வந்தான்.. திவ்யா வலியில் துடித்துக் கொண்டு இருப்பதை பார்த்து 

“ஐயோ! என்ன டி ஆச்சு?”.

என்ன பண்ணுவது திவி..

என்னால தாங்க முடியல ரொம்ப வலிக்குதுடா..

இடுப்பு, வயிறு எல்லாம் வலிக்குது….

கொஞ்சம் தண்ணி குடிக்க கொடுங்க என்றான்.

பிரகதி தான் கொடுத்தாள்…

ஐயோ மாமா அக்காக்கு ப்ளீட் ஆகுது பாருங்க என்றாள்..

அபிஷேக் அதிர்ந்தான்..

திவி என்ன டி பண்ணுது.. 

அழுகாத டி நான் இருக்கேன்.. . 

இந்தா கார் சாவி கார்..

போய் கார் எடுத்து வை …

மாமா நீங்க அக்கா வ தூக்கிகிட்டு வாங்க நான் கார் எடுக்கறேன் என பிரகதி சென்று விட்டாள்..

அம்மா நீங்க கூட வாங்க..

நீ பாப்பா வ பாத்துக்கோ என்று ஹாஸ்பிடல் கிளம்பி விட்டார்கள்…

போகும் வழியில் சுகுமாருக்கு அழைத்துச் சொல்லி விட்டார் தேவகி…

அவளை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

எப்பொழுதும் செல்லும் மருத்துவமனை தான்… வீட்டுக்கு அரூகிலேயே இருந்தது…

உடனே எமர்ஜென்சி வார்ட்ல் அட்மிட் செய்தார்கள்…

டாக்டர் பரிசோதனை செய்து விட்டு  வெளியே வந்து 

அபிஷேக்கை அழைத்து, மெதுவாக 

அவனிடம் திவ்யாவிற்கு அபார்ட் ஆயிடுச்சு பா என்றார்.. 

டாக்டர் என்ன  சொல்றீங்க அவ கன்சீவா இருக்காளா?

14 வீக்ஸ் ப்ரெக்னன்ட்..

டாக்டர் நிஜமாவே எங்களுக்கு தெரியாது..

ஆனா கொஞ்ச நாள் சோர்வா இருந்தா.. இன்னைக்கு செக்கப் வரலாம்னு இருந்தோம் இப்படி ஆயிடுச்சு என வருத்தப்பட்டான்..

வாட் இஸ் திஸ் அபிஷேக் அது கூட தெரியாதா உங்களுக்கு?

இல்ல டாக்டர் தம்பிக்கு நேத்து தான் கல்யாணம் முடிஞ்சுது.. அந்த வொர்க் அலைச்சல தான் டயர்டா இருக்குன்னு நெனச்சோம் என்றான்..

எனிவேய்ஸ் அவங்களும் கொஞ்சம் வீக்கா இருக்காங்க… 

நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்..

பார்த்துக்கோங்க  வரேன் என்று சென்று விட்டார்…

சார் இந்த மெடிசின் எல்லாம் வாங்கிட்டு வாங்க..

இன்னும் கொஞ்ச நேரத்தில முடிச்சிட்டு வாங்க; ஜூஸ் மாதிரி குடுங்க; சலைன் போட்டு விட்டிருக்கோம் பாத்துக்கோங்க..

அதற்குள் விஷயம் அறிந்து சுகுமார் மற்றும் அரவிந்த் பிரகதி, குழந்தையுடன் வந்தனர்…

வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தார் தேவகி.

வா ம்மா வந்ததும் எங்க வீட்டு வாரிசு அழிஞ்சு போச்சு..

நான் அப்போவே சொன்னேன் இவ வேண்டாம் ன்னு..யாரு கேட்டிங்க..

அம்மா என்ன பேசறீங்க.. நீங்க பேசறது ரொம்ப தப்பு அரவிந்த் கூற..

வேண்டாம் தேவகி கொஞ்சம் அமைதியா இரு சுகுமார் கூற..

என்னால முடியாது…

அமைதியா இருந்தே எல்லா செய்யறா..

