அரிமா – 1
அன்று…. கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் ஜனவரி 1 , 1986ஆம் ஆண்டில் விடியல் நெருங்கியும் உறங்கிக்கொண்டிருந்த மனிதர்களை எப்படி எழுப்புவது என்ற தீவிர யோசனையுடன் உக்கிரமாக உதித்துக் கொண்டிருந்தான் ஆதவன், அவனது கதிரில் ஒன்று நேர் கோடாக ஜன்னல் வழியாக வந்து கட்டிலில் வலியில் துடித்துக்கொண்டிருந்த பெண்ணவளின் மேடிட்ட வயிற்றில் சுள்ளென்று விழுந்தது. “ஆ ஆ.ம்.மா” பெரிதாக ஒரு அலறல் ஒலி அப்பெண்ணிடம் இருந்து எழுந்தது. […]