லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 60
பின் மண்டையில் அதிகமாய் வலி எடுக்க தலையைப் பிடித்துக் கொண்ட மலர் திரும்பி பார்க்க கீழே விழுந்திருந்த நால்வரும் மெல்ல எழுந்து அவளை வந்து பிடித்து எங்கேயோ இழுத்துச் சென்றனர்..
அவளுக்கு நிலைமை புரிய “டேய் விடுங்கடா..” என்று அவர்களிடம் எவ்வளவு திமிறினாலும் கொஞ்சம் கொஞ்சமாக அரை மயக்க நிலைக்கு சென்று கொண்டு இருந்தாள் அவள்..
ஆனால் மயக்கம் போட்டு விடக்கூடாது.. இவர்களிடமிருந்து எப்படியாவது தப்பி போக வேண்டும்.. என்று முயன்று கொண்டு இருந்தவள் பெரும் முயற்சிக்குப் பிறகும் அவர்களிடம் இருந்து தப்ப முடியவில்லை..
அவளை கீழே கிடத்தி மூன்று பேர் அவளை பிடித்துக் கொண்டிருக்க அவள் மேலாடையை அவள் மேலிருந்து நீக்கிய ஒருவன் மெல்ல அவள் கன்னத்தை வருட அவளோ முகத்தை திருப்பிக் கொண்டு “பொறுக்கி நாயே விடுடா என்னை.. பின்னாடி இருந்து அடிக்கிறீங்க.. ஆம்பளைங்களாடா நீங்க.. தூ..” என்று அவன் முகத்தில் காறி உமிழ அவள் கன்னத்தில் ஓங்கி அடித்திருந்தான் அவன் அடுத்த நொடி..
அதற்குள் இன்னொருவன் “அவளை அடிக்காதடா.. மயிலிறகை ஹேண்டில் பண்ற மாதிரி ஹேண்டில் பண்ணனும்.. நீ தள்ளு.. நான் பூந்து விளையாடுறேன் பார்..” என்றபடி மற்றொருவன் இடத்திற்கு வந்தவன் மெல்ல அவள் மேனியில் படக்கூடாத பாகங்களில் கை வைத்து வருட அப்படியே கூனிக்குறுகிப் போனாள் அந்த நொடி அவள்..
அவளுக்கு தன் மேனியில் ஏதோ புழு பூச்சி ஊர்ந்து நெளிவது போல் அருவருப்பாக இருந்தது.. எப்படியாவது அந்த மூவரின் பிடியில் இருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று அரை மயக்க நிலையிலும் போராடிக் கொண்டிருந்தாள் அவள்..
இந்தருக்கு எதிர்பார்த்ததை விட வேலை சீக்கிரம் முடிந்து விட தன் நண்பனிடம் அவன் வண்டியை கடன் வாங்கிக் கொண்டு அதில் வந்து கொண்டிருந்தவன் வழியில் ஆள் அரவமற்ற இடத்தில் மலரின் வண்டி நிற்பதை பார்த்து திடுக்கிட்டு சுற்று முற்றும் பார்த்தான்..
அதன் பிறகு அந்த பக்கத்தில் இருந்த புதரில் மலரின் சத்தம் கேட்க பதறிப் போய் அங்கே ஓடினான் அவன்..
அங்கே ஒருவன் மலரின் மேல் படுத்து அவளின் கற்பை சூறையாட முயற்சி செய்து கொண்டிருப்பதை பார்த்தவனுக்கு கொலை வெறியே பிடித்துப் போனது..
வேகமாக போய் அந்த ஆளை பிடித்து தள்ளியவன் நால்வரையும் சுழற்றி சுழட்டி அடித்து ஒரு வழியாக பதம் பார்த்திருந்தான்.. மலரை அடித்த அதே கல்லை எடுத்து நால்வரையும் அடித்து வெளுத்து அவர்கள் உடல் முழுவதும் ரத்தம் சிந்தி வலியில் துடிப்பதை பார்த்தும் அவனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை..
அவர்களை மேலும் குற்று உயரும் குழு இருமாய் அடித்து போட்டவன் மலரழகிக்கு தலையில் அடிபட்டு இருந்ததை பார்த்து அவளை கையில் அள்ளிக் கொண்டு தன் வண்டியில் முன்பக்கம் அமர வைத்து தன் அணைப்புக்குள் வைத்துக் கொண்டான்.. வண்டியை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு அதிவேகமாக சென்று இருந்தான்..
