அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 37🔥🔥

5
(6)

பரீட்சை – 37

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

சதி வலை 

பின்னி பின்னி 

அதில் 

சதிகாரி 

கை தேர்ந்து 

விட்டாள்..

 

தப்பிக்க 

முடியாதபடி 

தூண்டில் போட்டு 

பிடித்து விட்டாள் 

இந்த 

திமிங்கிலத்தை..

 

தள்ளி நின்று 

உன்னை 

இத்தனை நாள் 

உள்ளத்

தவிப்பு தீர 

பார்த்துக் 

கொண்டிருந்தேன்..

 

தாடகை அவள் 

பொல்லாத 

கண்களிலிருந்து 

அந்த 

சிறு துளி 

சந்தோஷமும் 

தப்பிக்கவில்லை..

 

தடுத்துவிட்டாள் 

அணை போட்டு 

அந்த 

ஆனந்தத்தையும்

அரக்கி அவள்..!!

 

##################

 

உன்னை பாராமல்…..!!

 

 

அருணின் டைரியில்…

 

” மேடம் ப்ளீஸ்.. நித்திலாவை டிஸ்மிஸ் பண்ண வேண்டாம்.. தயவு செஞ்சு அவ இங்க கண்டினியூயஸா படிக்கறதுக்கு நீங்க அலவ் பண்ணனும்..” என்றேன் நான்…

 

“என்ன சொல்ற‌ அருண்? அது எப்படி இவ்ளோ பெரிய தப்பு பண்ணவளை அவ்வளவு ஈஸியா மன்னிக்க முடியும்? இவ பண்ண இதே தப்பை ஒரு பையன் பண்ணி இருந்தா இத்தனை நேரம் காலேஜை விட்டு டிஸ்மிஸ் பண்ணி அந்த நியூஸ்.. மீடியால எல்லாம் வந்து இருக்கும்.. இவ பொண்ணுங்கற காரணத்துனால அது சின்ன தப்புன்னு ஆயிடாது.. எதுக்கு இந்த தப்பை மன்னிக்கணும்? யார் செஞ்சாலும் தப்பு தப்பு தான்.. அதனால நித்திலாவை நிச்சயமா டிஸ்மிஸ் பண்ண தான் போறேன்..” தீர்மானமாக சொன்னார் கல்லூரி முதல்வர்..

 

“மேடம்.. என்னால ஒரு பொண்ணோட படிப்பு கெட்டு போனதா இருக்க வேண்டாம்.. நீங்க அவளை மன்னிச்சு விட்டுடுங்க.. ஆனா இன்னொரு முறை நீ என் பக்கம் வந்தா.. நான் மனுஷனா இருக்க மாட்டேன்..” நித்திலாவை பார்த்து சொல்லிவிட்டு அந்த அறையில் இருந்து வெளியேறி வந்து விட்டேன்..

 

அன்று நடந்த அந்த நிகழ்வில் ஏற்பட்ட அவமானத்தால் அதன் பிறகு அந்த கல்லூரியில் நித்திலாவின் மதிப்பு மிகவும் குறைந்து இருந்தது.. உள்ளுக்குள்ளே அந்த பழி உணர்ச்சியை வைத்திருந்த நித்திலா அதன் பிறகு என் அழகியை என்னிடம் காதல் சொல்ல சொல்லி அனுப்பி என் மனதை குளிர்வித்து தான் விட்டாள்.. அந்த ஒரு நிகழ்வுக்காகவே அவளை நான் மன்னித்து விட்டேன்..

 

ஆனால் அதன் பிறகு அவள் என்னை பழி வாங்குவதற்காக காத்துக் கொண்டிருந்தாள்.. அதனால்தான் இப்போது என் தேவதையிடம் என்னை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி அவள் மனதை மாற்றிக் கொண்டிருக்கிறாள்.. ஆனால் நானும் அதை தானே விரும்புகிறேன்.. அவள் என்னை விட்டு தள்ளி செல்ல வேண்டும் என்று.. அதனால் தான் அவள் சொன்ன கதை எல்லாம் உண்மை இல்லை என மறுத்து பேசாமல் அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டேன்..

