மின்சார பாவை-18

4.9
(7)

மின்சார பாவை-18

மதன் சார் வெண்ணிலாவிடம்,”உன் பேமிலிய பார்க்கணும்!” என்றுக் கூறியதும், ஏற்கனவே அவர்களை அழைத்து இருந்த வெண்ணிலா மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துவதற்காக வீட்டிற்கு அழைக்க தனியாகச் சென்றாள். அவளது கால்கள் இயல்பு போல அவளும், யுகித்தும் சந்தித்துக் கொள்ளும் இடத்திற்கு அழைத்துச் செல்ல.

அங்கு சென்றவளோ தீரனுக்கு போனில் அழைத்திருந்தாள்.

“மாமா நாளைக்கு எப்ப கிளம்புறீங்க?” என்று வினவ.

“எங்க ?” என்று புரியாதது போல் தீரன் வினவ,

“தீரன் மாமா விளையாடாதீங்க!” என்று செல்ல கோபத்துடன் வெண்ணிலா கத்தினாள்.

“இதை சொல்லத்தான் போன் பண்ணியா”

“ஆமாம் மாமா! நீங்க அவசியம் வரணும். எங்க மதன் சார் வேற நம்ம ஃபேமிலிய பாக்கணும்னு சொன்னாரு. ப்ளீஸ் மாமா. பாப்பு வேற கண்ணுலே நிக்குறா‌. உங்க எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்றேன்.”

என்றுவளது கண்கள் கலங்க முயன்றது.

“சும்மா சொல்லாத! நீ அங்க போனதுல இருந்து ஒரு போன் பண்ணல. நாங்க பண்ண போனையும் நீ அட்டெண்ட் பண்ணல. இதுல நீ எங்கள மிஸ் பண்றியா? இல்ல இந்த கதை தானே இங்க வேணாங்கிறது .”

“அப்படிலாம் இல்லை மாமா. ஃப்ரெண்ட்ஸ பார்த்ததுல கொஞ்சம் மறந்துட்டேன்.” என்று அசடு வழிய சிரித்தாள் வெண்ணிலா.

” சிரிச்சே சமாளி.சரி நாளைக்கு நாங்க வரோம். திரும்ப எங்கக் கூடத்தானே வர்ற?” என்று தீரன் வினவ.

“அது இங்க ரெண்டு நாள் தங்கி சுத்தி பார்த்துட்டுத்தான் கிளம்பிறதாக பிளான் மாமா.”

“என்ன இரண்டு நாளாகுமா? ஆனால் நாளைக்கு ஈவினிங் அத்தையை பார்க்க என் கூட வர்ற. அப்புறமா உன் ஃப்ரெண்ட்ஸோட ஜாயின்டாகிக்கோ.”

“ மாமா! அது வந்து…” என்று வெண்ணிலா ஏதோ மறுத்து கூற வர.

”ஷ்… மேல எதுவும் பேசக்கூடாது. நாளைக்கு ஈவினிங் அத்தையை பார்க்க வர. இது தான் என் முடிவு.” என்று விட்டு தீரன் ஃபோனை வைக்க.

“மாமா! மாமா!” என்றவள், அந்தப் பக்கம் பதில் இல்லாமல் போக, கடுப்புடன் திரும்பினாள்.

அங்கோ அவளுக்கு மிக நெருக்கமாக யுகித் நின்றிருக்க, அவள் மேல் முட்டிக் கொள்வது போல் சென்று, இடித்துக் கொள்ளாமல் ஒரு வழியாக சமாளித்து பின்னே நகர.

அவனும் அவள் அருகே நெருங்கி வந்தான்

“மாமா! மாமான்னு எத்தனை முறை சொல்லுற.”

“அதுல உங்களுக்கு என்ன பிரச்சினை?” என்று எரிச்சலுடன் வினவினாள் வெண்ணிலா.

