🔒 This is a Paid Content. Subscribe to Read
🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள்👉
View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க✅ If you already have a membership, sign in using the link below:
✅ உங்கள் கணக்கில் ஏற்கனவே உறுப்பினர் இருந்தால், கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி உள்நுழைக:👉
Register/Login / பதிவு/உள்நுழை
Tag:
#besttamilnovels #villagelovestory
ரஞ்சியை பார்த்ததும் சிலர் அதிர்ந்து நிற்க, ஒரு சிலரோ “இத்தனை நாள் இருக்காங்களா, இல்லையான்னு பார்க்க வராமல், இப்போ அவங்க உயிர் போனதுக்கு அப்புறம் வந்து எதுக்கு” என அவள் காது படவே பேசினர்.
ஊரார் பேசியது எதையும் காதில் வாங்காமல் தன் மூன்று வயது குழந்தையை தூக்கிகொண்டு நிறைமாத கர்ப்பிணியாய் மெல்ல நடந்தாள் ரஞ்சி.
வீட்டின் உள்ளே வந்தவள் கண்களில் விழந்தது, ராசாத்தியின் மடியில் படுத்திருந்து அழும் தன் தங்கையின் கலங்கிய முகம்தான்.
நெஞ்சம் கணத்தது. “செம்பா” என அழைக்க தாயின் குரல் கேட்டு ஓடிவரும் குழந்தை போல எழுந்தவள் வாசலில் நின்றிருந்த தன் அக்காவை பார்த்ததும் ஓடி வந்து அணைத்துக்கொண்டு கதறி அழ, அவளை சமாதானம் செய்ய முடியாமல் தவித்தாள் ரஞ்சி. அவளுடைய சூழ்நிலையும் சரியில்லை. கிட்டதட்ட நிறைமாத கர்ப்பிணி அவள். ராசாத்தி, கோகி, செம்பா மூவரும் அவளை கட்டிக்கொண்டு அழ அங்கிருந்த பெண்மணி ஒருவர் “மாசமா இருக்குற பொண்ணை அழவிடாதிங்க, வயித்துல இருக்குற புள்ளைக்கு நல்லது இல்லம்மா” என்றதும் ராசாத்தி அவள் கண்ணிரை துடைத்தபடி உள்ளே அழைத்து அவளை அமர வைத்தார். தன்னுடன் இரண்டு நாட்களுக்கு முன் நன்றாக பேசிய தந்தை, தாய் இன்று உயிரோடு இல்லை. அவர்கள் முகத்தை பார்த்தவளுக்கு அவளை நினைத்து அவமானமாக இருந்தது. ‘சிலநாட்களுக்கு முன்பே அவர்களை தேடி வந்திருக்கலாமோ’ என மனதால் வெம்பினாள் ரஞ்சி.
வெளியே சிவம் உறவினர் ஒருவர் பாலாவிடம் “தம்பி அவங்களுக்கு கொள்ளி வைக்கனும். வீட்டுல அவங்க பொண்ணு கொள்ளி வச்சிடும். ஆனால் சுடுகாட்டுல ஆம்பளைங்கதான் கொள்ளி வைக்கனும். அவங்க உறவுன்னு கொள்ளி வைக்கிற உரிமை உங்களுக்குதான் இருக்கு. நீங்கதான் தம்பி கொள்ளி வைக்கனும்” என்றார்.
“இல்லை அது என்னால் முடியாது என் சூழ்நிலை அப்படி” என்றான் பாலா.
“இல்லை தம்பி உங்களை தவிர உரிமைபட்டவங்க யாரும் இங்கே இல்லையே. சிவம் குடும்பத்துலயும் ஏழுமலை இருக்கான். அவன் மனைவி கர்ப்பமா இருக்கு. அதனால் அவனாலயும் வைக்க முடியாது. அங்கே வேற யாரும் இல்லை”
“யாரு யாருக்கு கொள்ளி வைக்கிறது. எங்களுக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு உனக்கு தெரியாதா. நாங்க என்ன பேச்சுவார்த்தையில் கொஞ்சி கொலாவிட்டு இருந்தோமா? என கற்பகம் புடவையை தூக்கி சொருகியபடி வந்து நிற்க…
“இல்லம்மா… நான் அப்படி சொல்ல வரலை…”
“பின்ன என்ன சொல்ல வந்த. அதான் அந்த ஓடுகாலி வந்திருக்காளே அவ புருஷனை எங்கே, அவனை வைக்க சொல்லு”
அம்மா அந்த பொண்ணும் மாசமா இருக்கு, அவங்க புருஷன் எப்படி கொள்ளி வைக்கமுடியும். அதான் உங்க பையன்கிட்ட கேட்டோம்.”
“அப்போ அனாதை புணம்னு எவனாவது கொள்ளி வைங்கடா, என் பையனை வைக்க விடமுடியாது” என்றார் கற்பகம்…
“நான் கொள்ளி வைக்கிறேன்” என வந்து நின்றான் சமர்.
“டாக்டர் தம்பி நீங்களா?, நீங்க அவங்க உறவு இல்லையே தம்பி. நீங்க என்ன முறையில் கொள்ளி வைக்கமுடியும். உறவு இருக்குறவங்க தான் இங்கே கொள்ளி வைக்க விடுவாங்க. இல்லன்னா, ஊர்க்காரங்க பிரச்சனை பண்ணுவாங்க தம்பி”
“அவங்க இரண்டாவது பொண்ணை நான்தான் கல்யாணம் பண்ண போறேன். அந்த உரிமையில் நான் வைக்கிறேன்”
“என்ன சமர் தம்பி. புத்தி குழப்பி போச்சா. அந்த பிச்சைக்கார குடும்பத்துல பொண்ணு எடுக்க போறேன்னு சொல்றிங்க, உங்க அம்மா, அப்பா முதல்ல சம்மதிப்பாங்களா?” என்றார் கற்பகம்…
அம்மா, அப்பா என சத்தமாக சமர் குரல் கொடுக்க, அவன் அருகில் நேத்ரனும் வைஷ்ணவியும் வந்தனர்.
“இவங்கதான் அம்மா அப்பாவா, இவங்க ரஞ்சிகூடதானே வந்தாங்க” என யோசனையாக பார்த்தார் கற்பகம்.
வெளியே பேச்சு சத்தம் அதிகமாக கேட்க, செம்பா, ரஞ்சி, ராசாத்தி,கோகி நால்வரும் எதுவும் பிரச்சனை ஆகிவிடகூடாது என வெளியே வந்தனர்.
ஊர் மக்களின் முன்னிலையில் “இவங்கதான் என் அம்மா, அப்பா இவங்களுக்கு செம்பாவை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுல முழு சம்மதம். அவங்க ஏற்கனவே செம்பாவை பொண்ணு கேட்க வரதாதான் இருந்தாங்க. அதுக்குள்ள இப்படி நடக்குன்னு எதிர்பாக்கலை” என்றான்.
“இல்லை தம்பி. நீங்க அந்த பொண்ணை கல்யாணம் பண்ணபோறவர்தானே தவிர பண்ணலையே தம்பி” என அந்த நபர் சொன்னதும்…
தன் அம்மா அப்பாவிடம் சில விஷயத்தை பேசியவன்
அங்கே நின்றிருந்த செம்பாவை அழைத்தான்.
அவன் முன் வந்தாள். அழுது அழுது முகம் வீங்கி தலைமூடியெல்லாம் கலைந்து பார்க்கவே பரிதாபமாக இருந்தது பெண்ணவளின் முகம்.
“ உன் வாழ்க்கையில் என்னை தவிர வேற யாருக்காவது இடம் இருக்கா?”
“இல்லை” என தலையசைத்தாள்.
“என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா பட்டாசு? நான் உன்னை நல்லா பார்த்துக்குவேன்னு”
“இருக்கு” என்றாள்…
இந்த சூழ்நிலையில் நான் கேட்கிறது சரியில்லைதான். ஆனாலும் என் பட்டாசுக்காதான் இதையும் நான் செய்ய போறேன் என்றவன் “என்னை கல்யாணம் பண்ண உனக்கு சம்மதமா?” என கேட்க….
அவன் எதற்காக கேட்கிறான் என்பதை அறிந்தவள் “சம்மதம்” என்றாள்
“அங்கே என்ன நடக்கிறது” என ஓரமாக பார்த்து நின்ற கோகியை அழைத்தான் சமர்.
அவனிடம் வந்து நிற்க, அவளிடம் சில விஷயங்களை கூற அதிர்ந்து அவன் முகத்தை பார்க்க “போ போய் எடுத்துட்டு வா” என்றதும் வீட்டிற்குள் சென்று கையில் மஞ்சள் கயிறுடன் வெளியே வந்தாள் கோகி.
அவள் கையில் இருந்த மஞ்சள் கயிறை வாங்கியவன், தன் அம்மா, அப்பாவிடம் கொடுத்து வாங்கிகொண்டு, அவர்களை பின்னால் வாங்க என்றபடி, செம்பாவை அழைத்துகொண்டு வீட்டிற்குள் சென்றான்.
நேற்று வரை உயிருடன் அந்த வீட்டில் வலம் வந்த இரு ஜீவன்கள் இன்று உயிரில்லாத ஜடமாய் நடுவாசலில் படுக்க வைக்கபட்டிருக்க அவர்கள் முன் செம்பாவுடன் நின்றான்.
செம்பா கேள்வியாய் அவனை பார்க்க, “உங்க அப்பா, அம்மா மனசுல உன்னோட கல்யாணத்தை நல்லபடியா, அவங்க முன்னாடி நின்று நடத்தனும்னு நினைச்சிருப்பாங்கல்ல, அதுதான் முடியாமல் போய்டுச்சி, அவங்க உடல் முன்னாடியாவது நடக்கட்டும். எப்படியும் அவங்களோட ஆத்மா உங்களை சுற்றிதான் இருக்கும்” என்றவன் தன் பெற்றோரை பார்க்க அவர்களும் “கட்டு” என்றதும்… செம்பாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான் சமர்.
சமர் தாலி கட்டவும் கற்பகம் பாலாவிடம் “இனிமே நீ இங்கே இருந்து என்ன பண்ண போற வா” என்றார்.