 

எனக்கு இருந்த ஒரே கவலை என் தேவதை அந்த அரக்கியோடு சேர்ந்து இருப்பது தான்.. அவளுக்கு நித்திலாவால் எதுவும் துன்பம் வந்திடக் கூடாது என்று மனம் கவலையில் துடித்துக் கொண்டிருந்தது.. ஏனென்றால் எனக்குத் தெரியும் நித்திலா அவளிடம் காண்பிப்பது உண்மையான நட்பும் அக்கறையும் இல்லை என்று..

 

என் அஸ்வினி மீதும் அந்த நித்திலா பழி உணர்ச்சியை கொண்டிருந்தாள்.. எந்த நேரம் பாம்பாய் அவளைக் கொத்துவாள் என்று தெரியாது.. அவளால் என் தேவதைக்கு எந்த தீங்கும் நேராமல் என் தேவதையை அவளிடம் இருந்து காத்திருப்பேன்..

 

###############

 

டைரியை படித்த வைஷூ கண்கள் கலங்கி இருந்தது.. “ராமன் எப்படி ஏக பத்தினி விரதனோ அதே மாதிரி தான் என் அருணும்.. அஸ்வினி விரதன்.. அக்கா உங்களைத் தவிர வேற எந்த சிந்தனையுமே இல்லாம இருந்திருக்கான் அவன்.. இப்படி ஒருத்தனை விட்டுட்டு வரதுக்கு உங்களுக்கு எப்படிக்கா மனசு வந்தது? நிஜமா சொல்றேன்.. நான் அந்த பொண்ணா இல்லையேன்னு நான் ரொம்ப வருத்தப்பட்டேன் ஆரம்பத்துல.. ஆனா இப்ப அதையும் தாண்டி அவனுக்கு நீங்க கிடைக்கலையேன்ற வருத்தம் தான் ரொம்ப அதிகமா இருக்கு.. நீங்க அவனுக்கு கிடைச்சிருக்கணும் கா.. இதைவிட அழகான கலப்படமே இல்லாத அன்பை யாருமே யாருக்குமே காட்டி இருக்க முடியாது.. இவ்வளவு அன்பு வச்சிருந்தவன் தன் கிட்ட இருந்து உங்களை தள்ளி வெச்சு காப்பாத்த ட்ரை பண்ணது தான் ஏன்னு புரியவேயில்லை.. அந்த கேள்விக்கும் எனக்கு பதில் கிடைக்கணும்..” என்று சொன்னவளின் வார்த்தைகள் எதுவுமே தேஜஸ்வினியின் காதுகளில் விழவில்லை..

 

அவளை ஒரு பாதுகாவலன் போல் தள்ளி இருந்தே பார்ப்பதற்கு பழகி இருக்கிறான் அவன்.. தூரத்தில் இருந்தே தன் காதலை பொழிந்திருக்கிறான் அவன்.. நிச்சயமாக 100 சதவீதம் தான் அப்படி ஒருவனை விரும்பி விட்டு இன்னொருவனை மணந்திருக்க மாட்டோம் என்று அவள் திடமாக நம்பினாலும் அவன் வார்த்தைகளால் வடித்திருக்கும் அவனுடைய காதல் பொய் என்று வாய் திறந்து சொல்லவும் இந்த முறை அவளுக்கு மனம் வரவில்லை..

 

அப்படி அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போது அருண் லேசாக அசைந்து கொடுத்தான்.. 

 

அவனைப் பார்த்த விஷ்வா “அய்யோ சிங்கம் சிலிர்த்து எழுந்திருச்சு.. செத்தோம்டி.. வைஷூ” என்று சொல்ல அவளும் என்ன நடக்கப் போகிறதோ என்று பயந்தாள்..

 

அந்நேரம் சட்டென தேஜு விஷ்வா கையில் இருந்த மயக்க மருந்து தெளிப்பானை எடுத்து அருண் முகத்தில் லேசாக அடித்து விட்டாள்.. 

 

அருண் மறுபடியும் மயங்கி விட இருவரும் அவளை வினோதமாக பார்த்தார்கள்.. “அக்கா நீங்களா?” என்று கேட்க “எனக்கு இந்த டைரியை ஃபுல்லா படிக்கணும்.. படி..” என்று சொன்னவள் அந்த டைரியின் அடுத்த பக்கத்தை திருப்பி தேஜுவின் பின்னந்தலையை பிடித்து டைரிக்குள் அழுத்தி அவளை டைரியை படிக்கச் சொன்னாள்..