“நான் உன்னை எத்தனை தடவை மாமான்னு கூப்பிடுன்னு கேட்டு இருப்பேன். கல்யாணத்துக்கு அப்புறம் சொல்றேன்னு சொன்னியே . ஒரு தடவையாவது மாமான்னு கூப்பிட்டியா?” என்று அவன் கோபத்துடன் வினவ.

“கண்டவங்களை எல்லாம் அப்படி கூப்பிட முடியாது “என்றாள் வெண்ணிலா.

 “நான் கண்டவனா டீ “என்றவன் அவளை நெருங்கி கழுத்தைப் பிடிக்க.

“ யுகி!” என்ற குரல் பின்னே ஒலித்தது.

திரும்பினால் இந்த முறை ரகுலன் நின்று இருந்தான்.

‘ அண்ணன், தம்பி ரெண்டு பேருக்கும் வேலையே இல்லை போல!’ என்று எண்ணிய யுகித்,

எரிச்சலுடன், “உனக்கு என்னடா பிரச்சனை ?”என்று வினவ,

ரகுலன் வந்ததுமே கிடைத்த இடைவெளியில் அவனை முறைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் வெண்ணிலா.

“டேய்! யுகி! இதெல்லாம் ரொம்ப தப்புடா. அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு”என்று ரகுலன் கூற

“அதெல்லாம் எனக்கும் தெரியும்”என்றான் யுகித்.

“அப்புறம் ஏன்டா இப்படி எல்லாம் நடந்துக்குற, நீங்க பிரிஞ்சது எனக்கும் வருத்தம் தான். அவ உன் வாழ்க்கைல கடந்து போயிட்டா, நீயும் அவளை மறக்க முயற்சி செய்யுடா. திரும்ப அவ வாழ்க்கையில குறுக்க போகாத யுகித். அது உங்க ரெண்டு பேரோட எதிர்காலத்துக்கும் நல்லதில்ல” என்று ரகுலன் அட்வைஸ் பண்ண, அவனை முறைத்தவாறே அங்கிருந்து நகர்ந்தான் யுகித்.

வெண்ணிலாவுக்குமே கோபம்தான், “மாமான்னு சொல்லனுமாமே அன்னைக்கு எத்தனை முறை அவனுக்கு சாரி மாமான்னு மெசேஜ் போட்டேன். கொஞ்சமாவது இறங்கி வந்தானா? அவன் மட்டும் அன்னைக்கு சமாதானமாகிருந்தால

 மறுநாள் எங்க அம்மாக் கிட்ட நான் மாட்டிருக்க மாட்டேன். அவங்களும் என்ன அடிச்சு இழுத்துட்டு போய் இருக்க மாட்டாங்க. அதுக்கு பிறகு நடந்த அனர்த்தங்களும், நடக்காமலிருந்திருக்கும்.”என்று எண்ணியவளின் கண்களில் அந்த நிகழ்வு வந்துப் போனது.

(அன்று காதல் பண்ணியது)

வீட்டில் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட வெண்ணிலாவிற்கு வீட்டிற்கு சென்றதும் அதற்கு மேலும் இடி போல் செய்தி காத்திருந்தது.

”இந்த காதல் கன்றாவி எல்லாம் வேணான்னு சொன்னா எவளாவது கேக்குறீங்களா” என்று நடுவீட்டில் அம்மா ஒப்பாரி வைத்தார்.

“அம்மா! யுகா! ரொம்ப நல்லவர் மா.” என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வெண்ணிலா கூற.

“ஆமாம்! உன் அக்காவும் அப்படி சொல்லிட்டு தான் ஓடிப்போனா. இன்னைக்கு அவ நிலைமை என்னன்னு தெரியுமா? ஹாஸ்பிடல்ல சாகக் கிடக்கிறா.பெத்து வளர்த்த என்ன பாக்க மாட்டலாம். உன்ன தான் பாக்கணும்னு உயிரைப் பிடிச்சிட்டு இருக்கா. அதுக்காக உன்ன கூப்பிட வந்தா, நீ காலேஜ்னு கூட பார்க்காமல் அவனை கொஞ்சிட்டு இருக்க. உனக்கு எவ்வளவு தைரியம்?”என்று அவள் அம்மா மீண்டும் அடிக்க முயல.

