Category:
சோதிக்காதே சொர்க்கமே!
22
அவனின் நிலையில் இருந்து பார்க்கும்போது அவனின் வேதனை என்னவென்று இவளுக்கு புரிந்தது. ப்ரீத்திக்காக அவன் தனது ஒன்பது மாத வாழ்க்கையை தியாகம் செய்தான். அம்மாவிடம் உண்மையைக் கூட சொல்லாமல் மறைத்தான். ப்ரீத்தியின் கர்ப்ப காலத்தில் நிறைய செலவு செய்திருக்கிறான். அந்த குழந்தைக்காக உழைத்து தர கூட தயாராக இருக்கிறான். ஆனால் தன் குழந்தைக்கு மட்டுமே சொந்தமான ஒன்றை இந்த குழந்தைக்கு தருவதற்கு அவனுக்கு கொஞ்சமும் இஷ்டமில்லை.
அவனின் முகத்தை பார்த்த மானசா செல்போனை ஓரம் வைத்தாள். அவளுக்கு அவனின் காயம் புரிந்தது. அதைவிட முக்கியமாக அவனின் கண்ணீர் இவளுக்கு வலியை தந்தது.
அவன் வெளிப்படுத்திய விதம் வேண்டுமானால் தவறாய் இருக்கலாம். ஆனால் அவனின் காதல் உண்மை. ப்ரீத்தி இறந்ததுமே அம்மாவிடம் உண்மையை சொல்ல காத்திருந்தான் இவன். ஆனால் மானசாவை பார்த்த கணம் அவனின் எண்ணம் முழுக்க தலைகீழாய் மாறிவிட்டது. அவள் தன் வீடு வர வேண்டும் என்பதற்காகவே குழந்தையை தன் வீட்டுக்கு எடுத்து போனான்.
உண்மையைச் சொல்லி அதன் பிறகு அவளோடு பேசி பழகி இருந்தால் அவளின் காதலை நிச்சயம் பெற்று இருக்கலாம். ஆனால் அதற்கு கூட விடாமல் அவனின் அவசரம் அவனை படுத்தி எடுத்து விட்டது. அத்தனையையும் புரிந்து கொள்ள முடிந்தது இவளால்.
அவனின் முகத்தை அள்ளினாள். அவனை தன் முகம் பார்க்க வைத்தவள் “நீ கவலைப்படும் அளவுக்கு எதுவுமில்லை. நீ என் மேல எந்த அளவுக்கு லவ்வை வச்சிருக்கியோ அதே அளவுக்கு நான் அந்த குழந்தை மேல அன்பை வச்சிருக்கேன்..” என்றாள்.
அவனுக்கு அது புரியாமல் இல்லை.
அவனின் கையை எடுத்து தன் நெஞ்சின் மீது வைத்தவள் “உள்ளே இருக்கும் மனசையே உங்கிட்ட கொடுக்கிறேன். இந்த ஒரு விஷயத்துல என்னை என் போக்குல விட்டுடேன். உனக்கும் எனக்கும் குழந்தை பிறந்தாலும் அதையும் இதே பாசத்தோடு வளர்ப்பேன். என்னை நம்பு..” என்றாள்.
தோழியின் குழந்தையை உயிராக நினைப்பவள் தன் குழந்தையை அதற்கு மேலாகவே நினைப்பாள். ஆனால் இந்த பொசசிவ்? இதை எப்படி அவளுக்கு புரிய வைப்பது?
அவனின் இமை ஓரம் தேங்கி நின்றிருந்த கண்ணீரை பார்த்தவள் “ப்ரீத்தி என்னோட உயிர் தோழி. அவளுக்காக உயிரை கொடுக்க கூட நான் தயங்க மாட்டேன். இது எனக்கு பெரிய விஷயம் கிடையாது. நான் ஒன்னும் உனக்கோ உன் குழந்தைக்கோ துரோகம் செய்யல. என் நட்புக்கு நன்றி கடன் தீர்ப்பதா நினைச்சிக்க..” என்றாள்.
அவனின் பார்வை அவளின் நெஞ்சை தொட்டது.
“இது மூலம் என்னோட அழகு ஒன்னும் குறையாது. அப்படி அழகே குறைஞ்சா கூட அந்த அழகு வாழ்க்கை முழுக்க நிலைக்க போறது கிடையாது. ஒரு பச்சை குழந்தைக்கு பசி தீர்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைச்சிருக்கு அதை பாரு..” என்றாள்.
“தாய்ப்பால் தர நான் ஆட்களை வர சொல்றேன்..” கரகரத்த குரலோடு சொன்னான்.
குழந்தையே இவன்தானா என்பது போல் இருந்தது இவனின் பிடிவாதம்.
அவனின் கேசத்தை கோதியவள் “நான் இந்த குழந்தைக்கு பசியாத்தும் போது உனக்கு எவ்வளவு பொசசிவ் இருக்கோ அதைவிட ஆயிரம் மடங்கு பொசசிவ் என் குழந்தை வேற யார்கிட்டயாவது பசி தீர்க்கும் போது எனக்கு வருது. நானும் ப்ரீத்தியும் இரட்டை பிறவி போல. எங்களோட நட்பை உனக்கு சொல்லி புரிய வைக்க முடியாது. அவளோட குழந்தை என்னோட குழந்தைதான். என்னோட தாய்மையை உன்னால புரிஞ்சுக்க முடியலன்னா உன்னோட காதலுக்கு எந்த அர்த்தமும் கிடையாது..” என்றாள்.
இவனின் உதடுகள் துடித்தது. அங்கிருந்து எழுந்தவன் எதுவும் சொல்லாமல் நடந்தான்.
“குழந்தையை ஏதாவது பண்ண போறியா?” இவன் சந்தேகமாக கேட்க, “இல்ல கொஞ்சம் மைண்ட் டிஸ்டர்பா இருக்கு. எங்காவது வெளியே போய்ட்டு வரேன்..” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.
அவன் வார்த்தைகளை நம்பினாள்.
அவள் ப்ரீத்தியின் போனை ஆராய்ந்தாள். போனில் பெரிதாக இன்பர்மேஷன் இல்லை. ஆனால் சில மேற்கோள்களை புகைப்படங்களாக சேகரித்து வைத்திருந்தாள்.
காதலே பொய் என்று முக்கால்வாசி மேற்கோள்கள் சொல்லின. எவனிடமோ ஏமாந்து விட்டாள் என்பதுதான் இவளுக்கே தெரியுமே! யார் ஏமாற்றியது என்பதுதானே இப்போதைய தேடல்.
ஒரு சிலவற்றில் நட்பையும் திட்டியிருந்தது அந்த மேற்கோள்கள்.
இவள் வாட்சப்பை திறந்தாள். அவள் நம்பருக்கு அவளே அனுப்பிக் கொண்ட சில செய்திகள் அதில் இருந்தன.
மானசா அதை முதலில் இருந்து படிக்க ஆரம்பித்தாள்.
“நான் அவனை எவ்வளவு நம்பினேன்!? இப்படி ஏமாத்திட்டானே! அப்படி என்ன என்கிட்ட குறையை கண்டான்? அதுவும் அவன் என்னை ஏமாத்தியது கூட பரவால்ல. என் பிரெண்டுக்கே மறுபடியும் ப்ரபோஸ் பண்ணிட்டானே!” என்று புலம்பி வைத்திருந்தாள்.
அதை படித்ததுமே மானசாவுக்கு ஆள் யாரென்று புரிந்து விட்டது. இருப்பினும் விசயத்தை கன்பார்ம் செய்து கொள்வதற்காக தொடர்ந்து படிக்க ஆரம்பித்தாள்.
இதயம் அவளுக்கு பலவீனமாக துடித்தது. அவனா அது என்று நம்பவே முடியவில்லை. எப்போதும் நம்மை மறுத்து பேசாத தோழி இந்த விசயத்தில் சண்டை போட்டு வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வந்து விட்டாள். இதற்கான காரணத்தை அப்போதே யூகித்து இருக்க வேண்டும். முட்டாள் போல் இருந்து விட்டேனே என்று தன்னையே திட்டிக் கொண்டாள்.
சில மெஸேஜ்களுக்கு பிறகு ஒரு செய்தி இருந்தது.
“ஏன் வினோத் இப்படி பண்ண? நான் உனக்கு என்னடா துரோகம் பண்ணேன்? நீ கேட்டதும் உனக்கு நோ கூட சொல்லலியே! என்னை பிரேக்அப் பண்ண உனக்கு எப்படி மனசு வந்தது?” என்று கேட்டிருந்தாள். இந்த செய்தியை டைப் செய்யும்போது தோழி எவ்வளவு அழுதிருப்பாள் என்பதை இவளால் யூகிக்க முடிந்தது.
இவளுக்கும் விழிகளில் தண்ணீர் துளிர்த்தது.
அந்த போனை ஓரம் வைத்தவள் தன் போனை எடுத்து வினோத்துக்கு போன் செய்தாள். அவன் போனை எடுக்கவில்லை. தன்னோடு படித்த தோழிகளுக்கு போன் செய்தாள்.
அவர்கள் சொன்ன விசயம் கேட்டு இவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
தீனா சோகத்தோடு தோட்டத்தில் திரிந்தான். அவளின் மனதை மாற்ற முடியாது என்று அவனுக்கு தெரிந்து விட்டது. இதயம் வலித்தது. இதற்கு பதிலாக அவன் எதை வேண்டுமானாலும் ஈடாக தர தயாராக இருந்தான்.
அவள் முழுக்க முழுக்க நமக்கு சொந்தம் என்று அவனின் மனம். ஆனால் அவளின் புத்தி, அவளின் ஆன்மா அது அவளுக்குதான் சொந்தம். எதார்த்தம் முகத்தின் மீது சாட்டையை எடுத்து வீசியது.
“தீனா..” மானசாவின் குரலில் திரும்பி பார்த்தான். அவளாக அழைத்திருக்கிறாள். இவனுக்கு ஆச்சரியத்தில் பேச்சே வரவில்லை.
அருகில் வந்து அவனின் கையைப் பிடித்தவள் “என்னோடு வா. நமக்கு முக்கியமான வேலை இருக்கு..” என்று சொல்லி அவனை தன்னோடு இழுத்துப் போனாள்.
அவள் கூப்பிட்டால் இவன் எங்கு வேண்டுமானாலும் செல்வான்.
அவனை கொண்டு வந்து காரின் அருகில் நிறுத்தியவள் “காரை எடு..” என்றாள்.
இவன் மறு வார்த்தை பேசாமல் காரில் ஏறி அமர்ந்தான். அதை ஸ்டார்ட்டும் செய்தான்.
“கல்யாணி கல்யாண மண்டபம்.. இங்கே போ..” என்றாள்.
இவன் காரை எடுக்காமல் அவளின் முகத்தை பயத்தோடு பார்த்தான். “அங்கே போன பிறகு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்க போறியா?” என்று கேட்டான்.
“என்னை கெட்ட வார்த்தை பேச வைக்காத. ஒழுங்கா சொல்வதை செய்..” என்று சீறினாள்.
கேள்வி கேட்கும் தகுதி நமக்கு இல்லை என்று உள்ளுக்குள் சோகமானவன் காரை எடுத்தான்.
மானசா தன் தோழிகளுக்கு போன் செய்து மீண்டும் ஏதேதோ விசாரித்தாள். வினோத் என்று பேசிக்கொண்டாள்.
ஒருவேளை அந்த வினோத் மீது அவளுக்கு ஒருதலையாய் காதல் இருந்திருக்குமோ என்று இவன் பயப்பட ஆரம்பித்தான். என்னதான் அவளைப் பார்த்த அடுத்த நாளே அவளுக்கு காதலர்கள் யாரும் இல்லை என்று கண்டுபிடித்து விட்டாலும் கூட அந்த டிடெக்டிவ் இந்த வினோத் விஷயத்தில் தவறி இருப்பாரோ என்று இவனுக்கு பயம்.
இருபது நிமிட பயணத்திற்குப் பிறகு திருமண மண்டபத்தின் முன்னால் கார் வந்து நின்றது.
மானசா காரில் இருந்து இறங்கி உள்ளே ஓடினாள். வெளியே மணமக்கள் பெயரில் வினோத் என்ற பெயரும் இருந்தது. அதைப் பார்த்துவிட்டு மனைவியை பின்தொடர்ந்து ஓடினான் தீனா.
உள்ளே ரிசப்ஷனுக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தது.
வினோத்துக்கு மூன்று நாட்கள் முன்பே திருமணம் நடந்து விட்டது.
வெளியே பேனரில் வினோத்தின் முகத்தை பார்த்து இருந்தான் தீனா. பார்வைக்கு மிகவும் இளைஞனாக தெரிந்தான்.
தீனா சம்பாதித்து முடிக்கவே இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது. இவனுக்கு பெண்களுக்கு கேட்க போகும் இடமெல்லாம் ஆயிரத்தியெட்டு கண்டிஷன்களை போட்டார்கள். அப்படி இருக்கையில் இந்த வினோத் மாதிரியான இளைஞர்களுக்கு யார்தான் பெண் கொடுப்பது என்று தீனாவுக்கு சுத்தமாய் தெரியவில்லை.
உள்ளே ஓரளவு கூட்டம் இருந்தது. மானசா அங்கே சிலரிடம் ஏதேதோ விசாரித்தாள். மணமகன் அறைக்கு ஓடினாள். தீனா அவளை விட வேகமாய் ஓடினான்.
கண்ணாடியின் முன்னால் நின்று அலங்காரம் செய்து கொண்டிருந்த வினோத் வாசலில் யாரோ வந்து நிற்கவும் திரும்பி பார்த்தான்.
மானசாவை பார்த்ததும் புருவத்தை சுருக்கினான்.
“ஹாய் மானசா..” கட்டில் அமர்ந்திருந்த வினோத்தின் நண்பர்கள் இவளுக்கு கையாட்டினார்கள்.
உள்ளே வந்த மானசா “நான் உன்கிட்ட தனியா பேசணும்..” என்றாள் வினோத்திடம்.
சென்ட் எடுத்து உடம்பு முழுக்க அடித்துக்கொண்டு திரும்பிப் பார்த்தவன் “என்ன என்னோட லவ்வை ஏத்துக்காம போனதுக்காக இப்ப ஃபீல் பண்றியா? இப்ப உன்னை ஏத்துக்கணும்ன்னு கேட்க வந்திருக்கியா? சாரிம்மா. எனக்கு மேரேஜ் ஆயிடுச்சி. அதுவும் லவ் மேரேஜ்..” என்றான்.
பற்களை கடித்தவள் “ப்ரீத்தி விஷயமா உன்கிட்ட பேசணும்.” என்றாள்.
அவனின் முகம் மாறியது. நண்பர்கள் புறம் திரும்பியவன் “கொஞ்சம் வெளியே இருங்க..” என்று சொன்னான்.
“எங்களுக்கு தெரியாத ரகசியமா?” என்று நக்கலாக கேட்டுவிட்டு நண்பர்கள் அங்கிருந்து சென்றார்கள்.
வினோத் தீனாவை பார்த்தான். “யார் நீங்க? இங்கே என்ன பண்றிங்க?” என்று விசாரித்தான்.
“அவர் என்னோட ஹஸ்பண்ட்தான்..” என்ற மானசா “கதவை சாத்துங்க..” என்று கணவனிடம் சொன்னாள்.
அவனும் மறு பேச்சு பேசாமல் உடனே கதவை தாழிட்டான்.
வினோத்தின் புறம் திரும்பியவள் ஓங்கி அவனின் கன்னத்தில் அறைந்தாள். அவன் ஆத்திரத்தோடு இவளை அடிக்க வர, தீனா பாய்ந்து வந்து அவனை பின்னால் தள்ளினான்.
“இவனுக்கும் ப்ரீத்திக்கும் என்ன சம்பந்தம்?” என்று மனைவியிடம் கேட்டான் தீனா.
“என் பிரெண்டை ஏமாத்தி குழந்தை கொடுத்தது இவன்தான்..” என்றவளுக்கு அவ்வளவு கோபம் வந்தது. காதலில் கொஞ்சம் கூட உறுதியோடு இல்லை. தவறை செய்துவிட்டு அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. இப்படிப்பட்டவனை நம்பி ஏமாந்ததற்காக இவளுக்கு பிரீத்தியின் மீதுதான் கோபம் வந்தது.
கன்னத்தைப் பிடித்த வினோத் “நான் ஒன்னும் ஏமாத்தல? அவளுக்கு மயக்க மருந்து ஒன்னும் தரல. அவதான் ஆசையில் மயங்கினா. நான்தான் வேணும்ன்னு வந்து விழுந்தா..” என்று சொன்னான்.
அவனின் தொடையில் ஒரு உதையை விட்டாள் மானசா.
“உன்னோட பொண்டாட்டிகிட்டயும் அவளோட குடும்பத்துகிட்டையும் போய் இதை சொல்றேன். அவங்ககிட்டயும் இதே பதிலை சொல்வியான்னு பார்க்கலாம்..” என்றாள்.
அவள் கதவை நோக்கி நடக்க, ஓடி வந்து அவளை கால்களை பிடித்தான் வினோத்.
“ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு பணக்கார பொண்ணை லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருக்கேன். இந்த விஷயம் அவங்களுக்கு தெரிஞ்சா என்னை உயிரோடு கொளுத்திடுவாங்க. ப்ளீஸ் உங்கிட்ட கெஞ்சி கேக்கிறேன். என்னோட கல்யாண வாழ்க்கையை கெடுக்காத. வேணும்ன்னா நாலு அடி கூட அடிச்சிக்க..” என்றான்.
தொடரும்
தீனா சொன்னதை எந்த நம்பிக்கையில் நம்பினாள் என்று அவளுக்கே தெரியாது. ஆனால் அவன் வார்த்தைகள் உண்மை என்று அவளின் உள் மனம் சொன்னது. ப்ரீத்தியின் விஷயத்தில் அவன் பொய் சொல்ல வேண்டிய தேவையும் இல்லை என்று அதே மனம் வக்காலத்து வாங்கியது.
அதனால்தான் மானசா இந்த முறையும் குழந்தைக்காக தன்னை அர்பணிக்க தயாராகி விட்டாள். ஆனால் அது தீனாவுக்கு பிடிக்கவில்லை.
அவள் நினைத்தால் இப்போது கூட அவனை விட்டுவிட்டு கிளம்பலாம். எந்த வகையிலும் அவளை கேள்வி கேட்க அவனுக்கு உரிமை இல்லை. ஆனால் எதன் காரணமாக அவனை விரும்புகிறோம் என்று இவளுக்கே தெரியவில்லை. அவன் ஒரு வாரம் பட்டினி கிடந்தது காதல் ஆகாது, அது வெறும் பிடிவாதம். அவன் நம்மிடம் காட்டியது நேசம் கிடையாது ஆளுமை.
மாறிக்கொண்டிருந்த தனது மனதை பார்த்து அவளுக்கே கோபம்தான்.
“நீ ஆல்ரெடி என் பொண்டாட்டி. நீ என்னோடு வாழ்ந்துதான் ஆகணும்..” என்றவனை நக்கலாக பார்த்தாள்.
“நான் என் சொத்துகளை கூட உனக்காக எழுதி வச்சேன்..” என்றவனை இப்போதும் அதே போல் பார்த்தாள்.
“இந்த குழந்தையை வளர்த்துக்கலாம். ஆனா நீ தாய்ப்பால் தர கூடாது..” என்றான்.
“நான் உன் கன்ட்ரோல்ல கிடையாது. இது உன்னோட குழந்தை இல்லன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா இந்த மேரேஜ் டிராமா எதுவும் செய்யாம இந்த குழந்தையை தூக்கிட்டு நேரா நான் என் வீட்டுக்கு போயிருப்பேன். நீ சரியான பிராடு.. இப்ப கூட என்னால் உன்னை நம்ப முடியல..” என்றாள்.