 

######################

 

அதற்குப் பிறகு இன்னும் இரண்டு மாதங்கள் சென்றன.. நித்திலா தினமும் அருணை பற்றி மாற்றி மாற்றி ஏதாவது ஒரு கதையை தேஜுவிடம் சொல்லி அவள் மனதில் அவன் மீது வெறுப்பை ஏற்படுத்தி கொண்டிருந்தாள்.. இது நடுவே சரண் தேஜூவிடம் நெருங்குவதற்காக அவளிடம் பல விதங்களில் பேசி சிரித்து வழிந்து கொண்டிருக்க தேஜுவுக்கு அவன் நடவடிக்கைகள் சிறிதும் பிடிக்கவில்லை..

 

அவன் பேசும் போது அது எதையும் கண்டுகொள்ளாமல் தவிர்த்துக் கொண்டே வந்தாள் அவள்..

 

சரண் நித்திலாவிடம் இதைப் பற்றி சொல்லி புலம்ப “உனக்கு என்ன அந்த தேஜூவை கவுக்கணும் அவ்வளவுதானே..? கூடிய சீக்கிரம் அதுக்கு ஏற்பாடு பண்ணிடலாம்.. இந்த முறையும் அந்த அருணை வச்சு ஒரு நல்ல ஆட்டம் ஆடி இதை முடிச்சு வைக்கிறேன்.. போன முறை அவனை இந்த காலேஜை விட்டு விரட்ட முடியல.. இந்த முறை அவனை காலேஜை விட்டு விரட்டல என் பேரு நித்திலா இல்ல.. எந்த சேஞ்சிங் ரூம்ல எனக்கு அவமானம் நடந்ததோ அதே சேஞ்சிங் ரூம்ல அந்த தேஜூ கையால அவனுக்கு அவமானத்தை வாங்கி தருவேன்..” என்று கருவினாள் நித்திலா..

 

அது டிசம்பர் மாத விடுமுறை காலம்.. அடுத்த நாள் கிறிஸ்துமஸ் விடுமுறை தினங்கள் தொடங்க இருக்க அன்று மாலை ஒரு சிறிய கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள் கல்லூரியில்.. 

 

தேஜூ நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தாள்.. அருண் எதிலும் கலந்துக் கொள்ளாமல் பார்வையாளர் பகுதியில் நின்றிருக்க அப்போது அவனுக்கு பின்னே பேச்சு குரல் கேட்டது..

 

சஞ்சீவும் அவன் நண்பன் கோகுலும் பேசிக் கொண்டிருந்தனர்.. “டேய்.. ஃபர்ஸ்ட் இயர் மேத்ஸ்ல தேஜூ இருக்கா இல்ல.. செம ஃபிகர்டா.. யாருக்கும் மடிய மாட்டேங்குறாளாம்.. பசங்க எல்லாம் அவ பின்னாடி அப்படி சுத்திக்கிட்டு இருக்காங்க..” 

 

கோகுல் சொல்ல சஞ்சீவ் “ஆமாண்டா.. நம்ம சரண் கூட அப்படி தான் சொல்லிக்கிட்டு இருந்தான்.. அந்த தேஜூ ஏதோ பிடி குடுத்து பேச மாட்டேங்கறா போல இருக்கு.. இன்னைக்கு அந்த கேர்ள்ஸ் டிரெஸ்ஸிங் ரூம்ல அவ டிரஸ் சேஞ்ச் பண்ணும் போது அவ அழகையாவது எப்படியாவது ரசிச்சிடுவேன்னு சொல்லிட்டு இருந்தான்டா அவன்..” என்றான்..

 

அதைக் கேட்ட அருண் பற்களை கடித்து கைகளை முறுக்கி உள்ளிருந்து அவர்களை அடித்து துவைத்துக் கொன்று போட வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டான்.. இப்போது அவர்களை அடித்தால் முழு விஷயம் என்ன என்று தெரியாமல் போய்விடும்.. என்று தன் கோபத்தை அடக்கி அவர்கள் பேசுவதையே தொடர்ந்து கவனித்தான்..

