விடாமல் துரத்துராளே 34,35

4.9
(28)

விடாமல் துரத்துராளே 34

தியா செயலில் தேவா அதிர்ந்து விழித்தான். இதை முத்தம் என்று கூறிட இயலாது‌. தேவாவை பாப்பா என்று சொல்ல விடக்கூடாது என்பதற்காக அவன் இதழ் மீது தன் இதழை அழுத்தமாக பதித்து இருந்தாள்.. அவளின் செயலில் தேவா அதிர்ந்து இருந்தான். தியாவிற்குமே அதிர்ச்சி தான் இவ்வளவு நேரம் சண்டையில் உணராத நெருக்கத்தை இப்போது உணர்ந்தாள்…  இதழ்கள் நான்கும் உரசியதில் உடல் முழுவதும்  மின்சாரப் பூ பூத்தது போன்று குறுகுறுப்பாய் இருந்தது. கண்கள் இரண்டும் தானாய் மூடி கொண்டது… இந்த இதழ் ஒற்றலை ஆழ்ந்த அழுத்தமான முத்தமாக மாற்ற கூறி அவளின் இதழும் மனமும் இம்சித்தது. ஆனால் வெட்கம் வந்து தடைப்போட மனமே இல்லாமல் தேவா சட்டையை இறுக்கி பிடித்து இருந்த கையின் பிடியை தளர்த்தினாள்.. ஆனால் அவள் கரங்களை  விலக விடாமல் தேவாவின் ஒரு கை இறுக்கியது. மற்றோரு கரமோ கன்னத்தை பற்றி முத்தத்தை நீட்டிக்க நினைக்க லிஃப்ட் கதவு திறந்தது…

அந்த சத்தத்தில் சுயநினைவை அடைந்த இருவரும் விலகினர். ஒரு நீண்ட பெருமூச்சு இழுத்து விட்டு தலையை அழுந்த கோதி சமன்நிலை அடைந்தான் தேவா.. தியாவும் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.. அவர்கள் எதிரே யாரோ நிற்பது தெரியவர, தியா பொது இடத்தில்ல இப்புடி நடந்துக்கிட்டேயேடி என்று  தன் தலையில் தட்டி விட்டு எதிரே பார்க்க வெண்ணிலா நின்று இருந்தாள்…

வெண்ணிலாவை பார்த்த தியா உடனே திரும்பி தேவா முகம் பார்த்தாள். தேவா வெண்ணிலா இருவரையும் ஒரே இடத்தில் சேர்த்து இன்று தான் பார்க்கிறாள். தனது கணவன் அவனின் முன்னால் காதலியை பார்த்ததும் என்ன மாதிரி மனநிலையில் இருக்கிறான். அவளை இழந்து விட்டோமே என்ற வேதனையும் ஏமாற்றமும் அவன் முகத்தில் தெரிகின்றதா என பார்க்க தேவா முகம் பார்த்தாள்… நீ என்ன ஏமாற்றி விட்டாய் என குற்றம் சாட்டும் பார்வையோ, இவளை இழந்து விட்டோம் என்ற வேதனை பார்வையோ, நீ இல்லைன்னாலுப் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் பாருடி என்ற கர்வமான பார்வையோ எதுவுமே இல்லை.. சாதாரணமாகவே  வெகு இயல்பாகவே வெண்ணிலாவை எதிர் கொண்டான்..

ஆனால் இதுக்கு நேர்மாறாக இருந்தாள் வெண்ணிலா. அவளால் இயல்பாக தேவாவை எதிர்கொள்ள முடியவில்லை.. முகம் முழுவதும் வேர்த்து உடலில் சின்ன நடுக்கம்  இந்த சூழ்நிலை அவளுக்கு மிகப்பெரிய தர்ம சங்கடத்தை கொடுப்பது புரிந்தது.. ஆனால் அடிக்கண்ணால் தியாவை அவள் கழுத்தில் தொங்கிய மாங்கல்யத்தை பார்த்தவளுக்கு என்னவோ போல் இருந்தது.. அவளை மேலும் கஷ்டப்படுத்த கூடாது என நினைத்தானோ என்னவோ “பாப்பா வா போலாம்” என்ற தேவா அங்கு இருந்து சென்றான். தியாவும் அவன் பின்னே சென்றாள்.. செல்லும் அவர்களையே பார்த்து கொண்டு நின்று இருந்தாள் வெண்ணிலா… அவளுக்கு என்னவோ மனது ஒரு மாதிரி தான் இருந்தது.. 

