
Tag:
best romantic novels
Episode – 11
திடுமென உள்ளே வந்தவர், “அம்மாடி நிறுத்தும்மா.” என ஒரே சொல்லில் சொர்ணாவை தடுத்து நிறுத்தினார்.
அவளும், “யாரு இது இந்த நேரத்தில?” என திகைத்துப் போய் ஆரண்யனை விட்டு விலகித் திரும்பிப் பார்க்க,
அங்கே ஆரண்யனை முறைத்துப் பார்த்தபடி, அறுபதுகளின் முதிர்வுடன் கூடிய கம்பீரத்துடன் நின்று கொண்டு இருந்தார் அவனின் தந்தை.
ஆரண்யனோ, தலை முடியைக் கோதிய படி,
“நீங்க என்ன இந்த நேரத்தில இங்க?, நான் தான் வீட்டுக்கு வர லேட் ஆகும்னு சொல்லி இருந்தனே. அப்புறம் என்ன?” என கேட்டான்.
அவனின் பேச்சில், பல்லைக் கடித்தவர்,
“ஏன் உனக்கு நான் இப்ப வந்தது பிரச்சனையா இருக்கோ?, இல்ல உன்னோட திட்டம் பாழாய்ப் போச்சுதுன்னு கோபமா இருக்கோ?” என அவனது ஸ்டைலிலேயே கேட்க,
அவரின் பேச்சில், “என்ன இவர் இந்த ஹிட்லர் கிட்ட இவ்வளவு தைரியமா பேசுறாரு. அப்போ இவர் யாரா இருக்கும்?” என எண்ணிக் கொண்டவள்,
அவரை சற்று கூர்ந்து பார்த்தாள்.
பார்த்தவளுக்கு அவரின் ஜாடை புரிய,
“ஓஹ்…. ஹிட்லரோட அப்பாவா இவரு…. முகத்தை பார்த்தா அப்படி தான் தெரியுது. ஆனா இந்த பெரிய மனிதரோட முகத்தில கம்பீரம் கலந்த சாந்தம் தெரியுது. ஆனா இந்த ஹிட்லர் டோட்டலா வேற மாதிரி இருக்கானே. சரியான சிடு மூஞ்சி.”
“என்னவோ இவரால தான் இப்போதைக்கு நான் தப்பிச்சு இருக்கேன். பேசாம இங்க இருந்து கிளம்பிடுவம்.” என எண்ணியவள், தனது போனை மெதுவாக மேசையில் இருந்து எட்டி எடுக்க,
அவளை அனல் பறக்க பார்த்தான் ஆரண்யன்.
அதே நேரம், அவளைக் கருணையுடன் பார்த்தவர்,
“ஹாய் மிஸ் சொர்ணாம்பிகை என்னோட பெயர் ஆதித்ய சக்கரவர்த்தி. நான் உன்னோட பாஸ் ஆரண்யனோட அப்பா. உன்ன பத்தி எல்லாமே எனக்கு தெரியும்மா.
அதனால நீ என்னைப் பார்த்தோ…. என் மகனைப் பார்த்தோ பயப்பிட வேண்டிய அவசியமே இல்ல. உன்ன பத்தி எல்லாமே தெரியும்…. ஐ மீன் நீ என்னோட மகனை அடிச்சதுல இருந்து இப்போ அவன் உன்னை காலுல விழ சொல்லும் வரைக்கும் நடந்தது எல்லாம் எனக்கு தெரியும்.” என அவர் கூற,
சொர்ணா, அவரை அதிர்ந்து போய் பார்த்தாள் என்றால்….
ஆரண்யனோ, ஏற்கனவே எனக்கு தெரியும். என்பது போல, ஒரு தோரணையில் அசால்டாக நின்று கொண்டு இருந்தான்.
சொர்ணாவோ, “சார்…. அது வந்து….” என இழுக்க,
“அம்மாடி, சொர்ணா நீ இப்படி பயந்து போக வேண்டிய அவசியமே இல்லை. என்ன நீ உன்னோட அப்பா மாதிரி நினைச்சுக்கோ. உனக்கு ஏதும் உதவி தேவைன்னா கூட தயங்காம என்ன கேளு. நான் கண்டிப்பா செய்றேன். எவனும் எந்தக் கேள்வியும் என்ன கேட்க முடியாது.” என கூற,
ஆரண்யனின் கை முஷ்டிகள், இறுகிப் போனது தந்தையின் பேச்சில்.
அவனது முகமும் இறுகி கறுத்துப் போனது. அவனுக்கு இதை விட ஒரு அவமானத் தருணம் இல்லை என்பது போல நின்று கொண்டு இருந்தவனின் கோபம் முழுவதும் திரும்பியது என்னவோ தந்தையின் அருகே வாயைப் பிளந்து நின்று கொண்டு இருந்த சொர்ணா மீது தான்.
அவளோ, ஒரு கணம் அங்கே முகம் கறுக்க நின்று கொண்டு இருந்த, ஆரண்யனைப் பார்த்து விட்டு,
“இவனுக்கு இவர் தான் சரியான ஆள். கடவுள் இருக்கான் குமாரு. இவன் இப்படி நிக்கிறத பார்க்க அவ்வளவு ஆனந்தமா இருக்கு.” என எண்ணிக் கொண்டவள் முகம் மலர,
“நன்றி சார், இனி மேல் ஏதும் தேவைன்னா கண்டிப்பா கேட்கிறேன்.” என கூறியவள்,
ஒரு பார்வை ஆரண்யனை நோக்கி வீசி விட்டு, தனது உடைமைகளை அவசரமாக எடுத்துக் கொண்டு செல்ல ஆரம்பிக்க,
அவளின் பார்வையும், அவனுக்குள் இருந்த எரிமலையை இன்னும் ஊதி பெரியது ஆக்கியதே தவிர, கொஞ்சமும் குறைக்கவில்லை.
சொர்ணா கதவைத் திறக்க போக, “கொஞ்சம் பொறும்மா. இந்த நேரத்தில நீ தனியா கிளம்பிப் போறது சேப்டி இல்லம்மா. நான் உன்ன ட்ரோப் பண்ண சொல்றேன்.” என கூற,
அதற்கு மேலும் அடக்க முடியாது ஆரண்யன்,
“டாட்….” என கத்த,
அதே நேரம், “இல்ல…. இல்ல…. அதெல்லாம் ஒண்ணும் வேணாம் சார். நான் தனிய போய்க் கொள்ளுவன்.” என அவசரமாக கூறினாள் சொர்ணா.
அப்போதும் விடாது, “என்னம்மா நீ?, இந்த நேரத்தில எப்படி தனிய போவாய்?, உனக்கு ஏதும் நடந்தா அப்புறம் உன்னோட அப்பாக்கு யாரு பதில் சொல்லுவாங்கம்மா?, நீ வேற தங்க சிலை மாதிரி இருக்காய். இந்த நேரத்தில போறது சேப் இல்லம்மா.” என கூற,
அவர், சொர்ணாவை அழகு என கூறியதை தாங்க முடியாது மேசையில் ஒரு முறை ஓங்கி அடித்தவன், “ஷிட்” என கத்தினான்.
அதோடு நிறுத்தாது, “இவ பெரிய உலக அழகி. இவளுக்கு பாதுகாப்பு ஒன்னு தான் குறைச்சல். இவளப் போய் எவன் கடத்துவான். தயிர் சாதம்.” என சத்தமாக கூறியும் கொண்டான்.
அவனின் சத்தத்திற்கு பயப்பிட அவர் என்ன சாதாரண ஆளா?, அவனுக்கே தந்தை அல்லவா அவர்.
“என்ன பிரச்சனை உனக்கு?, எதுக்கு இப்போ கத்துறாய்?, எனக்கு அந்தப் பொண்ணோட சேப்டி முக்கியம். உனக்கு எதைப் பத்தியும் அக்கறை இல்லை. பழி வாங்குறது தான் முக்கியம். ஆனா எனக்கு உன்ன போல நடக்க தெரியல. என்ன கடவுள் அப்படி படைச்சிட்டார் போல. என்ன செய்வம்?, என்னோட டிசைன் அப்படிப்பா.” என அவனை விடவும் கேலிக் குரலில் கூற,
ஆரண்யன் மேலும் முகம் கறுத்துப் போனான்.
அவனின் முகக் கன்றல் ஒரு விதத்தில், சொர்ணாக்கு ஆறுதலைக் கொடுத்தது.
அவளோ, “சார் ப்ளீஸ். ஏன் நீங்க இரண்டு பேரும் இந்த சின்ன விஷயத்துக்கு வாக்கு வாதப் படுறீங்க?” என மென் குரலில் கூற,
ஆதித்ய சக்கரவர்த்தி, அப்போதும் விடாது,
“அம்மாடி, நீ கிளம்பும்மா நானே உன்னை ட்ரோப் பண்ணுறேன்.” என கூறிவிட்டு,
அவளின் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு செல்ல ஆரம்பிக்க,
அவளோ, கடைக் கண்ணால், ஆரண்யனை ஒரு பார்வை பார்த்தவள்,
அவன் கையைக் கட்டிக் கொண்டு விறைத்துப் போய் நிற்கவும்,
அவனைப் பார்க்கப் பயந்து அங்கிருந்து இழுபட்டு செல்ல ஆரம்பிக்க,
தந்தையை மீறி எதுவும் செய்ய முடியாது, அப்படியே நின்று கொண்டு இருந்தவன் மனம் மூர்க்கத் தனம் கொண்டது தான் உண்மை.
ஆரண்யனின் தந்தையோ, சொர்ணாவை காரில் அழைத்துக் கொண்டு கிளம்பியவர், அவளிடம் இயல்பாக பேசியதோடு, அவளையும் தன்னுடன் இயல்பாக பேச வைத்தார்.
ஒவ்வொருவரும் பழகும் விதம் தானே அவர்களுக்குள் ஒரு நல்ல உறவை ஏற்படுத்த அடிப்படையாக இருக்கும். அந்த வகையில் அவளது மனதில் அவரும், அவரின் மனதில் அவளும் தந்தை மகள் போல பதிந்து போனார்கள்.
அவளை அவளது வீட்டு வாசலில் இறக்கி விட்டவர், அதோடு நிறுத்தாது, கூடவே தானும் இறங்கி, தன்னை சொர்ணாவின் கம்பெனி முதலாளி என அறிமுகப் படுத்திக் கொண்டு,
சொர்ணாவின் தந்தையிடம், தாமதம் ஆனதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
அவரது செய்கையில், சொர்ணாவின் தந்தையின் முகம் தெளிந்தது என்றால், அவளின் முகமும், மனமும் நிறைந்து போனது.
அவரும் சற்று நேரத்தில் கிளம்பு விட,
சொர்ணாவும், மன நிம்மதி உடன், தந்தையுடன், உரையாடி விட்டு, சாப்பிட்டு விட்டு தூங்க ஆய்த்தம் ஆனாள்.
கடந்த சில வாரங்களாக ஆரண்யனால் உருவான இறுக்கம், மன உளைச்சல் எல்லாம் இல்லாது போய் இருந்தது.
முகத்தில் ஒரு வித மென் புன்னகை உடன், அவள் உறங்க எண்ணி கண் மூடும் நேரம், அவளின் போன் வழக்கம் போல கரடி வேலை பார்த்தது.
“யாரு இது இந்த நேரத்தில?”, என யோசித்தவள், போனை எடுத்துப் பார்க்க, தொடுதிரையில் ஹிட்லர் காலிங்க் என ஒலிர்ந்தது.
அதுவும் நார்மல் கால் அல்ல. வீடியோ கால்.
அதனைக் கண்டதும், முகத்தில் இருந்த புன்னகை யாவும் வடிந்து போக, போனை வெறித்துப் பார்த்தவள், அப்படியே அமர்ந்து இருந்தாள்.
ஆனால் போன் மீண்டும் மீண்டும் அடிக்கவும், என்ன செய்வது எனப் புரியாது, அப்படியே அவள் அமர்ந்து இருக்க, போன் கட் ஆகி அவளுக்கு ஒரு மெசேஜ் வந்தது.
அந்த மெசேஜ் ஓபன் பண்ணப் படவில்லை என்றதும், மீண்டும் மீண்டும் அவளுக்கு மெசேஜ் வர,
அதற்கு மேலும் முடியாது, மெசேஜ்ஜை ஓபன் பண்ணிப் பார்த்தாள் அவள்.
கண்டிப்பாக அந்த மெசேஜ் ஜில் நல்ல விடயம் வந்து இருக்காது என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.
இருந்தாலும், எதையும் தாங்கும் இதயத்துடன் ஒரு வித பெரு மூச்சுடன், அதனை ஓபன் பண்ணிப் பார்த்தாள் அவள்.
அதிலே, “இப்போ வீடியோ கால் நீ அட்டென்ட் பண்ணல ன்னா…. அடுத்த நிமிஷம் உங்க வீட்டு முன்னாடி நான் வந்து நிற்பன். அப்புறம் நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பு இல்ல.” என அனுப்பப் பட்டு இருந்தது.
அதற்கு மேலும் போனை ஆன்ஸர் பண்ணாமல் இருக்க மனம் வருமா அவளுக்கு?
அடுத்து ஒரே ரிங்கில் போனை எடுத்தவள் கண்டது.. ஆபீசில் அவனது ரூமில், சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு முன்பு, அவள் கண்ட அதே ஆடையுடன், கோர்ட்டை கழட்டி எறிந்து விட்டு,
ட்ரெட் மில்லில் ஓடிக் கொண்டு இருந்தவனைத் தான்.
“என்னடா இது எப்படி ஆபீஸ் ரூம் திடீர்னு ஜிம்மா மாறிப் போச்சு?, என்னாச்சு இவருக்கு?” என யோசிக்க, சொடக்கிட்டு கூப்பிட்டவன்,
“என்ன எப்படிடா என்னோட கேபின் இப்படி ஜிம்மா மாறிச்சுதுன்னு யோசிக்கிறீங்க போல மேடம், நான் நினைச்சா எதுவும் என்னால செய்ய முடியும். ஆனா உன்னோட விஷயம் தான்….” என ஓடிக் கொண்டு இருப்பதை நிறுத்தி விட்டு அவளை உறுத்து விழித்தபடி கூறியவனின் கண்களில் அனல் தெறித்தது.
அவனின் உடல் முழுவதும் வியர்வையில் குளித்து இருந்தது.
அந்த வியர்வையின் அளவு சொன்னது, அவனது கோபத்தை.
“உன்னால என்னோட நிம்மதி போச்சு. ஆனா நீ நிம்மதியா தூங்க ரெடியாகுறாய் போல. உன்ன அப்படி தூங்க விட நான் என்ன முட்டாளா?, இல்ல மடையனா?, அதான் கால் பண்ணேன். என்னோட அப்பாவையே என்ன எதிர்க்க வைச்சிட்டாய் இல்ல. இவ்வளவு நாளும் உன்ன என்னோட எதிரின்னு தான் சிம்பிளா நினைச்சேன். ஆனா இன்னையில இருந்து நீ தான் என்னோட பரம எதிரி. உன்ன நான் எந்தக் காரணம் கொண்டும் நிம்மதியா இருக்க விட் மாட்டேன்டி. உன்னால எனக்கு தொடர் அவமானம் மட்டும் தான். இத சொல்லத் தான் கால் பண்ணேன்.”
“உனக்கு என் அப்பாவால நல்ல காலம்னு நினைச்சுக் கொண்டு இருந்தாய்னா…. அந்த நினைப்பை அடியோட தூக்கிப் போடு. இனி மேல் தான் இன்னும் நிறைய கெட்ட காலம், பாடங்கள் நீ என்கிட்ட இருந்து படிக்கப் போறாய் புரிஞ்சுக்கோ. என் கண்ணு இனி மேல் உன்ன மட்டும் தான் போகஸ் பண்ணும்.” என போனுக்கு அருகில் முகத்தை கொண்டு போய் கண்ணை சுட்டிக் காட்டியவன், அவள் அதிர்ந்த முகத்தை திருப்தி யாக பார்த்துக் கொண்டே போனை பட்டென கட் பண்ணினான்.
அவன் போனை வைத்ததும், “இந்த சைத்தான், சைக்கோ ஒரு நாளும் திருந்தாது. என்னையும் நிம்மதியா இருக்க விடாது. ஒருமையில கதைக்கிற அளவுக்கு தான் இருக்கு இவனோட செய்கை. இவனுக்கு எதுக்கு மரியாதை எல்லாம்.” என தலையில் அடித்துக் கொண்டவள், அமைதியாக உறங்கிப் போனாள்.
ஆனால் உறக்கமும் வராது, கோபமும் அடங்காது ஆபீஸ் லேயே தங்கி இருந்தவன் ஆரண்யன் தான்.
அவனுக்கு இப்போது தனது தந்தையின் மீதும் கோபம் வந்தது தான்.
ஆனாலும் அடக்கிக் கொண்டு திரும்ப பாயும் சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டு இருந்தான்.
அதே போல ஆதித்ய சக்கரவர்த்திக்கும் மகனைப் பற்றிய எண்ணத்தில் தூக்கம் வர மறுத்தது தான்.
அவனது பிடிவாதமும், கோபமும், வன்மமும் அவர் அறிந்தது ஆயிற்றே.
அவனுக்கு தந்தை அல்லவா அவர்.
“அவனை
எப்படித்தான் மாற்றப் போகிறோமோ தெரியலயே.” கல்யாணம் பண்ண கேட்டாலும் மாட்டேன்னு அடம் பண்றான்.”
