வருவாயா என்னவனே.

வருவாயா என்னவனே : 10

காத்திருப்பு : 10 “சூர்யா” என்ற அழைப்பில் தலையினை நிமிர்ந்து பார்த்த சூர்யா எழுந்து நின்றான். கமலேஷ் வந்திருந்தான். அவனது முகமே கவலையையே எடுத்துக் காட்டியது. “என்னாச்சுடா?” “சூர்யா ” என்று அவனை அணைத்துக்கொண்டான். “என்னடா மச்சான்” நீண்ட நாட்களுக்குப் பின் வந்த மச்சான் அழைப்பினைக் கேட்டு மகிழும் நிலையில் கமலேஷ் இல்லையே. “நான் சொல்றத கொஞ்சம் பதட்டப்படாம கேளுடா” “என்னடா முதல்ல சொல்லுடா” “மா…மா…க்….கு….” “அப்பாக்கு என்னடா?” “மாமாவ hospitalla சேர்த்திருக்காங்களாம்டா” “என்னடா சொல்ற அப்பாக்கு […]

வருவாயா என்னவனே : 10 Read More »

வருவாயா என்னவனே : 09

காத்திருப்பு : 09 தேவி கதவை திறந்ததும் பார்த்தது தனது அண்ணனையே. “அண்ணா உள்ள வாண்ணா” “ம்..” என்றவாறு உள்ளே சென்றான். தங்கையைப் பார்த்தான் தாய்மையினால் மேலும் அழகாக இருந்தாள். ஆனாலும் அதில் சோகம் கலந்திருப்பதை அறிவானவன். ஏனெனில் அதற்கு காரணம் அவனல்லவா. “எப்பிடி இருக்கீங்க அண்ணா? என்ன சாப்பிடுறீங்க அண்ணா?” “குட்டிமா எங்க?” அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல் அவளிடம் எதிர் கேள்வி கேட்டான். “உள்ள இருக்காண்ணா “என்றவள் கணவனை எழுப்பி சூர்யாவின் வரவை தெரிவித்துவிட்டு

வருவாயா என்னவனே : 09 Read More »

வருவாயா என்னவனே : 08

காத்திருப்பு : 08 “என்னடா உங்க அம்மா இப்பிடி நாம சொல்லவர்றத கூட கேக்காம போறா?” “வாசு மாமா அம்மா வந்ததும் கேக்கிதன் சதியா?” “சரிடா கண்ணா”என்றவாறு வாசு ஆதியுடன் shopping செய்தான். “என்னங்க எனக்கு புடவை வாங்கித் தாங்க” என்றவாறு வந்தனர் தேவி குடும்பத்தினர். “சரிடா வா ” “அப்பா எனக்கும் ஏஞ்சல் frock வேணும்பா” “சரிடா தீராக்குட்டிக்கு அதையே வாங்கிடுவம்” (ஓ….இவங்களப் பாத்துதான் சந்திரா மறைஞ்சாளா???) அப்போது வாசுவும் இவர்கள் இருக்கும் பக்கம் ஆதியுடன்

வருவாயா என்னவனே : 08 Read More »

வருவாயா என்னவனே : 07

காத்திருப்பு : 07 S.R புடவைக் கம்பனிக்குச் சென்ற சூர்யா அதிர்ச்சிக்குள்ளானான். ஆம் அவனது புடவை களஞ்சிய அறை தீயினால் கருகிய வண்ணம் இருந்தது.அவனைக் கண்டதும் சூர்யாவிற்கு போன் பண்ணிய ஆள் அருகில் வந்தான். “ஐயா நம்ம கஸ்ரப்பட்டு தயாரிச்ச புடவை. நாளைக்கு அனுப்ப வேண்டியது எல்லாம் போச்சி ஐயா”என்று அழுதான். சூர்யாவுக்கும் கவலையளித்தது. அவனது கவலையை பிறர் அறியாது மறப்பதில் பெயர்பெற்றவனாயிற்றே. பிஸ்னஸ் சாம்ராஜியத்தில் முடி சூடா மன்னன் சூர்யா. அடுத்து நடக்க வேண்டியவற்றை செய்ய

வருவாயா என்னவனே : 07 Read More »

வருவாயா என்னவனே : 06

காத்திருப்பு : 06 சூர்யா தட்டை தட்டிவிட்டுச் சென்றதும் என்ன செய்வது என்று மதி குழம்பி நிற்கையில் குமாரும் சாப்பிடாமல் தட்டில் கைகழுவி விட்டு எழ “என்னங்க நீங்களும் சாப்பிடாம எந்திரிக்கீங்க?” “என்னோட புள்ள சாப்பிடாம போறான் எனக்கு சாப்பாடுதான் கேடு” என்றவாறு கீர்த்தியை முறைத்து விட்டு போனார். (ஏனோ அவருக்கு கீர்த்தியைப் பிடிக்கவில்லை.) “sorry aunty என்னால தானே சூர்யாவும் uncleம் சாப்பிடாம போனாங்க really sorry aunty”என்று நடித்தாள் “ஐயோ அப்பிடி இல்லம்மா உனக்கு