“நான் வரலை எல்லாம் முடியட்டும் நீங்க போங்கம்மா” என்றான் பாலா…
“அதான் அவங்க உரிமையுள்ள மருமகன் இருக்கானே, அவன் பார்த்துப்பான்” என்றார் சமரை பார்த்து…
“நானும் உரிமையுள்ள மருமகன்தான்.”
“நீ ஒன்னும் அவங்க வீட்ல பொண்ணு கட்டலையே”
“யார் சொன்னால் நான் இந்த வீட்டோட மூத்த மருமகன். ரஞ்சி என்னோட மனைவி” என்றதும் கற்பகம் அதிர்ந்து சிலையாய் நிற்க… நாராயணண், சோலையம்மாள் இருவரும் “என்ன பாலா சொல்ற” என்றனர்.
செம்பா, கோகி, ராசாத்தி மூவரும் ரஞ்சியை பார்க்க கலங்கிய விழிகளுடன் “ஆமா” என்றாள்.
எனக்கும் ரஞ்சிக்கும் நான்கு வருஷத்துக்கு முன்னாடியே கல்யாணம் முடிந்துவிட்டது. இந்த கல்யாணம் நடக்க யார் காரணம் தெரியுமா? நீங்கதான் என்றான் கற்பகத்தை நோக்கி.
“நானா..? நான் என்னடா பண்ணேன்”.
“நீங்க எப்பவும் அத்தையையும் அவங்க பொண்ணுங்களையும் திட்டிட்டு, உங்க வாயில் என்ன வார்த்தை வருதோ அதை பேசிட்டு, என்கிட்ட ஒரு விஷயம் சொல்லுவிங்க நியாபகம் இருக்கா, யாரை வேணாலும் கட்டிக்கோ ஆனால் உங்க அத்தை மகளை மட்டும் கட்டனும்னு நினைக்காதேன்னு அந்த வார்த்தைதான் என்னை ரஞ்சியை பார்க்க வச்சது, நேசிக்க வச்சது. உங்களுக்கு பயந்தே என் காதலை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. அடுத்து அத்தை. அத்தையும் அவங்க ஓடிப்போய் கல்யாணம் பண்ணி நிறைய பிரச்சனையை சந்திச்சாங்க. அதனால் கண்டிப்பா எங்க காதலுக்கு சம்மதிக்க மாட்டாங்கன்னு அவள் குடும்பத்துக்காக ரொம்ப யோசித்தாள். முதல்ல என் காதலை ஏற்றுக்கவே இல்லை. கொஞ்சம் கொஞ்சமாய் அவள் மனசை மாற்றி என் காதலையும் ஏற்றுக்க வைத்தேன். நான் படிச்சி முடிக்கவும் ரஞ்சிக்கும் ஏழுமலை அண்ணாவுக்கும் நிச்சயம் நடந்து முடிந்தது. ரஞ்சி பயந்து எனக்கு போன் பண்ணாள். எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாமல் ஏழுமலை அண்ணாகிட்டவே பேசினேன். அவர்தான் உங்க ரெண்டு பேரோட காதலையும் வீட்ல ஏற்றுக்கமாட்டாங்க. வேற வழி இல்லை. நீங்க வீட்டை விட்டு வெளியே போய் கல்யாணம் பண்ணிக்கோங்க. வீட்டு சம்மதத்தோட கல்யாணம் நடக்கனும்னா, இந்த ஜென்மத்துல உங்களுக்கு கல்யாணம் நடக்காதுன்னு சொன்னாங்க. அதான் ரஞ்சியை கூப்பிட்டு போய் கல்யாணம் முடித்தேன். உங்களுக்கு தெரிந்தால் கண்டிப்பா எங்களை வாழவிடமாட்டிங்க, ரஞ்சியை என்கிட்ட இருந்து பிரிச்சிடுவிங்கன்னுதான் அவள் என்னை கல்யாணம் பண்ணிருக்காள்னு தெரிய கூடாதுன்னு மறைத்தேன். இது என் நண்பர்கள் யாருக்குமே தெரியாது சமரை தவிர. அவன் பாரின்ல படிச்சிட்டு இருந்தேன்.
அவனுக்கும் எனக்கு கல்யாணம் முடிந்து என் பொண்ணு பிறந்தப்போதான் சொன்னேன். எனக்கு கல்யாணம் பண்ணி வைத்து, வீடு எல்லாம் ரெடி பண்ணது நேத்ரன் அப்பாவும் வைஷூ அம்மாவும்தான். நீங்க என்னை பார்க்க வரும்போது சமரோட இன்னொரு வீட்ல தங்கிப்பேன். செம்பாவை சமருக்கு பொண்ணு கேட்கத்தான் ரஞ்சியை இங்கே கூப்பிட்டு வரதாக இருந்தது. ஆனால் அவளை இந்த சூழ்நிலையில் இங்கே கூப்பிட்டு வருவேன்னு நினைக்கலை” என்றான் பாலா.
நாராயணண் அதற்குள் தன் பேத்தியை தூக்கி வைத்திருந்தார். அந்த குழந்தையை பார்த்ததும் கற்பகம் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடுமல்லவா… அப்படியே கற்பகத்தின் முக சாயலில் இருந்தாள். அவளை பார்த்ததும் அவருக்கு கர்வமாக இருந்தது.
கற்பகத்தை பார்த்து “பாத்தி” என்றதும் சப்தமும் அடங்கியது அவருக்கு. பாலா எல்லாரின் முகத்தையும் போட்டாவில் அடிக்கடி காட்டியிருப்பதால் கற்பகத்தை பார்த்ததும் அழைத்து விட்டாள். மீண்டும் “பாத்தி தூக்கு, தூக்கு” என சொல்லவும், அங்கே நிற்காமல் அந்த இடத்தை விட்டு கண்ணிரோடு வெளியேறினார் கற்பகம்.
அவர் இத்தனை நாட்கள் சந்திராவை பேசியதற்கு அவளின் மகளே அந்த வீட்டின் மருமகளாய் வந்துவிட்டாள். இதைவிட பெரிய தண்டனை அவருக்கு இருக்காது.
அதன்பின் நடக்கவேண்டிய எல்லா விஷயங்களும் உடனுக்குடன் நடந்தன. இருவரின் உடல் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று அடக்கம் செய்யபட்டது. சமர்தான் கொள்ளி வைத்தான்.
நேத்ரன், வைஷூ இருவரும் செம்பாவுடன் அவள் வீட்டில்தான் இருந்தனர்.
அந்த நாள் முடிந்து அடுத்த நாள் ஆரம்பமாகியது.
செம்பா அழுதபடியே படுத்து இருக்க, ரஞ்சி அவள் தலையை தடவி கொடுக்க, அவள் செய்வதை பார்த்து ரஞ்சியின் மகள் ஹரிணியும் தடவிவிட, அவளை தன்னோடு அணைத்து கொள்ள அவள் கண்ணிரையும் துடைத்துவிட்டது அந்த மழலை.
“டேய்!, பாலா, பாலா வெளியே வா!” என சத்தம் கேட்க, வெளியே வந்தான் பாலா. கற்பகம் நின்றிருந்தார்.
“என்னம்மா.?”
“எவ்வளவு நேரம் இங்கேயே இருக்க போறிங்க?”
“வறேன்ம்மா, நீங்க போங்க”
“உன்னை கேட்கலை என் பேத்தியை எங்கே என்க…”
“பேத்தியா? அவளை ஏன் தேடுறிங்க” என பாலா முழிக்க…
“என் பேத்திதானே அவ”
“ஆமா…”
“ அப்புறம் நான் தேடாமல் வேற யார் தேடுவாள். நீ வா, வராதே, அது எனக்கு கவலை இல்லை. என் பேத்தியை எங்கே?”
“அவள் உள்ளே அவங்க அம்மாகிட்ட இருக்காள்.”
“போ போய் என் பேத்தியை தூக்கிட்டு வா” என்றதும் பாலா “இருங்க வரேன்” என உள்ளே சென்று குழந்தையை தூக்க “ஏங்க அவ இங்கேயே இருக்கட்டுமே” என பயத்துடன் ரஞ்சி சொல்ல..
“ அம்மா கேக்குறாங்க ரஞ்சி”.
“உங்க அம்மாவா, அவங்க என் குழந்தையை எதுவும் பண்ணிட்டாங்கன்னா”
“அப்படி எதுவும் பண்ண மாட்டாங்க ரஞ்சி கொடு” என்றார் வைஷ்ணவி.
“அம்மா உங்களுக்கு அவங்களை பற்றி தெரியும்ல. எங்களை அவங்களுக்கு சுத்தமா பிடிக்காது.”
“உங்களை பிடிக்காது ரஞ்சி. உன் பொண்ணை இல்லை. இப்போ அவங்க பேத்தி, கொண்டு போ பாலா, என்ன பண்றாங்கன்னு பார்க்கலாம்” என்றதும் பாலா ஹரிணியை தூக்கிகொண்டு வெளியே வந்தான்.
கற்பகத்துக்கு தன் பேத்தியை பார்த்ததும் முகம் பிரகாசித்தது. தன் முகசாயலில் இருப்பதாலே அவளை அதிகமாக பிடித்துவிட்டது. அவளை கைகளில் வாங்க குழந்தை அவருடன் நன்றாக சேர்ந்து கொண்டது.
“உன் பெயர் என்ன தங்கம்.”
“தங்கமில்ல பாத்தி, ஹதிணி” என்றது தன் மழலை குரலில்
“என்ன சொல்றாள்” என பாலாவை பார்த்து கேட்க….
“ஹரிணிம்மா”
“ஹரிணியா” என்றவருக்கு ஒருநாள் பாலாவிடம் உனக்கு மகள் பிறந்தாள் இந்த பெயர்தான் வைக்கனும் என சொன்னது நியாபகத்தில் வர பாலாவை பார்த்தார். “நீங்க வைக்க சொன்ன பெயர்தான்ம்மா” என்றான்.
“சாணியை கலக்கி முகத்திலேயே ஊத்திட்டு, இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. நான் என் பேத்தியை கொண்டு போறேன். அவள் அழுதால் போன் பண்றேன்” என தூக்கி கொண்டு சென்றார்.