இவன் பார்வையால் கெஞ்சினான். என்னை நம்பு என்றான்.
“இது என்னோட உயிர் உடல் ஆன்மா. இதை நான் என்ன வேணா செய்வேன்..” என்றவள் குழந்தையை பார்த்து விட்டு “என் பிரெண்ட் ஒழுக்கம் கெட்டவன்னு சொல்ற இல்ல? இந்த குழந்தைக்கு அப்பா யாருன்னு அவ சொல்லி இருப்பாளே. அதை சொல்லு..” என்றாள்.
தீனா விழித்தான்.
“என்ன பார்வை? நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு…” என்றாள் மானசா.
“எனக்கு தெரியாது. உன் பிரண்ட் என்கிட்ட எதையும் சொல்லல..” என்றவன் தன் வாழ்க்கையில் நடந்த திருமணத்தை பற்றி இவளிடம் விவரித்தான்.
சில பல மாதங்களுக்கு முன்னால் அம்மா இவனுக்கு நிறைய இடங்களில் பெண் தேடிக் கொண்டிருந்தாள்.
பார்க்கும் பெண்கள் எல்லாம் அம்மாவையும் தீனாவையும் பிரிக்கும் வேலைதான் பார்த்தார்கள்.
நகை வேண்டும் பணம் வேண்டும் என்று கேட்ட பெண்களுக்கு மத்தியில் இவன் தேடி சென்ற பெண்கள் எல்லாம் சக்கர நாற்காலியில் இருக்கும் ஒரு மாமியார் வேண்டாம் என்று சொன்னார்கள்.
‘உங்க அம்மாவை எங்களால் கவனிக்க முடியாது. அவங்களை முதியோர் இல்லத்துல சேர்த்துட்டு வாங்க. அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம்..’ என்றுதான் சொன்னார்கள்.
சுலோச்சனாவுக்கு பயம். மகனுக்கு இந்த பெண்களை திருமணம் செய்து வைத்தால் பிறகு இவனை மயக்கி பெண் வீட்டாரோடு வைத்துக் கொள்வார்களோ, நம் மகனை நாம் பார்க்க முடியாமலேயே போய் விடுமோ என்று பயந்து விட்டாள்.
அதனால் வெகு நாள் யோசித்து பார்த்தாள். ‘ஒரு அனாதை பெண்ணை திருமணம் செய்து வைத்தால் இந்த வீட்டோடு அவள் இருப்பாள். நம்மையும் நம் மகனையும் அவள் பிரிக்க மாட்டாள்!’ என்ற முடிவுக்கு வந்தாள்.
அப்படிப்பட்ட பெண்ணை தேடி அனாதை ஆசிரமங்களுக்கும் சென்றாள். ஆனால் எந்த பெண்ணையும் இவளுக்கு பிடிக்கவில்லை.
அப்படி இருக்கும்போதுதான் ஒரு நாள் கோவிலுக்கு போய் இருந்தாள். கோவிலில் சோகமாய் அமர்ந்திருந்த ஒரு பெண்ணை பார்த்ததும் அவளுக்கு பிடித்து விட்டது. தீனாவுக்கு எப்படி மானசாவை பார்த்ததும் பார்த்த நொடி காதல் வந்ததோ அதுபோல சுலோச்சனாவுக்கு பார்த்த நொடி ப்ரீத்தியின் மீது நேசம் வந்துவிட்டது.
‘இவ்வளவு அழகான பெண்ணாக இருக்கிறாளே! நம் பையனுக்கு இவள்தான் பொருத்தம்!’ என்று நினைத்து அவளிடம் சென்று பேசினாள்.
‘ப்ரீத்தியும் நான் ஒரு அனாதை!’ என்று சொல்லி விடவும் ‘என் வீட்டுக்கு வா!’ என்று அவளை இங்கே அழைத்து வந்து விட்டாள்.
‘இந்த பொண்ணை எனக்கு பிடிச்சிருக்கு. நீ கல்யாணம் பண்ணிக்க..’ என்றாள்.
தீனா அவள் குட்டையா நெட்டையா கருப்பா சிவப்பா என்று கூட பார்க்காமல் சரியென்று தலையாட்டினான். அடுத்த சில தினங்களில் எளிமையான முறையில் திருமணம் நடந்தது.
முதலிரவு நேரத்தில் அவளோடு பேசி பழக தொடங்கினான் இவன். ஆனால் அவள் தயங்கி தயங்கி பேசினாள்.
வெட்கப்படுகிறாள் என்றுதான் நினைத்தான். ஆனால் முதலிரவு நாளில் அவள் உண்மையை சொல்லி விட்டாள்.
இவனின் காலில் விழுந்தவள் “நான் வெர்ஜின் கிடையாது. என்னை ஒருத்தன் ஏமாத்தி கை விட்டுட்டான். என்னை வெறுக்காதிங்க..” என்று கெஞ்சினாள்.
அவள் சொன்னது இவனுக்கு நம்ப முடியாத அளவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
“இதை நீ ஏன் கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லல?” என்று கோபத்தோடு கேட்டான்.
“பயமா இருந்தது. இந்த வீட்டைத் தவிர எனக்கு வேற அடைக்கலம் இல்லை..” என்று அழுதாள்.
இவனுக்கு அவள் மீது எக்கச்சக்கமாக வெறுப்பு வந்தது. எவனோ ஒருவன் ஏமாற்றியது பிரச்சனை கிடையாது. ஆனால் அவள் தன்னை ஏமாற்றியது பிரச்சனைதான். நம்மை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டாள் என்று கோபப்பட்டவனுக்கு இதை அம்மாவிடம் சொல்லவும் மனம் வரவில்லை.
நம் மகளின் வாழ்க்கை இனியாவது நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் திருமணம் செய்து வைத்திருக்கிறாள் அம்மா. இப்போது இப்படி ஒருத்தி ஏமாற்றிவிட்டாள் என்று தெரிந்தால் அம்மாவின் மனம் என்ன பாடுபடும்?
அம்மாவுக்காகதான் இந்த விஷயத்தை அவன் மறைத்தான்.
ஆனால் அதற்காக அவளுக்கு வாழ்க்கை தரும் அளவுக்கு அவன் தாராள மனப்பான்மை உள்ளவன் அல்ல. அவள் முன்பே சொல்லி இருந்தால் கூட போனால் போகிறது என்று மன்னித்து விட்டு வாழ்ந்திருப்பான். ஆனால் ஏமாற்றி திருமணம் செய்துள்ளாள். நம் அம்மாவின் பலவீனத்தை பயன்படுத்தி உள்ளாள். இவளை நேசித்தால் நம்மை விட பெரிய முட்டாள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினைத்தான்.
அதன் பிறகு ஒரே அறையில் இருந்தாலும் இருவரின் படுக்கையும் வேறு வேறாகதான் இருந்தது.
திருமணமாகி நான்கு நாட்கள் கூட ஆகியிருக்கவில்லை. அதற்குள் அவள் வாந்தி எடுத்து விட்டாள். அதை சுலோச்சனா பார்க்கவில்லை இவன் பார்த்துவிட்டான்.
அவள் மீதான வெறுப்பு இன்னும் கூடிவிட்டது.
மீண்டும் இவன் காலில் விழுந்தவள் “இந்த குழந்தை பிறக்கும் வரை மட்டும் இந்த வீட்டுல எனக்கு இடம் கொடுங்க. அப்புறம் நான் உங்க அம்மாகிட்ட உண்மையை சொல்லி இந்த வீட்டை விட்டு போயிடுறேன்..” என்று கெஞ்சினாள்.
அவளின் வார்த்தைகளை நம்புவதற்கு இவனுக்கு கொஞ்சம் கூட மனமில்லை. ஆனாலும் பிறக்காத ஒரு கருவுக்காக இரக்கம் காட்டினான்.
அவன் வேண்டுமென்று நினைத்திருந்தால் பிரீத்தி குழந்தையை கலைத்துவிட்டு இவனை மயக்கும் வேலையை பார்த்திருப்பாள். ஆனால் அவளுக்கு தன் வயிற்றில் உதித்த அந்த கருவின் மீது பேரன்பு பிறந்து விட்டது. நாட்கள் ஓடியது. சுலோச்சனா விஷயத்தை அறிந்து குழந்தை தன் மகனுடையது என்று நினைத்து சந்தோஷப்பட்டாள். அம்மாவுடைய பொய் சந்தோஷத்தை பார்க்கும் போது இவனுக்கு கஷ்டமாக இருந்தது.
அப்படியே நாட்கள் ஓட ஒரு நாள் ப்ரீத்திக்கு குழந்தையும் பிறந்து விட்டது.
தீனா பொதுவாகவே ஓரளவு இரக்க குணம் கொண்டவன்தான். ஆனால் ப்ரீத்தி விஷயத்தில் அவனுக்கு வெறுப்பு மட்டும்தான் தலைக்கு மேல் ஏறி இருந்தது. அப்படி இருந்தும் கூட பிரசவ நேரத்தில் அவளின் உயிரை காப்பாற்ற முடியாது என்ற மருத்துவர் சொன்னபோது ‘எவ்வளவு வேணாலும் செலவு பண்றேன். அவ உயிரை காப்பாத்துங்க டாக்டர்..’ என்று சொல்லியிருந்தான்.
ஆனால் அப்படி சொல்லி இருந்தும் அவள் இறந்தே போய்விட்டாள்.
வாழ்க்கையையே வெறுத்து போய் அவன் வாழ்ந்து கொண்டிருந்த போதுதான் மானசாவை பார்த்திருந்தான். இறந்து போனவளின் மீதான வெறுப்பு கூட மறந்து போய்விட்டது. விளக்கை பார்த்த விட்டில் பூச்சி போல அவளிடம் தன்னை தொலைத்து விட்டான்.
எப்படியாவது அவளை அடைய வேண்டும் என்று அவனின் மனம் அவன் உயிரை எடுத்தது. ஊராரைப் பொறுத்தவரை இப்போதுதான் மனைவி இறந்து போயிருக்கிறாள். இப்போது இன்னொரு பெண்ணிடம் அன்பை எதிர்பார்ப்பது மிகவும் ஆபத்தானது என்று கூட அவனுக்கு தெரியும். ஆனால் எந்த விஷயத்தையும் இதயம் கேட்கவில்லை. அவள் வேண்டும் என்பதை தவிர அவனிடம் வேறு சிந்தனையே இல்லை. அதனால்தான் அத்தனை கிறுக்குத்தனங்களையும் செய்து அவளை தன் மனைவியாக்கி இருந்தான்.
அவனுக்கு இந்த குழந்தையை ஹாஸ்டலுக்கு அனுப்புவதோ இல்லை கொல்வதோ விருப்பம் கிடையாது. அந்த அளவுக்கு அவனுக்கு கல் மனதும் கிடையாது.
தனக்கு தெரிந்த விஷயத்தை எல்லாம் இப்போது மானசாவிடம் சொல்லி முடித்தான்.
மானசாவுக்கு தன் தோழியை ஏமாற்றியது யார் என்ற கேள்விதான் மனதுக்குள் முதலில் வந்து நின்றது.
“இந்த குழந்தையோட அப்பா யாருன்னு எனக்கு தெரியாது. ஆனா இந்த குழந்தைக்கு அம்மாவா நீ இருந்தா அப்பாவா நான் இருப்பேன். பால் மட்டும் வேண்டாம்..” என்று அப்போதும் அதையே சொன்னான்.
இவள் அவனை கண்டுகொள்ளாமல் அந்த அறையை விட்டு வெளியே சென்றாள்.
இவன் குழந்தையின் இருபுறமும் தலையணைகளை எடுத்து வைத்துவிட்டு அவள் பின்னால் ஓடி வந்தான்.
“வீட்டை விட்டு போக போறியா? நீ இல்லன்னா என்னால வாழவே முடியாது மானசா..” என்று சொன்னான்.
தன் காதுகளை தேய்த்து விட்டவள் “போதும் நிறுத்துடா. இதையே சொல்லி சொல்லி எனக்கு காது வலியே வர வச்சிட்ட..” என்று அதட்டினாள்.
வேலையாட்கள் இவர்கள் இருவரையும் திரும்பி பார்த்தார்கள்.
இவன் அவர்களை கவனிக்காமல் “என்னோடு இருப்பேன்னு சொல்லு. இல்லன்னா நான் உன்னை டார்ச்சர் பண்ணிக்கிட்டே இருப்பேன்..” என்றான்.
அவனின் ரூமின் முன்னால் வந்து நின்றவள் இடுப்பில் கையை வைத்தபடி இவன் புறம் திரும்பிப் பார்த்தாள். “என்ன சார் சொன்னிங்க?” என்று கேட்டாள்.
ஓர் அடி பின்னால் தள்ளி நின்றவன் “எனக்கு நீ வேணும். இல்லன்னா எனக்கு பைத்தியம் பிடிச்சிடும்..” என்று விழிகளால் மீண்டும் கெஞ்சினான்.
“விட்டுப் போகல. கொஞ்சம் வாயை மூடிட்டு இரு..” என்றவள் கதவைத் திறந்தாள்.
அவனைப் பிடித்திருக்கிறது என்பதையும் தாண்டி தோழி இவனுக்கு செய்த துரோகத்திற்கு நாம் இவனோடு வாழ்ந்தாவது அந்த பாவ கணக்கை சரி செய்ய வேண்டும் என்று தோன்றியது இவளுக்கு.
அவனின் அறையில் இருந்த கப்போர்டை திறந்தாள். அங்கிருந்த உடைகளை எல்லாம் அள்ளி எறிந்து விட்டு ஏதாவது கிடைக்குமா என்று தேடினாள்.
“என்ன பண்ற?” என்றபடி அருகில் வந்து நின்றான் தீனா.
“என் பிரெண்டை ஏமாத்தியது யாருன்னு எனக்கு தெரிஞ்சாகணும். அவ எதாவது டைரி வச்சி எழுதிட்டு இருந்தாளா? அவ போன் எங்கே?” என்று கேட்டாள்.
அந்த ரூம் முழுக்க தேடியும் டைரி போல் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அவளின் செல்போன் தீனாவிடம்தான் இருந்தது. அதை எடுத்து வந்து இவளிடம் கொடுத்தான்.
அதன் பாஸ்வேர்டை இவள் சிலமுறை யூகித்து விட்டு டைப் செய்தாள்.
சோபாவில் அமர்ந்தவள் செல்போனில் என்ன இருக்கிறது என்று தேட ஆரம்பித்தாள். அருகில் அமர்ந்த தீனா அவளின் நெஞ்சின் மீது கரம் பதித்தான்.
இவள் திரும்பிப் பார்த்து நெருப்பாக அவனை முறைத்தாள்.
“ஐ அம் யுவர் ஹஸ்பண்ட்..” என்று நினைவு படுத்தியவன் “இந்த மாதிரி செயற்கையா ஒரு விஷயத்தை கொண்டு வரும் போது அதுக்கு எவ்வளவு பக்க விளைவுகள் இருக்கும்? நீ
ஏன் இப்படி பண்ற. எனக்கு ரொம்ப பொசசிவ்வா இருக்கு..” என்று சொல்லி தலையை பிடித்தான்.
அவன் விழிகளில் இருந்து கண்ணீரும் இறங்கியது.
தொடரும்
குழந்தையும் உறங்கி விட்டிருந்தது. மானசா துண்டுக்குள் இருந்த நைட்டியின் ஜிப்பை இழுத்து விட்டாள்.
“என்ன பழக்கம் இது? எதுக்கு நீ குழந்தைக்கு பேக்கா பசியாத்திட்டு இருக்க?” என்று கேட்ட தீனா குழந்தையின் உதட்டோரம் வழிந்த பாலை பார்த்து விட்டு அவள் முகத்தை சீற்றமாக பார்த்தான்.
அவள் தனது வீண் பயத்தை ஓரம் ஒதுக்கினாள்.
“பொய்யா எதுவும் செய்யல. குழந்தைக்கு தாய்ப்பால்தான் கொடுத்துட்டு இருக்கேன்..” என்று கர்வத்தோடு சொன்னாள்.
‘குழந்தையை என்னிடம் தராமல் மறுத்தீர்களே! பாருங்கள் இந்த குழந்தைக்கு நான் எப்படிப்பட்ட தாயாக மாறி இருக்கிறேன்!’ என்று என்ற கர்வம் அவள் கண்களில் ஒளிர்ந்தது.
இந்த குழந்தைக்கு இனிமேல் நான் நிஜ தாய். என்னையும் இவளையும் பிரிக்க இனி எங்கே யாராலும் முடியாது என்று சொல்லாமல் சொல்லியது அவளின் முகம்.
“என்ன சொல்ற? தாய்ப்பாலா? எப்படி?” புரியாமல் கேட்டான் இவன். அவள் குழந்தைக்கு போலியாக பசி தீர்ப்பதாக நினைத்ததற்கே அவனுக்கு தாங்க முடியாத அளவுக்கு கோபம் வந்தது. இப்போது இவள் சொன்ன சொல் அவனின் புத்தியை நிலைகுலைக்க செய்யும் அளவுக்கு இருந்தது.
“ட்ரீட்மென்ட் மூலம் தாய்ப்பால் சுரக்க வச்சிருக்கேன். என் குழந்தைக்காக..” என்றவள் குழந்தையின் முகத்தை ஆதூரமாக பார்த்தாள்.
குழந்தையை படுக்கையில் கிடத்தி அவளின் வாயை துடைத்து விட்டாள்.
தீனாவுக்கு அதிர்ச்சியில் இதயமே சில நொடிகள் நின்று விட்டது. ஏதோ பெரிய துரோகத்தை சந்தித்தது போல் இருந்தது. அவள் வேறு ஒரு ஆணோடு கூடிக் குலாவி இருந்தால் கூட இந்த அளவிற்கான துரோகத்தை நெஞ்சம் உணர்ந்து இருக்காதோ என்னவோ?
என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே அவளின் கையை பிடித்து இழுத்து கீழே நிறுத்தினான். அவனின் முகத்தில் இருந்த கோபம் கண்டு இவளுக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. அவன் இந்த அளவுக்கு கோபமாக இருந்து இதற்கு முன் அவள் பார்த்தது இல்லை.
சிவந்த கண்கள் அவளை கொல்ல பார்த்தன.
“உன்னை யார் இப்படி செய்ய சொன்னது? உனக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது?” என்று கேட்டு அவளின் தோள்பட்டையை இரண்டு கைகளாலும் பிடித்து உலுக்கினான்.
பூந்தளிர் போல் தள்ளாடியது அவளின் மேனி.
இவனுக்கு ஆத்திரமே அடங்கவில்லை. கோபத்தில் சிவந்த அவனின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. அவன் முகத்தில் இருந்த வேதனையை பார்க்கும் போது இவளுக்கு குழப்பமாய் இருந்தது.
“பெரிய மனுசிதனமா இந்த மாதிரி முடிவுகளை எடுக்க சொன்னது? என்னை நீ கேட்டியா? நீ எனக்கு சொந்தம். இந்த அமுதம் என் குழந்தைக்கு மட்டும்தான் சொந்தம்..” என்று அவளின் நெஞ்சை தொட்டு சொன்னான்.
அவள் உறைந்து விட்டாள்.
“நீ என் குழந்தைக்கு இப்படியொரு துரோகத்தை பண்ணி இருக்க கூடாது. உனக்கு என் மேல கோபம்ன்னா எனக்கு கூட துரோகத்தை பண்ணிக்க. ஆனா என்னோட குழந்தைக்கு துரோகம் செய்ய உனக்கு எந்த உரிமையும் கிடையாது. ஏதோ ஒரு குழந்தைக்காக உன் உடம்பை நீயே மாத்தி..” என்று கத்தியவன் அங்கிருந்த மேஜையை உதைத்ததில் அதன் மீதிருந்த பொருட்கள் கீழே விழுந்தன.