நள்ளிரவு 1 மணியை தாண்டி இருந்தது. ஜீவாவின் தந்தை செந்திலுக்கோ உறக்கம் வரவில்லை. இன்று காலை மருத்துவமனையில் தேவா தியா வை பார்த்ததும் தேவா தியா இருவரின் சந்தோஷம்.. அதிலும் தேவா சந்தோஷமாக இருக்கின்றான் ( அப்புடின்னு அவரே நினைச்சிக்கிறார்ப்பா??) என்ற  நினைப்பே அவரின் தூக்கத்தை கெடுத்தது. அது எப்புடி அவன் மகிழ்ச்சியாக இருக்கலாம்.. அவனின் சந்தோஷமே செந்திலுக்கு எரிச்சலை தந்தது. அவன் சந்தோஷத்திற்கும் மகிழ்ச்சிக்கும் காரணமான விஷயத்தை அவனிடம் இருந்து பறித்து அவனை துன்பக்கடலில் தள்ளி விட வேண்டும்..  அந்த இழப்பை தாங்க முடியாமல் அவனை அவனே அழித்து கொள்ள வேண்டும் என்று அன்றோடு நாள் திவேஷ் கூறியதையே திரும்ப திரும்ப மனதிற்குள் உருப்போட்டு கொண்டார்..

“டேய் தேவா உன் பொண்டாட்டி கூட  எவ்வளவு சந்தோஷமா இருக்க முடியுமோ இருந்துக்கோ, ஏன்னா இன்னும் கொஞ்ச நாள் தான் உன் பொண்டாட்டி உயிரோட இருக்க போற, அதுக்கு அப்புறம் என் பையனை மாதிரி அவளும் இந்த உலகத்தில்ல உயிரோட இருக்க போறதில்ல. நான் உன்னை பழி வாங்க போறதுக்கான துருப்பு சீட்டே அவ தான்” என்று கொடுரமாக யோசித்து கொண்டு இருந்தார். 

இந்த அறையில் இவர் தேவா வாழ்க்கையை அழிக்க திட்டம் தீட்டி கொண்டு இருக்க. பக்கத்து அறையில் இருக்கும் அவரின் மகளோ முக நூல் காதலன் மூலம் தன் வாழ்க்கைக்கு தானே குழி தோண்டி கொண்டு இருந்தாள்..

தன் பெற்றோருக்கு தன் மேல் பாசம் இல்லை என்ற எண்ணத்தை  சிறு வயதிலிருந்தே கொண்டு இருந்தாள் சௌதாமினி. ஜீவா இறப்பிற்கு பின் அந்த  எண்ணத்தை அதிகப்படுத்தும் படி இருந்தது செந்தில் கௌரி இவர்களின் நடவடிக்கை. இறந்து போன ஜீவாவை பற்றிய கவலை கொண்டவர்கள் சௌதாமினியை கவனிக்க தவறினர்.அதன் விளைவு முகநூல் மூலம் அவளுக்கு அறிமுகமானவன் காட்டிய பொய்யான அன்பில் மயங்கி கிடக்கிறாள். அவனும் இவளின் பலவீனத்தை தனக்கு சாதகமாக்கி தன்னுடைய பசை தடவிய பாசாங்கு வார்த்தைகளால் பெண்ணவளை ஏமாற்றி பணத்தையும்  கறந்து கொண்டு இருக்கின்றான்.. 

கொலைக்காரி உன்னை பார்த்து

உசுர் போச்சு 🎶

நின்னு போச்சு என் மூச்சு🎶

அடி கொலைக்காரி🎶

என்ற பாடல் அருகிலிருந்த திருமண மண்டப வாசலில் வைத்து இருந்த ஒலிபெருக்கி மூலம்  ஒலிக்க அதுக்கூடவே வாய் அசைத்தபடி தனது காவல் வாகனத்தின் சைடு கண்ணாடியில் தலையை கலைத்து கையால் வாரியபடி நின்று இருந்தான் சபரி..

ஒரு கேஸ் விஷயமாக அந்த ஏரியாவில் விசாரிக்க வந்தார்கள். இவனுக்கு கீழ் பணிபுரியும் கான்ஸ்டபிள்களை அருகே இருக்கும் கடைகளில் விசாரிக்க அனுப்பி விட்டு மரத்து நிழலில் நிற்கும் காவல் வாகனத்தின் அருகே நின்று இருந்தான்..

“ம்.. அனுபவிச்சு எழுதி இருக்காங்கப்பா ஒவ்வொரு வரியையும், உண்மையாவே இந்த பொண்ணுங்க எல்லாம் கொலைக்காரிங்க தான். பசங்க நாம உண்டு நம்மை வேலையுண்டு இருக்க சமயமாக பார்த்து அவங்க கண்ணில் பட வேண்டியது. பார்த்த உடனே அவங்க மனசுக்குள்ளேயும் புகுந்துற வேண்டியது. அப்புறம் பசங்களை  யாரு அந்த பொண்ணு பேர் என்ன ஊர் என்னன்னு கூட தெரியாம இராத்திரியும் பகலும் அவ நினைப்புல்லயே பைத்தியமா சுத்த வச்சிட்டு, மறுபடியும் கண்ணுலயே படமா பசங்களை சாக அடிக்க வேண்டியது, ம்… நம்ம கொலைக்காரியை பார்த்து கூட இரண்டு மாசத்துக்கு மேல்ல ஆகியிருச்சு.. மறுபடியும் எப்ப பார்க்க போறோமோ” என்று தனக்கு தானே புலம்பி கொண்டு திரும்பியவன் கண்கள் மின்னியது எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டே இருந்தவளை பார்த்ததும்,

