
Category:
வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா..!
வாழ்வு : 08
அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தாள் சம்யுக்தா. அவள் இங்கே வந்திருந்தாலும், நடந்ததையே அவள் மனம் எண்ணிக் கொண்டிருந்தது. அதன் வெளிப்பாடாக அவளது முகம் கவலையை தத்தெடுத்துக் கொண்டது. கணவன் எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை பண்ணியிருக்கிறான். தாயோ கஷ்டத்தில் இருக்கும் போது தான் அனாதை என்று கூறி வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டாரே என்பதை நினைக்க நினைக்க அவளுக்கு வேதனை மிகுந்தது. கண்களில் கண்ணீர் திரள அதை தனது இரு கையாலும் துடைத்தாள். ஆனால் அதுவோ அணை போட்டாலும் அடங்காத காவிரி போல அவள் துடைக்க துடைக்க கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. ஒரு மூச்சு அழுது தீர்த்தவள் எழுந்து குளித்துவிட்டு வந்த தனது முன்னே இருக்கும் கண்ணாடியில் தனது பிம்பத்தைப் பார்த்தவள், ‘சம்யுக்தா உனக்கு இங்க யாருமே உண்மையா இல்ல.. ஆனா நீ எப்பவும் உண்மையா நேர்மையா இருக்கணும்.. இந்த கடந்து வந்த பாதையை எல்லாம் மறந்துட்டு, யார்னே தெரியாத உன்னை இந்த வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து வேலை போட்டு குடுக்கிறேன்னு சொன்ன இந்த பரந்தாமன் சாருக்கு நீ உண்மையா இருக்கணும்.. உன்னால முடிஞ்ச அளவு அவர் குடுக்கிற அந்த வேலையில உண்மையா இரு.. அந்தப் பிரகாஷிடம் இருந்து உனக்கு விடுதலை கிடைச்சிடுச்சு… இனிமே நீ சுதந்திரமா வாழப் பழகு…. உனக்கு நீ தான்.. உனக்கு ஒரு வேலை இருக்கு, ஒரு இடம் இருக்கு, அவ்வளவும் போதும்.. உன்னால முடிஞ்ச அளவுக்கு மத்தவங்களுக்கு உதவி பண்ணு. இனிமே உன்னோட கடந்த காலத்தை எப்போதுமே நீ நினைக்கவே கூடாது..’ என்று தனக்குத்தானே பேசியவள் கட்டிலில் வந்து அமர்ந்தாள். அவளை அவளே திடப்படுத்திக் கொண்டாள். எல்லாம் காரில் வரும்போது பரந்தாமன் கூறிய அறிவுரைகளே அவள் இப்படி ஒரு முடிவெடுக்க காரணம். என்னதான் இருந்தாலும் தனது தங்கை வித்யாவை கடைசிவரை பார்க்க முடியவில்லை. அவளுடன் பேசவும் முடியவில்லை என்ற தவிப்பு அவளுள் இருந்தாலும், காலம் அனைத்துக்கும் பதில் சொல்லும் என்றாவது ஒருநாள் தனது தங்கையை பார்த்து விடலாம் என்ற நம்பிக்கையில் கண் அயர்ந்தாள்.
எப்போதும் அதிகாலையிலே விழித்து எழும் சம்யுக்தாவிற்கு இன்றும் தூக்கம் கலைந்து விழிப்பு வந்து விட்டது. எழுந்து குளித்து விட்டு வரலாம் என்று குளியலறைக்குச் செல்ல அந்தத் தண்ணீர் ஜில்லென்று இருந்தது. இருந்தாலும் அதிலேயே குளித்து விட்டு வந்து வாங்கி வந்திருந்த சுடிதாரை அணிந்து கொண்டவளுக்கு அறைக்குள் இருப்பது போரடித்தது.
வெளியே வந்து தோட்டத்தில் சிறிது நேரம் நடந்தாள் சம்யுக்தா தோட்டத்தில் நடந்து கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு வேட்டை நாய் அவளை நோக்கிப் பாய்ந்து வந்தது. அந்த நாயைப் பார்த்ததும் சம்யுக்தாவின் விழிகள் இரண்டும் வெளியே வந்து விடுவது போல விரிந்தன. பயத்தில் நா வறண்டு விட்டது. அந்த வேட்டை நாயின் பற்கள் அவளை மேலும் பயமுறுத்தின. யாரை அழைப்பது என்று கூட அவளுக்குத் தெரியவில்லை. அவளால் அந்த நாயிடமிருந்து தப்பிக்க ஓடவும் முடியாது. என்ன செய்வதென்று. தெரியாமல் அப்படியே நின்றாள். சரியாக அந்த வீட்டினை அவளை நோக்கி பாயும் தருணத்தில், “ஜாக்கி பேக்..” என்ற கணீர் குரல் கேட்டது.
அந்தக் குரலை கேட்டதும் பாய்ந்து வந்து வந்த வேட்டை நாய் ஒரு சிறு பூனையைப் போல அந்த இடத்திலே நின்றது. குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தாள். ஜாக்கிங் செய்து கொண்டு இருந்திருப்பான் போல தீஷிதன். அப்படியே கையில்லாத டீசெர்டுடனும் பாட்டமுடனும் வேகமாக வந்தான். அவனைப் பார்த்ததும் தலை குனிந்து கொண்டாள் சம்யுக்தா. “ஜாக்கி திஸ் இஸ் அவ கெஸ்ட்.. சோ கீப் குவைட்…” என்றான்.
அந்த நாய்க்கு என்ன புரிந்ததோ வாலையாட்டிக் கொண்டு கீழே படுத்து விட்டது. உடனே அந்த ஜாக்கியின் அருகில் வந்து அதன் தலையை தடவிக் கொடுத்தான் தீஷிதன். அப்போதுதான் அந்த ஜாக்கியை பார்த்துக் கொள்ளுபவன் பதட்டத்துடன் அவ்விடத்திற்கு மூச்சிரைக்க ஓடி வந்தான்.
“சார் சாரி சார்.. இவங்க புதுசுல இவங்களப் பாத்ததும் ஜாக்கி என் கையில இருந்த பட்டியை இழுத்துட்டு ஓடி வந்துட்டு..”
“இங்க பாரு ராஜேஷ் ஜாக்கிய நல்லா பாத்துக்குறது தான் உன்னோட வேலை.. நான் வராமல் இருந்திருந்தால் ஜாக்கி வேற இவங்கள கடிச்சிருப்பான்.. இதுக்கு அப்புறமா ஜாக்கிரதையா இரு இப்போ ஜாக்கியை கூட்டிட்டு போ..” என்று அந்த வேட்டை நாயை அவனுடன் அனுப்பி வைத்தான். நாய் சென்ற பின்னரும் சம்யுக்தாவிற்கு பயம் விலகவில்லை.
அவளைப் பார்த்த தீக்ஷிதன், “இங்க பாருங்க சம்யுக்தா இந்த நேரத்தில் எதுக்காக இங்க வந்தீங்க.. நல்ல வேளை நான் வந்தேன் இல்லன்னா ஜாக்கி உங்களை கடிச்சி வச்சிருக்கும்..”
“எனக்கு தூக்கம் வரல.. அதுதான் தோட்டத்தில் இருக்கலாம்னு வந்தேன் சார்..”
“ஏங்க அதுக்காக இந்த பனியிலேயா வந்திருப்பீங்க? நீங்க வேற இந்த ஊருக்குப் புதுசுங்க அப்புறம் உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா எங்க டாட் சும்மா இருக்க மாட்டாரு.. கொஞ்ச நாள் இந்த ஊரு பழகினதுக்கு அப்புறம் இந்த டைம்ல வெளியில வாங்க.. காலைல எட்டு மணிக்கு ஆபீஸ்க்கு போகணும் ரெடியா இருங்க..” என்றவன் அதற்கு மேல் அவளிடம் பேசாமல் உள்ளே செல்ல அவளும் எங்கே மறுபடி நாய் வந்துவிடுமோ என்ற பயத்தில் அவன் பின்னாடியே உள்ளே சென்று விட்டாள்.
………..………..………..………..…………..
சென்னையில் பிரகாஷ் வீட்டில் கீதா அந்த பெரிய சோபாவில் தோரணையாக உட்கார்ந்திருந்தார். சீமா இன்னும் எழுந்து வந்த பாடில்லை. கீதாவிற்கு காலையில் டீ குடித்தே ஆக வேண்டும். இல்லையென்றால் அவருக்கு அன்றைய நாள் நன்றாக போகாது என்ற எண்ணம். அதனால் டீ குடிக்க வேண்டும் என்று, “சீமா.. சீமா..” என்று அங்கேயே இருந்தே குரல் கொடுத்தார். பிரகாஷின் அணைப்பில் இருந்த சீமாவிற்கு அவர் அழைத்த குரல் கேட்டது. இருந்தாலும் எழுந்து போகாமல் மேலும் பிரகாஷ் அணைத்துக் கொண்டு தூங்கினாள். பிரகாஷ் அவளிடம், “சீமா அம்மா கூப்பிடறாங்க இல்ல..”
“கூப்பிடட்டும் பிரகாஷ் அதுக்கு இப்போ என்ன? எனக்கு தூக்கம் வருது நான் தூங்கணும்..”
“சீமா அதுக்காக அம்மா கூப்பிடும் போது பேசாம இருக்கலாமா போ போய் முதல்ல அம்மா கிட்ட என்னன்னு கேட்டுட்டு வா..”
“இங்க பாரு பிரகாஷ் என்கிட்ட இந்த உருட்டுறது மிரட்டுவது இதெல்லாம் வைச்சிக்கொள்ளாதே.. நான் ஒண்ணும் உன் மொத பொண்டாட்டி மாதிரி அடங்கிட்டு போக மாட்டேன்.. எனக்கு தூக்கம் வருது நான் இப்ப தூங்கணும் அவ்வளவுதான்.. உனக்கு தேவைன்னா நீயே போய் என்னன்னு கேட்டுட்டு வா..” என்றவள் மறுபக்கம் படுத்து தூங்கிவிட்டாள்.
பிரகாஷ்சும் முதல் நாள் தானே விட்டுவிடலாம் என்று நினைத்தவன் எழுந்து வந்தான் தாயிடம். “அம்மா என்ன?”
“என்ன என்னம்மா.. சீமா எங்க?”
“அவ தூங்குறா..”
“அவள எழுப்பு பிரகாஷ்.. எனக்கு டீ வேணும் டீ போட்டுக் கொடுக்க சொல்லு..”
“அம்மா என்னம்மா வந்த முதல் நாளே அவ கிட்ட இப்படி வேலை வாங்கலாமா? அவ வேற மாசமா இருக்கா..”
“மாசமா இருந்தா வீட்டு வேலை செய்யக்கூடாதுன்னு இருக்கா என்ன?”
“அம்மா இப்பதானே வந்திருக்க விடுங்க அம்மா கொஞ்ச நாளாக பழகட்டும் அதுக்கப்புறம் வேலை வாங்கிக்கலாம்..”
“சரி அடுத்து நம்ம சீமாக்கும் உனக்கும் இன்னைக்கு கோயில்ல வச்சு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு எடுத்து இருக்கேன்..”
“ஆனா அம்மா அப்பா இல்லாம..” என்று இழுத்தான் பிரகாஷ்.
“உங்க அப்பா தான் ஏதோ கம்பனி விஷயமா வெளியூர் போயிருக்கிறாரு.. அவரு வெளியூர்ல இருந்து வர்றதுக்கு ரெண்டு மூணு வாரமாகும்..”
“ஆனா சொல்லனும் இல்லமா..”
“அவர் வந்த பிறகு நான் பேசிக்கிறேன்.. நீ போய் சீமா கிட்ட சொல்லு.. பத்து மணி மாதிரி கோவிலுக்கு போகணும்..”
“சரிமா நான் சீமா கிட்ட சொல்றேன்..” என்று கூறி விட்டு மீண்டும் அறைக்குச் சென்றான். ஒரு பெண்ணின் வாழ்க்கையை அநியாயமாக கெடுத்து விட்டோமே என்ற உறுத்தல் யாரிடமுமே இல்லை.
………..………..………..………..……………
டைனிங் டேபிளில் பரந்தாமனும் தீஷிதனும் சாப்பிட அமர்ந்தனர். பரந்தாமன் சம்யுக்தாவை சாப்பிட அழைத்தார். “சம்யுக்தா.. சம்யுக்தா.. வாம்மா சாப்பிடலாம்..” என்று அழைக்க, அவளோ தயங்கித் தயங்கி மெல்ல வந்தாள்.
“இல்ல சார் நீங்க சாப்பிடுங்க.. நான் அப்புறமா சாப்பிட்டுக்கிறேன்..”
“அப்புறமானா எப்போமா? இப்போ சாப்பிட்டு கிளம்பினால் தானே கம்பெனிக்கு போக முடியும்..” என்று வற்புறுத்தி அவளை சாப்பிட வைத்தார்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பரந்தாமன் தீஷிதனிடம், “தீஷி சம்யுக்தாக்கு என்ன வேலை கொடுக்கலாம்னு இருக்க..?” என்று கேட்டவர் தீஷிதன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்று ஆவலை மறைத்துக் கொண்டு அவனையே பார்த்தார்.
“டேட் இப்போதைக்கு எந்த வேலைக்கும் ஆட்கள் தேவையில்ல.. ஆனா ஒரு டீம்ல மட்டும் ஒரு பொண்ணு கல்யாணம் பிக்ஸ் ஆயிடுச்சுன்னு வேலையை விட்டுட்டு நீன்னுட்டா.. அந்த வேலைய வேணும்னா இவங்களுக்கு கொடுக்கலாம்.. கொஞ்ச நாள் அந்த டீம்ல இருந்து வேலை பார்க்கட்டும் டாட் அதுக்கப்புறம் இவங்களோட திறமையை பார்த்து அதுக்கு ஏத்த மாதிரி நான் வேலை போட்டு கொடுக்கிறேன்…”
“ஆனா தீக்ஷி இவ எம்பிஏ படிச்சிருக்கால்ல..”
“டேட் இவங்க எப்படி வேலை பாப்பாங்கன்னு தெரியாதுல்ல நமக்கு.. சோ கொஞ்ச நாள் அந்த டீமோட இருந்து ஒர்க் பண்ணட்டுமே..” என்றான்.
பரந்தாமன் அதை மறுத்து மேலும் ஏதோ கூற வர, ‘சார் பரவால்ல சார்.. நான் டீமோட இருந்து ஒர்க் பண்றேன்.. எனக்கு எந்த சர்டிபிகேட்டும் இல்லாம நீங்க வேலை கொடுக்குறதே பெரிய விஷயம்.. எந்த வேலையா இருந்தாலும் நான், எனக்கு கொடுக்கிற வேலையை சரியா செய்வேன்..”
“குட்.. பாத்தீங்களா டாட் அவங்களே ஒத்துக்கிட்டாங்க.. உங்களுக்கு என்ன பிரச்சனை?”
“எனக்கு ஒன்னு இல்ல தீஷி.. சரி சம்யுக்தா பாத்து நடந்துக்க.. உனக்கு ஏதும் டவுட் இருந்தா என்கிட்டேயோ அல்லது திஷிகிட்டேயோ நீ தாராளமா கேட்கலாம்..” என்றார். அவளும் சரியென்று தலையாட்டி வைத்தாள்.
சாப்பிட்டுவிட்டு தீக்ஷிதன் காருக்கு செல்ல, பரந்தாமனும் சம்யுக்தாவை அழைத்துக் கொண்டு வந்தார். கார் அருகில் வந்ததும் சம்யுக்தா, “சார் உங்ககிட்ட வேலை பாக்க வர்ற நான் உங்க கூட கார்ல வருவது அவ்வளவு சரியா இருக்காது..”