நாராயணனிடம் போன் செய்து விஷயத்தை சொல்ல, அவ அங்கே வருவான்னு தெரியும் பாலா. நேற்று அங்கே இருந்து வந்து நேரத்துல இருந்து பிள்ளையை பற்றிதான் பேசினாள். ஒருவார்த்தை கூட வேற யாரையும் பேசலை. என் பொண்டாட்டி நல்லவதான். கொஞ்சம் கோபக்காரி. என் தங்கச்சி பண்ணுண தவறால் அவளை முழுவதும் வெறுத்து அவளை கடைசி வரைக்கும் ஏற்றுக்காமலே போய்ட்டாள். உன் மனைவியை அவ மனதால் ஏற்றுக்கமாட்டாள். அதையே உன் பொண்ணு விஷயத்துல எதிர் பார்க்காதே. உன் கல்யாணம் அவளோட கனவு. உன் குழந்தை அவளுக்கு வரம். அந்த வரத்தை அவளுக்கு நீ கொடுத்துட்ட, இனிமே யாரை பற்றியும் கவலைபடமாட்டாள். அதே மாதிரி நீயும் எங்க பேத்தியை பற்றி கவலைபடாதே, நாங்க எங்க வாரிசை நல்லாவே பார்த்துப்போம் என அழைப்பை துண்டித்தார் நாராயணண்.
“என்ன பாலா. உங்க அப்பா என்ன சொல்றார்” என நேத்ரன் கேட்க,
பாலா அவர் பேசியதை எல்லாம் கூறினான்.
“நான் சொன்னேன்ல உன் பொண்ணை பற்றி கவலைபடாதே. இங்கே நடக்க வேண்டியதை பாருங்க. அப்புறம் நாங்களும் கிளம்புறோம் பாலா. எல்லாரையும் பார்த்துக்கோங்க”, என்றவர்கள் பாலா, சமரை தவிர அவர்கள் நண்பர்களை அழைத்து கொண்டு கிளம்ப, ஆத்வியின் பார்வை முழுவதும் குகனின் மீது இருந்தது. அவனோ அவளை கண்டும் காணாதது போல முகத்தை வேறு பக்கம் திருப்பினான். அந்த ஊரை விட்டு கிளம்ப ஆத்வி மனம் தவியாய் தவித்தது.
செம்பாவும், கோகியும் வீட்டிற்குள் வர சந்திரா, ராசாத்தி மட்டும் வெளியே அமர்ந்து பேசியபடி இருந்தனர். நல்ல சிவத்தை காணவில்லை.
கோகியை பார்த்ததும் “ஏய் என்னடி இது தலையில் கட்டு” என்றார்.
“அதுவா அத்தை தலையில் கட்டுபோட்டா, தங்கநாணயம் பரிசா தர்றதா சொன்னாங்க, அதான் போட்டுருக்கேன்.”
“தங்கத்தை எங்கடி?” என ராசாத்தி கேட்க,
“நீயெல்லாம் தாயா? ஒரு பேச்சிற்கு சொன்னால் உண்மையா கேக்குற?”
“நீதான்டி சொன்ன, கேட்குற கேள்விக்கு ஒழுங்கா பதிலை சொல்லு” என்றார் ராசாத்தி.
“வேலை முடிந்து வெளியே வரும்போது கால் இடறி கீழே விழுந்துட்டேன். தலையில் அடிபட்டுடுச்சி அத்தை” என்றாள் கோகி.
“பார்த்து வரக்கூடாதா” என சந்திரா சொல்ல,
“தரையை பார்த்து நடக்கனும் மேலே பார்த்து நடந்தால் இப்படிதான் ஆகும்.”
“ம்மா…” என ராசாத்தியை முறைக்க…
“ராசாத்தி சும்மா இரு, பிள்ளைகிட்ட சண்டை இழுக்குறதே உனக்கு வேலையா போய்டுச்சி” என்றதும் இருவரும் அமைதியாகினர்.
“ம்மா அப்பா எங்கே?” என செம்பா கேட்க…
“உங்க அப்பா நல்லா மூக்கு முட்ட குடிச்சிட்டு வந்து படுத்துட்டாருடி”
“சாப்பிட்டாறாம்மா”
“கொடுத்தேன் கொஞ்சம் சாப்பிட்டார். தூக்கம் வருதுன்னு சொல்லி படுத்திட்டார். நீ போய் குளிச்சிட்டு துணிய மாத்திட்டு வாங்க, சாப்பிடுங்க நேரம் ஆயிடுச்சு. வர வர ரொம்ப நேரம் தாண்டி வர்றீங்க, வேற ஹாஸ்பிடல்ல வேலை இருந்தால் பார்க்க கூடாதா?”.
“அம்மா எங்க போனாலும் இப்படித்தான் இருக்கும். ஒரு நாள் முன்ன பின்ன ஆகலாம். எல்லா நாளும் நாங்க லேட்டாவா வர்றோம். அது மட்டும் இல்லாமல், நம்ம ஊரு பக்கத்துல கிளினிக்தான் இருக்கு. வேற ஹாஸ்பிடல் இல்லமா.”
“என்னமோ சொல்றீங்க, படிச்ச புள்ளைங்க பார்த்து நடந்துக்கோங்க” என்றார் ராசாத்தி.”
இரவு மணி 11 தாண்டியது. மெதுவாக எழுந்து அமர்ந்தார் நல்ல சிவம். சந்திரா தூங்கிவிட்டார். செம்பா தூங்காமல் சமருடன் மெஸேஜ்ஜில் பேசிக் கொண்டிருந்தாள்.
நல்ல சிவம் எழுந்து அமர்வதை பார்த்ததும் சமரிடம் பேசிவிட்டு தன் தந்தையிடம் வந்து அமர்ந்தாள்.
“அப்பா சாப்பாடு கொண்டு தரவா” என கேட்ட தன் மகளை வாஞ்சையுடன் பார்த்தவர் “எனக்கு ஒன்னும் வேண்டாம் ஆத்தா எனக்கு பசிக்கலை”
“என்னாச்சுப்பா? ஏன் ஒரு மாதிரி பேசுறீங்க?”
“தெரியலை ஆத்தா. மனசு ஒரு மாதிரியா இருக்கு,” அப்போது நல்லசிவம் லேசாக நெஞ்சில் கை வைத்து முக சுழிப்பை காட்ட,
“என்னப்பா ஏதாவது பண்ணுதா” என கேட்க…
“ எனக்கு என்னடா பண்ணப்போகுது ஒன்னும் பண்ணலை, இப்படி உட்காரு” என தன் மகளை பார்த்தபடி இருந்தார்.
“என்னப்பா அப்படி பாக்குறீங்க?”
“இனிமே என்னால பார்க்க முடியுமா முடியாதோ?” என சிவம் சொல்ல…
“ஏன்ப்பா இப்படி எல்லாம் பேசுறீங்க, உங்களுக்கு ஏதாவது பண்ணுதா ஹாஸ்பிடல் போகலாம், வாங்கப்பா” என பதறிய மகளை தோளோடு அணைத்தவர். “எனக்கு ஒன்னும் பண்ணாது. நீ பக்கத்துல இரு போதும்” என்றார்.
தந்தையும் மகளும் பேசிக் கொண்டிருந்த சத்தம் கேட்டு கண்களை திறந்தார் சந்திரா.
“என்னாச்சு, நடு சாமத்துல உட்க்கார்ந்து, அப்பனும் மகளும் என்ன ரகசியம் பேசிட்டு இருக்கிங்க” என்றார்.
“அம்மா, அப்பா பேசுறது எனக்கு பயமா இருக்கு, என்னனு கேளுங்க”
“என்னடி சொல்ற” என எழுந்து நல்லசிவத்திடம் வந்தவர் “ஏங்க என்னாச்சி?” என்றார்.
“எனக்கு ஒன்னும் இல்ல சந்திராம்மா, நீ பயப்படாதே”
நல்லசிவத்திற்கு லேசாக இதயத்தின் வலி அதிகமாகியது. பாராங்கல்லை வைத்து அழுத்துவது போல இருக்க, ஆனால் அதை மறைத்தபடியே தன் மகளிடம் பேசிக் கொண்டிருந்தார்.
“ஆத்தா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். இதை உனக்கு சர்ப்ரைஸா வச்சுக்கணும்னு நினைச்சேன். ஆனால் முடியாது போல இப்பவே சொல்லிடவா?” என ஒரு மாதிரியாக பேச…
“அப்பா முதல்ல ஹாஸ்பிடல் போலாம். அதுக்கப்புறம், நீ என்ன வேணாலும் பேசு” என செம்பா அழைக்க பிடிவாதமாக அமர்ந்தவர். “நீ என் பக்கத்துல உட்க்கார். உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என சொன்னதையே சொன்னார்.
“சரி சொல்லுப்பா, என்ன?” என கேட்க…
“நான் சொன்னா நீ கோபப்பட மாட்டியா ஆத்தா”
“நான் ஏன்ப்பா? உன்மேல கோபப்பட போறேன் என் அப்பா பற்றி எனக்கு தெரியாதா!”
“உனக்கு ரஞ்சியை பிடிக்குமா?”
“என்னப்பா இப்படி கேக்குறீங்க. எனக்கு அம்மாவா இருந்து பாதினால் வளர்த்தவள். அவளை எனக்கு எப்படி பிடிக்காமல் போகும்.”
“இல்லை ரஞ்சி. நம்மளை எல்லாம் அவமானப்படுத்தி ஓடி போயிட்டாளேன்னு உன் மனசுல வருத்தம் இருக்கு தானே”
“வருத்தம் இல்லாம எப்படிப்பா இருக்கும். வருத்தம் இருக்கு. ஆனால், அவ மேல எனக்கு கோபம் இல்லப்பா, அந்த வருத்தம் கூட சம்பந்தமே இல்லாமல் ஏழுமலை மாமா அசிங்கப்பட்டு நின்னாங்கல்ல, அது மட்டும் தான் எனக்கு வருத்தம்” என்றாள் செம்பா.
“ரஞ்சி ஓடி போய்டுவான்னு ஏழுமலைக்கு ஏற்கனவே தெரியும்”
“என்னப்பா சொல்றீங்க?”