வருவாயா என்னவனே : 06 Read More »

வருவாயா என்னவனே : 05

காத்திருப்பு : 05   கதவைத் திறந்த சூர்யா பேச்சற்று நிற்க காரணம் அங்கு நின்றிருந்த கீர்த்திகா. “hi good morning சூர்யா” “hi good morning கீர்த்தி” ” என்ன சூர்யா வீட்ட வந்தவங்கள உள்ள கூப்பிட மாட்டியா ?” ” ஆ….அப்பிடி இல்ல நாலு வருஷத்துக்குப் பிறகு பார்க்கிறன் தானே அதுதான் அதிர்ச்சி உள்ள வா” “சூர்யா எங்க யாரையும் காணவில்லை…. எங்க வதனா?” “அதைப் பிறகு பேசலாம்… நீ போய் ரெஸ்ட் எடு

வருவாயா என்னவனே : 05 Read More »

வருவாயா என்னவனே : 04

காத்திருப்பு : 04   ட்ரெயின் நிறுத்தப்பட்டதும் அனைவரும் என்ன நடந்தது? ஏன் ட்ரெயின் நின்றது என்று அனைவரும் கேள்வியெழுப்பினர். அச் சத்தத்திலேயே சுய நினைவடைந்தவள் ட்ரெயின் நிறுத்தப்பட்டிருப்பதை உணர்ந்தாள். தான் சாய்ந்திருந்த ஜன்னலின் வெளிப்புறம் தன் பார்வையை செலுத்தியவள் அதிர்ந்தாள்.ஆம் அவளவன் அங்கே வந்துகொண்டிருந்தான். தன்னை அழைத்துச் செல்லத்தான் வந்திருக்கிறாரா என்று எண்ணியவள் மனம் நெகிழ்ந்தது. வாசுவும் ஏன் ட்ரெயின் நிற்கிறது என்ற கேள்வியுடன் அமர்ந்திருந்தான். அப்போது அவனது போன் சத்தமிட்டது. சூர்யாதான் அழைத்திருந்தான்.போனை எடுத்து

வருவாயா என்னவனே : 04 Read More »

வருவாயா என்னவனே : 03

காத்திருப்பு : 03   வெற்றிவேல் கடித உறையை பிரித்துப் பார்க்குமாறு சொன்னதும் அதைப் பிரித்துப் பார்த்த வதனா அதிர்ச்சியானாள்.   அப்பிடி என்ன இருந்தது அதில்?   வந்தனாவுக்கான இடம்மாற்றம் அதுவும் எங்கே எழில் கொஞ்சும் மலையகமான ஹற்றனிலே.   “என்ன சேர் இது எதுக்காக இந்த மாற்றல்?”   “இங்க பாரம்மா அங்கே நம்ம கம்பனியில இருக்கிற கலையரசி, அவங்களோட பிள்ளை இங்க மாற்றலாகி வரப்போறாங்க….. அவங்களோட இடத்திற்கு நீ போகணும். நீ அங்க

வருவாயா என்னவனே : 03 Read More »

வருவாயா என்னவனே : 02

காத்திருப்பு : 02   இன்றைய நாள் அவளுக்கு அதிர்ச்சியைத் தரப்போகிறது என்பதை அறியா பேதை அதிகாலை நேரத்திலே அலாரச் சத்தமது கேட்டவாறே எழுந்தாள். வதனா மணியினைப் பார்த்தாள் 5.00ஐ காட்டியது. தனது வேலைகளை இப்போது ஆரம்பித்தால் தான் செய்யலாம் இல்லையென்றால் ஆதி(ஆதவன்) எழுந்தால் வேலை செய்ய விடமாட்டான். காரணம் தாயை தொல்லை செய்வதல்ல. தாயாருக்கு உதவுகிறேன் என்ற பெயரில் அதிக வேலை வைத்திடுவான். அந்த மாயக் கண்ணன். குளியலறைக்குச் சென்று குளித்து விட்டு சுவாமி அறையில்

வருவாயா என்னவனே : 02 Read More »

வருவாயா என்னவனே : 01

காத்திருப்பு : 01 வானத்தில் ஓட்டை விழுந்து விட்டது என்று எண்ணுமளவுக்கு மழை பெய்துகொண்டிருந்தது. அதற்கு சுருதி சேர்க்கும் வகையிலே இடியிடித்தது. அவ் ஓசையினால் பதறியபடி எழுந்தாள் நம் கதையின் நாயகி சந்திரவதனா.நாம் நாயகியை வதனா என்றே அழைப்போம். பதறி எழுந்த வதனா கண்டது தன்னருகில் வாயினுள்ளே விரலினை வைத்தபடி உறங்கும் மகனையே. மகன் இடிச் சத்தத்திற்கு எழுந்திடுவான் என்றே வதனா எழுந்தாள்.ஆனால் மகனோ அசையாது படுத்திருந்தான். சிறிது நேரம் மகனையே ரசித்திருந்தாள். அவள் ரசித்தது மகனையா?

வருவாயா என்னவனே : 01 Read More »

error: Content is protected !!