அவள் பயந்து ஓரடி பின்னால் நகர்ந்தாள்.
தன் நெஞ்சின் மீது கை வைத்தவளுக்கு ஏதோ ஒரு குழந்தை என்று அவன் சொன்னதன் அர்த்தமே புரியவில்லை.
ஆனால் அவனின் மானசா என்ற முதல் குரலிலேயே அங்கே வந்து விட்ட சுலோச்சனாவுக்கு விசயம் புரிந்து விட்டது.
அவள் சந்தேகப்பட்டது சரிதான். ப்ரீத்தி ஒரு நாளும் இவனின் மனைவியாக வாழ்ந்திருக்கவில்லை. இவனுக்கு ப்ரீத்தியின் மீது அன்பும் இல்லை. உரிமையும் இல்லை.
ப்ரீத்தி விஷயத்தில் மகன் கல்லாக இருந்தது கண்டு சந்தேகப்பட்டவள் காரணத்தையும் அப்போதே சந்தேகப்பட்டு இருக்க வேண்டும்.
நம் மகனை நாமே புரிந்து கொள்ளாமல் போய் விட்டோமே என்ற குற்ற உணர்வு சுலோச்சனாவின் நெஞ்சை அழுத்தியது.
மானசாவுக்கும் இப்போது தீனாவின் மீது கோபம் வந்தது.
“பைத்தியக்காரன் மாதிரி கண்டதும் உளறிக்கிட்டு இருக்காத.. இது ஏதோ ஒரு குழந்தை இல்ல. உன்னோட குழந்தை..” என்றாள் அழுத்தம் திருத்தமாக.
இவனின் கோபம் பன்மடங்கு அதிகரித்தது.
“இது என்னோட குழந்தை இல்ல. போதுமா? உன் பிரெண்ட் என்கிட்ட வாங்கிய சத்தியத்துக்கு கட்டுப்பட்டு இவ்வளவு நாளும் நான் உன்கிட்ட உண்மையை சொல்லாம இருந்தேன். ஆனா நீ எப்ப என்னோட குழந்தைக்கு துரோகம் பண்ணிட்டியோ இனிமே நான் ஏன் சத்தியத்தை காப்பாத்தணும்? இந்த குழந்தை என்னோட குழந்தையும் இல்ல. உன் பிரெண்ட் எனக்கு ஒரு நாளும் பொண்டாட்டியாவும் இல்லை..” என்றான்.
குழப்பமாக பார்த்தாள். ஆனால் கோபத்தோடு அவனின் சட்டையை பிடித்தாள். “என் பிரெண்ட் மேல பழி போட உனக்கு எவ்வளவு தைரியம்?” என்று கேட்டாள்.
அவளின் கையை தள்ளி விட்டவன் “நான் ஒன்னும் பழி போடல. உனக்கு சந்தேகம்ன்னா அந்த குழந்தைக்கும் எனக்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பாத்துக்க.. ஆனா இனிமே நீ இந்த குழந்தைக்கு பால் கொடுக்கக் கூடாது..” என்று எச்சரிக்கும் விதமாக சொன்னான்.
இவளால் தன் தோழியை சந்தேகப்பட முடியவில்லை. அவளால் யாருக்கும் துரோகம் செய்ய முடியாது. அதுவும் கட்டிய கணவனுக்கு அவள் துரோகம் செய்திருப்பாள் என்று இவளால் துளி கூட நம்ப முடியவில்லை.
ப்ரீத்தியின் மீது போட்ட பழி கூட தன் மீது போட்ட பழி போல் நினைத்து கண் கலங்கியது இவளுக்கு.
“இன்னும் நமக்கு குழந்தை பிறக்கல. நாம இன்னும் வாழவே ஆரம்பிக்கல. அதுக்குள்ள பெரிய தியாகி போல உன்னோட உடம்பை இந்த குழந்தைக்கு அர்ப்பணிச்சி இருக்க. உனக்கும் எனக்கும் நடுவுல ஆயிரம் சண்டை இருக்கட்டும். ஆனா இதைப் பத்தி சொல்லணும்ன்னு உனக்கு கொஞ்சம் கூட தோணலையா? என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு இந்த முடிவுக்கு வரணும்ன்னு தோணலையா?” என்று கேட்டான்.
“கத்தாத. காது வலிக்குது. குழந்தை எழுந்துடும்..” என்றவள் தன் காதுகள் இரண்டையும் பொத்தினாள்.
ப்ரீத்தியின் புனித தன்மையை சந்தேகப்படுவதை விடவும் இங்கே முக்கியமாக இருந்தது இவனின் வாயை அடக்குவதுதான்.
“நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க காரணமே என் ஃப்ரெண்டோட குழந்தைக்காகதான். நான் இப்ப இந்த வீட்டுல வாழ்வதும் இவளுக்காக மட்டும்தான். இவளுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன். இவளுக்கு சத்து குறைபாடு இருக்கு. அதனாலதான் நானே தாய்ப்பால் தர முடிவு பண்ணேன். இது உனக்கு பிறந்ததோ யாருக்கு பிறந்ததோ எனக்கு அது தேவையில்லை. இவ என் பிரண்டுக்கு பிறந்தா. அவ என்னை நம்பி இந்த குழந்தையை விட்டுட்டு போனா. என் உயிர் உள்ள வரைக்கும் இவதான் என்னோட குழந்தை..” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னாள் மானசா.
அவள் சொன்னதில் அதிர்ந்தவன் “அப்படின்னா உனக்கு உன் புருஷனை விட ஏதோ ஒரு குழந்தை முக்கியமா?” என்று கேட்டான்.
“நீ எப்படா எனக்கு புருஷனா நடந்துக்கிட்ட?” என்று கேட்டவள் வாசலில் மாமியாரின் சக்கர நாற்காலியை பார்த்துவிட்டு கதவருகே வந்தாள்.
கதவை சாத்தி தாழிட்டாள். வெளியே இருந்த சுலோச்சனாவும் மருமகளின் எண்ணத்தை புரிந்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து போனாள்.
தீனாவின் முன்னால் வந்து நின்ற மானசா “நீ ஒன்னும் என் புருஷன் கிடையாது. என்னை பிளாக் மெயில் பண்ணி கல்யாணம் பண்ணின. இந்த குழந்தையை தராம எத்தனை நாள் நீ என்னை அழ வச்சன்னு எனக்கு இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. என்னோட அனுமதி இல்லாம எனக்கு எத்தனை முறை தொட்டிருக்க தெரியுமா? உனக்கு என்ன ஆம்பளைன்னா அந்த ஒரு விஷயத்துலதான் உன்னோட திறமையை காட்டணும்ன்னு நினைப்பா?” என்று கேட்டாள்.
இவன் கோபத்தில் இருந்ததால் அவள் சொன்னதை காதில் கூட வாங்கவில்லை.
“அதுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இனி நீ இந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூடாது. அவ்வளவுதான்..” என்றான் கண்டிப்போடு.
“நான் கொடுப்பேன் இது என்னோட குழந்தை..”
“நீ கொடுக்கக் கூடாது. இது என்னோட குழந்தை இல்ல..” அவனும் சண்டை போட்டான்.
“என்னை உன்னோட பொண்டாட்டின்னு வெறும் வாயிலதானே சொன்ன இன்னைக்கு? நீ என்னை பொண்டாட்டியா நினைச்சிருந்தா இந்த விஷயத்தை எப்பவோ என்கிட்ட சொல்லியிருப்ப. எனக்கு என் பிரீத்தி மேல எந்த சந்தேகமும் இல்லை. ஆனா உண்மையிலேயே அவகிட்ட தப்பு இருக்குன்னா அதை நீ என்கிட்ட முதல் நாளே சொல்லி இருக்கணும்..” என்றாள்.
“நான் உன்னை லவ் பண்றேன். நீ இந்த குழந்தைக்காகதான் இந்த வீட்ல இருக்க. இப்படி இருக்கும்போது யார் உண்மையை சொல்லுவாங்க? உன் பிரண்ட் வாங்கிய ஒத்த சத்தியத்துக்காக என் அம்மாகிட்டயே நான் இந்த உண்மையை சொல்லாதவன். என் பிரண்டோட குழந்தையை நான் தூக்கிட்டு போறேன்னு நீ கிளம்பிட்டா அப்புறம் நான் என்ன செய்வேன்?” என்று இவன் தன் பக்கம் நியாயத்தை கேட்டான்.
அவளின் கண்கள் ஒளிர்ந்தது. “ரொம்ப கரெக்டா சொன்ன. இதுதான் உன்னோட குழந்தை இல்லையே. இனி ஏன் நான் உன்னோடு இருக்கணும்? குட் பாய்..” என்று சொல்லிவிட்டு குழந்தையை தூக்க முயன்றாள்.
இவன் பாய்ந்து அவளை தோள்களைப் பிடித்து நேராக நிற்க வைத்தான்.
“ஏன் என் மனசை இப்படி டார்ச்சர் பண்ற? நீ இல்லன்னா என்னால வாழவே முடியாது. நீ ஒரு வாரம் காணாம போனதுக்கு என்னோட ஒரு வருஷம் முடிஞ்சி போச்சி. என்னை நீ தப்பா நினைச்சாலும் பரவால்ல, நீ என்னோடு இருந்தா போதும்ன்னு நினைச்சிதான் நான் உன் கஷ்டத்தை பார்த்தும் பார்க்காம இருந்தேன். இது என்னோட சுயநலம்தான். எனக்கு நீ வேணும், அதுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன். இந்த குழந்தையை கொல்ல கூட தயங்க மாட்டேன்..” என்று மிரட்டினான். அவளை தடுத்து நிறுத்த இவன் எது வேண்டுமானாலும் செய்வான். எத்தனை விதமான பொய்களை வேண்டுமானாலும் சொல்வான்.
ஆனால் அவன் சொன்னதில் ஆத்திரம் கொண்ட மானசா அவன் நெஞ்சில் ஓங்கி அறைந்தாள்.
“என் குழந்தையை கொல்லுவேன்னு சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம்?” என்று கோபத்தோடு கேட்டாள். ஒரே நொடியில் பைத்தியம் பிடித்தவள் போலவே மாறிவிட்டாள்.
“இது உன்னோட குழந்தை இல்லன்னு உலகத்துக்கே தெரியும். உனக்கு பைத்தியம் பிடிச்சி போச்சின்னு சொல்லி உன்கிட்ட இருந்து இந்த குழந்தையை பிரிக்க கூட என்னால முடியும்..” என்று அவன் எப்போதும் கூட மிரட்டதான் செய்தான்.
அவளின் விழிகளில் இருந்து கண்ணீர் அருவி போல் சுரந்தது.
அவளின் முகத்தை அள்ளியவன் “அழாத மானசா. என்னை புரிஞ்சிக்க பாரு. இது நம்மை குழந்தை இல்ல. உன்னோட உடம்பை நீ வீணாக்க வேண்டாம்..” என்றவனை தனது முழு பலத்தையும் பயன்படுத்தி பின்னால் தள்ளினாள்.
“என்னோட உடம்பு மட்டும் இல்ல என் உயிரும் இந்த குழந்தைக்காகதான். இந்த குழந்தையை நீ என்கிட்ட இருந்து பிரிச்சாவோ இந்த குழந்தைக்கு உன்னால ஏதாவது ஆபத்து வந்தாவோ நான் அடுத்த செகண்ட் செத்துப் போனேன்..” என்று மிரட்டினாள்.
முதல் முறையாக அவன் கண்களில் பயம் தெரிந்தது.
அவன் நம்முடைய பலவீனத்தை வைத்து மிரட்டும் போது நாம் ஏன் அவனுடைய பலவீனத்தை வைத்து மிரட்டக் கூடாது?
“இது என்னோட குழந்தை. இந்த வார்த்தைக்கு எப்பவும் மாறாது. உனக்கு நான் வேணா இன்னொரு சான்ஸ் தரேன். இந்த குழந்தையை உன்னோட குழந்தையா நம்மோட குழந்தையா ஏத்துக்க. நான் உன்னோட பொண்டாட்டியா முழு மனசா உன்னோடு வாழுறேன்..” என்றாள்.
தொடரும்
மானசா மாமியாரிடம் குழந்தையை விட்டுவிட்டு ரூமுக்குள் புகுந்தாள்.
ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்து முகத்தை சுத்தம் செய்தாள். விழிகள் கண்ணீரால் பளபளத்தது.
தீனா தன்னை மிஸ் செய்திருப்பது எந்த அளவிற்கு உண்மை என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் அவள் அவனை மிஸ் செய்தது உண்மை. அவன் செய்த கொடுமைகளையும் தாண்டி, தோழியின் கணவன் என்பதையும் தாண்டி அவன் மீது வந்த இந்த நேசத்தை இவள் அடியோடு வெறுத்தாள். இதற்காக அவள் தன்னை திட்டிக் கொள்ளாத நேரமே இல்லை.
அருகில் இருக்கும் போதெல்லாம் அவன் மீது வெறுப்பாக இருந்தது. ஆனால் தொலைவில் சென்ற பிறகு அவனை நினைக்காத நேரமில்லை. தன்னைக் கொடுமை செய்த ஒருவனை எதற்காக நினைக்கின்றோம் என்று அவளுக்கே புரியவில்லை.
இப்போது இங்கு வந்த பிறகும் “அவனின் முகத்தை பார்த்துக்கொண்டு அமர்ந்திரு, அவனை ஆர தழுவிக் கொள், அவன் முகம் முழுக்க முத்தமிட்டு ஐ மிஸ் யூ என்று சொல்!” என மனது சொன்னது. ஆனால் அதை செய்வதற்கு பதிலாக தற்கொலை செய்து கொள்வதே பரவாயில்லை என்று இவளின் ரோஷம் இவளோடு சண்டை போட்டது.
அவனோடு வந்தது காதல் என்று இவள் நினைக்கவில்லை. இங்கே இருக்கும் போதெல்லாம் அவன் தன் உடம்பை கொண்டாடியிருந்தான். அதற்காக இந்த உடம்பு அவனுக்கு அடி பணிந்து விட்டது, வெறும் உடல் பசியின் காரணமாக அவனை நேசிக்க ஆரம்பித்து விட்டது என்று நினைத்தாள்.
ஆனால் தன் உடம்பு தன் கட்டுப்பாட்டை தாண்டி செல்வதும் இவளுக்கு பிடிக்கவில்லை.
சுலோச்சனா வெகு நேரம் குழந்தையை கையில் வைத்திருந்தாள். மானசா பாத்ரூமை விட்டு வெளியே வந்தாள். தனது கேசத்தை வாரினாள். கட்டிலில் பெட்ஷீட்டை உதறி போட்டாள். மாமியாரை தாண்டி போய் எறும்பு சாக்பீஸை எடுத்து வந்து கட்டிலை சுற்றி கோடுகளை போட்டாள். எல்லா பிரச்சனையும் ஒரு எறும்பால் ஆரம்பித்தது. இனிமேல் எந்த எறும்பும் தனது மகளை தொடக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தாள்.
பாட்டில் ஒன்றை எடுத்து தண்ணீரை நிரப்பி கொண்டு தனது படுக்கையறைக்கு வந்தாள்.
குழந்தையை சுலோச்சனாவின் மடியில் இருந்து எடுத்தாள்.
“இவ்வளவு நேரம் ஆகியும் குழந்தை அழவே இல்லை. எனக்கு இதுவே பெரிய சந்தோஷமா இருக்கு..” என்றாள் சுலோச்சனா.
இவள் புன்னகைத்தாலே தவிர அதற்கான காரணத்தை சொல்லவில்லை.
சுலோச்சனா தனது ரூமுக்கு சென்று விட்டாள். இவள் குழந்தையோடு தனது கட்டிலுக்கு வந்தாள். இரவு மாற்றுவதற்கு தேவையான பேம்பர்ஸையும் குழந்தைக்கான உள்ளாடைகளையும் எடுத்து கட்டிலில் ஓரமாய் வைத்தாள்.
கதவை தாழிட்டு விட்டு வந்து குழந்தையின் அருகில் படுத்து கொண்டாள். மும்பையில் இருந்தபோது பெட்ஷீட்டில் விழுந்து விட்டாலே உறக்கம் வந்துவிடும். ஆனால் இப்போது புரண்டு புரண்டு படுத்தும் உறக்கம் வரவில்லை. குழந்தை நல்ல உறக்கத்தில் இருந்தது.
இவள் இரண்டு மூன்று தரம் பாத்ரூமுக்கு சென்று முகம் கழுவி வந்தாள்.
நள்ளிரவு தாண்டிய பிறகே உறக்கம் வந்தது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் குழந்தை பசிக்காக எழுந்து விட்டது. குழந்தை அழ வேண்டும் என்று தேவையே இல்லை. குழந்தை எழுந்தாலே இவளால் உணர முடிந்தது. இப்போதும் குழந்தை அழும் முன்பே எழுந்து குழந்தைக்கு தாய்ப்பால் மூலம் பசியாற்றினாள்.
எப்படியும் சில மாதங்களுக்கு இந்த பால் குழந்தைக்கு போதுமானதாக இருக்கும். அதன் பிறகு இணை உணவு தந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு இருந்தாள். அந்த அளவுக்கு இவளின் உடம்பு குழந்தைக்காக ஒத்துழைத்தது.
குழந்தையின் உருவத்தில் ப்ரீத்தியை பார்த்தாள். குழந்தையை அணைக்கும் போது ப்ரீத்தி தன் அருகில் இருப்பதாகவும் உணர்ந்தாள். ஆனால் அவளை மிஸ் பண்ணாத நேரமே இல்லை
இப்படியே போனால் பைத்தியமாகி விடுவோமோ என்றும் அவளுக்கு பயமாகதான் இருந்தது. குழந்தை மீதான பாசத்தை நேரடியாக காட்ட முடிந்தது. ஆனால் ப்ரீத்தி இல்லை என்பதை வெளிப்படுத்த முடியவில்லை. எவ்வளவு அழுதும் அந்த சோகமும் தீரவில்லை.
குழந்தை பசி தீர்ந்து உறங்கியதும் இவளும் உறங்க ஆரம்பித்தாள்.
மறுநாள் இவள் எழுந்த பொழுது மணி பகல் பத்தாக இருந்தது.
குழந்தைக்கு பசியாற்றி விட்டு தனது காலை நேரத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.
அந்த அறையின் வாசலிலேயே தீனா நின்றிருந்தான். எவ்வளவு நேரமாக நிற்கிறான் என்று தெரியவில்லை.
வெளியே வந்தவள் “இங்கே என்ன பண்ற?” என்று கேட்டாள்.
“ரொம்ப நேரமா நீ எழவே இல்ல. அதனாலதான் கதவை தட்டலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருந்தேன்..” என்றான் தயக்கமாக.
அவன் கண்களில் ஏக்கமும் காதலும் சரிவிகிதமாக கலந்து தெரிந்தது. இவளுக்குதான் எதையும் ஏற்க விருப்பமில்லை. ‘என் தோழியை நேசிக்காதவன்! இவனின் காதல் நமக்கு எதற்கு?’ என்று மனதுக்குள் கேட்டாள்.
“சாப்பாடு ரெடியாயிடுச்சி..” என்று சொல்லிவிட்டு டைனிங் ஹாலுக்கு நடந்தான்.
குழந்தைக்கு பசியாற்ற வேண்டும், அதற்காக இவளும் நேரம் தவறாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
இவள் வந்து டைனிங் ஹாலில் அமர, எதிரில் இருந்த மாமியார் “என் பையன் உன் மேல உயிரையே வச்சிருக்கான்..” என்று ஆரம்பித்தாள்.