“ஆமா ஆத்தா, ரஞ்சி என்கிட்ட இரண்டு நாளுக்கு முன் பேசினாள்”.
“அக்காவா?”
“ஆமா ஆத்தா. ரஞ்சி கல்யாணம் நடக்கிறதுக்கு முன்னாடியே ஏழுமலைகிட்ட அவள் காதலிக்கிற விஷயத்தை பற்றி பேசி இருக்காள். ஆனால் அவங்க ரெண்டு பேரோட கல்யாண விஷயத்துல, நானும் ராசாத்தியும் ரொம்ப பிடிவாதமா இருக்குறோம்ன்னு தெரிந்ததால், எங்ககிட்ட எப்படி பேசுறதுன்னு தெரியாமல் இரண்டு பேரும் இந்த முடிவு எடுத்து இருக்காங்க. ராசாத்திகிட்ட மறைமுகமாக ஏழுமலை “இந்த கல்யாணம் இப்போ வேணுமாம்மா, பிறகு வைக்கலாமே” என பேச, அவரோ “இந்த கல்யாணம் மட்டும் நடக்கலைன்னா என்னை உயிரோட பார்க்கமுடியாதுன்னு சொல்ல” அதனால் ஏழுமலை, ரஞ்சிகிட்ட “கல்யாணத்து முன்னாடி நீ விருப்படுறவங்ககூட போய்டு, இதை தவிர வேற உன்னாலயும் க்ஷ, என்னாலயும் எதுவும் பண்ண முடியாதுன்னு சொல்லி இருக்கான். அதனால வேற வழி இல்லாமல்தான் ரஞ்சி நம்ம வீட்டை விட்டு வெளியே போய் இருக்காள்” என்றார்.
“நம்மகிட்ட ஒருவார்த்தை சொல்லிருக்கலாமேப்பா”
“எப்படிம்மா சொல்ல சொல்ற, நாங்க ஓடிப்போய் கல்யாணம் பண்ணதுல அதிகமா இழந்தது உங்க அம்மாதான். நான் என் குடும்பத்தோட சேர்ந்துட்டேன். ஆனால் அவளால் இப்போ வரை அவளோட அம்மாகிட்ட கூட பேசமுடியாமல் அவ தவிக்கிற தவிப்பு என் கண்ணால் நான் பார்த்திருக்கேன். அதை பார்த்த ரஞ்சி, எங்ககிட்ட சொன்னால் கண்டிப்பா சம்மதிக்க மாட்டோம்னு நினைச்சி அவ விரும்புனவனோடயே கிளம்பி போய்ட்டாள்.
“அக்கா என்ன சொன்னாலூம் நம்ம பட்ட அவமானம் மறையாதுல்லப்பா”
“அதுக்காக அவளை உங்க அம்மா மாதிரியே தவிக்க விட சொல்றியா ஆத்தா”.
“இதுல நான் சொல்றதுக்கு எதுவும் இல்லப்பா. அத்தை சொல்லனும். நம்மைவிட அதிகமா அவமானப்பட்டது அவங்க தானே.”
“நான் பேசிட்டேன் ஆத்தா. என் தங்கச்சியும் “அவள் பண்ணது தப்புதான் அண்ணா. அவளுக்கு நம்மளைவிட்டால் யார் இருக்காள் வர சொல்லுண்ணாண்ணு சொல்லிட்டாள்” செம்பா.
“உண்மையா அத்தை அக்காவை வர சொல்லிட்டாங்களா”
“ஆமாடா!”
“அக்கா எப்போ வர்றதா சொன்னால் அப்பா.”
“நம்ம எல்லாரையும் பார்க்க அவ புருஷனோடு வர்றதா சொல்லிருக்காள்”.
“அக்காவுக்கு குழந்தை இருக்காப்பா”…
“எல்லாத்தையும் நான் நேர்ல வரும்போது பாருங்கன்னு சொல்லிட்டாள். ஆனால் எப்போ வர்றேன்னு சொல்லலை” என்றவருக்கு நெஞ்சு வலி அதிகமானது.
“ஆத்தா…!”
“என்னப்பா..?”
“நீ மனசார உன் அக்காவை ஏற்றுக்குவல்ல…”
“நான் ஏன்ப்பா அவளை வேண்டாம்னு சொல்ல போறேன். நம்ம வீட்ல ஒரு சந்திரா போதும்ப்பா” என்றவளை அணைத்தவர் “தன் மகளிடம் எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை”
“என்னப்பா..?”
“உன் முகத்துல சிரிப்பை பார்க்கனும் தங்கம்”.
“ப்பா.”
“நீ வாய்விட்டு சிரிச்சி, பல வருஷம் ஆகுது. எனக்காக சிரிக்கிரியா”
“ப்பா… ஏன்ப்பா இப்படியெல்லாம் கேக்குற, எனக்கு பயமா இருக்கு” என செம்பா அழ…
“ஏங்க இப்படி கஷ்டபடுத்துறிங்க உங்களுக்கு ஏதாவது செய்யிதா? வாங்க ஹாஸ்பிடல் போலாம்” என சந்திரா சொல்ல… செம்பா உடனே தன் போனை எடுத்து சமருக்கு அழைப்பை விடுத்து உடனடியாக வீட்டிற்கு வர சொல்ல, அவளின் பதட்டம் ஏதோ தவறாக நடக்க போகிறது என்பதை உணர்ந்தவன் பாலாவையும் அழைத்துகொண்டு கிளம்பினான்.
அதற்குள் கோகி, ராசாத்தி வந்துவிட்டனர்.
“ஆத்தா சிரியேன். அப்பா கடைசியாக உன் சிரிச்ச முகத்தை பார்க்கனும்னு நினைக்கிறேன். இதுவரைக்கும் உனக்கு நல்ல அப்பனா இல்லை. ஆனால் இனிமே உன் கூடவே இருப்பேன். ஒவ்வொரு நிமிஷமும் உன்னை சுத்தி வருவேன் சிரி ஆத்தா” என்றார் அவரும் சிரித்தபடியே.
சந்திரா கண்ணிர் விட “ஏன் சந்திரா அழற.. என்னால் நீ இழந்தது ரொம்ப அதிகம். எனக்கு என்னைக்குமே ராணி. உன் உண்மையான நேசத்துக்கு முன்னாடி என் காதல் எல்லாம் கால் தூசுக்கு சமம்தான். நான் உன்னைவிட்டு போனாலும் நீ இப்படியேதான் இருக்கனும். எனக்காக இனிமே நீ எதையும் இழக்க கூடாது” சந்திரா சத்தமாக அழ ஆரம்பித்தார்.
“அண்ணே ஏன்னே இப்படி பேசுற. நீயில்லாமல் நாங்க என்ன பண்ணுவோம். வாண்ணே ஹாஸ்பிடல் போலாம். சிவம் வரமாட்டேன் என அடம்பிடிக்க “செம்பா அண்ணணை தூக்கும்மா நம்ம ஹாஸ்பிடல் போகலாம்” என்றார் ராசாத்தி. கோகி, செம்பா இருவரும் தூக்க போகவும் சமர், பாலா இருவரும் உள்ளே வந்தனர்.
சமர் சிவத்தை சோதித்து பார்த்தவன் உடனே அட்மீட் பண்ணணும். ஆபத்தான கட்டத்துல இருக்காங்க. “பாலா காரை ஸ்டார்ட் பண்ணு” என சிவத்தை தூக்க போக அந்த நிமிடமே தன் மகளை மனைவியை பார்த்தபடியே உயிரை விட்டார் சிவம். நான்கு பெண்களும் கதறி அழ அதை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. செம்பா “அப்பா நான் சிரிக்கிறேன் பாரு, அப்பா பாருப்பா சிரிக்கிறேன்” என அழ,… சந்திரா சிவத்தின் கையை பிடித்து அவரின் முகத்தை பார்த்தபடி ஏங்கி ஏங்கி அழுதவர், நெஞ்சை பிடித்தபடி அப்படியே சிவத்தின் மீது சாய்ந்தார்.
செம்பா அம்மா, அம்மா என எழுப்ப அவரிடம் எந்த அசைவும் இல்லை. தன் கணவனின் கையை கோர்த்தபடி அவருடனே தன் பயணத்தை தொடங்கிவிட்டார் சந்திரா.
செம்பாவிற்கு என்ன நடந்தது என புரியவே சில நிமிடங்கள் எடுத்தது. ஒரே நேரத்தில் தாயையும் தந்தையையும் பறிகொடுத்துவிட்டு அவள் முகத்தில் தெரிந்த கலக்கம் சமரின் மனதை பிசைந்தது. அவள் அருகில் சென்று ஆறுதல் சொல்லகூட முடியாமல் தள்ளி நின்றவனின் மனம் வெதும்பியது. பாலாதான் செம்பாவை சமாதானம் படுத்தினான். கோகி ஒருபுறம் ராசாத்தி ஒருபுறமென அழுதபடியே இருந்தனர். யாருக்கும் யாரும் ஆறுதல் சொல்லமுடியாத நிலை. ராசாத்திக்கே தன் அண்ணனைவிட சந்திராதான் எல்லாம். கணவனின் தங்கையாக நினைக்காமல் உடன்பிறந்த சகோதரியாக நினைத்து வாழ்ந்தவர். இன்று இருவரும் ஒரே நேரத்தில் தங்களை விட்டு சென்றதை நம்பமுடியாமல் கலங்கி போய் இருந்தனர்.
விஷயம் கேள்விபட்டு குகன், பாலாவின் நண்பர்கள் ஊரில் சிலர் வந்துவிட்டனர். ஊரில் உள்ளவர்கள் சடலங்களை எடுப்பதற்கான வேலையில் இறங்கினர்.
செம்பாவின் மனதை இருளாக்கி சூரியன் மெல்ல உதயமானான். வீடு முழுவதும் அழுகை சத்தமாய் இருக்க… வாசலில் வந்து நின்றனர் நாராயணன், சோலையம்மாள் இருவரும். காலையில்தான் விஷயத்தை பாலா அவர்களிடம் கூறினான். தெரிந்ததும் வீட்டில் இருந்து கிளம்பினர். கற்பகம் வரவில்லை.
