இயல் மொழி

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 40

அரண் 40 குண்டு ஹன்னிலிருந்து நொடிப் பொழுதில் பாய்ந்து சென்றது. குண்டு பாய்ந்த சத்தத்தில் அனைவரும் இறுகக் கண்களை மூடிக்கொண்டனர். அந்த குண்டு பாய்ந்து தாக்கிய நொடியில் “ஆஹ்ஹ்ஹ்..” என்ற பெரிய சத்தத்துடன் ரத்த வெள்ளம் அங்கு ஆறாகப் பெருகியது. துருவனின் உயிர் இதோ பிரிந்து விட்டது என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையே அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது. குண்டு ஹன்னின் முனையிலிருந்து பாய்ந்ததும் உடலில் இருந்த உயிரை அப்படியே உருவிக்கொண்டு சென்றது தான் ஆனால் […]

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 40 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 39

அரண் 39 “சத்தமாக பேசிக்கிட்டு இருந்த அப்பாவோட பேச்சு திடிர்னு நின்னுடுச்சு என்று படித்துக்கொண்டு இருந்த நான் வெளியே வந்து பார்த்தா அப்பா தரையில விழுந்து கிடக்கிறார் என்னால அவரோட அந்த கோலத்தை பார்க்க முடியல உடனே பதறிப் போய் அப்பா அப்பா என்று அவர்  பக்கத்துல போய் அவரை தொட்டுப் பார்த்தா அசைவே இல்லை என்னோட உடம்பு உதரத் தொடங்கிடுச்சு பயத்துல உடம்பெல்லாம் வியர்த்து கண் சொருக்கத் தொடங்குச்சு உடம்பில் உயிரே இல்லாதது போல ஜடமாக

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 39 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன்- 38

அரண் 38 ருத்ர பிரசாத்தின் அரைகூவலான பேச்சைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த துருவன் அவன் கூறும் விடயங்களை நன்றாக உள்வாங்கிக் கொண்டான். துருவனை முறைத்துப் பார்த்தபடி நெஞ்சில் இருக்கும் வஞ்சங்களை வாய் வழியாக கொட்டத் தொடங்கினான் ருத்ர பிரசாத். “உங்க அப்பன் தான் எங்க அப்பாவோட இந்த நிலைமைக்கு காரணம் அது உனக்குத் தெரியுமா..? உன்னோட உயர்திரு மரியாதை மிகு தனபாலுக்கு இது எல்லாமே தெரியும். ஆனா இருந்தும் அவர் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத பணத்துக்காக

முரணாய்த் தாக்கும் அரண் அவன்- 38 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -37

அரண் 37 வள்ளி எட்டிப் பார்த்ததும் கதிரை விழும் என்று சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. அந்தச் சத்தத்தை கேட்டு அவர்கள் இருவரும் கிட்டே நெருங்கி வர என்ன செய்வதென்று தெரியாமல் முழிகள் பிதுங்க, உடல் பயத்தில் உதற தனக்கு பிடித்த இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டிருந்தாள். அந்த முரடர்களோ இடுப்பில் சொருவி இருந்த நவீன ரக துப்பாக்கியை எடுத்து லோட் பண்ணிவிட்டு சத்தம் வந்த இடத்தை நோக்கி பதுங்கிப் பதுங்கி வந்தனர். அப்படியே மெதுவாக பின்னோக்கி

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -37 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -36

அரண் 36 வசுந்தரா நிதானித்து திரும்ப பெரிய காட்டெருமை போல உடல்வாகுவைக் கொண்ட கருத்த தேகம் உடைய ஒருவன் அவர்கள் அருகில் நெருங்கி வந்து நின்றான். வசுந்தரா அருகில் ஏதும் தற்காப்புக்காக கிடைக்குமா என்று தேட அவள் சற்றும் எதிர்பாராத சம்பவம் அங்கு நிகழ்ந்தேறியது. அந்த கரிய காட்டெருமை போன்ற அடியாள், “இங்க என்னடி பண்றீங்க..?” என்று உறுமிக்கொண்டு வள்ளியின் கேசத்தினை பற்றிப் பிடிக்க  வள்ளி அவனை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவனிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று புரியாமல்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -36 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 35