முகுந்தன் தான் தடுத்தார்.

“என்ன சொல்றீங்க மா?அக்காக்கு என்னாச்சு?” என்று பதறினாள் வெண்ணிலா.

“உங்க அக்கா தற்கொலை செஞ்சுக்க முயற்சி பண்ணிட்டு இப்போ ஹாஸ்பிடல்ல உயிருக்கு போராடிட்டு இருக்குறதா தகவல் வந்தது. அவளைப் பார்க்க போனா எங்களை பார்க்க மாட்டேன்னுட்டா” என்று மீண்டும் அழ தொடங்க,

”எப்படி அவ உங்கள பார்ப்பா, உங்களுக்கு கொஞ்சமாச்சும் இரக்கம் இருக்கா? அன்னிக்கு கஷ்டம்னு வீடு தேடி வந்தவளை அரவணைச்சிங்களா? எவ்வளவு துன்பமோ அதை தாங்க முடியாமாதானே தன்னை மீறி நம்ம வீட்டுக்கு வந்தா?அவளை என்ன ஏதுன்னு ஏதாவது கேட்டிங்களா?காதலிக்குறது அவ்வளவு பெரிய கொலைக் குத்தமா? இதே அவள் காதல் வாழ்க்கை நல்லபடியாக எந்த பிரச்சனையும் இல்லாமல், அவள் காசுபணத்தோட இருந்தா, கஏத்துக்கிட்டிருப்பீங்க தானே. இல்ல ஒருவேளை நீங்க பார்த்து வைச்ச வாழ்க்கை இது போல மோசமாக அமைஞ்சிருந்தா இப்ப மாதிரி அவ சாகட்டும்னு அவள விட்டுருப்பீங்களா? அப்படி என்ன உங்களுக்கு கெளரவம், பிடிவாதம் நீங்க பாசத்தோட வளர்த்த பிள்ளைகள் தானே நாங்க…

கேட்ட பொருளெல்லாம் வாங்கி கொடுத்த நீங்க, எங்களுக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைச்சிக் கொடுக்கக்கூடாதா?” என்று கதறியவள், “நான் மட்டும் லூசு மாதிரி உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன். முதல்ல அக்கா எந்த ஹாஸ்பிடல்ல இருக்கான்னு

சொல்லுங்க‌.”என்று கேட்டு, அங்கு ஓட.

அங்கோ இவளிடம் பேசுவதற்காகவே உயிரை பிடித்துக் கொண்டிருந்த அவளது அக்கா, “பட்டுவ நீதான் பாத்துக்கணும் சின்னு” என்று கைக்குழந்தையாய் இருந்த மூன்று மாத குழந்தையை காண்பிக்க, அந்த குழந்தையும் இவளை பார்த்து பொக்கை வாயைத் திறந்து சிரித்தது.

ஓரே எட்டில் நர்ஸிடம் இருந்து குழந்தையை வாங்கியவள், நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் வெண்ணிலா.

அந்தக் காட்சியை ஒருவித மனநிறைவுடன் பாரத்துக் கொண்டிருந்த சகோதரியை கண்டவள்,”அக்கா அப்படிலாம் பார்க்காதே. உனக்கு ஒன்னுமாகாது. நீ சீக்கிரம் நல்லாகிடுவ. தைரியமா இரு கா. ப்ளீஸ் எப்படியாவது நல்லப்படியாக வந்துடுடீ. குழந்தைய பத்திக்கூட கவலைப்படாம இப்படி ஒரு முடிவு எடுக்க உனக்கு எப்படி மனசு வந்தது?”என்று தொண்டை அடைக்க வினவினாள் வெண்ணிலா.