“ஒருத்தரை அழிக்கணும்னு முடிவு பண்ணிட்டா இறங்கிப் போய் வேலை செய்றான்?, இவனோட குணம் எப்போ மாறுமோ?, இன்னும் எத்தனை பேர் இவனால பாதிக்கப் பட போறாங்களோ?” என மனதிற்குள்
அங்கலாய்த்துக் கொண்டவருக்கும் அன்று இரவு தூக்கம் பறிபோனது தான் உண்மை.
பாயக் காத்து இருக்கும் சிறுத்தையாக இருப்பவன் எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன?
சொர்ணாக்கு தொடர்ந்தும் ஆதித்ய சக்கரவர்த்தியின் ஆதரவு கிடைக்குமா?
Episode – 10
சொர்ணா மயங்கி விழவும், தாங்கிப் பிடித்தவன், “மறுபடியும் மயக்கமா?, சின்னச் சின்ன விஷயங்களுக்கும் பயப்பிடுற ஆள் போல. பேச்சு மட்டும் தான் ஜான்சி ராணி போல. ஓஹோ…. அம்மணி ஐயர் வீட்டுப் பொண்ணு இல்லை. அதான் இப்படி தயிர் சாதம் மயங்கி விழுந்து வைக்குது.” என முணு முணுத்தவன்,
“இப்படியே வெளில தூக்கிட்டுப் போனா…. நமக்கு தான் ஆபத்து. என்னோட பிரஸ்ட்டீஜ் பாதிக்கும். யாராச்சும் பார்த்தா…. அடுத்த ஹெட் லைன் இது தான். இவ கண் முழிக்கும் வரைக்கும் இங்கயே இருக்கிற ரூம்ல அவ இருக்கட்டும்.
நானும் இங்கயே இருப்பம். முழிடி அப்போ இருக்கு உனக்கு.” என முடிவு எடுத்தவன்,
அவளை அங்கிருந்த ஓய்வு அறையில் படுக்க வைத்து விட்டு, அருகில் இருந்த சோபாவில் அமர்ந்து தனது லேப்பில் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான்.
சுமார் அரை மணி நேரம் கழித்து, சொர்ணா கண் விழித்து அசைய ஆரம்பிக்க,
அவளை நோக்கி ஒரு பார்வை பார்த்தவன், மீண்டும் தனது வேலையைக் கவனிக்க ஆரம்பித்தான்.
மெதுவாக கண் விழித்த சொர்ணா, அப்போது தான் இருக்கும் நிலை அறிந்து, பட் டென எழுந்து அமர்ந்து கொண்டாள்.
சுற்றி வர ஒரு முறை பார்த்தவள்,
“நான் மயங்கி விழுந்தன், அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு?” என கேட்க,
“ஒண்ணும் ஆகல, உயிரோட தான் இருக்காய். வழக்கம் போல மயங்கி விழுந்திட் டாய். என்ன செய்ய தலை விதின்னு தூக்கிக் கொண்டு வந்து போட்டு இருக்கேன்.” என வாயை சுளித்த படி கூறியவன், தொடர்ந்தும் வேலை செய்ய,
அவனை வெறித்துப் பார்த்து விட்டு,
“என்ன தைரியம் இருந்தா என்ன தொட்டுத் தூக்கி இருப்பீங்க?” என சீறினாள்.
அவளது சீறலில் ஒரு நொடி, புருவம் சுருக்கி விரித்தவன்,
அடுத்த நொடி, செய்து கொண்டு இருந்த வேலையை அப்படியே கிடப்பில் போட்டு விட்டு, எழுந்து அவள் அருகே வந்தான்.
அவளோ, அவன் அருகில் வரவும், தனது பலவீனத்தை காட்டாது பட்டென எழும்பி நின்றாள்.
சொர்ணாவை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவன்,
“எப்படி தூக்கலாம்ணு தானே கேட்டாய்?, இதோ இப்படித் தான்டி.” என கூறியபடி,
அடுத்த நொடி அவளைக் கைகளில் அதிரடியாக தூக்கிக் கொண்டான்.
அவன் அப்படி தூக்கக் கூடும் என எதிர் பார்க்காதவள்,
“என்ன பண்றீங்க?, சே…. சே…. முதல்ல என்ன கீழ விடுங்க.” என அவனின் கைகளில் இருந்து துள்ள,
அவனோ, மேலும் பலமாக அவளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு,
“என்கிட்ட பேசும் போது பார்த்து யோசிச்சுப் பேசணும்ணு சொல்றது இதுக்கு தான். வீணா வாய கொடுத்தா அதனோட விளைவுகள் இப்படி தான் இருக்கும். புரியுதா?” என கேட்டு இன்னும் அவளது கைகளில் அழுத்தம் கொடுக்க,
ஆணின் அதிகார தொடுகையில் வியர்த்து விறு விறுத்துப் போனாள் சொர்ணா.
“ப்ளீஸ் இறக்கி விடுங்க சார்….” என வேறு வழி இல்லாது அவள் கெஞ்ச,
அவளைத் தூக்கி அப்படியே கட்டிலில் எறிந்தவன்,
“அந்த பயம் இருக்கட்டும். ஒழுங்கா எழும்பி மீதி வேலையை முடிச்சக் கொடுத்திட்டுப் போ. சும்மா உட்கார்ந்து டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்.” என கூறியவன்,
கதவை அடித்து சாற்றி விட்டு, செல்ல, கண் கலங்கிப் போய் அமர்ந்து இருந்தவள்,
அவன் கை தொட்ட இடங்களை அழுந்த தேய்த்தாள்.
முதன் முறை ஒரு அந்நிய ஆணின் இறுகிய தொடுகை அவளை என்னவோ செய்வது போல் இருக்க,
மீண்டும் மீண்டும் அழுந்த தேய்த்தவள்,
வாய்க்குள் ஆரண்யனை திட்டிய படியே,
உடனே சென்று வாஷ் ரூமில் முகத்தையும், கைகளையும் தேய்த்து கழுவி விட்டு வந்து அமர,
அவளது போனில் மீண்டும் தந்தையிடம் இருந்து அழைப்பு வந்தது.
“அச்சோ, அப்பா மறுபடியும் தேட ஆரம்பிச்சு இருப்பார்.” என முணு முணுத்து விட்டு,
“அப்பா, இன்னும் வேலை முடியல, வர கொஞ்சம் லேட் ஆகும். என்னோட பிரன்ட் அருணாவும் கூட இருக்கா. நீங்க யோசிக்காம சாப்பிட்டு தூங்குங்க.” என மெசேஜ் ஒன்றை அனுப்பி விட்டு எழுந்து வெளியே சென்றாள்.
அவளது மனம் இருக்கும் நிலைக்கு, தந்தையுடன் போன் பேசினால், முற்றிலும் உடைந்து விடுவாள் என தெரிந்து தான் அவள் மெசேஜ் பண்ணி இருந்தாள்.
அவள் எண்ணியது போலவே, அடுத்த நொடி அவளின் தந்தை,
“ஓகேடாம்மா சொர்ணா. எனக்கு பசிக்கல. நீ வந்த பிறகு சேர்ந்து சாப்பிடலாம். நீ கவனமா வாம்மா. முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு வரப் பாரு.” என மெசேஜ்ஜில் கூறி இருக்க,
ஒரு பெரு மூச்சுடன் அந்த மெசேஜ்ஜை படித்து முடித்தவள்,
“சே…. ஒருத்தனோட சுயநலத்துக்காக எத்தன பேர் பாதிக்கப்படுறாங்க. கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாத சாடிஸ்ட்.” என திட்டிக் கொண்டவள்,
விறு விறுவென வெளியே சென்று, அவனின் முன்பாக நின்று,
“சார், என்னால இதுக்கு மேல லேட்டா வீட்டுக்கு போக முடியாது. அதனால, இந்த வேலைய இதுக்கு மேல செய்ய முடியாது. நான் வீட்ட போகணும்.” என பட படவென கூறி முடித்து விட்டு, ஆரண்யனைப் பார்க்க,
அவனோ, தனது கதிரையில் இருந்து எழும்பி, அவளின் முன்பாக வந்து நின்று,
“மேடம், கொஞ்சம் நிமிர்ந்து பாருங்க. நீங்க இருக்க வேண்டிய இடம் இது இல்லை அது. என்னோட சீட்ல உட்காருங்க. ஏன்னா, நீங்க தான் எனக்கே அட்வைஸ் பண்றீங்ளே. நீங்களா போற டைம் வர்ற டைம் டிசைட் பண்றதுன்னா…. நான் எதுக்கு இங்க உட்காரணும்?” என வழக்கம் போல எகத் தாளம் நிரம்பிய குரலில் வினவ,
அதற்கு மேல் அவனிடம் பேச முடியாது வாயடைத்துப் போனவள், அடிக்கடி கடிகாரத்தை பார்த்துக் கொண்டாள்.
ஆரண்யனோ, அவளின் தவிப்பை ரசித்த படியே,
“அப்பா மேல அவ்வளவு அக்கறை இருக்கிறவ, நான் சொன்னத செய்ய வேண்டியது தானே.” என காலைக் காட்ட,
அவளோ, “என்ன செய்வது?” என புரியாது கைகளைப் பிசைய,
“யோசி…. யோசி…. உனக்கு பத்து நிமிஷம் தான் டைம். ஒன்னு காலுல விழு. இல்ல…. வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு போ. அது இரவு பன்னிரண்டு மணின்னாலும் சரி தான். எனக்கு எந்த ஆட்சே பனையும் இல்லை.” என கூறியவனை அதிர்ந்து பார்த்தவள்,
அப்படியே நிற்க, விசில் அடித்தபடி, அங்கிருந்த மேசை யில் அமர்ந்து, காலுக்கு மேலே காலைப் போட்டு ஆட்டிக் கொண்டு இருந்தவனின் கண்களில் கொஞ்சமும் இரக்கம் என்பது இல்லை.
“அடுத்து என்ன செய்வது?” என யோசித்துக் கொண்டு இருந்தவள் தலையைப் பிடித்துக் கொண்டு அங்கும் இங்கும் பார்க்க,
அதற்குள் நேரம் தன் பாட்டில் ஓடி, பத்து நிமிடங்கள் பத்து வினாடிகள் போல கடந்து இருந்தது.
அதே நேரம், ஆரண்யனின் பொறுமையும் கரையைக் கடந்து இருந்தது. இந்த நேரத்தை விட்டால், அவளை மண்டியிட வைக்க முடியாது என எண்ணிக் கொண்டவன்,
“டைம் அப். உன்னோட நேரம் முடிஞ்சுது. ஒழுங்கா மன்னிப்பு கேள்…. இல்லன்னா இரவு முழுக்க இங்க தங்க வேண்டி இருக்கும்.” என ஒரு விதமான குரலில் கூற,
அதற்கு மேலும் பயம் கொள்ளாது ஒரு பெண்ணால் இருக்க முடியுமா என்ன?
“நான் மன்னிப்பே கேட்கிறேன்.” என கூறியவள்,
கலங்கிய கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு அவனின் அருகே சென்று குனிய ஆரம்பிக்க,
ஆரண்யனோ, தான் எதிர் பார்த்த தருணம் நெருங்கி வருவதை புளகாங்கிதத்துடன் பார்க்க ஆரம்பித்தான்.
அவள் குனிந்து கையை அவனது காலை நோக்கி கொண்டு சென்ற நேரம்,
படார் என கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார் ஆரண்யனின் தந்தை ஆதித்ய சக்கரவர்த்தி.
சொர்ணாக்கு ஆரண்யனின் தந்தையின் ஆதரவு கிடைக்குமா?
ஆரண்யன் தந்தைக்கு கூறப் போகும் பதில் என்ன?
மூவரின் சந்திப்பும் மாற்றங்களை உருவாக்குமா? இல்லை குழப்பங்கள் இன்னும் நீளுமா?
5. ஆரோனின் ஆரோமலே! 4.5 (4)
written by Competition writers
அரோமா – 5
தஞ்சாவூரின் விடியற்காலை இன்னும் முழுமையாக விழித்தெழாமல் இருந்தது. பெரிய வீட்டு திண்ணையில் இரவு முழுக்க படிந்திருந்த பனித்துளிகள் இன்னும் மிதமான குளிர்ச்சியை தேங்கி வைத்திருந்தன.
வானம் பசுமையும், வெண்மையும் கலந்து கண்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது. அருகிலுள்ள ஆலமரத்தின் இலைகள், காற்றின் மெதுவான அசைவில் சலசலக்க, அதில் ஊடுருவிய வெண்மையான மங்கலான ஒளி வீட்டு முன் விரிந்த பளிங்கு தரையில் பட்டு மினுக்கியது.
முன் கதவின் அருகே பழைய பித்தளை அண்டாவில் நிரம்பிய தண்ணீர் — அதன் மேல் ஜன்னல் வழியே புகுந்த ஒரு செறிந்த சூரியக்கதிர் விழ, அது பொன்னிற மேகத்தில் விளங்கும் குளம் போல பளபளத்து ஜொலித்தது.
அதன் பக்கத்தில், அன்வி நட்டு வைத்த ஜாதி மல்லி பூ பந்தல் வீடு முழுவதிலும் சுகந்தமாய் மணம் வீசிக்கொண்டிருந்தது.
சமையலறையில் இருந்து வரும் மிதமான பில்டர் காஃபி வாசனையும், ஆவி பறக்க இறக்கிய ராகி இடியாப்பமும், அதோடு கருப்பட்டி தேங்காய் பாலும், அந்த வீட்டு காலையினை வழக்கம்போல அன்போடு துவக்கியிருந்தது.
ஷிவாஷினி விடிந்த உடனே, முதல் வேலையாக குளித்து முடித்து நேராக அன்வியின் வீட்டிற்கு வந்து விட்டாள்.
அவளைக் கண்டதும் மலர்ந்த புன்னகையுடன், “ஷிவா ம்மா… சாப்டாச்சா டா…” என்று அன்வியின் தந்தை மாறன் அக்கறையாக கேட்க,
“இல்லப்பா… இனி தான் உங்க மக செஞ்சதை சாப்பிடணும்…” என்று புன்னகையுடன் கூற,
அவரும் தலையசைத்து, “சரிடா…” என்க,
“நீங்க கடைக்கு கிளம்பியாச்சா ப்பா…”
“ஆமாம்மா… இப்ப கோடை விடுமுறை ஆஃபர் போட்டு இருக்கோமே… அதான், கொஞ்சம் கூட்டம் அதிகமா வரவும் சீக்கிரமே கடை திறக்க கிளம்பிட்டேன்… சரி நீ சாப்பிடு… நான் வரேன்டா…”
அதற்குள் சமையலறையில் இருந்து சிறு புயல் போல வந்த அன்விதா, “அப்பா கதிர் அண்ணனை வரச் சொல்லுங்க… மதியத்துக்கு உங்களுக்கு சாப்பாடு கொடுத்து விடறேன்…” என்று மூச்சுவிடாமல சொல்ல,
“இல்ல கண்ணு, அப்பா வெளியே பார்த்துக்கறனே…”
“ம்ஹூம், நான் சொல்றேன் தானே ப்பா…”
மகளின் அக்கறையில் எப்போதும் போல பூரித்து நின்றவர், “சரிடா அன்வி தங்கம்… கதிரை அனுப்பி வைக்கிறேன் நீ குடுத்து அனுப்பு…” எனக் கூறி கிளம்பி விட்டார் மாறன்.
மாறன் வைத்திருக்கும் “ராஜி ஜவுளிக்கடை” தஞ்சாவூரில் மிகப் பிரபலமானது. அவரது தந்தையார் காலத்தில் இருந்து வழிவழியாக நடத்தி வருவதால், அவர்களது கடைக்கு என்று ஒரு நல்ல பெயர் எப்போதும் உண்டு.
அங்கு திருமண பட்டு புடவைகள் முதல், கோவிலில் அம்மனுக்கு சாற்றும் புடவைகள் வரை — தரம் குறையாமல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த சுற்றுவட்டாரத்தில் அங்கிருக்கும் பட்டு புடவைகள் தான் மிகவும் பிரசித்தி பெற்றவை. அனைத்து உடைகளும் தரமாகவும் அழகாகவும் இருக்கும்.
அந்த பட்டின் தரம், புதிய புடவைகளின் மென்மை, பல்வேறு ரகங்கள், அவனுடைய வேலைப்பாட்டின் நுணுக்கம், அதோடு வாங்குபவரின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி — எல்லாமே அந்தக் கடைக்கு இன்னுமின்னும் நற்பெயரைக் கொடுத்திருந்தது.
அதன் பின்னர் சாப்பிட்டு முடித்ததும், அன்வி வரவேற்பறையில் அமர்ந்து கீரை உருவிக் கொண்டிருந்தாள்.
அவளது விரல்கள் மெதுவாக இலைகளை பறித்து, சின்ன சின்ன குவியலாக வைக்க, அவளது முகத்தில் கவனமான அமைதி.
ஷிவாஷினி அருகில் வந்து, “ஹே அம்மு, இன்னைக்கு நம்ம ஃபர்ஸ்ட் இயர் ரிசல்ட் ன்னு காலேஜ் குரூப்பில் மெசேஜ் வந்திருக்கு பார்த்தியா?” என்று கேட்க,
“ம்ம்… பார்த்தேன் ஷிவு… ரிசல்ட் எப்படி இருக்கும்னு பயமா இருக்குடி…” என்று பேசிய தோழியை தீயாக முறைத்து வைத்தாள் ஷிவு.
