Novels

சித்திரம் – 03

நால்வரும் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள்… இனி என்ன செய்வது‌…. மொத்த அலுவலகமும் காலி…. கோடீஸ்வர பிள்ளைகள் என்றால் இதற்கெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை…. இவர்களோ குடும்பத்தை காப்பாற்ற ஏதோ கடனை கிடனை வாங்கி அலுவலகத்தை தயார் செய்திருந்தார்கள்… இன்னும் பாதி கடன் முடியக் கூட இல்லை…‌ அதற்குள் அடித்து உடைத்து விட்டு சென்று விட்டான்….. சம்பவம் நடந்து இரண்டு நாள் ஆகி விட்டது…. இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி யோசனையாகவே […]

சித்திரம் – 03 Read More »

நாணலே நாணமேனடி – 10

அன்று ஞாயிற்றுக் கிழமை! மற்றைய தினங்களைப் போலன்றி பொழுது சற்று உட்சாகமாகப் புலர்ந்தது, சம்யுக்தாவுக்கு.   எழுந்ததும் அறையை சுத்தப்படுத்தி, கால்களை அகட்டி சுகமாக உறங்கிக் கொண்டிருந்த சத்யாவின் நெற்றியில் முத்தமொன்றைப் பதித்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்தவளின் இதழ்களில் முறுவலொன்று நெளிந்திருந்தது. சத்யாவுக்குத் தான் இந்த வயதிலே எவ்வளவு பக்குவம்.. குடும்ப கஷ்ட நஷ்டங்களை உணர்ந்து, அதற்கேற்றாற்போல் நடந்து கொள்ளும் அவளுடைய வயதுக்கு மீறிய முதிர்ச்சியும், அக்காளின் தலை மீதிருக்கும் பெரும் சுமையை இறக்கி வைக்க தன்னால் இயன்றளவு

நாணலே நாணமேனடி – 10 Read More »

நாணலே நாணமேனடி – 09

நாட்கள் வழமை போல் கடந்து சென்றன, சம்யுக்தாவுக்கு. ஒன்றரை மாதங்களில் திருமணமென முடிவாகி விட்டதும் சிறு தலையசைப்புடன் விடைபெற்றுக் கொண்டவனிடமிருந்து ஒரு வாரம் கழிந்தும் எந்தவொரு அழைப்பும் வரவில்லை. அவளும் அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை என்பதாய் காட்டிக் கொண்டாலும், ‘வாழ்க்கை இப்படியே அசுவாரஷ்யமா கழிஞ்சி போய்டுமோ?’ என்ற பயம் அடிமனதில் எழாமல் இல்லை. ஆனால் அவன் தான் ஆரம்பத்திலே, மறுமணம் யுவனிக்காக மட்டுந்தான் என தெளிவாய் உரைத்து விட்டானே.. பிறகும் எதை நீ எதிர்பார்க்கிறாய் அவனிடம்

நாணலே நாணமேனடி – 09 Read More »

சித்திரம் – 2

“முடியவே முடியாது…. ” ஒற்றை முடிவாய் மறுத்து நின்றவளை பாவமாய் பார்த்துக் கொண்டிருந்தான் தரணி.. அவனும் வேறு என்னதான் செய்வது… நண்பன் இவர்களிடமே கேட்க சொல்லி அடம் பிடிக்க இவனின் நிலைதான் கவலைக்கிடம்…. அவனை  சமாளிப்பானோ… இதோ இவர்களை சமாளிப்பானா… “போன தடவையே சொல்லிட்டோம்…‌ மறுபடியும் வந்து நின்னா என்ன அர்த்தம்….” கோபமாய் மிரா கேட்க நான்கு நண்பர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள்… “அடுத்த பொண்ண பாத்துட்டான்னு அர்த்தம்….” நேரம் கெட்ட நேரத்தில் ஆவன்யன் கவுண்டர்

சித்திரம் – 2 Read More »

நாணலே நாணமேனடி – 08

அந்த உணவகத்தில் யதுநந்தனின் வருகைக்காக காத்திருந்தாள் சம்யுக்தா. ‘நேற்றிரவு அழைப்பு விடுத்து இவ்விடத்தில் தானே சந்திக்க வேண்டும் என்பதாய் சொன்னார்?’ என நினைத்தவள் கண்களை சுழற்றி, சுவற்றில் அழகுக்காக பொறிக்கப்பட்டிருந்த ரெஸ்டாரண்ட் பெயரைப் பார்த்து அதை உறுதிப்படுத்திக் கொண்டாள். அன்று சாந்தனா தன் காதலனை அறிமுகப்படுத்தவென அழைத்து வந்த அதே உணவகம் தான்! அன்றிருந்த தயக்கமும், பிரமிப்பும் சற்றே அடங்கியிருந்தது அவளின் பார்வையில்.. “மிஸ்..” என்ற நயமான அழைப்புடன் அருகே வந்து நின்ற வெயிட்டரைப் பார்த்து சிறு

நாணலே நாணமேனடி – 08 Read More »