“ஐ..‌. நம்மோட கொலைக்காரி” என்றவன் பார்வையை விலக்காது அவளையே பார்த்துக் கொண்டு இருக்க, “டேய் போன தடவை மாதிரி பார்த்துக்கிட்டு மட்டும் இருந்துட்டு புலம்பிக் கிட்டு இருக்காது, இந்த தடவையாவது அவ கிட்ட பேச்சு கொடுத்து அவளை பத்தி தெரிஞ்சிக்க” என்று மனசாட்சி மண்டையில் தட்ட, அவளின் வண்டியின்  முன்பு கை நீட்டி தடுத்தான்…

“ஏன் சார்? எதுக்கு வண்டியை ஸ்டாப் பண்றீங்க? “என கேட்டாள் சௌதாமினி.

“செக்கிங்மா, வண்டி பேப்ர்ஸ் எல்லாம் வெளிய எடுங்க” என்றான் அவளை பார்த்தபடி இல்லை இல்லை ரசித்தபடி,

சௌதாமினி, “நீங்க எதுக்கு செக்கிங் பண்ணனும். இது எல்லாம் ட்ராஃபிக் போலீஸ் வேலை தானா? “

சபரி, “யார் சொன்னது ட்ராஃபிக் போலீஸ் தான் செக் பண்ணனும்னு, நாங்களும் பண்ணுவோம், ஏன்னா பொதுமக்கள் பாதுகாப்பு மேல்ல எங்களுக்கும் அக்கறை இருக்கு” என்றவனை பார்க்க பார்க்க சௌதாமினிக்கு கடுப்பாக வந்தது. தன்னுடைய அவசரம் புரியாமல் நிற்க வச்சிட்டானே என்று, அப்போது அவளை  தாண்டி சில இரு சக்கர வாகனங்கள் சென்றது.

“என்ன சார் எனக்கு முன்னாடி போன வண்டியை செக் பண்ணல, எனக்கு பின்னாடி வர வண்டியையும் செக் பண்ணல, என்னோட வண்டியை  மட்டும் ஏன் செக் பண்றீங்க” என நியாமான கேள்வியை கேட்டாள்.. 

அவள் கேள்வியில்  “என்ன இவ இவ்வளோ அறிவா இருக்கா, இப்ப என்ன பதில் சொல்றது என்று முதலில் தடுமாறியவன் பின்பு ஏன்னா உன்னை பார்த்த பதினாறு பதினேழு வயசு மாதிரி தான் தெரியுது. நீ வண்டி ஓட்ட தெரியாம ஓட்டி யாரையாவது இடிச்சு ஆக்ஸிடென்ட் பண்ணிட்டா என்ன பண்றது? லைசென்ஸ் வச்சு இருக்கியா எடுத்து காட்டுமா” என்றான் அவளிடம் பேச்சை வளர்த்து அவளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன்,

“சார் நீங்க நினைக்கிற மாதிரி என் வயசு 17 இல்ல.  எனக்கு வயசு 22” என்றாள் எரிச்சலுடன்,

“நீ லைசென்ஸ் எடு அதில்ல நான் உன் ஏஜ் எவ்ளோன்னு பார்த்துக்கிறேன்” என்றவன் மேல் கோவமாக வந்தது சௌதாமினிக்கு, அவளே அவசரமாக தனது முகநூல் காதலனுக்கு பணம் அனுப்ப பேங்க் நோக்கி சென்று கொண்டு இருக்கிறாள். வரும் அவசரத்தில் வண்டி லைசென்ஸ் இருந்த பர்ஸை வீட்டிலையே மறந்து விட்டு இருந்தாள் அது கூட இப்போது சபரி கேட்ட பின்பு தான் நியாபகம் வந்தது. இப்ப என்ன பண்ணலாம் என்று யோசித்தாள், சரி ஏதாவது பேசி சமாளிக்கலாம் என்று நினைத்தவள்,

“சார் நான் xxxx காலேஜ்ல  இன்ஜினியரிங் ஃபைனல் இயர் படிச்சிட்டு இருக்கேன். காலேஜ்க்கு டைம் ஆகிருச்சு சார். இப்ப வண்டியை ஓரமா நிறுத்தி பேப்ர்ஸ் எல்லாம் எடுத்து காட்ட நேரம் இல்ல சார். லேட்டா போனா ப்ரின்ஸ்பால் உள்ள விடமாட்டாங்க சார், திரும்பி வீட்டுக்கு போனா அப்பா அம்மா கிட்ட அடி விழும் சார், அதனால்ல பாவம் பார்த்து என்னை விட்டுருங்களேன்” என்றாள் பாவமாக முகத்தை வைத்து கொண்டு,

