எனை ஈர்க்கும் காந்தப் புயலே 

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 18

புயல் – 18 இந்த பிரச்சனை எல்லாம் முடிந்தாலே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டாள். “யாரோ உன்னுடைய பேரை கெடுப்பதற்காக தான் வேணும்னே இப்படி எல்லாம் செஞ்சிருக்காங்க. அது மட்டும் இல்லாம இப்போ இது மீடியாவுல வந்துட்டதால உன் மேல கேஸ் போடவும் நிறைய சான்ஸ் இருக்கு. அதுக்கு நீயும் வேதவள்ளியும் உங்க சைடு கிளாரிஃபிகேஷனை கொடுக்கணும்”. சற்று நேரம் எதையோ சிந்தித்த சூரியா, “சரி, நேத்து ஆக்சிடென்டலா தான் அப்படி ஒரு விஷயம் நடந்ததுனு நாங்க […]

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 18 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 17

புயல் – 17 அங்கே சற்று நேரம் அமைதியில் கழிந்தது. நேற்று இரவு கடுப்பாக பார்ட்டி நடக்கும் இடத்திலிருந்து வெளியேறிய அக்ஷ்ராவிற்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. “ச்ச.. கடைசியில இப்படி ஆயிடுச்சே பிரேம் நான் தான் உங்ககிட்ட அப்போவே சொன்னேன்ல.. அவன் ட்ரிங் பண்ணி இருந்தா நிதானமா இருக்க மாட்டான் அவன்கிட்ட பேச்சு கொடுக்க வேண்டாம்னு.. நீங்க தான் நான் சொன்னதை கேட்காம அவன் கிட்ட போய் ஏதேதோ பேசி இப்போ பாருங்க என்ன ஆச்சுன்னு..

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 17 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 16

புயல் – 16 ஹாலில் அமர்ந்து காபி அருந்தி கொண்டிருந்த தாத்தா நேரத்தை பார்த்தார் மணி எட்டு.. “இவ்வளவு நேரம் சூர்யா தூங்க மாட்டானே” என்று எண்ணியவர் நேற்று தாமதமாக தூங்கியதால் இருவரும் இன்னும் எழுந்திரிக்கவில்லை போலும் என்று எண்ணிக் கொண்டு காபியை அருந்தி கொண்டிருந்தார். அந்த நேரம் தான் வேதவள்ளியின் அலறல் சத்தம் அவரின் காதை எட்டியது. வேதவள்ளியின் முன்பு இப்படி ஒரு நிலையில் நாம் நிற்போம் என்று சூர்யா கனவில் கூட நினைத்தது கிடையாது.

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 16 Read More »

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 15

புயல் -15   வேதவள்ளி அவரை புரியாத பார்வை பார்க்க, “என்னமா அப்படி பாக்குற.. இப்போ உன்னுடைய மனநிலை எப்படி இருக்கும்னு என்னால நல்லா புரிஞ்சுக்க முடியுது. சூர்யா சின்ன வயசுல இருந்தே நிறைய கஷ்டத்தை அனுபவிச்சு இருக்கான். இனிமேலாவது அவன் வாழ்க்கையில் சந்தோஷம் மட்டும் தான் இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன். அவன் வாழ்க்கைக்குள்ள நீ வந்த நேரம் எல்லாமே நல்லதா தான் நடக்கணும்.. கண்டிப்பா நடக்கும்”.   இப்பொழுதும் கூட வேதவள்ளியின் முகம் சற்றும் தெளிவடையவில்லை.

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 15 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 14

புயல் – 14 சூர்யா ஏதேதோ பிதற்றிக் கொண்டிருக்க.. அவ்வழியாக செல்வோர் அனைவரும் அவர்களை பார்த்துவிட்டு சென்றனர். அது வேறு வேதவள்ளிக்கு பெரும் சங்கடமாக இருந்தது. அவனை அடக்கவும் முடியாமல், என்ன செய்வது என்றும் தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டு விட்டால் அழுது விடும் நிலையில் நின்று இருந்தாள். சொன்னது போலவே ராம்குமார் சற்று நேரத்தில் அவ்விடம் வந்து சேர அவனை பார்த்த பிறகு தான் வேதவள்ளிக்கு பெரும் பலன் கிடைத்தது போல் உணர்ந்தாள். அவனை கண்டதும்

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 14 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 13

