ஸ்ரீ வினிதா

Avatar photo

22. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 22 தன்னுடைய அலைபேசியோடு வெளியே வந்த மோஹஸ்திராவிற்கு பதற்றத்தில் கரங்கள் நடுங்கத் தொடங்கின. உண்மையை மட்டுமே கூறியிருந்தால் இந்தப் பிரச்சனையே வந்திருக்காது என எண்ணி தன்னையே நொந்து கொண்டவள் அலைபேசியில் அரவிந்தனின் இலக்கத்தை அழுத்தி அவனுக்கு அழைப்பு எடுக்க அவனோ அவளுடைய அழைப்பை ஏற்கவே இல்லை. மீண்டும் மீண்டும் அவனுக்கு முயன்று கொண்டே இருந்தவள் ஒரு கட்டத்தில் சோர்ந்து போனவளாய் அவனுடைய அலைபேசி இலக்கத்தை வெறித்துப் பார்த்தாள். “ஓ மை காட்.. இப்போ அங்க […]

22. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

21. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 21 தந்தை கூறியதை எவ்வளவோ மறுத்துக் கூற முயன்றும் முடியாது பரிதாபகரமாக தோற்றுப் போனாள் மோஹஸ்திரா. அவளுக்கோ அந்த ஏசி அறையிலும் வியர்த்து வழியத் தொடங்கியது. உடல் நிலை இவ்வளவு மோசமாக இருந்த போதும் கூட தன்னுடைய திருமணத்தைப் பார்த்து விட வேண்டும் என தந்தை கெஞ்சிக் கேட்டது அவளுடைய மனதை கசக்கிப் பிழிந்தது. நிஜமாகவே அரவிந்தன் அவளோடு வந்திருந்தால் அக்கணமே அவருடைய மன நிம்மதிக்காக திருமணத்தை அவரின் முன்பு முடித்திருப்பாள் அவள். ஆனால்

21. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

20. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 20 ஷர்வாதிகரனின் முகத்திலோ புன்னகை நிலைத்திருந்தது. அரவிந்தனின் பெயரைச் சொல்லி தன்னைக் கூப்பிடக்கூடாது என அவன் கட்டளை போல் கூறியதும் அவளுடைய முகம் சட்டென மாறிய விதத்தை எண்ணி மீண்டும் அவனுடைய முகத்தில் புன்னகை பெரிதாக விரிய தன் தலையை இடம் வலமாக அசைத்து அந்த நினைவை தன்னை விட்டு விலக்க முயன்றாள் அவன். அவள் அங்கிருந்து சென்றதும் அறைக் கதவைப் பூட்டிவிட்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான். இப்போதெல்லாம் அடிக்கடி அவளுடைய கண்ணீரைக்

20. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

19. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 19 வீட்டுக்குள் நுழைந்த அடுத்த கணமே தன் தந்தையைத் தேடி விரைந்து அவருடைய அறைக்குள் மோஹஸ்திரா நுழைய அவளைப் பின்தொடர்ந்து வந்த ஷர்வாவும் அந்த அறைக்குள் நுழைந்தான். உள்ளே நின்ற வைத்தியரோ அவர்களுக்கு தனிமையைக் கொடுத்து விட்டு அந்த அறையை விட்டு வெளியே சென்று விட படுக்கையில் தளர்ந்து போய் சோர்வாக படுத்திருந்த தன் தந்தையைக் கண்டு முற்றிலுமாய் உடைந்து போனாள் அவள். சில தினங்களுக்குள் அவருடைய உடலில் இப்படி ஒரு மாற்றமா..? மிகப்

19. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

18. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 18 தன்னுடைய தந்தையின் உடல்நிலை இன்னும் இன்னும் மோசமாகிக் கொண்டிருப்பதை அலைபேசியின் வாயிலாக அறிந்து கொண்டவள் துடித்துப் போனாள். எவ்வளவு சீக்கிரமாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு கிளம்ப முடியுமோ அதற்கான ஆயத்தங்களை வேகமாகச் செய்யத் தொடங்கினாள் மோஹஸ்திரா. அப்பாவின் உடல்நிலை பற்றிய தவிப்பிலும் தனிமையின் அழுத்தத்திலும் அவள் அதிகமாய் தடுமாற அவளுடைய பாதி வேலைகளை இலகுவாக்கிக் கொடுத்தான் ஷர்வா. அமெரிக்காவிற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை அவனே செய்து முடித்திருக்க அடுத்த நாள் காலையிலேயே அவர்கள் கிளம்புவது உறுதியாகிருந்தது.

18. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

17. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 17 ஷர்வாவின் மனமோ வெகுவாக தடுமாறத் தொடங்கியிருந்தது. தன்னை மீறி மனம் பேராசை கொள்வதை அவனால் தடுக்க இயலவில்லை. இப்போதெல்லாம் வைரத்தை கண்டுபிடிப்பதை விட அவனுடைய கண்கள் ரசிக்கும் மோஹஸ்திராவே அவனுக்குத் தன் பரம்பரை வைரத்தை விட விலை மதிப்பாகத் தெரியத் தொடங்கி இருந்தாள். ஆனால் அடுத்த கணமே அவள் இன்னொருவனின் காதலி என்ற எண்ணம் அவனுடைய மனதுக்குள் எழுந்து விட மனதால் துடிதுடித்துப் போவான் அவன். அவன் நினைத்தால் ஒரே நாளில் அவளைத்

17. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

16. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 16 காவல் அதிகாரிகள் தங்களுடைய விசாரணையை முடித்துக் கொண்டதன் பின்னர் அந்தப் பார்ட்டி நடந்த ஹோட்டலை விட்டு மோஹஸ்திராவின் வீட்டிற்கு அரவிந்தனும் ஷர்வாவும் வந்து சேர்ந்தனர். மோஹியோ மிகவும் உடைந்து போயிருந்தாள். அத்தனை பேர் கூடியிருந்த ஒரு இடத்தில் ஒரு பெண்ணை நாசம் செய்வதற்கு எப்படி இவ்வளவு தைரியம் அந்தக் கயவனுக்கு வந்தது.? அவளுக்கோ நினைக்க நினைக்க மனம் தாளவில்லை. அந்தப் பெண்ணுடைய உயிரைக் கூட காப்பாற்ற முடியாமல் போனதை எண்ணி வெகுவாக காயப்பட்டுப்

16. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

15. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 15 வைரத்தை திருடியவன் வைரத்தை திருட்டுக் கொடுத்தவன் அந்த வைரத்தை கைப்பற்றத் துடிப்பவன் என அனைவரும் அந்தப் பார்ட்டி நடக்கும் இடத்தில் கூடியிருந்தனர். ஷர்வாவின் பார்வையோ அரவிந்தனுடன் இணைந்து ஆடிக்கொண்டிருந்த மோஹியின் மீது தொடர்ந்து நிலைத்துக் கொண்டிருந்தது. வீராவின் பார்வையும் அவள் மீது தான் நிலைத்திருந்தது. அரவிந்தனோ தன்னுடைய காதலியுடன் ஆடிக் கொண்டிருந்தாலும் கூட தன்னுடைய முழுக் கவனத்தையும் தங்களுக்கு அருகே வந்து செல்பவர்களின் மீது பதித்திருக்க ஒவ்வொரு நொடியும் கூட அவனுக்கு யுகமாகவே

15. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

14. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 14 “இப்போ எதுக்காக என்ன அமைதியா இருக்கச் சொல்ற…? உன்ன சீண்டினவன சும்மா விட சொல்றியா..? என் ரத்தம் கொதிக்குது பேபி டால்.. எந்தக் கை உன்னத் தப்பா தொட்டிச்சோ அந்தக் கைய உடைச்சு ஆத்துல எறிஞ்சாதான் என் மனசு அமைதி அடையும்.. அந்த ஷர்வாக்கு இந்த அரவிந்தன் எப்பேற்பட்டவன்னு காட்டிட்டு வரேன்…” எனக் கோபத்தோடு அங்கிருந்து கிளம்பியவனின் கரத்தை இறுகப்பற்றி நிறுத்தினாள் மோஹஸ்திரா. “உனக்கு எவ்வளவு கோபம் இருக்கோ அதே கோபம் எனக்கும்

14. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

13. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 13 எத்தனையோ மில்லியன் டாலர்கள் பெறுமதி வாய்ந்த வைரம் பதிக்கப்பட்ட அந்த கிரீடத்தை அலட்சியமாகத் தன் கரத்தில் வைத்திருந்தான் அவன். அவன் முகம் முழுவதும் சீற்றத்தில் இறுகிப் போய் இருந்தது. எவ்வளவு சிரமப்பட்டு இந்த வைரத்தை திருடி வந்தும் இதை எங்கும் விற்க முடியாதுள்ளதே என எண்ணி நொந்து போயிருந்தான் அவன். ஷர்வாதிகரன் வைரம் தொலைந்ததைக் கண்டுகொண்ட அடுத்த நிமிடமே காவல்துறை அதிகாரி தொடக்கம் சிபிஐ வரை மற்றும் வைர வியாபாரிகள் என அனைவரிடமும்

13. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

error: Content is protected !!