“என் பட்டுவோட நல்லதுக்காகத்தான் இந்த முடிவு எடுத்தேன் நிலா. படிக்கும் போது லவ் பண்ணுது எவ்வளவு தப்புன்னு எனக்கு இப்ப தான் புரியுது. அம்மா அப்பாவோட ப்ரின்ஸஸாக வளர்ந்த என்னால சாதாரண வாழ்க்கையை ஒரு நாள் கூட வாழ முடியலடா. வசதிகள் மட்டுமல்ல, அடிப்படை தேவைகளைக் கூட அவனால நிறைவேற்ற முடியலை.

என்னால, சமைச்சு துணி துவைச்சு, குடும்பத்தை பார்த்துக்கிறதுன்னு எதிலையும் அவனை திருப்திபடுத்த முடியல.

ஆரம்பத்தில் நண்பர்கள் உதவினாலும், காதலின் வேகத்திலும் எங்களை நாங்களே சமாளிச்சுக்கிட்டோம். படிப்பை முடிக்காததால் எங்களுக்கு வேலையும் கிடைக்கல. குழந்தையும் இல்லைன்னு எங்களுக்குள்ள சண்டை வர ஆரம்பிச்சிடுச்சு. மூன்று வருஷத்துக்கு அப்புறம் பட்டு வயித்துல வளர ஆரம்பிச்சா.

சின்ன சின்ன சண்டைகள்,பெரிய சண்டையாக மாற ஆரம்பிச்சது.

அம்மா, அப்பாவ சமாதானப்படுத்தலாம்னு நினைச்சு வந்தேன். என்ன அவங்க உள்ள விடவே இல்ல.அவங்க மனசு மாறும்னு நம்பிக்கையும் இழந்துட்டேன்.குழந்தை பிறந்தப்பிறகு எங்களால் ஒன்றுமே சமாளிக்க முடியல.

அவன் வட மாநிலத்துப்பக்கம் வேலை தேடி போனவன் போனவன் அவனிடமிருந்து எந்த தகவலும் இல்ல. அவனோட போனும் நாட் ரீச்சபிள்னு வருது. ஒருமாதம் சமாளிக்க முடிந்த என்னால் மனசலயும் உடம்பிலயும் தெம்பில்ல.பட்டுவ அனாதையாக விட மனசு வரல.நான் வாழ்ந்த வாழ்க்கையை என் பிள்ளைக்கும் கிடைக்கணும்தான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன். எந்த சூழ்நிலையிலும் நீ பட்டுவ கைவிடமாட்டேன் நான் முழுமையாக நம்புறேன் நிலா.பட்டுவ பத்திரமா பார்த்துக்கோ “என்று மூச்சு வாங்க பேசியவள்,தங்கை கையில் இருந்தஷகுழந்தையை பார்க்க,நிலா பட்டுவ நெஞ்சோட அணைத்து “இனி மேல் இவ என்னோட குழந்தை” என்றவள் முத்தமிட,அந்த நிம்மதியுடன் அவளது அக்காவின் உயிர் பிரிந்தது.

வீட்டிற்கு வந்த வெண்ணிலாவோ குழந்தையை யாரிடமும் கொடுக்காமல் அடைக்காத்தாள்.

கமலி, முகுந்தன் இருவருக்கும் பெரிய பொண்ணு இறந்தது வருத்தம் தான்.

ஆனால் இவளுக்கு கல்யாணம் பேசி இருக்கும் நிலையில் குழந்தை இருப்பது தெரிந்தால் என்ன ஆகும் என்று அது வேறு கவலை. குழந்தையை கேட்டால் யாரிடமும் கொடுக்க மாட்டேன் என அடம் பிடித்தாள் நிலா.

“இங்க பாரு வெண்ணிலா! உங்க நல்லதுக்காக தான் நாங்க எல்லாம் பண்ணோம். ஆனா அவ தான் புரிஞ்சுக்கலை. நீயாவது புரிஞ்சுக்கோ. இப்படி இருக்காத. உனக்கு பார்த்திருக்க குடும்பம் நல்ல குடும்பம். இன்னும் பத்து நாளிலேயே கல்யாணம் பண்ணனும்னு சொல்லிட்டாங்க. ஆனா உன் கிட்ட மாப்பிள்ளை பேசணும் என்கிறார்.