“ஆனா சமித்தா உனக்குத் தான் இந்த ஊட்டி பழக்கம் இல்லையே.. அப்புறம் எப்படி ஆபீஸ்க்கு வருவ?”
“நீங்க ஆபீஸோட அட்ரஸ் மட்டும் கொடுங்க சார்..”
“அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல சம்யுக்தா.. நீ எங்க கூட கார்ல வர.. ஆனா கம்பெனிக்கு கொஞ்சம் தூரத்துக்கு முன்னாடியே இறங்கிக்க இறங்கி நடந்து வா.. அப்போ நீ எங்க கூட வர்றது யாருக்கும் தெரியாதுல்ல நீயும் ஆபிஸை தேடி அலையறதுக்கு கஷ்டப்படவும் தேவையில்லை..” என்று ஒருவாறு அவளை சம்மதிக்க வைத்து அந்த காரிலேயே அழைத்துச் சென்ற பரந்தாமன்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி💙
வாழ்வு : 07
நன்றாக உறங்கிக் கொண்டிருந்த சம்யுக்தாவிற்கு உடலில் ஒரு மாற்றம். கார் ஜன்னலில் ஊடாக இதுவரை வந்து கொண்டிருந்த காற்று சற்று அதிகமாக குளிரையும் சேர்த்து வந்தது இப்போது. அதனால் அவளுக்கு மிகவும் குளிராக இருக்க தான் உடுத்திருந்த புடவை முந்தானையால் தன் கைகளை நன்றாக மூடிக்கொண்டாள். தூக்கத்திலேயே இருந்தாலும் அந்த குளிரின் அளவு அதிகமாக அதிகமாக அவளால் உறங்க முடியவில்லை. தூக்கத்திலிருந்து எழுந்தவள், தான் காரில் இருப்பதை உணர்ந்து பதற்றமடைந்தாள். ஒரு சில வினாடிகளில் தன் நிலைமை, தனக்கு நடந்தது அனைத்தும் நினைவு வர நேராக நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள். முன்னாடி இருந்த கண்ணாடியில் அவளைப் பார்த்தார். “என்னம்மா நல்லா தூங்கி எந்திரிச்சிட்டியா….? ஊட்டிக்குப் பக்கத்துல வந்துட்டோம்ல அதான் ரொம்ப குளிரா இருக்கு….” என்று சிரித்துக் கொண்டே கூறினார். அவரைப் பார்த்து சம்பிரதாயத்துக்காக சிரித்தவள், அந்தக் காரின் ஜன்னலில் சாய்ந்து கொண்டு வெளியே பார்த்துக் கொண்டு வந்தாள். எங்குமே இருள் சூழ்ந்திருந்த போதும் அந்த வானத்து வெண்ணிலவு மட்டும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது தன் தோழி நட்சத்திரங்களுடன். இந்த இருளைப் போல தான் தன் வாழ்க்கையும் இருளாகி விட்டது. என்று நினைத்து பெருமூச்சு விட்டாள் சம்யுக்தா.
தீஷிதனுக்கு மதுரா போன் எடுத்திருந்தாள். “மது ரெண்டு வாரத்துல வந்துருவல்ல….”
“ஆமா அண்ணா நான் ரெண்டு வாரத்துல வந்துடுவேன்….”
“இங்க பாரு அது இது அந்த பார்ட்டி இந்த பார்ட்டினு சொல்லிட்டு இருக்கக் கூடாது…. ரெண்டே வாரத்துல முடிச்சுட்டு சீக்கிரமா இங்க வந்துடனும்…. உனக்கு இங்க நிறைய வேலை இருக்கு…..”
“கண்டிப்பா நான் எதுவும் சொல்ல மாட்டேன்…. ரெண்டு வாரத்துல வந்துடுவேன்….”
“குட்….”
“அண்ணா அப்பாக்கு கால் பண்ணேன் ரீச் ஆகல….”
“அப்பா சென்னையில் இருந்து இப்போதான் ஊட்டிக்கு வந்துட்டு இருக்காங்க…. அதனால சிக்னல் பிரச்சனையா இருக்கும்…. நீ அப்பா இங்க வந்ததுக்கு அப்புறமா பேசு…”
“ஓகே அண்ணா…”
“ஓகே பாய்….” என்றவன் போனை கட் பண்ணி விட்டு வீட்டின் வெளிப்புறம் வந்து நின்றான். குளிர் உடலைத் தாக்கிய போதும், அவன் அசையவில்லை. வரப்போகும் பெண்ணைப் பற்றி அவனது சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் பெண் எப்படிப்பட்டவர்? உண்மையாகவே அவளது வாழ்க்கை கஷ்டமானதா? இல்லை தந்தையையே ஏமாற்றி இங்கே வருவதற்கான முயற்சியா? என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தான் தீக்ஷிதன்.
“என்ன மது உங்க அண்ணன் கிட்ட பேசிட்டியா….?”
“பேசிட்டேன் வித்து….”
“எனக்கு என்னோட அக்காகூட பேசணும்னு ரொம்ப ஆசையா இருக்கு மது…. என்ன பண்றது எங்க அம்மா விடமாட்டாங்களே….”
“சரி சரி இன்னும் ரெண்டு வாரத்துல ஊருக்கு போயிட்டுவல அப்புறம் என்ன உங்க அக்கா கூட நீ எத்தனை நாள் வேணும்னாலும் பேசலாம்….”
“ஆமா கண்டிப்பா இந்த வாட்டி எங்க அம்மா என்ன சொன்னாலும் சரி அக்காவ பார்த்து பேசாம மட்டும் விடவே மாட்டேன்….”
“வித்து இன்னும் ரெண்டு வாரம்தான் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து இருப்போம்ல….”
“ஆமாம் மது…. எனக்கு அங்க ஊர்ல அவ்வளவா க்ளோஸ் பிரெண்ட்ஸ் கிடையாது… என் அக்கா மட்டும்தான் என்னோட க்ளோஸ் ப்ரெண்டு…. அக்கா எல்லாமே அவதான்…. இப்போ நீ கிடைச்சிருக்க மது… நம்ம எங்க போனாலும் நம்ம பிரண்ட்ஷிப் மட்டும் எப்போவும் ஒன்னாவே இருக்கணும்…. இன்னைக்கு இருக்கிற மாதிரி ஒண்ணா இருக்கணும் எப்பவும்….”
“கண்டிப்பா வித்து கவலைப்படாத… நம்ம எப்பவுமே டச்லையே இருப்போம்….” என்றால் மதுரா. இப்படியாக இருவரும் பேசிக் கொண்டே அவர்கள் வேலையை பார்த்தனர்.
வீட்டின் வெளியே இருந்த. கதிரையில் அமர்ந்து காலை அதன் மீசை மீது தூக்கி வைத்த படி இரு கைகளாலும் வெற்றியைப் பற்றிக் கொண்டு இருந்தான் தீஷிதன்.
உன் வீட்டுக்கு அருகே வந்ததும் சம்யுக்தாவிடம் திரும்பிய பரந்தாமன். “அம்மாடி கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு போயிடலாம்… அங்க போனா நீ நிம்மதியா தூங்கலாம் சரியா….?” என்றார். “சரிங்க சார்….” என்றவள் அமைதியாகி விட சற்று நேரத்தில் வீடும் வந்தது.
கார் சத்தம் கேட்டதும் சட்டென்று எழுந்த தீஷிதன் கார் அருகே வந்தான். காரில் இருந்து இறங்கினார் பரந்தாமன். அவர் முகத்தைப் பார்த்த தீக்ஷிதனின் முகம் யோசனையில் சுருங்கியது. மறுபக்கம் வந்த பரந்தாமன் கதவை திறக்க காரினுள் இருந்து இறங்கினாள் சம்யுக்தா. சத்தியமாக இப்படி ஒரு பெண்ணை தீஷிதன் எதிர்பார்க்கவில்லை என்று அவனது முகம் காட்டிய அதிர்ச்சியிலேயே புரிந்து கொண்டார் பரந்தாமன். கண்களால் மகனிடம் எச்சரிக்கை செய்ய அதை உணர்ந்த தீஷிதன் தனது பார்வையை மாற்றினான்.
கீழே இறங்கிய சம்யுக்தா நிமிர்ந்து யாரையும் பார்க்காமல் நின்றாள். “சம்யுக்தா இதுதான் என் பையன்… பேரு தீக்ஷிதன்… தீஷி இதுதான் நான் சொன்ன சம்யுக்தா….” என்று இருவரையும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகப்படுத்தினார்.
சம்யுக்தா அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. ஆனால் தீஷிதன் அவளை நன்றாகப் பார்த்தான்.
“அப்பா நீங்க எதுக்காக காரை டிரைவ் பண்ணிட்டு வந்தீங்க….? டிரைவர் ஒருத்தர கூட்டிட்டு வந்திருக்கலாம்ல…”
“அதுதான் நல்லபடியா வந்தாச்சுல… அதை விடு தீஷி…”
“சரி ஓகே டாட் உள்ள வாங்க….” என்று அவன் முன்னே செல்ல, “சம்யுக்தா வாமா உள்ள…” என்று அவளை அழைத்துக் கொண்டு வந்தார்.
ஒரு அறையைக் காட்டி, “அம்மாடி இந்த அறையில் தாங்கிக்க…. உனக்கு தேவையானது எல்லாம் எடுத்துக்கலாம்…” என்றவர் அதற்கு அருகில் இருந்த ஒரு அறையைக் காட்டினார். இது என் பொண்ணோட ரூம்…. வரும்போது உனக்கு டிரஸ் வாங்கிட்டு வந்தோம் இல்ல பிரஷாகிட்டு, நிம்மதியா தூங்கு…. இங்க உனக்கு எந்த பிரச்சனையுமே வராது….” என்றவரிடம், “சரி…” என்று தலையாட்டி விட்டு அவர் தனக்கு என்று காட்டிய அறைக்குள் சென்று விட்டாள்.
இங்கே தனது தந்தையின் கையைப் பிடித்து இழுத்து வந்தான் தீஷிதன் அவனின் அறைக்கு.
“டாட்… உண்மைய சொல்லுங்க… எதுக்காக இந்தப் பொண்ணை இங்க கூட்டிட்டு வந்தீங்க….?”
“தீஷி அந்த பொண்ணு நான் இங்க அழைச்சிட்டு வந்ததுக்கு காரணம் இருக்கு…. அந்த பொண்ணோட மாமியார் அவள ஹாஸ்பிடல்ல வெச்சி அத்தனை பேருக்கு முன்னாடியும் அடிச்சிட்டாங்க…. அந்த பையன் அவன்லாம் மனுஷனே இல்ல தெரியுமா….? சம்யுக்தாகூட கல்யாணம் பண்ணி வாழ்ந்துட்டு அதே நேரம் அவளுக்கு தெரியாம இன்னொருத்தி கூடேயும் வாழ்ந்துட்டு இருக்கிறான் அந்த ராஸ்கல்…. இதெல்லாம் அவகிட்ட சொல்லி அவ மேல ஏதோ தப்பு இருக்கிற மாதிரி இவங்க பிரேம் பண்ணிட்டாங்க…. ரொம்ப ஒடைஞ்சு போயிருந்தா… ஆறுதல் தேடி அவங்க அம்மா வீட்டுக்கு போய் இருக்கா ஆனா அவங்களும் நீ எங்க பொண்ணு இல்ல…. உன்னை தத்தெடுத்து தான் வளர்த்தோம்னு சொல்லி வெளியே அனுப்பிட்டாங்க…. இதுக்கு மேல எதுக்கு இருக்கணும்னு நினைச்சு அந்த பொண்ணு அந்த பாலத்தில் இருந்து குதிக்க போயிட்டா…. நல்லவேளை நான் காப்பாத்திட்டேன்…. அதுமட்டுமில்ல அவ ரொம்ப உடைஞ்சு போயிட்டது தெரிஞ்சது…. அந்த இடத்தை விட்டு வேற இடத்துக்கு போன அவளை மனநிலை மாறும்னு நினைச்சேன்… அதுதான் இங்கே கூட்டிட்டு வந்தேன்…. பாக்க ரொம்ப குண்டா கண்ணுக்கு கண்ணாடியும் போட்டுட்டு இருக்கிறானு தீஷி நீ அந்த பொண்ணை எப்பவும் காயப்படுத்த கூடாது… அது மட்டும் இல்ல அவளோட . வெளித்தோற்றத்தை வைத்து என்னிக்குமே காயப்படுத்திடாத… அதனால ரொம்ப ஒடிச்சு போய் இருக்கா அவ…. எம்பிஏ படிச்சிருக்கா ஆனா அவளோட சர்டிபிகேட் எல்லாம் அவ வீட்ல இருக்கு…. நீ என்ன ஏதுனு பார்த்து நம்ம கம்பனில ஒரு நல்ல வேலை போட்டு கொடுத்துடு தீஷிதன்.
“அப்பா ஒருத்தங்களோட வெளித்தோற்றத்தை வச்சு அவங்கள காயப்படுத்துற அளவுக்கு நான் மோசமானவன் இல்லப்பா…. ஆனா சர்டிபிகேட்ஸ் இல்லாம எப்படி வேலை போட்டு கொடுக்கிறது…?”
“குடுக்கலாம் தீஷி… பாவம் அவ வேலைக்கு போகணும்னு அவசியம் இல்ல…. ஆனால் சம்யுக்தா வேலைக்கு போகணும்…. இல்லனா அங்க நடந்தத நினைச்சுட்டு அவளுக்கு இன்னும் ஸ்ட்ரெஸ் ஆகும்….”
“யாரோ ஒரு பொண்ணு மேல எதுக்கு இவ்வளவு அக்கறைனு தெரியல்ல டாட்…”
“உதவி பண்றதுக்கு தெரிஞ்சவங்களா தான் இருக்கணும்னு அவசியம் இல்ல தீஷி…. நீ எனக்கு ஒரு சத்தியம் பண்ணு…”
“என்ன சத்தியம் டாட்…”
“சொல்றன் பண்ணு…”
“சரி…” என்றவன் அவர் சொன்ன விஷயத்தைக் கேட்டதும் அவரைப் பார்க்க, “நீ சத்தியம் பண்ணதை எப்பவும் மீறமாட்டனு நம்புறேன் தீஷி… அதே நேரம் சத்தியத்தை என்னைக்குமே மறந்திடாத….”
“ஓகே டாட்… நீங்க ரொம்ப தூரம் ட்ரைவ் பண்ணி வந்து இருக்கீங்க ரெஸ்ட் எடுங்க நாளைக்கு பேசிக்கலாம்….”
“ஓகே பா நான் வரேன்…” என்றவர் அவர் அறைக்குச் செல்ல, தீஷிதன் தனது அறைக் கதவை ரிமோட் கண்ட்ரோல் மூலம் அடைத்துவிட்டு கட்டிலில் வந்து படுத்தான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
வாழ்வு : 06
அந்த இரவு நேரத்தில் பாலத்தின் மீது ஏறி நின்றாள் சம்யுக்தா. தொட்டுத் தாலி கட்டிய கணவன் ஏமாற்றி விட்டான். தாய் வீட்டுக்குச் செல்லலாம் என்றால் தாயோ இவள் ஒரு அநாதை என்ற பட்டத்தைக் கொடுத்து வெளியே அனுப்பி விட்டார். சொந்த பந்தம் எதுவும் இல்லாமல், தனக்கென்று ஒரு உறவு இல்லாமல் யாருக்காக இந்த வாழ்க்கை…? எதற்காக இந்த வாழ்க்கை..? என்று எண்ணம் தான் சம்யுக்தாவிற்கு தோன்றியது.