நாணலே நாணமேனடி – 07

கூடத்தில் அமர்ந்து, சத்யாவின் பாடம் சம்பந்தப்பட்ட சந்தேகங்களை தீர்த்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா. அவள் ஒன்றும் அவ்வளவு பெரிய படிப்பாளி இல்லை தான் என்றாலும் கல்வியறிவு அறவே இல்லாதவள் அல்ல என்பதால், டியுஷன் செலவுகளுக்கு பணத்தைக் கரைக்க வழியின்றி தன்னால் இயன்ற அளவு தங்கைக்கு உதவிக்கரம் நீட்டிக் கொண்டிருக்கிறாள். சொல்லிக் கொடுத்ததை கவனம் சிதறாமல் உள்வாங்கிக் கொண்ட சத்யா, சரியென்ற தலை அசைப்புடன் புத்தகத்தில் மூழ்கி விட, அவளைப் பார்த்தபடி சுவற்றில் முதுகு சாய்த்தவளின் மனம், காலைநேர யதுநந்தனின்

நாணலே நாணமேனடி – 07 Read More »

நாணலே நாணமேனடி – 06

உடலோடு மிகக் கச்சிதமாய் பொருந்தியிருந்த வெள்ளை நிற சட்டையின் மேலிரு பொத்தான்களை மூடி, கழுத்துப் பட்டியை நேர்த்தியாக கட்டிக் கொண்டு நிமிர்ந்தான், யதுநந்தன். மணிக்கட்டில் கட்டப்பட்டிருந்த கைக்கடிகாரத்தை சரி செய்தபடி கண்ணாடியில் தன் தோற்றத்தைப் பார்த்து திருப்தி அடைந்தவன், நெற்றியில் தவழ்ந்த கேசத்தைக் கோதி விட்டபடி மெத்தையில் வந்தமர்ந்தான். கழுத்து வரையான நேரிய குட்டை முடி தலையணையில் பரவிக் கிடக்க, தந்தை என நினைத்து ஆளுயர டெடிபியரை கட்டி அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள் யுவனி. அவளது முகம்

நாணலே நாணமேனடி – 06 Read More »

நாணலே நாணமேனடி – 05

தந்தையின் நெஞ்சணையில் சாய்ந்து சுகமாக உறங்கிக் கொண்டிருந்தாள் யுவனி. அவளின் தலை வருடி விட்டவாறே கட்டிலில் சாய்ந்து விட்டத்தை வெறித்திருந்தான் யதுநந்தன். கடலலை போல் மோதிச் சென்ற நினைவுகளில் எல்லாம், தெத்துப் பற்கள் தெரியும்படி அழகாக சிரித்துச் சென்றாள் பல்லவி. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன், ஆயிரமாயிரம் கனவுகளும் ஆசைகளும் போட்டி போட, பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்தவளைத் தூக்கிக் கொண்டு இரவோடிரவாக மருத்துவமனைக்கு ஓடிய காட்சி மனக்கண் முன் தோன்றியதும் கண்கள் பனித்தன ஆடவனுக்கு. சிலமணித்

நாணலே நாணமேனடி – 05 Read More »

சிந்தைகள் சிதைவதேனோ சித்திரமே

“ஐயோ… தீப்…. அவன் வாறான்….” அலறிக் கொண்டு ஓடி வந்தான் ஆவன்யன்… அவன் அலறலே சொல்லியது யார் அவன் என்று…. அந்த இடத்தில் இருந்தவர்களில் முகம் ஒவ்வொரு உணர்ச்சியைக் காட்டியது….. ஒருவனின் முகம் அலுப்பைக் காட்ட ஒருத்தியின் முகம் ஆச்சர்யத்தைக் காட்ட அவளின் முகம் மட்டும் சாதாரணமாகத்தான் இருந்தது….. அதை அவள் எதிர்பார்த்தது போல் இருந்தது அந்த முக பாவனை…. “அதுக்குள்ளவா…. இப்பதானே இரண்டு மாசம் ஆச்சு…..” தீப் என்று அழைக்கப்பட்ட தீப்தி வாயைப் பிளக்க அதே

சிந்தைகள் சிதைவதேனோ சித்திரமே Read More »

வருவாயா என்னவனே : 50

காத்திருப்பு : 50   வீட்டில் யாரும் போன் எடுக்காமையினால் வாசுவை அழைத்துக் கொண்டு வந்த சூர்யா hallல் நடந்தவற்றைப் பார்த்து அதிர்ந்தான். அவன் பின்னே வந்த வாசுவும் அதிர்ந்தான்.  வதனா பாட்டியின் மடியில் படுத்திருக்க கமலேஷ் அவளை பரிசோதித்துக் கொண்டிருந்தான். மற்றைய அனைவரும் பக்கத்தில் அழுதவாறு நின்றிருந்தனர். வதனாவை பார்த்து அதிர்ச்சியடைந்த சூர்யா அவளருகே வந்தான்.  “என்னாச்சி மச்சான்?”  “அதிர்ச்சியில மயங்கிட்டாடா”  “வது அதிர்ச்சியாகுறளவுக்கு என்னாச்சி?”  “சூர்யா நான் சொல்றதை பதட்டப்படாம கேளுடா.. வதனாவும் சதுவும்

வருவாயா என்னவனே : 50 Read More »

error: Content is protected !!