காதலோ துளி விஷம் 💧

22. காதலோ துளி விஷம்

விஷம் – 22 இருள் சூழ ஆரம்பித்த அழகிய மாலை நேரம் அது. யாழவனின் பால்கனிக் கதவு திறந்திருந்ததன் விளைவால் தெளிவான சந்திர ஒளியில் அந்த அறை மெலிதாக மினுமினுக்க, மெழுகுவர்த்தியின் மெளன அலைகளில் இருவரின் நிழல்களும் சிருங்கார ராகமாக ஒன்றோடொன்று கலந்து உருகின. கீழ் உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டாள் அவள். அவளுக்கோ அவஸ்தையாக இருந்தது. முன்பு போல அவனுக்குக் கட்டுப்பாடு விதித்து அவனைத் தள்ளி நிறுத்துவதற்கு இப்போது முடியாது அல்லவா..? அவளின் ஒட்டுமொத்த உரிமையாளனாக […]

22. காதலோ துளி விஷம் Read More »

21. காதலோ துளி விஷம்

விஷம் – 21 “மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்” என்ற மந்திரத்தை புரோகிதர் உச்சரிக்க அந்தப் பொன் தாலியை எடுத்து தன்னுடைய சரிபாதியாக மாறப் போகின்றவளின் கழுத்தில் கட்டினான் யாழவன். அவனுடைய கரங்களில் ஒருவிதமான நடுக்கம். இன்று இந்தக் கல்யாணம் சரி வருமா என அவள் கேட்ட கேள்வியில் அவன் ஆடித்தான் போய்விட்டான். மூன்று முடிச்சுகளை அவளுடைய கழுத்தில் போட்டு முடித்தவனுக்கு நெஞ்சம் காதலில் விம்மியது.

21. காதலோ துளி விஷம் Read More »

20. காதலோ துளி விஷம்

விஷம் – 20 அந்த அறையில் இருந்த குளியலறைக்குள் நுழைந்து உள் பக்கமாக கதவைப் பூட்டிக் கொண்டவளுக்கு அவமானத்தில் அழுகை அதிகரித்தது. நடந்த எதையும் நம்ப முடியாமல் விழிகளை மூடி நின்றவளுக்கு இதயத்தின் அதிவேகமான துடிப்பு அடங்கவே இல்லை. ஒரு ஆணிடம் புடவை கட்டிக் கொள்வதா? என்ன விதமான கலாச்சாரம் இது.? வருங்காலக் கணவனான யாழனுக்குக் கூட அவள் அந்த உரிமையை இப்போது வழங்க மாட்டாளே. அப்படி இருக்கும் போது எனக்கு யாரென்றே தெரியாத ஒருவனை என்

20. காதலோ துளி விஷம் Read More »

19. காதலோ துளி விஷம்

விஷம் – 19 எட்டு நாட்களின் பின்பு. அழகிய இரவுப் பொழுது அது. நீர்வீழ்ச்சி நீரைக் கொட்டுவது போல நடுவானில் வெண்மையைக் கொட்டிக் கொண்டிருந்தது அந்த அழகிய முழு நிலவு. அந்த முழு நிலவைச் சுற்றி இருந்த நட்சத்திரங்களோ சிறு தீபங்கள் ஏற்றி வைத்தாற் போல வானத்தை ஜொலிக்கச் செய்து கொண்டிருந்தன. அந்த இரம்யமான பொழுதில் யாழவனின் அழைப்புக்காக தன்னுடைய வீட்டிற்கு வெளியே இருக்கும் மரத்தின் கீழே அலைபேசியுடன் அமர்ந்திருந்தாள் அர்ச்சனா. அவளால் எதையுமே நம்ப முடியவில்லை.

19. காதலோ துளி விஷம் Read More »

18. காதலோ துளி விஷம்

விஷம் – 18 காலையில் நேரத்திற்கே வேலைக்கு வந்த அர்ச்சனாவின் விழிகளோ ஆவலாக தேடியதென்னவோ யாழவனை மட்டும்தான். அவன் இன்னும் மருத்துவமனைக்கு வரவில்லை என்பது புரிய தன் தலையில் தானே தட்டிக் கொண்டவள், ‘ரொம்ப அலையிறோமோ..?’ என எண்ணிச் சிரித்தபடியே தன் வேலையைத் தொடங்கி விட சற்று நேரத்தில், “அர்ச்சனா சார் உன்னை வந்து மீட் பண்ணச் சொன்னாரு..” என டாக்டர் ஒருவர் வந்து கூற அவளுக்கோ இதழ்களுக்குள் புன்னகை. வந்துவிட்டான் என மனதிற்குள் எண்ணிக் குதூகலித்தவள்

18. காதலோ துளி விஷம் Read More »