இதற்கு மேல் இந்த உலகத்தில் இருந்து என்னதான் செய்யப் போகின்றேன்… பேசாமல் செத்து விடலாம்… என்ற விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டாள் அவள். அவள் பாலத்தின் மீது ஏறி நிற்பதை பார்த்த அந்த இரு விழிகளுக்கு சொந்தக்காரர் தனது காரில் இருந்து இறங்கி வேகமாக அவளிடம் வந்தார். சரியாக அவள் குதிக்கச் செல்லும் போது அவள் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினார். தனது கையைப் பிடித்திருந்தவரை பார்த்த சம்யுக்தா. “என்னை எதுக்காக தடுக்கிறீங்க…. என்னோட கையை விடுங்க…. நான் சாகனும்…” என்றாள். அவளைப் பார்த்து சிரித்தவர், “கீழ இறங்கி வாம்மா…” என்றார்.
“இல்ல நான் சாகணும்… என்னை விடுங்க…” என்றாள் மறுபடியும்.
“அம்மாடி நான் சொல்றதை கேளுமா… முதல்ல கீழ இறங்கு…” என்றவர் அவள் கையை பிடித்து கீழே இறக்கி விட்டார். சம்யுக்தா அவரைப் பார்த்து, “என்ன எதுக்காக காப்பாத்தணும்னு நினைக்கிறீங்க…. என்ன விடுங்க நான் சாகணும்…. எனக்கு தான் இங்க யாருமே இல்லையே…. இங்கிருந்து நான் என்ன பண்ண போறேன்…. எல்லாரும் என்னை ஏமாத்துறாங்க…. துரோகம் மட்டுமே என்னோட வாழ்க்கையில இருக்கு….” என்றாள்.
அவளை பாவமாக பார்த்தவர் அவளின் தலையை வருடி விட்டு, “அம்மாடி நான் சொல்றத கேளு… இங்க சாகணும்னு நீ முடிவு எடுத்து இருக்க… அந்த முடிவு எடுக்கவே ஒரு தைரியம் வேணும்…. அப்படி தைரியமான நீ ஏன் வாழ நினைக்க கூடாது…”
“எதுக்காக வாழனும்…. நான் யாருக்காக வாழனும்…. இத்தனை நாள் என்னோட அப்பா அம்மானு நினைச்சவங்க, இன்னைக்கு அனாதைனு சொல்லிட்டாங்க…. தாலி கட்டின புருஷன் நான் உயிரோட இருக்கும்போதே இன்னொரு பொண்ணோட வாழ்ந்து இப்போ அவ கர்ப்பமாக வேற இருக்கா….. இப்படி இருக்கும்போது நான் யாருக்காக இருக்கணும்…. என்ன விடுங்க..” என்றாள். “இருக்கணுமா நீ இருக்கணும்… இங்க எத்தனையோ பொண்ணுங்களோட நிலை இதுதான்…. ஏன் அநாதைங்க வாழறது இல்லையா…? எத்தனையோ ஆச்சிரமங்கள்ல பாரு எத்தனையோ அநாதைங்க வாழ்ந்திட்டு இருக்காங்க…. மத்தவங்களுக்கு வாழ்க்கை கொடுத்துட்டு இருக்காங்க…. இந்த பரந்த உலகத்துல எல்லாருக்குமே ஏதோ ஒரு உறவு ஒன்னு இருக்கும்…. அந்த உறவை நீ தேடு… உன்னை ஏமாத்திட்டு போனவங்க, உனக்கு துரோகம் பண்ணிட்டு போனவங்களை பத்தி ஏன் யோசிக்கிற…. உனக்கு என்ன முடியும்னு பாரு உனக்காக வாழு…. வேறு யாரையும் எதிர்பார்த்து வாழாத….” என்றார்.
சம்யுக்தாக்கு அவர் கூறுவது புரிந்தாலும் அவளால் அந்த விரக்தியில் இருந்து வெளியே வர முடியவில்லை. “சார் நீங்க சொல்றது சரிதான்… ஆனா என்னால இதுல இருந்து வெளிவர முடியல….”
“இங்க பாருமா நான் ஊட்டியில் இருக்கிறன்… என் பேரு பரந்தாமன்… பிஸ்னஸ் பண்ணிட்டு இருக்கேன்… ஒரு பிஸ்னஸ் விஷயமா தான் இங்க வந்தேன்… அந்த நேரத்தில் என்னோட ப்ரெண்டு ஹாஸ்பிடல் இருக்கிறது தெரிஞ்சது…. அதுதான் அவன பாத்துட்டு போலாமேனு அந்த ஹாஸ்பிடலுக்கு வந்தேன்…. அங்கதான் உன்னை உன் மாமியார் புருஷன் நடத்தின விதத்தை நான் பார்த்தேன்…. ஏனோ உன்னை பாக்க பாவமா இருக்க, உன்னை தொடர்ந்து வந்தேன்…. நீ பேசாம என் கூட ஊட்டிக்கு வந்திடு…. என் வீட்ல தங்கிக்க…. என் கம்பெனியில் வந்து உனக்கு ஒரு வேலை போட்டு கொடுக்கிறேன் கொஞ்ச நாளைக்கு இந்த இடத்தை இந்த ஊரை மறந்துட்டு…. புது இடத்துல புது மனுஷங்களோட பழகிப் பாரு… உனக்கு வாழ்க்கைனா என்னன்னு தெரியும்…. நீ ஒரு கூட்டுக்குள்ளயே இருக்குற… அம்மாடி அந்த கூட்டை விட்டு வெளியே வா…. இந்த உலகத்தைப் பாரு… உன்னை சுத்தி இருக்கிறவங்க பாரு.. அவங்க கூட பழகு அப்பதான் உனக்கு இந்த வாழ்க்கைனா என்னனு புரியும்…. இந்த வாழ்க்கைல எவ்வளவு பேரு இருக்காங்க…. எப்படிப்பட்ட மனுஷங்க இருக்காங்கன்னு உனக்கு புரியும்…..” என்று கொஞ்சம் கொஞ்சமாக பேசி அவளின் மனதை மாற்றினார்.
“என்னை நம்புமா…. எனக்கு ஒரு பொண்ணு ஒரு பையன் இருக்காங்க…. பொண்ணு அமெரிக்கால படிச்சிட்டு இருக்கா…. பையன் தான் பிசினஸ் பாத்துகிட்டு இருக்கான்…. நீ என்கூட வாம்மா… என் பொண்ணா இருந்தா உன்ன இப்படி நடுரோட்டில் விட்டுட்டு போவனா…. என்கூட வாமா…” என்று அழைத்தார்.
“சம்யுக்தாவிற்கு வேறு இடத்திற்கு சென்றால் நல்லது என்ற எண்ணம் தோன்ற, “சரிங்க சார் நான் உங்க கூட வரேன்….” என்றாள்.
“வாமா….” என்று அவளை அழைத்துக் கொண்டு காருக்கு வந்தவர். காரில் அவளை ஏற்றிவிட்டு வண்டியை ஓட்டினார். கொஞ்ச தூரம் சென்றதும், “அம்மாடி உன் பேர் என்ன… நீ சொல்லவே இல்ல…” என்று பேச்சுக் கொடுத்தார் அவளிடம்.
“என்னோட பேரு சம்யுக்தா சார்…”
“ரொம்ப அழகான பேருமா… எனக்கு கொஞ்சம் பசிக்குது நான் டைம்க்கு டேப்லெட் போடணும்… அந்த ஹோட்டல்ல சாப்பிட்டு போலாம்…”
“இலங்க சார் எனக்கு பசி இல்ல…. எனக்கு எதுவும் வேணாம்….”
“அப்படி எல்லாம் சொல்லாதம்மா… தனியே சாப்பிட முடியாது… என்கூட வந்து ஒரு காபியாவது குடிமா..” என்று அவளை வற்புறுத்தி ஹோட்டலுக்கு அழைத்து வந்தார். இருவருக்கும் சேர்த்து உணவை ஆர்டர் பண்ணினார். சாப்பாடு வந்ததும் அவளுக்கும் பரிமாறி இவரும் உண்டார்.
உண்டுவிட்டு மீண்டும் வந்து பயணத்தை தொடர்ந்தார். காரில் வரும்போது சம்யுக்தா அவரிடம், “சார் நான் எம்பிஏ படிச்சிருக்கேன்… ஆனா என்னோட சர்டிபிகேட் எல்லாம் வீட்ல தான் இருக்கு…. நான் வரும்போது எதையுமே எடுத்துட்டு வரல…”
“அதனால என்னமா அதுக்குண்டான வேலையை நான் போட்டுக் கொடுக்கிறேன்…. நான் உனக்கு வேலை கொடுக்காமலேயே என் வீட்டிலேயே உன்னை வச்சிருக்க முடியும் ஆனா உனக்குன்னு ஒரு தைரியம் வரணும்…. அதுக்கு நீ சொந்தக்கால்ல நிக்கணும்… அதுக்கு தான் இந்த வேலை…. கவலைப்படாதம்மா இன்னும் கொஞ்ச நாள்ல என் பொண்ணு வந்துடுவா அப்புறம் உனக்கு இப்பொழுது நல்லாவே போகும்… ரொம்ப வாயாடி அவ…” என்று சொல்லி சிரித்தார். இதைக் கேட்ட சம்யுக்தாவின் இதழிலே புன்னகை வந்தது. உடல் களைப்பினாலும் மனவலியினாலும் சம்யுக்தா வெளியே இருந்து வந்த காற்றின் உதவியால் நன்றாக தூங்கி விட்டாள். அவள் தூங்கியதை பார்த்த பரந்தாமன் தனது ஃபோனை எடுத்து, தீஷிதனுக்கு போன் போட்டார்.
“டேட் என்ன காரியம் பண்ணிட்டு இருக்கீங்க….? யாரை இங்க கூட்டிட்டு வர்றீங்க…..?” என்று எடுத்த எடுப்பிலேயே கேள்வி கேட்டான்.
“எனக்குத் தெரியும்…. உனக்கு இங்க நடக்குற எல்லாமே தெரிஞ்சி இருக்கும்னு….. அதான் நானே பேசலாம்னு எடுத்தேன்….”
“டேட் நீங்க என்ன பண்றீங்கனு உங்களுக்கு புரியுதா….? யாரோ ஒரு பொண்ண எதுக்கு நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர்றீங்க….? இந்த பொண்ணுங்களே ரொம்ப மோசமானவங்க டாட்….”
“இங்க பாருப்பா… உனக்கு ஏதோ ஒரு காரணத்துக்காக பொண்ணுங்கள பிடிக்காம போயிருக்க லாம்… ஆனா எல்லா பொண்ணுங்களுமே அப்படி மோசமானவங்க இல்ல…. உன்னோட அம்மா… உன் தங்கச்சி இவங்க மோசமானவங்களா இல்லல்ல…. அதே மாதிரி நிறைய பொண்ணுங்க இருக்காங்க இந்த உலகத்துல…. தீஷி நான் இப்போ உனக்கு போன் போட்டது எதுக்காகன்னு தெரியுமா…? இந்தப் பொண்ணு ரொம்பவே மன உளைச்சல்ல இருக்கா…. மத்தவங்களால ரொம்ப காயப்பட்டு இருக்கா…. அவள நான் அங்க கூட்டிட்டு வரும்போது நீ வார்த்தையால அவளை எதுவும் காயப்படுத்திடாத…. எவ்ளோ கஷ்டம் இருந்தா அவ சாகுற நிலைமைக்கு போயிருப்பான்னு என்னால புரிஞ்சுக்க முடியுது…. அதை நீயும் புரிஞ்சிப்பேன்னு நினைக்கிறேன்….”
“டேட் ஆனா அந்த பொண்ணை நான் எதுக்காக புரிஞ்சுக்கணும்…?”
“தீஷி இந்தப் பொண்ண நீ எதுவுமே பேசக்கூடாது புரிஞ்சுதா….?” என்று தனது உறுதியான குரலில் கூறினார். பொதுவாக பரந்தாமன் அந்தக் குரலை பயன்படுத்த மாட்டார். எப்போவாவது அதைப் பயன்படுத்தினால் அதற்கு மறுப்பு எதுவும் தீஷிதன் சொல்ல மாட்டான். “சரி டாட் நான் எதுவும் சொல்லல…” என்றான் தீஷிதன்.
“குட் நான் இன்னும் த்ரீ ஹவர்ல வீட்ல இருப்பேன்….”
“ஓகே டாட் பார்த்து பத்திரமா வாங்க…” என்றவன் ஃபோனை வைத்தான்.
“ஓகே ரிஷி பாய்…” என்ற ஒரு போனை வைத்துவிட்டு பின்னர் திரும்பி சம்யுக்தாவை பார்த்தார். அவள் நன்றாக தூங்குவது தெரிந்தது. ‘உன்னோட வாழ்க்கை கண்டிப்பா நல்லபடியா மாறுமா…” என்று சொல்லிக்கொண்டு அந்தப் பயணத்தை தொடர்ந்தார்.
‘டாட் எதுக்கு இப்படி பண்றாரு… அந்த பொண்ணுக்கு ஏதாவது பண்ணனும்னா வேற ஹெல்ப் எதுவும் பண்ணாமல்… சும்மா நம்மளோட வீட்டுக்கு கூட்டிட்டு வர்றாரு… நம்மள மீறி ஏதாவது ஏமாத்து வேலை பண்ணா அப்புறம் பாத்துக்கலாம்….’ என்று நினைத்தான் தீஷிதன்.
“தீஷி என்ன ரொம்ப யோசனையா இருக்க சாப்பிடுடா…” என்றான் புகழ். “புகழ் உனக்குத் தெரியுமா… எங்க அப்பா சென்னையில இருந்து ஒரு பொண்ண கூட்டிட்டு வராரு….”
“என்னாது ஒரு பொண்ணை கூட்டிட்டு வர்றாரா என்னடா சொல்ற…”
“ஆமா புகழ் யாரோ ஒரு பொண்ணு சாகப் போயிருக்கு அதை எங்க அப்பா காப்பாத்தி கூட்டிட்டு வராரு…” “அப்படியா அது நல்ல விஷயம் தானேடா சாகப் போறவங்களை காப்பாத்துறது….”
“அது நல்ல விஷயம் தான் டா… ஆனா அவங்கள எதுக்காக இங்க கூட்டிட்டு வரணும்…. அதுத்தான் எனக்கு குழப்பமா இருக்கு…”
“தீஷி அங்கிள் என்ன பண்ணாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும் உன்ன மாதிரி…. சோ ஃப்ரீயா விடு… நீ இதை நினைச்சு டென்ஷன் ஆகாத….”
“ஓகே புகழ்… வரட்டும் அந்த பொண்ண பாக்கலாம்…”
“சரி லேட்டாயிடுச்சு நான் வரேன் மச்சான்….”
“ஓகேடா காலையில ஆபீஸ்ல மீட் பண்ணலாம்….” என்று இருவரும் அவரவர் வீட்டுக்கு சென்றனர்.
பிரகாஷ் தனது காதலி சீமாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான். சீமாவை கீதாவிற்கும் கீதாவை சீமாவிற்கும் அறிமுகப்படுத்தி வைத்தான்.