“மேடம் கிளாஸ்ல டாப்பராம்… இதுல பயந்து வேற வருதாம்… போடி அங்குட்டு போய் காமெடி பண்ணு…”
“ஏன் எனக்கெல்லாம் பயம் வரக் கூடாதா என்ன?” என்று அன்வி கண்ணை சிமிட்டி கேட்டபோது, இருவரும் சிரித்துவிட்டனர்.
அந்த சமயத்தில் ஆதித்ய கரிகாலனும், வந்தியத்தேவனும் உள்ளே நுழைந்தனர்.
இருவரும் ஒரு கல்யாண வீடியோ, புகைப்பட வேலையை முடித்து விட்டு வந்திருந்தனர்; ஆடைகள் கிட்டத்தட்ட வியர்வையால் நனைந்திருந்தது.
“ஓய், என்ன பண்றீங்க ரெண்டு பேரும்?” என்று கேட்டபடி வந்தியத்தேவன் வர,
அதற்கு ஆதித்யனோ சிரிப்புடன், “வேற என்ன பண்ணிட்டு இருக்கும் அந்த சுண்டெலி, அம்முவ தான் தொல்லை பண்ணிட்டு இருப்பா… சரியான இம்சை…” என்று விளையாட்டாக சொன்னான்.
ஆனால் அந்தச் சிரிப்பில் கொஞ்சம் அதிகமான கிண்டலும் இருந்தது
அதில் ஷிவாஷினியின் புருவம் உயர்ந்து, கண்களில் சின்ன கோபத்தினைத் துளிர்க்கச் செய்தது.
“நான் உன் கிட்ட பேசவே இல்ல, நீ எதுக்கு என் கிட்ட பேசற, நான் பாட்டுக்கு சினேன்னு சும்மா தானே இருந்தேன்… அப்பறம் என்ன தான் உன்னோட பிரச்சனை…” என்று கத்தி விட்டு அவளுடைய வீட்டிற்கு சென்று விட்டாள்.
வந்தியன், “டேய், அவளை ஏன் டா அப்படி பேசினா, பாரு கோச்சிக்கிட்டு போற…” என்று பரிந்து பேச,
ஆதி அலட்சியமாக தோளை உயர்த்தி, “நான் எப்பவும் போல தானே ஜாலியா பேசினேன்… அதுக்கு கத்திட்டு போனா, நான் என்ன பண்றதாம்…” என்று விட்டேத்தியாக கூறவும்,
அதில் கடுமையாக நோக்கியவள், “ஆதி, என்ன பேச்சு இது… நீங்க ரெண்டு பேரும் எப்ப பார்த்தாலும் சண்டை போடுறது எல்லாம் சரிதான்… ஆனா, இப்பலாம் நீ ஷிவுவ ரொம்ப பேசறடா… சிலநேரம் நீ பேசறது அவளுக்கு ஹர்ட் ஆகுது… ஆனாலும், அவ அதை வெளியே சொல்லாம கடந்து போய்டுவா… இனியும் இப்படியே பண்ணிட்டு இருக்காத… அப்பறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது…” என்று அன்விதாவும் காட்டமாக பேசி விட்டாள்.
ஆதித்யனின் முகம் ஒரு நொடி கவலையில் வாடி போனது. அவனுக்கு ஷிவாஷினி கோபித்துக் கொண்டதிலும், அன்விதா திட்டி விட்டதிலும், அங்கிருக்க பிடிக்காமல், “சரி… நான் போறேன்…” எனக் கூறி உடனடியாக சென்று விட்டான் ஆதித்ய கரிகாலன்.
“என்னதான் பிரச்சனையாம் ரெண்டு பிசாசுகளுக்கும்?”
“தெரியல ண்ணா, ஆனா, ஆதி பண்றது எல்லாம் கொஞ்சம் புதுசா தான் இருக்கு…”
“எனக்கும் தோணுது அம்மு…”
“விடு ண்ணா பார்த்துக்கலாம்…”
“பாட்டிக்கு இப்ப உடம்பு எப்படி இருக்கு?” என்று வந்தியன் கேட்டதும், அன்விதாவின் முகத்தில் சின்ன சோக நிழல் விழுந்தது.
“காய்ச்சல் குறைஞ்சு போச்சு… ஆனா, சளியும் இருமலும் தான் போகல, இருமல் நிக்காம வந்துட்டே இருக்கு…” என்று மிகுந்த கவலையுடன் கூறினாள். அவளது குரலில் மென்மையான நடுக்கம் இழையோடியது.
“சீக்கிரம் சரியா போய்டும் டா” என்று நம்பிக்கையுடன் சொன்னான்.
அன்விதா மெதுவாக புன்னகைத்தாலும், அது முழுமையாக மனதில் பதியவில்லை.
“ம்ம்… நீங்க சாப்பிடுங்களேன்…”
“இல்ல… கல்யாணத்துல சாப்பிட்டு தான் வந்தோம்… சரி அம்மு வேலை இருக்கு… போய்ட்டு அப்பறமா வரேன்…”
“சரி… கொஞ்சம் சித்திய வரச் சொல்லுங்க ண்ணா…” என்று பெண்ணவள் கூறவும்,
வந்தியத்தேவன் சரியென தலை அசைத்து, வீட்டின் வாசலைத் தாண்டி புறப்பட்டான்.
*******
மாலை நேரம்.
மழை வருவது போல் வானம் மேகமூட்டமாக இருந்தது. சூரியன் மறைந்து கொண்டிருந்தாலும், வெண்ணிற மேகங்களின் ஓரங்களில் செந்நிற கதிர்கள் பளிச்சிட, ஆகாயம் செவ்வானமாய் ஜொலித்திருந்தது.
அந்த நேரத்தில் ஆரோன் வாசல் கதவைத் தள்ளி உள்ளே வந்தான். அவனுடைய முகத்தில் வழக்கமான சிரிப்பும், கண்களில் கொஞ்சம் உற்சாகமும் தோன்றியிருந்தது.
“அம்மா…” என்று அவன் அழைத்தவுடனே, சாமுவேல் பத்திரிகையிலிருந்து தலை தூக்கினார்.
“என்னடா கண்ணா, இவ்வளவு காலையிலேயே இப்படி சிரிச்சுக்கிட்டு வர?” என்று சாமுவேல் கேள்வியாக வினவ,
“இந்த சண்டே நம்ம வீட்டுக்கு ஒரு ஸ்பெஷல் கெஸ்ட் வரப் போறாங்க ப்பா…” என்று அவன் சற்றே மர்மமாகச் சொன்னான்.
அதில் பார்வதியின் புருவம் உயர, “ஸ்பெஷல் கெஸ்ட்…அஅ? யாருடா கண்ணா?”
“ம்ஹூம்… அதான் ஒரு ஸ்பெஷல் கெஸ்ட் அப்படின்னு சொல்லிட்டனே, அத ரீவில் பண்ணிட்டா சர்ப்ரைஸ் இல்லாம போய்டும் ம்மா” என்று ஆரோன் சிரித்தான்.
அந்த சமயம் அறையின் கதவருகே நின்றிருந்த சஷ்விகா, ஆரோனை நோக்கி ஓடிவந்து, “அண்ணா… யார் அது? இப்ப சொல்றீங்களா இல்லையா?” என்று துள்ளிக் கொண்டே கேட்டாள்.
“நோ, இப்ப சொல்லவே முடியாது,” என்று சீரியஸாகச் சொல்லிக்கொண்டே அவன் அறைக்குள் போக முயன்றான்.
“சொல்ல மாட்டீங்களா? அப்போ அந்த ஸ்பெஷல் கெஸ்ட்ட உள்ளயே சேர்க்காம வெளியவே நிறுத்திட்டு திருப்பி அனுப்பிடுவேன் பார்த்துக்கோங்க…” என்று சஷ்விகா முகம் சுருக்கி மிரட்டினாள்.
சாமுவேல் சிரித்து, “சச்சு மா, விடுடா நாளைக்கு அவனே சொல்லிடுவான்…”
“ம்ஹூம்… இல்லையே.. இது ஏதோ பெரிய மேட்டர் மாதிரி இருக்கு ப்பா…” என்று சஷ்விகா கண்களை சுருக்கி அண்ணனை பார்த்தாள்.
எல்வின் அவளை கேலியுடன் பார்த்து, “வாண்டு… நாளைக்கு வரைக்கும் காத்துட்டு இருந்தா தான் தெரியும்,” என்று சற்று உறுதியான குரலில் சொல்லி அவனது அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.
சஷ்விகா தாயை நோக்கி கிசுகிசுத்தாள், “அம்மா… நம்ம அண்ணன் ரொம்ப ரொம்ப ரகசியமா வச்சிருக்குறாரு… இந்த ஸ்பெஷல் கெஸ்ட் யாருன்னு எனக்கே தெரியாம போச்சே! ஒருவேளை அந்த அக்காவா இருக்குமோ ம்மா…” என்கவும்,
“இருந்தாலும் இருக்கும் சச்சு… உன் அண்ணன் தான் எதையும் வாயை திறந்து சொல்லலையே…” என்று புலம்பி அவரது வேலையை பார்க்க சென்று விட்டார் பார்வதி.
ஆரோனுக்கு அவனது கைபேசியில் இருந்து ஒருவருக்கு அழைப்பு விடுக்க,
அதில் எடுத்ததும், மறுமுனையில் இருந்து என்ன சொல்லப்பட்டதோ,
“சரி ஓகே துவா, நீ மார்னிங் பஸ் ஏறிட்டு சொல்லு, நான் உன்ன பிக்கப் பண்ணிக்க பஸ் ஸ்டாண்டர்ட் வரேன் மா…”
“…..”
“நத்திங்… நீ ஒன்னும் டென்ஷன் ஆக வேணாம்… நான் தான் உன் கூட இருக்கேன்ல… அப்பறம் என்னவாம்… நீ வேணா பாரு துவா, நாளைக்கு உனக்கு மறக்க முடியாத நாளா அமைய போகுது…”
“…..”
ஆரோனோ சிரித்து விட்டு, “சரி ஓகே, நீ நல்லா தூங்கும்மா… நாளைக்கு பஸ் ஏறிட்டு அப்டேட் பண்ணு… பை துவா..” என்று மென்மையாக பேசி வைத்து விட்டான்.
4. ஆரோனின் ஆரோமலே! 5 (4)
written by Competition writers
அரோமா – 4
“அம்மா… அண்ணனுக்கு பசிக்குதாம்… இப்ப மீட்டிங் முடிஞ்சிடுமாம்… உடனே டின்னர் எடுத்து வைக்கணுமாம்…” என்று மேல் மாடியிலிருந்து கத்திக் கொண்டிருந்தாள் அந்த வீட்டின் குட்டி வாண்டு, பதினேழு வயதே ஆன சஷ்விகா.
“சச்சு… எல்லாம் ரெடியா தான் இருக்கு… நீயும் இறங்கி வா, நாலு பேரும் ஒன்னாவே சாப்பிடலாம்…” என்று பார்வதி சொல்ல,
“ஓகே ம்மா… டூ மினிட்ஸ்…” என்றவள் கீழே வந்தாள்.
“எங்க டி உங்க அண்ணன்… அந்த கூப்பாடு போட்ட, இன்னும் காணோம்?” என்று பார்வதி கேட்க,
“ஹான்… இதோ வராங்க ம்மா…” எனக் கூறி பூரியை விழுக்கினாள் சஷ்வி.
“என்னடா கண்ணா, வேலை அதிகமா?”
“எஸ் ம்மா… கொஞ்சம் லைட்டா ஹெவி தான்…”
“சரி மொதல்ல வந்து சாப்பிடு…” எனக் கூறியபடி அவனுக்கும் பூரியை தட்டில் வைக்க, அமைதியாக சாப்பிட்டான் எல்வின்.
“எங்க ம்மா அப்பா?”
“ரூம்ல இருக்கார் பா… வாங்க ன்னு கூப்பிட்டேன்… வரேன்னு சொல்லியே அரை மணி நேரம் ஆகிடுச்சு…”
“மணி ஒன்பது ஆகுது… இன்னமும் சாப்பிடாம என்ன பண்றார்?” எனக் கேட்கும் பொழுதே சாமுவேல் வந்துவிட்டார்.
“வந்துட்டேன் டா கத்தாத!” என்றபடி அவர் இருக்கையில் உட்கார,
“சுகர் டேப்லெட் போடணுமே ப்பா… அதுக்கு நீங்க சீக்கிரம் சாப்பிட்டா தானே…”
“சரிடா இனி டைமுக்கு சாப்பிடறேன் போதுமா…”
எல்வினோ, “ஃபர்ஸ்ட் சாப்பிடுங்க… அப்பறம் நம்பறேன்…” எனவும்,
பார்வதி கணவரிடம், “ஏங்க நீங்க பேசறீங்களா? இல்ல நானே கேட்கட்டுமா?” என்று கண்களால் மிரட்ட,
சாமுவேலோ பதிலுக்கு, “நீயே கேட்டுக்க…” என்று ஜாடை காட்ட, அதற்கு அவரை முறைத்தபடி இருக்க,
“அண்ணா… எனக்கு அண்ணி தேடுறது பத்தி தான் ரெண்டு பேரும் தீவிர டிஸ்கஷன்ல இருக்காங்க…” என்று சஷ்விகா உடைத்து பேசிவிட,
“ஏது… உனக்கு அண்ணியா!”
“ஈஈஈ… உன் வருங்காலம் எனக்கு அண்ணி தானே ண்ணா… அத சொன்னேன்…”
அதில் ஆரோனும், “வாண்டு சும்மாவே இருக்க மாட்டீயா நீ…” எனச் சொல்லி சிரிக்க,
“சொல்லுடா கண்ணா, உனக்கு ஏதாச்சும் பொண்ணை பிடிச்சி இருக்கா என்ன?” என்று பார்வதி கேட்க,
சாமுவேலும், “நீ லவ் பண்றதா இருந்தாலும் சொல்லு எல்வின், அப்பாவும் அம்மாவும் அந்த பொண்ணு வீட்ல போய் பேசிட்டு வரோம்…” என்று சொல்ல,
“அப்படி இருந்திருந்தா மொதல்ல உங்க கிட்ட தானே சொல்லி இருப்பேன் ப்பா…”
சஷ்வியோ இடையில் புகுந்து, “ப்பா… இதெல்லாம் என் கிட்டயும் கேட்கலாமில்ல… நானும் ஏதாவது சொல்லுவேன்ல….” என்று குறும்புடன் பேச,
“அடிக்கழுதை… ஸ்கூல் படிக்குற வயசுல என்னடி பேச்சு…” என்று பார்வதி அவளது காதை திருக,
“ம்மா… ம்மா… விடுங்க, நான் ஒன்னும் ஸ்கூல் படிக்குற பொண்ணு இல்ல… இந்த வருஷம் காலேஜ் ஜாயின் பண்ண போறேன்… ஹான்… அப்பறம்… நீயும் என் வயசுல தானே அப்பாவ லவ் பண்ணி… கல்யாணமும் பண்ணிக்கிட்ட, அப்பறம் என்னவாம்!” என்று காதை தேய்த்து கொண்டே கூற,
“பாரு… பிள்ளை மேல கை வைக்காத… நீ வாடா செல்லம், உனக்கு யாரை பிடிச்சி இருந்தாலும் சரி அப்பா சேர்த்து வைக்கறேன் ஓகேவா…” என்று தந்தை சொல்ல,
“அய்ய… அப்பா, இந்த லவ்ல எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லப்பா… நான் சும்மா அம்மா கூட விளையாடினேன் ப்பா…” என்றவள், “ப்பா… நீங்க அண்ணன கேளுங்க ப்பா…” என்றாள்.
சாமுவேல் மகளின் தலையை செல்லமாக தடவி விட்டு, மகனை பார்த்து, “சொல்லு எல்வின்…” என்றார்.
“எனக்கு நோ இன்ட்ரெஸ்ட் ப்பா… இப்போதைக்கு மேரேஜ் பண்ற தாட் வர மாட்டேங்குது…” என்று ஆரோன் சொல்லவும்,
“டேய்… இப்பவே உனக்கு வயசு 29 டா… கல்யாணம் வேணாம்னு சொல்ற, யாரையும் பிடிக்குது அப்படின்னு கூட சொல்ல மாட்ற… என்னதான் கண்ணா பிரச்சனை?” என்று பார்வதி ஆதங்கமும் கவலையுமாக கேட்க,
“ப்ச்… பாருங்க மம்மி… நான் ஒன்னும் பிரம்மச்சாரி ஆக போறேன்னு சொல்லல… இப்ப வேணாம், கொஞ்ச நாள் போகட்டும்னு மட்டும் தான் சொன்னேன்… அதுக்கு ஏன் இவ்வளவு சோகம்…”
“இருந்தாலும் கண்ணா…”
“ம்மா… இப்ப நான் என்ன சொல்லணும்னு நீங்க எதிர்பார்ககறீங்க…”
“வேற என்ன அண்ணா… ஜஸ்ட் வன் வேர்ட், டூ லெட்டர்ஸ், O…K… அவ்வளவு தான்… அப்படி தானே மம்மி…” எனச் சொல்லி சிரித்தாள் சஷ்விகா.
“சச்சுசுசு….”
“நான் எதும் பேசல ம்மா… யூ கண்டியூ…” என்று வாயைப் பொத்தி கொண்டாள் சஷ்வி.
“சரி விடு கண்ணா… இது உன் வாழ்க்கை… உன் முடிவு… உன் இஷ்டம்… இதுல நான் ஆசையோ அபிப்பிராயமோ சொல்றதுக்கு எல்லாம் ஒன்னும் இல்ல பா… சீக்கிரம் சாப்பிட்டு போய் படு… உனக்கு நிறைய வேலை வேற இருக்கும்…” என்று ஏனோதானோவென்று பேசினார் பார்வதி.