ப்ராடு சனிக்கிழமை காலேஜ் லீவ் எப்புடி பொய் சொல்றா பாரேன் என்று தனக்குள் கூறியவன், சௌதாமினியை பார்த்து “அப்ப லைசென்ஸ் இல்ல அப்புடி தானே” என கேட்க,

“இருக்கு ஆனா வீட்டுல சார்”  என அசடு வழிந்தவளை உள்ளுக்குள் ரசித்தவன் வெளியே மிடுக்காக “ம்… ஹெல்மெட் போடல, லைசென்ஸும்  இல்ல ஓவர் ஸ்பீடு அப்ப சரி வண்டியை கோர்ட்டுல பைன் கட்டிட்டு எடுத்துக்க” என வண்டி சாவியை எடுத்தான் சபரி.

“அச்சோ வேணாம் சார் வேணாம் சாவியை கொடுத்துருங்களேன். என்னால்ல கோர்ட்டுக்கு எல்லாம் அலைய முடியாது. இப்ப எனக்கு வண்டி வேணும். நான் அவசரமா பேங்க் வரைக்கும் போகனும் ரொம்ப அர்ஜெண்ட்  சார்” என்றவள் தனது ஹெண்ட் பேக்கில் இருந்து ஐநூறு ரூபாயை எடுத்து சபரி முன்பு நீட்டினாள்..

“என்னம்மா லஞ்சமா?”

“அய்யோ  சார் இதை  நீங்க ஏன் லஞ்சம்ன்னு நினைக்கிறீங்க. பொறுப்பான போலீஸான உங்களுக்கு நான் கொடுக்குற அன்பளிப்பா நினைச்சுக்கோங்க சார்” என்றவளை சபரி முறைக்க,

“என்ன சார் ஐநூறு ரூபாய் கம்மியா இருக்குன்னு நினைக்கிறீங்களா? அப்ப நீங்களே உங்களுக்கு என்ன வேணுமோ கேளுங்க” என  அவசரத்தில் வார்த்தைகளை விட,

அவளை பார்த்த சபரி “அட போம்மா சும்மா வாய் விடாத நான் கேட்கிறதை உன்னால்ல கொடுக்க முடியாது” என்றவனின் வார்த்தை சௌதாமினியின்  தன்மானத்தை சீண்ட, 

“சார் அது எல்லாம் என்னால் கொடுக்க முடியும்.

என்ன நீங்க ஒரு இரண்டாயிரம் மூணாயிரம் கேட்பீங்களா, இல்ல மிஞ்சி போனா ஐந்தாயிரம் வரை கேட்பீங்களா, அதற்கு மேல்ல என்ன ஏன் சொத்தையா எழுதி கேட்க போறீங்க கேளுங்க சார் என்னால் கொடுக்க முடியும்” என்றாள் ரோஷமாக,

அவளை உற்று பார்த்தவன் “உன் சொத்து எல்லாம் எனக்கு வேணாம் நீ தான் வேணும். நான் உயிர் வாழுற கடைசி நாள் வரை என் பொண்டாட்டியா வேணும்  உன்னால் தர  முடியுமா” என நேரடியாக கேட்க, சௌதாமினி அதிர்ந்து அவனை பார்த்து முழித்து கொண்டு இருந்தாள்…

“என் பேர் சபரி. இந்த ஏரியா இன்ஸ்பெக்டரா இருக்கேன். சம்பளம் நம்ம இரண்டு பேரும் குடும்ப நடத்தரத்துக்கு அதிகபடியாவே வரும். போலீஸ் அப்புடிங்கிறதுக்காக எப்பவும் விரைப்பா இருப்பேன்னு நினைக்காத, நான் பயங்கர ஜாலி டைப்..  எனக்கு அம்மா, அப்பா, கூட பொறந்தவங்கன்னு யாரும் இல்லை. அதனால்ல மாமியார் நாத்தனார் கொடுமை எல்லாம் உனக்கு  கிடையாது. மாமா, அத்தை, அத்தை பொண்ணு ஹரிணி அவங்க தான் நமக்குன்னு சொந்தம். அவங்களும் நமக்கு தொந்தரவா இருக்க மாட்டாங்க. நம்ம கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் நீ இப்புடி இருக்கனும் அப்புடி இருக்கும்னு கண்டிஷன் எல்லாம் போட மாட்டேன். நீ உன் விருப்பப்படி இருக்கலாம். உன் சுதந்திரத்தில்ல நான் தலையிட மாட்டேன்..எனக்கு தம்மு, தண்ணின்னு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. படிக்கிற டைம் பொண்ணுங்களை சைட் அடிச்சு இருக்கேன். அவ்ளோ தான் அதை தாண்டி வேற எதுவும் பண்ணனது இல்ல. அவ்ளோ  நல்ல பையன்மா நானு. என்னை கல்யாணம் பண்ண நீ கொடுத்து வச்சு இருக்கனும். மேரேஜ் முடிஞ்ச அப்புறம் உனக்கு  சமைக்க  தெரியலைன்னா கூட பரவாயில்லை. நானே நல்லா தான் சமைப்பேன். வீட்டு வேலை எல்லாம் கூட நானே  பார்த்துப்பேன். உன்னோட ஒரே வேளை என்னை லவ் பண்றது மட்டும் தான். அதை மட்டும் பண்ணு அது போதும். இப்ப சொல்லு உன் பதிலை” என்று தன்னை பற்றி முழு மூச்சாக கூறி முடித்து அவளை பார்த்தான்.