“பிரகாஷ் நாளைக்கு உனக்கும் சீமாக்கும் கல்யாணம்…”
“ஓகே அம்மா… அம்மா டாட் என்ன சொல்லுவாருனு தெரியலை…”
“உங்க டாட் எதுவும் சொல்ல மாட்டாரு… நீ பண்ணது தப்பு… இன்னொரு தடவை இதை பண்ணாத… சீமாகூட சந்தோஷமா வாழுற வழியப்பாரு…”
“கண்டிப்பா அம்மா… சீமாவை தவிர என் வாழ்க்கையில யாருக்கும் இடம் இல்லை… அந்த சனியன் தொலைஞ்சதே போதும்…”
“ஆமா பிரகாஷ்… சரி நீ சீமாவை கூட்டிட்டு போ…”
“சரி அம்மா… சீமா வா போகலாம்..” என்று அவளை அழைத்துக் கொண்டு அறைக்குச் சென்றான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
வாழ்வு : 05
கீதா, சம்யுக்தா ஹாஸ்பிடலுக்கு வரும் முன்னரே சம்யுக்தாவிற்கு ட்ரீட்மென்ட் பண்ணிய டாக்டருக்கு கால் பண்ணி விஷயத்தை அறிந்து கொண்டார். அதன் பின்னர் அவர் என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டு, சம்யுக்தாவை மாத்திரம் ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் வீட்டில் இருந்து வக்கீலின் ஆபீசுக்கு சென்றவர், பிரகாஷையும் அங்கே அழைத்தார். அவர்கள் இருவரும் அவரிடம் சம்யுக்தாவைப் பற்றி கூறினார்கள். டைவர்ஸ் வாங்க வேண்டும் என்றான் பிரகாஷ். வக்கீலிடம் தன் மீது எந்த குற்றமும் இல்லை என்ற வகையில் பிரகாஷ் சொன்னான். உடனே வக்கீலும் அதற்குரிய டைவர்ஸ் பத்திரத்தை தயார் செய்து கொடுக்க, அதை எடுத்துக் கொண்டு இருவரும் ஹாஸ்பிடலுக்கு வந்தனர்.
அங்கே சம்யுக்தா அழுது கொண்டு வருவதை பார்த்ததும் கீதாவிற்கு கோபம் வந்தது. இவள் மீது குறையை வைத்துக்கொண்டு தன் மகனுக்கு கட்டி வைத்து தன்னை லீலா மீதும் அவருக்கு கோபம் வந்தது. எல்லாவற்றையும் சேர்த்து சம்யுக்தாக்கு அறைந்து விட்டார்.
கீழே விழுந்த அவள் கதறி அழுதாள். ஆனால் அவளை ஒரு பொருட்டாகவே அவர்கள் நினைக்கவில்லை.
“ஏய் எந்திரி டி…..” என்ற கீதா அவளின் கூந்தலை பிடித்து எழுப்பினாள்.
“அத்தை விடுங்க வலிக்கிது….” என்ற சம்யுக்தாவின் அழுகை நிறைந்த குரலை அவர் மதிக்கவே இல்லை. “இங்கபாருடி உன்னை கல்யாணம் பண்ணி வச்சு என் பையனோட வாழ்க்கையே நான் நாசமாக்கிட்டேன்…. எந்த நேரத்தில் நீ பிறந்தன்னே தெரியல…. இங்க பாரு மரியாதையா இந்த டாக்குமெண்ட்ல கையெழுத்து போட்டுட்டு உன் வீட்டுக்கு போயிடு….”
“என்ன டாக்குமெண்ட் அத்தை…?”
“டைவர்ஸ் தான் உனக்கு என் பையனுக்கு இனிமே எந்த சம்மந்தமும் இல்ல…. மரியாதையா கையெழுத்து போட்டுட்டு உன் வேலையைப் பாத்துட்டு போயிட்டே இரு…. நான் என் பையனுக்கு நல்ல இடமாக பாத்து கல்யாணம் பண்ணி வச்சுடுவேன்…” என்றார்.
“அத்தை என்ன அத்தை இது….? பிரகாஷ் நீங்க என்ன பேசாம அமைதியா இருக்கீங்க… உங்க அம்மா என்ன சொல்றாங்கன்னு கேட்டீங்க இல்ல….”
“இங்க பாரு எங்க அம்மாவோட முடிவு தான் என் முடிவு…. இந்த டாக்குமென்ட்ல கையெழுத்து போட்டுட்டு போயிட்டேனா அது உனக்கு நல்லது…. இல்லேன்னு வையேன் கோர்ட்டு கேஸ்ன்னு அலைய வச்சு உன்னை நாறடிச்சிடுவேன்…. உனக்கு வேற ஒரு தொடர்பு இருந்துச்சு அதுதான் நான் டைவர்ஸ் பண்றேன்னு சொல்லுவேன்….”
“ச்சீ நீ எல்லாம் ஒரு மனுஷனா…? கட்டின பொண்டாட்டிக்கு தப்பான தொடர்பு இருக்கு கோர்ட்ல சொல்லுவேன்னு சொல்ற வெக்கமா இல்ல உனக்கு…. நீ எல்லாம் என்னடா ஆம்பள…?”
“ஏய் என்ன வாய்க்கு வந்தபடி பேசுற…? கொன்னுடுவேன் பாத்துக்க…”
“பிரகாஷ் நீ எதுக்குடா இவகிட்ட எல்லாம் பேசிகிட்டு கையெழுத்த போடுடி….”
“இல்லத்த நான் இதுல கையெழுத்து போட மாட்டேன்….”
“அப்போ என்ன பண்ண சொல்ற… உன்ன மாதிரி ஒரு மலடியை என் பையன் கூட வச்சிருந்து என் குடும்பத்துக்கு வாரிசு இல்லாமாக்கணுமா….?”
“அம்மா கவலைப்படாதீங்க அம்மா…. நம்ம குடும்பத்துக்கு வாரிசு வந்தாச்சு….”
“பிரகாஷ் என்ன சொல்ற நீ…?”
“அம்மா இத நான் உங்ககிட்ட சொல்லல ஆனா இப்படியான நேரத்துல சொல்லுவேன்னு நான் நினைக்கல… நான் காலேஜ் படிக்கும்போது ஒரு பொண்ணு லவ் பண்ணேன்…. நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நாளா பழகிட்டு இருந்தோம்…. நான் உங்க கிட்ட இந்த விஷயத்தை சொல்லலாம்னு இருக்கும்போது தான் நீங்க இதோ இந்த சனியனைப் புடிச்சி என் தலையில கட்டி வச்சிட்டீங்க…. ஆனா என்னால அவளை அவ்வளவு சீக்கிரமா மறக்க முடியல…. சோ நான் வீட்டுக்கு தெரியாம அவ கூட ரிலேஷன்ஷிப்ல இருந்தேன்…. இப்போ அவ மாசமா இருக்கா….”
“பிரகாஷ் நிஜமாவா சொல்ற அப்போ நம்ம குடும்பத்துக்கு ஒரு வாரிசு வந்துடுச்சில்ல…”
“கண்டிப்பா அம்மா ஒரு வாரிசு வந்தாச்சு…. ஆனா இவ இருக்கும் போது நான் எப்படி அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன்…?”
“இவ இருந்தா தானே பிரகாஷ்…. இவதான் இப்ப வீட்ட விட்டு போயிடுவால்ல அதுக்கப்புறம் நீ மருமகளை முறைப்படி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடு….” என்று அவர் பாட்டிற்கு பிரகாஷ் உடன் திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் பிரகாஷ் சொன்னதைக் கேட்ட சம்யுக்தாவுக்கு அந்த நிமிடமே செத்துவிடலாம் போல இருந்தது. பேச்சும் வரவில்லை அவளுக்கு. “பிரகாஷ் நீங்க இப்ப என்ன சொன்னீங்க….”
“என்ன அதிர்ச்சி அடைஞ்ச மாதிரி நடிக்கிறியா…? நான் சொன்னதெல்லாம் உனக்கு கேட்டிச்சி… நீ கேட்டது எல்லாம் உண்மைதான்….”
“உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்ல… தொட்டு தாலி கட்டின பொண்டாட்டி நான் உயிரோட இருக்கும்போது இன்னொருத்தி கூட ரிலேஷன்ஷிப்பில் இருந்து இப்ப அவ மாசமா இருக்கான்னு வேற சொல்றீங்க….. அத்தை நீங்களும் ஒரு பொண்ணு தானே…. உங்க பையன் வேறொருத்தி கூட தொடர்புல இருக்கான்னு தெரிஞ்சும் அவன்கிட்ட கோவப்படாம எப்படி இப்படி பேசிட்டு இருக்கீங்க….?”
“ஏய் வேற எப்படி பேசச் சொல்ற.. இதே நீயும் ஒரு பிள்ளைக்கு தாயாகி காலை இருந்தா நான் உன் பக்கம் நின்னு இருப்பேன்… எனக்கு என் குடும்பம் விளங்கனும் அதுக்கு ஒரு வாரிசு வேணும் அவ்வளவுதான்…. இது எங்க குடும்ப விஷயம் நான் பாத்துக்குவேன் மரியாதையாக கையெழுத்து போட்டுட்டு போயிடு….”
“நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் இதுல கையெழுத்து போடத்தான் போறேன்… இப்படி ஒருத்தன் கூட எப்படி வாழ முடியும் என்னால…”
“ஆமா நீ வாழ்ந்து கிழிச்சுட்ட…. நீ இருக்கிறது தண்டத்துக்கு என் பையனை விட்டா வேற யாரும் உன்னை கல்யாணம் பண்ணியிருக்க மாட்டாங்க….” என்றார் கீதா.
சம்யுக்தா இவர்களுடன் பேசவே கூடாது என்ற முடிவெடுத்தவள், கீதாவின் கையில் இருந்த அந்த டாக்குமெண்டை வாங்கி கடகடவென்று எல்லாவற்றிலும் கையெழுத்து போட்டு அவர்கள் முகத்தில் எறிந்தாள். அடுத்து அவன் கட்டிய தாலியை தன் கழுத்தில் இருந்து சிறிது கூட யோசிக்காமல் கழற்றி அவன் முகத்தில் எறிந்தவள், “இதுக்கு அப்புறம் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… ஆனா நீங்க இத்தனை நாள் எனக்கு கொடுத்த கஷ்டத்துக்கு கண்டிப்பா நீங்க அனுபவிப்பீங்க….”
“அதெல்லாம் நாங்க அனுபவிக்கிறோம்….. நீ உன் வேலைய பாரு…. பிரகாஷ் வா போகலாம்….” என்று பிரகாஷை அழைத்துக் கொண்டு கீதா சென்று விட்டார். சம்யுக்தாக்கு வேறு போக்கிடம் ஏது தன் தாய் வீட்டிற்கு செல்லலாம் என்று அங்கே சென்றாள்.
இங்கே நடந்த அனைத்தையும் இரு விழிகள் பார்த்துக் கொண்டுதான் இருந்தன. ஏனோ அந்த விழிகள் அவளை பின்தொடர்ந்து செல்ல வேண்டும் என்று நினைத்து, அவள் பின்னையே சென்றன. சம்யுக்தா தன் தாய் வீட்டிற்கு வந்தாள். ஆனால் காவலாளியை, “சின்னம்மா உங்களை மேடம் உள்ள விட வேணாம்னு சொல்லி இருக்காங்க…. உங்களை விட்டா அப்புறம் என் வேலை போயிடும்….”
“அண்ணா நான் அம்மாவ பாத்தே ஆகணும் ப்ளீஸ் கொஞ்சம் அவங்களை வரச் சொல்லுங்க…” என்றாள். அவரும், “சரி இருங்கம்மா கால் பண்ணி பாக்குறேன்…” என்று அவருக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்ல லீலாவதி, “அந்த மாகாணியை பாக்க நான் கீழ வரணுமா…? அவள உள்ள விடு என்ன சொல்றான்னு பாக்கலாம்…” என்றார். காவலாளியும் சம்யுக்தாவிடம் லீனா கூறியதை கூறினார். பின்னர் அவள் உள்ளே சென்றாள்.
“அம்மா…. அம்மா….” என்று அழைத்துக் கொண்டு உள்ளே வந்தாள் சம்யுக்தா. சம்யுக்தாவை பார்த்த மாத்திரத்தில் லீலா, “அங்கேயே நில்லு.. ழ. எதுக்கு இங்க வந்த….?” என்று கேட்டார். தன் கவலைகளை சொல்லி, தாய்மடி மீது படுத்து அழலாம் என்று நினைத்த சம்யுக்தாவுக்கு ஏமாற்றமே கிடைத்தது. “அம்மா என்ன நடந்துச்சினு தெரியுமா…. அங்க பிரகாஷ் இன்னொரு….. இன்னொரு பொண்ணு கூட தொடர்புல இருக்காரும்மா….. அம்மா என் வாழ்க்கையே போயிடுச்சு…. அதுதான் அவன் கட்டின தாலியை கழட்டி அவனோட மூஞ்சிலேயே வீசிட்டு வந்துட்டேன்…. நான் உங்க பொண்ணா இங்கேயே இருந்துடுறன் அம்மா….” என்றாள்.
“என்ன கழுத்துல இருந்த தாலிய கழட்டி வைச்சிட்டு வந்துட்டியா…? உனக்கு என்ன பைத்தியமா…?”
“அம்மா என்னம்மா இப்படி சொல்றீங்க… இன்னொரு பொண்ணு கூட தொடர்புல இருந்தவன் கூட நான் எப்படி வாழ முடியும்….?”
“பொண்ணுனா எல்லாத்தையும் அனுசரிச்சு போகணும்…. இப்படி ஒரேடியா முடிச்சிட்டு வந்து நிக்கக்கூடாது…. நீ இப்படி வந்து நிக்கிற… நாளைக்கு உன் தங்கச்சி கல்யாணப் பேச்சு எடுத்தா அக்கா நீ இப்படி வாழாவெட்டியா வந்து இருக்கேன்னு நாலு பேரு பேச மாட்டாங்க….. இங்க பாரு நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது…. மரியாதையா இந்த பிரகாஷ் கூட சேர்ந்து இருக்கிற…. இல்ல இங்க இருந்து போயிடு….”
“நான் இவ்வளவு கஷ்டப்படுறேன்னு சொல்லியும் எப்படிம்மா உங்களுக்கு என்னை மறுபடியும் அங்கேயே போய் இருக்கச் சொல்லி மனசு வந்துச்சு…. நான் உங்க பொண்ணு தானே… இல்ல என்னை எங்கையாவது தத்தெடுத்தீங்களா….?” என்று வருத்தத்துடன் கூறினாள் சம்யுக்தா. “ஆமாடி உன்னை தத்துத்தான் எடுத்தும்….. நீ எங்க பொண்ணே கிடையாது….. போதுமா இங்கிருந்து போயிடு….”
“அம்மா என்னம்மா இப்படி சொல்றீங்க….. அவங்க எல்லாம் என்னை பேசுறத விட நீங்க இப்படி சொல்றது தான் ரொம்ப கஷ்டமா இருக்குமா…..”
“கஸ்டமா இருந்தாலும் அதுதான் உண்மை….. நீ என்னோட பொண்ணு கிடையாது…. உன்ன ஒரு ஆசிரமத்துல இருந்து நாங்க தத்தெடுத்திட்டு வந்தோம்…”
“அம்மா நிஜமா நான் உங்க பொண்ணு இல்லையா….? நீங்க பொய் தானே சொல்றீங்க….”
“பொய் எல்லாம் ஒன்னும் இல்ல… நீ எங்க பொண்ணு கிடையாது…. மரியாதையா இங்கிருந்து போயிடு…. ஒன்னு அந்த பிரகாஷ் வீட்டுக்கு போ…. இல்லனா எங்கேயாவது போய் சாகு ஆனா இங்க உனக்கு இனிமே இடம் கிடையாது…..” என்றார்.
சம்யுக்தாக்கு உலகமே இருண்டது போல இருந்தது. சிறிது நேரம் அங்கிருந்த சோபாவில் இருந்தாள். “இங்க பாரு இங்கிருந்து ஒரு பிரயோசனமும் இல்ல….) நீயா வெளில போயிட்டேனா உனக்கு நல்லது….. நானாக கழுத்த புடிச்சு வெளிய தள்ளினா உனக்கு அசிங்கமாயிடும்…..” என்றார் லீலா.
எழுந்து அவரைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்த சம்யுக்தா. “கவலைப்படாதீங்கம்மா உங்களுக்கு எதுக்கு கஷ்டம்….. என்னை வெளில புடிச்ச தள்ற கஷ்டத்தை கொடுக்க மாட்டேன்…..” என்றவள் அவள் காதில் கையில் போட்டிருந்த நகைகளை கழற்றி அங்கிருந்த மேசையில் வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றாள்.