திடீரென்று இந்த மாமியாருக்கு என்னவானது? முன்பெல்லாம் தீனா நம்மோடு பேச வந்தாலே மாமியார் எரிந்து விழுவார், என் மகனை மயக்கி விட்டாய் என்று நம் மீது பழி போடுவார், இப்போது திடீரென்று மகனின் காதலுக்கு கொடி பிடிக்கிறாள். அவன் திமிரெடுத்து சாப்பிடாமல் இருந்ததால் இந்த அளவிற்கு மனம் மாறி விட்டாரா என்று இவளுக்கு குழப்பமாய் இருந்தது.
தீனா தன் மனைவிக்கு உணவை பரிமாறினான். இவன் கையால் சாப்பிட வேண்டுமா என்று இவளுக்கு வெறுப்பு வந்தது. ஆனால் அடிக்கடி சண்டை போடவும் விருப்பமில்லை.
சாப்பிட்டு முடித்தவளிடம் “பத்திர பதிவு ஆபீஸ்க்கு போகணும். ரெடியாயிடு..” என்றான் தீனா.
இது குழந்தையின் எதிர்காலத்திற்காக இவள் எடுத்த முடிவு. இதுவரையிலும் துளி அளவு கூட நேசத்தை கூட குழந்தையிடம் காட்டாத ஒருவனை நம்புவதற்கு அவள் தயாராக இல்லை.
பத்திர பதிவு அலுவலகம் செல்வதற்காக தயாராகி குழந்தையையும் தூக்கிக்கொண்டு கிளம்பினாள்.
இவர்கள் போனதுமே அலுவலகத்தில் கூப்பிட்டு விட்டார்கள். தீனா அத்தனை பேப்பர்களிலும் கையெழுத்து போட்டு கொடுத்தான்.
அவனிடம் ஒரு துளி கூட இதற்காக வருத்தம் இல்லை. இவன் எந்த அளவிற்கு நல்லவனா என்று நம்புவதற்கு இவளுக்குதான் மனம் வரவில்லை.
அவன் உள்ளே வேலையாக இருந்த போது இவள் காரில் அமர்ந்து குழந்தைக்கு பசி தீர்த்து முடித்தாள்.
பதிவு முடிந்து இவளையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டவன் “இனிமே என்னை விட்டு எங்கேயும் போக மாட்டதானே?” என்று கேட்டான்.
“ஆனா ஏன் இது திடீர்ன்னு மாறின?” என்று இவள் சந்தேகம் கேட்டாள்.
“நீ என்னை விட்டுப் போக மாட்டேன்னு நினைச்சேன்..” என்றவனுக்கு குரல் கரகரத்தது.
“நீ மிரட்டி கல்யாணம் பண்ணுவ. எனக்கு பிடிக்கலன்னு சொன்னாலும் கட்டில்ல உனக்கு என்ன தேவையோ அதை சாதிச்சிப்ப. குழந்தைக்காக நான் கல்யாணம் பண்ணி வந்தாலும் குழந்தையை என்கிட்ட கொடுக்காம என்னை அழ வைப்ப. ஆனாலும் நான் உன்னை விட்டு போகாம இருக்கணுமா? ரோஷமுள்ள யாரா இருந்தாலும் செத்து போவாங்க. ஆனால் நான் ஓடி மட்டும்தான் போனேன்..” என்று அவள் சொல்ல இவன் காரை நிறுத்தி விட்டான்.
“ப்ளீஸ் இப்படி சொல்லாத. இனிமே உன்னோட அனுமதி இல்லாம உன்னை தொடமாட்டேன். ப்ராமிஸ்..” என்றான்.
“சரி காரை எடுத்து தொலை..” என்றாள் வேண்டாவெறுப்பாக.
கார் மீண்டும் வீட்டை நோக்கி கிளம்பியது.
“சரி இந்த ஒரு விஷயத்துக்கு மட்டும் உண்மையை சொல்லு. என்னோட ஃப்ரெண்டோட டெத் இயற்கையா வந்ததா இல்லை நீ பிளான் பண்ணி கொன்னுட்டியா?” என்று கேட்டாள்.
அதிர்ந்தவன் “குழந்தை பெத்தெடுத்த ஒரு பொண்ணை அதே நாள்ல கொல்லும் அளவுக்கு நான் கொடூரமானவன் கிடையாது. ஆமா நான் உன்கிட்ட மோசமா நடந்துக்கிட்டேன். உன்னோட விருப்பம் இல்லாம உன்னை தொட்டேன். ஆனா இந்த உலகத்திலேயே நான் உனக்கு மட்டும்தான் கெட்டவன். வேற யாருக்கும் நான் தீங்கு செய்ய நினைச்சதில்ல..” என்றான்.
நான் மட்டும் அப்படி என்னை இளிச்சவாய் என்று இவளுக்கு கோபம் வந்தது.
“ஒருவேளை என் பிரெண்ட் டெத்க்கு நீதான் காரணம்ன்னு தெரிஞ்சா அன்னைக்கு நான் உன்னை கொன்னுடுவேன்..” என்றாள். எந்த நம்பிக்கையில் மிரட்டுகிறோம் என்று அவளுக்கே தெரியவில்லை.
“உன் பிரெண்ட் டெத்க்கு எந்த வகையிலும் நான் காரணம் கிடையாது. இன்னும் சொல்லணும்ன்னா அவங்க உயிரை காப்பாத்த எவ்வளவு வேணாலும் செலவழிக்க தயாரா இருந்தேன்..” என்றான்.
அவனை விசித்திரமாக பார்த்தாள் இவள். நம்மை வா போ என்கிறான். அவளை வாங்க போங்க என்கிறான். இவளுக்கு புரியவில்லை.
அவன் இவளின் பார்வையை அறியாமல் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
“ஒரு வாரம் என்னை விட்டு பிரிஞ்சிருக்க உன்னால எப்படி முடிஞ்சது? உனக்கு என் மேல கொஞ்சம் கூட லவ் இல்லையா?” எனக் கேட்டான்.
வீடு வந்து விட்டது.
“லவ் எப்படி வரும்? உன்னை நான் லவ் பண்ண ஒரு வேலிட் ரீசன் சொல்லு. நீ என் பிரெண்டோட ஹஸ்பண்ட். நீ என்னை தொடும்போதெல்லாம் நான் என் பிரெண்ட்க்கு துரோகம் பண்றேன்னுதான் என் மனசாட்சி சொல்லுது. இது என்னை பொறுத்தவரை ஒரு கள்ள உறவு..” என்றாள்.
தீனாவுக்கு முகம் கறுத்தது.
“நான் உன் புருஷன்..” என்றான்.
குழந்தையோடு கீழே இறங்கி நின்றவள் “தாலி கட்டுவதால் ஒருவர் புருஷனாகிட முடியாது. மனசு ஏத்துக்கணும். என் மனசு உங்களை ஏற்கல. இப்ப மட்டும் இல்ல. எப்பவும் ஏற்காது. நான் எப்பவும் என் ப்ரீத்திக்கு துரோகம் செய்ய மாட்டேன். உங்க பக்கத்துல படுத்திருக்கும்போது என் மனசாட்சி எந்த அளவுக்கு என்னை அறுக்குதுன்னு நீங்க ஒருநாள் உணர்ந்திருந்தா கூட என் பக்கத்துல வந்திருக்க மாட்டிங்க..” என்றாள்.
அவன் முகம் மேலும் நிறம் மாறியது. வலி அவன் விழிகளில் தெளிவாக தெரிந்தது.
“நீங்க என்னை சூஸ் பண்ணியிருக்க கூடாது. சாரி..” என்றவள் வீட்டுக்குள் நடந்தாள்.
இவன் அவளின் முதுகை வெறித்தான்.
அவளிடம் உண்மையை சொல்லி விடலாமா என்று யோசித்தான். ஆனால் செய்த சத்தியம் அவனை தடுத்தது.
மானசா நம்மை மன்னிப்பாள், நம்மை விரும்புவாள் என்று அவனின் மனசாட்சி சத்தியம் செய்யாத குறையாக சொன்னது.
இவன் வீட்டுக்குள் வந்தபோது அம்மா இவனையே பார்த்தாள். அம்மாவின் பார்வையில் கூட மாற்றம் இருந்தது. இவன் அதை கவனிக்காமல் தன் அறைக்கு நடந்தான். இன்றும் அலுவலகம் விடுமுறை. ஆனால் மனைவி வீட்டுக்கு வந்து விட்ட நிம்மதியில் இருந்தான்.
மதியம் வரை தன் கட்டிலில் புரண்டுக் கொண்டிருந்தவன் மனைவியின் முகமாவது பார்த்து வரலாம் என்று அவளை தேடி போனான். இவன் சென்றபோது அவள் குழந்தைக்கு தாய்ப்பால் தந்து பசியாற்றிக் கொண்டிருந்தாள்.
அதை பார்த்த கணம் உறைந்து விட்டான் இவன்.
“மானசா என்ன பண்ற நீ?” என்று கத்தினான்.
இவனின் திடீர் கத்தலில் துள்ளி விழுந்தாள் அவள்.
அவனை திரும்பி பார்த்தாள். நெஞ்சின் மீது துண்டு போட்டு மறைத்திருந்தாள். ஏதோ நினைவில் இருந்தவள் இவன் கத்தியதில் மொத்த உணர்வுகளில் இருந்தும் வெளி வந்து விட்டாள்.
வேங்கை போல் நின்றுக் கொண்டிருந்தான். விட்டால் வேட்டையே ஆடி விடுவான் போல. இவளுக்கு அவனை பார்த்து அர்த்தமில்லாத பயம் வந்தது.
தொடரும்.
18
தீனாவின் செயலில் ஸ்டேஷனில் இருந்த அனைவருமே அதிர்ந்து விட்டார்கள்.
மனைவியின் கால்கள் இரண்டையும் பிடித்தவன் தலை உயர்த்தி அவளின் முகத்தைப் பார்த்தான். “நான் செஞ்சது எல்லாமே தப்புதான். இனிமே ஒரு மில்லிமீட்டர் சைஸ் கூட நான் எந்த தப்பும் செய்ய மாட்டேன். ஒரே ஒரு வாய்ப்பு கொடு. நீ இல்லன்னா நான் செத்துடுவேன் மானசா. எனக்கு இதுக்கு மேல தண்டனை கொடுக்காதடி. முடியலடி என்னால..” என்றான்.
நாம் முடியாது என்று சொன்னபோது நம்மை விடாதவன் இப்போது அவனால் முடியவில்லை என்று சொல்கிறான். இதையெல்லாம் நம்புவதா? இவன் நாடகமாடுகிறான் என்று நினைத்தாள் மானசா.
அவளின் கால்களை விடாமல் பிடித்திருந்தவன் “என்னுடைய எல்லாம் சொத்தையும் உன் பேர்ல எழுதி வைக்கிறேன். நீ சொல்லும் பேச்சு எல்லாத்தையும் கேட்கிறேன். ப்ளீஸ் என்னை மன்னிச்சி என்னோடு வா..” என்று கெஞ்சினான்.
பூரணிக்கும் அவளின் கணவருக்கும் தீனாவை பிடிக்காதுதான். ஆனால் திருமணமான பிறகு இவர்களால் மட்டும் என்ன செய்ய முடியும்? அவனை மகள் ஏற்றுக் கொள்வதுதான் நலம் என்று நினைத்தார்கள்.
“ஒரே ஒருமுறை மன்னிப்பு கொடு..” என்று கெஞ்சியவனின் கண்ணீர் அவளின் காலின் மீது விழுந்தது.
இவள் குழந்தையின் முகம் பார்த்தாள்.
“நீ காணாம போன நாள்ல இருந்து இவன் ஒருவேளை சாப்பாடு கூட சாப்பிடல. பட்டினியா உனக்காக காத்திருந்தான். கருணை காட்டும்மா..” என்று மாமியாரும் கெஞ்சினாள்.
ஒரு வாரமாக சாப்பிடாமல் இருக்கும் அளவுக்கு இவனுக்கு நம் மீது காதலா? இவளுக்கு நம்பதான் முடியவில்லை.
“இப்படி கல் மனசா இருக்காதாம்மா. எந்த வீட்ல புருஷன் பொண்டாட்டி தகராறு வராம இருக்க? ஆரம்பத்துல எல்லா பிரச்சனையும்தான் வரும். தினமும் பைத்தியம் பிடிச்சி ரோடு ரோடா உன்னை தேடி அலைஞ்சாரு. புருஷனோட அன்பை புரிஞ்சிக்கம்மா..” என்று பணிப்பெண் ஒருத்தி அட்வைஸ் தந்தாள்.
எல்லாரும் சேர்ந்து தன்னை கார்னர் செய்வது போலவே தோன்றியது இவளுக்கு.
“குழந்தை கடத்திய கேஸ்ல ஜெயிலுக்கு போறதுக்கு பதிலா புருஷனோடு வாழப் போயிடலாம்..” என்று கான்ஸ்டபிள் ஒருவர் இவளை மறைமுகமாக மிரட்டினார்.
இந்த புகாருக்காகவே இவனை கடைசி வரை மன்னிக்க கூடாது என்று அவளின் மனம் சொன்னது.
அவளின் பாதத்தை பிடித்திருந்தவன் “கொல்வதா இருந்தா கூட உன் கையால கொன்னுட்டு போ மானசா. தனியா விட்டு போகாத..” என்றான்.
ஸ்டேஷனில் இருந்த குற்றவாளிகள் கூட இவளையும் அவனையும் வேடிக்கை பார்த்தார்கள். இவளுக்கு உடம்பு கூசியது.
அம்மாவும் “இவ்வளவு பிடிவாதம் ஆகாது..” என்று மிரட்டினாள்.
“எல்லாத்தையும் நீதான் தலை மேல தூக்கி போட்டுக்கிட்ட. இப்ப புருஷன் வேணாம் குழந்தை மட்டும் வேணும்னு சொன்னா எந்த புருஷன் ஏத்துப்பான்.?” என்று கேட்டார் அப்பாவும்.
இவளுக்கு தலையே வெடித்து விடும் போல் இருந்தது. மும்பையில் இருந்து ட்ரெயினில் வரும்போது எக்கச்சக்கமாக பயந்து விட்டிருந்தாள்.
எப்படி தப்பிப்பது என்று யோசித்து மண்டையை குழப்பியதுதான் மிச்சம்.
அவ்வளவு கஷ்டப்பட்டு பிளான் போட்டு தப்பித்து போய் இவ்வளவு சுலபமாக மாட்டிக் கொண்டு விட்டோமே என்று அவனுக்கு கஷ்டமாய் இருந்தது.
இதற்கு மேல் இவனோடு வாழ செல்லாவிட்டால் அம்மாவும் அப்பாவும் சேர்ந்து நம்மை வலுக்கட்டாயமாக இந்த உறவுக்குள் தள்ளி விட்டு விடுவார்கள் என்பது இவளுக்கே தெளிவாய் புரிந்து போனது.
இவன் சொல்லும் வார்த்தைகள் மீது இவளுக்கு நம்பிக்கை இல்லை.
வீட்டிற்கு சென்ற பிறகு மீண்டும் குழந்தையை தன்னிடம் இருந்து பிரித்து விடுவார்களோ என்று பயமாகவே இருந்தது.
தரையோடு படுத்து கிடந்தவனை பார்த்தவள் “சொத்துக்களை எழுதி வைங்க. நான் உங்களோடு வரேன்..” என்றாள்.
அம்மாவும் அப்பாவும் அவளை அதிர்ச்சியோடு பார்த்தார்கள். மகள் கோல்ட் டிக்கரா இல்லை தனது பாதுகாப்புக்காக இந்த சொத்தை உறுதி செய்கிறாளா என்று அவர்களுக்கு புரியவில்லை.
எழுந்து நின்ற தீனா உடனே தனது பிஏவுக்கு போன் செய்தான்.
குழந்தை பசிக்காக அழுதது. இவள் அங்கிருந்த பெண் கான்ஸ்டபிளிடம் தனியிடம் கேட்டு குழந்தையை தூக்கி கொண்டு போனாள்.
இருந்த பரபரப்பில் இவள் எங்கே போகிறாள் என்று யாரும் கவனிக்கவில்லை.
சென்றவள் சில நிமிடங்களுக்கு பிறகு திரும்பி வந்து விட்டாள்.
அடுத்து அரை மணி நேரத்தில் பிஏ வந்துவிட்டார். தீனாவின் சொத்துக்கள் அனைத்தும் மானசாவின் பெயருக்கு மாற்றப்படுவதாக பத்திரம் எழுதப்பட்டது.
“நாளைக்கு பத்திர ஆபீஸ் போய் இதை பதிஞ்சிடலாம்..” என்று மனைவியிடம் சொன்னான் தீனா.
இவள் அவன் கையில் இருந்த பத்திரத்தை வாங்கி பார்த்தாள்.
அத்தனையும் இவள் பேருக்கு எழுதி வைத்திருந்தான்.
அம்மாவும் அப்பாவும் இப்போது இந்த மாப்பிள்ளையை முழுமனதாகவே ஏற்று கொண்டார்கள். மகளின் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறான்? அவள் கேட்டதும் சொத்தை மாத்தி எழுதி வைத்து விட்டானே என்று அவன் மீது இவர்களுக்கு பாசம் பொங்கியது.
போலீஸாரர்களின் புறம் திரும்பிய மானசா “இவர் வீட்டுல இருக்கும் போது எனக்கு ஏதாவது ஆகிட்டா அதுக்கு காரணம் இவர்தான்னு முன்னாடியே கம்ப்ளைன்ட் தரணும்..” என்றாள்.
அவள் சொன்னதை பெண் போலீஸ் ஒருவர் புகாராக எழுதி அவளிடம் கையெழுத்தும் வாங்கிக் கொண்டார்.
தீனாவுக்கு இதயம் வலித்தது. எப்படியாய் இருந்தாலும் அவள் தன்னை தவறாகதான் நினைக்க போகிறாள் என்பதற்காக அவளிடம் முழுக்க முழுக்க தவறாக மட்டுமே நடந்து கொண்டது இப்போது எப்படிப்பட்ட விளைவை கொடுத்திருக்கிறது என்பது இவனுக்கு இப்போதுதான் புரிய வந்திருந்தது. இதற்கு பதிலாக அவளின் மனதை பெறுவதற்கு ஏதாவது முயன்றிருக்கலாம் என்று காலம் கடந்து புத்தி வந்தது.
“இவரோட வீட்டுல எனக்கு பிசிகல் அல்லது மெண்டல் அப்யூஸ் நடந்தா நான் பிரஸ்ல ரிப்போர்ட் பண்ண போவேன்..” என்று போலீஸிடம் முன்னெச்சரிக்கையாக சொல்லிவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள் மானசா.
மகள் இந்த அளவிற்கு உறுதியாய் இருப்பது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கவலையையும் நிம்மதியையும் ஒரே நேரத்தில் கொடுத்தது.
காரில் அவளுக்கான கதவை தீனாவை திறந்து விட்டான். குழந்தையின் பொருட்கள் இருந்த பையை அவனே வாங்கி அவள் அருகில் வைத்தான்.
எப்போதும் முன் சீட்டில் மட்டும்தான் அவள் அமர வேண்டும் என்று சொல்பவன் இப்போது பின் சீட்டை கொடுத்திருந்தான்.
அம்மாவும் அப்பாவும் இவள் அருகில் வந்தார்கள்.
“நாங்க வந்து நாளைக்கு உன்னை பார்க்கிறோம்..” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
சுலோச்சனா தன்னுடைய வாகனத்தில் ஏறினாள். இரண்டு கார்களும் வீட்டை நோக்கி கிளம்பியது.
மானசா ஓரக்கண்ணால் தன் கணவனை பார்த்தாள்.
“ஒரு வாரமா சாப்பிடாம இருக்கியா?” என்று சந்தேகம் கேட்டாள்.
ஆம் என்று தலையாட்டினான்.