சஷ்வியோ அடங்காமல், அண்ணனின் காதில், “அண்ணா, மம்மி உங்களை எமோஷனலா பேசி கவுக்க பார்க்கறாங்க… ஏமாந்து போய்டாதீங்க ப்ரதர்… உசார் அய்யா உசாருரு…” என்று குசு குசுவென்று பேச,
அதில் சத்தமாக சிரித்து வைத்து பார்வதியிடம் இருந்து முறைப்பை பெற்றுக் கொண்டான் எல்வின் ஆரோன்.
சாமுவேல் மற்றும் பார்வதி தம்பதிகள் இருவரும் முப்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஊரை விட்டு ஓடிச் சென்று காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
இதுநாள் வரையிலும் கூட அவர்களுடைய இரு வீட்டாரின் சொந்தங்களும் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை! அந்த மனவருத்தம் உள்ளுக்குள் இருந்தாலும், அவற்றை கடந்து வந்து, இருவரும் இணைந்து இத்தனை வருடத்தில் அவர்களின் பிள்ளை செல்வங்களை நன்முறையில் வளர்த்து, கணவன் மனைவி இடையே எவ்வித சண்டை சச்சரவுகளும் இன்றி அன்னியோன்யமாக காதலுடன் வாழ்ந்து வருகின்றனர்.
தாயின் முகம் பொலிவிழந்து வாடிப் போய் இருப்பதை காண பொறுக்காமல், “ம்மா… நான் இப்ப ஓகே தான சொல்லணும்… நீங்க பொண்ணு பார்க்குறது பாருங்க… எனக்கு பிடிச்சா மாதிரி இருந்தா ஓகே… கல்யாணம் மட்டும் ஒரு வருஷம் கழிச்சு பண்ற போல இருக்கட்டும்…” என்று விட்டான் எல்வின்.
“சரி சரி அம்மாக்கு ரொம்ப சந்தோஷம் டா கண்ணா… உனக்கு பொண்ணு இந்துவா இருக்கட்டுமா? இல்ல கிறிஸ்டியனில் பார்க்கட்டுமா?” என்று பார்வதி கேட்க,
அதில் மென்னகை புரிந்தவன், “ம்மா… உங்களை போல ஸ்வீட் அண்ட் சாஃப்ட்டா இருந்தா எந்த மதமா இருந்தாலும் சம்மதம் தான் போதுமா…” என்று சொல்லி விட்டு அவனது அறைக்கு சென்று விட்டான் எல்வின் ஆரோன்.
இரவு 11.45.
சென்னை நகரம் தூங்க தயாராகி விட்டிருந்தது. வீடுகளின் விளக்குகள் மெதுவாக அணைந்து கொண்டிருந்தன. ஒரு சில வீடுகளின் ஜன்னல்கள் மட்டும், யாரோ இன்னும் விழித்திருக்கிறார்கள் என்பதை அடையாளம் விதமாக பளிச்சென்று இருந்தன.
ஆரோனின் அன்றைய நாளுக்கான அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டன.
வீடியோ ஷூட்டிங், பிண்ணனி ஒலி சரிபார்ப்பு, வீடியோ எடிட்டிங், அலுவலக கால்கள், அவர்கள் உடனான ஜூம் மீட்டிங் கலந்துரையாடல்கள், நெருங்கிய வட்டத்தின் நட்பான விசாரணைகள், அவனது காணொளிக்கு வரும் கருத்துக்களை பார்வையிடுவது என்று அனைத்தும் முடிந்து, அவனது படுக்கையில் வந்து படுத்துக் கொண்டான் ஆரோன்.
அவனது படுக்கையறையின் ஓரத்தில் ஒரு சிறிய வின்டேஜ் தேக்கட்டயில் ஆன மெத்தையும் டேபிளும் போடப்பட்டிருக்க, அதன் பக்கத்தில் ஒரு கிளாசிக் ஸ்டைல் வாசிப்பு விளக்கு, அதன் அருகே ஒரு மூடப்படாத புத்தகம், அவன் போடும் வீடியோவிற்கான குறிப்புகளை எழுத ஒரு அழகிய எழுதுகோல், ஒருசில ஓட்டும் குறிப்புகள் (sticky notes), அவன் நான்கு நாளாக எழுத ஆரம்பித்திருக்கும் புதிய காணொளிக்கான ஸ்கிரிப்ட் என்று அனைத்தும் அதனதன் இடத்தில் சரியாக பொருந்தி இருந்தது.
அவனது தனிப்பட்ட கைப்பேசியை திறக்க, அதில் இருந்த அறிவிப்பை கண்டதும், அவனது இதழ்கள் தானாக மென்னகையில் விரிந்தன.
“தஞ்சாவூர் அரோமா சமையல் – Kulukku Roti | Healthy sweet recipe for kids”
அந்த நொடி அவனது கண்கள் அந்த அறிவிப்பையே ஆர்வமுடன் பார்க்க, கைகளோ அதை தொட்டு, உள்ளே செல்லவும் சிறிய விளம்பரம் ஒன்று வந்தது.
அவன் கண்ணை மூடி, தலையணியில் தலையை மிதமாக தள்ளி வைத்து, அந்த குரலை கேட்க ஆர்வமாக காத்திருந்தான்.
30 வினாடி காத்திருப்புக்கு பின், அவள் குரல் ஒலித்தது.
“ஹெலோ கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ், நான் அரோமா, ரொம்ப நாள் கழிச்சு இங்க வந்திருக்கேன், சில கமெண்ட்ஸ் என்ன வீடியோ வரலன்னு, கொஞ்சம் பெர்சனல் வொர்க்..”
அந்த சில வாக்கியங்கள் போதுமானதாய் இருந்தது. அவனது நெஞ்சினுள் ஒரு மெல்லிய வெறுமை – யாரும் நிரப்ப முடியாத அந்த இடம் – ஏதோ ஓரளவுக்கு நிரம்பியதைப் போல உணர்ந்தான் எல்வின் ஆரோன்.
“எனிவே, இப்போ ஒரு புது ரெசிபி உடன் வந்திருக்கேன், இது நம்ம குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும், நமக்கு பசங்க ஹெல்தி முக்கியம், ஆனா பிள்ளைகளுக்கு டேஸ்ட் முக்கியம், இது ரெண்டையும் பேலன்ஸ் பண்ற போல ஒரு ரெசிபி தான்,
குலுக்கு ரொட்டி, குழந்தைகளுக்கு சாக்கோ பால்ஸ் ன்னு சொல்லி குடுத்து பாருங்க, நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா அவங்களே உங்க கிட்ட வேணும்னு வந்து நிப்பாங்க…” என்று பெண்ணவள் தொடர்ந்து அதன் செய்முறை விளக்கங்களை விரிவாக சொல்ல ஆரம்பித்தாள்.
அவள் குரல் வரக்கூடிய அந்த காணொளியை பார்க்கும் பொழுது , அவனுடைய உள்ளத்தில் ஒரு பதட்டமா, காத்திருப்பா, மென்மையான துடிப்பா ஏதோ ஒன்று ஓடிச் சென்றது. எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாத ஓர் நிம்மதியை தந்தது.
அவள் குரல் அவனது மனதில் மெல்லிசை பாடல் போல ஒலித்துக் கொண்டு இருந்தது. அந்த குரல் அவனுக்கு அமைதியை இனிமையாய் கொடுத்தது எனலாம்.
அவனது மனமோ எப்போதும் போல, ‘சச் அ மெஸ்மெரிசிங் வாய்ஸ்… இட்ஸ் ஹெவன்லி ஏஸ்தெட்டிக் ஃபீல்…’ என்று வியந்து நினைக்க, அந்த சமையல் வீடியோவை முடியும் வரை பார்த்துக் கொண்டிருந்தான்.
அதில் இருப்பது யார் எவர் என்ற தெரியாமல் போனாலும், அதில் சமையலை தவிர்த்து எவ்வித உணர்வுகளை பற்றியும் கூறாத போதிலும், அந்த அரோமா பேசும் விதம், பக்குவமாக சமைப்பது, அந்த சமையலில் எடுத்துக்காட்டும் பழைய பாரம்பரியம், அதில் உபயோகப்படுத்தும் உபகரணங்கள், அவளது உள்ளங்கையில் போட்டிருக்கும் மருதாணியின் அடர் சிவப்பு நிறம், அவள் அணிந்திருக்கும் அந்த கண்ணாடி வளையிலின் மெல்லிய சினுங்கல்… என்று அனைத்தும் ஒரு அழகிய கவிச் சிந்தனையை போல இருந்தது.
இவை அனைத்துமே அவனுக்கு ஒரு அழகியல் தோற்றத்தை கொடுத்தது. அவளது சமையலின் ஒவ்வொரு அசைவும் அவனது பார்வையில் கவிதையாகவே பட்டது.
எல்வின் மனமோ, “காட், இந்த வாய்ஸ்யை கேட்டுடவே கூடாதுன்னு நினைச்சாலும் கூட, கேட்காமல் இருக்க முடிய மாட்டேங்குது… இந்த குரலுக்கு சொந்தக்காரர் யாருன்னே தெரியல… இது ஒரு பெண்ணா, ஆன்டியா ன்னு கூட எனக்கு சரியா தெரியல, அப்படி இருந்தாலும் கூட இந்த குரலை கேட்ட அடுத்த நிமிஷம் மயங்கி போய் தான் கேட்டுட்டு இருக்கேன்… என்ன நினைச்சா எனக்கே கோபம் தான் வருது...” என்று வெளிப்படையாகவே திட்டிக் கொண்டான்.
அவனது புத்திக்கு எல்லாமே புரிந்து இருந்தாலும் கூட, மனமோ அவனது பேச்சை துளியும் கேட்க மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்ததில் நொந்து போய் விட்டான் எல்வின் ஆரோன்.
அத்தியாயம் 11
சோழபுரம்,
கவியும் சோழனும் ஊருக்கு வந்து இரண்டு நாட்கள் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் கவி யாரிடமும் எதுவும் பேசாமல் பேருக்கு சாப்பிட்டு விட்டு சரியாக தூங்காமல் கவலையுடன் நாட்களைக் கழித்து வந்தாள். ராஜன் தான் கவியை நினைத்து மிகவும் கவலையுடன் இருந்தார்.
சோழன் அப்போது தான் வெளியே இருந்து வீட்டுக்கு வந்தான். ராஜன் ஐயா அவனை அழைத்து கவியைப் பற்றி பேசினார். சோழா நீ தான் கவியைப் பார்த்துக்கணும் ஆனால் நீ இப்படி எதுவுமே கண்டுக்காம இருந்தா அந்த பொண்ணு எப்படி தன்னோட துக்கத்தில் இருந்து வெளியே வரும். கவிக்கு நம்ம தான் ஆதரவா இருக்கணும் அப்படின்னு சொல்றார்.
அதற்கு சோழன் எந்த ஒரு பதிலும் கூறாமல் அப்படியே தன் அறைக்கு சென்று விட்டான். அங்கே கவி பால்கனியில் நின்று நிலவை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள். அதைப் பார்த்தவுடன் சோழனுக்கு இரண்டு நாட்கள் முன்பு நடந்த எல்லாம் நினைவுக்கு வந்தது.
மும்பை,
இரண்டு நாட்களுக்கு முன்பு,
கீதா இறந்த மறுநாள் காலை சோழன் தான் முதலில் கண் விழித்தான். எழுந்ததும் அவனுக்கு எதிராக கட்டிலில் கவி தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். முகமெல்லாம் வீங்கிப் போய் மிகவும் பாவமான தோற்றத்துடன் உறங்கிக் கொண்டிருந்தாள்.
சோழன் அவளைப் பார்த்து விட்டு குளியலறை சென்று குளித்து விட்டு வந்தான். அப்போதும் அவளை எழுப்பாமல் வெளியே சென்று விட்டான். ராம் பிரசாத் காலையிலேயே அவனை வந்து பார்த்தார். அவனிடம் தம்பி நாளைக்கு காலையில சாமி கும்பிட்டு விட்டு நீங்கள் ஊருக்கு கிளம்பலாம் என்றும் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் இங்கே தங்கி இருக்குமாறும் கேட்டார்.
அவனும் எதுவும் சொல்லாமல் சரி என்று தலையை மட்டும் ஆட்டினான். சாப்பிட கொஞ்ச நேரத்தில் கொண்டு வர சொல்றேன் என்று சொல்லி விட்டு சென்றார். சோழன் அமைதியாக அமர்ந்து யோசித்துக் கொண்டு இருந்தான். காலை உணவு வந்ததும் பேருக்கு கொஞ்சம் சாப்பிட்டு விட்டு கவியை மறுபடியும் சென்று பார்த்தான்.
அவள் அப்போதும் தூங்கிக் கொண்டிருந்தாள். அப்போது சேரனிடம் இருந்து ஃபோன் வந்தது. அதில் அண்ணா ஐயா உங்கள தங்கி இருந்து பார்த்து விட்டு வரச்சொல்லி சொன்னார் என்று கூறினான். அதற்கு சோழன் எதுவும் சொல்லாமல் ஃபோனை வைத்துவிட்டான். இந்த அண்ணா ஏன் தான் இப்படி இருக்காரோ என்று திட்டிக்கொண்டே சென்றான்.
கவியும் 11 மணி போல் எழுந்து வந்தாள். அப்போதும் அவளின் கண்ணீர் நிற்கவே இல்லை. கீதாவை நினைத்து அழுது கொண்டே இருந்தாள். சோழன் அவளைப் பார்த்து விட்டு எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். ராம் வந்து கவியை சாப்பிட சொன்னார். எனக்கு வேண்டாம் அங்கிள். நான் அப்புறமா சாப்பிடுறேன் என்று கூறிவிட்டு தன் அறைக்குள் சென்று அடைந்து விட்டாள்.
சோழன் அவளைப் பின் தொடர்ந்து சென்று இப்போ நீ ஏன் இப்படி இருக்க, நீ சாப்பிடாம இருந்தா உன் அம்மா திரும்பி வந்திருவாங்களா, இல்லைல அப்புறம் எதுக்கு இப்படிலாம் பண்ணிட்டு இருக்க, நீ இப்படி இருக்கணும்னு தான் உங்க அம்மா விரும்புவாங்களா. எனக்கு சாப்பாடு வீணாக்கினா பிடிக்காது. இப்போ நீ வந்து சாப்பிடல அப்புறம் நான் இன்னைக்கே ஊருக்குக் அழைச்சிட்டுப் போய்டுவேன் அப்படின்னு சொல்லிட்டு போய்டுறான்.
கவியும் சிறிது நேரம் கழித்து சென்று கொஞ்சம் மட்டும் சாப்பிட்டு விட்டு மறுபடியும் தன் அறைக்கு திரும்பி விட்டாள். அப்படியே சோழன் மிரட்டல் விட்டே அவளை சாப்பிட வைத்து அந்த நாளைக் கடத்தினான். அன்று இரவும் அப்படியே கழிந்தது.
அடுத்த நாள் காலையிலேயே கீதாவிற்கு சாமி கும்பிட்டு விட்டு இருவரும் ராம் மற்றும் அவரது மகள் குடும்பத்திடம் சொல்லி விட்டு கிளம்பினர். கவி தன் வீட்டைத் திரும்பி பார்த்து அழுது கொண்டே விடை பெற்றாள். அப்படியே ஊர் வந்து சேர்ந்தனர்.
இதை எல்லாம் நினைத்துப் பார்த்த சோழன் கவியின் அருகில் சென்று அவளைப் பார்த்தான். அவள் அவன் அருகில் வந்தது கூட தெரியாமல் நிலவைக் கண்ணீருடன் வெறித்த வண்ணம் இருந்தாள். அப்போது சோழன் உனக்கு கல்யாணம் ஆகிவிட்டது அது உனக்கு நியாபகம் இருக்கா.
உன் அம்மா விருப்பத்துக்காக தானே கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்போ அவங்களுக்காக நீ இந்த வீட்டு மருமகளாக உன்னோட கடமைகளை எப்போ நிறைவேற்ற போற அப்படின்னு கேள்வி கேட்டுட்டு போய் படுத்துக் கொண்டான்.
கவி அவனைக் கண்ணீருடன் திரும்பிப் பார்த்து விட்டு அவளும் சென்று படுத்துக் கொண்டாள்.
இப்படி செல்லும் இவர்களின் வாழ்க்கை எப்படி எப்போது மாறும் என்று அடுத்தடுத்து வரும் அத்தியாயத்தில் பார்ப்போம்.
2. ஆரோனின் ஆரோமலே! 4.7 (3)
written by Competition writers
அரோமா – 2
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந்தா
என்று முணுமுணுப்பாக சொல்லிவிட்டு, கண்களை திறந்து பார்த்தார் 60 வயதை பூர்த்தியடைந்த ராஜேஸ்வரி. அந்த வீட்டின் மூத்த பெண்மணி.
அவருக்கு வயதானாலும் தன்னுடைய வேலைகளை தானே செய்து கொள்ளும் அளவிற்கு அவருடைய உடல்நிலை சற்று நன்றாகவே இருந்தது.