சௌதாமினியோ அதிர்ச்சியில் சிலையென நின்று இருக்க, தாமினி என்று சபரி அவளின் கையை தொட்டு அழைத்ததில் நினைவுக்கு வந்தவள், அவனை முறைத்து கொண்டே வண்டியை விட்டுட்டு அங்கிருந்து சென்றாள்..

“ஓய், என்னமோ என்ன வேணா கேளுங்கன்னு ரோஷமா சொன்ன, கேட்டதுக்கு அப்புறம் பதில் சொல்லாமா போனா என்ன அர்த்தம்  வண்டி வேணாமா” சென்று கொண்டு இருந்தவளை பார்த்து சபரி கேட்க, திரும்பி பார்த்தவள் “வேணாம், நான் கோர்ட்ல பைன் கட்டியே வாங்கிக்றேன்” என்றாள் அவனை முறைத்தபடி,

அவள் அருகே நடந்து சென்றவன்  “போ போ எந்த கோர்ட்டுக்கு போனாலும்  எத்தனை நாள் ஆனாலும் சரி நான் கேட்டதை  கொடுத்தா தான் உன் வண்டி உனக்கு கிடைக்கும். யோசிச்சு பதில் சொல்லு, அதுவரை உனக்கு எங்க போகனும்னாலும் சொல்லு அடியேன்  நானே உன்னை ட்ராப் பண்றேன். எனக்கு ஒரு கால் பண்ணு அது போதும்” என்றவன் அவள் கையில் பேப்பரை திணித்தான். அதை கசக்கி கீழே போட்டவள் அவனை முறைத்து கொண்டே சென்றாள்…

விடாமல் துரத்துராளே 35

சௌதாமினி  இன்று  கல்லூரிக்கு என்றும் இல்லாத உற்சாகத்துடன்  கிளம்பி கொண்டு இருந்தாள். காரணம் தன்னிடம் வண்டி இல்லாததால் தன்னை தன் தந்தையே அவரது வாகனத்தில்  கல்லூரி அழைத்து செல்வார் என்பதால், நேற்று சபரியிடம் வண்டியை பனி கொடுத்தவள் வீடு திரும்பியதும் அவள் தாய் கௌரி வண்டி எங்கே கேட்க, வண்டி ரிப்பேர் ஒர்க் ஷாப்ல விட்டு இருக்கேனா என்று மட்டும் கூறினாள். ஏனோ சபரியை பற்றியும் அவன் கூறியது பற்றியும் வீட்டில் சொல்லவில்லை. 10வது படிக்கும் வரை சௌமியை செந்திலே தன்னுடைய இருசக்கர வாகனத்தில் கூட்டி கொண்டு போய் பள்ளியில் இறக்கி விடுவார். தனது தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்வது அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, சில வருடங்களுக்கு பிறகு இன்று மறுபடியும் தனது தந்தையுடன் செல்ல போகிறோம்  என்ற நினைவே அவளுக்கு அளவில்லாத ஆனந்தத்தை தந்தது..‌  அப்போது இரு சக்கர வாகனம் இப்போது கார் அவ்வளவே வித்தியாசம் அவருடன் ஒன்றாக சென்றாலே போதும் என்றபடி ஆசை ஆசையாக செந்திலிடம் வந்தவள் “அப்பா வண்டி ஒர்க் ஷாப்ல  விட்டு இருக்கேன் என்னை காலேஜ்ல ட்ராப் பண்ணிடேறீங்களா?” என ஆசையாக  கேட்க,

” நீ பஸ்ல போய்க்கோ சௌமி நான் முக்கியமான விஷயமாக ஒரு ஆளை வர சொல்லி இருக்கேன்” என்று கூறினார்… அதை கேட்ட  சௌதாமினி தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை தனக்குள் மறைத்து கொண்டு சரிப்பா போய்டு வரேன் என்றபடி வாடிய முகத்துடன் கல்லூரி கிளம்ப, அப்போது தன்னுடைய செல்போனில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஓசை வர, எடுத்து பார்த்தவள் முகத்தில் மகிழ்ச்சி வந்தது.  தன்னை நேசிக்கவும்  ஒருவன் இருக்கிறான் என்ற சந்தோஷம்.  ஆனால் அது அவள் நினைப்பது போல ஆர்ப்பரிக்கும் அன்பு ஊற்று இல்லை வெறும் கானல் நீர் தான் என்பதை எப்போது உணர போகின்றாளோ?