அரண் 35 வள்ளியிடம் தனது திட்டத்தினை ஒப்பித்து முடித்த வசுந்தரா அவளிடம் 100க்கு 300 தடவை ஜாக்கிரதை என்று கூறி வசுந்தராவின் காரில் ஏறி துருவனைத் தேடிப் புறப்பட்டனர். காருக்குள் ஏறி இருந்த இருவரும் இருந்த பின்பு காரை எடுக்கும் முன்பு வசுந்தரா வள்ளியைப் பார்த்து, “உன்னோட போன குடு வள்ளி..” என்று கேட்க, “என்னோடதா..?” என்று தனது ஹேண்ட் பேக்கில் இருந்த கைத்தொலைபேசியை எடுத்து தடுமாற்றத்துடன் கொடுத்தாள். அதனைப் பார்த்ததும் வசுந்தரா புருவம் சுருக்கி, “என்னது

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 35 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -34

அரண் 34. துருவன் நீண்ட நேர மயக்கத்தின் பின் கண்களை திறந்து மூடி பின் வெளிச்சம் பட்டு கண்கள் கூச மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். பின்பு மெதுவாக பட்டாம்பூச்சியை போல் இமைகளை அடித்த வண்ணம் திறக்க, எதிரில் அனைத்தும் மேகமூட்டங்கள் நிறைந்த இடமாக தென்பட, மீண்டும் தனது கண்களை நன்றாக மூடித் திறந்தவன், யாரோ அருகில் எதனையோ பேசியபடி இருக்க இவனது காதில் அது மெதுவாக விழுந்தது. “இவன உயிரோட வச்சிருக்கறது நம்மளுக்கு தான் ஆபத்து இவன்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -34 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 33

அரண் 33 நடப்பது ஒன்றும் அறியாமல் அற்புதவள்ளி தொலைபேசியில் சிரித்து பேசி மகிழ்ந்து கொண்டிருந்தாள். சில நிமிடங்களிலேயே யாரோ இருவர் வந்து கை தாங்கலாக துருவனை தூக்கிக்கொண்டு செல்ல, அந்த ஹோட்டலில் சில பேர் ரேகாவை சந்தேகத்துடன் நோட்டமிட்டனர். “மது அதிகமாக அருந்தியதால் போதை ஏறி நடக்க முடியாமல் இருக்கின்றார் அதனால் தான் தூக்கி செல்கின்றேன்..” என்று ஒருவாறு பல பொய்களை வாரி இறைத்து கூறி சமாளித்து விட்டு ஹோட்டலில் இருந்து வெளியே வந்து அவனை கருப்பு

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 33 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 32

அரண் 32   இருவரும் பேசியபடி வந்ததில் தங்களை மறந்து உணவு அருந்த வந்த ஹோட்டலைத் தாண்டிச் சென்று விட்டனர். அதன் பின்பே துருவனுக்கு தோன்றியது. “அச்சச்சோ நில்லு அற்புதம்..” “ஏங்க..?” “பேசிப்பேசியே ஹோட்டல் தாண்டி வந்துடோம் போல..” என்று கூறிவிட்டு அவளை மீண்டும் அதே பாதையில் திரும்பி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான். அதன் முகப்பைப் பார்த்ததுமே அற்புத வள்ளிக்கு ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன. அவ்வளவு அழகாக அந்த ஹோட்டல் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு பல மேசைகளும், கதிரைகளும்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 32 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 31

அரண் 31 குளியலறைக்குள் வள்ளியுடன் உள்ளே சென்ற துருவன் சும்மாவா இருப்பான் தனது காதல் லீலைகளில் திளைக்கத் தொடங்கியவன் அதிலிருந்து மீளவே மனமின்றி  இருந்தான். பின்பு வள்ளி துருவன் செய்த சேட்டைகளினாலும், குறும்புகளினாலும் மீண்டும் குளித்துவிட்டு இருவரும் வெளியே வந்தனர். வந்ததும் துருவன் நேரத்தை பார்க்க நேரம் ஒரு மணி எனக் காட்டியது. “என்ன அற்புதம் ஒரு மணி ஆயிடுச்சு நாம இன்னும் சாப்பிடவே இல்ல உனக்கு பசிக்கலையா..?” “இல்லங்க..” “இரு ரூமுக்கு சாப்பாட ஆர்டர் பண்ணி

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 31 Read More »

error: Content is protected !!