அங்கே அவளை பரிசோதித்தார் மருத்துவர் “ரொம்ப ஆழமான காயம் எல்லாம் இல்லை.. லேசா தான் அடிச்சிருக்காங்க.. ரத்தம் ரொம்ப போகல.. கட்டு போட்டு இருக்கோம்.. ஒன் ஹவர்ல சரியாயிடுவாங்க..”
மருத்துவர் சொல்லிவிட்டு போய்விட அறைக்குள் நுழைந்த இந்தரை பார்த்தவுடன் அவள் இயல்புக்கு மாறாக கேவி கேவி அழுதாள் மலரழகி..
“என்னம்மா ஆச்சு? ஏதாவது தப்பா நடந்துடுச்சா? அவங்க உன்னை.. அப்படி இருந்தாலும் பரவால்லடா.. விட்டு தள்ளு.. என்னை பொறுத்த வரைக்கும் நீ எப்பவும் அதே மலர் தான்.. என்னோட அழகி..” என்று தன்னை மறந்து அவளை தன் காதலி என உரிமை கொண்டாடி பேசத் தொடங்கியிருந்தான் இந்தர்..
“இல்லை இந்தர்.. அவங்க என்னை எதுவும் பண்றதுக்கு முன்னாடி நீ தான் வந்து அவங்களை எல்லாம் அடிச்சு போட்டியே.. எனக்கு தெரியும் டா.. எப்படியும் நீ வந்துவிடுவேன்னு.. மனசுக்குள்ள நீ எப்படியாவது வந்துடணும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்.. ஆனா அவனுங்க தொட்டதை நினைச்சாலே அருவருப்பா இருக்குடா.. இன்னும் கூட என் உடம்புல கம்பளி பூச்சி ஓடுற மாதிரி அப்படியே அவங்க தொட்ட இடத்தை எல்லாம் வெட்டி போட்டுக்கலாம் போல இருக்குடா.. என்னை எங்க எல்லாம் தொட்டாங்க தெரியுமா? என்னையே எனக்கு பிடிக்கலடா..”
“இங்க பாரு.. இன்னும் கொஞ்ச நேரம் நான் அங்க இருந்திருந்தேன்னா அவங்க எல்லாரையும் கொன்னே போட்டு இருப்பேன்.. அப்புறம் நீ கவலைப்பட்டு இருக்கவே தேவையில்லை..”
“அவங்களை எல்லாம் கொன்னு போட்டுட்டு நீ ஜெயிலுக்கு போயிட்டா அப்புறம் மிச்ச வாழ்க்கை என்னோட யாருடா வாழ்வா? என் வாழ்க்கை முழுக்க எனக்கு நீ வேணும்டா.. நீ மட்டும் தான் வேணும்.. நீ என்னுடைய இந்தர்.. எனக்கு மட்டும்தான் சொந்தம்.. என்னை விட்டுட்டு எப்பவுமே எங்கேயும் போகாதடா..” என்று சொன்னவள் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்..
அந்த அணைப்பில் இன்பமாய் அதிர்ந்தவன் “மலரு.. நிஜமாத்தான் சொல்றியா?”
“ஏன்டா உனக்கு சந்தேகமா இருக்கா? ஏன்..? உனக்கு என்னை பிடிக்கலையா? நான் உனக்கு வேணாமா?” அவனோடு தன் உரிமைக்காக சண்டை இட்டாள் அவள்..
“வேணும் தாண்டி.. ஆனா நான் ஒருத்தருக்கு சத்தியம் பண்ணி இருக்கேன்.. நீ படிப்பை முடிச்சு நல்ல வேலையில செட்டில் ஆகுற வரைக்கும் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு.. அதனால இப்போதைக்கு இந்த ப்ரொபோஸலை ஒரு ஆறு மாசம் தள்ளி வைக்கிறேன்.. நீ டாக்டரா ஒரு பெரிய ஹாஸ்பிடல்ல வேலை செய்ய ஆரம்பிக்கற அன்னிக்கு நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம்..”
“அப்படி யார்கிட்ட டா சத்தியம் பண்ணே?”