புயல் – 13 அவள் அவனையே அதிர்ந்து பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள். அவளால் சற்றும் நிலை கொள்ளவே முடியவில்லை.. நடந்த சம்பவத்தை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.. ஒரு நொடி அவளின் மூளை வேலை நிறுத்தம் செய்து விட்டது. எதை பற்றியும் சிந்திக்கவும் முடியவில்லை.. தன்னை சுற்றி நடப்பதை தனக்குள் உள்வாங்கிக் கொள்ளவும் முடியவில்லை. ஏதோ பித்து பிடித்தவள் போல் நின்றிருந்தாள். அவளின் தோளை சுற்றி தன் கையை போட்டு தன்னோடு இறுக்கிக் கொண்டவன், “இப்போ இவ மேல

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 13 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 12

புயல் – 12 “நீ என்னம்மா வந்த உடனேயே கிளம்பலாம்னு கூப்பிடுற.. இப்போ தான் நாங்க பேசவே ஆரம்பிச்சிருக்கோம் இன்னும் பேச எவ்வளவோ இருக்கு” என்றவாறு வேதவள்ளியை மேலிருந்து கீழ் எடைபோடும் பார்வை பார்த்தவன் தன் நாடியை நீவிகொண்டு, “நாட் பேட்.. இன்னும் கொஞ்சம் ஃபிட்டிங்கா டிரஸ் பண்ணா நீயும் நல்லா செக்ஸியா தான் இருப்ப” என்கவும். வேதவள்ளிக்கோ நெஞ்சை அடைத்த உணர்வு. இவ்விடத்திற்கு வந்திருக்கவே கூடாதோ என்று காலம் தாழ்ந்து சிந்தித்தாள். அவனின் வார்த்தையை கேட்டு

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 12 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 11

புயல் – 11 “என்ன சார் எப்படி இருக்கீங்கன்னு கேட்டா பதிலே சொல்ல மாட்டேங்குறீங்க அக்ஷ்ரா நீ கேளு நீ கேட்டால் தான் சார் பேசுவார் போலருக்கு” என்றான் ஏளன குரலில். “மூஞ்சிய பாத்தாலே தெரியல பிரேம் உங்களுக்கு.. நல்லா இருந்திருந்தா இந்நேரம் சாதாரணமா பேசி இருக்க மாட்டாரு.. பாவம், இன்னும் என் நினைப்பிலேயே இருக்காரு போலருக்கு” என்று உச்சி கொட்டியவாறு பரிதாபப்படுவது போல் கேலி செய்தாள். அவர்கள் இருவரையும் கோபமாக உறுத்து விழித்தவனோ பற்களை கடித்துக்கொண்டு

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 11 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 10

புயல் – 10 “எல்லாம் சரியா இருக்கு தானே.. அங்க போனதும் எதுவும் பிரச்சனைனு சொல்லிடாத திரும்ப எல்லாத்தையும் ரெடி பண்ண முடியாது. இன்னைக்கு நாம அந்த அக்ரீமெண்ட்ல குபேரன் சார் கிட்ட சைன் வாங்கியே ஆகணும்” என்று காரை ஓட்டிக்கொண்டே சூர்யா கேட்கவும். அவன் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த வேதவள்ளியோ பக்கவாட்டாக அவனை திரும்பிப் பார்த்து, “எல்லாம் சரியா இருக்கு சார் நான் செக் பண்ணிட்டேன். ராம் சார் தான் இதையெல்லாம் என்கிட்ட கரெக்ஷ்ன்

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 10 Read More »

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் -9 “ச்சீ.. பொறுக்கிங்க.. எப்படி பார்க்குறாங்கனு பார்த்தியா.. இவனுங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்ல வேதவள்ளி. அவங்க வயசு என்ன நம்ம வயசு என்ன.. நம்ம அப்பா வயசு இருக்கும் அவனுங்க ரெண்டு பேருக்கும்.. கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம நம்மளை எப்படி பார்க்குறாங்க.. எனக்கு இப்பவும் அவனுங்க பார்த்ததை நினைச்சாலே அருவருப்பா இருக்கு” என்று தன் முகத்தை அஷ்ட கோணலாக சுழித்தாள். சீதா கோபமாக அவர்களை திட்டிக் கொண்டிருக்க.. வேதவள்ளியோ புன்னகைத்துக் கொண்டு அவளுடன்

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

error: Content is protected !!