சோலையம்மாள் நடக்க முடியாமல் வந்தவர். தன் மகளின் சடலத்தை கண்டு மயங்கி விழுந்தார். அவர் முகத்தில் தண்ணிர் தெளித்து எழுப்பி வைக்க, “ஐயோ என் தங்கமே ஒரே பொண்ணுணு தரையில் நடக்கவிடாமல் செல்லம் கொடுத்து வளத்தேனே. இப்படி என்னை விட்டு இடையில் போறதுக்கா. என் தங்கமே, பெத்த வயிறு பத்தி எறியிதே, நான் இருக்கேனே நீ என்னை விட்டு போய்ட்டியே, என் ராசாத்தி என்கிட்ட பேசலைன்னாலும் என் கண்ணுமுன்னே இருக்கியேன்னு நினைச்சேனே, இப்படியே என் வாயில் மண்ணை அள்ளி போட்டு நீ போய்ட்டியே’ என ஒப்பு வைத்து அழ நாராயணன் அங்கேதான் நின்றிருந்தார். அவர் மனதிலும் அதுதான் ஓடியது. வெளியே எங்கே பார்த்தாலும் கற்பகம் இல்லையென்றால் அவளை பார்த்து சிரித்து “நல்லாயிருக்கியா” என கேட்பார் நாராயணண். அதற்கு சிரித்தபடியே பதில் சொல்லிவிட்டு செல்வார், ஒருநாளும் சிரிப்பு இல்லாமல் பார்த்தது இல்லை. இன்று தன் தங்கை இல்லை என்பதை அவரால் தாங்கமுடியவில்லை. ஆண்பிள்ளை என்பதால் அழ முடியாமல் நின்றார் நாராயணண்.
அழுது அழுது ஓய்ந்து ராசாத்தியின் மடியில் படுத்திருந்தாள் செம்பா. சிவத்தின் உறவினர்கள் தான் எல்லா வேலையும் பார்த்தனர்.
மாலையும் கையுமாக ஊர் ஆட்கள், உறவினர்கள் வந்து கொண்டிருக்க, அப்போது ஒரு கார் வந்தது. அங்கிருந்தவர்கள் அந்த காரை பார்க்க, அதிலிருந்து இறங்கினாள் ரஞ்சி.
செம்பா நீ வேலைக்கு போகலையா?” என சந்திரா கேட்க…
“கிளம்பனும்மா”
“என்ன ஆச்சுடி உடம்பு முடியலையா”
“நான் நல்லாத்தானே இருக்கேன்ம்மா. மதிய டியூட்டி தானே போகனும். நம்ம ஊர்ல மெடிக்கல் கேம்ப் நடக்குதுல்ல உன்னையும் அத்தையையும் கூப்பிட்டு போகலாம்னு யோசிக்கிறேன்”.
“எங்களையா?”
“ஆமா. உனக்கு அடிக்கடி உடம்பு முடியாமல் வருது. ஹாஸ்பிடலுக்கும் வரமாட்ற. அதான் இன்னைக்கு உன்னை கேம்ப்க்கு கூப்பிட்டு போகலாம்னு நினைக்கிறேன்.”
“வேற வேலை இருந்தா பாறேன்டி”.
“அதெல்லாம் முடியாது, நீங்க ரெண்டு பேரும் வரீங்க, உங்களை டாக்டர்கிட்ட காமிச்சிட்டு அதுக்கப்புறம் தான் நான் வேலைக்கு போறேன்” என்றாள் செம்பா.
செம்பா சொன்ன பின் அதை மாற்றிக் கொள்ள மாட்டாள். என்பதால் இருவரும் கிளம்பி அவர்களோடு மெடிக்கல் கேம் நடக்கும் இடத்திற்கு சென்றனர்.
கோகியை பார்த்து கண்ணை காட்டினால் செம்பா.
“என்னடி” என கண்களால் கோகியும் சைகை செய்ய,
“ஜித்துவை பார்க்கனும்” என சைகையால் சொல்ல…
“முடியாது” என கோகி தலையசைக்க, “கொன்னுடுவேன்” என்றாள் செம்பா.
“அம்மா, அத்தை நீங்க ரெண்டு பேரும் இங்கே இருங்க, உங்களுக்கு எந்த டாக்டர் பாக்கணும்னு நாங்க போய் விசாரிச்சுட்டு வந்துடுறோம்” என்றதும் ராசாத்தியும் சந்திராவும் அங்கே போடப்பட்டிருந்த மரபெஞ்சில் அமர்ந்தனர்.
இருவரும் அவர்களை விட்டு கொஞ்சம் துயரம் தள்ளி வந்து “கோகி நீ அம்மாவையும் அத்தையும் பாத்துக்கோ, நான் போய் ஜித்துவை பார்த்துட்டு வந்துடறேன்” என்றாள் செம்பா.
“சீக்கிரம் வந்துடு செம்பா. அம்மா கேட்கிறதுக்கெல்லாம் நான் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது”
“வந்துடறேன்” என்றவள் சமர் இருக்கும் இடத்திற்கு செல்ல, இங்கே கோகியோ அப்படியே நடந்தவள் கோகுல் செல்வதை பார்த்து அவனை பின் தொடர்ந்தாள்.
“ஓய் டாக்டரே” என்க… இந்த காந்த குரலை எங்கேயோ கேட்டு இருக்கிறோமே” என திரும்பினான் கோகுல்.
“அட குள்ள கத்திரிக்கா நீ இங்கே என்ன பண்ற”
“உனக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போட வந்தேன் டாக்டரே”
“நான் உன்னை கூப்பிடவே இல்லையே”
“நீ கூப்பிட்டு தான் நான் வரனுமா?”
“அது சரி. கையை வீசிட்டு வந்திருக்க எங்கே சாப்பாடு”
“ரொம்ப ஆசைதான் உனக்கு. உன்னை பார்த்தேன், அதான் பின்னாடியே வந்தேன்”
“அதானே பார்த்தேன். நீ வாயாலே வடை சுடுவியே, நீ எப்படி எனக்கு வாய்க்கு ருசியா சமைச்சு கொண்டு வந்து இருப்பேன்னு”
“ரொம்ப பேசாதைய்யா”
“சரி நீ இங்கே என்ன பண்ற? நீங்களே பெரிய நர்ஸம்மா நீங்க டாக்டரை தேடி வந்திருக்கீங்க”
“என்ன நக்கலா”
‘இல்லை கத்திரிக்காய் சும்மா கேட்டேன்.”
“போயா, போய் உன் டாக்டர் வேலைய பாரு”
“அது எங்களுக்கு தெரியும் நீங்க தான் என்ன வேலை செய்ய விடாமல் டிஸ்டர்ப் பண்றீங்க”
“இல்லனா மட்டும் சார் எல்லாத்தையும் காப்பாத்திட்டுதான் சோத்துல கையை வைப்பாரு”
“ரொம்ப பேசுற, ஊசி எடுத்து உன் வாயை தைக்க போறேன் பாரு”
“முதல்ல ஒழுங்கா வந்திருக்கிற நோயாளிகளுக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிங்க, என்கிட்ட வாயை கொடுத்து வீணா புண்ணாக்குக்காதிங்க”, என முகத்தை வெட்டிய படி சென்று விட்டாள்.
“சரியான பைத்தியத்துக்கிட்ட மாட்டிக்கிட்டேன் போல” என நோயாளிகளை பார்க்க சென்றான் கோகுல்.
செம்பா சமர் இருக்கும் அறைக்கு முன் வந்தாள்.
உள்ளே சமர் நோயாளியை பார்த்துகொண்டு இருக்க, உள்ளே இருந்த நபர் வெளியே வரவும் உள்ளே நுழைந்தாள்.
தன்னவளை பார்த்ததும் முகம் பிரகாசித்தது.
“மேடம் என்ன இந்த பக்கம்”
“உங்கள பாக்கணும்னு தோணுச்சு அதான் கிளம்பி வந்துட்டேன்”
“ப்பா… உடம்பெல்லாம் புல்லரிக்குது.” மேடம் வாயால் என்னை பார்க்க வந்திருக்கேன்னு சொல்றதை கேக்குறதுக்கு”
“இப்படி பேசுனிங்க நான் வெளியே போய்டுவேன்.”
“ சரிங்க மேடம் நான் எதுவும் பேசலை. நீங்க ரொம்ப பிஸியான ஆள். என்னை எல்லாம் மீட் பண்ண உங்ககிட்ட நாங்க அப்பாயின்மென்ட்ல வாங்கணும். நீங்க வந்ததும் ஆனந்த அதிர்ச்சியாகிடுச்சி”
“போதும் கிண்டல் பண்ணது.”
“சரி வா அங்கேயே நிற்குற… இங்கே உட்கார்.”
“அங்கே இருந்த மரபெஞ்சில் இருவரும் ஒன்றாய் அமர்ந்தனர்.”
இருவருக்கும் இடையில் இன்னொருவர் உட்காரும் அளவிற்கு இடைவெளி இருந்தது.
அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துகொள்ள செம்பா நெளிந்தாள்.
“என்ன ஆச்சி…”
“அ…அது ம்ம்ம் ஒன்..ஒன்னும் இல்லை…”
“என்ன இவ்வளவு தடுமாற்றம்”
“தெரியலை ஜித்து. உங்க பக்கத்துல இருந்தாலே மனசெல்லாம் படபடன்னு இருக்கு, லேசாக வியர்வை அவள் முகம், கழுத்து, கைகளில் பூக்க ஆரம்பித்தன.”
“ஏன் இவ்வளவு பயம். நான் உன்னை என்ன பண்ண போறேன் பட்டாசு”
“பயம் இல்லை ஜித்து.”
“புரியிது…. சரி நீ என்ன பார்க்க மட்டுமா வந்த”
“இல்லை ஜித்து, அம்மாவுக்கு உடம்பு கொஞ்சம் பலவீனமா இருக்கு, அதான் டாக்டரை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன். வெளிய எங்கே கூப்பிட்டாலும் வர மாட்டாங்க. ஏதாவது மூலிகை மருந்து காய்ச்சி குடிச்சிட்டு வீட்ல படுத்துடுறாங்க. சரி நம்ம ஊர்லதானே அதனால நம்மளே கூப்பிட்டு காமிச்சுட்டு போகலாம்னு வந்தேன்.”