அவளை பின் தொடர்ந்தால் வந்த விழிகளுக்கு சொந்தக்காரர். அவள் அழுது கொண்டே செல்வதை பார்த்தார். அவள் பின்னாடியே தனது காரை ஃபாலோ பண்ணிக் கொண்டு வந்தார். இருள் சூழ்ந்த வேளையில் அந்த பஸ் ஸ்டாண்டில் இருந்தாள் சம்யுக்தா. அவளுக்கு என்ன செய்வது எங்கு போவது என்று எதுவும் தெரியவில்லை. இரவு நேரத்தில் அவள் இங்கே இருப்பதை பார்த்த சிலர் அவரிடம் தவறாக பேச முயன்றனர். உடனே அங்கிருந்து எழுந்து சென்றாள். இரு விழிகளுக்கு சொந்தமானவர் மீண்டும் அவளை பின்தொடர்ந்து சென்றார். சம்யுக்தா இதற்கு மேல் எதுக்காக உயிரோட இருக்கணும் என்று நினைத்து அங்கிருந்த பாலத்தின் மீது ஏறி நின்றாள்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி💙
வாழ்வு : 04
வீட்டின் உள்ளே செல்ல தடுமாறிய தீஷிதனை பிடிக்க வந்த புகழைத் தடுத்தான் அவன். “விடு புகழ் என்னால மனேஜ் பண்ணிக்க முடியும்…”
“தீஷி நீ நிற்கவே தடுமாறிட்டு இருக்க வா நானே உன்னை விட்டுட்டு போயிடுறேன்…”
“நோ புகழ் ஐ ஆம் ஸ்டெடி….” என்றவன் தன்னை பிடித்திருந்த நண்பனின் கையை விலக்கி விட்டு உள்ளே சென்றான். வாசலில் நின்றவாறு தீஷிதன் உள்ளே சென்றதைப் பார்த்த புகழுக்கு பெருமூச்சு வந்தது. அங்கிருந்து செல்லத் திரும்பியவன் முன்னால் நின்றிருந்தார் பரந்தாமன்.
அவரைப் பார்த்ததும் புகழ், “அங்கிள்…” என்றான்.
“என்ன புகழ், தீஷி எப்பவும் போல இன்னைக்கும் குடிச்சிருக்கானா…?” “ஆமா அங்கிள்….”
“எனக்கு தீஷியை நினைத்தால் என்ன பண்றதுனே தெரியல புகழ்…. எதுவும் கேட்டால் ரொம்ப கோவப்படுறான்…. அவன் முன்னால நின்னு பேசக்கூட முடியல…. ஒரு கல்யாணம் பண்ணி வச்சா சரியாயிடுவான்னு பாத்தா அதுக்கும் சம்மதிக்கிறான்ல…. பொண்ணுங்கனாலே அவ்வளவு வெறுப்பா இருக்கு அவனுக்கு….”
“கவலைப்படாதீங்க அங்கிள் எல்லாம் சீக்கிரம் சரியாயிடும்….”
“அந்த நம்பிக்கைலதான் புகழ் இப்ப வரைக்கும் இருக்கேன்….”
“அங்கிள் மதுரா எப்ப வாரதா இருக்கா…?”
“இன்னும் கொஞ்ச நாள்ல படிப்பு முடிஞ்சிடும் புகழ்… அப்புறம் இங்க வந்துடுவா…. அவ வந்ததுக்கு அப்புறம் அவ என்ன பண்ணனும்னு இப்பவே இவன் ஷெட்யூல் போட்டு வச்சிருக்கான்…. அவ சின்னப் பொண்ணு கொஞ்ச நாள் ஜாலியா இருக்கட்டும்னா கேக்குறானே இல்ல…”
“தீஷியை பத்தித்தான் தெரியுமே அங்கிள் ஒரு முடிவு எடுத்துட்டு அதுல இருந்து அவனை மாத்தவே முடியாதுன்னு…. பரவால்ல அதுவும் கம்பெனி விஷயங்களை கத்துக்க தானே வேணும்….”
“அதுவும் சரிதான் புகழ்… நான் இல்லைன்னு சொல்லல ஆனா காலேஜ் முடிச்சுட்டு வந்த கையோட கம்பெனியை கொடுக்கணுமானு யோசிக்கிறேன்….”
“அங்கிள் தீஷி எதையும் யோசிக்காமல் பண்ண மாட்டான்னு தெரியும்ல உங்களுக்கு…. அவசரமா எந்த ஒரு முடிவும் எடுக்க மாட்டான்…. நல்லா யோசிச்சு தான் ஒரு முடிவு எடுப்பான்…. வெயிட் பண்ணி பாக்கலாம்….”
“சரி புகழ் நீ பத்திரமா போ….”
“ஓகே அங்கிள் நீங்க இத பத்தி யோசிச்சிட்டு இப்படி இருக்காதீங்க… நான் போயிட்டு வரேன்….” என்ற புகழ் பரந்தாமனிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டான். ‘இறைவா என்னோட மகனுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை நீ தான் அமைச்சுக் கொடுக்கணும்…’ என்று ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு உள்ளே சென்றார்.
கீதா திட்டிய திட்டை வாங்கிக் கொண்டு அறைக்குள் சென்ற சம்யுக்தா அழுதழுது கன்னங்கள் உப்பி, கண்ணீர் வற்றியது தான் மிச்சம். இரவு பிரகாஷிற்காக காத்திருந்தாள் சம்யுக்தா. அவன் வந்ததும், “உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும்….” என்றாள்.
“என்கிட்ட பேச என்ன இருக்கு….?”
“என்ன இருக்கா நான் உங்க பொண்டாட்டி தானே…. உங்கம்மா என்ன திட்டுறாங்க… பாக்குற சொந்தக்காரங்க எல்லாரும் என்கிட்ட வந்து குழந்தை இல்லையா குழந்தை இல்லையானு கேக்குறாங்க… ஏன் எனக்காக நீங்க ஒரு வார்த்தை கூட பேசல….?”
“உனக்காக எதுக்கு நான் பேசணும்…?”
“என்ன கேட்டீங்க எனக்காக ஏன் பேசணுமானா… நான் உங்க பொண்டாட்டிங்க…. அதாவது ஞாபகம் இருக்கா…?”
“இத பாரு என்ன பொறுத்த வரைக்கும் நீ என் பொண்டாட்டி கிடையாது… நைட்டுக்கு பெட்ல என்னோட என்ஜாய்மென்டுக்கு மட்டும் தான் நீ… ஊர பொருத்தவரைக்கும் தான் நீ என் பொண்டாட்டி புரிஞ்சுதா…. இதுக்கு அப்புறம் உனக்கு சப்போர்ட் பண்ணல… அது பண்ணல இது பண்ணல சொல்லி என்கிட்ட வரவே கூடாது…. ஒரு குழந்தையை பெத்து கொடுத்தா இந்த வீட்ல நீ இருக்கலாம்… இல்லன்னு வையேன் எங்கம்மா எனக்கு அடுத்த பொண்ண பாத்து கல்யாணம் பண்ணி வச்சிட்டு வாங்க…. எனக்கு நீ இல்லன்னா இன்னொரு பொண்ணுனு நான் ஜாலியா இருப்பேன்….”
“ச்சீ இப்படி சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்ல…. இதே பொண்ணுங்க நாங்க இப்படி சொன்னா உங்களுக்கு எப்படி இருக்கும்…? நீங்க ஏத்துக்குவீங்களா…? இல்ல இந்த சமூகம்தான் ஏத்துக்குமா…?”
“ஏய் என்னடி வாய் ஓவரா போகுது… தொலைச்சிடுவேன் தொலைச்சு… ஒழுங்கு மரியாதையா ஹாஸ்பிடல் போய் ட்ரீட்மென்ட் எடுக்குற வழிய பாரு வந்துட்டா பேச… இந்த முகர கட்டைக்கு நாங்களே பெருசு…. இதுக்குள்ள இன்னொரு புருஷன் கேக்குதா இன்னொரு புருஷன்….” என்று அவளை தள்ளிவிட்டு போன் வர அதை எடுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டான் பிரகாஷ்.
சம்யுக்தாக்கு அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுக்கு ஈட்டியை போல பாய்ந்தது. ‘கடவுளே எனக்கு ஒரு குழந்தையை தராட்டியும் பரவால்ல… மரணத்தையாவது கொடுத்துடு….’ என்று வேண்டிக் கொண்டாள் அந்த அப்பாவிப் பெண்.
அந்த பிரபலமான ஹாஸ்பிடலில் அவளுக்கான ட்ரீட்மெண்ட் நடந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அந்த டாக்டரிடம் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா. ட்ரீட்மென்ட் எடுக்கும் காலத்தில் அவள் ஓய்வாக இருக்க வேண்டும் என்று டாக்டர் சொன்னார். ஆனால் கீதாவோ அவளிடம் நன்றாக வேலை வாங்கிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் இந்த ஊரை விட்டு எங்கேயாவது கண்கானாத தொலைவிற்கு சென்றால் என்ன என்று எண்ணுவாள் சம்யுக்தா ஆனால் அவள் அப்படி சென்றால் கணவன் தன் ஒழுக்கத்தை கேள்விக்குறியாக்கி விடுவான் என்றும் அவளுக்கு தெரியும். ஓரிரு முறை தற்கொலைக்கும் முயன்றாள், ஆனால் விதி அவளைக் காப்பாற்றி விட்டது. இப்படியாக அந்த வீட்டில் அவள் நரக வேதனை அனுபவித்து வந்தாள்.
இங்கே ஒருநாள் கீதாவிடம் பிரகாஷ், “அம்மா நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்…”
“என்ன பிரகாஷ் என்ன உன் பொண்டாட்டி விஷயமா…?”
“அம்மா நீங்களும் அப்பாவும் சொன்னீங்கன்னு தான் நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… அவளை என் பொண்டாட்டின்னு சொல்லாதீங்க…. ஏதோ அவளை கட்டிக்கிட்டா அவளோட சொத்து வரும்னு சொன்னீங்க…. ஆனால் ஒரு பைசா கூட வர்ற மாதிரி இல்ல…”
“இத்தனை நாள் பொறுமையா இருந்துட்ட இன்னும் கொஞ்ச நாள் அமைதியா இரு பிரகாஷ்…. எல்லாத்தையும் நம்ம கைக்கு எடுத்துக்கலாம்…. ஆனா அதுக்கு அவ இங்க இருக்கணும்…”
“அம்மா எனக்கு அவளை கொஞ்சம் கூட பிடிக்கலம்மா…. சீக்கிரமா அந்த சொத்தை நம்ம பேருக்கு மாத்திட்டு அவளை விரட்டி விட்ருங்க அம்மா….” என்றான்.
“நானுமே அப்படித்தான் நினைக்கிறேன் பிரகாஷ்…. இவளால சொந்தக்காரங்க முன்னாடி தல காட்ட முடியல…. எப்ப போனாலும் எந்த ஃபங்சனுக்கு போனாலும் உன் மருமக மாசமா இருக்காலான்னு கேட்டே என்னை சாவடிக்கிறாங்க….”
“எனக்கும் அப்படித்தான் அம்மா… கம்பெனிக்கு போன ஜாடமாடயா பேசுறாங்க…. ரொம்ப கஷ்டமா இருக்கு…” என்று நடித்தான் பிரகாஷ். அவனின் நடிப்பை உண்மை என்று நம்பிய கீதா, “இங்க பாருப்பா… இதோ ரெண்டு நாள்ல அந்த ட்ரீட்மென்டோட முடிவு தெரிஞ்சிடும்ல்ல அதுக்கு அப்புறம் அவளுக்கு குழந்தை பிறக்காதுனு டாக்டர் சொன்னா அவளை இங்க இருந்து அனுப்பிடலாம்…. அதுக்கப்புறம் உனக்கு நான் நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்…”
“சரிமா இப்பவும் உங்க இஷ்டப்படி தான் நடக்குறன் எப்போவும் உன்இஷ்டப்படி தான் நடப்பேன்…. நீங்க எது பண்ணாலும் அதுக்கு எனக்கு சம்மதம்…” என்று விட்டு சென்றான் பிரகாஷ்.
இரண்டு நாட்களும் பெரும் தவிப்புடன் இருந்தாள் சம்யுக்தா. அவளுக்கு ஆறுதல் கூறக்கூட அங்கே யாரும் இல்லை. டாக்டர் என்ன சொல்லுவாரு என்று மிகவும் பயமாக இருந்தது. அந்த ஹாஸ்பிடலில் மேடிட்ட வயிற்றுடன் வரும் பெண்களை பார்க்கும் போது தன் வயிற்றிலும் ஒரு உயிர் பிறக்காதா என்று அவளிடம் ஏக்கம் தோன்றியது இயற்கையே. ஆனால் இப்போது, ‘ஒரு குழந்தை இல்லாவிட்டால் எதுக்காக இந்த சமூகம் பெண்களை மட்டுமே கேள்விக்குறியாக்குகிறார்கள். அத்தனை டெஸ்ட்டும் எனக்கு மட்டும் தானே… பிரகாசுக்கு எந்த டெஸ்டும் எடுக்கலையே… ஏன் பிரச்சனை அவர்கிட்ட இருக்காதா என்ன…’ என்று அவளுக்கு அவளே கேட்டுக்கொள்வாள். அதை வாயைத் திறந்து வெளியே கேட்க முடியாதே. காலையிலிருந்து கீதா அவளை அவசரப் படுத்திக் கொண்டே இருந்தார். “இங்க பாருடி சீக்கிரமா அந்த டாக்டர் கிட்ட போய் ரிப்போர்ட்ட கேட்டு என்ன முடிவு என்று கேளு…. அந்த ரிப்போர்ட்ல தான் உன் வாழ்க்கையோட முடிவே இருக்கு… என்ன புரிஞ்சுதா…?”
“சரிங்க அத்தை புரிஞ்சுது….”
“நீ முன்னாடி போ. எனக்கு சில வேலை இருக்கு அதை முடிச்சுட்டு நான் ஹாஸ்பிடல் வந்துடுறேன்…”
“சரிங்க அத்தை….” என்றவள் தனியாக ஹாஸ்பிடலுக்கு சென்றாள். எவ்வளவு அழைத்தும் பிரகாஷ் வரவில்லை.
அறை ஒன்றில் டாக்டர் ஒருவரின் முன்னிலையில், கையில் ஒரு ரிப்போர்ட்டை வைத்துக் கொண்டு, கண்களில் இருந்து வந்த கண்ணீரை துடைக்கவும் மனம் இன்றி இருந்தாள் சம்யுக்தா. அவளைப் பார்க்க டாக்டருக்கும் பாவமாகத்தான் இருந்தது. என்ன செய்வது விதி வலியது அல்லவா. “சம்யுக்தா நீங்க தான் உங்களோட மனச தேத்திக் கொள்ளணும்…. இந்த மூணு மாசமா நீங்களும் என்கிட்ட ட்ரீட்மென்ட்டுக்கு வாரீங்க…. என்ன செய்றது நானும் என்னால முடிஞ்ச அத்தனை ட்ரீட்மென்ட்டும் பண்ணிப் பார்த்தேன்…. கடைசியாக ஃபாரின்ல இருந்து கூட டாக்டரை வர வச்சு உங்களுக்கு ட்ரீட்மென்ட் பண்ணினேன்…. ஆனால் அதோட பலன்கூட உங்களுக்கு கை கொடுக்கவே இல்லையே… நீங்க உங்களுடைய ஹஸ்பண்ட்கிட்டேயும், உங்களோட மாமியார்கிட்டேயும், உங்க அம்மாகிட்டேயும் உண்மையை எடுத்துச் சொல்லுங்க…. அவங்க புரிஞ்சிப்பாங்கன்னு நான் நினைக்கிறேன்…. இதுக்கு மேல என்னால எதுவும் பண்ண முடியாது….” என்று சொன்னார் டாக்டர் வசுந்தரா.
