“எதுக்கு இங்க வந்த”?
“வாட் யூ வான்ட்? வந்த விஷயத்தை சீக்கிரம் சொல்லிட்டு கிளம்பு” என்று அவன் கத்தவும் அதில் பயந்தவள் கண்களை இறுக மூடி கொண்டு,
“எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை. நீங்களும் உங்க வீட்டுல கேட்டா விருப்பமில்லைன்னு சொல்லனும். மாத்தி எதுவும் சொல்ல கூடாது. இதை சொல்லிட்டு போக தான் வந்தேன்” என்று கடகடவென ஒரே மூச்சாக கூறி முடித்தவள் கண்களை திறந்து எதிரில் இருந்தவனை பார்த்தாள்..
அவன் முகத்தில் கோவம் இருப்பது போல் இல்லை.. ஹப்பாடா என்று இருந்தது..
அவனோ குரலை செருமி கொண்டு எந்த வித உணர்ச்சியையும் முகத்தில் காட்டாது நேத்து நைட்டே நான் எனக்கு இந்த மேரேஜ்ல இண்டரஸ்ட் இல்லைன்னு என் அம்மாகிட்ட சொல்லிட்டேன் என்று அவன் கூறினான்..
அவன் கூறியதை கேட்டு மகிழ்ச்சியானவளுக்கு இப்போது தான் நேற்றிரவிலிருந்து அடித்து கொண்ட மனது அமைதியானது.. “இது போதும் தாங்க் யூ தாங்க் யூ” என்று அவனிடம் கூறி விட்டு அந்த அறையை விட்டு கிளம்ப,
“ஒன் செகண்ட்” என்று அவன் சொடக்கிட்டு அழைக்க, அதில் திரும்பி பெண்ணவள் அவனை பார்க்க, தனது மொபைல் போனை டைல் செய்து ஸ்பீக்கரில் போட்டான். மறுமுனையில் போனை அட்டன் செய்ததும்,
“ஆ… அம்மா நேனு ஆ.. அம்மாயினை பெல்லி சேஸ்கோ வாளன்கொட்டுனானு” என்று அவன் பேச பேச பாஷை புரியாத பாவையவள் விழி விரித்து பார்த்தாள்..
அதை புரிந்தவன் “எஸ் ம்மா நான் தான்மா சொல்றேன்.. நிஜமா தான் சொல்றேன்.. மேரேஜ்க்கு எனக்கு டபுள் ஓகே என்று அவளுக்கு புரியும் பாஷையில் பேச அதிர்ந்தவள் விழிகள் அகல விரிந்தது..
என்ன எனும் விதமாக போனை ஆஃப் செய்தவன் அவளை பார்த்து புருவம் உயர்த்த, அதில் தெளிந்தவள் “கொஞ்ச நேரம் முன்ன உங்களுக்கு மேரேஜ்ல இஷ்டமில்லைன்னு தடுமாறினாள்..
“ஆமா சொன்னேன்.. இப்பவும் சொல்றேன் எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை, அதை விட உன்னை சுத்தமா பிடிக்கலை என்றான்..
அப்புறம் ஏன் இப்புடி? வார்த்தையால் கேட்காது விழியால் கேட்டாள்..
“அம்மாயி எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கு, யாராவது வந்து இதை நீ செய்ய கூடாதுன்னு ஆர்டர் போட்டா, அதை தான் முதல்ல செய்வேன்..
என் இடுப்பளவு கூட இருக்க மாட்ட, ஆனா நீ என் முன்னாடி வந்து உன்னை எனக்கு பிடிக்கலைடா, கல்யாணத்தை நிறுத்துடான்னு ஆர்டர் போடுற”,
“இந்த மேரேஜ் ஸ்டாப் ஆனா, அது எனக்கு மேரேஜ் பிடிக்காததால், நின்னா தா இருக்கனுமே தவிர உனக்கு பிடிக்காததால், உனக்கு என்னை பிடிக்காததால் நின்னா தா இருக்க கூடாது அம்மாயி, என்று கூறிய விஷ்ணு பிரதாப் தாடியை தடவ,
“அட ஈகோ பிடிச்ச எருமை உனக்கு பிடிக்காத கல்யாணம் யார் சொல்லி நின்னா என்னய்யா, அதில் என்னய்யா குரங்கே உனக்கு கௌரவ குறைச்சல் வந்தது… அச்சோ அறிவு கெட்டவளே காலேஜ் முடிச்சு பேசாமா வீட்டுக்கு போய் இருந்திருக்கலாம்.. கல்யாணம் தானா நின்னு இருக்கும்… இப்ப பாரு பேசிறேன் சொல்லி வந்து வாயை விட்டு இப்புடி ஒரு ஆறடி ஈகோ பிடிச்ச ஹல்க்கிட்ட வந்து மாட்டிகிட்டயேடி”
என்று மனதிற்குள் தன்னை நொந்தபடி எதிரில் இருந்தவனை கலவரத்துடன் பார்த்தாள் விஷ்ணுப்ரியா…
🔥❤️🥰
🙂👍