அவள் கேள்வியாய் பார்க்க “உங்க மாமா கிட்ட.. என் அண்ணன் கிட்ட.. ஆனாலும் அவரு உனக்கு இன்னொரு அப்பாவாவே மாறிட்டாருடி.. அவரால தான் இப்ப நீயும் என்னை லவ் பண்றேன்னு தெரிஞ்சும் ஒரு கிஸ்ஸுக்கு கூட வழி இல்லாம உக்காந்து இருக்கேன்.. இன்னும் சேர்த்து வச்சு ஆறு மாசம் கழிச்சு இருக்குடி மவளே உனக்கு” என்றான் ஏக்க விழிகளோடு..
அவள் தலையை ஆதுரமாய் வருடி “இங்க பாரு.. இன்னைக்கு நடந்ததெல்லாம் மறந்திடு.. நம்ம ரோட்ல போறோம்.. காக்காவோட எச்சம் நம்ம மேல விழுது.. அருவருப்பா தான் இருக்கும்.. அதுக்காக என்ன நம்ப செத்துடவா முடியும்..? அதை கழுவி போட்டுட்டு அடுத்த நாளிலிருந்து சந்தோஷமா போறது இல்ல.. அதே மாதிரி தான் அவனுங்களை மறந்துடு.. இனிமே உன் நினைப்புல இந்த ஆறு மாசம் படிப்பை முடிச்சுட்டு எப்ப பெரிய ஹாஸ்பிடல்ல டாக்டர் ஆவோம் அப்படிங்கறதில மட்டும் தான் இருக்கணும்.. என்ன ஓகேவா?”
அவன் ஆவலோடு கேட்க அவளோ தலையை இடவலமாய் ஆட்டி “ம்ஹூம்.. இல்ல.. எப்ப என் இந்தரோட எனக்கு கல்யாணம் ஆகும்ன்றத்துல தான் இருக்கும்..”
“நானும் காத்திருக்கேன் டி பேபி.. ரொம்ப காக்க வச்சிடாத என்னை..”
அவன் சொன்ன நொடி “நிச்சயமாய் காக்க வைக்க மாட்டேன்.. ஆனா ஒரு கிஸ் கூட தர மாட்டியா டா? தலையில அடி எல்லாம் பட்டு இருக்கு.. நான் பாவம் டா..” அவள் சொல்ல “வேணும்னா ஒன்னு பண்ணலாமா? நான் வேணா அண்ணாக்கு ஃபோன் போட்டு தரேன்.. நீ இந்தருக்கு ஒரு கிஸ் குடுக்கட்டுமான்னு கேட்டு பர்மிஷன் வாங்கு.. அதுக்கப்புறம் கிஸ் கொடுத்துக்கலாம். ஓகேவா?”
“அடிச்சீ தூ.. என்கிட்ட பேசாத.. போடா..”
அவள் கோவித்துக் கொண்ட நேரம் அந்த அறைக்குள் தீரன் மதி இருவரும் உள்ளே நுழைய “மதி.. பார்க்க பாவமா இருக்கு இல்ல..? ஒரே ஒரு கிஸ் பண்ணிக்கட்டும்.. விட்டுடலாமா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான் தீரன்..
மதி யோசித்தபடி “ஆமா.. பாவம் தீரா.. ஒரே ஒரு கிஸ் கொடுத்துக்கட்டுமே..” என்று சொல்லிவிட்டு “சரி அப்போ நம்ம வெளியில போயிட்டு ஒரு அரை மணி நேரம் கழிச்சு உள்ள வரலாம்..” என்று சொல்லிவிட்டு அறையின் வாசலை அடைவதற்குள் அங்கே இந்தரின் இதழோடு தன் இதழை அதிரடியாக சேர்த்து இருந்தாள் மலர்.
புன்னகையோடு மதியும் தீரனும் வெளியே வர “என்னங்க மேடம்.. புதுசா காதலிக்க ஆரம்பிச்சவங்களே முத்தம் கொடுக்குறாங்க.. எனக்கு தான் எதுவுமே இல்லை..”