டாக்டரிடம் பதில் எதுவும் சொல்லாமல், கண்களைத் துடைத்து விட்டு கையில் இந்த ரிப்போர்ட் எடுத்து வெறுமையுடன் பார்த்த சம்யுக்தா, டாக்டரிடம் எதுவும் பேசவில்லை. கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
வெளியே வந்த சம்யுக்தாவிற்கு என்ன செய்வதென்றே தெரியாமல் மெதுவாக நடந்து வந்தாள். அவள் மனதிலோ ஆயிரம் எண்ணங்கள். கண்களில் கண்ணீரோ வடிந்தது. அதைக்கூட அவள் உணரவில்லை. இந்தக் கல்யாண வாழ்வில் அவளுக்கு கண்ணீர் மட்டுமே மிச்சம். நடந்து வந்தவள் முன்னால் வந்து நின்றார் கீதா. அவரைப் பார்த்த சம்யுக்தாவிற்கு பயமாக இருந்தது.
“என்ன சொன்னாங்க டாக்டர்…?”
“அதுவந்து…. அதுவந்து…” என்று தடுமாறிய சம்யுக்தாவை அவர் அறைய காலையில் சாப்பிடாது, டாக்டர் சொன்னதால் மன உளைச்சலில் இருந்தவள் அவரின் அறையை தாங்க முடியாமல் கீழே விழுந்தாள் சம்யுக்தா.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி💙
வாழ்வு : 03
சம்யுக்தா வேதனையோடு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். அவளது வேதனையை அதிகமாக்கும் பொருட்டு மேலும் ஒரு சம்பவம் நடந்தது. வீட்டிற்குள் வர முயன்றவளை வாசலிலே தடுத்து நிறுத்தினார் கீதா. வாசலில் நிற்பவளை கண்டுகொள்ளாமல். “அம்மா…” என்ற சம்யுக்தாவை முறைத்துப் பார்த்தார் கீதா.
“இங்க எதுக்காக வந்த…?”
“என்ன அம்மா இப்படி கேட்கிறீங்க…? நான் நம்மளோட வீட்டிற்கு வரக்கூடாதா…?”
“என்ன நம்ம வீடா…? இது ஒண்ணும் உன் வீடு கிடையாது… எப்போ கல்யாணம் பண்ணி வேற வீட்டிற்கு போயிட்டேயோ அப்பவே இந்த வீட்டில உனக்கு இடம் கிடையாது…”
“அதெப்படி அம்மா… ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிப் போயிட்டா… அவளுக்கும் பொறந்த வீட்டிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாதா அம்மா…. இத்தனை நாள் வாழ்ந்த வீட்டில எப்படிமா உரிமை இல்லைனு சொல்றீங்க… அந்த வீட்டில இருக்க முடியாமல்தானே நான் இங்க வந்தேன்…. இப்படி ஆறுதல் தேடி வந்தவளை வீட்டிற்குள்ளேயே வர விடாமல் வாசல்லயே நிற்க வச்சிப் பேசிட்டு இருக்கிறீங்களே அம்மா….”
“இதோ பாரு கல்யாணம் பண்ணி புகுந்த வீட்டிற்கு போனால் வாழ்வோ சாவோ அங்கதான்… உனக்கு இந்த வீட்டில உரிமை இல்லை… கலகல்யாணமாகி ஒரு வருஷமாச்சு இன்னும் பிள்ளை இல்லைன்னு உன்னோட மாமியாரு இன்னைக்கு லேடிஸ் கிளப்ல வச்சி என்கிட்ட சத்தம் போடுறா… இத்தனை நாள் என்கிட்ட பணிவாக பேசிட்டு இருந்தவ இப்போ என் முன்னாடியே எதிர்த்து பேசிட்டு இருக்கிறா… இதுக்கு காரணம் நீதான்…. மரியாதையா டாக்டர்ஸ்கிட்ட செக் பண்ணி ட்ரீட்மென்ட்க்கு போ… இனிமேல் இந்த வீட்டுப் பக்கமே வராத….” என்றார்.
இதைக் கேட்ட சம்யுக்தாவின் மனம் உடைந்து விட்டது. அவரை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள். அந்தப் பார்வை கல்லையும் கரைக்கும். ஆனால் கீதாவை கரைக்கவில்லை. அமைதியாக நின்றார். சம்யுக்தா அவரிடம் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டாள். அவள் சென்றதும் வாட்ச்மேனை அழைத்த கீதா, “இங்க பாரு இனிமேல் சம்யுக்தா வந்தால் வீட்டிற்குள்ள அனுப்ப வேண்டாம்… மீறி அனுப்பின உனக்கு இங்க வேலை…” என்று அவனை எச்சரித்து அனுப்பினார். வாட்ச்மேனும் எதுவும் பேசாமல், “சரிங்க மேடம்…” என்று சொல்லிவிட்டு அவர் இடத்திற்குச் சென்றுவிட்டார். சம்யுக்தா வீட்டை விட்டு வெளிய வந்தவள் ஆட்டோவில் கூட ஏறப் பிடிக்காமல் கால்நடையாக நடந்து சென்றாள். சிறிது தூரம் சென்றதும் அவளைப் பார்த்த அவள் தோழி ஒருத்தி தனது பைக்கை நிறுத்தி விட்டு அவளிடம் வந்தாள். “சம்யுக்தா…” என்று வந்து அவள் தோளைத் தொட்டாள்.
திரும்பிப் பார்த்த சம்யுக்தாவை, “சம்யு எப்படி இருக்க… நல்லா இருக்கிறயா…?” என்று கேட்டாள். அதற்கு சம்யுக்தா, “சாரு… இருக்கிறேன்டி… ஏதோ இருக்கிறேன்… நீ எப்படி இருக்க சாருற….?”
“நான் நல்லா இருக்கிறேன்…. என்ன ஆச்சுடி உன் முகமும் சரியில்லை… ஏதாவது பிரச்சனையா…?”
“ஒன்னும் இல்லடி…. கொஞ்சம் உடம்பு சரியில்லை…”
“அப்படியா சரி வா உன்னை நான் உன் வீட்டுல டிராப் பண்றேன்…”
“இல்லடி இங்கே தானே நான் போய்ட்டுவேன்…”
“பரவாயில்ல சம்யு… அவ்வளோ தூரம் உடம்பு சரியில்லைனு சொல்ற… நடந்தேவா போவ வாடி…” என்று தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு சம்யுக்தாவை புகுந்த வீட்டில் விட்டுவிட்டு சென்றாள். வீடு வரைக்கும் வந்து விட்டு விட்டு சென்ற அவளை உள்ளே கூட அழைக்காமல் பொம்மை போல அந்த சிறைக்குள் மீண்டும் சென்றாள் சம்யுக்தா. என்ன செய்வது அவளுக்கும் செல்வதற்கு வேறு போக்கிடம் வேண்டுமே. உள்ளே சென்றவளை கண்டதும் லீலாவதி தனது ஆட்டத்தை ஆட தொடங்கினார்.
“ஏய் நில்லு இவ்வளவு நேரம் எங்கடி போயிட்டு வர….?” என்று அவளிடம் கேட்டார்.
“ஒன்னும் இல்லை அத்தை… அம்மா வீடு வரைக்கும் போயிட்டு வரேன்…”
“யாரைக் கேட்டு நீ எங்க போன…?”
“இல்லை அத்தை… அம்மாவைப் பார்க்கணும் போல இருந்துச்சு அதுதான் அத்தை போனேன்….”
“உன் இஷ்டத்துக்கு என் கிட்ட கேட்க்காமல் நீ எதுக்கு அங்க போன….? இனிமேல் எங்கிட்ட கேட்காமல் நீ எங்கேயும் போகக்கூடாது…. ஒழுங்கு மரியாதையா ஹாஸ்பிடலுக்கு போய் ட்ரீட்மென்ட் எடுத்துக்கற வழியை பாரு… உனக்கு கொஞ்ச நாள் தான் டைம் அதுக்குள்ள இந்த வீட்டுக்கு ஒரு வாரிசைப் பெத்துக் கொடுக்கலை அதுக்கப்புறம் உன்னை இந்த வீட்டிலே வைக்க மாட்டேன்…. அதை நல்லா ஞாபகம் வச்சிக்கோ… போ இங்க இருந்து…” என்றதும் அங்கிருந்து தனது அறைக்குள் சென்று விட்டாள் சம்யுக்தா.
மலைகளில் மேகங்கள் தவழ்ந்து விளையாடி மகிழும் ஊட்டியில் இருந்த பெரிய ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பார்ட்டி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த பார்ட்டியில் கலந்து கொண்டவர்களைப் பார்த்தாலே போதும் அது எப்படிப்பட்ட பார்ட்டி என்று. உயர்தர வர்க்க பிஸ்னஸ் மேன்கள் மட்டுமே அந்த பார்ட்டியில் கலந்து கொண்டனர். ஒரு பக்கம் மதுக் கிண்ணங்களும், ஒரு பக்கம் பழரசக் கோப்பைகளும் அங்கே நிரம்பி வழிந்தன. அதற்கேற்ற இசையும் அங்கே ஒலித்துக் கொண்டு இருந்தன. அதற்கேற்ற வகையில் ஆடலும் நிகழ்ந்து கொண்டு இருந்தன.
அங்கே ஒரு மேசையில் அமர்ந்து கையில் மதுக் கோப்பையுடன் அங்கே நடந்து கொண்டிருப்பவைகளை பார்த்துக் கொண்டு இருந்தான் தீஷிதன். அவன் விழிகள் யாரையோ எடை போட்டுக் கொண்டே இருந்தன. அந்த நேரத்தில் அவன் அருகில் நவநாகரீக உடையில் உடை என்று சொல்லும்படி எதுவும் இல்லை இல்லை… உடலை அப்பட்டமாக வெளிக்காட்டியவாறு ஒரு மெல்லிய துணியை அணிந்திருந்த ஒரு யுவதி வந்து தீஷிதன் அருகில் அவன் அமர்ந்து இருந்த சேரின் கைபிடியில் வந்து அமர்ந்தாள். தீஷிதன் அமைதியாக இருந்தான். அவள் மேலும் முன்னேறினார் அவனது கையைத் தொட்டாள். அப்படியே மெல்ல மெல்ல அவன் தோள் வரை தடவிக் கொண்டு அவனை மெல்ல மெல்ல நெருங்கினாள். அப்போது திடீரென ஒரு சத்தம் கேட்டது. அந்த சத்தத்தில் அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.
அங்கே தீஷிதன் தனது கையில் இருந்த மதுக் கோப்பையை உடைத்திருந்தான். அதே நேரத்தில் அவனது கை அவனை தடவிக் கொண்டு இருந்த பெண்ணின் கழுத்தை பிடித்திருந்தது. அவள் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போய்க் கொண்டு இருப்பதைப் உணர்ந்தவள், தனது கையால் அவன் கையில் அடித்தாள். அதை எறும்பு கடிப்பதைப் போல தட்டி விட்டான் தீஷிதன். அவனின் அருகில் செல்ல பயந்து எல்லோரும் நடப்பதை பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர். அப்போது வேகமாக ஓடி வந்த ஒருவர் அவனது கையைப் பிடித்தான்.
“தீஷி… கையை எடுடா…”
“விடு புகழ்… இவளை கொல்லாமல் விட மாட்டேன்…”
“சொன்னால் கேளுடா… அவ செத்திடப்போறாடா… கையை எடுடா… ப்ளீஸ் தீஷி விட்டுடு…” என்று அவன் கையைப் பிடித்து இழுத்தான். அதன் பிறகே தீஷிதன் அவள் கழுத்தில் இருந்து கையை எடுக்க, மயங்கி விழுந்தாள். கீழே விழுந்த பெண்ணிற்கு மூச்சு இருப்பதை பார்த்த புகழ், அவர்கள் ஆட்களிடம் பார்க்கச் சொல்லிவிட்டு தீஷிதனை அழைத்துக் கொண்டு அந்த ஹோட்டலில் இருந்து வெளியே வந்தான்.
“என்னை விடு புகழ்…. எனக்கு வர்ற கோபத்துக்கு அவளை கொல்லாமல் விட மாட்டேன்….”
“அவளை கொன்னா எல்லாம் சரியாகிடுமா தீஷி…”
“டேய் அதுக்காக என்னை அமைதியா இருக்க சொல்றியா…? என்ன தைரியம் இருந்தால் அவ என்மேல கையை வைப்பா… ச்சே ஏன் இப்படி அலையுதுகளோ தெரியாது…”
“விடுடா விடுடா… வா போகலாம் டைமாச்சு…” என்றவன் ஒருவாறு தீஷிதனை சமாளித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
வாழ்வு : 02
அவர் சென்றதும் காலில் சலங்கை கட்டாத குறையாக ஆட ஆரம்பித்தார் கீதா. “ஏய் என்னடி உனக்கு கண்ணிலையும் உடம்பிலையும் பிரச்சனைனு பார்த்தால்… இப்போ வயித்துலயும் பிரச்சனை போல…. ஒரு சீக்காளியை புடிச்சி என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சி அவனோட வாழ்க்கையை நாசமாக்கிட்டேனே….” என்று சத்தம் போட்டார். கணவன் தனக்கு ஆதரவாக ஏதாவது பேசுவான் என்று பார்த்தாள் சம்யுக்தா. ஆனால் அவனோ எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்பதைப் போல நின்றிருந்தான்.
அவளும் எதுவும் பேசாமல், ஆதரவாக ஒருவரும் பேசுவதற்கு இல்லாமல் அவரிடம் ஏச்சுக்களை வாங்கிக் கொண்டு சிலை போல நின்றிருந்தாள் சம்யுக்தா. அவள் பேசாமல் நிற்பதைப் பார்த்த கீதாவுக்கு கோபம் வர அவளை இழுத்து அறைந்தாள். அவளது உப்பிய கன்னங்கள் கீதாவின் அறையில் மேலும் உப்பியது. தலைகுனிந்து கொண்டு நின்றாள். அவளது கூந்தலைப் பிடித்து இழுத்தாள். வலியில் சம்யுக்தாவிற்கு உயிர் போனது. “அத்தை விடுங்க வலிக்குது…. என்னால முடியலை அத்தை….” என்று வலி தாங்காமல் கதறினாள்.
கீதாவோ சற்றும் மனமிரங்காமல் மேலும் சம்யுக்தாவின் கூந்தலை பிடித்து மேலும் இறுக்கினாள். “வலிக்குதா…? நல்லா வலிக்கட்டும்…. இப்படித் தானே அந்த தாமரை எங்கிட்ட குடும்ப வாரிசு இன்னும் இல்லையானு கேட்கும் போது, எனக்கும் வலிச்சிருக்கும்…. உன்னால எந்த விழாவிலும் தலையைக் காட்ட முடியலை….” என்றார்.
பின்னர் அவளை விட்டவர், “பிரகாஷ் இவளை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் செக் பண்ணி இவளுக்கு என்ன பிரச்சினைனு பாரு…. இவளுக்கு பிரச்சனை இருந்தால் அதை சரிப்படுத்த முடியுமானு கேளு…. அப்படி முடியலைன்னா இவளை டைவர்ஸ் பண்ணிடு…. உனக்கு இவளை மாதிரி குண்டான கேவலமான பொண்ணா இல்லாமல், இவளை விட அழகான பொண்ணைப் பார்த்து உனக்கு கட்டி வைக்கிறன்….” என்றார்.