காலம்பர எழுந்து குளித்து விட்டு வந்ததும், நேராக தோட்டத்திற்கு சென்று பச்சை பசேலென இருந்த மருதாணிகளை ஒடித்து வந்து, அதன் இலைகளை மட்டும் பறித்து, அம்மியில் இட்டு அதில் கொஞ்சம் சர்க்கரை, இரண்டு கிராம்பு, நெல்லிக்காய் அளவு புளி மற்றும் சில துளி எலுமிச்சை சாற்றையும் சேர்த்து, சதக் சதக் என்று அரைக்கும் சத்தத்தில்,
வேக வேகமாக குளித்து விட்டு வந்து, “ஈசு… உனக்கு எத்தன வாட்டி சொன்னாலும் புரியாதா… எனக்கு தேவையானதா நானே பண்ணிக்க மாட்டேனா… குடு அத… கொஞ்சம் அப்படி தள்ளி உட்காரு…” என்று சிடுசிடு குரலில் சொல்லி அவரது பக்கத்தில் அமர்ந்த பேத்தியை கண்டு,
“ப்ச், அம்மு நீ ஏண்டி எந்திரிச்சு வந்த, அதுக்குள்ள குளிச்சும் முடிச்சு இருக்க… இன்னைக்கு ஞாயிற்று கிழமை தானே… கொஞ்சம் தூங்க வேண்டியது தானே…” என்று சொல்லவும் அவரை முறைத்து பார்த்தாள் அன்விதா.
அவளது கைகளோ அம்மியில் இருக்கும் மருதாணியை அரைத்த படி இருந்தாலும், “உனக்கு என்ன இளமை ஊஞ்சல் ஆடுதா ஈசு… வயசான காலத்துல இப்படி வந்து ஜங்கு ஜங்கு னு அம்மியில அரைச்சிட்டு இருக்க…” என்று கிண்டலாக கூறவும்,
“யாருக்கு டி வயசு ஆச்சுன்னு சொல்ற, உனக்கு கல்யாணம் செஞ்சு வச்சி, நீ பெக்குற பிள்ளைக்கு பிள்ளை பொறக்கும் வரைக்கும் எனக்கு ஒன்னும் ஆகாது… ஆமா…” என்று ராஜேஸ்வரி சொல்ல, புன்னகை செய்தாள் பெண்.
“அதுக்கு நீ உன் உடம்பை ஒழுங்கா பார்த்துக்கணுமாக்கும்…” என்று உதட்டை சுழித்து சொல்லிய அன்வி, அரைத்த மருதாணியை ஒரு கிண்ணத்தில் வழித்து வைத்தவளை கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் ராஜேஸ்வரி.
அன்விதா, பத்தொன்பது வயதில் துள்ளி விளையாடும் பூஞ்சிட்டு இவள். மாறன் மற்றும் ரோஷினி ஜோடியின் ஓரே ஒரு மரிக்கொழுந்து.
அவளுடைய ஐந்தாம் வயதில் ரோஷினிக்கு மஞ்சள் காமாலை வந்து, அது மிகவும் முற்றிப் போய் இறைவடி சேர்ந்து விட்டார், அன்றில் இருந்து மாறனே அவளுக்கு தாயுமானவராகி போனார்.
ரோஷினியின் மறைவுக்கு பின்னர் மாறனின் ஒரே ஒரு பற்றுக்கோல் அன்விதா தான். அன்வி அப்பாவின் செல்ல பெண், அவர் சொன்னது தான் வேதம் என்பவள், மாறனும் மகளை எதற்கும் ஏங்க விட்டதே இல்லை.
மாறனின் தாய் தான் ராஜேஸ்வரி. மாறன் பார்த்துக் கொண்டாலுமே அன்விதாவை அன்னையாக இருந்து வளர்ப்பவர், அன்வி தந்தையின் இளவரசியாக இருந்தாலும், பாட்டியின் தேவதையும் அவள் தான். தாய்க்கும் மேலாக இருந்து, அவளின் சிரிப்பில் மகிழ்பவர் அவர்.
அன்விதா டேடிஸ் லிட்டில் பிரின்சஸ் என்பதை விட பாட்டிஸ் லிட்டில் பிரின்சஸ் என்றே சொல்லலாம்.
ராஜேஸ்வரியின் கணவர் முத்துவேல் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தான் இறந்தார். அவருக்கும் பேத்தி என்றால் உயிர். சில விஷயங்களில் மாறனும் ராஜேஸ்வரியும் கண்டிப்பு காட்டினால் கூட, தாத்தா எதற்கும் கண்டிப்பு காட்டியதில்லை. அவருக்கு பேத்தி சொல்லே வேதவாக்கு.
அவருடைய இழப்பு சிறு பெண்ணை மிகவும் பாதித்து இருந்தாலும், பாட்டிக்காக தன்னை தேற்றி அவரையும் கொஞ்சம் கொஞ்சமாக தேற்றினாள்.
அன்விதாவின் வட்டம் என்பது சிறிது தான், அதில் இவர்கள் மட்டுமன்றி இன்னும் சிலரும் உடன் இருந்தனர், அவர்கள் வந்தியத்தேவன், ஆதித்ய கரிகாலன் மற்றும் ஷிவாஷினி.
இவர்கள் மூவரும் தான் அவளுடைய அறுந்த வாலு கூட்டத்தின் உறுப்பினர்கள், அந்த கூட்டத்தின் அமைதியான தலைவி இவளே!
அன்விதாவிற்கு கொஞ்சம் குறும்பு தனம் இருந்தாலும், பொறுப்பான அமைதியான பெண்ணே! வீட்டில் மட்டுமே அவள் கலகலப்பான பெண், வெளியே அவள் எல்லோரிடமும் அளந்து அளந்தே பேசுபவள். அவளுக்கு உரியோரிடமே அவள் குழந்தை தனம் வெளிப்படும்.
அன்விதா இப்பொழுது B.sc. Nutrition and dietetics பிரிவில் கல்லூரி முதலாம் ஆண்டை முடித்து விட்டு இரண்டாம் ஆண்டில் பயின்று கொண்டு இருக்கிறாள்.
அவளுடன் ஷிவாஷினியும் படித்து வருகிறாள். உயிர் தோழி, இருவருக்கும் ஒரே வயது, பக்கத்து பக்கத்து வீடு என்பதால், சிறு வயதிலிருந்தே ஒன்றாக தான் உள்ளனர். ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் இருந்து, தற்பொழுது ஒரே துறையில் ஒன்றாக கல்லூரியும் சென்று வருகின்றனர்.
“என்னடி அம்மு மருதாணி வாசம் மூக்கை தொலைக்குது…” என்று முகர்ந்த படி வீட்டில் நுழைந்தாள் ஷிவாஷினி.
ராஜியோ, “என் பேத்தி இன்னும் அடுப்பை கூட பத்த வைக்கல டி… நீ என்னனா மருதாணி வாசத்துக்கே மோப்பம் புடிச்சிட்டு வந்துட்ட…” என்க,
அவளோ, “என்ன ஈசு…” என்று பேச ஆரம்பிப்பதற்கு முன்பே,
“ஈசு பீஸுன்னு சொன்ன, இடுப்பு எலும்பை உடைச்சு அடுப்பில போட்டுடுவேன் பார்த்துக்க…” என்று கோபத்தில் கத்த,
‘நமக்கு எதுக்கு வம்பு…’ என்று எண்ணியவள் ஈஈஈ என பல்லைக் காட்டினாள்.
அன்வியோ, “ஈசு… அவ கிட்ட சண்டைக்கு போகாம சும்மா இருங்களேன்…” எனவும்,
“நீ என்னையே சொல்லு, அவளை ஒன்னும் கேட்டுடாத…” என்று முறுக்கிக் கொள்ளவும்,
“ஷிவு… எதுக்கு டி அவங்களை கத்த வைக்குற… கொஞ்சம் சும்மா தான் இரேன்… வா நம்ம உள்ள போகலாம்… நேத்து நான் புதுசா ஒன்னு கண்டு பிடிச்சு இருக்கேன்…” என்று இருவருக்கும் சமாதான கொடியை பறக்க விட,
ஷிவாவும் அவரை முறைத்து கொண்டே சென்றவள், “உங்க ஆயா எப்ப பார்த்தாலும் என்னைய திட்டிக்கிட்டே இருக்கு டி…” என்று சலித்துக் கொள்ள,
“மொதல்ல நீ அவங்களை வம்பு இழுக்காம இருக்கீயா…”
“அப்படி இருந்தா தான் எனக்கு தூக்கமே வர மாட்டேங்குதே டி…”
“ம்ம்… அதே போல என் ஈசுக்கும்…” என்று சொல்லி சிரித்தாள் அன்விதா.
ராஜியும் ஷிவாவும் இப்படி தான் வம்பு சண்டை போட்டுக் கொண்டே இருந்தாலும், அவளை சொந்த பேத்தி போல தான் பார்த்துக் கொள்வார். இவளுக்குமே பாட்டி இல்லை, அந்த குறையை தீர்த்து வைப்பவராக இருந்தாலும், அவரிடம் ஏதாவது சண்டை போட்டு திட்டு வாங்கிக் கொள்வதில் அலாதி பிரியம். இவர்களின் பாவமான தூது புறா என்னவோ அன்விதா தான்.
சமையல் அறையில் இருந்தே தேங்காயை கடித்து கொண்டே, “என்ன வானரமும் கருங்குரங்கும் இன்னும் இங்க ஆஜர் ஆகாம இருக்காங்க… அதிசயமா இருக்கே அம்மு…” என்று கேட்கவும்,
“ஷிவு… ஈசு போய் இப்ப அவங்க ரெண்டு பேருமா… எல்லார் கிட்டயும் சண்டைக்கு போகாம உன் வாய் சும்மாவே இருக்காதா டி… இப்ப நீ கம்முனு இல்ல நானே உன் லொடலொட வாய்க்கு டேப் போட்டு ஒட்டி விட்ருவேன்…” என்ற நண்பியை கண்டு திருதிருவென விழிக்க,
“இனி நீ திங்க மட்டும் தான் வாயை திறக்கணும்… சரியா…” என்றதற்கு தலையை மட்டும் ஆட்டினாள் ஷிவா.
அன்வியோ நேரத்தை பார்க்க ஏழரை ஆகி இருந்தது.
“அண்ணாவும் ஆதியும் இன்னும் காணும்… இன்னைக்கு கொஞ்சம் வேலை இருக்கு, ஏழு மணிக்கெல்லாம் வாங்கன்னு நேத்தே சொல்லி தான் அனுப்பனேன்… ஆனா, கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம இன்னும் வராம இருக்காணுங்க பாரு ஷிவு…” என்று புலம்ப,
“அம்மு நான் வேணா கால் பண்ணட்டா?”
“ஒன்னும் வேணா தாயே… நானே பண்ணிக்கறேன்…” என்று விட்டு அவளே அவளது அண்ணனான வந்தியத்தேவனுக்கு அழைப்பு விடுத்தாள்.
இரண்டு முறை அழைத்தும் ஏற்காமல் இருக்க, நண்பனான ஆதித்ய கரிகாலனுக்கு அழைத்துப் பார்த்தாள். அவனுமே எடுக்காமல் இருந்தான்.
“பாரு ஷிவு… ரெண்டும் ஃபோன் எடுக்கல… லேட் ஆகும்னு அட்டென்ட் பண்ணியாச்சு சொல்லணும் தானே… அது கூட சொல்லாம உன் ஃபோனையே எடுக்காம இருக்கானுங்க பாரேன் டி…” என்று தோழியிடம் புகார் செய்தாள் அன்விதா.
“ஹ்ம்ம்…”
“ஹிஹி… அம்மு… நீ வேணுன்னா பாரு அவனுங்க ரெண்டு பேரும் இப்போ ஒன்னா தான் இருப்பானுங்க… அதான் நீ ஃபோன் அடிச்சும் எடுக்கவே இல்ல…” எனக் கூறி நண்பியின் கோபத்தில் மண்ணெண்ணெய்யை தாராளப் பிரபுவாக ஊற்றிக் கொண்டிருந்தாள் ஷிவாஷினி.
1. ஆரோனின் ஆரோமலே! 5 (3)
written by Competition writers
அரோமா – 1
சென்னை நகரம்… தூங்கும் நகரமில்லை என்பதற்கு சாட்சியாக, மக்கள் எல்லாம் பரபரப்பாக அவரவர் வேலையை பார்த்தபடி இருந்தனர்.
வானம் மங்கலான நீலத்தில் படர்ந்து இருக்க… சூரியன் மெது மெதுவாக தனது வெப்பத்தை ஊற்ற ஆரம்பிக்கிறான்.
அந்த காலை பொழுதினை பீக் அவர் என்றே கூறலாம்.
பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும் கூட்டம். நேரம் ஆகி விட்டது, இப்பொழுது வரும் ஒரு பேருந்தில் கட்டாயம் அடித்து பிடித்து ஏற வேண்டும் என்று எண்ணி பலர் காத்துக் கொண்டிருக்க,
சவாரியை அவசரமாக ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவர்களையும், வெகு வேகத்தில் இருசக்கர வாகனங்களை செலுத்தும் பயணிகளையும் தடுக்கும் விதமாக போக்குவரத்து சிக்கல் இருப்பதால், வேகமெடுத்து செல்ல இயலாமல் மெதுவாக ஊர்ந்தபடி நகர்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஒரே நேரத்தில் பல்வேறு சத்தங்கள் – வண்டிகளின் ஹார்ன், போன் அழைப்புகள், வண்டிகளின் கார் கிளச்சின் சப்தம், ரேடியோ எஃப்எம் பேச்சுகள், சிக்னலின் ஓரத்தில் இருக்கும் நாயின் கத்தல், கடைத்தெருவில் இருக்கும் சிறு வியாபாரிகளின் குரல் என்று பற்பல!
அந்த சுறுசுறுப்பான மக்கள் கூட்டத்தில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை! ஒவ்வொரு ஓட்டம்! வெவ்வேறு சூழ்நிலை! பல்வேறு கவலைகள் மற்றும் வலிகள்!
ஆனால், அந்த பரபரப்புக்கு நடுவில், பலரும் யூடியூபில் ஒரு வீடியோவையே பார்த்தபடி இருந்தனர்.
அது ஏதோ ஒரு உண்மையான சம்பவம் பற்றிய செய்தியை விளக்கமாக கூறும் காணொளி.
தற்பொழுது வலையொளியில், அதாவது யூடியூப்பில் உண்மை சம்பவங்களை பற்றிய செய்தியை, சாமானிய மக்களுக்கு விளக்கும் படி சொல்லும் மற்றும் பிறருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் மூலம் மக்களை ஊக்குவிக்கும் போன்ற காணொளிகளை பதிவேற்றும் சேனல் அது.
“ஹெலோ எல்வி க்ரூஸ் (ELVI CREWS), இது உங்க எல்விபீடியா.
இப்ப நான் எதை பத்தி பேச போறேங்கிறது உங்க எல்லாருக்குமே தெரிஞ்சு இருக்கும்…
எஸ் அஷ்வினி மர்டர் பத்தி தான்,
யாரும் ஷாக் ஆகிட வேணாம்… என்னடா இவன் மர்டர் அப்படின்னு சொல்றானே, அந்த பொண்ணு சூசைட் தானே பண்ணிக்கிச்சு, இவன் எந்த விஷயமும் தெரியாம உளறுறானோ ன்னு யோசிக்கலாம்,
ஆனா, ஒருத்தரை தற்கொலைக்கு தூண்டுகிற செயல் கூட கொலைக்கு தான் சமம் னு சொல்வேன், அப்போ அதுல இருந்த எல்லாருக்குமே இந்த கொலைக்கு சம்பந்தம் இருக்கு… இல்லையா?
என்றவன் அவள் ஏன்? எதனால் இறந்தால்? என்றெல்லாம் விவரித்து கூறியவன்,
மேலும்,
இந்த அஷ்வினியோட இறப்பு ஒன்னும் முதலாவது கிடையாது… இங்க பல பொண்ணுங்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் உடலளவிலும் மனதளவிலும் சிதைஞ்சி போய்ட்டு தான் இருக்காங்க… அதுல இந்த மாதிரியான நியூஸ் 0.1 சதவீதம் நம்மளோட கண்ணுக்கு தெரிஞ்சு இருக்கு… தெரியாம எத்தனையோ இறப்புகள், எத்தனையோ கொடுமைகள் ன்னு எக்கச்சக்கமா நடக்க தானே செய்யுது…
ஏன் நாலு வருஷம் முன்னாடி கூட, கேரளாவில் ஒரு பொண்ணு செத்து போச்சு, அந்த பொண்ணுக்கு நீதி கிடைக்கணும், நியாயம் கிடைக்கணும்னு சோஷியல் மீடியாவில் கொந்தளிச்சோம், அதுக்கு அந்த பொண்ணோட புருஷன ஜெயிலில் போட்டாங்க, ஆனா, அவங்களே இப்ப ஜாமீனும் கொடுத்து வெளியே விட்டு இருக்காங்க… பலருக்கும் இந்த விஷயம் தெரியாது,
நாமளும் அந்த பொண்ணோட இறப்பை மறந்துட்டு இந்த பொண்ணோட இழப்பை பத்தி பேச ஆரம்பிச்சிட்டோம்,
இப்ப எல்லாம் யாரோட கண்ணீருக்கும், வலிக்கும், அவங்களோட இழப்புக்கும் நியாயம்னு கிடைக்கிறதே அரிதாகி போகுது…
நாம ஒரு விஷயத்தை பரபரப்பாக பேச ஆரம்பிக்கிறோம் அப்படின்னா அதோட ஆயுட்காலம் குறைஞ்சது ஒரு வாரம் தான், அதுக்கு பிறகு வேற ஒரு ஃப்ளாஷ் நியூ வரும், நாமளும் அதுக்கு ஜம்ப் ஆகி வேறொரு புது நியூஸ பேசிட்டு போய்ட்டே இருப்போம்,
இதுல கன்கிளுஷன் சொல்லவெல்லலாம் என் கிட்டயோ உங்க கிட்டயோ எதுமே இல்லங்க… உங்களோட பிரச்சினைக்கு உங்க கிட்ட மட்டும் தான் தீர்வு இருக்கு, எந்த ஒரு சூழ்நிலையிலும் கிவ் அப் மட்டும் பண்ணி தப்பான முடிவை எடுக்காதீங்க, அந்த முடிவினால் பாதிக்கப்பட போறது உங்களை சார்ந்தவங்க மட்டும் தான்.