“அப்படியே எதுவும் பண்ணாதவர் தான் நீங்க.. திருட்டு புருஷா.”. என்று அவனை சீண்டி விட “ஏய் ஒரு புருஷன் பண்றதெல்லாமாடி நான் பண்றேன்? அப்பப்போ ஒரு முத்தம்.. அப்பப்போ ஒரு ஹக்.. இதோட இந்த தீரன் சேடிஸ்ஃபை ஆகிட்டு இருக்கான்.. ஆனா இருக்குடி மவளே.. மெயின் பிக்சர் ரிலீஸ் அப்போ பாரு மாமா பர்ஃபாமென்ஸை.. யூ கேன் நெவர் எஸ்கேப் ஃப்ரம் தீரன்ஸ் லவ்”
ஆமாம்.. இப்போது ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தான் தீரன்.. மதி அவனை மாற்றி இருந்தாள்.. இயக்குனர்கள் தேடும் பிரபலமான கதாநாயகன் ஆகி இருந்தான் அவன்.. அவனை கதாநாயகன் ஆக்கி படம் எடுத்தால் தாங்கள் ஏமாறாமல் போட்ட முதலை விட மூணு மடங்கு பணத்தை எடுத்து விடுவோம் என்று எல்லா இயக்குனர்களுக்கும் அவன் மீது நம்பிக்கை இருந்தது..
தீரன் சொன்னதை கேட்டவள் கன்னம் சிவக்க களுக்கென சிரித்தாள் மதி.. “சிரிச்சிட்டா.. சிரிச்சு சிரிச்சு என்னை சாய்ச்சுடுவா.. இப்ப எனக்கு இன்னொரு ரூம் வேணுமே..” என்று தீரன் சொல்ல “அய்யய்யோ நான் வரலப்பா இந்த விளையாட்டுக்கு..” என்று அங்கிருந்து ஓடி இருந்தாள் மதி..
அடுத்த ஆறு மாதத்தில் சொன்னபடியே படிப்பை முடித்து பெரிய மருத்துவமனையில் குழந்தை நல மருத்துவர் ஆகியிருந்தாள் மலர்..
அன்று அவள் மருத்துவராக பணிக்கு சேர அடுத்த நாள் அவளுக்கும் இந்தருக்கும் திருமணம் செய்ய கோலாகலமாக ஏற்பாடாகி இருந்தது..
தீரனும் மதியும் ஓடியாடி வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. எங்கேயோ ஒரு தூண் மறைவிலோ ஒரு அறைக்குள்ளோ இழுத்து செல்ல சீண்டல்கள் புரிவதை மறக்கவில்லை அவன்..
இதற்கிடையில் பாண்டியும் பார்கவியும் மகிழ்ச்சியுடன் வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள் அவர்கள் இருவரோடும்..
அப்படி ஓடி ஆடிக் கொண்டிருந்தபோது திடீரென மதிக்கு தலை சுற்றி மயக்கம் வர தீரன் பதறிப்போய் அவளை அள்ளிக் கொண்டு ஒரு அறையில் இருந்த கட்டிலில் படுக்க வைத்தவன் மலரைக் கூப்பிட்டு அவளை பரிசோதிக்க சொல்ல தன் அக்காளை பரிசோதனை செய்தவளின் முகம் பிரகாசமாய் விரிந்தது..
தன் மாமனை முறைத்தவள் “என்ன வேலை பண்ணிட்டு இருக்கீங்க மாமா.. திருட்டுத்தனமா வேலை பண்ணிட்டு இப்ப அப்படியே கவலையோட உட்கார்ந்திருக்க வேண்டியது.. நல்லா இருக்கு உங்க நடிப்பு.. பெரிய ஹீரோன்னு அப்பப்போ காட்டிக்க வேண்டியது..” என்க அவனுக்கு ஒன்றும் புரியவில்லை..
“என்ன சொல்ற மலர்..”
“நீங்க திருட்டுத்தனமா பண்ண வேலை எல்லாருக்கும் தெரிய போகுதுன்னு சொல்றேன்.. கூடிய சீக்கிரம் உங்க காதலுக்கு சாட்சியா ஒரு குட்டி தீரனோ ஒரு குட்டி மதியோ வரப்போறாங்கன்னு சொல்றேன்.. ஆமா யாரோ எங்க கல்யாணத்துக்கு அப்புறம்தான் வாழ்க்கை ஆரம்பிப்போம்னு சொன்னதா ஒரு ஞாபகம்..”