17. காதலோ துளி விஷம்

விஷம் – 17 காபி போடுவது ஒன்றும் அவளுக்குப் புதிதல்ல. எத்தனையோ முறை இதே சமையலறைக்குள் எண்ணற்ற காபிகளை அவள் தயாரித்திருக்கிறாள். ஆனால் இன்று தன்னவனுக்கு முதல்முறையாக கையால் தயாரித்துக் கொடுக்கப் போகின்றோம் என்றதும் பார்த்துப் பார்த்து தேன் சேகரிப்பது போல காஃபியை தயாரித்தவள் அந்த காபி கப்பை எடுத்துக்கொண்டு ஹாலுக்குள் நுழைந்தாள். எந்த பந்தாவும் இன்றி தன் அன்னையுடன் நிதானமாகப் பேசிக் கொண்டிருந்த யாழவனைப் பார்த்தவளுக்கு நெஞ்சம் நெகிழ்ந்தது. இன்னும் அதிகமாக அவனைப் பிடித்தும் கொண்டது.

17. காதலோ துளி விஷம் Read More »

16. காதலோ துளி விஷம்

விஷம் – 16 தன்னுடைய அறைக்குள் இருந்த அர்ச்சனாவிற்கோ இன்று நடந்ததை எல்லாம் எண்ணி உடல் சிலிர்த்தது. யாழவனைப் பார்த்து முழுதாக ஒரு வாரம் கூட முடியவில்லை அதற்குள் இப்படி என் இதயத்தை் திறந்து விட்டானே. அவன் முத்தமிட்ட உதடுகளை வருடிப் பார்த்தவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. ‘ஐயோ பயந்து போய் மயங்கி வேற தொலைச்சிட்டேன்.. என்ன பத்தி என்ன நினைச்சிருப்பாரோ தெரியலையே..’ அவளை நினைத்து அவளுக்கே சங்கடமாக இருந்தது. அதே நேரம் “அர்ச்சனாம்மா இவ்ளோ நேரம்

16. காதலோ துளி விஷம் Read More »

15. காதலோ துளி விஷம்

விஷம் – 15 யாழவனின் நெஞ்சம் வெகுவாக நெகிழ்ந்து போயிருந்தது. அர்ச்சனா என்றால் அவனுக்கு சும்மாவே பிடிக்கும். இன்று அவள் அவனுக்காக துடித்ததைப் பார்த்ததும் அவனுக்கோ உயிர் உருகி வழிந்தே விட்டது. அந்த நொடியே அவளை இறுக அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவனுக்குள் எழுந்து விட அடுத்த கணம் அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன் அவளை அணைத்ததோடு மட்டுமின்றி அவளுடைய மென்மையான சிவந்த இதழ்களில் தன்னுடைய உதடுகளையும் அழுத்தமாக புதைத்துக் கொண்டான். கட்டி அணைப்பதற்கே

15. காதலோ துளி விஷம் Read More »

14. காதலோ துளி விஷம்

விஷம் – 14 அங்கே அவள் ஒருத்தி இருப்பதையே கவனத்திற் கொள்ளாது அவன் அணிந்திருந்த ஷார்ட்ஸின் மீதும் அவன் கையை வைக்க அவளோ அலறியே விட்டாள். கொஞ்சம் கூட லட்ஜை இன்றி மொத்த ஆடையையும் இக்கணமே கழற்றி விடுவானோ எனப் பயந்து போனவள் அலறியவாறு திரும்பி நின்று விட, அவளையும் தன்னையும் குனிந்து பார்த்தவன் “என்னாச்சு..?” என எதுவுமே பெரிதாக நிகழாததைப் போல இயல்பாகக் கேட்டான். அவனுடைய கேஷுவலான கேள்வியில் அவளுக்குத்தான் ஐயோ வென்றிருந்தது. “என்ன இவ்வளவு

14. காதலோ துளி விஷம் Read More »

13. காதலோ துளி விஷம்

விஷம் – 13 அன்று மாலை நேரத்திலேயே தன்னுடைய வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டு விட்டாள் அர்ச்சனா. அவளுடைய நேத்திரங்கள் வீதியில் பதிந்திருந்தாலும் கூட அவளுடைய எண்ணங்கள் முழுவதும் யாழவனையே சுற்றிக் கொண்டிருந்தன. ‘மூன்று நாட்களுக்கு முன்பு என்னைத்தானே திருமணம் செய்யக் கேட்டிருந்தான்..? நான் மறுத்ததும் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்ய ஒத்துக் கொண்டான் போலும்.’ ஏனோ கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது. கண்களைத் தாண்டி கண்ணீர் கன்னத்தில் வழிந்தே விட திகைத்து விட்டாள் அவள்.

13. காதலோ துளி விஷம் Read More »

error: Content is protected !!