“அம்மா எங்கே?”
“அம்மா வெளியே தான் உட்கார்ந்து இருக்காங்க, நான்தான் உங்களை பார்க்கலான்னு இங்கே வந்தேன்.
சரிங்க நான் கிளம்புறேன்.”
“இப்போதானே வந்த பட்டாசு, உடனே போகணுமா” என்றவனின் பார்வையில் ஒருவித ஏக்கம்”
“நீங்க வேலை செய்ற இடம். நான் ரொம்ப நேரம் பேசிட்டு இருக்கிறது நல்லா இருக்காது. நான் கிளம்புறேன் என எழுந்தாள். சமர் இன்னும் அவள் கரங்களை விடவில்லை”.
“சரி பட்டாசு நைட் உனக்கு வேலை எப்போ முடியும்”
“ஏழு மணிக்கெல்லாம் முடிஞ்சிடும் ஜித்து”.
“சரி அப்போ நான் வழக்கமா, மீட் பண்ற இடத்துல வெயிட் பண்றேன் நீ மறக்காம வந்துடு.”
“சரிங்க என்றவளின் பார்வை சமரின் கரங்களின் மீது படிய, அவள் பார்வை சென்ற இடத்தை கவனித்தவன் ஒவ்வொரு விரல்களாய் விருப்பம் இல்லாமல் விடுவித்தான்.”
செம்பா வெளியே வர பாலா அவள் முன் வந்தான்.
செம்பா பேசாமல் அப்படியே நிற்க… பாலா அவளை பார்த்து சிரித்தவன் “என்ன பாப்பா சமரை பார்க்க வந்தியா”, என ஒரு சிரிப்புடன் கேட்க…
அவனைப் பார்த்து முழித்தாள்.
“எனக்கு எல்லாம் தெரியும் பாப்பா சமர் என்கிட்ட சொன்னான். எனக்கு ரொம்ப சந்தோஷம். என் பாப்பாக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க போகுது, சமர் ரொம்ப நல்லவன் உன்னை கண்டிப்பா நல்லா பார்த்துப்பான்.”
“சரி மாமா நான் வரேன் அம்மா வெயிட் பண்றாங்க” என செம்பா வர கோகி அவள் முன் வந்தாள்.
“என்னடி, உன் ஆளை பார்த்துட்டியா?”
“ஆமா”
“அண்ணா என்ன சொன்னார்?”
“ஒன்னும் சொல்லலை’
“ஒன்னும் சொல்லலையா? இதை போசத்தான் போனியா. உங்க ரெண்டு பேரையும் 10 வருஷமா லவ் பண்றாங்கன்னு சொன்னால் யாருமே நம்ப மாட்டாங்க.”
“வாயை மூடிட்டு வா. எனக்கு எல்லாம் தெரியும். அம்மா எந்த டாக்டர்கிட்டே போய்ருக்காங்க”
“ஆத்விகா”
“ஆத்விகாவா?”
“ஆமா அந்த டாக்டர் தான்”.
“அம்மா, அத்தையும் பார்த்துட்டாங்களா.?”
“இல்லை செம்பா வரிசையில் உட்கார்ந்து இருக்காங்க.”
“ சரி வா என இருவரும் சந்திரா ராசாத்தி இருக்குமிடத்தில் வந்து அமர்ந்தனர்.”
“எங்கடி போனிங்க.?”
“போனிங்களாவா? இவ இங்கே இல்லையா” என சந்தேகமாக செம்பா கோகியை பார்க்க…
“நா..நான் உன்னை தேடி வந்தேன் செம்பா.”
“நம்புற மாதிரி இல்லையே உன் கண்ணுல திருட்டுத்தனம் தெரியிதே”
“ஆஹ் அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல செம்பா”
“ஒருநாள் மாட்டுவடி, அப்போ இருக்கு உனக்கு”
“அது அப்போ பார்க்கலாம்”
“அப்போ திருட்டுவேலைதான் பார்த்திருக்க” என செம்பா சொல்ல
“ஐயோ இல்லடி’ என இருவரும் மாற்றி மாற்றி பேச, சந்திரா பெயரை அழைத்தனர். செம்பாதான் உள்ளே அழைத்து சென்றாள்.
ஆத்வி செம்பாவை பார்த்ததும் எதுவும் பேசவிலை. சந்திராவிற்கு என்ன செய்கிறது என விசாரித்தாள். அவரை செக் செய்தவள் உங்களுக்கு எந்த ப்ராப்ளமும் இல்லம்மா. நல்ல சத்தான ஆகாரங்கள் சாப்பிடுங்க. இரத்ததில் ஹிமோகுளோபின் அளவுதான் கம்மியா இருக்குற மாதிரி இருக்கு. உடம்பை கவனிச்சிக்கோங்க. குறிப்பிட்ட வயது தாண்டியதும் பெண்கள் உடம்பு ரொம்ப பலகினமாகிடுது. மனசுளவுல தைரியமாக இருந்துதாலும் உடம்பால இருக்க முடியலையே. நல்லா சத்தான ஆகாரங்கள் சாப்பிடுங்க சரியாகிடும்” என்றாள் ஆத்வி.
“சரிம்மா” என்றார் சந்திரா.
“ நீங்க வெளியே இருங்கம்மா, நான் மாத்திரை எழுதி தர்றேன்” என்றதும் செம்பா சந்திராவை வெளியே அனுப்பிவிட்டு மருந்து, மாத்திரை ரசிதை வாங்கிவிட்டு வெளியேற போக “ஒரு நிமிஷம்” என்றாள் ஆத்வி.
செம்பா திரும்ப, “உங்ககிட்ட நான் ரொம்ப திமிராவே நடந்துருக்கேன். அப்போ அது தவறா தெரியலை. பணத்திமிர்ல என்ன பேசுறதுன்னு தெரியாமல் பேசிருப்பேன். என்னை மன்னிச்சிடுங்க” என்றாள் ஆத்வி.
சமர் செம்பாவிடம் ஆத்வி குகனை விரும்புவதை பற்றி சொன்னது நியாபகத்தில் வந்தது.
ஆத்வி பேசியதை பெரியதாக எடுக்காமல் “பரவாயில்லங்க, எங்க குகன் மாமாவை கல்யாணம் பண்ணி எங்க வீட்டு மருமகளா வரப்போறிங்க. உங்க மேல கோபப்பட முடியுமா?” என்றதும் ஆத்வியின் முகம் செவ்வானமாய் சிவந்தது.
“இப்போ வரை உங்க மாற்றம் என்னால் நம்ப முடியலைங்க ஆச்சரியமாய் இருக்கு என்றாள் செம்பா. உண்மையிலேயே செம்பாவிற்கும் ஆச்சரியமதான்.
“என்னாலயே நம்ப முடியலைங்க… ஆனால் நான் அவரை விரும்புறது உண்மை. அவர் என்னை கிணற்றில் இருந்து காப்பாற்றும் போதுகூட அவரோட கைகள் என்மீது தவறா படலை. அந்த நிமிஷம் எனக்கு சுயநினைவு இருந்தது.” அதை நினைக்கும்போது இன்னும் அவர்மீது காதல் அதிகமானதே தவிர குறையலைங்க.”
ஆத்வியின் முகத்தில் குகனை பற்றி பேசும்போது முகம் முழுவதும் பூரிப்பு. அதுவே அவளின் காதலின் அளவை சொன்னது. செம்பாவிற்கும் இனிமே குகன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நம்பிக்கை துளிர்த்தது.
ஆத்வி சிரித்த முகமாக “அம்மாவை நல்லபடியா பார்த்துக்கோங்க, ஹிமோகுளோபின் ரொம்ப குறைவான இருக்கு. ட்ரிப்ஸ் மூலமா ஹொச்.பி அதிகமாகும் மருந்து போடுற நிலைமைதான். நீங்க ஹாஸ்பிடல் வேர வொர்க் பண்ணுறிங்கல்ல, அங்கே வாரத்திற்குள் ஒரு மருந்துன்னு நாலு வாரத்துக்கு ஒரு ட்ரிப்ஸ் ஏற்றுங்க, அவங்களுக்கு எல்லாம் சரியாகிடும். அதை கவனக்குறைவாக விட்டால் இதயம் பலவீனமாகிடவும் வாய்ப்பு இருக்கு.
“சரிங்க நான் பார்த்துக்கறேன்.”
என ராசாத்தியையும் ஆத்விகாவிடம் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். நேரம் கடந்ததும் கோகி, செம்பா இருவரும் வேலைக்கு கிளம்பினர்.
நல்லசிவம் ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருக்க, அவரை பார்த்த கற்பகம் “ஏய் இங்கே வா” என்றார். முதலில் நல்லசிவம் கவனிக்காமல் செல்ல அடுத்த வார்த்தை “ஓடுகாலியை கட்டின பிச்சைகாரா” என அழைத்ததும் இவளுக்கு வேற வேலை இல்லை என கண்டும் காணாமலும் செல்ல, “இப்போ நீ இங்கே வரலை, இதைவிட மோசமா பேசுவேன் எப்படி வசதி.” என்றதும்
“ச்சை இவளாம் என்ன ஜென்மமோ” என அவளிடம் வந்தார் சிவம்.
“என்ன கூப்பிட கூப்பிட!, எட்டிப் பார்க்காமல் போற அவ்வளவு திமிராயிடுச்சா?”
“நீ கூப்பிட்டதும் வரதுக்கு நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரனா. இல்ல உங்களுக்கும் எனக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? எதுவுமே கிடையாது, அப்புறம் எதுக்கு நீ கூப்பிட்டு நான் வரணும்”
“ஓஹ் குடிக்கலையா ரொம்ப தெளிவா இருக்க போல, அதான் இப்படி பேசுற”
“எதுக்காக கூப்பிட்டீங்கன்னு சொன்னால் நல்லா இருக்கும்”
“ஏன் வெட்டியாதான குடிச்சிட்டு ஊரை சுத்திட்டு திரியிற? ஏதோ வேலைக்கு போய் சம்பாதிக்கிற மாதிரி சலிச்சிக்கிற”
“நான் எப்படியும் இருப்பேன். எதுக்கு கூப்பிட்டிங்க அதை சொல்லுங்க”
“எங்க உன் மகள் ரெண்டாவது மினுக்கி”
“என் ஆத்தாவை ஏன் நீங்க தேடுறீங்க?”