கையை யோசிப்பது போல் வைத்துக் கொண்டு அவள் பேச இந்தரோ “சரி விடு பாவம்.. அவங்களும் எத்தனை வருஷம் தான் நமக்காக காத்துட்டு இருப்பாங்க.. “
“ஏய் ரெண்டு பேரும் ரொம்ப ஓட்டாதீங்க. நீங்கதானே எங்களை திட்டி கழுவி ஊத்தி வாழ்க்கையை ஆரம்பிங்கன்னு சொல்லி அட்வைஸ் பண்ணது.. இல்லனா இன்னும் ரெண்டு வருஷம் ஆனாலும் இந்த தீரன் வெயிட் பண்ணி இருப்பேன்.. எனக்கு என் மதி என் கூட இருந்தா போதும்..” என்றான் நெகிழ்வோடு..
“உங்களுக்கு உங்க மதி போதும்.. எங்களுக்கு அது போதுமா.. எங்களுக்கு குட்டி மதி.. குட்டி தீரன் எல்லாம் வேணும்.. அதனாலதான் அப்படி சொன்னோம்.. இப்ப கிடைச்சிருச்சு இல்ல.’.
இப்படி பேசிக் கொண்டே இருக்கும் போது மதியும் மெல்ல கண்ணை திறக்க அவளிடம் மலர் விஷயத்தை கூற அவளோ தீரனை தாவி அணைத்துக் கொண்டாள்..
தன் வயிற்றை தடவி பார்த்தவள் “நம்ம பாப்பா… நம்மளோட மூணாவது குழந்தை..” என்று தீரன் சொன்னதும் அவளும் “ஆமா.. மூணாவது குழந்தை..* என்றாள் நிறைவான முகத்தோடு..
எல்லோரும் முகம் சுருக்கி யோசனையோடு பார்க்க “உடனே எல்லாரும் டென்ஷன் ஆகாதீங்க.. அவங்க எங்க ரெண்டு பேரை தான் அவங்க குழந்தைங்கன்னு சொல்றாங்க.. நானும் இந்தரும் எப்பவும் அவங்களோட குழந்தைங்க தான்..” என்று சிரித்தாள் மலரழகி..
அதன் பிறகு திருமணம் இனிதே நடந்தது.. மலர் இந்தர் மட்டுமன்றி மதியழகியும் தீரனும் கூட புது மண தம்பதிகளாய் ஜொலித்திருந்தார்கள் அந்த திருமணத்தில்.. தங்களின் ஆறு வயது குழந்தையோடு வந்திருந்த பாண்டியும் பார்கவியும் அந்தக் குடும்பத்தில் ஒருவராக அந்த ஆனந்தத்தில் பங்கெடுத்துக் கொண்டார்கள்..
தமிழ்வாணன் அத்தனை நிகழ்வுகளுக்கும் முதிர்ந்த சாட்சியாய் அமர்ந்து தன் பிள்ளைகளின் மகிழ்ச்சியில் தானும் பேரானந்தம் கொண்டார்..
ஒரே குடும்பமாய் தீரன் தன்னவளோடு தன் வீட்டிற்குள் ஆறு வருடங்களுக்கு பிறகு மறுமுறை கிரஹப்ரவேசம் செய்தான்.. எல்லோரையும் நிற்க வைத்து ஊரிலிருந்து திருமணத்திற்கு வந்திருந்த அவனுடைய அத்தை உள்ளிருந்து ஆரத்தி எடுத்து அவர்களை வரவேற்க வரவேற்பறையில் எதிரே இருந்த சுவற்றில் அவனுடைய அன்னை தந்தையும் மதி மற்றும் மலரின் அன்னையும் பெரிய அளவில் நிழற்படங்களாய் புன்னகை முகத்தோடு அவர்களை வரவேற்று கொண்டிருந்தார்கள்..
பேரானந்த பெருவெள்ளமாய் அந்த வீட்டில் மகிழ்ச்சி மட்டுமே குடிகொண்டிருந்தது..
இவர்கள் குடும்பம் ஆல் போல் தழைத்து அருகு போல் வளர நாம் எல்லோரும் கூட வாழ்த்தி விடை பெறுவோம்.. நன்றி.. வணக்கம்.🙏