மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

12. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 12   குருவை நோக்கி ஓடிவந்த அரவிந்தனின் விழிகளோ வேகமாக மோஹஸ்திராவைத் தேடின. குரு புரிந்து கொண்டவன் போல அவள் இருந்த அறையைத் தன் விரலை நீட்டிச் சுட்டிக்காட்ட வேகமாக அதனை நெருங்கியவனுக்கு கீழே விழுந்து கிடந்த அவளுடைய ஆடைகளைக் கண்டதும் நெஞ்சம் ஒரு கணம் உறைந்து போனது. “வாட் த ஹெல்….*****..” என உரத்த குரலில் அந்த இடமே அதிரும் வண்ணம் கர்ஜித்தவன் கடகடவென அனைத்து உடைகளையும் பொறுக்கி எடுத்தான். நேரே அந்த […]

12. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

11. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 11 தன்னுடைய பரம்பரை வைரம் பதிக்கப்பட்ட கிரீடம் தொலைந்தது பற்றி மோஹஸ்திரா அறிந்து வைத்திருந்தது ஷர்வாதிகரனுக்கோ பேரதிர்ச்சியைக் கொடுத்தது. மிக இரகசியமாக பாதுகாக்கப்பட்ட இந்த விடயம் இவளுக்கு எப்படித் தெரிய வந்தது என எண்ணித் திகைத்துப் போனான் அவன். அவனுடைய குடும்ப இரகசியம் வெளிப்பட்டு விட்டதா..? தன்னை இவள் வேவு பார்க்கின்றாளா..? கிட்டத்தட்ட அவனுடைய மானத்திற்கு நிகரான பெறுமதி மிக்க அந்த வைரம் தொலைந்தது பற்றி அவர்கள் குடும்பம் தங்களுடைய உறவினர்களிடம் கூட மூச்சு

11. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

10.மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 10 வழக்கத்துக்கு மாறாக சற்றே படபடப்புடன் காணப்பட்டாள் மோஹஸ்திரா. அவளுடைய இரண்டு வருடக் கனவு நிறைவேறப் போகும் நாள் இன்றல்லவா..? இதற்காக அவள் உழைத்த உழைப்பு அபாரம். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே தயாராகியவள் கண்ணாடியின் முன்பு தன்னுடைய விம்பத்தைப் பார்த்தாள். வெண்ணிற ஷர்ட் அவளுக்கு மிகவும் பாந்தமாகவும் அழகாகவும் பொருந்தி இருந்தது. அவள் அணிந்திருந்த கருப்பு நிற டைட்ஸ் ஸ்கர்ட்டோ முழங்கால் வரை மட்டுமே நீண்டிருக்க தன்னுடைய கூந்தலை உயர்த்தி போனிடைலாக போட்டுக் கொண்டவள்

10.மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

9. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 09     அடுத்த அரை மணி நேரத்தில் குருவோ மோஹஸ்திராவை அந்த இடத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றிருந்தான். ஷர்வா மட்டும் அவளைத் தூக்கிக் கொண்டு மறுபக்கம் பாயாது இருந்திருந்தால் உயிருக்கே மிகுந்த ஆபத்தாகிப் போய் இருக்கும் என்பது அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது. இருந்தும் அதன் பின்னர் அவன் நடந்து கொண்ட செயல்களில் வெகுவாய் திகைத்துப் போனாள் அவள். எப்படியும் அந்தக் கட்டிடத்திற்கு மறுபக்கம் இருந்த சிலர் தங்களைப் பார்த்திருப்பார்கள் என்பதில் அவளுக்கு

9. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

8. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 08 இவ்வளவு நாட்களும் திமிரும் அலட்சியமும் நிறைந்த அவளுடைய முகத்தை மாத்திரமே பார்த்து வந்தவனுக்கு இன்று அந்த அழகிய வதனத்தில் தெரிந்த படபடப்பும் பதற்றமும் அவனை சற்றே தடுமாறச் செய்தது. இவ்வளவு அருகில் அவன் இதுவரை எந்த பெண்ணின் வதனத்தையும் பார்த்ததே இல்லை எனலாம். “ம்மாஆ..” மெல்ல வலியில் முனகினாள் அவள். அவளால் வலியை சிறிதும் தாங்க முடியவில்லை. முதுகே உடைந்து போனதைப் போல இருக்க இதழ்களை அழுத்தமாகக் கடித்துக் கொண்டவளுக்கு எவ்வளவோ அடக்கிக்

8. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

7. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 07 தன்னுடைய ஒட்டுமொத்த பொறுமையையும் முழுதாக இழந்திருந்தான் ஷர்வாதிகரன். கரத்தில் இருந்த அதி நவீன கையடக்கத் தொலைபேசியை தரையில் போட்டு உடைத்து விடும் நோக்கில் அவன் தன் கரத்தை மிகுந்த சினத்தோடு ஓங்கி உயர்த்த மீண்டும் திவாகரிடமிருந்து அழைப்பு வந்தது அவனுக்கு. ‘ப்ச்… இவன் ஒருத்தன் பொண்டாட்டி மாதிரி எனக்கு அடிக்கடி கால் பண்ணிகிட்டே இருப்பான்..’ என அத்தனை கோபத்திலும் சலித்துக் கொண்டவாறு அவனுடைய அழைப்பை ஏற்ற ஷர்வாவோ, “நவ் வாட்..?” எனக் கேட்க,

7. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

6 . மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 06 ‘என்னடா இது தியேட்டர்ல படம் பாக்குற மாதிரி அந்த மேடம் போட்டோவை இவ்வளவு பெருசா போட்டு பார்த்துகிட்டு இருக்காரு.. இந்த போட்டோல கூட அந்த மேடம் முறைச்சிக்கிட்டுதான் இருக்கு..’ என எண்ணியவன் “பாஸ் மே‌ ஐ கம் இன்..?” என சற்றே சத்தமான குரலில் கேட்டான். “யு மோரான்… அதான் உள்ள வந்துட்டேல்ல அதுக்கு அப்புறம் என்ன கேள்வி..?” எரி கற்களாய் வந்து விழுந்தன அவனுடைய வார்த்தைகள். “சா.. சாரி பாஸ்… நான்

6 . மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

5. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 05   இவ்வளவு நேரமும் எரிமலை போல கோபத்தில் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தவள் உள்ளே நுழைந்த ஆண்மகனைக் கண்டதும் சட்டென வெண்பனி போல தணிந்து குளிர்ந்து போனாள். அதிலும் அவனுடைய ஹாய் பேபி என்ற அழைப்பில் அவளுக்கோ உள்ளமும் உடலும் ஒருங்கேத் தித்திக்கத் தொடங்கியது. எப்போதும் பொது இடத்திலோ அல்லது அவளுடைய அலுவலகத்திலோ அவன் அவளைச் சந்திப்பதற்கு விரும்புவதே இல்லை. அப்படி இருக்கையில் திடீரென இன்று தன்னுடைய அலுவலக அறைக்கே வந்து நிற்பவனைக் கண்டு

5. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

4. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 04 திவாகருக்கோ நெஞ்சம் நடுங்கியது இதுவரைக்கும் ஷர்வா கூறிய எந்த செயலையும் அவன் செய்து முடிக்காது விட்டதே இல்லை. அவன் எள் எனும் முன் எண்ணையாக நின்று விடுவான் இவன். ஆனால் இன்றோ ஷர்வா கூறிய செயலை ஒழுங்காக செய்து முடிக்காதது போலவே அவனுக்கு உள்ளம் உறுத்தத் தொடங்கியது. என்னதான் பணத்தைக் கொடுத்தால் அவள் வரப் போவதில்லை எனக்கூறி இருந்தாலும் இவன் முழுதாக அதை நம்பி வெறுமனே சும்மா இருந்திருக்காது வேறு ஏதாவது ஏற்பாடும்

4. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

3. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 03   அளவு கடந்த அதிர்ச்சியில் அவளை நிமிர்ந்து பார்த்தவனுக்கோ விழிகளில் ரௌத்திரம் குடி கொண்டது.   முதுகில் குத்திவிட்டாள்.   இந்த நிகழ்விற்கு வரவே போவதில்லை எனக்கூறி என்னிடம் பணத்தை வாங்கி விட்டு என்னையே ஏமாற்றுவதற்கு இவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்…?   “இவளைஐஐஐஐ..” என பற்களை நறநறத்தவனின் கைமுஷ்டிகளோ அவளை அடித்து நொறுக்கிவிடும் ஆத்திரத்துடன் இறுகின.   தன்னை ஏமாற்றிவிட்டு வந்தது மட்டும் இல்லாமல் தன்னருகில் இருந்த இருக்கையிலேயே அமர்ந்து

3. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

error: Content is protected !!