தீஷிதனின் நெஞ்சில் சாய்ந்து அழுத சம்யுக்தா சில நிமிடங்களில் நிமிர்ந்து அமர்ந்தாள். அவள் நேராக நிமிர்ந்து அமர்ந்ததும் காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினான். சம்யுக்தாவிற்கும் அது தேவையாக இருக்க வாங்கிக் குடித்தாள். அவள் தண்ணீர் குடிக்கும் வரை அமைதியாக இருந்தவன், பாட்டிலை வாங்கி வைத்து விட்டு, “யுக்தா நீ அந்த பிரகாஷ் கிட்ட சவால் விட்ட மாதிரியே இன்னும் ஐந்து நாள்ல நம்மளோட கல்யாணம் இந்த ஊரே வியக்கும்படி நடக்கும்.. நீ எதையும் போட்டு குழப்பிக்க வேணாம்..” என்றான். அவனிடம் மறுத்துப் பேச முயன்றவள் உதடுகளில் தனது கையை வைத்துத் தடுத்தவன், “எதுவும் பேச வேணாம் யுக்தா ப்ளீஸ்.. எதுவா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம்..” என்று சொல்ல அவளது தலை தானாக சரி என்று அசைத்தது. “தட்ஸ் மை கேர்ள்..” என்றவன் காரை எடுத்தான்.
அவர்கள் அங்கிருந்து செல்வதைப் பார்த்துக் கொண்டு இருந்த பிரகாஷிற்கு கோபம் வந்தது. அங்கிருந்து தனது காரை எடுத்துக் கொண்டு அவன் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றான்.
……………………….…………………………
லேடிஸ் கிளப்பில் இருந்து வீட்டிற்கு வந்த லீலாவதி வித்யாவை அழைத்தார். “வித்யா.. வித்யா.. எங்க இருக்க? சீக்கிரமா இங்க வா..” என்று குரல் கொடுத்தவர் ஹாலில் இருந்த ஷோபாவில் உட்கார்ந்தார். அவரது அழைப்பு கேட்டாலும் அதை கவனத்தில் எடுக்காமல் இருந்தாள் வித்யா. சிறிது நேரம் அமைதியாக இருந்த லீலாவதி வேலைக்காரியை அழைத்துக் கேட்க, அவரோ “வித்யா பாப்பா அவங்க றூம்ல தான் மேடம் இருக்கிறாங்க..” என்றார்.
“என்ன றூம்லதான் இருக்கிறாளா? சரி நீ போ..” என்று அவரை அனுப்பி வைத்து விட்டு வித்யாவின் அறைக்கே சென்றார். அங்கே பெட்டின் மீது படுத்திருந்த வித்யாவிடம் வந்து, “வித்து என்னாச்சி? நான் அந்தக் கத்து கத்துறன் நீ என்னடானா இங்க படுத்திருக்க? என்ன நினைச்சிட்டு இருக்க நீ?”
“உன்கூட பேச பிடிக்கலைன்னு நினைச்சிக்கோங்க.. தயவு செய்து இங்க இருந்து போயிடுங்க..” என்று கோபமாக கூறிய வித்யாவின் கையைப் பிடித்து இழுத்தவர்,
“என்னடி வாய் ரொம்ப நீளுது.. இங்க பாரு நாளைக்கு உன்னை பொண்ணு பாக்க மாப்பிள்ளை வீட்ல இருந்து வர்றாங்க.. அதனால நாளைக்கு எங்கேயும் வெளிய போயிடாத..” என்றார். அதைக் கேட்ட வித்யா, “வாட்?” என்று கத்தினாள்.
அவள் கத்தியதை கவனிக்காதவாறு, “இங்க பாரு இந்த கத்துற வேலை எல்லாம் எங்கிட்ட வச்சிக்காத..”
“அம்மா நீங்க சொல்றதுக்கு எல்லாம் தலையாட்ட என்னால முடியாது.. எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்.. நான் அக்காவை கண்டுபிடிக்கணும்.. நீங்கதான் அவளைத் தேடவே இல்லை.. ஆனால் நான் உங்களை மாதிரி மனசுல ஈவிரக்கம் இல்லாம இருக்க முடியாது.. அடுத்தது நீங்க பாக்குற மாப்பிள்ளையை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியவே முடியாது.. அக்காவோட வாழ்க்கையை பாழாக்கின மாதிரி என்னோட வாழ்க்கையையும் அழிக்கப் பார்க்கிறீர்களா?” என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்த வித்யாவின் கன்னத்தில் பளார் என அறைந்தார் லீலாவதி.
“என்னடி நானும் பாத்துகிட்டே இருக்கேன்.. வாய் ரொம்பத்தான் நீளுது.. பிச்சிடுவேன் பிச்சு.. நாளைக்கு வரப்போற சம்மந்தம் எவ்வளவு பெரிய இடம்னு உனக்குத் தெரியுமா? பத்து தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடுற அளவுக்கு வசதி இருக்கு.. அங்க நீ மகாராணிபோல இருக்கலாம்.. உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்.. உனக்கு பிடிக்குதோ இல்லையோ உனக்கு அவர்தான் மாப்பிள்ளை.. இதை யாராலும் தடுக்க முடியாது..” என்றவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
…………………………………………………
தீஷிதனும் சம்யுக்தாவும் ஒன்றாக சேர்ந்து வருவதைப் பார்த்து பரந்தாமனுக்கு மனசுக்குள் மகிழ்ச்சியாக இருந்தது. சம்யுக்தா தனது முகத்தில் எதையும் காட்டிக் கொள்ள வேண்டாம் என முயன்றாலும் எப்போதும் அவளது மனதின் நிலையை கண்ணாடியாக காட்டும் அவள் முகம் இன்றும் உள்ளதை உள்ளவாறே காட்ட தவறவில்லை. அவளது முகத்தைப் பார்த்த பரந்தாமன் அவளிடம் எதுவும் கேட்காமல், தனது மகனைப் பார்க்க தீஷிதன் கண்களாலே பிறகு பேசுவதாக கூறினான். அவரும் அமைதியாக இருக்க, சம்யுக்தா அவளின் அறைக்குச் சென்றுவிட்டாள்.