அவரது ஒவ்வொரு வார்த்தையும் அவளைக் கொன்றது. எதற்காக இந்த நிலை என்று தெரியாமல் அழுது கொண்டு நின்றாள். அவளை தள்ளி விட்டு சென்றார் கீதா. கீழே விழுந்தவளை தூக்கி விடாமல் அவளை மிதித்து விட்டு வெளியே சென்றான் கட்டிய கணவன். மெல்ல அருகில் இருந்த சோபாவை பிடித்துக் கொண்டு எழுப்பினாள்.
பிரகாஷ் உதைத்ததில் வலது காலில் அதிக வலி இருந்தது. மெதுவாக நடந்து அறைக்குள் சென்று அவள் படுத்துறங்கும் பாயை எடுத்து விரித்துப் படுத்துக் கொண்டாள். கண்ணீர் காவிரி போல பாய்ந்து, தலையணையை நனைத்தது. தேற்றுவார் இன்றி அழுது கொண்டு இருந்தாள்.
வெளியே வந்த பிரகாஷ் ஒரு ஹாஸ்பிடலுக்குச் சென்று, சம்யுக்தாவை செக் பண்ண டாக்டரிடம் அப்பாயின்மெண்ட் எடுத்துக் கொண்டு கம்பனிக்குச் சென்றான்.
லேடிஸ் கிளப்பிற்கு வந்த கீதா, நேராக லீலாவதி இருக்கும் இடத்திற்கு சென்று அவரை அழைத்துக் கொண்டு தனியாக வந்தார். “என்ன கீதா, வந்ததும் வராததுமா தனியாக கூட்டிட்டு வர்ற…? ஏதாவது பிரச்சினையா…?” என்றார்.
அதற்கு கீதா, “உன்னோட பொண்ணு என்னைக்கு என் வீட்டுக்கு மருமகளா வந்தாளோ, அப்போ இருந்து பிரச்சனைதான்…. கல்யாணமாகி ஒரு வருஷமாச்சு ஆனால் இன்னும் சம்யுக்தா உண்டாகலையானு எங்களோட சொந்தக்காரவங்க கேட்க ஆரம்பிச்சுட்டாங்க…. லீலா உண்மையை சொல்லு சம்யுக்தாவிற்கு ஏதாவது பிரச்சினை இருக்கா…..?” என்று கேட்டார்.
லீலாவதியோ, ‘என்னடா இது புது பிரச்சனை…..’ என்று மனசுக்குள் நினைத்தவர் வெளியே கீதாவிடம், “இல்லை கீதா அவளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை… அவள் நல்லாத்தான் இருக்கா….” என்றார்.
அவரிடம் கீதா, “எனக்குத் தெரியாது லீலா…. நான் சம்யுக்தாவை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போகச் சொல்லி இருக்கிறன்… அவளுக்கு ஏதாவது பிரச்சனை இருந்து, அதை சரி பண்ண முடியும்னா, எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை…. ஆனால் அவளுக்கு ஏதாவது தீர்க்க முடியாத பிரச்சினை இருக்கும் என்றால், என்னை மன்னித்து விடு லீலா… உன்னோட பொண்ணை உன் வீட்டிற்கே திருப்பி அனுப்பிடுவன்…. அது மட்டுமல்ல என்னோட பையனுக்கு வேற நல்ல… எப்படி உன்னோட பொண்ணை விட எல்லாத்துலயும் உயர்ந்த பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணி வைச்சிடுவன்….” என்ற கீதா, லீலாவதியின் பதிலை எதிர்பாராது அங்கிருந்து சென்றார்.
கீதா அவரிடம் இவ்வாறு பேசிச் சென்றது, லீலாவதிக்கு பிடிக்கவே இல்லை. கீதா இப்படி தன்னை பேச காரணமான மகள் மீது அவரது கோபம் திரும்பியது. கிளப்பில் இருந்து நேராக வீட்டிற்கு வந்தார். அவர் வந்ததும், “காப்பி போட்டு தரவா அம்மா…..” என்று பணிவுடன் நின்ற வேலைக்காரி சாந்தியிடம், “என்னோட அறைக்கு ஜூஸ் எடுத்திட்டு வா….” என்று சொல்லிவிட்டு மேலே சென்றார்.
அறைக்கு வந்ததும் முதல் வேலையாக சம்யுக்தாவிற்கு போன் பண்ணினார். கடைசியாக எப்போது அவளுக்கு போன் பண்ணி பேசினார் என்று அவருக்கு ஞாபகம் இல்லை. நம்பரை தேடி எடுத்து போன் பண்ணினார். அந்தோ பாவம் அவளது போன் வேலை செய்யவில்லை. ஆம், பிரகாஷ் அவளிடம் இருந்து போனைக் கூட பறித்து விட்டான். பாவம் அது இவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்ததும், அவள் எப்பிடி இருக்கிறாள், நல்லா இருக்கிறாளா? கல்யாண வாழ்க்கையில ஏதாவது பிரச்சனை இருக்கானு விசாரிச்சா அவளோட நிலைமை இவருக்கு தெரிஞ்சிருக்கும். லீலாவதியோ சம்யுக்தாவிற்கு கல்யாணம் செய்து குடுத்ததும் தன்னோட கடமை முடிந்துவிட்டது என்பது போல அவளை கைகழுவி விட்டார். பிறகு எப்படி அவருக்கு சம்யுக்தாவின் நிலை தெரியும். மகள் வேண்டும் என்றே போனை அணைத்து வைத்திருப்பதாக நினைத்தவர், கோபத்தில் தனது போனை தூக்கி எறிந்தார்.
உமேஸ்வரனின் கம்பனியில் ஒரு வெளிநாட்டு கம்பனிக்கான ப்ராஜக்ட் நடந்து கொண்டு இருந்தது. அவரின் முழுக் கவனமும் அதில்தான் இருந்துது. வீட்டில் என்ன நடக்குது என்பதை அறியாமல் இருந்தார். பிரகாஷ் டாக்டரிடம் அப்பாயின்மெண்ட் வாங்கி விட்டு வீட்டிற்கு செல்லாமல், கம்பனிக்கு வந்தான். உமேஸ்வரன் சொல்லும் வேலைகளை சரியாக செய்து கொண்டிருந்தான்.
வேலையை முடித்துவிட்டு, “அப்பா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…” என்றான். அதற்கு அவர், “இந்த ப்ராஜக்ட் ரொம்ப முக்கியம் பிரகாஷ் நீ எது பேசுறதா இருந்தாலும் இந்த ப்ராஜக்ட் முடிஞ்ச அப்புறம் பேசு….. இல்லைனா உன்னோட அம்மாகிட்ட பேசு என்னை டிஸ்டர்ப் பண்ணாதே….” என்று சொல்லி விட்டார். பிரகாஷ்க்கு கோபம் வந்தது. இருந்தாலும் அதை உமேஸ்வரனிடம் காட்டிக் கொள்ளவில்லை.
மணிகண்டன் லீலாவதியின் இரண்டாவது மகள் வித்யா அமெரிக்காவில் படித்துக் கொண்டு இருக்கிறாள். அவளுக்கு காலேஜ்ஜில் விடுமுறை இல்லாததால் தனது அக்காவின் கல்யாணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அதன் பிறகு நாட்டிற்கு வரலாம் என்றால், தாய் லீலாவதி அவளை இங்கு வருவதற்கு அனுமதிக்கவே இல்லை. மாறாக ஒவ்வொரு மாதமும் மணிகண்டனும் லீலாவதியும் அமெரிக்கா சென்று அவளை பார்த்து ஒரு வாரம் மகளுடன் இருந்து விட்டு வருவார்கள். பக்கத்தில் இருக்கும் மூத்த மகளைப் பார்க்க அவர்களுக்கு நேரம் இல்லை. ஆனால் இரண்டாவது மகளை கடல் கடந்து போய் பார்த்து விட்டு வருவார்கள். காலேஜ்ஜில் இறுதி ஆண்டில் பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் படித்துக் கொண்டு இருந்த வித்யாவின் அருகில் வந்து அமர்ந்தாள் அவளது தோழி மதுரா. “என்ன வித்து யோசிச்சிட்டு இருக்கிற…..?” என்றாள். “ஒண்ணுமில்லை மது, அக்காகூட பேசி ஒன் இயர் ஆகுது…. அக்காவோட ஞாபகமாக இருக்கு…. நான் அவங்களை ரொம்ப மிஸ் பண்றன்…..” என்றாள்.
அதற்கு மதுரா, “அதுதான் இன்னும் ஐந்து மாசத்தில நம்மளோட படிப்பு முடிஞ்சிடும்ல… அப்புறம் நீ போய் உன்னோட அக்காவைப் பார்க்கலாம்…. ஆமா நீ ஊருக்கு போயிட்டு என்ன பண்ணப் போற….?” என்று கேட்டாள்.
வித்யா தோழியை பார்த்து சிரித்தாள்,”என்னோட அம்மாவும் அப்பாவும் எங்கிட்ட ஒரு மாதிரியும் அக்கா கிட்ட ஒரு மாதிரியும் நடந்துப்பாங்க மது…. அது ஏன்னு எனக்கு இப்போ வரைக்கும் தெரியாது…. நான் ஊருக்கு போய் என்ன பண்ணணும்னு என்னோட அம்மா இப்பவே ஒரு ஷெட்யூல் போட்டு வச்சிருப்பாங்கனு நினைக்கிறன்… நீ என்ன பண்றதா இருக்கிற மது…..?” என்றாள்.
மதுரா, “நான் என்ன பண்றது…? முதல்ல ஊட்டிக்கு போயிட்டு அப்பாகூட கொஞ்சநாள் இருக்கணும்…. அப்பாவோட கம்பனியை பார்த்துக்கலாம்னு இருக்கிறன்….. ஆனால் உன்னை மாதிரியே நான் என்ன செய்யணும்னு ஒருத்தன் ஷெட்யூல் போட்டிருப்பான்…..” என்றாள் வருத்தத்துடன். அவளது வருத்தம் வித்யாக்கு புரிந்தது.
“உன்னோட நிலைமை என்னை விட ரொம்ப பாவம் மது…. என்னோட அம்மா கிட்ட கொஞ்சமாவது பேசி சமாளிச்சிடலாம்….. ஆனால் உன்னோட அண்ணா கூட பேசறது என்ன….? முன்னாடி நிற்கவே முடியாதே மது…. எனக்கு அன்னைக்கு நம்ம யூனிவர்சிட்டி ஃபங்ஷன்ல அவர பார்த்ததும் உதறலே வந்திடுச்சு….” என்ற வித்யாவிடம், “உனக்கே அப்பிடின்னா…? அப்போ எனக்கு எப்பிடி இருக்கும்னு யோசிச்சி பாரு…. சரி இதை பற்றி பேசிட்டு இருந்தால் என்ன நடக்க போகுது…. வா நாம இங்க இருக்கிற நாட்களை என்ஜாய் பண்ணலாம்…..” என்று தோழியை இழுத்துக் கொண்டு சென்றாள் மதுரா.
மறுநாள் டாக்டர் வசுந்தரா முன்னால் பிரகாஷூடன் இருந்தாள் சம்யுக்தா. டாக்டர் வழமை போல இருவரிடம் சில கேள்விகளை கேட்டார். பின் நர்ஸ் ஒருவரை அழைத்து சம்யுக்தாவிற்கு எடுக்க வேண்டிய டெஸ்ட் எல்லாவற்றையும் எடுக்குமாறு, சிலவற்றை எழுதி குடுத்து, அவருடன் சம்யுக்தாவையும் அனுப்பி வைத்தார்.
பிரகாஷிடன் பேசிக் கொண்டு இருந்தார். அரைமணி நேரம் கழித்து நர்ஸூடன் வந்தாள் சம்யுக்தா. நர்ஸ் ரிப்போர்ட்டை டாக்டரிடம் குடுத்து விட்டு அங்கிருந்து சென்றார். ரிப்போர்ட்டை பார்த்துக் கொண்டு இருந்தார். பின் அதை மூடி வைத்து விட்டு, இருவரையும் பார்த்தார்.
சம்யுக்தா டாக்டரிடம், “டாக்டர் ரிப்போர்ட் எப்பிடி வந்திருக்கு….?” என்று கேட்டாள். அவளை பார்த்து வலியுடன் சிரித்தார். “சம்யுக்தா நான் சொல்லப்போற விசயத்தை கவனமா கேளுங்க.. உங்களோட கர்ப்பப்பையிலதான் பிரச்சனை இருக்கு…..” என்றார்.
இதைக் கேட்ட சம்யுக்தாவிற்கு இடி விழுந்தது போல இருந்தது. பிரகாஷ்க்கு மகிழ்ச்சியாக இருந்தது. சம்யுக்தா தனது மனசை தேற்றிக் கொண்டு, “டாக்டர் இதை சரிப்படுத்த முடியாதா…..?” என்றாள். அதற்கு டாக்டர், “என்னால உறுதியாக சொல்ல முடியாது…. மூணு மாசம் ட்ரீட்மென்ட் எடுத்துக்கோங்க…. அதுக்கு பிறகு மற்றதை பார்க்கலாம்…. ” என்றார்.
“சரி டாக்டர், அப்போ ட்ரீட்மென்ட்டுக்கு எப்போ வரணும்….?” என்றாள். டாக்டரும், நெக்ஸ்ட் வீக்ல இருந்து வருமாறு சொன்னார். இருவரும் டாக்டரிடம் சொல்லி விட்டு வீட்டிற்கு சென்றனர்.
காரில் வரும் வழியில் எல்லாம் சம்யுக்தாவை வார்த்தைகளால் காயப்படுத்திக் கொண்டு வந்தான் பிரகாஷ். அவனது வார்த்தைகளை கேட்ட சம்யுக்தாவிற்கு இப்படியே செத்தாலும் நல்லது என்று தோன்றியது. தலைஎழுத்து என்று அமர்ந்திருந்தாள். வீட்டின் உள்ளே செல்ல முயன்ற சம்யுக்தாவை தடுத்து நிறுத்திய கீதா சொன்னதைக் கேட்ட சம்யுக்தா அதிர்ச்சி அடைந்தாள்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி💙
வாழ்வு : 01
சென்னையில் உள்ள மிகப் பிரபல்யமான வைத்தியசாலை. ஆம்புலன்ஸ் வண்டியின் சத்தம் ஒருபுறம், மருந்து எடுக்க வந்திருக்கும் மக்களின் சத்தம் ஒருபுறம், ஊசி போட்டதால் அழும் சிறு குழந்தைகளின் சத்தம், செக்அப் செய்ய நிறைமாத வயிற்றுடன் கணவனின் கைகளை பிடிக்துக் கொண்டு கண்களில் ஒருவித சந்தோசமும் பயமும் நிறைந்த கண்களுடன் இருக்கும் பெண்கள் ஒரு புறம் என அந்த வைத்தியசாலையே ரொம்ப பிஸியாக இருந்தது.
அறை ஒன்றில் டாக்டர் ஒருவரின் முன்னிலையில், கையில் ஒரு ரிப்போர்ட்டை வைத்துக் கொண்டு, கண்களில் இருந்து வந்த கண்ணீரை துடைக்கவும் மனம் இன்றி இருந்தாள் சம்யுக்தா. அவளைப் பார்க்க டாக்டருக்கும் பாவமாகத்தான் இருந்தது. என்ன செய்வது விதி வலியது அல்லவா. “சம்யுக்தா நீங்க தான் உங்களோட மனச தேத்திக் கொள்ளணும்…. இந்த நாலு மாசமா நீங்களும் என்கிட்ட ட்ரீட்மென்ட்டுக்கு வாரீங்க…. என்ன செய்றது நானும் என்னால முடிஞ்ச அத்தனை ட்ரீட்மென்ட்டும் பண்ணிப் பார்த்தேன்…. கடைசியாக ஃபாரின்ல இருந்து கூட டாக்டரை வர வச்சு உங்களுக்கு ட்ரீட்மென்ட் பண்ணினேன்…. ஆனால் அதோட பலன்கூட உங்களுக்கு கை கொடுக்கவே இல்லையே… நீங்க உங்களுடைய ஹஸ்பண்ட்கிட்டேயும், உங்களோட மாமியார்கிட்டேயும், உங்க அம்மாகிட்டேயும் உண்மையை எடுத்துச் சொல்லுங்க…. அவங்க புரிஞ்சிப்பாங்கன்னு நான் நினைக்கிறேன்…. இதுக்கு மேல என்னால எதுவும் பண்ண முடியாது….” என்று சொன்னார் டாக்டர் வசுந்தரா.