“அந்த ஆளுமயக்கி எங்க இருக்கான்னு தெரியுமா?”
“என் பொண்ண பத்தி தவறாக பேசுற வேலை வச்சுக்காதீங்க, இல்லை இங்கே நடக்கிறதே வேற”
“என்ன பண்ணுவ, உன் மூத்த பொண்ணு எவன் கூட போனாளோ, எங்க இருக்காளோ, இருக்காளா செத்தாலா எதுவுமே உங்களுக்கு தெரியாது. இதோ இவ நல்ல பணக்கார பையனா பார்த்து வளைத்து போட்டுட்டாள். கொஞ்சம் அழகா இருந்ததும் உடனே அவர்களும் மயங்க தானே செய்றாங்க”
“தேவையில்லாமல் என் பொண்ணை பற்றி பேசுறீங்க…”
“யாரு தேவையில்லாம பேசுறா? உன் பொண்ணு உடம்புக்கு ஏதாவது வியாதியா?”
‘என் பொண்ணு உடம்புக்கு என்ன? அவ நல்லாதான் இருக்காள்”
“அப்புறம் எதுக்கு மெடிக்கல் கேம்ப்ல இருக்கிற டாக்டரை போய் தனியா உன் பொண்ணு பாக்குறாள்”
“அது என் பொண்டாட்டிய கூப்பிட்டு போனாள். உனக்கு கண்ணு தெரியலன்னா அதுக்கு நாங்க பொறுப்பாக முடியாது”
“உன் பொண்டாட்டிய பார்த்தது வேற டாக்டர். உன் பொண்ணு பார்த்தது வேற டாக்டர். சொன்னா நம்ப மாட்டல்ல, இரு என தன் போனை எடுத்து செம்பா சமரின் அறைக்குள் சென்றதையும் சிறிது நேரம் கழித்து வெளியே வருவதையும் வீடியோவாகவே எடுத்து வைத்திருந்தார் கற்பகம்.
அவர் ஏதேச்சையாக கேம்ப் நடக்கும் இடத்திற்கு வர, அங்கே செம்பா சமர் அறைக்கு செல்வதை பார்த்தவர் தன் போனில் வீடியோ எடுத்திருந்தார்.
“நல்லா பாரு அவ மட்டும்தான் உள்ள போறாள். 15 நிமிஷம் கழிச்சு வெளியே வறாள். அதுவும் ஆம்பள டாக்டர். என்ன காரணமா இருக்கும் சிவம். போகும்போது உன் பொண்ணு முகத்தை பாரு இத்தனை நாள்ல உன் பொண்ணு முகத்துல இப்படியொரு பிரகாசத்தை பார்த்திருப்பியா. அதிலையே தெரிய வேண்டாம், அந்த பையனை மயக்கி இவ முந்தானையிலே முடிச்சு வச்சுக்கிட்டாள். அவனும் நல்ல வசதியான வீட்டுப் பையன். அதுவும் ஒரே பையன். அப்படிங்கிறப்போ சொத்து எல்லாம் இவளுக்கு தானே வரும்னு தெரிந்து மயக்கிட்டாள் போல” என வாய்க்கு வந்த படி பேச…
“என் பொண்ணு அப்படிப்பட்டவை இல்ல” என்றார் நல்லசிவம்.
“இவ்வளவு தூரம் விவரமா சொல்றேன். நம்ம மாட்ற, சரி பரவாயில்லை. வேணும்னா பாரு இவளும் உன்னை ஏமாத்தி வீட்டை விட்டு ஓடி தான் போக போறாள். நீதான் நினைச்சுட்டு இருக்கணும் என் பொண்ணு என்னைய ஏமாத்திட்டு போக மாட்டான்னு, நீ கல்யாணம் முடிவான பொண்ணை மனசாட்சியே இல்லாமல் இழுத்துட்டு போனல்ல, அதே மாதிரி இவளும் ஓடி போவாள். என் சாபம் உங்களை சும்மா விடவே விடாது. உன் ரெண்டு பொண்ணுங்களுக்கும் ஒழுங்காவே நீ கல்யாணம் பண்ணி பார்க்க மாட்ட, வேணும்னா பாரு நான் சொன்னது நடக்குதா இல்லையா என்று ஓடுகாலிக்கு பிறந்தவள் ஓடு காலியாதானே இருப்பாளுங்க. நல்ல தாய்க்கு பிறந்திருந்தாள் நல்ல எண்ணம் இருக்கும். அவ எப்படி எங்களை அவமானபடுத்தினாளோ அதே மாதிரி உன் ரெண்டு பொண்ணுங்களும் உங்களை நடுரோட்ல நிற்க வைப்பாங்க, ஊரே பார்த்து சிரிக்கும். எங்களுக்கு நடந்தப்போ எப்படி வலிச்சிருக்கும், அதே வலியை நீங்க அனுபவிக்க வேணாமா? நீ ஏன் அனுபவிக்க போற, உன் பொண்டாட்டி மூலமா சொத்து, பணம் வரும், வேலைக்கு போகாமல் பொண்டாட்டி வீட்ல உட்கார்ந்து சாப்பிடலாம்னு எதிர்பார்த்து இருந்திப்ப, அது வராமல் போயிடுச்சு. இப்போ உன் பொண்ணு மூலமா நீ ஆசைப்பட்டது எல்லாம் கிடைக்கபோகுது. வாங்கி நல்லா குடிச்சு கூத்தடி, அதுக்குத்தானே ரெண்டு பொண்ணுங்களை பெத்து வச்சிருக்க” என அவரின் மனதில் இருந்த வன்மத்தை எல்லாம் வார்த்தையால் கொட்ட,
“போதும்” என கையெடுத்து கும்பிட்ட சிவம் அங்கிருந்து கிளம்பி விட்டார். கற்பகம் சொன்னதை அவர் நம்பவில்லை. செம்பா மீது தான் அவருக்கு நம்பிக்கை அதிகம். “அவளை இப்படி பேசிவிட்டாரே” என அவரின் மனம் வெம்பியது இன்றைக்கு குடிக்க வேண்டாம் என நினைத்தவர் மூக்கு முட்ட குடித்தபடி வீட்டிற்கு சென்றார்.
செம்பாவும் கோகிலாவும் வீட்டிற்கு வந்து சேர வாசலிலே நின்றிருந்தனர் ராசாத்தி, சந்திரா, நல்லசிவம் மூவரும். சமர் அவர்களை வீட்டின் முன் விட்டுவிட்டு உடனே அங்கிருந்து கிளம்பி விட்டான்.
“ஏன்டி, இவ்வளவு நேரம் உங்களுக்கு வேலை அப்பவே முடிந்திருக்குமே, இவ்வளவு நேரம் அங்கே என்ன பண்ணிட்டு இருந்தீங்க” என ராசாத்தி கேட்க
“அம்மா கிளம்புற நேரத்துல ஒரு அவசர கேஸ் வந்தது, அதான் கொஞ்ச நேரம் ஆயிடுச்சு” என்றால் கோகிலா.
“சரி ரெண்டு பேரும் குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்” என ராசாத்தி சொல்லவும் அப்போதுதான் சந்திராவிற்கு ஞாபகம் வந்தது. இரண்டு தெரு தள்ளி ஒருவர் செம்பாவிடம் துணி தைக்க கொடுத்திருக்க, நாளைக்கு வெளியே செல்ல வேண்டும் துணி தைத்துவிட்டாளா?” என கேட்டு வந்தது..
செம்பா பக்கத்து தெரு வள்ளி அக்கா துணி தைக்க தந்தாங்கலாமே, நாளைக்கு வெளியே போறாங்களாம். வேணும்னு கேட்டாங்க, நீ தச்சு வச்சிருக்கியா? என சந்திரா கேட்டதும்..
“ஆமாம்மா… பீரோ மேலே இருக்குற பையில் வைத்திருந்தேன். நீங்களே எடுத்து கொடுத்திருக்கலாம்ல”
நானும் தேடிப் பார்த்தேன்டி எனக்கு எந்த துணிண்னு சரியா தெரியலை. அவளை வந்து பார்னு சொன்னால் எனக்கு நேரம் இல்லை செம்பா வந்தால் கொடுத்துவிட சொல்லுங்க காலையில் முதல் வண்டிக்கு போகனும்னு சொல்லிட்டு போறாள்..
அதை கொண்டு கொடுத்துட்டு வந்துடுறியா செம்பா என்றதும் கோகிலா
“அத்தை அதை நான் கொண்டு கொடுக்கிறேன். செம்பா ரொம்ப டயர்டா இருக்காள் அவள் தூங்கட்டும்” என்றாள்.
செம்பா பைக்ல போய்ட்டு கொடுத்துட்டு வந்துருவா, நீ நடந்ததுல போகணும் உனக்கு வண்டி ஓட்ட வேற தெரியாது.
பக்கத்து தெருதானே அத்தை. நானே கொண்டு குடுத்துடுவேன்.
“சரி அப்போ சாப்பிட்டு போ” என இருவரும் தயாராகி உடையை மாற்றி விட்டு வர, சாப்பாடு பரிமாறினார் சந்திரா. கோகி சாப்பிட்டுவிட்டு துணியை வாங்கிக்கொண்டு கிளம்பினாள்.