“ நீ இந்த கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிடு. இல்லைன்னா குழந்தையை ஏதாவது ஆசிரமத்துல விட்டுடுவேன்.”என்று கமலி மிரட்ட.

“நீ எல்லாம் ஒரு அம்மாவா? உன் பேத்தி தானே. இப்படி பேசுறீங்களே.” என்று வெண்ணிலா அழ.

“என் பேத்தி நல்லத்துக்காகத் தான் சொல்றேன். நான் பார்த்திருக்குற குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம். கல்யாணம் முடியவும் குழந்தை இருக்கிற விஷயத்தை பத்தி சொல்லிக்கலாம் .அவங்க நல்லா பார்த்துப்பாங்க. வேற யார நீ கல்யாணம் பண்ணாலும் குழந்தைய பாத்துக்க விட மாட்டாங்க.” என்று குழந்தையை காட்டி கார்னர் பண்ணினார் கமலி.

அதற்குப் பிறகு வெண்ணிலாவிற்கு வேறு தெரியாமல் கல்யாணத்துக்கு தலையாட்டினாள்.

 ஏற்கனவே அவளது போனை எல்லாம் எடுத்து மறைத்து வைத்தவர், ஹாஸ்பிடல்ல இருந்து வந்த அன்னைக்கே அவர்கள் குலதெய்வம் இருக்கும் ஊருக்கே வெண்ணிலாவை கிளப்பி கூட்டிட்டுப் போனார்கள்.

அங்கே தான் கல்யாணம் ஏற்பாடும் செய்திருந்தார்கள். அதனால் தான் இவளைத் தேடி நண்பர்கள் வந்த போது எந்த தகவலும் தெரியவில்லை.

குழந்தைக்காக என்று தலையாட்டிய வெண்ணிலாவோ யுகித்தை மறக்க முடியாமல் தவித்தாள்.

குழந்தையை உறவினர்களின் வீட்டில் பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு திருமண ஏற்பாட்டை பார்த்தனர்.

அவர்கள் பெற்றோர் நினைத்தது போல் குலதெய்வ கோவிலில் வெண்ணிலாவுக்கு திருமணம் நடந்தேறியது.

கண்ணில் நீர் வழிய தன் கழுத்தில் ஏறிய தாலியை பார்த்தாள் வெண்ணிலா.

அந்த நிகழ்வை நினைத்துப் பார்த்தவளுக்கு கோபம் தான் வந்தது.

தலையை உதறி அவள் கோபத்தை கட்டுபடுத்திய வெண்ணிலா அவளது அத்தைக்கு அழைத்தாள். “பாப்பா என்ன பண்றா அத்தை “என்று கேட்க,

”பாப்பா மிதுவோட விளையாடிட்டு இருக்கா மா. என்ன ஆச்சு நிலா ஏன் குரல் ஒரு மாதிரியா இருக்கு” என்று அவர் பதற

“உங்கள ரொம்ப மிஸ் பண்றேன் அத்த.” என்றாள் வெண்ணிலா.

“என்னாச்சு டா? ஏன் உன் குரல் ஒரு மாதிரியா இருக்கு.” என்று மித்ரா வினவ.

“இல்லத்தை! சும்மா தான் போட்டேன்.” என்றவள் ஃபோனை வைத்து விட்டாள்.

அவளுக்கு மித்ராவிடம் பேசியதுமே கொஞ்சம் மனம் அமைதியடைந்தது. அதற்குப் பிறகு நண்பர்களுடன் கொட்டமடித்துக் கொண்டிருந்தாள்.

யுகித்தோ, இவளுக்கு நான் என்னைக்குமே முக்கியம் இல்ல போல. ஈஸியா என்ன தூக்கி போட்டுட்டா. அவங்க குடும்பத்திடம் பேசும் போது மட்டும் அப்படியே மாமா,அத்தை னு எப்படி குரல் குழையுது பாரு என்று எண்ணியவனுக்குள் கோபம் பெருகியது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!