சாலையை கவனிக்காமல் மொபைலுக்குள் தலையை புதைத்தபடி பஸ் நிலையம் நோக்கி நடந்து கொண்டு இருந்தாள் சௌதாமினி.. அவளை உரசுமாறு ஒரு கார் வந்து அருகே நின்றது. பயந்து போனவள் காரை பார்க்க, காரின் பக்கவாட்டு கண்ணாடியை கீழ் இறக்கியவன் இப்புடி ரோட்டை பார்க்கமா போனையே பார்த்துட்டு போனா காலேஜ் போக முடியாது. மேல் தான் போகனும் சௌமியா என்றான் காருக்குள் இருந்த ஹர்ஷா.

ஹர்ஷா வை பார்த்ததும் நெஞ்சில் கை வைத்த  பெருமூச்சு விட்ட சௌமி நீங்க தானா ஹர்ஷா வேற யாரோ ரத்து நினைச்சு பயந்தே போய்ட்டேன் தெரியுமா?

“நானே தான் சௌமியா”


சௌமியா இல்ல சௌதாமினி எத்தனை தடவை சொல்றது ஹர்ஷா.

ஓ… சாரி உன் பேர் மட்டும் எப்பவுமே என்னை கன்ப்யூஸ் பண்ணுது சௌமி. சரி ஏன் நடந்து போற  உன் வண்டி எங்க

வண்டி ரிப்பேர் அதான் பஸ்ல போகலாம்னு பஸ் ஸ்டாண்ட் போயிட்டு இருக்கேன் ஹர்ஷா.

சரி கார்ல் ஏறு  ட்ராப் பண்ணிடுறேன்.

உங்களுக்கு எதுக்கு சிரமம் ஹர்ஷா நான் பஸ்லயே போய்க்கிறேன் என்ற சௌமியை முறைத்த ஹர்ஷா. இதுல சிரமம் என்ன இருக்கு. நான் போற வழியில்ல தானே  உன் காலேஜ் இருக்கு ரொம்ப பண்ணாத வந்து வண்டியில்ல ஏறு நான் ஒன்னும் உன்னை கிட்னாப் பண்ணிட மாட்டேன் என்றான்…

இதுக்கு மேலும் மறுப்பது ஹர்ஷா வை அசிங்கப்படுத்துவது போல் இருக்கும் என்பதால் காரில் ஏறினாள் சௌமி. கார்க்குள்ளும் சௌமி போனில் செட் செய்தபடியே வந்தாள். ஹர்ஷாவும் எதையும் கண்டுகொள்ளாமல் காரை ஓட்டி கொண்டு இருந்தான். தீடிரென காரை ஒரு ரெஸ்டாரன்ட் முன்பு நிறுத்தினான்.‌


என்னாச்சு ஹர்ஷா ஏன் வண்டியை ஸ்டாப் பண்ணுனீங்க.

நீ மார்னிங் டிபன் சாப்பிடயா சௌமியா என்று சம்மந்தம் இல்லாத கேள்வியை கேட்டான் ஹர்ஷா.

எதுக்காக இதை கேட்கிறான் என்பது புரியாமலையே சாப்பிட்டேன் என்று கூறினாள்.. உண்மையிலேயே அவள் கிளம்பும் அவசரத்தில் சாப்பிடவில்லை.

ஓ… நீ சாப்டியா? ஆனா நான் இன்னும் சாப்பிடலை சௌமியா. அதான் இந்த ரெஸ்டாரன்ட்ல சாப்டலாம் சொல்லி வண்டியை நிறுத்தினேன். உனக்கு காலேஜ்க்கு இன்னும் நிறைய நேரம் இருக்குல வா போய் சாப்பிட்டு அப்புறமா நானே உன்னை காலேஜ்ல இறக்கி விடுறேன் என்றான்..

இவன் என்ன லூசா பஸ்ல போறேன் சொன்னவளை வம்படியா கார்ல் ஏறு காலேஜ்ல ட்ராப் பண்ணிடுறேன் சொல்லிட்டு இப்ப சாப்பிட்டு அப்புறம் வந்து ட்ராப் பண்றேன் சொல்றான் என மனதிள்குள் ஹர்ஷா மீது கடுப்பானவள், வெளியே லேசான புன்னகையுடன் நான் சாப்டுட்டேன் ஹர்ஷா… நீங்க போய் சாப்டுங்க.  நான் பஸ்லயே போய்க்கிறேன் என கீழ் இறங்க போனவளை  வம்படியாக ரெஸ்டாரன்டக்குள் அழைத்து சென்றான். காரணம் காரில் வரும் போதே ஹரிணி அந்த ரெஸ்டாரன்ட்க்குள் செல்வதை பார்த்து விட்டான்… அவளை பார்த்த பின்பு அப்புடியே கடந்து செல்ல அவனால் முடியவில்லை. அவன் கார் கூட அதற்கு மேல் நகர மறுத்தது.. அதனாலேயே வண்டியை நிறுத்தினான். சௌமியை பாதியிலே இறக்கா விடவும் மனமில்லை. அதனாலே அவளையும் இழுத்து கொண்டு செல்கின்றான்..

