அருவி போல் அன்பை பொழிவானே..!!

அருவி போல் அன்பை பொழிவானே : 06

அருவி : 06 வலி தாங்க முடியாமல் கதறினாள். அவளது கதறலையும் பொருட் படுத்தாமல், அறையில் இருந்து அவளது நீண்ட கூந்தலை பிடித்து மணமேடைக்கு தரதரவென்று இழுத்து வந்தாள். அங்கயற்கண்ணியின் செயலை தடுக்க யாரும் முன்வரவில்லை. முன்வரவும் முடியாதே. கார்த்தியாயினிக்காக கவலைப்பட்டனர் அந்த மண்டபத்தில் இருந்தவர்கள். கன்னத்தின் வலியோடு கூந்தலின் வலியும் இணைந்து கொண்டதும் கார்த்தியாயினி மிகுந்த வேதனை அடைந்தாள். இழுத்து வந்து மணமேடையில் வைத்த அங்கயற்கண்ணி ஐயரைப் பார்த்து, “ஐயரே மந்திரம் சொன்னது எல்லாம் போதும், […]

அருவி போல் அன்பை பொழிவானே : 06 Read More »

அருவி போல் அன்பை பொழிவானே : 05

அருவி : 05 அந்த நீண்ட சாலையில், இரவு விளக்குகளின் ஒளியும், வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் ஒளியும் சாலையில் வெளிச்சத்தை வழங்கிக் கொண்டிருந்தது. அவ் வீதியில் மிதமான வேகத்தில் தனது காரில் சென்று கொண்டிருந்தான் யுவராஜ். சிட்டியின் முடிவில் ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. யுவராஜின் போலிஸ் மூளை எதையோ உணர்த்த, தனது காரின் விளக்குகளை அணைத்து நிறுத்தி விட்டு எதிரில் இருந்த காரை பார்த்தான். சாலையில் இருந்த விளக்குகள் அவனுக்கு உதவி புரிந்தன.  நிறுத்தப்பட்டிருந்த காரில்

அருவி போல் அன்பை பொழிவானே : 05 Read More »

அருவி போல் அன்பை பொழிவானே : 04

அருவி : 04 கண்கள் இரண்டும் கோவைப் பழங்களைப் போன்று சிவந்து, கார் கூந்தல் நன்கு கலைந்து சுவரில் சாய்ந்து தனது நிலையை எண்ணியபடி அழுது கொண்டு இருந்தவளை பார்க்கவே பாவமாக இருந்து. அப்போது வெளியே இருந்து அங்கயற்கண்ணியின் சத்தம் கேட்டது.  “ஏய் கழுத அங்கே உள்ளே இருந்து என்னடி பண்ற வெளியே வாடி….?” என்று சத்தம் போட்டார். இதுவரை அவர், ஏய் என்று அழைத்தாலே அவரது காலடியில் நிற்பவள், இன்று அவர் அழைப்பது அவளது செவியை

அருவி போல் அன்பை பொழிவானே : 04 Read More »

அருவி போல் அன்பை பொழிவானே : 03

அருவி : 03 நீண்ட நேரமாக சிந்தனையில் இருந்தவனை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது அவனின் போனின் சத்தம். எடுத்துப் பார்க்க, புதிய நம்பராக இருந்தது. யாராக இருக்கும் என்று யோசித்தவன் பின்னர், ஒருவேளை ஏதாவது முக்கியமான விஷயமாக இருந்தாலும் என்று நினைத்து போனை எடுத்து “ஹலோ யுவராஜ் பேசுறன் நீங்க யாரு…. ?” என்றான் தனது கம்பீரமான குரலில்.  மறுபக்கம் இருந்தவர், “ஐயா நான் செழும்பூரில் இருந்து சந்திரமோகன்… செழும்பூரில் இருக்கிற *****பள்ளிக்கூடத்தோட தலைமை ஆசிரியர் பேசுறன்…

அருவி போல் அன்பை பொழிவானே : 03 Read More »

அருவி போல் அன்பை பொழிவானே : 02

அருவி : 02 தெருவில் அங்கேயும் இங்கேயும் பார்த்தவாறு நடந்து கொண்டு இருந்த கார்த்தியாயினியின் அருகே வந்து தனது வண்டியை நிறுத்தினார் அவளது பள்ளிக்கூடத்தின் அதிபர் சதாசிவம். அவரை பார்த்ததும், “வணக்கம் ஐயா…” என்றாள். அவளைப் பார்த்து சிரித்தவர், “அம்மாடி கார்த்தியாயினி உன்னை பார்க்க உன்னோட வீட்டுக்கு இப்போதான் போயிட்டு வர்றன்… அவங்க என்னென்னவோ சொல்றாங்க என்னம்மா இது…?”என அவர் மிகவும் பரிவாக கேட்டார்.  அவர் அப்படிக் கேட்டதும் தடைபட்டு நின்ற அவளது கண்ணீர் மீண்டும் அணை

அருவி போல் அன்பை பொழிவானே : 02 Read More »

அருவி போல் அன்பை பொழிவானே : 01

அருவி : 01 பெரிய பெரிய விஐபிகள் வசிக்கும் அந்த தெருவில் உயர்ந்து நின்றது இல்லத்தரசியின் பெயரில் இருக்கும் மாளிகை போன்ற யமுனா இல்லம். வீட்டிற்கு வெளியே இருந்து பார்த்தாலே அதன் பணத்தின் செழுமையை அறிந்து கொள்ள முடியும். வீட்டிற்கு முன்னால் உள்ள வாசனை மிக்க பூக்கள் நிறைந்த தோட்டம், தெருவில் செல்வோரையும் ஒரு நிமிடம் நிற்க வைக்கும்.  வீட்டின் உள்ளே உள்ள பூஜை அறையில் பூஜை செய்து கொண்டு இருந்தார் யமுனா. முகத்திற்கு மஞ்சள் பூசி

அருவி போல் அன்பை பொழிவானே : 01 Read More »

error: Content is protected !!