சோ, ப்ளீஸ் யாருமே தப்பான முடிவை நோக்கி போகாதீங்க, ஏதோ ஒரு நிமிஷ தேவையில்லாத முடிவால் வாழ்க்கையை முடிக்கும் நிலைக்கு போய்டாதீங்க,
தற்கொலை எந்த விதத்திலும் சரியான முடிவா ஆகிடாது, சோ பீ ஸ்ட்ராங், கீப் தின்க் பாஸிட்டிவ்.”
என்பதுடன் அவனுடைய உரையை முடித்துக் கொண்டான் வலையொளியில் (Youtube) பிரபலமான எல்விபீடியாவின் எல்வின் ஆரோன்.
அந்த கானொளி மூலம் அவன் பேசும் வார்த்தைகளை பொதுமக்கள் கேட்கும் பொழுது… அந்த காலை பொழுதின் பரபரப்பையே ஒரு கணம் நிறுத்தி மௌனமாக்கத் தான் செய்தது.
மேலும், அந்த காணொளியின் கீழே அவனுடைய சந்தாதாரர்களும் (subscribers) அவர்களுடைய கருத்துக்களை நேர்மறை எதிர்மறை கருத்துகளை பகிர்ந்தபடி இருந்தனர்.
அங்கு அவனது பேச்சால் அனைவராலும் பேசப்பட்டவனோ, தாயின் மடியில் படுத்து செல்லம் கொஞ்சிக் கொண்டு இருந்தான்.
“என்னடா கண்ணா இன்னைக்கு வந்த வீடியோவில் ரொம்ப எமோஷனலா பேசிட்டு இருக்க?” என்று மகனின் தலையை கோதியபடி கேட்டார் ஆரோனின் தாயார் பார்வதி.
“ம்மா… நான் ஒன்னும் அப்படி எல்லா எமோஷனலா பேசல…”
“என் புள்ளைய பத்தி எனக்கு தெரியாதா… எல்லா வீடியோவிலும் என்ன நடந்துச்சோ அத மட்டும் தான் பேசுவ… அதுக்கு மீற எதையும் பேசிட மாட்டீயே… ஆனா, இந்த பொண்ணோட சூசைட் கேஸ்ல நீ நிறைய அட்வைஸ் பண்ற போல தான் பேசிட்டு இருந்த.. என்னவாம் என் செல்லத்துக்கு?” என்று அன்னை கேட்கவும்,
“இப்படியான நியூஸ் எல்லாம் கேட்டு கேட்டு ரொம்ப சலிப்பா இருக்குமா… வேதனையாவும் இருக்கு… இந்த பொண்ணு செத்துப் போச்சு வெளியே தெரியுது… பட், ஃபேக்ட் என்னனா இதைவிடவும் பல கொடுமைகளை அனுபவிச்சிட்டு வெளியே சொல்லாம கஷ்டப்படும் பொண்ணுங்க எவ்வளவு பேர் இன்னும் இருக்கத்தான் செய்யறாங்க…
இதையெல்லாம் எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல ம்மா… அதான் கொஞ்சம் நிறையவே பேசிட்டேன் ம்மா.. நான் இப்படி பேசுனதுல எந்த தப்பும் இருக்கல தானே ம்மா?” என்று அவரிடமே கேட்க,
“இல்லப்பா… எதுவும் இல்ல… நீ பேசினது நூத்துக்கு நூறு சதவீதம் சரி தான்… என்ன பண்றது பெண்களோட பிறப்பே இப்படி தான்… அதுல எல்லா கஷ்டத்தையும் அனுபவிக்கணும் ன்னு எழுதி இருக்கு போல..” என்று கவலையாக பேச ஆரம்பிக்கவும்,
“அம்மா… தலையெழுத்து அது இதுன்னு எல்லாம் பேசாதீங்க… இப்படிப்பட்ட கொடுமைகளை அனுபவிக்க எந்த பொண்ணுக்கும் அவசியம் இல்ல… அதுல இருந்து வெளியே வந்து, அவங்க சுயமா சிந்திச்சு, சுதந்திரமா, சந்தோஷமா அவங்க வாழ்கையை வாழ எல்லாருக்குமே எல்லா உரிமையும் இருக்கு… இருக்கணும்…” என்று படபடவென்று பொரிந்து தள்ளி விட்டு,
“ப்ச்… ம்மா… போதுமே… ஸ்கிப் த டாபிக்… எனக்கு ஒரு சுக்கு டீ வேணும்… கொஞ்சம் தலை வலிக்குது…” எனக் கூறி அமைதியாகி விட்டான் எல்வின்.
அவனை புரிந்துக் கொண்டு, “சரிடா போறேன்…” என சென்று விட்டார் பார்வதி.
எல்வினுக்கு இவற்றை எல்லாம் நினைத்து நினைத்து உண்மையாகவே தலைவலி வந்தது தான் மிச்சம்.
அதனை அகற்றும் விதமாக, பார்வதி போட்ட சுக்கு டீயை குடித்து விட்டு, அவனுடைய கணினியை உயிர்ப்பித்து வேலையை பார்க்க தொடங்கி விட்டான்.
எல்வின் ஆரோன், வயது 29 தொடங்கி பத்து நாட்கள் தான் சென்றிருந்தது. B.E. in Software Engineering படித்து முடித்து, தற்பொழுது ஒரு ஐடி கம்பெனியில் திட்ட மேலாளராக (Project manager) பணியாற்றிக் கொண்டிருக்கின்றான்.
அவனுடைய வேலை ஒருபுறம் இருந்தாலும் ஒரு யூடியூபர் ஆகவும் திறம்பட செயல்பட்டு வருகிறான். அவனுக்கென்று தற்பொழுது நான்கு மில்லியன் சந்தாதாரர்கள் (Subscribers) இருக்கிறார்கள். இது அவனுடைய 7 ஆண்டு உழைப்பிற்கான பலன் தான்.
அவனுடைய இருபத்து மூன்றாம் வயதில் எல்விபீடியாவை தொடங்கி, படிப்படியாக உயர்ந்தோங்கி வேரூன்றி நின்றிருக்கிறான். ஆரம்ப காலத்தில் பல அவமானங்களை சந்தித்து இருந்தாலும், இப்பொழுது அனைவராலும் பாராட்டக்கூடிய இடத்தில் வந்திருக்கிறான்.
என்னதான் அவனுக்கு இதில் பெயர் புகழ் பணம் என்று கொட்டி கிடந்தாலும், அவன் வேலையை என்றுமே விட நினைத்தது இல்லை.
ஆரோனுக்கு அவனது வேலையும் முக்கியம், அதேசமயம் அவனுடைய பேஷனும் முக்கியம், எதற்காகவும் எதையும் விட அவன் நினைக்கவில்லை. இரண்டையும் ஒரே தராசில் வைத்து தான் பார்ப்பான். ஆகையால், அவ்விரண்டினலும் எந்த ஒரு தவறும் இன்றி சரியாகவே செய்து கொண்டிருந்தான்.
அவனுடைய யூடியூப் சேனலை எவ்வாறு வளர்த்து விட்டானோ, அதேபோல அவனுடைய வேலையிலும் உயர்ந்து கொண்டே தான் இருந்தான்.
அவனுடைய புகழையும் பாராட்டையும் தலைக்கு ஏற்றால் இருப்பதும், அவனுக்கு வரும் எதிர்மறை விமர்சனங்களை கடந்து வருவதும் தான் அவனுடைய வெற்றிக்கு முதன்மையான காரணம் எனலாம்.
சாமுவேல் மற்றும் பார்வதி தம்பதியரின் தலைப்பு புதல்வன் தான் எல்வின் ஆரோன், அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறாள் பெயர் சஷ்விகா.
சாமுவேலும் பார்வதியும் காதலித்து, இரு வீட்டு எதிர்ப்பையும் மீறி, ஊரை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து, அவர்களின் காதல் வாழ்க்கையை ஆரம்பித்துக் கொண்டவர்கள். அதனாலேயே அவர்களுக்கு உறவென்று யாரும் இல்லை.
அதை எண்ணி பிள்ளைகளை பெரிதாக வருந்த விட்டதும் இல்லை, எந்தவித பாதிப்பும் இன்றி நன்முறையில் நல்ல பிள்ளையாக தான் வளர்த்தனர் பெற்றவர்கள்.
இளையவள் சஷ்விகா இப்பொழுது தான் பன்னிரெண்டாம் வகுப்பு பரிட்சையை எழுத போகிறாள். எல்விக்கும் இவளுக்குமே பன்னிரெண்டு வருடங்கள் வித்தியாசம் இருக்கும். அந்த வீட்டின் செல்லக்குட்டி இவள். அண்ணனின் முதல் குழந்தை என்றே சொல்லலாம். அவனுக்கு இவள் மீது அவ்வளவு பிரியம்.
சாமுவேல் ஒரு நவீன பல்பொருள் அங்காடியை வைத்து நடத்திக் கொண்டிருக்க, பார்வதியோ அரசுக் கல்லுரியில் தமிழ் துறைத் தலைவராக பணியாற்றி கொண்டிருக்கிறார்.
அவர்களை பொறுத்தவரை வசதிக்கும் குறைவில்லை! மகிழ்ச்சிக்கும் குறைவில்லை! தெளிந்த நீரோடை போலவே ஆர்பாட்டம் இல்லாமல் அமைதியாகவே சென்று கொண்டிருந்தது.
அத்தியாயம் – 6
மகேஸ்வரனாலும் நாகராஜிடம் எதையும் அதட்டி கேட்க முடியாது.. இப்போது அவர் ஐஜி வேறு… அதனால்தான் இந்த அமைதி.. அவருக்கு நன்றாக தெரியும் நளனை யார் இந்த விவாகத்திற்கு அழைத்து இருப்பார்கள் என்று யோசித்தவருக்கு நாகராஜன் தான் கண்ணுக்கு வந்து சென்றார்… ஏனென்றால் அந்த வீட்டில் அவர் ஒருவரே நளனை பற்றி அதிகம் யோசிப்பவர்.. ஏன் அவனிடம் பேசுபவர்கள் கூட அவர் ஒருவரே… ஆனால் மகேஸ்வரனுக்கு தன்னுடைய மாப்பிள்ளையை அதும் ஐஜி மாப்பிள்ளையை அதட்டி கேள்வி கேட்பது சரி என்று படவில்லை… அதனால் தான் அமைதியாக விட்டுவிட்டார்.
இங்கு தமையாவோ தன்னுடைய அறைக்கு சென்று புகுந்துக்கொண்டவள் தன்னுடைய முகத்தி போட்டிருக்கும் மேக்கப்களை களைந்து விட்டு தன் இலகுவான இரவு உடைக்கு மாறியவள் அப்படியே கட்டிலில் மல்லாக்க படுத்து விட்டத்தை வெறிக்க பார்த்தவளுக்கு இப்போது வரை இடை குறுகுறுவென்று தான் இருந்தது..
அதனை கண்டு யோசனையானவள்.. “எதுக்காக நம்மளுக்கு இங்க கூசிட்டே இருக்கு…” என்று தன்னுடைய இடையே வருடியவளுக்கோ அப்போதுதான் நளனின் ஞாபகமே அவளுக்கு வந்தது.. நளன் நியாபகம் வந்த வேகத்திற்கு அவள் உடல் ஜிவ்வென்று சிலிர்க்க.. அவள் சதைப்பற்றான கீழ் உதடுகளோ அவளின் வெண்மையான பால்பற்களிடையே மாட்டிக்கொள்ள, அவள் முகமோ அவளுக்கு மிகவும் பிடித்த ரோஸ்மில்க் போல சிவந்து போனது.
“அட ஆமால்ல நம்ம மாமாஜி தானே நம்ம இடுப்ப தொட்டாரு.. அதனால தான் குறுகுறுன்னு இருக்கு போல…” என்று தன் இடையையே வருடிக் கொண்டே இருந்தவளுக்கு ஏனோ அவன் வருடியது இப்போது கூச்சமாக இருந்தது… “ஆஆ ஐயோ மாமாஜி நம்மள மொத மொதல்ல இன்னைக்கு தான் தொட்டு இருக்காரு…” என்று நினைத்தவளுக்கு மனம் குதுகலமாக இருந்தது..
“அட லூசே அவர பல வருஷத்துக்கு அப்புறம் இன்னிக்கி தான்டி பாக்குற… அவரும் இன்னிக்கி தான் பல வருஷத்துக்கு அப்புறம் உன்ன பாக்குறாரு.. இதுல மொத மொதலா தொட்டுருக்காறாம்…”என்று அவள் மனம் கேலி செய்ய…
“அட வாய மூடு வனக்குரங்கே…கொஞ்ச நேரம் சந்தோஷமா இருந்தா நோக்கு பிடிக்காதே…”என்று தன் மனதை அதட்டியவளோ.. தன்னுடைய இடையை வருடியவாறே… “ஆமா இந்த மாமாஜிய கரெக்ட் பண்றது ரொம்ப கஷ்டம் போலையே என்ன செய்யலாம்…” என்று கன்னத்தில் கை வைத்து யோசித்துக் கொண்டிருக்க
அந்நேரம் பார்த்து அவளுக்கு ஒரு அழைப்பு வந்தது… “அய்யோ நானே காலங்காத்தால எழுந்ததுல டயர்டா இருந்தா… எந்த கடங்காரன் கூப்டுறான்னு தெரிலையே…”என்றவள் போனை எடுத்தவள் யார் என்று பார்க்க அதுவோ அவளுடைய உயிர் தோழன் சலீம் என்று காட்ட…
“அட பாய் இவன் எதுக்கு இப்ப கால் பண்றானோ…” என்று யோசனையுடன் போனை எடுத்து காதில் வைக்க…
“ம்ம் என்னடி மாமி கல்யாணம் பேஷா முடிஞ்சிருச்சா…” என்று கேட்க
“சொல்லுடா பாய்…அதெல்லாம் நன்னாவே முடிஞ்சிருச்சு… ஆமா நீ ஏண்டா வரல..” என்று கேட்க
“கேடி மாமி..நான்தான் சொன்னேனே எங்க அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கேன்னு…” என்று கூற
அதில் நாக்கை கடித்துக்கொண்டவளோ… “அட ஆமால்ல நான் மறதி கேஸ்ஸுன்னு நோக்கு தெரியும்ன்னோ… மறந்து போயிட்டேன் டா நாளைக்கு அம்மாவ பாக்குறதுக்கு ஹாஸ்பிடல் வாரேன் சரியா…” என்று கூற
“அட மாமி அதெல்லாம் ஒன்னும் வேணாம்… இப்ப தானே கல்யாணம் பண்ணி இருக்கீங்க… ரொம்ப பிசியா இருப்ப நீ வீட்டை பாரு அப்புறம் கூட அம்மாவ வீட்ல வந்து பார்த்துக்கோ…” என்று கூற
அதுவும் அவளுக்கு சரியாகவே பட்டது.. நாளை என்ன என்ன வேலைகளை தன் தாயாரும், தந்தையும் வைத்திருக்கின்றார்களோ தெரியவில்லை.. இந்த லட்சணத்தில் தான் பாட்டிற்கு ஏதோ ப்ளானை போடுவது சரியாக படவில்லை…
“சரி நேக்கு தெரியும்…“என்றவள் “ஆமா இப்ப அம்மா எப்டி டா இருக்காங்க… ஆல் குட் தானே…” என்று கேட்க
“ம்ம் அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல நல்லா இருக்காங்க… ஹெல்த் பார்த்துக்க சொன்னா சுத்தமா பாத்துக்குறது இல்ல… பின்ன உடம்பு முடியாம போகாம என்ன பண்ணும்…” என்றவனோ…
“ஆமா அங்க ஒன்னும் பிரச்சனை இல்லையே…. கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிடுச்சில்ல…” என்றவாறே கேட்க
“ம்ம் அதெல்லாம் நன்னபடியா முடிஞ்சிருச்சு… இதுல என்ன சந்தோஷம்னா என் அக்கா அவ மாமியார் வீட்டுக்கு ஓடிட்டா…இனிமே நான் இங்க தனியா சந்தோஷமா இருப்பேன் …”என்று கூற
அவள் குணம் தெரிந்தவனாயிற்றே அவள் நண்பன்… ஒன்றல்ல இரண்டல்ல கிட்டதட்ட பத்து வருட ப்ரண்ஷிப் இருவரதும்… கிட்டதட்ட இருவரின் நட்பும் அவர்களின் ஆறாம் வகுப்பில் இருந்து ஆரம்பித்தது.