“சரி போய் ஏதாவது ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு வா. நீ மயக்கம் போட்டு விழுந்து கார் ஆக்சிடென்ட் ஆயிட்டா நான் என்ன செய்வேன்?” என்று நக்கலாய் கேட்டாள்.
அவள் சொன்னாளே என்பதற்காக இவனும் காரை ஓரம் கட்டினான்.
இறங்கி வந்து இவளுக்கான கதவைத் திறந்தவன் “நீயும் இந்நேரத்துக்கு சாப்பிடாமதானே இருப்ப? சாப்பிடலாம் வா..” என்று அழைத்தான்.
“இந்த குழந்தையை திரும்பி வாங்குறதுக்காக உன் வீட்ல நான் எத்தனை நாள் சாப்பிடாம இருந்தேன் தெரியுமா? அதை ஒரு நாளாவது நீ கவனிச்சியா?” என்று எரிச்சலாக கேட்டாள்
“சாரி. எல்லாம் என்னோட தப்புதான். இனிமே இப்படி எந்த தப்பும் செய்ய மாட்டேன்..” என்று தலை குனிந்து சொன்னான்.
“நல்லாதான் நடிக்கிற..” என்று கசப்போடு சொல்லியபடி குழந்தையை தூக்கிக்கொண்டு இறங்கினாள்.
ஹோட்டலை நோக்கி நடந்தவள் “ஒரு வாரம் சாப்பிடாம இருந்தும் கல்லு மாதிரிதான் இருக்க..” என்று நக்கல் அடித்தாள்.
“இல்ல அப்பப்ப மில்க் அண்ட் வாட்டர் குடிப்பேன்..” அப்பாவியாக சொன்னான்.
“என் பிரண்டு செத்த போது ஒரு சொட்டு கண்ணீர் விடல. இப்ப எனக்காக சாப்பிடாம இருந்திருக்க. ஏன்டா இந்த அளவுக்கு உடம்பு வெறி பிடிச்சி திரியுற.?” என்று திட்டிவிட்டு ஹோட்டலுக்குள் நுழைந்தாள்.
அவள் எவ்வளவு வேண்டுமானாலும் திட்டட்டும்.. அடிக்கட்டும்.. உதைக்கட்டும்.. வாங்கிக்கொள்ள இவன் தயாராக இருந்தான். ஆனால் அவள் தன்னை விட்டு மட்டும் போகக்கூடாது.
குழந்தையை மடி மீது படுக்க வைத்தபடி இருக்கை ஒன்றில் அமர்ந்தவள் தோசையை ஆர்டர் செய்தாள்.
அவன் தனக்கு இட்லியை ஆர்டர் செய்தான். குழம்பை குறைவாக ஊற்றி சாப்பிட ஆரம்பித்தவளின் ஒரு பக்க தொடை குழந்தையை அனிச்சையாக தாலாட்ட ஆரம்பித்தது.
இவன் அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டு சாப்பிட்டான்.
ஒரு வாரத்திற்கு பிறகு உணவு உண்ட காரணத்தால் அவனின் தொண்டை குழி அடைத்துக் கொண்டது.
தண்ணீரை குடித்தான். அப்படி இருந்தும் உடனே விக்கி கொண்டது. மீண்டும் தண்ணீரை பருகினான்.
அவன் உணவை விட அதிகமாய் தண்ணீர் பருகுவதை கண்டு மனம் இறங்கியவள் “கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடு..” என்றாள்.
இவனும் இட்லியை கொஞ்சம் கொஞ்சமாய் பிட்டு உண்ண ஆரம்பித்தான். இப்போது தொண்டை அடைக்கவில்லை.
“தேங்க்ஸ்..” என்றான் நிமிர்ந்து பார்த்து.
“மூஞ்சை பாரு..” என்று திட்டி விட்டு இவள் சாப்பிட ஆரம்பித்தாள்.
“நீ இருந்த இடத்துல உனக்கு ரொம்ப கஷ்டமா இருந்ததா? தனியா மும்பையில் என்ன பண்ணின? பணத்தைக் கூட நீ தூக்கி போகலையே! செலவுக்கு என்ன செஞ்ச?” என்று கவலையாய் கேட்டான்.
“ரொம்பதான் அக்கறை.!” என்று முணுமுணுத்தவள் ”நீ என் கழுத்துல கட்டி இருந்த தாலியை வித்துட்டேன். நிறைய பணம் கிடைச்சது. அதை வச்சிதான் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கினேன். வேலை தேடிட்டு இருந்தேன். அதுக்குள்ள போலீஸ் என்னை கண்டு பிடிச்சிட்டாங்க..” என்றாள்.
இவனுக்கு இதயத்தில் ரம்பத்தை வைத்து அறுப்பது போல் இருந்தது. நாம் சரியாக இருந்திருந்தால் இவள் ஏன் நமது தாலியை விற்கப் போகிறாள் என்று தன்னிடமே கேட்டவன் “உனக்கு அங்கே வேற எந்த பிரச்சனையும் இல்லதானே?” என்று அக்கறையாக விசாரித்தான்.
“இப்படி நடிப்பதை நிறுத்து. தயவு செஞ்சி பேசாத. உன் குரலை கேட்டாலே எனக்கு இரிடேட் ஆகுது..” என்றவள் அதன் பிறகு சாப்பிடுவதில் மட்டும் கவனத்தை செலுத்தினாள்.
இவன் அடிக்கடி அவளின் முகம் பார்த்தான்.
இருவருமாக சாப்பிட்டு முடிக்க இருபது நிமிடங்களுக்கு மேல் ஆனது.
அவன் பில்லை கட்டி விட்டு வந்தான்.
அவள் ஏற காரின் கதவை திறந்தவன் “பார்த்து ஏறு..” என்றான்.
“பேசாதன்னு சொன்னேன்..” என்று எரிச்சலாய் சொன்னவள் ஒரு விஷயம் நினைவுக்கு வரவும் அவனின் முகத்தை பார்த்தாள்.
“உன் வீட்டுக்கு வந்தாலும் நான் தனி ரூம்லதான் தூங்குவேன். என்னையோ குழந்தையையோ நீ டிஸ்டர்ப் பண்ணா அப்புறம் நான் மறுபடியும் எங்காவது ஓடிப் போயிடுவேன்..” என்று மிரட்டினாள்.
வேதனையில் எச்சிலை விழுங்கினான். தன் உடம்புக்காக அவள் வேண்டும் என்று மனம் கேட்டது.
ஆனால் அவளின் வெற்று உடம்பை சொந்தம் கொண்டாட நினைத்துதான் இப்படி வந்து சிக்கி இருக்கிறோம் என்பது இவனின் நினைவிற்கு வந்தது. அவனுக்கு தன் காதலின் மீது நம்பிக்கை இருந்தது. அந்த காதல் நிச்சயம் தன்னை சேர்க்கும் என்று நம்பினான்.
காருக்குள் ஏறும் முன்பே மானசாவுக்கு தனி அறையை தயார் செய்ய சொல்லி பணியாட்களுக்கு போன் செய்து சொன்னான்.
இவர்கள் வீட்டிற்கு போனபோது தனி அறை தயாராக இருந்தது. இவனே அழைத்து போய் அந்த அறையை காட்டினான். குழந்தைக்கும் அவளுக்கும் தேவையான அனைத்தும் அங்கே இருந்தது.
அந்த ரூமை பார்த்த பிறகுதான் இவளுக்கு தன் கணவனின் மீது கொஞ்சம் நம்பிக்கை வந்தது.
“தேங்க்ஸ்..” என்றவளின் பின்னால் வந்து நின்ற சுலோச்சனா “குழந்தை கொடும்மா. ஒரு முறை தூக்கிட்டு தரேன். ரொம்ப ஏங்கி போயிட்டேன்..” என்று கேட்டாள்.
மானசாவுக்கு தன் மாமியாரைப் போல் கல் மனது இல்லை. அதனால் குழந்தையை மாமியாரின் மடியில் வைத்தாள்.
இந்த இரண்டு வாரத்தில் குழந்தை புஷ்டியாகி இருந்தது. வீட்டில் இத்தனை பேர் பார்த்துக்கொண்ட போதும் குழந்தை இந்த அளவிற்கு மாறி இருக்கவில்லை. மானசா குழந்தையின் மீது எந்த அளவிற்கு பாசமாய் இருக்கிறாள் என்பதை குழந்தையை பார்க்கும் போதே இவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
தொடரும்.
17
அம்மாவின் கையை மென்மையாக தள்ளி விட்டான் தீனா.
“எனக்கு பசிக்கல. என்னை தொந்தரவு பண்ணாம தூர போங்க..” என்றவனுக்கு நம் கோபத்தின் காரணமாக அம்மாவை காயப்படுத்தி விடுவோமோ என்று பயமாக இருந்தது.
ஏற்கனவே அர்த்தமில்லாமல் நிறைய பேசி விட்டோம். அதிலேயே அம்மாவுக்கு சந்தேகம் வந்திருக்கும். வேறு ஏதாவது பேசினால் நிச்சயம் அனைத்தையும் கண்டுபிடித்து விடுவார். அதன் பிறகு அம்மாவுக்கு தான் மனம் காயப்படும். அப்படி அம்மா காயப்படுவதில் இவனுக்கு துளி கூட விருப்பமில்லை.
ஆனால் அம்மாவுக்கு இப்போதே முக்கால்வாசி சந்தேகம் வந்து விட்டிருந்தது.
மகனின் முகத்தை பார்த்தவள் அவனின் வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் அங்கிருந்து சென்றாள்.
உணவைக் கொண்டு போய் டைனிங் டேபிள் மீது வைத்தாள். மாத்திரைகள் விழுங்க வேண்டும் என்பதற்காக இவள் நேர நேரத்திற்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். ஆனால் அந்த உணவை மனம் ஜீரணிக்கவில்லை.
தீனா குளிப்பதற்கு சென்றான். விழுந்த தண்ணீர் அனைத்தும் நெருப்பு போல் சுட்டது.
அந்த தண்ணீரோடு கலந்தது இவனின் கண்ணீர். அன்று ஒருநாள் அவள் சொல்ல சொல்ல கேட்காமல் இந்த தண்ணீரோடு சேர்த்து அவளை திருடி இருந்தான். அன்று அந்த கண்ணீருக்கு இவன் பாவம் பார்க்கவில்லை. இன்று இவன் கண்ணீர் விடும்போது பார்ப்பதற்கு கூட அவள் பக்கத்தில் இல்லை.
முகத்தை பொத்தியபடி பின்னால் இருந்த சுவரோடு சாய்ந்தான். இந்த பாத்ரூம் கூட அவளின் வாசத்தைதான் வீசிக்கொண்டிருந்தது.
இந்த விதி ஏன் இப்படி செய்ய வேண்டும் மானசாவை ஆரம்பத்திலேயே பார்த்திருக்க வேண்டும். அவளை அப்போதே காதலித்து இருக்க வேண்டும். இவனின் கண்ணீர் நிற்கவே இல்லை.
குளித்துவிட்டு வெளியே வந்தவன் அரைகுறையாய் ஆடை உடுத்தி கட்டிலில் விழுந்தான். கண்ணீர் மீண்டும் இமைகளை தாண்டி இறங்கியது. அவளை எந்த அளவுக்கு காதலித்திருக்கிறோம் என்பதே இந்த பிரிவின் போதுதான் இவனுக்கே தெரிய வந்தது.
தலையணையை இறுக்க அணைத்தவனுக்கு அவள் திரும்பி வராவிட்டால் செத்து விட வேண்டும் என்ற எண்ணம்தான் நெஞ்சு முழுக்க நிறைந்து நின்றது. அவள் பணத்தையோ நகையோ இந்த வீட்டில் இருந்து எடுத்து போயிருக்கவில்லை.
அவளுக்கு முன்னாள் காதலன் யாருமில்லை. அவளை பார்த்த அடுத்த நாளே ஆளை செட் செய்து அதைப்பற்றி கண்டுபிடித்து விட்டான் இவன்.
பணம் கூட இல்லாமல் எங்கே எப்படி கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறாளோ என்று இவனுக்கு கவலையாய் இருந்தது. அதுவும் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு தனி ஒரு பெண்ணாக வாழ்வது மிகப்பெரிய கஷ்டம் என்று இவனுக்கும் தெரியும்.
எல்லாவற்றுக்கும் காரணம் அந்த குழந்தை. அந்த குழந்தையை அவளிடம் இருந்து பிரிக்க முயன்றிருக்கா விட்டால் அவள் விட்டு போயிருக்க மாட்டாள் என்று அந்த குழந்தையின் மீது இவனுக்கு கோபம் வந்தது. அதே சமயம் அந்த குழந்தைதான் தன் காதலை சேர்த்து வைத்தது என்பதையும் அவன் மறக்கவில்லை.
போலீஸிடம் இருந்து தகவல் வந்து விடாதா என்று இவன் தூங்கும் வரையிலும் செல்போனை பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு நள்ளிரவுக்கு மேல் கண் மூடினான்.
விடிகாலை நேரத்தில் சுலோச்சனாவுக்கு உறக்கம் கலைந்து விட்டது. சக்கர நாற்காலியில் ஏறி அமர்ந்தவள் தன் அறையை விட்டு வெளியே வந்தாள்.
ப்ரீத்தியின் புகைப்படத்தின் முன்னாலிருந்த விளக்கை ஏற்றினாள்.
பிரீத்தியை மனதார வேண்டிக் கொண்டவள் “இதுக்கு முன்னாடி நான் என்ன தப்பு செஞ்சேனோ எனக்கு தெரியல. ஆனா இனியாவது நடக்கும் எல்லாமே சரியானதா இருக்கணும்ன்னு ஆசைப்படுறேன். என் பையனோட மனசுல அந்த பொண்ணுதான் இருக்கான்னா அவளை எப்படியாவது திரும்ப கூட்டி வந்துடு. உன்னோட குழந்தைக்கு அவதான் அம்மாவா இருக்கணும்ன்னு நீ முடிவு பண்ணியிருந்தா அதை நான் இனிமே தடுக்க மாட்டேன்..” என்றாள்.
கண்களைத் திறந்து புகைப்படத்தை பார்த்தவள் “என் பையன் ஒரு நாள் பட்டினி கிடந்தா கூட மனசு தாங்காது. ஆனா இப்ப இத்தனை நாள் பட்டினியா இருக்கான். என்னை இதுக்கு மேல கஷ்டப்பட விடாதம்மா. வாழ்க்கையில் பல கஷ்டங்களை பார்த்துட்டு இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன். இந்த நிம்மதி பறி போக வேண்டாம்..” என்று கெஞ்சினாள்.
நாற்காலியை உருட்டிக்கொண்டு மகனின் அறைக்கு சென்றாள்.
ப்ரீத்தியோடு அவன் கூடி அமர்ந்து பேசியதை இவள் ஒரு நாளும் பார்த்திருக்கவில்லை. ஒருநாளும் அவளை அவன் வெளியே கூட்டிப் போனதில்லை. அவளுக்காக எதையும் வாங்கி வந்து தந்ததில்லை. அவளைப் பார்த்து சிறு கண் சைகை கூட காட்டியதில்லை. இப்போது யோசித்துப் பார்க்கும்போது கணக்கு எல்லாம் சரியாகதான் வந்தது.
இரவு விளக்கின் வெளிச்சத்தில் மகன் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
எங்கிருந்தோ ஒரு பெண்ணை அழைத்து வந்து அவளையே திருமணம் செய்து கொள் என்று அம்மா சொன்னது மறு வார்த்தை பேசாமல் அவளை வாழ்க்கை துணையாக ஏற்றவன் இந்த மகன். இவனை சந்தேகப்பட்டு இருக்கக் கூடாது என்று அவளின் மனம் இப்போது அடித்துக்கொண்டது.
உறங்கிக் கொண்டிருந்த மகனின் கேசத்தை கோதியவள் ‘கண்டிப்பா உன்னோட பொண்டாட்டி உன்கிட்ட திரும்பி வந்துடுவா..’ என்று மனதோடு சொன்னாள்.
தீனா கண் விழித்த போது மணி பகல் ஒன்பதாகி இருந்தது. இப்போதெல்லாம் உறங்கும் நேரமும் தெரிவதில்லை. எழும் நேரமும் தெரிவதில்லை. அலுவலகத்தின் பக்கமே செல்லவில்லை. அதையெல்லாம் அவனின் அசிஸ்டென்ட்களும் பிஏவுதான் பார்த்துக் கொள்கிறார்கள். நேரத்தை வீண் செய்து கொண்டிருக்கிறான். இப்படி ஒரு கம்பெனியை உருவாக்கவும் அதை நிர்வகிக்கவும் நிறைய கஷ்டப்பட்டிருந்தான். இந்த சில நாட்களில் ஒரு சில ப்ராஜெக்டுகள் கையை விட்டு போயிருந்தன.
அவற்றையெல்லாம் திரும்ப எப்படி கைப்பற்றுவது என்று தெரியவில்லை. ஆனால் அதைப் பற்றி யோசிக்க கூட நேரம் இல்லாத அளவுக்குதான் இவனின் மனதுக்குள் மானசாவை பற்றிய எண்ணங்கள் இடம் பிடித்திருந்தன.
குளித்தவன் வெளியே வந்தபோது அம்மா பிரீத்தியின் புகைப்படத்தின் முன்னால் இருந்த விளக்கிற்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தாள்.
இவன் பக்கம் திரும்பி பார்த்தவள் “இப்பவாவது சாப்பிடு..” என்று சொன்னாள்.
இவன் எந்த பதிலும் சொல்லாமல் வெளியே கிளம்பினான்.
அவளின் பெற்றோரின் வீட்டிற்கு வந்தான்.
மகளைக் காணவில்லை என்று அவர்களும்தான் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவனுக்கு அவர்களின் மீது நம்பிக்கை இல்லை.
அவன் வீட்டிற்கு வந்தபோது அவனின் மச்சான் பள்ளிக்கு சென்று இருந்தான். மாமனாரும் மாமியாரும் மகள் எங்கே போயிருப்பாள் என்று பேசிக்கொண்டு அமர்ந்திருந்தார்கள்.
இவன் வந்ததும் இருக்கையை விட்டு எழுந்து நின்ற மாமியார் இவனுக்கு தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
மருமகன் என்று அவள் மெச்சி கொள்ளவில்லை. ஆனால் வீட்டுக்கு ஒரு மனிதர்களுக்கு தண்ணீர் தர வேண்டும் என்பது தமிழர் பண்பாடு. அதற்காக இந்த தண்ணீரை கொடுத்தாள்.
மாமனாரின் முன்னால் வந்து தரையோடு மண்டியிட்டான். தனது குதிகாலியின் மீது அமர்ந்தவன் “அவ எங்கே இருக்கான்னு உங்களுக்கு தெரிஞ்சா தயவு செஞ்சி சொல்லுங்க. அவளோட மனசு நோகும்படி இனிமே எப்பவும் நடந்துக்க மாட்டேன்..” என்று விரல்களை கோர்த்து கெஞ்சினான்.
அப்படி என்றால் இவன் மகளின் மனம் நோகும்படி நடந்து கொண்டு இருக்கிறான் என்று அப்பாவுக்கு புரிந்தது.
ஆனால் அவன் மனைவியை பிரிந்ததால் படும் கஷ்டம் என்னவென்று பூரணிக்கு புரிந்தது. “அவ இருக்கும் இடம் தெரிஞ்சா கண்டிப்பா சொல்லுவோம் தம்பி. அவ எங்ககிட்டயும் சொல்லாமதான் போய்ட்டா..” என்றாள்.
“நீ சரியில்லடா. உன்னாலதான் ப்ரீத்தி இறந்து போயிருக்கா. அவளோட உயிர் இல்லாத உடம்பை பார்த்தும் கூட ஒரு சொட்டு கண்ணீர் விடாதவன் நீ. உனக்கு இதெல்லாம் கம்மி. இனிமேதான் உன்னை மொத்த பாவமும் பிடிச்சி ஆட்ட போகுது..” என்று சாபம் வைத்தார் மாமனார்.