சம்யுக்தா அங்கிருந்து சென்றதும் தீக்ஷிதன் தனது தந்தையை மேலே வருமாறு கூறி அவரை அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்றான். “தீஷி என்னாச்சு ஏன் சம்யுக்தா முகமே வாடிப்போய் இருக்கு.. எதுவும் பிரச்சனையா?” என்று பதற்றத்துடன் கேட்ட தந்தையைப் பார்த்தவன், “ஆமா அப்பா.. பிரச்சனை தான்..”
“நான்தான் சொன்னேன்ல்ல அவளுக்கு கொஞ்சம் டைம் வேணும்னு.. நீ தான் உன்னோட காதல சொல்ல போறேன் அப்படின்னு சொல்லி என்னை சம்யுக்தாவை கூட்டிட்டு போனே.. இப்போ என்னாச்சினு பாத்தல..”
“அப்பா பிரச்சனை என்னால இல்லை.. அந்த பிரகாஷாலதான் பிரச்சனை..”
“என்ன சொல்லுற பிரகாஷாலேயா? பிரகாஷ் எப்படி அங்க வந்தான்?”
“அது எனக்குத் தெரியல அப்பா.. நான் சம்யுக்தாக்கு ப்ரொபோஸ் பண்ணும் போது அந்த பிரகாஷ் வந்து என் கண்ணு முன்னாடியே சம்யுக்தாவை கேவலமா பேசிட்டான்.. ஆனா அவன் அப்படி பேசினதும் இதுவரைக்கும் பார்த்திராத ஒரு சம்யுக்தாவைப் பார்த்தேன்.. அப்படி ஒரு கோபம், வெறி அவ முகத்துல.. நீ என்ன வேணா பண்ணு நான் இவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டா.. அதுவும் அஞ்சு நாளைக்குள்ள எனக்கும் அவளுக்கு கல்யாணம்னு வேற அவர்கிட்ட சவால் விட்டா..” என்றான் புன்சிரிப்புடன்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பரந்தாமன், “என்ன சொல்ற தீஷி நிஜமா சம்யுக்தா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாளா?”
“அப்பா அவ கல்யாணம் பண்ணனும்னு சொன்னது ஒரு அவசரத்துல.. பிரகாஷ்கிட்ட சவால் விடணும்னு சொன்னது.. நிஜமா அவளுக்கு என்ன புடிச்சிருக்கானா அது எனக்குத் தெரியாது.. ஆனா இதுவும் நல்லதுதான் அப்பா.. முதல்ல எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கட்டும்.. அதுக்கப்புறம் அவளை நான் மாத்திடுறேன்..” என்ற மகனிடம்,
“தீஷி உங்களுக்கு கல்யாணம் செய்து வைக்க எனக்கு பரிபூரண சம்மதம் தான்.. நான் மறுபடியும் சொல்றேன் நீ எப்பவுமே அவளை காயப்படுத்தக் கூடாது.. அவளோட முதலாவது கல்யாணத்தைப் பத்தி பேசி அவளை கஷ்டப்படுத்திடாத..”
“அப்பா நான் அப்படி பண்ணுவேன்னு நீங்க நினைக்கிறீங்களா?” என்று ஒரு மாதிரியான குரலில் கேட்டான் தீஷிதன்.
“நீ நினைக்க மாட்ட தீஷி.. ஆனா உனக்கு கோபம் வந்தா நீ என்ன பேசுவேன்னு யோசிச்சு பேச மாட்டே.. உன்னோட கோபம் சம்யுக்தாவை எப்பவும் காயப்படுத்தக் கூடாது.. அதுதான் எனக்குப் பயம்..”
“அப்பா உங்களுக்கு தான் தெரியும்ல்ல நான் அப்படி பண்ணுவேனா?”
“தீஷி எனக்கு உன்னைப் பத்தி தெரியும்.. ஆனா உன்னோட கோபத்தின் அளவும் எனக்கு நல்லாத் தெரியும்.. உன்னோட கோபத்தை எப்போவும் நீ சம்யுக்தா மேல காட்டக் கூடாது..”
“நிச்சயமா அப்பா.. என்னோட கோபம் அவளை எப்பவுமே காயப்படுத்தாது..”
“சரி வெட்டிங் எப்படி பண்ணனும்னு பிளான் பண்ணி இருக்க?”
“ஆமா அப்பா.. நான் சம்யுக்தாவைப் பத்தி விசாரிக்கும் போது வித்யாபற்றியும் கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன்.. நான் வித்யாவை நாளைக்கு வர சொல்லலாம்னு இருக்கேன்.. பாவம் அக்காவைக் காணோம்னு அவதான் ரொம்ப உடைந்து போய் இருக்கா..”
“நல்லது தீஷி.. தங்கச்சி கூட இருந்தா சம்யுக்தாக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்ல..”
“கண்டிப்பா அப்பா..”
“சரிப்பா நீ போய் தூங்கு மீதிய காலைல பேசிக்கலாம்..”
“ஓகே அப்பா..” என்றவன் தனது அறைக்குச் சென்றான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Wow super divima