சலீம் தன்னுடைய ஐந்தாம் வகுப்பு வரை தன் தந்தையுடன் சவுதியில் படித்தான். அதன் பின் அவன் அன்னை அவனை இந்தியாவிற்கு கூட்டி வந்துவிட.. அவனோ தமையா படித்த பள்ளியில் தான் தன்னுடைய படிப்பை தொடங்கினான். அவனுக்கு கொஞ்சம் தமிழ் குளறுபடிதான். அப்போதெல்லாம் தமையா தான் அவனுக்கு உதவி செய்வாள்.. அப்போது ஆரம்பித்தது அதன் பின் இப்போது இருவரும் சேர்ந்து தான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் படிக்கின்றனர்.
இதிலும் இருவருக்குமே பொருத்தம் தான்.. சலீமிற்கும் சமையல்கலையில் நல்ல ஆர்வம்.. அதே போல தமையாவிற்கும் சிறுவயதில் இருந்து அமிர்தம் ஹோட்டலை பார்த்தாலே தானும் அது போல சமையல்கலையில் சேர வேண்டும் என்ற விருப்பத்துடனே சேர்ந்தாள்.அவளின் ஆசையை கேட்ட மகேஸ்வரனுக்கோ அவ்வளவு சந்தோஷம்.. அவரின் செல்ல பேத்தி அவள் அவளாக எதை கேட்டாலும் படிக்க வைத்திருப்பார் தான்… ஆனால் அவரின் குடும்ப தொழிலை பற்றியே படிக்க போவதாக கூற அவருக்கோ இரட்டை சந்தோஷம் தான்.
“தாராளமா செல்லம்… போய் படி.. படிச்சி பெரிய செஃப் ஆகி நம்ம ஹோட்டல நீதான் பாத்துக்கனும்..”என்று மலர்ந்த முகத்துடன் கூற… அவளோ தன் தாத்தனை கட்டிக்கொண்டாள்.
“ஏன்டி நாங்க தான் இதுல மாட்டிக்கிட்டோம்னா நீயாச்சும் வேற எதாவது எடுத்து படிக்கலாம்ல… நீயும் இப்டி வந்து மாட்டிக்கிறியே…”என்று அபிநிதி கேட்க
அதற்கோ புன்னகைத்தவாறே… “நேக்கு இதான் மன்னி பிடிச்சிருக்கு… நேக்கு சாப்ட கொள்ள விருப்பம்னு நோக்கு தெரிம்னோ… அதான் இந்த ஃபீல்டுக்குள்ள போய்ட்டா நன்னா சாப்டலாம்ல்ல..”என்று மழலையாக கூற…
அதனை கேட்ட விபி, மகி, அபி,ஈஸ்வர் என்று அனைவரும் புன்னகைத்து கொண்டார்கள்… “அடிப்பாவி சாப்டவா இந்த ஃபீல்ட சூஸ் பண்ணுன…”என்று அபிநிதிதான் வாயில் கை வைக்க வேண்டியதாகி போனது.
அந்த வீட்டிலையே சித்ராவின் மகன் அஸ்வினுக்கு முன் சிறியவள் என்றாள் அது தமையா தான். அதனால் அவளின் சேட்டை அங்கு கொஞ்சம் அதிகமாக தான் இருக்கும்.. அபிநிதியை விட தமையா கிட்டதட்ட மூன்று வயது சிறியவள்.
“அட உன் அக்காவுக்கு தானேடி தமையா கல்யாணம் ஆகிருக்கு… அவங்கள தவிர இன்னும் ஒரு கும்பலே உங்க வீட்ல இருக்குமே… அப்புறம் எப்டி நீ சந்தோஷமா இருப்ப..”என்றான் சலீம்…
அதில் முகத்தை சுருக்கியவளா… “நன்னா இருக்கு பாய் உன்னோட கத… நானே ஏதோ சொல்லி மனச தேத்தின்டு இருக்கேன்… அது உனக்கு பொருக்கலையாக்கும்… ” என்று சோகமாக பேச…
தன் தோழியின் பேச்சினை கண்டுக்கொண்டவனோ… “என்னாச்சி உன் அந்த மாமாஜீய பாத்தியாக்கும்…”என்றான் சலீம்
அவனுக்கு தெரியாதது அவளிடத்தில் எதுவும் இல்லை… அனைத்தையும் இருவரும் பகிர்ந்துக்கொள்வார்கள். முதலில் அவளுக்கு வந்த லவ் லெட்டர் தொடங்கி அவனுக்கு வந்த ப்ரோஃபோஷல் வரை அனைத்தும் இருவருக்கும் அத்துப்படி…
“ம்ம்ம் ஆமா வந்தா.. அவருக்கு என்ன நன்னா பெருமாள் கணக்கா கம்பீரமா காட்சி தந்தார்… என்னை பாத்தார் ஆனா கண்டுக்க கூட இல்ல தெரியுமோ…ஆனா நான் தான் அவர பாத்து ஃப்ளாட் ஆகிட்டேன்…”என்றாள் தமையா…
அதனை கேட்ட சலீமோ… “உங்க ஆத்துல இருக்கறவா கொஞ்ச நஞ்சமா அவருக்கு பண்ணிருக்கா… அதுக்கலாம் அவா எல்லாம் அனுபவிக்க வேண்டாமோ… அதுக்கு அப்புறம் பாரு உங்கிட்ட நல்லா பேசுவார்…”என்றான் அவனும் அவளை போல அய்யர் பாஷை பேசிக்கொண்டே…
இவளோ “போன்ல பேசுறேன்னு மரியாதையா பேசுறேன்… இல்லைன்னு வை..” என்று அவள் ஆரம்பிக்க..
“ம்ம் சரி ரைட்டு விடு…”என்று சமாதானம் ஆகியவன்… “ம்ம் ஆமா இன்னைக்கு அந்த சரத் இருக்கானே அவன் போன் பண்ணான்டி… காலேஜ்ல நம்மளுக்கு தேர்ட் இயர் ஃபுல்லா இன்டர்ன்ஷிப் தானாம்… அதுக்கு ஏதாவது ரிஜிஸ்டர்ட் ரெஸ்டாரன்ட்ல தானே பண்ணனும்… அதுக்கு ஏதும் ஹோட்டல் பாத்துட்டீங்களான்னு கேட்டுட்டு இருந்தான்…” என்று சலீம் கூற
“அட ஆமாண்டா நான் கூட தான் அதே யோசனைலயே இருக்கேன்…” என்றவளை இடைமறித்தவனாக…
“ஆமா நாம ஏன் உங்க ஹோட்டல்லையே ஜாயின் பண்ண கூடாது… அங்கையே சைனிஸ், இட்டாலியன்னு நிறைய பண்றாங்களே…”என்று சலீம் ஐடியா குடுக்க…
அதில் முகம் சூடாகியவள்…“அடேய் பாய்… உன்ன வெளுக்க போறேன்ட்டா… எங்க ஹோட்டல்ல ஜாயின் பண்ண நான் ஏன்டா உங்கிட்ட ஐடியா கேட்க போறேன்… எங்க ஹோட்டல்லாம் வேணாம்,.. அது ட்ரெஸ்பாஸ் ஏரியா தொட்டம்ன்னு வையி கரென்ட் ஷாக் தான்… தாத்தா வேற நொய்ய நொய்யன்னு உயிர வாங்கிடுவாரு… அது செட் ஆகாது…நீ பேசாம ஹோட்டல் ஏதாவது கிடைக்குமான்னு பாரேன்..” என்று அந்த வேலையை சலீம் தலையில் கட்ட பார்க்க…
“அத மட்டும் ஏன் என் தலையில கட்டுற… பேசாம நீயே இடத்த கண்டுபிடி நானும் உன் கூடவே ஒட்டிப்பேன்…” என்று சலீம் நக்கலாக கூற…
“ஆஆ நீ சரியான ஒட்டுண்ணி பாய்ன்னு தெரியாம சொல்லிட்டேன்டா…” என்றவளோ… “சரி நா பாக்குறேன்… நாளைக்கி நாம காலேஜ்ல மீட் பண்ணுவோம்…”என்றவளோ அவனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு ஃபோனை வைத்தவளுக்கு அப்போதுதான் அவள் மூளையில் ஒரு எண்ணம் உதயமாகியது…
“ஐ மாமாஜி உங்கள கரெக்ட் பண்றதுக்கு சரியான ஒரு வழி கிடைச்சிருக்கு… எனக்கு இன்டர்ன் பண்ணனும் வழி கிடச்சிடுச்சி…”என்று குதுக்கலித்தவளோ அவனை மயக்க வழி கிடைத்ததை எண்ணி மனம் இறக்கை விரித்து பறந்தது.. அப்படியே அவனை நினைத்தவாறு இருந்தவளுக்கு அவனின் மூச்சுக்காற்று இன்னும் தன் கழுத்தடியில் படுவது போல ஒரு எண்ணம் தோன்ற ஏதோ இம்சையான உணர்வை உணர்த்தவாறே அப்படியே கண்களை மூடி படுத்திருந்தவள்… அப்படியே அவளையும் அறியாமல் உறங்கிப் போனாள்…
இங்கு இவள் உறங்க அங்கோ ஒருவன் உறங்காமல் தன்னுடைய அருகில் இருக்கும் பால்கனி வழியாக நிலாவை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்… இத்தனை வருடமாக தோன்றாத ஏதோ ஒரு இம்சையான உணர்வு அவனுக்கு தோன்ற… அந்த உணர்வும் அவனுக்கு பிடித்தே போனது…
“ம்ச் இதெல்லாம் அந்த ராபிட்டால வந்தது…” என்றவாறே தன்னுடைய கேசத்தை கோதிக்கொண்டவனோ அப்படியே தன் அறையில் இருக்கும் கட்டிலில் அப்படியே படுத்துக்கொண்டான்…
ஆனால் அவனுக்கு உறக்கம் தான் எட்டாக்கனி ஆகிப்போனது.. ஏனோ இன்று பருவக்காய்ச்சல் வந்தது போல மனம் அடித்துக்கொண்டது.. அவன் உடல் சிலிர்க்க… அவனின் கையோ ஏதோ மென்மையை உணர்த்தியவாறே குறுக்குறுத்தது…
“ம்ச் ஏன் எனக்கு இப்டிலாம் வித்தியாசமா தோணுது…” என்று யோசனை செய்தவாறே இருந்தவனுக்கு அது கண்டிப்பாக அவனுடைய ராபிட்டினால் தூண்டப்பட்ட உணர்வுகளால் தான் என்று ஆணித்தரமாக நம்பினான்.
“நோ நோ நளா… இந்த மாதிரி உணர்வுகளுக்கு எப்போதும் இடம் கொடுக்காத… ஏற்கனவே இது மாதிரியான உணர்வுகளால தான் உன் வாழ்க்கையே இப்டி மாறி போச்சி.. திரும்ப இதே தப்ப பண்ணாத… அதும் இல்லாம உங்கிட்ட எந்த உணர்வுகளும் இல்ல… எல்லாம் பத்து வருஷத்துக்கு முன்னால மரிச்சி போன உணர்வுகள் தான்…“என்று தனக்குள்ளே பேசிக்கொண்டவனோ தன் கண்களை போல தன் மனக்கதவுகளையும் இறுக்கமாக மூடிக்கொண்டான்.
(நீயடி….)
Episode – 09
அவனின் கேள்வியில் அவனை எச்சில் விழுங்கிப் பார்த்தவள்,
“ம்ம்ம்…. நான் போகணும். கொஞ்சம் தள்ளுங்க.” என நா தந்தி அடிக்க கூற,
“உனக்கு அவ்வளவு பயம் இருக்குன்னா…. நான் சொல்றத செய்து இருக்கணும். சும்மா என்ன சீண்டி விட்டா இது தான் நடக்கும்.”
“நான் சொல்றத நடத்திக் காட்ட எந்த எல்லைக்கு வேணும் எண்டாலும் நான் போவன். அது உனக்கு இன்னைக்கு நல்லா புரிஞ்சு இருக்குமே.” என அவன் அழுத்தமான குரலில் கேட்க,
அவனின் முகத்தைப் பார்க்காது, பக்க வாட்டாக பார்த்துக் கொண்டு,
“அப்போ, இந்தக் கம்பெனி வாங்கினதுக்கும் நான் தான் காரணம்னு சொல்லுவீங்க போல….” என முணு முணுக்க,
“எனக்கு எப்பவும் என்னோட மூஞ்சய பார்த்து எதிர்க் கிறவங்கள தான் ரொம்ப பிடிக்கும். சோ, என்ன கேட்கிறதா இருந்தாலும் என்ன நேராப் பார்த்து கேளு.” என ஒருமையில் பேசியவனை சற்று திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.
அவளின் பார்வையை உணர்ந்து கொண்டவன், விலகி நின்று கொண்டு,
அவளையே உறுத்து விழித்தபடி,
“நான் எனக்கு தோணினது நடக்கணும்னா…. காசு, டீசென்ட், நல்லது, நேர்மை, நியாயம்…. இது எல்லாம் பார்க்கவே மாட்டன். எந்த எல்லைக்கும் இறங்கிப் போய் வேலை செய்வன். இப்போ புரியுதா…. உன்னோட கேள்விக்கு இப்போ பதில் கிடைச்சிருக்கும்னு நினைக்கிறன்.” என கூற,
அதற்கு மேல் அவனிடம் என்ன தான் பேசி விட முடியும் என எண்ணிக் கொண்டு,
அவன் எதிர் பாரா நேரம் படடென எழுந்து, அவனை விட்டு தூர நகர்ந்து வாசல் பக்கம் போய் நின்று கொண்டவள்,
“ஏதும் வேலை இருக்கா…. இல்ல…. நான் போகலாமா?” என கேட்க,
ஆரண்யன் ஏதோ சொல்ல வர அதற்குள் அவனின் போன் அடித்து அவனை தொந்தரவு செய்தது.
அதற்கு மேலும் அங்கு நிற்க, சொர்ணா என்ன முட்டாளா?, அவன் போனை எடுத்து பேச ஆரம்பிக்கவும், விட்டால் போதும் என ஓடி விட்டாள்.
வெளியே வந்தவள் தன்னை சாதாரணமாக காட்டிக் கொள்ள பட்ட பாடு இருக்கே…. அது சொல்லத் தீராது.
தனது சீட்டில் வந்து அமர்ந்தவள், ஒரு கணம் நிமிர்ந்து பார்க்க,
அங்கு வேலை செய்யும் பெண்களின் கவனம் முழுவதும் அவளைச் சுற்றியே இருந்தது.
அதிலும் அருணா…. ஒரு படி மேலே போய்,
“என்ன சொன்னார் சார்?, ஏன் உன்னை கூப்பிட்டாராம்?, எங்கள பத்தி ஏதும் கேட்டாரா?…. ஐ மீன் என்ன பத்தி?” என மெசேஜ்ஜில் அடுக்கடுக்காக கேட்க,
“இவ வேற என்னோட நிலைமை புரியாம…. அந்த ஆள பத்தி கேட்டுக் கிட்டு….” என திட்டிக் கொண்டு, நிமிர்ந்து அவளை முறைத்துப் பார்த்து விட்டு,
“ஒழுங்கா வேலைய பார்க்கலன்னா உங்க சார் உங்கள வேலைய விட்டு தூக்கிடுவாராம். எப்படி வசதி?” என மெசேஜ் பண்ணினாள்.
“அதற்கு அட கொடுமைய….” என போட்டு முறைக்கும் எம். ஒ.ஜி ஒன்றை அனுப்பி வைத்தாள் அருணா.
சொர்ணாவும் பார்த்து விட்டு மென் புன்னகையுடன் தொடர்ச்சியாக வேலை செய்ய ஆரம்பித்தாள்.
அதன் பிறகு அன்றைய நாளில், ஆரண்யன் எந்த விதத்திலும், சொர்ணாவை தொந்தரவு செய்ய வில்லை.
சொர்ணாவும், “அப்பாடா…. சைத்தானோட இன்னையோட கோட்டா முடிஞ்சுது போல.” என எண்ணிக் கொண்டாள்.
உண்மையில், ஆரண்யனுக்கு அடுத்தடுத்த வேலைகள் குவிந்தது தான் காரணமே தவிர,
அவள் எண்ணியது போல அல்ல. வேலைகள் இல்லாது போய் இருந்தால் அவளை வதைப்பதையே ஒரு வேலையாக செய்து இருப்பான் அவன்.
மறு நாள் காலையில் வேலைக்கு வந்தவள், தளத்தில் எங்கேணும் ஆரண்யன் தென் படுகிறானா என பார்த்து விட்டு நிம்மதிப் பெரு மூச்சு விட்ட படி நடந்தாள்.
நடந்தவள், யாரோ ஒருவருடன் மோதி விட்டு,
“சாரி…. தெரியாம….” என ஆரம்பித்த பிறகு தான், தான் மோதிய நபர் யார் என நிமிர்ந்து பார்த்தாள்.
அப்போது தான், யாரைப் பார்க்க கூடாது என வேண்டுதல் வைத்தாளோ அவனே அவளை உறுத்து விழித்துக் கொண்டு இருப்பது புரிந்தது.
“அச்சோ, மறுபடியும் சிங்கத்தோட பிடரிய பிடிச்சு இழுத்து இருக்கம் போலயே. ஆத்தி இப்போ அது என்ன செய்யப் போகுதோ?” என மனதிற்குள் எண்ணிக் கொண்டவள், அவனை உள்ள விலங்குகள் எல்லாவற்று டனும் ஒப்பிட்டு திட்டித் தீர்த்தாள்.