“இதுவரைக்கும் நான் செஞ்சதெல்லாம் தப்புதான். ஆனா மானசா எங்க இருக்கான்னு சொல்லுங்களேன் ப்ளீஸ்..” என்று காலில் விழாத குறையாக கேட்டான்.
“நிஜமாவே அவ இங்க இல்ல தம்பி..” என்று பூரணி சொன்ன அதே நேரத்தில் அவனின் செல்போன் ஒலித்தது.
அழைப்பை ஏற்றவன் “சார் உங்க குழந்தையை கண்டுபிடிச்சிட்டோம்..” என்று போலீஸ் சொல்லவும் உடனே எழுந்து நின்றான்.
மாமியாரையும் மாமனாரையும் பார்த்தவன் அவர்களும் மகளை பிரிந்து கஷ்டப்படுகிறார்கள் என்பதால் “மானசாவை கண்டுபிடிச்சிட்டாங்க..” என்று சொன்னான்.
அவர்களுக்கும் இப்போதுதான் உயிரே வந்தது.
உடனே மூன்று பேருமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்கள்.
“மும்பையில ஒரு வாடகை வீட்டுல இவங்களை கண்டுபிடிச்சோம். போலீஸ் அவங்களை ட்ரெயின்ல இங்கே கூட்டிட்டு வந்துட்டு இருக்காங்க. நைட்டுக்குள்ள வந்துடுவாங்க..” என்று சொன்னார் அந்த ஸ்டேஷனில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்.
இவன் அங்கிருந்த பெஞ்சின் மீது அமர்ந்தான். அவள் வந்த பிறகு நாம் அழைத்தால் நம்மோடு வருவாளா என்று கவலை பிறந்தது.
நேரம் போய்க்கொண்டே இருந்தது. இவனுக்கு இதயம் தடதடத்து கொண்டே இருந்தது.
மதிய நேரத்தில் மானசாவின் அம்மாவும் அப்பாவும் சாப்பிட கிளம்பினார்கள்.
“சாப்பிட வாங்க தம்பி..” என்று இவனையும் அழைத்தார்கள்.
இவன் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அதே இடத்தில் அமர்ந்து இருந்தான்.
சப் இன்ஸ்பெக்டர் மானசாவை கண்டுபிடித்து விட்ட விஷயத்தை சுலோச்சனாவுக்கும் போன் செய்து சொன்னார். அவளும் பணியாட்கள் இருவரை அழைத்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்து விட்டாள்.
இரவு நெருங்கியது. தீனா நகங்கள் மொத்தத்தையும் கடித்து துப்பி விட்டான். நிமிடத்திற்கு பத்து முறை வாசலை பார்த்தான். எப்போது அவள் வருவாளோ என்று காத்துக் கிடந்தான்.
இரவு ஒன்பது மணி அளவில் ஜீப் ஒன்று போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வந்து நின்றது.
இவனும் மானசாவின் பெற்றோரும் எழுந்து நின்றார்கள். போலீஸ் மானசாவை உள்ளே அழைத்து வந்தார்கள். குழந்தையை அணைத்தபடி உள்ளே வந்தவள் தீனாவை கண்டதும் கொடூரமாக முறைத்தாள்.
அம்மாவும் அப்பாவும் எழுந்து வந்தார்கள். “என்னடி பழக்கம் இது?” என்று அம்மா சண்டை போட்டாள்.
தீனா விழிகளில் நிரம்பிய நீரோடு அவளைப் பார்த்தான்.
விழிகளால் கெஞ்சினான். ஆனால் இவளின் முகத்தில் இருந்த கோபம் கொஞ்சமும் குறைந்திருக்கவில்லை.
அங்கிருந்த பெண் போலீஸ் “குழந்தையை நீங்க கடத்திப் போனதா இவர் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காரு..” என்று தீனாவை கைகாட்டி சொன்னார்.
கசந்து புன்னகைத்த மானசா அவன் அப்படி கம்ப்ளைன்ட் கொடுக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம் என்று நினைத்தாள்.
சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு மருமகளை நெருங்கி வந்த சுலோச்சனா மருமகளின் இடது கையை பற்றினாள்.
குனிந்து பார்த்தாள் மானசா.
“எல்லா தப்பும் என் மேல. குழந்தையை உங்கிட்ட கொடுக்காம வச்சிருந்ததும் நான்தான். எனக்கு நீ என்ன தண்டனை வேணாலும் கொடு. ஆனா என் பையனை விட்டு பிரிஞ்சி போகாதம்மா..” என்று கெஞ்சலாக கேட்டுக் கொண்டாள்.
ஆனால் மாமியாரின் வார்த்தைகளை நம்புவதற்குதான் இவளுக்கு மனம் வரவில்லை.
“இனிமே உன்னையும் குழந்தையையும் ஒரு செகண்ட் கூட பிரிக்க மாட்டேன். உன்னை ஒரு வார்த்தை சொல்ல மாட்டேன். நானோ என் பையனோ ஏதாவது தப்பு பண்ணி இருந்தா அதை மன்னிச்சிடு..” என்றாள்.
நன்றாகதான் நாடகம் ஆடுகிறீர்கள் என்று மனதுக்குள் நினைத்தவள் போலீஸிடம் திரும்பி “இது என்னோட குழந்தை. என்னையும் என் குழந்தையையும் விட்டுட சொல்லுங்க..” என்றாள்.
“குழந்தையோட அம்மா இறந்துட்டாங்க. நீங்க அந்த குழந்தைக்காக இவரை இரண்டாம் கல்யாணம் பண்ணி இருக்கீங்க. எல்லாமே எங்களுக்கும் தெரியும். நீங்க புதுசா கதை சொல்ல வேணாம்..” என்று அவளை அதட்டிய அந்த இன்ஸ்பெக்டர் தீனாவுக்கு மிகவும் வேண்டப்பட்டவர்.
“விருப்பம் இருந்தா இவரோடு போங்க. இல்லன்னா குழந்தையை அவர்கிட்டயே கொடுத்துடுங்க..” என்றார்
சப் இன்ஸ்பெக்டர்.
குழந்தையை இவள் இறுக்கமாக தன்னோடு அணைத்த நேரத்தில் தீனா நெருங்கி வந்து இவளின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான்.
தொடரும்.
16
தீனா அன்றைய வேலை முடிந்து மனைவியை அழைத்துப் போக மாமியார் வீட்டிற்கு வந்தான். நேற்றைய இரவின் கதகதப்பும் தித்திப்பும் நெஞ்சம் முழுக்க நிறைந்து நின்று இருந்தது.
வாழ்க்கையையே இப்போதுதான் வாழ தொடங்கியது போல் இருந்தது. அவள் தன்னை இந்த அளவிற்கு கவனித்துக் கொள்வாள் என்றால் தன் சொத்து மொத்தத்தையும் அவளுக்கு எழுதி வைக்க இவன் தயாராக இருந்தான். வெறும் உடம்புக்கு அலைகிறாய் என்று மனசாட்சி சொன்னது. அவளின் காலில் விழுந்து அடிமை போல் கிடக்க போகிறாயா என்று அந்த மனசாட்சி குத்தி கேட்டது.
ஆனால் இவனுக்கு மனசாட்சியின் வார்த்தை முக்கியமில்லை. மானசா, அவளின் விழி பார்வை போதும் இவன் செத்துப் பிழைக்க. அவளின் விரல் அசைவு போதும் இவன் வாழ்ந்து பார்க்க.
மாமியாரின் வீட்டின் முன்னால் காரை நிறுத்திவிட்டு இறங்கியவன் நெஞ்சை நிமிர்த்தியபடி வீட்டின் காலின் பெல்லை அழுத்தினான்.
இனிமேல் தன் மாமியார் வீட்டில் இருப்பவர்களும் தன்னை ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்று சந்தோஷத்தில் பூரித்தான்.
கதவை திறந்த பூரணி இவனை பார்த்துவிட்டு முறைக்க ஆரம்பித்தாள். “நீங்க எதுக்கு இங்க வந்து இருக்கீங்க?” என்று கேட்டாள்.
மாமியார் மன்னிக்க தயாராக இல்லை என்பதை புரிந்து கொண்டவன் நேரமெடுத்து பொறுமையாக மன்னிக்கட்டும் என்று நினைத்தபடி “மானசாவை கூட்டிப் போக வந்தேன்..” என்று சொன்னான்.
அவள் புருவம் சுருக்கினாள். “மானசாவா? அவளை எதுக்கு இங்கே வந்து தேடுறிங்க?” என்று கேட்டாள்.
இவன் கை கடிகாரத்தைப் பார்த்தான். அதற்குள் நம் வீட்டிற்கு போய்விட்டாளா என்று யோசித்தவன் “நான் வர வரைக்கும் வெயிட் பண்ண சொன்னேன்!” என்றான் மாமியாரிடம்.
பூரணி இவனை புரியாமல் பார்த்தாள்.
“எப்ப இங்கிருந்து கிளம்பினா?” என்று கேட்டான் தீனா.
“யாரை கேக்கிறிங்க? என்ன கேக்கிறிங்க?” என்று சீறினாள் மாமியார்.
இந்த மாமியாரின் சீறலை பார்க்கும்போது நம் மனைவி எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றியது இவனுக்கு.
“காலையில் மானசாவை இந்த வீட்டுல விட்டுட்டு போனேனே.. அவளைதான் கேட்கிறேன்..” என்றான்.
இவனை கொடூரமாக முறைத்தாள் பூரணி.
“இங்க என் பொண்ணு வரல. உங்களை கல்யாணம் பண்ண பிறகு அவ எங்க வீட்டு பக்கமே வரல. அவ போன் பண்ணா கூட நானோ அவங்க அப்பாவோ பேசுறது கிடையாது.. நீங்க இங்கே வந்து என்ன கதை அளந்துக்கிட்டு இருக்கிங்க?” என்று கேட்டாள்.
இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. “இல்லைங்க காலையில் இதே வீட்டு வாசல்லதான் இறக்கி விட்டுட்டு போனேன். எதுக்கு நீங்க என்கிட்ட பொய் சொல்றிங்கன்னு எனக்கு சுத்தமா புரியல..” என்றான்.
“என் பொண்ணு என் வீட்டுக்கே வரலைன்னு சொல்றேன். அதுக்கப்புறமா சும்மா நின்னு கத்திக்கிட்டு இருக்கிங்க..” என்று மாமியார் சத்தமிட்டாள்.
இவர்களின் சத்தத்தில் மானசாவின் தம்பி வீட்டுக்குள் இருந்து வந்தான்.
அம்மாவையும் மாமனையும் மாறி மாறி பார்த்தவன் “அக்காவை காலையில இவர் நம்ம வீட்டு வாசல்ல இறக்கி விட்டாரும்மா..” என்று தாயிடம் சொன்னான்.
பூரணி மகனை குழப்பத்தோடு பார்த்தாள். “நீ அவளை பார்த்தியா?” என்று கேட்டாள்.
“ஆமா அம்மா. அவர் இறக்கி விட்டுப் போனதும் ஆட்டோ பிடிச்சி இங்கிருந்து போய்ட்டா. அவ என்னை பார்க்கல. அவ கையில குழந்தை கூட இருந்தது..” என்றான் தம்பி.
பூரணிக்கு தன் மகள் ஏன் இப்படி செய்தாள் என்று புரியவில்லை.
ஆனால் தீனாவுக்கு புரிந்து விட்டது. குழந்தை அவளின் கையில் கிடைத்தால் அவள் வீட்டை விட்டு ஓடி விடுவாள் என்று இவனின் மனசாட்சி வெகு நாளாகவே எச்சரித்து கொண்டு இருந்தது. இவனும் முடிந்த அளவிற்கு அவள் மீது கண்ணாகதான் இருந்தான். ஆனால் இப்போது அவள் தன் வேலையை காட்டி விட்டாள்.
நேற்று இரவு அவள் அப்படி நடந்து கொண்டதற்கான அர்த்தம் கூட இப்போதுதான் இவனுக்கு புரிந்தது. நம்மை மயக்கி இருக்கிறாள். ஏமாற்றி குழந்தையை வாங்கி இருக்கிறாள். இப்போது நம்மை விட்டு ஓடியே போய்விட்டாள்.
கோபத்தில் இவனுக்கு ரத்தம் கொதித்தது. ஆனாலும் அவசரப்பட்டு அவளை சந்தேகப்படக் கூடாது என்று முடிவெடுத்தவன் வீட்டிற்கு போன் செய்து மானசா அங்கே இருக்கிறாளா என்று விசாரித்தான்.
“அவங்க இங்க வரல சார்..” என்று பணிப்பெண் சொன்னாள்.
இவனின் சந்தேகம் கன்ஃபார்ம் ஆகிவிட்டது. உடனே அங்கிருந்து கிளம்பினான். முதல் வேலையாக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அவள் தன் குழந்தையை கடத்திவிட்டதாக புகார் அளித்தான். இப்படி புகார் அளித்தால்தான் அவளை சீக்கிரம் கண்டுபிடிக்க முடியும் என்று நினைத்தான்.
மானசாவின் புகைப்படத்தையும் குழந்தையின் புகைப்படத்தையும் போலீஸ் வாங்கிக் கொண்டார்கள். அங்கிருந்த ஒரு போலீஸ் அதிகாரியிடம் எக்கச்சக்கமான பணத்தையும் கொடுத்தான்.
“சீக்கிரம் அவளை கண்டுபிடிச்சி கொடுங்க..” என்று வேண்டி கேட்டுக் கொண்டான்.
வீட்டிற்கு வந்தவனுக்கு பைத்தியமே பிடிக்கும்போல் இருந்தது.
ஹாலில் ஓரமாய் அமர்ந்து இருந்த அம்மா இவன் வந்ததும் “அவ எங்கே? குழந்தை எங்கே?” என்று கேட்டாள்.
இவன் தன் மனதில் இருந்து மொத்த கடுப்பையும் அம்மாவின் மீது காட்ட ஆரம்பித்து விட்டான்.
“எல்லாம் உங்களால வந்ததும்மா. அவகிட்ட குழந்தையை கொடுக்க மாட்டேன்னு நீங்கதான் பிடிவாதம் பிடிச்சிங்க. அவ உங்க மேல இருந்த கோபத்துல என்னையும் விட்டுட்டு போயிட்டா..” என்று கத்தினான்.
மேஜை மேல் இருந்த பொருட்களை எல்லாம் தூக்கி போட்டு உடைத்தவன் “என் பொண்டாட்டி என்னை அனாதையா நிறுத்திட்டு போயிட்டா. இப்ப உங்களுக்கு நிம்மதியா?” என்று கேட்டான்.
“குழந்தையை வேற வச்சிக்கிட்டு என்ன பண்ணப் போறாளோ? அவளை இப்ப எங்கே தேடி கண்டுபிடிப்பேன்? என் வாழ்க்கையை நீங்க நாசம் பண்ணிட்டிங்க. இப்ப என் உயிரையே நான் தொலைச்சிட்டேன்..” என்றவன் தலையை பிடித்தபடி சோபாவில் வந்து அமர்ந்தான்.
சுலோசனாவுக்கு அவனைப் பார்த்து கோபம்தான் வந்தது. மனைவி இறந்தபோது கொஞ்சமும் வருத்தப்படாதவன், இப்போது இவள் காணாமல் போனதற்காக இத்தனை சீன் போடுகிறான். இவனின் சுயநலத்தை அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
“எல்லாம் என் தப்பு. அவளை ரொம்ப மோசமா ட்ரீட் பண்ணிட்டேன். அவளோட பார்வையில் நான் வில்லன்தானே, ஏன் அவகிட்ட நல்லவனா நடந்துக்கணும்ன்னு நினைச்சி என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டு இருந்தவளை அப்படியே விட்டுட்டேன். இப்ப மொத்தமா என்னை அனாதையா நிறுத்திட்டு போயிட்டா..” என்றவனின் விழிகளில் இருந்து கண்ணீர் கொட்டியது.
அவன் திட்டும் போதும் கத்தும் போதும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத சுலோச்சனா அவனின் விழிகளில் இருந்து கண்ணீர் இறங்கியது கண்டு அதிர்ந்து போனாள்.
இவனைப் பார்த்தால் வெறும் உடல் மோகத்திற்காக அழுபவன் போல தெரியவில்லை. அவளை தொலைத்து விட்டோமே என்ற சோகத்தில் உண்மையான வேதனையில் அழுது கொண்டிருந்தான்.
இப்படிப்பட்டவன் ப்ரீத்தியின் இறுதி சடங்கின் போது கொஞ்சம் கூட வருத்தப்படாதது ஏன் என்று இவளுக்குள் புது கேள்வி எழுந்தது.
பணியாட்கள் ஆளுக்கொரு மூலையில் நின்று தீனாவை பார்த்து பரிதாப பட்டார்கள்.
“அவ போனதுக்கு நான் என்ன பண்ணுவேன்?” என்று அம்மா கேள்வி எழுப்பினாள்.
கண்ணீரோடு நிமர்ந்து அம்மாவை பார்த்த தீனா “அதுதானே நீங்க என்ன பண்ணுவிங்க? நீங்களா ஒருத்தியை தேடிப் பிடித்து கட்டி வைப்பிங்க. அப்ப நான் எதுவும் சொல்லாம கல்யாணம் பண்ணிப்பேன். ஆனா நானா ஒருத்தியை விரும்பி அவளை பிளாக் மெயில் பண்ணி கல்யாணம் பண்ணி வந்தா அவளை கொடுமை பண்ணுவிங்க. அவ இந்த குழந்தைக்காகதான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா..” என்று புலம்பினான்.
“அவ தூக்கி போனது என்னோட பேத்தியை..” என்று அம்மா எரிச்சலாக சொன்னாள்.
“ஆனா காணாம போனது என்னோட பொண்டாட்டி. என் வாழ்க்கையை தவிர உங்களுக்கு மீதி எல்லாமே முக்கியம்..” என்று வெறுப்போடு சொன்னான்.
போலீசுக்கு போன் செய்து விசாரித்தான். மானசாவை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொன்னார்கள் போலீசார்.
இரவில் அவன் சாப்பிட வரவில்லை. குழந்தை இல்லை என்ற துக்கம் சுலோச்சனாவை வதைத்தது. காலியாக கிடந்த தொட்டிலை பார்த்துக் கொண்டிருந்தவள் மனம் கேட்காமல் மகனை தேடிப் போனாள்.
அவன் தன் படுக்கை அறை கட்டிலில் மனைவியின் தலையணையை கட்டிப்பிடித்தபடி உட்கார்ந்திருந்தான். அவன் விழிகளில் இருந்து கண்ணீர் இறங்கிக் கொண்டிருந்தது. அவன் இந்த அளவிற்கு அழுவான் என்று சுலோச்சனா எதிர்பார்க்கவே இல்லை.
“சாப்பிட வாடா..” என்று அவனை அழைத்தாள்.
“என் வாழ்க்கையே இப்ப என்னோடு இல்ல. சாப்பாடு ரொம்ப முக்கியமா?” என்று சீறியவன் “என்னை தனியா விட்டு போங்க. அவ மட்டும் திரும்பி வரலன்னா நான் செத்து போயிடுவேன்..” என்று அம்மாவை மிரட்டினான்.
அவன் வார்த்தைகளில் அதிர்ந்து விட்டாள் சுலோச்சனா.
“ப்ரீத்திக்கிட்ட இல்லாத எது இவகிட்ட இருக்கு?” மனம் தாங்காமல் கேட்டாள்.
