இயல் மொழி

முரணாய்த் தாக்கும் அரண் அவன் –

அரண் 30 அழைப்பினை துண்டித்து விட்டு திரும்ப துருவன் இமைக்காமல் அற்புதவள்ளியை பார்த்து கொண்டிருந்தான். துருவனின் எதிர்பாராத அந்தப் பார்வையின் வீச்சு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வள்ளிக்கு ஏதோ ஊடறுத்து செல்வது போல இருந்தது. அந்தப் பார்வையை எதிர்கொள்ள திராணியற்று அற்புதவள்ளி வெட்கத்துடன் தலைக்கவிழ அவளது கன்னச் சிவப்பைக் கண்டு சிரித்த வண்ணம், “என்னவாம் உங்க அத்தை..” அவன் கேட்கும் கேள்வி சிறிது நேரம் அவளது காதில் விழவே இல்லை காலையில் நடந்த அனைத்து விடயங்களும் […]

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 29

அரண் 29 கதவைத் திறந்ததும் அவனுக்கு அப்படி ஒரு இன்ப அதிர்ச்சி அவனாலேயே அவனது கண்களை நம்ப முடியவில்லை. கனவில் தோன்றிய அதே உருவம் தான் நேரிலும் நிற்கின்றதா அப்படி என்றால் நான் கண்ட கனவு பலித்து விட்டதா ஆம் அவன் உறக்கத்தில் இருக்கும்போது தனது மனதுக்குப் பிடித்த அந்த உருவம் தன்னருகே வந்து நின்று சிரித்து ஆசையாக கன்னத்தில் முத்தமிட்டு காதல் பரிபாசை பேசி தன்னுடன் விளையாடுவது போல கனவு கண்டான். அதை நினைவாக்குவது போல

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 29 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 28

அரண் 28 பிரிவால் துடித்த இருவரும் தங்களுக்குள் மலர்ந்த காதலை சிறிது சிறிதாக உணரத் தொடங்கினர். அது அவர்களுக்கே பெரும் ஆச்சரியமாக இருந்தது. துருவனுக்கு அங்கு வேலையே ஓடவில்லை. எந்நேரமும் அற்புதவள்ளியின் நினைவாகவே இருந்தது. அதனால் அவன் மீது அவனுக்கு கோபம் வந்தது. வேலையில் மனதை ஒருநிலைப்படுத்தாமல் இருக்க 20 நாட்களில் முடிய வேண்டிய வேலைகள் எல்லாம் தாமதமாகிக் கொண்டு போனது. அத்துடன் அவன் இந்தியா திரும்பிச் செல்வதற்கும் தாமதமாக எரிச்சலுடன், கோபமும் பொங்கி வழிந்தது. ‘வீட்டுக்கு

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 28 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன்-27

அரண் 27 துருவன் ஆவுஸ்திரேலியா செல்வதற்கு தனது உடைகளையும் வேறு பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருக்க அறைக்குள் நுழைந்த வள்ளி அதனைப் பார்த்துக் கொண்டே அருகில் உள்ள சோபாவில் போய் அமர்ந்தாள். துருவனுக்கும் அவள் இந்த ஒரு மாத பிரிவை எண்ணி கவலை கொள்கிறாள் என்று புரிந்தது இருந்தும் அவளிடம் இதைப் பற்றி பேசி மேலும் வருத்தப்பட வைக்காமல் அவள் போக்கிலேயே அவளை விட்டு விட்டான். துருவன் எதுவும் பேசாமல் தனது வேலையிலேயே கண்ணாக இருக்க துருவனின்

முரணாய்த் தாக்கும் அரண் அவன்-27 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 26

அரண் 26 இருவரும் படிகளில் இறங்கி கீழே செல்ல அங்கு அவர்களுக்காக காத்திருந்த வைதேகியும், தனபாலும் உண்டு முடித்துவிட்டு எதையோ அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் வந்தவுடன் அமர வைத்து வைதேகி இருவருக்கும் உணவு பரிமாற அற்புதவள்ளிக்கு சும்மாவே சொல்லத் தேவையில்லை இன்று முழுவதும் உண்ணவே இல்லையே அவளுக்கு அடங்காத பசி எடுத்தது. உடனே உணவைக் கண்டதும் வாய்க்குள் அள்ளி எறிந்தாள். துருவன் அவள் உணவு உண்பதை பார்த்து தலையசைத்து சிரித்து விட்டு அன்னையிடம், “அம்மா