இன்னும் என்ன எல்லாம் செய்ய காத்திருக்காளோ..

இன்னும் என்னென்னவோ வரம்பு மீறி பேசி விட்டார்..

அப்பொழுது தான் விஷயம் கேள்விப்பட்டு பிரகதி யின் பெற்றோர் வர தேவகி பேசுவதை கேட்டு அதிர்ந்தனர்..

கல்யாணம் ஆகி ஒரு நாள் தான் ஆச்சு அதுக்குள்ள இப்படி ஒரு பிரச்சினையா என்று அதிர்ச்சி..

சம்பந்தி அம்மா நீங்க எங்க பொண்ண பத்தி தெரிஞ்சும் இப்படி பேசறீங்க..

கௌசல்யாவும் திரும்பி பேச; வாக்குவாதம் ஏற்பட்டது… இறுதியில் 

வா நம்ம வீட்டுக்கே போகலாம் என்று கௌசல்யா பிரகதி கையை பிடித்துக் கொண்டு சென்று விட்டார்… அம்மா கைய விடுங்க என்று விடுவிக்க முயன்று கொண்டே கூற..

நீ அமைதியா வா.. இந்த அம்மா உன்ன பேசியே ஒரு வழி ஆக்கிடுவாங்க..

பிரகதி என்று அரவிந்த் அழைக்க..

அதை சட்டை செய்யாமல் அவளை இழுத்துக் கொண்டே சென்று விட்டார் கௌசல்யா..

பிரகதி கெஞ்சியது கண்டு கொள்ளவே இல்லை…

அரவிந்த் அவளை அழைப்பதற்கு போக..

பாத்தியா அவளே நீ வேண்டாம்னு அவ அம்மா கூட போறா? நீ ஒன்னும் அவள கூப்பிட வேண்டாம்..

அவங்க பொண்ண அவங்களே வெச்சிக்கட்டும்…

அம்மா என்ன பேசறீங்க?

இவ்வளோ வன்மம் இருக்கக்கூடாது என்று அவன் தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டான்…

சம்பந்தி எங்கள மன்னிச்சிடுங்க என்று சுகுமாரிடம் கையெடுத்து கும்பிட…

தப்பு ரெண்டு பக்கமும் தான் இருக்கு..

இதுல யாரு யாரை குற்றம் சொல்லறது…

நாங்க எல்லாம் பிரகதிக்கு தானே சப்போர்ட்டா இருந்தோம்..

எதுக்கு இந்த அவசர முடிவு…

தேவகி பேசுனது தப்பு தான் அதுக்காக விட்டுட்டு போனா சரியா போயிடுமா?

என்ன பேசுவது என்று தெரியாமல் தவிப்பாக நின்று இருந்தார்கள் அருணாச்சலதின் குடும்பம்…

கண்ணன் அரவிந்த் அருகே சென்று ” மாப்பிள்ளை எங்கள மன்னிச்சிடுங்க” முதல்ல இங்க பாருங்க; இந்த பிரச்சினை முடிஞ்ச அப்புறம் நாங்க பேசறோம் என்று சென்று விட்டார்கள்..

ஆசை ஆசையாக திருமணம் செய்து ஒரே நாளில் எல்லாம் முடிந்து விட்டதா?

அவர்கள் சென்ற பிறகும் அவர்களை பேசிக் கொண்டிருந்த தேவகியை பார்த்து நிஜமாவே நீங்க என் அம்மா தானா.. உங்க கிட்ட நான் இத எதிர் பார்க்கல.. நீங்க எடுக்குற முடிவு யாரையும் கஷ்டப்படுத்தாது..

ஆனா இப்போ என்ன ஆச்சு..

எனக்கு அவள தான் பிடிக்கும் ன்னு தெரிஞ்சும் இப்படி பேசறீங்க 

என்று கூறி கோவமாக வெளியேறி விட்டான்…

அப்பொழுது

தான் மெடிக்கலில் மருந்து வாங்கிக்கொண்டு மேலே வந்தான் அபிஷேக்..

அப்பா அரவிந்த் ஏன் கோபமா போறான் என்று கேட்டான்?

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!