ப்ரீத்தியின் சடலத்தை பார்த்து இவன் இதே போல் ஒரு துளி கண்ணீர் விட்டு இருந்தால் கூட சுலோச்சனாவுக்கு மனம் ஆறியிருக்கும்.
அம்மாவின் கேள்வியில் ஆத்திரமடைந்த தீனா “ஏனா இவ என்னோட பொண்டாட்டி. இது என்னோட காதலி..” என்று கத்தி சொன்னான்.
அவன் வார்த்தைகளில் சுலோச்சனாவுக்கு உடம்பு நடுங்கியது. மகன் திடீரென்று வளர்ந்து விட்டது போல் இருந்தது.
போனவள் திரும்பி வராமல் போய்விடுவாளோ என்று இவனுக்கு அவ்வளவு பயம். அந்த பயத்தை அம்மாவிடம் கோபமாக காட்டிக் கொண்டிருந்தான்.
சுலோச்சனா மகனை குழப்பத்தோடு பார்த்துவிட்டு அங்கிருந்து வந்தாள்.
மானசாவின் புகைப்படத்தையும் குழந்தையின் புகைப்படத்தையும் செய்தித்தாள்களிலும் டிவி சேனல்களிலும் போட்டு விளம்பரப்படுத்தினார்கள். அவர்களை கண்டுபிடித்து தருபவருக்கு ஐம்பது லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று செய்தி வெளியிட்டான் தீனா.
ஒரு வாரம் ஓடிவிட்டது. அவள் இருக்கும் திசையை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வாரமாக தீனா சாப்பிடவில்லை. ஒரு வாரமாக அவன் தூங்கவில்லை. கண்டிப்பாக இது குழந்தைக்காக இல்லை என்று சுலோச்சனாவுக்கு தெளிவாக தெரிந்தது.
மானசா திரும்பி வராமல் போனால் இவன் பட்டினியிலேயே செத்து விடுவான் என்று அந்த தாயாரால் புரிந்து கொள்ள முடிந்தது.
ஒரு வாரமாக சாப்பிடாமல் இருக்கிறானே என்று அன்று இரவு அவன் தன்னை தாண்டி போன போது “சாப்பிட வாடா..” என்று அழைத்தாள் சுலோச்சனா.
நேற்று வரை பேத்திதான் முக்கியம் என்று பிடிவாதமாக இருந்தவளுக்கு இன்று மகனின் பட்டினியை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
“எனக்கு வேணாம்..” என்று சொல்லிவிட்டு தாண்டி போனான் தீனா.
ஆனால் இவள் மனம் கேட்காமல் உணவை தட்டில் பரிமாறி மகனுக்கு எடுத்து போனாள்.
படுக்கை அறை சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்த தீனா செல்போனில் மனைவியின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு வாரமாக அவளை பற்றிய செய்தி கிடைத்திருக்கவில்லை. ஒருவேளை அவளுக்கு ஏதாவது ஆகிவிட்டதோ? யாராவது கடத்தி விட்டார்களோ? என்று இவனுக்கு ஏதேதோ பயம் உண்டானது.
‘திரும்பி வந்துவிடு மானசா. உன் காலடியில் விழுந்து அடிமை போல் கிடக்கிறேன். உன்னை அடிக்க மாட்டேன். ஒரு வார்த்தை திட்ட மாட்டேன். நீ சொல்லும் வார்த்தைகளை தாண்டி எதுவும் செய்ய மாட்டேன்..’ என்று மனதுக்குள் கெஞ்சினான்.
அவளின் புகைப்படத்தை பார்க்கும் போது கண்ணீர் அதன் பாட்டிற்கு கொட்ட ஆரம்பித்து விட்டது.
அம்மா வந்ததும் கண்ணீரை துடைத்துக்கொண்டு நிமிர்ந்தான்.
“சாப்பிடுடா..” என்று உணவை ஊட்ட முயன்றாள் சுலோச்சனா.
“எனக்கு பசிக்கலம்மா..” என்றவனின் குரல் பல நாள் பட்டினியின் காரணமாக கிணற்றின் அடி ஆழத்திலிருந்து வரும் சத்தம் போல் ஒலித்தது.
“அவ கண்டிப்பா திரும்பி வந்துடுவா. அவ வரும்போது அவளை நல்ல நாலு வார்த்தை கேட்கவாவது உனக்கு தெம்பு வேணாமா? சாப்பிடு..” என்று கை நிறைய உணவை அள்ளி மகனின் வாயருகே நீட்டினாள் சுலோச்சனா.
தொடரும்
15
குழந்தையை இவள் பார்க்க வந்ததும் அவளை முறைத்து பார்த்த சுலோச்சனா “உன்னோட நிழல் கூட இனிமே என் பேத்தி மேல படக்கூடாது..” என்று கண்டிப்போடு சொல்லிவிட்டாள்.
இன்றைக்கு அந்த தாய்ப்பால் கொடுக்கும் பெண்மணி வீட்டிற்க்கே வந்து விட்டாள். ஹாலிலேயே அமர்ந்து துண்டைப் போர்த்திக் கொண்டு குழந்தைக்கு தாய்ப்பால் தர ஆரம்பித்தாள்.
மானசாவுக்கு நெஞ்சு வலித்தது. இப்படி ஒரு வலியை இதற்கு முன் அவள் அனுபவித்ததே இல்லை. காதலில் பொசசிவ் வரும் என்று அவளுக்கு தெரியும். ஆனால் குழந்தையின் விஷயத்தில் இந்த அளவுக்கு பொசசிவ் வரும் என்று அந்த நொடிதான் அவளுக்கு தெரியும்.
நெஞ்சை பிடித்தபடி அறைக்குள் ஓடிவிட்டாள்.
கட்டிலில் கவிழ்ந்து படுத்தவள் தேம்பி அழுதாள். எதற்காக அழுகிறோம் என்று அவளுக்கே தெரியவில்லை.
குழந்தை தன்னை விட்டுப் போய்விட்டது போலவே நினைத்து மருகினாள்.
இது என்ன சிறுபிள்ளைத்தனமான பிடிவாதம் என்று நினைத்து கண்ணீரை துடைத்துக்கொண்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.
தாய்ப்பால் கொடுத்தவள் அங்கிருந்து கிளம்பி விட்டாள். அடுத்த சில வேளைகளுக்கான பாலை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்திருந்தார்கள்.
குழந்தை தொட்டிலில் படுத்து அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அருகில் இருந்த மாமியார் குழந்தையின் தொட்டிலை ஒரு கையால் ஆட்டியபடி மறு கையில் புத்தகம் ஒன்றை வைத்து படித்துக் கொண்டிருந்தாள்.
இவள் தொட்டிலை நெருங்க நினைக்க, தொட்டிலின் அருகில் வந்து பணிப்பெண் ஒருத்தி நின்றாள்.
“உங்களை குழந்தை பக்கத்துல விடக்கூடாதுன்னு மேடம் கண்டிஷன் போட்டு இருக்காங்க..” என்று சொன்னாள்.
அதிர்ந்த மானசா தன் மாமியாரை பார்த்தாள். அவள் திரும்பி கூட பார்க்கவில்லை.
இரண்டு நாட்களில் கணவன் குழந்தையை பெற்று தருவதாக சொல்லிவிட்டானே! அதன் பிறகும் எதற்காக வீணாய் மனம் கலங்க வேண்டும் என்று தன்னையே கேட்டுக்கொண்டவள் அன்றைய நாளும் மருத்துவமனைக்கு சென்றாள்.
ஆனால் இன்று அவள் வெளியே சென்ற போது சுலோச்சனா டிரைவரை அனுப்பவில்லை.
அவள் வெளியே செல்கிறாள் என்று பணிப்பெண் ஒருத்தி போன் செய்து தீனாவுக்கு சொன்னாள்.
குழந்தையை விட்டுவிட்டு அவள் எங்கும் ஓடிப் போக மாட்டாள் என்று அவனுக்கு தெரியும். அதனால் மனைவி வெளியே சென்ற விஷயத்தை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இரண்டாம் நாள் அவன் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தபோது அவனை நெருங்கிய மானசா “இன்னைக்கு குழந்தையை வாங்கி தரேன்னு சொன்னிங்களே!” என்றாள்.
சென்ட் அடித்துக் கொண்டிருந்தவன் பாட்டிலை ஓரம் வைத்து விட்டு திரும்பி பார்த்து அவளின் முகத்தை அள்ளினான்.
அவன் மீதிருந்து வந்த வாசம் இவளுக்கு வாந்தி வர வைப்பது போலவே இருந்தது.
“அவசரம் என்ன? என்னைக்கு இருந்தாலும் அந்த குழந்தையை நீதான் வளர்க்க போற. இப்போதைக்கு ரெஸ்ட் எடு..” என்று சொன்னான்.
அதிர்ந்தவள் “ஆனா நீ வாக்கு கொடுத்தியே..” என்றாள்.
“ஆமா. ஆனா அதுக்காக உடனே வாங்கி வர முடியுமா? அம்மாவுக்கு இன்னமும் கோபம் தீரல. உனக்கு தலைவலி. தினமும் தலைவலி மருந்து பூசுற. அதுக்கு பதிலா ரெஸ்ட் எடுத்து உடம்பை சரி பண்ணு. அப்புறம் எல்லாத்தையும் பார்த்துக்கலாம்..” என்றான்.
அவளின் விழிகளில் இருந்து ஒற்றை கோடாக கண்ணீர் வழிய “அழுது தொலைக்காத. எனக்கு பார்க்க சகிக்கல. நீ ஒன்னும் அந்த குழந்தையை பெக்கல. அது உன் பிரெண்டோட குழந்தை. அவ்வளவுதான். வீட்ல அத்தனை வேலைக்காரங்க இருக்கும்போது எதுக்கு எல்லா பொறுப்பையும் உன் தலை மேல போட்டுக்கிற.?” என்று கேட்டான்.
இவள் அவனை விட்டு விலகி நடந்தாள்.
அவள் விழிகளில் கொலைவெறியே தெரிந்தது.
தன் பேக்கை எடுத்து தோளில் மாட்டியவன் “ஆபிஸ்க்கு போறேன். திரும்பி வரும்போது சிரிச்ச முகமா வரவேற்க பாரு. உனக்கு கடைசி வரை நான்தான் துணை வர போறேன்..” என்று சொல்லிவிட்டு போனான்.
இவள் வெளியே சென்று தூரமாக அமர்ந்தபடி குழந்தையை பார்த்தாள். இவள் அருகில் சென்றாலே பணிப்பெண்கள் குழந்தையை தனி அறைக்கு எடுத்து சென்று விடுகிறார்கள். இவளால் அந்த துக்கத்தை தாங்க முடியவில்லை. அதனால் தூரமாக இருந்தபடி குழந்தையின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.
குழந்தையை தூக்காமல் கைகளை பிடிக்கவில்லை. குழந்தையை சாய்க்காமல் தன் நெஞ்சை பிடிக்கவில்லை. விழிகள் கலங்கிக் கொண்டே இருந்தது. மாமியார் பார்த்தும் பார்க்காதது போல் இருந்தாள்.
மாமியாரை பார்க்கும்போதெல்லாம் விழிகளால் கெஞ்சினாள் இவள். சுலோச்சனாவுக்கு இவள் நடிக்கிறாள் என்றே தோன்றியது. தேவையில்லாமல் சீன் போட்டுக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்தாள்.
மானசா தினமும் இரு வேளை தன் தோழியின் புகைப்படத்தின் முன் விளக்கேற்றி வைத்து வேண்டிக் கொண்டிருந்தாள்.
ஆனால் நான்கு நாட்களுக்கு பிறகு அதுவும் சுலோச்சனாவுக்கு பிடிக்கவில்லை.
“என் மருமகளுக்கு நீ ஒன்னும் விளக்கேத்த வேணாம்..” என்று சொல்லி விட்டாள்.
அந்த வேலையையும் ஒரு பணிப்பெண்ணே செய்தாள்.
அன்று மாலையில் தீனா வந்த போது “உங்கம்மா என்னை ப்ரீத்தி போட்டோவுக்கு விளக்கேத்த கூட விட மாட்டேங்கிறாங்க..” என்றாள்.
இவன் இவளை ஏற இறங்க பார்த்தான். “நீ நிறைய குறை சொல்ற மானசா. எனக்கும் என் அம்மாவுக்கும் நடுவுல சண்டை மூட்டி விட பார்க்கிறியா?” என்று கேட்டான்.
இவளுக்கு இதயத்தில் ஆணி இறங்கியது போல் இருந்தது.
“என்னை ஏமாத்திட்ட நீ..” என்றவளின் விழிகள் கலங்க ஆரம்பிக்க, “தயவுசெஞ்சி அழ ஆரம்பிக்காத. எனக்கு உன் கண்ணீரை பார்த்தாலே எரிச்சலா இருக்கு.” என்றான்.
இவள் வீழும் முன்பே அந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
இவனுக்கு அவளை பார்க்கும்போது மனம் வலித்தது.
அவளின் முகத்தை அள்ளியவன் “நம்ம கல்யாணத்தால அம்மா நம்ம மேல கோபமா இருக்காங்க. அந்த எறும்பு மேட்டர் ஒரு சாக்கு. குழந்தையை வாங்கிக்கிட்டாங்க. இனி அவங்களை சமாதானம் செய்வது அவ்வளவு ஈசி இல்ல. நமக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கு. நாம பொறுமையா அவங்ககிட்ட இருந்து மன்னிப்பை வாங்கிக்கலாம்.” என்றான்.
அனைத்து தவறுகளையும் நீ செய்தாய். நான் ஏன் தண்டனைகளை ஏற்க வேண்டும் என்று இவளுக்குள் கேள்வி எழுந்தது.
இவர்கள் செய்வது எல்லாம் அநியாயம் என்று மனம் கொந்தளித்தது.
அவளின் முகத்தை பார்த்தவன் “என்ன யோசிக்கிற பேபி? என்னை வில்லனா பார்க்காத. நீ பார்க்கும் அனைத்தும் உண்மை கிடையாது. நீ நினைக்கும் அனைத்தும் உண்மை கிடையாது. ஐ லவ் யூ. இது மட்டும்தான் உண்மை..” என்றான்.
ஆனால் அவள் அதன் பிறகு மொத்தமாக மாறி விட்டாள். அன்றிரவு சாப்பிட்டு விட்டு வந்ததும் தலையணையில் சாய்ந்தவள் அவன் வந்து மேலே சரிந்த போது எதுவும் சொல்லவில்லை.
இரவு அவன் உறங்கிய பிறகு எழுந்து தனியே அமர்ந்து கணக்கை போட ஆரம்பித்தாள். எதை எப்போது செய்வது என்று யோசித்தாள்.
அடுத்த சில நாட்களுக்கும் ட்ரீட்மென்ட் வழக்கம் போலவே சென்றது. இவளுக்கும் தாய்ப்பால் துளி துளியாக சுரக்க ஆரம்பித்தது.
அன்று கடைசி நாள் ட்ரீட்மென்ட்டும் முடிந்து விட்டது.
தன் பழைய போனை விற்று விட்டு புது போனை வாங்கியவள் அதில் புது சிம்மையும் போட்டு எடுத்துக் கொண்டாள்.
இனி இந்த உலகத்தில் யாரும் நமக்கு வேண்டாம் என்று முடிவெடுத்தாள்.
அன்று மாலையில் தீனா வீட்டிற்கு வந்ததும் இவளை தேடி ஓடி வந்தான்.
ஓரமாக அமர்ந்து துணிகளை மடித்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவளை எழுப்பி நிறுத்தியவன் அவளை கண்ணாடியின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினான்.
“புதுசா ஒரு ப்ரோஜெக்ட் கிடைச்சிருக்கு..” என்று சொல்லி ஒரு நெக்லஸை எடுத்து காட்டினான்.
“நானே செலக்ட் பண்ணி வாங்கி வந்தேன்..” என்றவன் அவளின் கழுத்தில் அந்த நெக்லஸை அணிவித்தான்.
கண்ணாடியில் இருந்த அவளின் பிம்பத்தை பார்த்தான். பல நாளாக இல்லாமல் போயிருந்த கண்களின் ஒளி இப்போது திரும்பி வந்திருந்தது. அது இந்த நெக்லஸால்தான் என்று நினைத்தவன் அவளின் முதுகின் புறம் நெருங்கி நின்று அவளை அணைத்தான். அவளின் கன்னத்தில் முத்தமிட்டான்.
“என் மறுபாதி நீ..” என்றான்.
அவளின் கன்னத்தில் மீண்டும் மீண்டும் இதழ் பதித்தான். அவன் கொடுத்த முத்தம் காரணமாக ஒவ்வொரு முறையும் இவளின் தலை அந்த பக்கம் சாய்ந்து நிமிர்ந்தது. இவனுக்கு பூச்செடியில் பூ ஒன்று காம்போடு சேர்ந்து அசைந்தாடுவது போலவே இருந்தது.
“அழகே நீதான்..” என்றான்.
அன்று இரவு இவளே விளக்கை அணைத்து விட்டு அவனுக்கான சேவைகளை செய்தாள். அவனை கண்டு தனக்கு காமநோய் பீடித்துக் கொண்டது போல் அப்படி நடித்தாள். அவனின் மேனிக்கு சிறப்பான கவனிப்பு தந்தாள்.
அவனுக்கு ஆச்சர்யம். நாம் தொட்டால் கூட முகத்தை திருப்பிக் கொள்பவள் இன்று இப்படி நடக்க காரணம் இந்த நெக்லஸ்தான் என்று நினைத்தவன் அவளின் சேவையை மனதார ஏற்றுக் கொண்டான். உயிர் வரை நேசித்தான்.
இவள் தினம் இது போல் நடந்துக் கொண்டால் சொர்க்கமே இவளிடம்தான் இருக்கிறது என்று நம்பி விடுவான்.
அவளின் சின்ன சின்ன செயல்கள் கூட அவனுக்கு அவ்வளவு பிடித்திருந்தது. அவளின் நகங்களும் இதழ்களும் தன் மேனியின் மீது விழுந்தபோது புதிதாக சில முறை உயிர் பெற்ற கர்வத்தை கொண்டான்.
அவனுக்கு விழுந்து விழுந்து சேவை செய்து தன்னை அடிமை போல் தந்தவள் மோகத்தின் உச்சத்தில் அவன் இருக்கும்போது “குழந்தையை வாங்கி தரிங்களா? நானும் பாப்பாவும் நாளைக்கு எங்கம்மா வீட்டுக்கு போய் வரோம்.” என்றாள்.
இவன் உணர்ச்சியின் பிடியில் இருந்தான். “போய் வா..” என்றான்.
கொஞ்சம் நிம்மதியடைந்தாள் இவள்.
மறுநாள் காலையில் எழுந்தவள் அவன் ஏமாற்றி விட கூடாது என்று வேண்டிக் கொண்டாள்.
நல்லவேளையாக அவன் ஏமாற்றவில்லை.
தன் அம்மாவிடம் சென்றவன் “குழந்தையை அவகிட்ட கொடுங்கம்மா. அவளும் பாவம்..” என்றான்.
சுலோச்சனா அவனை முறைத்தாள். “நான் ஏன் தரணும்?” எனக் கேட்டாள்.
“நான் உங்களுக்காகதான் இரண்டரை வாரமா அமைதியா இருந்தேன். குழந்தைன்னா அழதான் செய்யும். சின்ன சின்ன விசயத்துக்கு கூட அவ மேல கடுப்பை கொட்டாதிங்க. எத்தனை நாளைக்கு உங்களால் இந்த குழந்தையை பார்த்துக்க முடியும்? அவளை நீங்க வெறுத்தா அப்புறம் அவ குழந்தையை வெறுப்பா. கடைசியா குழந்தையோட வாழ்க்கைதான் பாதிக்கப்படும். கொஞ்சமாவது புரிஞ்சிக்கங்க..” என்றான்.