அந்த ரெஸ்டாரன்ட் உள்ளே சென்றவன் ஹரிணியை தேட அவ்ளோ முதல் வரிசையின் நடுப்பகுதியில் இருந்த டேபிளில் அமர்ந்து இருக்க அவள் பக்கத்தில் தியாவும் எதிரே சபரியும் அமர்ந்து இருந்தான். தியா, சபரி இருவரையும் ஹரிணியுடன் பார்க்க அவனுக்கு எரிச்சலாக இருந்தது. இவ ஏன் இவங்க கூட சேர்ந்து சுத்துறா, அதும் அவன் யாரு அன்னைக்கு இனிமே ஹரிணிக்கிட்ட வம்பு பண்ணாதை சொல்லி என்னையே மிரட்டுறான். அவனுக்கும் இவளுக்கும் என்ன சம்மந்தம் என்று எண்ணியபடியே தியா ஹரிணி அமர்ந்த டேபிள்க்கு நேர்எதிரான டேபிளில் அமர்ந்தார்கள் ஹர்ஷா சௌமி இருவரும். ஹர்ஷா ஹரிணியை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருக்க, சௌமியோ சபரியை முறைத்தபடி கடாயில் போட்டு வறுத்து கொண்டு இருந்தாள்..

தியா, ஹரிணி, சபரி மூவரும் சிரித்து பேசியபடியே சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஹர்ஷாவையோ சௌமியையோ இன்னும் பார்க்கவில்லை. சிரித்து கொண்டே இருந்த தியா திரும்பி எதிர் டேபிளை பார்த்தாள்.


டேய் போலீஸ் நமக்கு எதிர் டேபிள்ல ஹர்ஷா கூட இருக்க பொண்ணு யார் தெரியுமா என்று தியா பேசி முடிப்பதற்குள் ஹரிணி சபரி இருவரும்  அந்த டேபிளை பார்த்தனர்.

ஹரிணி கண்ணில் தன்னையே விழுங்குவது போல் பார்த்து கொண்டு இருந்த ஹர்ஷா விழுந்தான். இவளும் அவனையே பார்த்து கொண்டு இருக்க. சபரியும் தன்னை முறைத்து கொண்டு இருந்த சௌமியை கண் சிமிட்டாமல்  பார்த்து கொண்டே இருந்தான்…

தியா, “அட ச்சைக் திரும்புங்க. ஏதோ பட்டி காட்டான் முட்டாய் கடையை பார்த்த மாதிரி இரண்டு பேரும் வாயை திறந்து ஆ… பார்த்ததுட்டு இருக்கீங்க. இங்க திரும்புங்க” என்று தியா சத்தம் போட அதில் சுயத்தை அடைந்த இருவரும் தியா புறம் திரும்பினர்..

தியா, “ஹர்ஷா பக்கத்தில் இருக்க அந்த பொண்ணு யார் தெரியுமா”?

“தெரியும் மச்சான் என்னோட வருங்கால பொண்டாட்டி” என்று சபரி கூறியதும்  எதே….. என  ஹரிணி தியா இருவரும் அதிர்ச்சியாக அவனை பாராத்தார்கள்.

தியா,ஏய் போலீஸ்சு என்ன சொல்ற நீங்க இரண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருக்கீங்களா? எங்ககிட்ட சொல்லவே இல்லை சௌமியை திரும்பி பார்த்தபடி தியா கேட்டாள்..‌

சபரி, இப்போதைக்கு ஒன் சைட் லவ் தான் மச்சான்  ஆனா கூடிய சீக்கிரத்தில் டபுள் சைடும் ஓகே ஆயிடும்‌ என்றவன் சௌதாமினியை முதன் முதலில் கோவிலில் பார்த்தது, பார்த்தவுடனே அவள் மீது வந்த காதலையும் நேற்று அவளிடம் தன் காதலை கூறியது என அனைத்தையும் கூறி முடித்தான்.

“போலீஸ்சு செமையா ப்ரபோஸ் பண்ணி இருக்குடா, எங்க இருந்துடா இப்புடி எல்லாம் அழகா பேச கத்துக்கிட்ட என தியா கேட்க,

“எல்லாம் தங்களிடம் கற்ற யானைபால் தான் மன்னா இல்லை இல்லை மன்னி” என்று கூறி சபரி சிரித்தான். தியாவும் சிரித்தாள்..