 

” என்னடா சொல்ற? அந்த ரூம்ல தான் எல்லா கேர்ள்ஸ்சும் இருப்பாங்களேடா” என்று கோகுல் கேட்க “ஆமாண்டா.. இப்போ நித்திலா அவங்க டிரஸ் சேஞ்ச் பண்ற ரூம்ல இருக்கா.. இன்னொரு பத்து நிமிஷத்துல தேஜூ ட்ரஸ் சேஞ்ச் பண்ண போகும்போது  மத்தவங்களை எல்லாம் கூட்டிட்டு அவ வெளிய வந்துருவா.. தேஜு உள்ள டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு இருக்கும்போது சரண் அந்த ரூமுக்கு போய் அவ அழகை ரசிச்சிட்டு அவ வெளியே வரும்போது அவளை கிஸ் பண்ணி ப்ரொபோஸ் பண்ண போறான்..” என்றான் சஞ்சீவ்..

 

அவர்கள் பேசியதை கேட்டவன் தன் தேவதை ஆபத்தில் இருக்கிறாள்.. அவளைக் காப்பாற்ற வேண்டும்.. என்ற சிந்தனை மட்டுமே ஓடிக் கொண்டிருக்க வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் உடனே அவசர அவசரமாக பெண்களின் உடை மாற்றும் அறைக்கு போனான்..

 

அந்த அறைக்குள் அவசர அவசரமாய்  போய் பார்த்தான்.. அங்கு ஒரு உடை மாற்றும் சிற்றறை மட்டும் மூடி இருக்க அறையில் வேறு யாரும் இல்லை.. காலியாக இருந்த அறையை கேள்வியோடு சுற்றி முற்றி பார்த்தவன் யாரும் இல்லை என்று தெரிந்தவுடன் வெளியே வர திரும்பினான்..

 

அப்போது சரண் அந்த அறைக்குள் நுழைய கோபத்தில் கண்கள் சிவக்க சரணின் சட்டையை பிடித்தான் அருண்..

 

 அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டவன் “என்ன தைரியம் இருந்தா இப்படி ஒரு வேலை பண்ண துணிஞ்சிருப்பே.. நானும் பொறுத்து பொறுத்து போனா ரொம்ப ஓவரா தான் போயிட்டு இருக்கீங்க..” என்று சொல்லிக்கொண்டே அவனை அடி பிளந்து விட்டான்..

 

இவர்கள் அடித்துக் கொள்ளும் சத்தம் கேட்ட தேஜு அவசர அவசரமாய் உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்து இருவரையும் பிரித்து விட முயன்றாள்..

 

 அதற்குள் அங்கு கூட்டம் கூடி விட அருணை நான்கு பேரும் சரணை நான்கு பேரும் பிடித்து ஒருவரிடம் இருந்து ஒருவரை பிரித்து விலக்க படாத பாடு பட அருணோ தன்னைப் பிடித்திருந்தவர்களிடமிருந்து திமிறிக்கொண்டு நேரே போய் சரணை இன்னும் அடி பின்னிக் கொண்டிருந்தான்..

 

அப்போது இருவருக்கும் நடுவில் வந்த தேஜூ அருணின் சட்டையை பிடித்து அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள்..

 

 “விடுடா.. எதுக்குடா அவனை அடிக்கிற? நீங்க சொல்லுங்க சரண்.. என்ன பண்ணான் இவன்? நீங்க எதுக்கு இங்க வந்தீங்க?” அருண் மேல் நம்பிக்கை இல்லாமல் சரணை கேட்டாள் தேஜூ..

 

“தேஜு.. நான் இந்த பக்கமா போயிட்டு இருந்தேன்.. அப்போ அவன் இந்த ரூம்குள்ள வந்து உன்னோட சேஞ்சிங் ரூம் கதவிடுக்கு வழியா நீ டிரஸ் மாத்தறதை பார்த்துட்டு இருந்தான் தேஜூ.. அதனாலதான் நான் அவனை அடிச்சேன்..” என்று சொல்ல தேஜுவோ அப்படியே அதிர்ந்த விழிகளோடு அவன் பக்கம் திரும்பி பார்த்தாள்..