சுலோச்சனாவுக்கு எதுவும் புரியாமல் இல்லை. ஆனால் மகனையும் மருமகளையும் நம்புவதற்குதான் இஷ்டம் இல்ல.
அவன் அம்மாவின் மௌனத்தை பார்த்து விட்டு சென்று குழந்தையை கையில் எடுத்தான்.
குழத்தையோடு மனைவியிடம் வந்தவன் “நானே உங்களை உங்கம்மா வீட்டுல ட்ராப் பண்றேன்..” என்றான்.
சுலோச்சனாவுக்கு அப்போதே சந்தேகம்தான். அன்றும் இதே போல்தான் அம்மா வீட்டுக்கு செல்வதாக சொன்னாள். ஆனால் அங்கே போகவில்லை. இப்போது மீண்டும் எதற்காக செல்ல நினைக்கிறாள் என்று யோசித்தாள்.
மானசா குழந்தைக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டாள். கணவனோடு சேர்ந்து கிளம்பினாள்.
அவனே டிரைவ் செய்தான்.
அவளின் தாய் வீட்டின் முன் காரை நிறுத்திய தீனா “ஈவ்னிங் வரை நீ இங்கேயே இரு. நான் திரும்பி வந்து கூட்டி போறேன்..” என்றான்.
“தேங்க்ஸ்..” என்றவளின் கழுத்தின் கீழே பார்த்தவன் “நீ என் பக்கத்துல வளர்ந்துட்டு இருக்க..” என்றான்.
அவன் பார்வையும் வார்த்தையும் இவளை முகம் சிவக்க வைத்தது.
“சரி போய் வா..” என்றான்.
இவள் குழந்தையை அணைத்தபடி காரை விட்டு இறங்கினாள்.
அவனின் கார் அங்கிருந்து சென்றதும் தாய் வீட்டின் கேட்டை திறக்காமல் அந்த பக்கமாக வந்த ஆட்டோவை கை நீட்டி மறித்து அதில் ஏறினாள். இனி அந்த சைக்கோவை பார்க்க மாட்டோம் என்ற சந்தோசத்தோடு அங்கிருந்து கிளம்பினாள்.
தொடரும்
14
அழுது கொண்டிருந்த மானசாவின் தோளில் கையை பதித்தான் தீனா.
“சரி விடு இவ்வளவு அழுது என்ன பண்ண போற? உனக்குதான் தலை வலிக்கும்..” என்று சொன்னான்.
ஆத்திரத்தோடு எழுந்து நின்ற மானசா “யாருடா நீ சைக்கோ பயலே!? என் பிரெண்டை கொன்னுட்ட. அவ குழந்தையையும் கொல்ல திட்டம் போடுற. அப்புறம் என்ன பண்ண போற? என்னையும் கொல்ல போறியா?” என்று கேட்டு அழுதாள்.
சட்டை கூட அணியாமல் நின்று இருந்தவன் “தேவை இல்லாம சீன் போட்டுட்டு இருக்க! குழந்தைன்னா அழதான் செய்யும். என் அம்மாவை விட நீ எல்லாத்துக்கும் ஓவர் ரியாக்ட் பண்ற..” என்று வெறுப்போடு சொன்னான்.
குழந்தையின் அழுகை சத்தம் இன்னமும் ஓய்ந்திருக்கவில்லை.
“அது எப்படிடா உன்னால முடியுது? பச்ச பிள்ளை அழுது. கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாம இருக்கியே..” என்று கத்தி கேட்டாள்.
அவளின் தோள்கள் இரண்டையும் இறுக்கிப் பிடித்த தீனா “இந்த ஆடிட்டியூட்டைதான் என்கிட்ட காட்டாதன்னு சொல்றான். அந்த குழந்தை அதுவா அழுது. நான் என்னவோ அடிச்சி அழ வெச்ச மாதிரி பேசுற..” என்று கேட்டான்.
“நான் அந்த குழந்தைக்காகதான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..” என்று இவள் நினைவுபடுத்த பார்த்தாள்.
“அந்த குழந்தையை அனாதை ஆசிரமம் அனுப்ப மாட்டேன்னு சொல்லி அதுக்கு பதிலா உன் கழுத்துல தாலி கட்டி இருக்கேன். ஆனா அதை தாண்டி அந்த குழந்தையோட குட்டி குட்டி சிணுங்களுக்கும் கூட நீ என் மேல வெறுப்பை காட்டுவது நியாயம் கிடையாது. இந்த வீட்டுல அந்த குழந்தையை பார்த்துக்க எத்தனையோ பேர் இருக்காங்க. நீ எனக்கு தேவையானதை சரியான முறையில் கவனிச்சிக்கிட்டு இருந்திருந்தா நான் ஏன் பாத்ரூம்ல உன்னை பிடிச்சி வைக்க போறேன்?” என்று சீற்றமாக கேட்டான்.
இவளுக்கு அவனோட பேசவே விருப்பமில்லை. அவனை அசிங்கத்தை பார்ப்பது போல் பார்த்துவிட்டு அந்த அறையை விட்டு சென்றாள்.
குழந்தையின் காயத்திற்கு மருந்து போட்டுக் கொண்டிருந்தாள் பணிப்பெண் ஒருத்தி. மானசா எதிரில் வரவும் எரிச்சலான சுலோச்சனா “எதுக்காக இங்கே வந்த? இனிமே என் முன்னாடியோ குழந்தை பக்கத்திலேயோ வந்தா செருப்பு பிய்யும்..” என்று திட்டினாள்.
“நான் எந்த தப்பும் பண்ணல..” என்று அழ ஆரம்பித்தாள் இவள்.
“கண்ணீரை காட்டி என்னை ஏமாத்தலாம்ன்னு நினைக்காத. நீ தப்பு பண்ணியோ இல்லையோ? ஆனா நீ உன் உடம்பு சுகத்துக்காக என் பையனை கல்யாணம் பண்ணி இருக்க. அவனோடு மட்டும் உன் உறவை நிறுத்திக்க. தேவையில்லாம என் பேத்தியை தொடாத..” என்று மிரட்டினாள்.
இவள் திட்டு வாங்குவதை பணிப்பெண்கள் கவலையோடு பார்த்தார்கள். மானசாவுக்கு கொஞ்சம் அவமானமாகதான் இருந்தது.
இவள் திட்டு வாங்கிக் கொண்டிருக்கும் போது தீனா அவர்களை தாண்டி நடந்தான்.
தீனா பணியாட்கள் முன்னால் இவள் எதிர்த்து பேசியதற்காக இவளை அடித்தான். ஆனால் இப்போது இவள் அவமானப்படுவதை பார்த்தும் பார்க்காதது போல் செல்கிறான்.
இவளுக்கு அவமானப்படுவது கூட பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால் குழந்தையை கையில் தூக்க முடியாததுதான் ரண வேதனையை தந்தது.
“என் மூஞ்சில முழிக்காம தூர போ..” என்ற சுலோச்சனா குழந்தையின் அழுகை நின்றதும் குழந்தையை தூக்கிக்கொண்டு தனது ரூமுக்கு கிளம்பி விட்டாள்.
மானசா தனது படுக்கையறைக்கு வந்தாள். மாமியாரின் கோபம் குறைந்தால் குழந்தையை கொடுத்து விடுவாள் என்ற நம்பிக்கையோடு சுவரோடு சாய்ந்து அமர்ந்தவள் தனது தலையெழுத்தை எண்ணி மனதுக்குள் புலம்ப ஆரம்பித்தாள்.
இவளுக்கு ப்ரீத்தி மீதுதான் கோபமே வந்தது. அவள் எதற்காக சாக வேண்டும்? அவள் இப்படி ஒருத்தனை திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் இங்கே எதுவும் வில்லங்கமாகி இருக்காது. இவளுக்கு இந்த வீட்டில் இருந்த ஒருவரை கூட பிடிக்கவில்லை.
எல்லாம் தெரிந்தும் நம்மை வெறுக்கின்றாள் இந்த மாமியார். சைக்கோவை விட மோசமாக நடந்து கொள்கிறான் கணவன். இது வீடு இல்லை. நரகமே பரவாயில்லை என்று நினைத்தாள்.
அன்று இரவு குழந்தையை எடுத்து வர மாமியாரின் அறைக்கு சென்றாள் மானசா.
தொட்டிலில் இருந்த குழந்தையின் அருகில் அமர்ந்து தாலாட்டி கொண்டிருந்தாள் சுலோச்சனா.
இவள் வந்ததும் நிமிர்ந்து பார்த்து முறைத்தவள் “இங்கே எதுக்கு வந்த?” என்று சீற்றமாக கேட்டாள்.
“குழந்தையை நைட்ல நான் தூங்க வச்சிக்கிறேனே..” என்று இவள் கெஞ்சலாக கேட்க, “குழந்தையை நீ இனி தொடக்கூடாது. அதை நான் முடிவு பண்ணிட்டேன். ஒழுங்கா என் ரூமை விட்டு வெளியே போ..” என்று கத்தாத குறையாக சொன்னாள் சுலோச்சனா.
இவள் அந்த அறையின் வாசலில் மண்டியிட்டாள்.
சுலோச்சனாவுக்கு கடுப்பானது. அன்றும் இப்படிதான் கேட்டின் வெளியே மண்டியிட்டு இல்லாத வார்த்தைகளை எல்லாம் சொன்னாள். இப்போதும் மண்டியிடுகிறாள். குழந்தை மீது உயிரே வைத்திருப்பது போல் நாடகமாடுகிறாள். நான் இவள் சொல்வதை எல்லாம் இனிய நம்பி விடுவேன் என்று அவ்வளவு மோசமாக என்னை நினைத்து விட்டாள் என்று மருமகளை மனதுக்குள் கரித்து கொட்டினாள்.
“நான் இந்த குழந்தைக்காகதான் உங்க பையனை கல்யாணம் பண்ணினேன். இந்த குழந்தையை என்கிட்ட குடுங்க ப்ளீஸ். ஈவினிங் நான் எந்த தப்பும் பண்ணல. உங்க பையன்தான் என்னை பாத்ரூம்ல அடைச்சி வச்சாரு..” என்று கண்ணீரோடு சொன்னாள்.
“எனக்கு உன் மேல இருக்கும் தப்பு மட்டும்தான் கண்ணுக்கு தெரியுது. அவன் அப்படிப்பட்டவன்னு தெரியுமில்லையா? உன்னால ஸ்ட்ராங்கா இருக்க முடியாது, குழந்தைக்காக போராட முடியாதுன்னா உனக்கு எதுக்கு இந்த குழந்தை? இந்த குழந்தைக்கு அம்மாவா இருக்கும் தகுதி உனக்கு கொஞ்சம் கூட கிடையாது. இது உன்னோட குழந்தையா இருந்திருந்தா அவன் உன்னை அடைச்சி வைக்கும்போது அமைதியா இருந்திருப்பியா? என் பேத்திக்கு ஒரு மாற்றாந் தாய் வருவான்னு நான் கனவுல கூட எதிர்பார்க்கல. ஆனா நீ வந்துட்ட. ப்ளீஸ் இந்த குழந்தையை என்கிட்ட இருந்து பிரிக்காத. எனக்கு உயிர் உள்ளவரை இந்த குழந்தையை நானே பார்த்துக்கிறேன்..” என்று முடிவாக சொன்னாள்.
ஆனால் மானசா அந்த இடத்தை விட்டு நகரவில்லை.
சுலோச்சனா கதவை நெருங்கினாள். மருமகளை பின்னால் தள்ளிவிட்டு கதவை அறைந்து சாத்தினாள்.
கீழே விழுந்த மானசா கண்ணீரோடு எழுந்து அமர்ந்தாள். மாமியார் சொன்னதும் சரிதான். நமக்கு இந்த குழந்தைக்கு அம்மாவாக இருக்கும் தகுதி இல்லை என்று நினைத்து தேம்பினாள்.
இரவு நிறைய வேலை இருந்த காரணத்தினால் தாமதமாகதான் வீட்டிற்கு வந்தான் தீனா.
அவன் தன் படுக்கையறைக்கு வந்தபோது மானசா தரையில் ஒரு ஓரமாய் படுத்திருந்தாள். பெட்ஷீட் தலையணை கூட இல்லாமல் குறுங்கி படுத்திருந்தவளை பார்க்கும்போது இவனுக்கு நெஞ்சு வலித்தது.
அவள் அருகில் பாய்ந்து போனான். அவளின் முகத்தில் கண்ணீர் தடங்கள் தெரிந்தன. முகம் வாடி போய் இருந்தது. அவளை புது மலராக மட்டுமே பார்க்க விரும்பினான்.
தொட்டிலில் குழந்தை இல்லை. அவளின் அழுகைக்கான காரணத்தை இவனால் யூகிக்க முடிந்தது.
அவளை அள்ளி தூக்கினான். கொண்டு வந்து கட்டிலில் கிடைத்தினான். உறக்கத்தில் இருந்தவள் கண்களை திறந்தாள். இவனைப் பார்த்ததும் கொஞ்சம் பயந்தாள்.
அவளின் கேசத்தை ஒதுக்கிவிட்டு கன்னத்தை வருடியவன் “அழகான தேவதை..” என்று வழக்கம்போல் பிதற்ற ஆரம்பித்தான்.
அவளுக்கு இவனை திருமணம் செய்யும் வரையிலும் நாம் அழகு என்று தெரியாது. ஆனால் இப்போது அவன் சொல்லும் அழகின் மீது அவ்வளவு வெறுப்பு வந்தது. எதற்காக இந்த அழகை ஆண்டவன் படைத்திருக்க வேண்டும்? மனிதருக்கு தேவை சுதந்திரம்தானே தவிர அழகென்ற பெயரில் அடிமை செய்ய நினைக்கும் இவனைப் போன்ற மனிதர்கள் அல்ல.
தொட்டிலை திரும்பிப் பார்த்தாள். “உங்கம்மா குழந்தையை கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க..” என்று கரகரத்த குரலோடு சொன்னாள்.
“அடுத்தவ குழந்தைக்காக ரொம்ப யோசிக்காத. உனக்கு தாலி கட்டி இருக்கேன். நான்தான் உன்னோட சொந்தமும் பந்தமும்..” என்றவன் அவளின் முகத்தின் அருகே குனிந்து அவளின் இதழை வருடினான்.
“என்னோட கஷ்டத்தைப் பார்த்து உங்களுக்கு மனசு இறங்கலதானே? நான் குழந்தைக்காகதான் கல்யாணம் பண்ணினேன்னு தெரிஞ்சும் உங்க அம்மா என்னை கேவலமா பேசுறாங்க. நீங்க என்ன கேவலமா யூஸ் பண்றீங்க. இதுக்காக நிச்சயம் நீங்க வருத்தப்படுவீங்க..” என்று மிரட்டலாக சொன்னாள்.
அவளின் கழுத்தை வலிக்காதவாறு பிடித்து அவளின் செவிமடலில் முத்தமிட்டவன் “அம்மா நம்ம ரெண்டு பேரும் மேலயும் ரொம்ப கோவமா இருக்காங்க. கொஞ்சம் டைம் கொடு. நான் அவங்ககிட்ட பேசிக்கிறேன். ஒரு ரெண்டு மூணு நாள் பொறுத்துக்க. அப்புறமா குழந்தையை வாங்கி தரேன்..” என்று சொன்னான்.
இவளின் ஏமாந்த உள்ளம் அவன் சொன்ன வார்த்தைகளை நம்பு என்று சொன்னது. காரியமாகும் வரை காலை பிடிக்க வேண்டும் என்பது போல் இவன் குழந்தையை வாங்கி தரும் வரையிலும் இவனின் ஆசைகளுக்கு மறுப்பு சொல்லாமல் இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டாள். இல்லையென்றால் மட்டும் அவன் விட்டு விடவா போகிறான்?
அவளின் முகத்தில் கொஞ்சமே கொஞ்சம் தெளிவு வந்ததை கண்டவன் அவளின் இதழில் தன் இதழை உரசினான்.
மென்மையாய் ஒரு முத்தத்தை தந்து விட்ட விலகியவன் அவளின் ஆடையை விலக்க ஆரம்பித்தான்.
“கட்டிலை தவிர உங்களுக்கு வேற எதுவும் தெரியாதா? நான் உங்க கண்ணுக்கு வெறும் ஜடமா தெரியுறேனா?” மனம் பொறுக்காமல் கேட்டாள்.
அவளின் மேனியை அளந்தவன் “மனசை தருபவளா இருந்தா நானும் அந்த மனசை கொண்டாடி இருப்பேன். நீதான் மனசை தரமாட்டியே! அப்புறம் எதுக்காக நான் வீணா அதுக்காக டைம் வேஸ்ட் பண்ணணும்? எனக்கு இது மட்டும்தான் கிடைக்கும்ன்னா இதையே நான் கொண்டாடிக்கிறேன்..” என்று சொன்னான்.
முகத்தை மறுபக்கம் திருப்பினாள். ஆடைகளை கலைந்தவன் அவளின் ஆசைகளை எதிர்பார்க்காமல் தனது தேவைகளை தீர்க்க ஆரம்பித்தான்.
அவளின் விழிகளில் இருந்து கண்ணீர் சொட்டியது.
“ரொம்ப பண்ணாத. நான் உன்னை ரேப் பண்ற மாதிரி உனக்குள்ள நெனச்சுக்கிட்டு இருக்காத. இது தாம்பத்தியம்..” என்று சொல்லி முத்தங்களை தந்தான்.
“உனக்கு நான் தர கிஸ்ஸை பார்த்தா தெரியலையா எனக்கு உன் மேல எவ்வளவு ஆசைன்னு? என்னோட ஆசை நாயகி நீ. என்னோட தெய்வமும் நீ..” என்றான்.
அந்த வார்த்தைகளை கேட்கும்போது இவளுக்கு நெஞ்சம் கசந்தது. வாந்தி வராத குறை.
“என்னோட உடம்பையே உனக்காக தந்திருக்கேன். என் மனசையும் உனக்காக தந்து இருக்கேன். நீ என்ன சொன்னாலும் அதை நான் செய்வேன். ஆனா நீ என்னை எப்பவும் லவ் பண்ணனும். அதுவும் உண்மையா லவ் பண்ணனும்..” என்று சொன்னான்.
காதலா? அது உயிர் போனால் கூட இவளின் மனதுக்குள் உருவாகாது.
அன்றைய இரவு குழந்தை அருகில் இல்லாத காரணத்தினால் இவன் அவளை அந்த முழு இரவுக்கும் சொந்தமாய் எடுத்துக் கொண்டான். கொடுத்த முத்தங்கள் மலையளவு சேரும். இவள் பிணம் போல் கிடந்தாலும் அவன் தன் ஆசைக்கு குறை வைக்கவில்லை.
அவனே கொண்டாடினான். அவனே அவளை எடுத்துக் கொண்டான். அவள் அரை தூக்கத்தில் நுழைந்த பிறகும் அவனின் முத்தங்களும் தேடல்களும் தொடர்ந்து கொண்டே இருந்தது. அவனின் கைகள் அவளின் அத்தனை இன்பங்களையும் களவாடி தீர்த்தது.
மறுநாள் எழுந்த போது அவளுக்கு பயங்கரமான உடல் வலி. அத்தனைக்கும் காரணம் அவளின் கணவன்தான். அவனுக்கு உடல் வலி எதுவும் இல்லை. சாதாரணமாய் எப்போதும் போல் தயாராகி அலுவலகம் கிளம்பி விட்டான்.
இவள் தயாராகி கொண்டு குழந்தையை பார்க்க சென்றாள். ஆனால் மாமியார் குழந்தையின் அருகில் கூட இவளை விடவில்லை. மாமியாரின் இந்த பிடிவாதம் எந்த அளவுக்கு மோசமானது என்று அப்போதைக்கு அவளுக்கு தெரியாது.
தொடரும்
Newer Posts