அவளது முழிப் பார்வையை வைத்தே…. அவள் தன்னை திட்டுகிறாள் என உணர்ந்து கொண்டவன்,
“என்ன மிஸ் சொர்ணாம்பிகை. இப்படியே நிக்கிறதா எண்ணமா?, கொஞ்சம் வழி விட்டு விலகி நின்னீங்கன்னா? நான் என்னோட வேலைக்கு போக வசதியா இருக்கும். உங்களுக்கு எப்படி வசதி?” என கேலியாக வினவ,
அவளோ, பட்டென விலகி நின்று கொண்டு,
“சாரி சார் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்.” என கூறவும்,
அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில், “இதென்ன டென்ஷன் இன்னும் நிறைய ட்விஸ்ட் இருக்கு மேடம். வெயிட் அண்ட் சீ. இன்னைக்கு நாள் அமோகமா ஆரம்பிச்சு இருக்கு. போகப் போக பார்ப்பம்.” என கூறி விட்டு அவன் செல்ல,
சொர்ணா தான் சற்று நேரம் பிரீஸ் மோடில் நின்றாள்.
ஆனால் தொடர்ந்து அப்படி நிற்க முடியாதே. ஆகவே தன்னை சமன் செய்து கொண்டு தனது சீட்டில் போய் அமர்ந்து கொண்டவளுக்கு, அடுத்து என்ன செய்வது எனப் புரியாத நிலை தான்.
வழக்கம் போல, அருணா சொர்ணாவிடம் வம்பிழுத்து விட்டு,
“என்னாச்சு சொர்ணா உன்னோட முகத்தில ஒரு வித கலவரம் தெரியுதே. பளிச் சின்னு இருக்கிற உன்னோட முகம் ஏன் காலையிலயே களை இழந்து போய் இருக்கு?, வீட்டுல ஏதும் பிரச்சனையா?, இல்லை வர்ற வழில ஏதும் பிரச்சனையா?” என கேட்க,
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நான் நார்மலா தான் இருக்கேன். நீ வேலையப் பாரு.” என கூறி விட்டு வேலையைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
ஆனால் அவளைக் கவனிப்பதையே ஒரு வேலையாக வைத்துக் கொண்டு இருப்பவன், அங்கு ஒருத்தன் இருக்கிறானே.
அவனோ, “இருடி, இன்னைக்கு எப்படியும் காலையில ஏற்பட்ட டென்ஷன்ல நீ வேலையில தப்பு பண்ணாமலா இருப்பாய்?, அப்போ பாருடி உனக்கு இருக்கு.” என கறுவிக் கொண்டு இருந்தான்.
அதே போல, எப்போதும் வேலையில் கவனமாக இருப்பவள்,
கவனச் சிதறல் காரணமாக ஒரு பிழையை விட்டு விட்டாள்.
அதனைக் கவனிக்காது ஆரண்யனிடம் அனுப்பியும் விட்டாள்.
இதற்காகத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா…. என பைலை பார்த்ததும் பிழையைக் கண்டு பிடித்து விசில் அடித்தவன்,
அடுத்த நொடி சொர்ணாவை வர சொன்னான்.
“அவளும் இப்போ எதுக்கு என்ன வர சொல்றான் இந்த டென்சன் பார்ட்டி?” என எண்ணிக் கொண்டு, அவனின் முன்னால் போய் நிற்க,
அவளைப் பார்த்து கேலியாக சிரித்தவன்,
“நான் சும்மா இருந்தாலும், நீயே வாலண்டரியா வந்து தலையைக் கொடுக்கிறீயே…. அதுக்கு அப்புறமும் நான் சும்மா இருந்தா எப்படி?” என கேட்டவனை அவள் புரியாது பார்க்கவும்,
அவள் பிழை செய்த இடத்தில் வட்டம் போட்டு, அவளின் முன்னே தூக்கிப் போட,
யோசனையுடன், பைலை தூக்கிப் பார்த்தவள்,
“இதில என்ன பிழை?” என முணு முணுத்த படி,
அவன் சுட்டிக் காட்டிய இடத்தைப் பார்த்தாள்.
அப்போது தான், தான் செய்த தவறு விளங்க,
“சாரி சார், ஏதோ ஒரு நினைவில தப்பு பண்ணிட்டன். இனிமேல் இப்படி நடக்காது. இப்போ உடனே கரெக்ட் பண்ணிக் கொண்டு வரேன்.” என கூறியபடி, செல்ல ஆரம்பிக்க,
எட்டி அவள் கைகளில் இருந்த பைலைப் பறித்தவன்,
“அது எப்படி மேடம், அவ்வளவு சீக்கிரம் உங்கள சும்மா விடுறது?, ஒரு வார்த்தை சொல்லுவாங்களே…. இந்த மூவில எல்லாம் வருமே…. ஆஹ்…. நினைவு வந்துடிச்சு. தொக்கா மாட்டி இருக்கீங்க. எப்படி விடுறது மேடம். கொஞ்சம் என் மனசு ஆறும் மட்டும் ஏதும் பண்ணணுமே….” என கூற,
சொர்ணாக்கு, நெஞ்சுக்குள் கிலி பரவியது.
“அவன் என்ன செய்யப் போகிறானோ?” என எண்ணிப் பயந்து போனவள், அவனை அதே கலக்கத்துடன் பார்க்க,
“என்ன பயமா இருக்கா…. சரி உன்னைப் பார்த்தாலும் பாவமா இருக்கு. உனக்காக கொஞ்சம் இறங்கி வரேன். என்னோட காலுல விழுந்து என்ன மன்னிச்சிடுங்கன்னு கெஞ்சுறதோட, இந்த வேலயை விட்டுட்டு ஒரு ஆறு…. சரி வேணாம் நாலு மாசம் மட்டும் என்னோட கம்பெனில எனக்கு அடிமையா வேலை பார். உன்ன போனா போகட்டும்னு மன்னிச்சு விடுறேன்.” என எகத்தாளம் நிறைந்த குரலில் கூறியவனை என்ன செய்தால் தகும் எனும் ரீதியில் பார்த்து வைத்தாள் சொர்ணா.
“தன்னை எவ்வளவு கேவலமாக எண்ணிக் கொண்டு இருக்கிறான்?, கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாத மிருகம். இவன் கிட்ட கெஞ்சுறத விட, தண்டனை அனுபவிக்கிறதே பரவாயில்லை.” என எண்ணிக் கொண்டவள் மறைக்காது எரிச்சலை முகத்தில் காட்டிக் கொண்டு,
“உங்க கிட்ட கெஞ்சுறத விட, எனக்கு தண்டனையே மேல். நான் எதுக்கு உங்க காலுல விழணும்?, நீங்க என்ன பெரியவங்களா…. இல்ல…. கடவுளா?…. சக மனுஷன். அதுவும் மத்தவங்க கஷ்டப் படுறத பார்த்து சந்தோஷப் படுற கேவலமான மனுஷன். உங்க காலுல நான் விழணுமா? நெவெர்….” என அழுத்தமாக கூற,
அவளது பேச்சு அவனுக்கு இன்னும் கோபத்தை கிளப்பி அவனது மூர்க்கத் தனத்தை கூட்டியது.
“ஓஹ்…. உனக்கு அவ்வளவு திமிரா?” என அவன் எகிற,
“இது திமிர் இல்ல சார், தன் மானம். என்னோட தன் மானத்தை சீண்டிப் பார்த்தால்…. நான் அமைதியா இருக்க மாட்டன்.” என பதிலுக்கு சொர்ணா அழுத்த மாக கூற,
அவனும், ஒரு கணம் அவளைக் கூர்ந்து பார்த்தவன்,
“சரி நீ போய் உன் வேலையப் பாரு. உனக்கு இதுக்குரிய தண்டனை என்னன்னு நான் ஈவினிங் சொல்றேன். போங்க மேடம்.” என ஒரு வித சிரிப்புடன் கூறியவன்,
அவள் போனதும், அங்கும் இங்கும் கோபத்தை அடக்க முடியாது நடை பயின்று விட்டு, ஒரு கிளாஸ் தண்ணீரை ஒரு செக்கனில் காலி பண்ணினான்.
அப்போதும் கோபம் அடங்க மறுக்க,
தனது கோர்ட் டை கழட்டி எறிந்தவன், டையையும் தளர்த்தி விட்டு, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவாறு, நெற்றியை நீவிக் கொண்டு,
“என்னையே, தோற்கடிக்கப் பார்க்கிறாய் நீ?, அது இந்த ஆரண்யன் கிட்ட நடக்கவே நடக்காது. உனக்கு இந்த முறை நான் கொடுக்கிற தண்டனைல நீ இனி என்ன கண்டாலே அலறணும்.”
என கறுவிக் கொண்டவன்,
அந்த நாள் முடிய,
அனைவரும் கிளம்பும் நேரம் சொர்ணாவை தனது கேபினிற்கு வர சொல்லி அழைத்தான்.
“அதானே இவ்வளவு நேரம் சைலன்ட்டா இருக்கானேன்னு பார்த்தன்.” என எண்ணியபடி,
அவனைக் காண சென்றவளை,
“உட்காருங்க மேடம்.” என கூறியவன்,
ஒரு பைலைத் தூக்கி அவளுக்கு முன்னால் போட்டு,
“ஒழுங்கா இதில இருக்கிற வேர்ட்ஸ் எல்லாம் கரெக்ட் பண்ணிக் கொடுத்திட்டு போங்க.” என கூறினான்.
அவளும், “இது சின்ன வேலை தானே இதில என்ன இருக்கு?” என எண்ணி பைலைத் திறந்தவள்,
உள்ளுக்குள் இருந்த சொற்களைக் கண்டு திகைத்துப் போனாள்.
ஒவ்வொரு சொற்களுக்குள் சொற்கள் புகுத்தப்பட்டு, சிறு சிறு எழுத்துக்களில், கண்ணுக்கு புலனே ஆகாத அளவுக்கு இருந்தது சொற்களின் அணி வகுப்பு.
அதனை எப்படி கரெக்ட் பண்ணுவது எனப் புரியாது முழித்தவள் முகத்தில் திகைப்பை மறைக்காது காட்டியபடி, ஆரண்யணைப் பார்க்க,
அவனோ, “என்ன மேடம் தலை சுத்துது போல. இத செய்து முடிச்சிட்டு நீங்க தாராளமா போகலாம். உங்க தகுதிக்கு இதெல்லாம் சின்ன வேலை தான். பார்த்து செய்ங்க.” என கேலியாக கூறியவன், அவளை நோக்கி கேலியாக புருவத்தை தூக்கியும் இறக்கினான்.
அவனது செய்கைகளில் கோபம் வந்தாலும்,
“இதெல்லாம் அநியாயம் சார்.” என சற்று அழுத்தமாக கூறியவளின் அருகே நெருங்கி, அவளது கண்களை உற்றுப் பார்த்தவன்,
“எனக்கு இதெல்லாம் ரொம்ப ரொம்ப நியாயமா தான் தெரியுது. ஒழுங்கா செய்து முடி.” என கூறி விட்டு,
தன் இருக்கையில் அமர்ந்து காலை ஆட்டிக் கொண்டு இருந்தான்.
சொர்ணாவோ, அவனை வெறித்துப் பார்த்து விட்டு,
அந்த பைலில் உள்ள சொற்களை திருத்த ஆரம்பித்தாள்.
சுமார், ஒரு மணி நேரம் கடந்து இருக்கும். அதற்குள் உண்மையில் களைத்துப் போனாள் சொர்ணா.
கண் எல்லாம் வலித்து, தலை வேறு விண் விண்ணென்று குத்த ஆரம்பித்தது.
தலையை பிடித்துக்கொண்டே, அதற்கு மேல் முடியாது அவள் ஆரண்யனை நிமிர்ந்து பார்க்க,
அவனோ, அவளையே பார்த்துக் கொண்டு, “என்ன மேடம், உலகம் உங்கள சுத்துதா?, இல்ல நீங்க உலகத்த சுத்துறீங்களா?” என கேலியாக கேட்க,
அவனை முறைத்துப் பார்த்தாள் சொர்ணா.
அவளின் முறைப்புக்கு பதி லாக தானும் முறைத்துப் பார்த்தவன்,
“என்ன திமிராடி?, முறைப்பு எல்லாம் பலமா இருக்கு?” என அழுத்தமாக கேட்டான்.
அவனது “டி” போட்ட அழைப்பில், உள்ளுக்குள் கோபம் முகிழ்த்தாலும், அமைதியாக மீண்டும் பைலை பார்த்தவளின் போன் அடித்து அடுத்த தலை வலியைக் கொடுத்தது.
தனது தந்தையின் எண்ணை போனில் கண்டவளுக்கு அப்போது தான் அவருக்கு தான் வர லேட் ஆகும் என்ன அழைத்துக் கூறாதது நினைவுக்கு வந்தது.
“அச்சோ என்ன காரியம் செய்து வச்சிருக்கேன்?, எப்படி மறந்தன்?” என தலையில் அடித்து கொண்டவள்,
அவசரமாக, “சார், அப்பா கிட்ட பேசிட்டு வரேன்.” என கூறிவிட்டு அவனது அறையை விட்டு வெளியில் ஓடிச் சென்றாள்.
அவளது பலவீனம் அவளின் அப்பா என அப்போது ஆரண்யனுக்கு நன்றாகவே புரிந்து விட்டது.
அவள் போனதும் அதுவரையும் அவள் கஷ்டப்பட்டு செய்து வைத்திருந்த பேப்பரைத் தூக்கி ஒருவித கேள்வியுடன் பார்த்தவன்,
“நோட் பேட் ரொம்ப சின்சியரா தான் வேலை செய்து இருக்கா.” என எண்ணிக் கொண்டு சாவகாசமாக அதனை கிழித்துக் குப்பைக் கூடைக்குள் போட்டான்.
சொர்ணாவோ, தந்தையிடம் குறைந்தது இன்னும் ஒரு மணித்தியாலத்திற்குள் வீட்டுக்கு வந்து விடுவதாகவும் வேலை சற்று அதிகம் எனவும் கூறி விட்டு வைத்தவள் மீண்டும் வந்து,
தனது இருக்கையில் அமர்ந்து அதுவரையும் எழுதி வைத்திருந்த பேப்பரைத் தேட அது காணாமல் போயிருந்தது.
“இங்க தானே வைச்சிட்டுப் போனன்.” என யோசித்தபடி அங்குமிங்கும் தேடியவளை அமைதியாக அமர்ந்து பார்த்துக்கொண்டு காபியை அருந்திக் கொண்டு இருந்தான் ஆரண்யன்.
அவளின் தவிப்பை கண்டு அவனது இதழ்களுக்குள் புன்னகை பூத்தது.
அதனைக் காட்டாது மறைத்துக் கொண்டவன் “என்ன, இப்போ எதுக்கு அங்கயும் இங்கயும் தலைய ஆட்டிக் கொண்டு இருக்கிறாய்?, சீக்கிரம் சொன்னத செய்து முடி.” என அழுத்தமாக கூறவும்,
“இல்ல நான் இங்க தான் கரெக்ட் பண்ணின பேப்பர வச்சுட்டு போன் பேச போனன். அந்தப் பேப்பரைக் காணல. அதுக்குள்ள எங்க போய் இருக்கும்?” என்றபடி பார்த்தவள்,
அப்போது தான் அந்த பேப்பரின் கிழிந்த சிறு துகள் ஒன்று பறந்து விழுந்து இருப்பது போல தோன்றவே,
அந்தப் பேப்பரை தூக்கிப் பார்த்தவள் கேள்வியாக ஆரண்யனைப் பார்க்க,
அவனும், “என்ன பேப்பர் துண்டு இது?, எங்க இருந்து இப்போ இங்க பறந்து இருக்கு?” என அவளையே திருப்பி கேள்வியாக பார்த்து வைத்தான்.
அதிலே குழம்பிப் போனவள், சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அங்கிருந்த குப்பைக் கூடைக்குள் எட்டி பார்த்தாள்.
அப்போது தான், அவள் இதுவரையும் கஷ்டப்பட்டு செய்து வைத்திருந்தவை யாவும் குப்பையாக அங்கே கிழித்து போடப்பட்டிருப்பதை கண்டு கொண்டாள் பெண்ணவள்.
அவளுக்கு நன்றாகவே தெரியும் இந்த வேலையை செய்தது. தனக்கு முன்னால் இருப்பவன் தானென்று.
அவனின் மீது கோபம் கட்டுக்கடங்காது பெருக,
“நீங்க என்னதான் நினைச்சு கொண்டு இருக்கீங்க?, உங்க இஷ்டத்துக்கு என்ன ஆட்டி வைக்கலாம்னா?, நான் கஷ்டப்பட்டு செஞ்சத இப்போ எதுக்கு இப்படி பண்ணி வச்சிருக்கீங்க?, என டஸ்பினை சுட்டிக் காட்டிக் கேட்டவள்,
“கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாத மனுஷன்.”
அவன், என்னடி குரல் உயருது?, என எகிறிக் கொண்டு வரவும், கண்கள் இருட்டி, தலை சுத்தி மயங்கி விழுந்தாள்.
இனி சொர்ணாவின் நிலை என்ன?
ஆரண்யன் ஆடப் போகும் ஆட்டம் என்ன?
அடுத்த பதிவில் பார்க்கலாம்.
கண்டிப்பா உங்க ஆதரவை கொடுங்க மக்காஸ்.
திரும்ப வந்தாச்சு மக்காஸ்…வேலைகள் கொஞ்சம் அதிகமா இருந்துது.. அதனால தான் இந்தப் பக்கம் வர முடியல…இனி முடிந்த அளவு வேகமாக எபிகள் வரும்.
லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் ப்ளீஸ்….
இனி அடுத்தடுத்த எபிகள் இன்னும் அதிரடியா வரும் மக்காஸ்….