போலீஸா இருந்துட்டு நைசா அந்த புள்ளைக்கிட்ட வண்டியை ஆட்டைய போட்டுட்டு பொண்டாட்டி போண்டா டீன்னு கதை விட்டுட்டு இருக்கீயே வெக்கமா இல்ல

போடி இப்புடி ஒரு அழகான அத்தை பையன் நம்மளை விட்டுட்டு வேற ஒருத்தியை லவ் பண்றானேங்கிற பொறாமையில்ல பொசுங்குதா என்றவனின் மண்டையில் கொட்டிய ஹரிணி

போடா நீ பெரிய ஆம்பளை ஐஸ்வர்யாராய் உன்னை பார்த்து பொறாமைப்பட என் ஆளு உன்னை விட பயங்கர அழகா பேரழகனா இருப்பான் டா அவனை பார்த்து உனக்கு வயிறு எரிய போகுது பாரு என்றவளின் பார்வை ஹர்ஷா வை தொட்டு மீண்டது. 

ஆ… உன் ஆளு பார்த்து எனக்கு வயிறு எரியாது டீ அவனே எரிஞ்ச கரிக்கெட்டை கலர்ல தான் இருக்க போறான்..

போடா நீ தான்டா கரிக்கெட்டை அதை விடு  உன் பொண்டாட்டி எதுக்குடா  அவன் கூட சேர்ந்து வந்து இருக்கா என ஹர்ஷா வை சுட்டி காட்டி கேட்டாள் ஹரிணி. அவளுக்கு ஹர்ஷாவுக்கும் சௌமிக்கும் என்ன சம்மந்தம் என தெரிந்து கொள்ள வேண்டும். அதுக்காவே இந்த கேள்வியை கேட்டாள்..

ஆமால்ல இவ ஏன் இவன் கூட வந்து இருக்கா சபரியும் அதையே கேட்க,

அதை தான் பேயே நானும் கேட்கிறேன். பதில் சொல்லு

அவ ஜீவாவோட தங்கச்சிடா. அதனால்ல ஹர்ஷாவை தெரிஞ்சவங்கிறதால ஒண்ணா சேர்ந்து வந்து இருப்பாங்க.

என்னது  தாமினி ஜீவா தங்கச்சியா.

ஷாக்கை குறைடா அதை தானே அவளும் சொன்னா. பார்த்தியா நீ வில்லன் குரூப் பொண்ணை லவ் பண்ணி இருக்க.. அவன் அண்ணனால தான் தேவா அண்ணா லைஃப்ல இவ்வளவு பிரச்சினையும் வந்தது..  நாமா ஹீரோ குரூப். உன் ஆளு வில்லன் குரூப். இது எல்லாம் சரிப்பட்டு வராது. உன் லவ்வை ப்ரேக்ப் பண்ணிரு.

ஹனிமா நீ ஏன் இப்புடி பூமர் மாதிரி பேசுற, அவன் அண்ணன் செஞ்ச தப்புக்கு இந்த பொண்ணு என்ன பண்ணும். ஒருத்தர் செய்கிற தப்புக்கு அவங்க குடும்பத்து ஆளுங்கள ஒதுக்கிறது தப்புன்னு உனக்கு தெரியாதா என்று தியா கூறியதும் அதானே அவ யாரா வேணா இருக்கட்டும் ஆனா அவ கூட தான் என் வாழ்க்கைன்னு நான் எப்பவோ முடிவு பண்ணிட்டேன். அது யார் என்ன சொன்னாலும் எந்த சூழ்நிலையிலும் மாறாது.

அதுக்கு அவ பர்ஸ்ட் ஓகே சொல்லனுமே, எனக்கு என்னவோ உன் லவ்வு பெயிலா போகும்னு தான் தோணுது என்ற ஹரிணியின் வாயில் அடிக்க, ஹரிணி மும் அவனை அடித்தாள் இப்புடியே

இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவரை அடித்து கொண்டும் விளையாடி கொண்டும் இருந்தனர்.. தியா இவர்களை பார்த்து சிரித்து கொண்டு இருந்தாள்…

இவர்களை பார்த்த ஹர்ஷாவுக்கு தான் இவன் யாரு எதுக்காக அவளை தொட்டு தொட்டு பேசிட்டு இருக்கான் என் சபரியை பார்க்க கோவம் கோவமாக வந்தது..  இதற்க்கிடையில் ஹரிணியையும் பார்ப்பதையும் நிறுத்தவில்லை..

இவன் எதுக்கு ஹனியை விழுங்குற மாதிரி பார்க்கிறான் பொறுக்கி அன்னைக்கு வாங்கின அடி  இவனுக்கு பத்தலை போல எவ்ளோ தைரியம் இருந்தா அவளை இப்புடி பார்ப்பான் என கோவப்பட்டவள் . ஹரிணி புறம் திரும்ப ஹரிணியின் பார்வையும் ஹர்ஷா பார்க்காத போது திருட்டு தனமாக அவ்வப்போது அவன் மேல் படுவதை பார்த்தவள் இங்க என்னடா நடக்குது என குழம்பி தான் போனாள்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 28

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!