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 26 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 25

அரண் 25 வீடு வந்து சேர்ந்ததும் காரில் இருந்து இறங்கியவன் சற்று நேரம் காரில் சாய்ந்த படி யோசித்துக் கொண்டிருந்தான். ‘நான் எப்படி அற்புதத்தின் முகத்தினை எதிர் நோக்குவேன் அவளது முகத்தை பார்க்கவே எனக்கு வெட்கமாக இருக்கிறது இப்படியா நடந்து கொள்வேன் என்னதான் கோபமாக இருந்தாலும் அப்படி வார்த்தையை நான் கூறியிருக்கக் கூடாது என்னை முழுதாய் நம்பியதால் தானே அவளது ஆசைகள், கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் என்னிடம் கூறினாள் அதை வைத்து நான் அவளை குத்திக்காட்டி கோபம்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 25 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 24

அரண் 24 ஜோசப்பிடமிருந்து பதிலை எதிர்பார்த்த வண்ணம் அனைவரும் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் குரலை சேருமிக் கொண்டு, “நான் சொல்றது எல்லாமே உண்மைதான் நீங்க இனிமே எவ்வளவு அடிச்சாலும் என்னால இந்த வலியைத் தாங்க முடியாது இனிமேல் அடிக்கிறதுக்கு பதிலா என்னை கொன்னுடுங்க..” விஷயத்தை நேரடியாக சொல்லாமல் ஜோசப் உளறிக் கொண்டிருக்க துருவனுக்கு பொறுமை காற்றில் பறந்து போனது. “வாயைத் திறந்து முதலில் நடந்த விஷயங்களை ஒன்னையும் மறைக்காம அப்படியே  சொல்லு அப்புறம் உன்னை

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 24 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 23

அரண் 23 கண்ணுக்கு முன்னே ஒரு சடலத்தை பார்த்ததும் இருவருக்கும் மனதுக்குள் சிறு பயன் தொற்றிக் கொண்டது. உடனே துருவன் அழைப்பெடுத்து போலீஸுக்கு அறிவித்தான். சிறிது நேரத்திலேயே சனக்கூட்டங்கள் அங்கு கூடத் தொடங்கின. 10 நிமிடங்களில் போலீசஸும் அங்கு வந்து சேர துருவனும், வேந்தனும் அவ்விடத்தை விட்டு வெளியேறினார். வேந்தன் துருவனை விசித்திரமாக பார்த்து, “எப்படி பாஸ் அவங்க உள்ள தான் இருக்காங்கன்னு கண்டுபிடிச்சீங்க..?” என்று கேட்க, “சரோஜா அம்மா சைக்கிள்ல தான் வேலைக்கு வாரவங்க அவங்களோட

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 23 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -22

அரண் – 22 உடனே தனது செக்ரட்டரி வேந்தனை வரும்படி அழைத்த துருவன் வேட்டையாடும் வேங்கையைப் போல தனது ஆபீஸ் ரூமுக்குள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். நடப்பது யாதென புரியாமல் வேகமாக அறைக்குள் நுழைந்த வேந்தன் துருவனின் ஆவேசமான நடையைக் கண்டு ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போய் வாசலிலேயே நின்றான். இத்தனை வருடங்களாக துருவனிடம் வேலை புரிபவனுக்கு துருவனின் சிறு கண் அசைவில் கூட மாற்றம் ஏற்பட்டாலே அறிந்து கொள்ளும் அளவுக்கு மிகவும் நுண்ணிப்பாக அவனுடன்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -22 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 21

அரண் 21 அவன் செல்வதையை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவனது செக்கரட்டரி வேந்தனிடம், “என்ன வேந்தன் இது இப்படி நடந்துக்கிட்டா எப்படி..? அவர் கேட்டதுல என்ன தப்பு..? இங்க நாங்க பல நூறு மயில் தூரத்தில் இருந்து மீட்டிங்க்கு வந்தா இவர் என்னவோ விக்ரமாதித்தன் வேதாளம் கதை சொல்றாரு. இது சரிப்பட்டு வராது நீங்க துருவன்கிட்ட நேரடியாக போய் இந்த விஷயத்தை பற்றி சொல்லி புரிய வைங்க ஆனா இனிமேல் உங்களோட பிசினஸ் செய்வோம்னு நீங்க கனவிலும்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 21 Read More »

error: Content is protected !!