டாக்டரிடம் பதில் எதுவும் சொல்லாமல், கண்களைத் துடைத்து விட்டு கையில் இந்த ரிப்போர்ட் எடுத்து வெறுமையுடன் பார்த்த சம்யுக்தா, டாக்டரிடம் எதுவும் பேசவில்லை. கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
சம்யுக்தா அவளைப் பற்றி பார்த்து விட்டு வருவோம். சென்னைதான் சம்யுக்தாவின் பிறப்பிடம். தந்தை மணிகண்டன். பிஸ்னஸ் மேன். தாய் லீலாவதி. இவர் கிளப், மகளீர் சங்கம் என்று சுத்திக் கொண்டு இருப்பவர். சம்யுக்தாவின் தங்கை வித்யா. அமெரிக்காவில் பிரபல்யமான யூனிவர்சிட்டியில் படிக்கிறாள். அக்கா என்றால் மிகவும் பிரியம்.
உமேஸ்வரனுக்கு பிஸ்னஸில் ஒரு பிரச்சனை வர அதை சரி செய்யவதற்கு உதவியவர் மணிகண்டன். உமேஸ்வரனின் மனைவி கீதா. இவருக்கும் லீலாவதிக்கும் கிளப்பில் ஆரம்பமானது நட்பு. இருவரும் பணம், அந்தஸ்தை பெரிதாக நினைப்பவர்கள்.
சம்யுக்தாவைப் பார்க்க இஞ்சி இடுப்பழகி அனுஷ்கா போல் இருப்பாள். கண்களில் பெரிய கண்ணாடி,உப்பிய கன்னங்கள், உடல் பருமனும் சற்றே அதிகம். இவளை மணிகண்டனின் மகள் என்று யாருக்கும் பெரிதாக தெரியாது. ஏன் என்றால் மணிகண்டனும் சரி, லீலாவதியும் சரி அவளை எங்கேயும் அழைத்துச் செல்ல மாட்டார்கள். சம்யுக்தா எம்பிஏ படித்து விட்டு வேறு ஒரு கம்பனியில் ட்ரைனிங் செய்து கொண்டு இருக்கிறாள். அவளுக்கு பணம், ஆடம்பரம் இதில் நாட்டம் இல்லை. ரொம்ப சிம்பிளாக இருப்பாள்.
மணிகண்டனின் சொத்தின் மேல் உமேஸ்வரனுக்கு ஆசை. எப்படியாவது அதை அடைய வேண்டும் என்று நினைப்பவர். அவரின் மகன் பிரகாஷ். தந்தை சொல்படி கேட்பவன். ஆனால் தனக்கு பிடித்ததை எப்படியாவது அடைய வேண்டும் என்ற குணம் கொண்டவன்.
மணிகண்டனும் உமேஸ்வரனும் பேசி சம்யுக்தாவிற்கும், பிரகாஷ்க்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். திருமணம் நிச்சயமானாலும் சம்யுக்தா பிரகாஷிடம் பேசுவதற்கு முயற்சி செய்யவில்லை. அதேபோல பிரகாஷ்ஷீம் சம்யுக்தாவிடம் பேச அக்கறை காட்டவில்லை. அவனுக்கு இவளை பிடிக்கவே இல்லை. உமேஸ்வரனும் கீதாவும் பலவாறு பேசி சம்மதிக்க வைத்திருந்தனர்.
திருமண நாளும் வந்தது. எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்தாள் சம்யுக்தா. வரவேற்பு பெரியளவில் நடக்கவில்லை. சிம்பிளாகவே அனைத்தையும் முடித்து விட்டனர். இரவு சடங்கிற்காக அவளை தயார் செய்து கொண்டு இருந்தனர் லீலாவதியும் கீதாவும். கீதா அவளிடம், “பத்தே மாசத்தில் ஒரு குழந்தையை பெத்து எங்கிட்ட குடுத்திடு சம்மு…..” என்றார்.
சம்யுக்தா வெட்கத்தில் தலை குனிந்தாள். பின்னர் அம்மா, அப்பா, அத்தை, மாமாவிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு சுவாமி அறையில் விளக்கேற்றி வணங்கி விட்டு பிரகாஷின் அறைக்குள் சென்றாள்.
அறையில் பிரகாஷை காணவில்லை. உள்ளே வந்து, கொண்டு வந்திருந்த பாலை மேசையில் வைத்தாள். என்ன செய்வது என்று தெரியாமல் அறையை சுற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தாள். அப்போது பால்கனியில் இருந்து, கையில் போனுடன் உள்ளே வந்தான் பிரகாஷ். தனது அறையில் இவளைப் பார்த்ததும் முகத்தை சுழித்தான். என்ன செய்வது எல்லாம் தலையெழுத்து என்று நினைத்தவன், மெல்ல அவள் அருகில் வந்தான்.
அவன் அருகில் வந்ததும் பதட்டத்துடன் எழுந்து நின்றாள். லீலாவதி சொன்னது ஞாபகம் வர, அவனது காலில் விழுந்தாள். அவனும், “எழுந்திரு….” என்று சொன்னான். பின் பாலை எடுத்துக் குடுக்க, “நான் பால் குடிக்கிறது இல்லை….” என்றான்.
அவளும் தலையை ஆட்டிவிட்டு பாலை மறுபடியும் மேசையில் வைத்தாள். கட்டிலில் இருந்தவன், அவளை அருகில் இருக்கச் சொல்ல, அவளும் வெட்கமும் தயக்கமும் போட்டியிட மெதுவாக அவன் அருகில் இருந்தாள். அவளிடம், “நீ ஏன் இவ்வளவு குண்டா இருக்க…? கண்ணுக்கு வேற கண்ணாடி போட்டிருக்கிற….?” என்று கேட்டான்.
அதற்கு சம்யுக்தா, “நான் ஸ்கூல் படிக்கும் போது மெலிவாகத்தான் இருந்தேன்…. அதுக்கு அப்புறம்தான் குண்டாகிட்டேன்…. அம்மாதான் கண்ணாடி போட்டுக்கோனு சொன்னாங்க…. அதுதான் கண்ணாடி போட்டிருக்கிறன்…” என்றாள்.
அவளைப் பார்த்து நக்கலாக சிரித்தவன்,”இந்த காலத்தில உன்னை மாதிரி யாரும் இருப்பாங்களா….? அசிங்கமான உனக்கு நான் புருஷனா….? அவங்கதான் உங்கிட்ட கல்யாணம் பண்ணிக்க சொன்னால் உனக்கு அறிவு இல்லை….. இவ்வளவு அழகா இருக்கிறானே, இவனை நாம கல்யாணம் பண்ணிட்டா, இவனோட வாழ்க்கை என்னவாகும்னு நினைச்சி பார்த்தியா….? நான் என்னோட ஃபிரண்ட்ஸ்கிட்ட உன்னை எப்படி அறிமுகப்படுத்தி வைப்பேன்…? வெளியில போகும்போது உன்னை என்னால கூட்டிட்டு போக முடியாது…. இந்த வீட்டிற்குள் மட்டும்தான் நீ என்னோட பொண்டாட்டி…. என்ன புரிஞ்சுதா…? இதை உன் வீட்டில சொல்ல நினைச்ச அப்புறம் என் பெல்ட்தான் பேசும்…” என்றான்.
கல்யாணம் நடந்த முதல் நாளே கணவன் இப்படி பேசுவதை ஒரு மனைவியால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? அதுவும் இயற்கையாகவே மென்மையான குணம் கொண்ட சம்யுக்தாவால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அழுகை வந்தது. அழும் அவளது கன்னத்தை இறுக்கிப் பிடித்தான். “என் முன்னாடி கண்ணை கசக்கிக்கிட்டு நின்னைனா கொன்று புதைச்சிடுவன்….” என்றவன் அவளை அணைத்துக் கொண்டு விளக்கையும் அணைக்க போக, அவனை தடுத்தாள் சம்யுக்தா .
“என்னடி புருஷன் தொட்டா தடுக்கிற…? உன்னை யாரு தொடப்போறா….? உன்னை ஏறெடுத்துப் பார்க்கவே யாரும் இல்லை…. அதுக்குள்ள உன்னை யாரு தொடப்போறானு கேட்கிறன்…. உன்னை கல்யாணம் பண்ணின பாவத்துக்கு சந்தோசமா இருக்கலாம்னு நினைக்கிறேன்…. அதை தடுக்க உன்னால முடியாது. மரியாதையா என்னை அனுசரித்து போ….” என்றவன் விளக்கை அணைத்து அவளையும் அணைத்தான். பெண்ணை மென்மையுடன் கையாளும் ஆண் சிறந்தவன். இங்கோ பிரகாஷ் சம்யுக்தாவை போட்டு கசக்கிப் பிழிந்தான். முதல் நாள் இருவரும் இணைந்து அழகாக ஆரம்பிக்கும் தாம்பத்யத்தை அவனோ அதிரடியாக ஆரம்பித்தான். சம்யுக்தாவால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவன் இத்தனை நேரம் பேசிய பேச்சும் இவளை வதைத்தது. இருள் சம்யுக்தாவின் கண்ணீரையும், அவனது சித்திரவதைகளினால் உண்டான காயத்தையும் மறைத்தது.
அவனது வேலை முடிந்ததும் அவளிடம் இருந்து பிரிந்தவன், சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான். புகையை சம்யுக்தா முகத்தில் விட்டான். சிகரெட் புகையினால் இருமினாள் அவள். தனது கையில் இருந்த சிகரெட்டால் அவளது காலில் சூடு வைத்தான். வலியில் கத்தப் போனவளின் வாயை மூடியவன், “கத்தின சத்தம் வெளியே வந்திச்சு கொன்னுடுவன்….” என்றான். அவனது இஸ்டப்படி அவளது காலில் சூடு வைத்தான். பின் அவனது கட்டிலில் இருந்து அவளை கீழே தள்ளி தலையணையையும் கீழே போட்டான்.
“எனக்கு எப்போது உன்னோட தேவையோ, அப்போது மட்டும்தான் இந்த கட்டில்ல உனக்கு அனுமதி…. மற்றைய நேரத்துல உன்னோட இடம் கீழேதான்…..” என்றவன் சிகரெட்டை முடித்து விட்டு படுத்து விட்டான்.
சுவரில் சாய்ந்து கொண்டு அழுது கொண்டு இருந்தாள் சம்யுக்தா. “நான் பாட்டுக்கு என்னோட வேலை, வீடுனு இருந்தேனே…. எதுக்காக இந்த கல்யாணம்….? ஐயோ அம்மா வலிக்குதே….” என்று அழுதவாறே உறங்கிப் போனாள் பெண்ணவள்.
அடுத்த நாள் காலையில் தூக்கம் கலைந்து எழுந்து பிரகாஷ், குளித்துவிட்டு வந்தான். சுவரில் சாய்ந்து கொண்டு தூங்கும் சம்யுக்தாவைப் பார்க்க அவனுக்கு கோபம் வந்தது. குளியலறைக்குச் சென்று, குளிர்ந்த தண்ணீரை எடுத்து வந்து அவளது முகத்தில் ஊற்றினான். தூங்கிக் கொண்டு இருந்தவள் மீது குளிர் தண்ணீர் பட அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தாள். அவளுக்கு முன்னால் எள்ளலாக சிரித்தபடி நின்றான் பிரகாஷ். “என்ன மேடமுக்கு பெட் காப்பி வேணுமோ….? சீபே…. போய் குளிச்சிட்டு எனக்கு காப்பி எடுத்திட்டு வா….” என்றான். எதுவும் பேசாமல் மாற்று உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குச் சென்றாள்.
தான் எவ்வளவு கொடுமைப்படுத்தினாலும் பதிலுக்கு எதுவும் பேசாமல் நிற்கும் இவளை மேலும் கொடுமைப்படுத்தி சந்தோசப்பட்டான் பிரகாஷ். இப்படியே நாட்கள் சென்றன. புகுந்த வீட்டில் வேலைக்காரி போல இருந்தாள் சம்யுக்தா. பெற்றவர்களோ, கல்யாணம் பண்ணிக் குடுத்ததும், கடமை முடிந்தது என்று அந்தப் பக்கம் வருவதில்லை. யாரும் இல்லாத அநாதை போல இருந்தாள் சம்யுக்தா. வேலைக்காரர்களின் ஏளனப் பார்வையும் அவளை கூனிகுறுகச் செய்தது.
இரவில் பிரகாஷின் தேவை முடிந்ததும், அவளது காலில் வைக்கும் சிகரெட் சூட்டில் அவளது உயிரே போகும். ஆனால் அவளது கண்களில் இருந்து கண்ணீர் வராது. தினமும் சூடு வாங்குவதால் அதற்கு உடல் பழகி விட்டது. குண்டம்மா குண்டம்மா என்று அவளை கேலி செய்து சந்தோசப்பட்டான். சம்யுக்தாவை வேலைக்கு போக வேண்டாம் என்றும் சொல்லி விட்டான் பிரகாஷ். அவளுக்கு பைத்தியம் பிடிப்பது போல இருந்தது.
பிரகாஷை அவளால் புரிந்து கொள்ள முடியவே இல்லை. கீதாவுக்கும் இவளை பிடிக்காது. சம்யுக்தா சில நேரங்களில் யோசிப்பாள், “நம்மளை பிடிக்கலனா எதுக்காக கல்யாணம் பண்ணினாங்க….? எதுக்கு இந்த வீட்டிற்கு மருமகளா கொண்டு வரணும்….?” என்று தனக்குதானே கேள்வி கேட்டுக் கொள்வாள். பாவம், அவளுக்கு அதற்குரிய பதில் தான் இதுவரை கிடைக்கவில்லை. இப்படியே கல்யாணம் நடந்து பன்னிரெண்டு மாதங்கள் கடந்து விட்டன.
அன்று அவள் வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்தாள். பிரகாஷின் சொந்தக்காரர் இருவர் அவர்களது வீட்டிற்கு வந்திருந்தார். கீதாவும் பிரகாஷீம் அவர்களுடன் பேசிக் கொண்டு இருக்க, சம்யுக்தா வந்தவரை உபசரித்து ஜீஸ் குடுத்தாள். அதை வாங்கிக் குடித்தவர். சம்யுக்தாவை நலன் விசாரித்தனர். அவளும் நல்லா இருப்பதாக சொன்னாள்.
அவருடன் வந்திருந்த பெண், “கீதா உன் பையனுக்கு அப்புறம்தான் என்னோட பையனுக்கு கல்யாணம் நடந்திச்சு…. இப்போ என்னோட மருமகளுக்கு ஒன்பதாவது மாசம். வளைகாப்பு வச்சிருக்கிறம்…. அதுக்கு உங்களை அழைக்கிறதுக்குத்தான் நாங்க வந்திருக்கிறம்…. உங்க மருமகள் நல்ல செய்தி இன்னும் சொல்லலையா….? எதுக்கும் ஒரு தடவை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போ கீதா…. அப்புறம் உன்னோட வம்சத்துக்கு வாரிசு இல்லாமல் போயிடும்….” என்று கொழுத்திப் போட்டு விட்டுச் சென்றார்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
Older Posts