துணியை கொடுத்துவிட்டு திரும்ப வரும்போது ஏதோ மனதிற்குள் லேசாக பயமாக இருந்தது. மனம் படபடவென அடிக்க “ஏன் ஒரு மாதிரியா பயமா இருக்கு, கோகி நீ பயப்படுற ஆள் இல்லையே” என்றவள் சுற்றிமுற்றி பார்த்தாள். யாரும் இருப்பது போல இல்லை. ஏதோ ஒரு சத்தம் கேட்பது போல இருக்க திரும்பி பார்த்தாள், அப்போதும் யாரும் இல்லை. மீண்டும் நடக்க ஆரம்பித்தவள் பயந்தபடியே “ஒரு பொண்ணு கொஞ்சம் அழகா இருந்துடகூடாது பேய், பிசாசுங்க கூட விட்டு வைக்க மாட்டாங்க போல, ஒருவேளை என் அழகுல மயங்கி பாலோவ் பண்றாங்களா இருக்குமோ” என நினைத்தபடியே செல்ல, மறுபடியும் யாரோ தன் பின்னால் வருவது போல தோன்ற கோகிலா திரும்பவும் அவள் வாயை பொத்திய மூவரில் ஒருவன், அவளை தூக்கி தோளில் அப்படியே தூக்கிக் கொண்டு காட்டிற்குள் நுழைய, கால்களை அங்கும்மிங்கும் ஆட்டி தப்பிக்க பார்த்தாள். முடியாமல் போக அவளை தூக்கிருந்தவனின் தோளில் பற்கள் தடம் பதித்து இரத்தம் வரும் அளவுக்கு கடிக்க, வலி தாங்கமுடியாமல் அவளை கீழே போட்டான். உடனே சுதாரித்துக்கொண்டு ஓடினாள் கோகி.
‘ஐயோ எந்த எடுபட்ட நாயிங்கன்னு தெரியலையே, என்னை ஏன் துரத்துறாங்க? அம்மா தாயே!, நானே ஒரு ப்ளோவ்ல ஓடுறேன். யாரும் குறுக்க வந்துடாமல் இருக்கனும். ஒடு கோகி ஓடு” என கூறியபடி வேகமாக ஓடினாள்.
“டேய் ஓடுறாள். அவளை புடிங்க, அவளை மட்டும் இன்னைக்கு விட்டுட்டோம். மருதுக்கு பதில் சொல்ல முடியாது போங்கடா” என தன் அடியாட்களை விரட்டினர் மருதுவின் அடியாட்கள்.
கோகிலா அதற்கு மேல் ஓட முடியாமல் ஒரு மரத்தின் மூட்டிற்குள் ஒதுங்கி நின்று கொண்டாள். ஊரை விட்டு தள்ளியிருந்த வயல்வெளி பகுதியில் நின்றிருந்தாள். அவர்களில் ஒருவன் கோகி ஒளிந்து இருப்பதை பார்த்துவிட்டு மெதுவாக பின்புறம் வர, அங்கே கிடந்த சருகை அவன் மிதித்ததும் சத்தம் கேட்டு திரும்பியவள், தன்னை ஒருவன் நெருங்கி விட்டான் என நினைத்தது மறுபடியும் ஓட்டம் பிடித்தாள், மூச்சு வாங்கியபடி ஓடி வரும் போது தன் முன்னாள் வந்தவன் மீது மோதி இருவரும் கீழே விழுந்தனர்.
விழுந்ததில் இருவரின் கால், கைகளிலும் லேசான சிராய்ப்பு ஏற்பட “எவன்டா அவன் நானே உயிரை கையில பிடிச்சிட்டு ஓடுறேன். இடையிலே இந்த கௌசிக் வருவேன்ற மாதிரி வந்தது” என பொங்கி எழுந்தால் கோகி. அங்கே நின்றிருந்தவனை பார்த்து “ஏன்டா நெட்டமரம் உனக்கு கண்ணு தெரியலையா, இப்படித்தான் கரடி மாதிரி வந்து மோதுவியா, அவ அவ உயிர கையில பிடிச்சு ஓடிட்டு இருக்காள் இவன் என்னனா, விளக்கெண்ணெய் மாதிரி வந்து நிக்கிறான் விளக்கெண்ணெய், சுத்தி பார்க்க வேற இடமே கிடைக்கலையா” என மூச்சி விடாமல் அவனை திட்ட, அவனோ யார்ரா இந்த பைத்தியம் என அவளை மேலும் கீழும் பார்த்தான். அவனின் தோள்பட்டை உயரம் கூட இருக்க மாட்டாள் கோகி.
“யார விளக்கெண்ணெய்னு சொன்ன, ஓங்கி ஒரு அரை விட்டேன்னு வச்சுக்கோ உன் முகரை பேந்துரும். ஆளை பாரு, இந்த இருட்டுல நீ இப்படி பேய் மாதிரி ஓடி வருவன்னு நான் என்ன கனவா கண்டேன் குள்ள கத்திரிக்கா”.
“ஏய் யார பார்த்துடா குள்ள கத்திரிக்காய்ன்னு சொன்ன?”
“டாவா, இங்கே நீ மட்டுதான்டி நிற்க்கிற, உன்னை பார்த்து தான் சொன்னேன்டி. குள்ள கத்திரிக்கா குள்ள கத்திரிக்காய்டிடிடிடி” என சத்தமாக குரல் கொடுக்க,
“உன்னை” என அங்கே கோகி கல்லை தேட, அவளை துரத்திக் கொண்டு வந்தவர்கள் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அவர்களைப் பார்த்ததும் பயந்து அவனின் பின்னால் சென்று நின்றாள்.
“இப்போ எதுக்கு என் பின்னாடி வந்து நிற்கிறிங்க ஹிரோயின் மேடம். அவனுங்களை நான் அடிக்க மாட்டேன். நான் ஒன்னும் ஹீரோ கிடையாது.”
“அதான் எனக்கு தெரியுமே, நீங்க ஒன்னும் ஹீரோ கிடையாது. காமெடிமேன். ஒழுங்கா அவங்களை விரட்டி விடுங்க”
“ஏய் அவனுங்களை பார்த்தியா எப்படி இருக்காங்கன்னு, அங்கே பாரு ஜிம் பாடி மாதிரி இருக்கானுங்க. நான் நோஞ்சான் மாதிரி இருக்கிறேன்”
“திங்கிற சோறு எல்லாம் நீ பனைமரம் வளத்தியில் வளர்றதுக்கு போய்ருக்கும்”
“ஆமாம்மா தாயே!, ஆளை விடு” என அவன் விலக பார்க்க…” ப்ளீஸ் எனக்காக ஹெல்ப் பண்ணுங்களேன், அவங்க எனக்கு யாருன்னு தெரியலை, போகும் போது வாயை பொத்தி கடத்திட்டு போக பார்க்கிறாங்க, கடத்திட்டு போய் எங்கேயாவது வித்துட்டாங்கன்னா, நான் என்ன பண்றது? நான் பாவம் இல்லையா.” என முகத்தை பச்சகுழந்தைபோல கோகி செய்ய,
“நீ உன் வாயை முதல்ல திறந்து பேசிருந்தால் அவனுங்க உன்னை கடைத்திருக்கவே மாட்டானுங்களே”
“அவனை முறைத்தாள் கோகி.”
“என்ன முறைக்கிற, உதவி கேட்பது இப்படியா கேட்பாங்க,”
“வேற எப்படி கேட்பார்களாம்?”
“பவ்யமாக, மரியாதையா கேட்கனும் குள்ள கத்திரிக்காய்”
“எனக்கெல்லாம் சாதாரணமா பேச வராது, நான் இப்படித்தான் பேசுவேன்”
“நல்லா பேசின போ” என சலித்து கொண்டான் கோகுல்.
“யோவ் இப்ப காப்பாற்றுவியா மாட்டியா?”
“மரியாதை, மரியாதை”
“ப்ளீஸ் சார் கொஞ்சம் காப்பாத்துங்களேன், அவங்களை விரட்டி விடுங்களேன்” என கோகி கெஞ்சுவது போல் பாவ்லா செய்ய,
“அவர்களின் புறம் திரும்பினான், யாருடா நீங்க உங்களை யாருடா அனுப்பி வச்சது”
“ஆமா உன்கிட்ட விலாவரியா அட்ரஸ் கொடுத்திட்டுதான் அடிப்பாங்க” என கோகி நக்கல் செய்ய
“ஏய் நீ என்ன சும்மா சும்மா அடி அடின்ற, அவங்களை பாரு அவங்களை அடிக்க முடியுமா? அவனுங்க ஒன்னா சேர்ந்து என்னை கைமா பண்ணிடுவாங்க”
“அதெல்லாம் பண்ண மாட்டாங்க பாக்க அப்படி இருந்தாங்கன்னா அவங்கள வீக்காதான் இருப்பாங்க. நீ ஒல்லியா இருந்தாலும் ஸ்ட்ராங்கா இருப்ப” என கோகி கோகுலுக்கு பாடம் எடுக்க…
“பரவாயில்லையே நல்லா மோட்டிவேஷன் பண்றியே!”
“நான் நர்ஸ் இல்லையா” என கெத்து காட்டினாள் கோகி…
“ ஓஹ்… நீங்க நர்ஸா சூப்பர். நான் டாக்டர்”
“எதே!”
“என்னை நீ பார்த்தது இல்லையா, ஆனால் நான் உன்னை பார்த்திருக்கேனே”
“என்னை நீ எப்போ பார்த்த, நான் ஏன் உன்னைய பாக்கணும்”
“நீ என்ன பாக்க வேண்டாம் நான் உன்னை பார்த்து இருக்கேன்னு சொன்னேன்” என்றான் கோகுல்.
“என்னை நீ எப்போ பார்த்த?”
“உங்க ஊர் திருவிழாவுல”
“ஓஹ் திருவிழாவுல வர்ற அழகான பொண்ணுங்களை சைட் அடிச்சிட்டு இருந்தியா”
“கண்ணுக்கு அழகா பொண்ணுங்க போகும்போது ரசிக்கிறது தப்பில்லையே. தப்பா தான் நடந்துக்க கூடாது. அந்த அழகான பொண்ணுங்க கூட்டத்துல உன் முகம் எப்படி என் கண்ணுல பட்டதூன்னு இப்போ வரைக்கும் தெரியலை.”
“சரிதான். எனக்கு நான் அழகுதான் டாக்டரே”
“நைஸ். நான் இந்த ஊர்ல பாலா இருக்கான்ல, அவங்க வீட்டுக்கு வந்து இருக்கேன் என் பெயர் கோகுல்” என்றதும் நன்றாக புரிந்து கொண்டால் சமருடன் மெடிக்கல் கேம்புக்காக வந்த டாக்டர்கள்” என்று
நைஸ் மீட்டிங் டாக்டரே,என்னை காப்பாற்ற கடவுளா உன்னை அனுப்பி வச்சிருக்கார்”