 

அதற்குள் திமிறி கொண்டு போய் சரணை இன்னும் இரண்டு அடி அடித்தவன் “எதுக்குடா பொய் சொல்ற? கொன்னுடுவேன் டா உன்னை..” என்று சொல்ல “இது மாதிரி தான் தேஜூ.. நான் ஏன் அப்படி பார்த்தேன்னு கேட்டப்போ நான் அப்படித்தான் பார்ப்பேன்.. அவ வெளிய வந்தப்புறம் எல்லார் முன்னாடியும் அவளை கிஸ் பண்ணி பழி வாங்க போறேன்னு என்கிட்ட சொன்னான்.. ஏன் நீ இப்படி அநியாயம் பண்ற தேஜூக்குன்னு நான் கேட்டதுக்கு தான்.. “அவ என்னையே அடிச்சா இல்ல..? அதுக்கு திருப்பி அடிச்சு பழிவாங்க மாட்டேன்.. இப்படித்தான் நான் பழிவாங்க போறேன்..” அப்படின்னு சொல்லி என்னையும் அடிக்க ஆரம்பிச்சுட்டான் தேஜூ..” என்று அவன் சொல்ல அருணை இகழ்ச்சியோடு ஒரு பார்வை பார்த்தாள் தேஜூ..

 

“நீ இவ்ளோ கேவலமானவனா? இருடா.. இதை நான் சும்மா விட மாட்டேன்.. நான் உன் கிட்ட ஏற்கனவே சொல்லி இருந்தேன் இல்ல..‌ உன்னை பிரின்ஸ்பல் ரூமுக்கு கூட்டிட்டு போய் இன்னிக்கு உன்னை காலேஜை விட்டு டிஸ்மிஸ் பண்ண வைக்கிறேன்” என்று சொல்லி அருணின் சட்டையை பிடித்து தர தரவென்று அவனை இழுத்துக்கொண்டு கல்லூரி முதல்வர் அறைக்கு சென்றாள்..

 

இவர்களை பார்த்து கல்லூரி முதல்வர் “மறுபடியும் உங்களுக்குள்ள என்ன பிரச்சனை?” என்று கேட்க அவரிடம் விஷயத்தை சொன்னவள் “மேடம்.. நான்  என்னோட சேஞ்சிங் ரூம்ல டிரஸ் மாத்தறதை கதவிடுக்கு வழியா  பார்த்துட்டு இருந்தான்.. இதைவிட கேவலமான விஷயம் என்ன நடந்திருக்க முடியும்?” என்று கேட்டாள் தேஜு..

 

“எல்லாம் சரி தான் தேஜூ.. ஆனா உனக்கு எப்படி அது தெரியும்? யார் சொன்னா?” என்று கேட்டார் கல்லூரி முதல்வர்..

 

“எனக்கு சரண் தான் மேடம் சொன்னான் இவன் அப்படி பாத்துட்டு இருந்தப்போ  அவன் இவனை கேள்வி கேட்டிருக்கான்.. அதுக்கு சரணை போட்டு அடிச்சு இருக்கான்..” அருணை தீவிரமாக முறைத்துக் கொண்டு சொன்னவளை அவனும் பதிலுக்கு முறைத்தான்..

 

“மறுபடியும் சரண்.. நித்திலா.. தேஜு.. அவங்க ஒன்னு சொல்றாங்கன்னு எது சொன்னாலும் நீ ஏன் நம்பிட்டு வந்து என்கிட்ட கேட்கிறே..? நான் உனக்கு முன்னாடியே சொன்னேன்.. நான் தகுந்த ஆதாரமில்லாம எதுக்காகவும் யார் மேலேயும் ஆக்சன் எடுக்க முடியாது..” என்று சொன்னார்..

 

அப்போது அங்கே நித்திலாவுடன் வந்து நின்ற சரண் “மேடம்.. உங்களுக்கு ஆதாரம் தானே வேணும்..? இவன் கேர்ள்ஸோட சேஞ்சிங் ரூமுக்கு போனது அங்கே இருந்த சிசிடிவி கேமராவில ரெக்கார்ட் ஆயிருக்கும்.. நீங்க வேணா அதை பாருங்க.. அவன் போனதை பார்த்து சந்தேகப்பட்டு தான் அவன் பின்னாடி நான் போனேன்.. நீங்க அந்த கேமராவை செக் பண்ணிக்கலாம்..” என்றான்..

 

நித்திலாவும் சரணும் அருணை பார்த்து  விஷமமாக ஒரு புன்னகை புரிந்தார்கள்.. “மகனே.. இந்த முறை வசமாக சிக்கிக் கொண்டாயடா..” என்று கூறியது போல் இருந்தது அவர்களுடைய ஏளன பார்வை..

 

 

தொடரும்..

 

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!!  கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!!  இந்த யூடி பத்தியும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

“❤️சுபா❤️”

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!