மச்சான் நீங்க வாங்க போகலாம் அது கிடக்கு லூசு என்ற சக்திவேல் அவனை அழைத்திட ஒரு ஐந்து நிமிசம் மச்சான் நான் வரேன் என்றவன் என்ன ரோனி இது ஏன் இப்படி பண்ணுற அப்படி எங்கே கூப்பிடுறாரு உன் அண்ணன் என்றான் உதயச்சந்திரன்.
மாமா அது கள்ளு இறக்கிற இடத்துக்கு போகுது. உங்களையும் குடிக்கச் சொல்லும் அதனால தான் வேண்டாம்னு சொல்லுறேன். நாளைக்கு அப்பாகிட்ட சொல்லி பதனி வாங்கி வர சொல்லுறேன். கள்ளு குடிக்காதிங்க என்றவளைப் பார்த்து சிரித்தவன் இதற்குத் தானா என்றான்.
உங்க அண்ணன் கள்ளு குடிக்கட்டும் நான் குடிக்க மாட்டேன் போதுமா. அவர் கூட சும்மா துணைக்கு தான் போகிறேன். அவர் உன்னோட அண்ணன். என்னை மதிச்சு கூப்பிடுறார் தானே அந்த மரியாதைக்காக நான் போயிட்டு வரேன் நீ அமைதியா ரூபன் கூட விளையாடு. அப்பறம் அர்ஜுன், நிகிலா, கிஷோர் எல்லாம் நீ ஏன் ஸ்கூலுக்கு வரவில்லைனு மெசேஜ் பண்ணிருக்காங்க நீ போயி அவங்களுக்கு பதில் அனுப்பு என்றான் உதயச்சந்திரன்.
மாமா நீங்க குடிக்க கூடாது. கள்ளு உடம்புக்கு நல்லது தான் ஆனாலும் நீங்க குடிக்க கூடாது என்றவளிடம் நீ தான் சொல்லிட்டியேம்மா அப்பறம் நான் ஏன் குடிக்கப் போகிறேன் என்ற உதயச்சந்திரன் சக்திவேலுடன் கிளம்பினான்.
என்னடி உன் அண்ணன் கூட சண்டை போட்டுட்டு இருந்த என்ற தேன்மொழியிடம் அவரையும் கள்ளு குடிக்க கூப்பிட்டுச்சு அதான் என்ற வெரோனிகா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருந்தாள். ஏன்டி உன் அண்ணன் எப்பவாச்சும் சந்தோசமா இருக்கும் பொழுது தான் போவாரு. இன்னைக்கு உன் வீட்டுக்காரரை பார்க்கவும் அவருக்கு ஒரு சாக்கு விடுடி. அவரு கள்ளு தவிர சாராயம் அது இதுனு எதாச்சும் குடிக்கிறவரா என்ற தேன்மொழி நீ வா சாப்பிடு என்று பலகாரத்தை அவளிடம் நீட்டினாள்.
இல்லை அண்ணி வேண்டாம் என்றவளை முறைத்த தேன்மொழி உனக்காக தானே செய்திருக்கிறேன். ஒழுங்கா சாப்பிடு என்றாள். அவள் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தவள் நிகிலாவின் மெசேஜ் பார்த்துவிட்டு ஊருக்கு வந்திருக்கிறேன் என்று பதில் அனுப்பி விட்டு போனை ஓரமாக வைத்தாள்.
என்ன மச்சி சோகமா இருக்க போல என்ற விஷாலை முறைத்த அர்ஜுன் நான் நார்மலா தான் இருக்கேன். நீ மூடிட்டு போ என்றான். ரோனி வராமல் இருக்கவும் பையன் கூடிய சீக்கிரம் தாடி வளர்த்திடுவானோ என்ற கிஷோரை முறைத்தவன் அவள் என்னோட ப்ரண்ட் அவ்வளவு தான். சும்மா எதாச்சும் நீங்களே கிரியேட் பண்ணி விடாதிங்கடா என்ற அர்ஜுன் கோபமானான்.
டேய் நாங்க நமக்குள்ள தானடா சொன்னோம் என்ற விஷாலிடம் நமக்குள்ள கூட அப்படி சொல்லாதே. அவள் நம்ம ப்ரண்ட் நம்மளை நம்பி தான் நம்ம கூட பழகுகிறாள். அவளையும், என்னையும் சேர்த்து நீங்க கேலி பண்ணுறது அவளுக்கு தெரிந்தால் நிச்சயம் வருத்தப்படுவாள் அதனால தான் சொல்கிறேன். புரிஞ்சுக்கோங்கடா என்ற அர்ஜுன் அவளை எனக்கு பிடிக்கும் ப்ரண்ட்டா மட்டும் தான் அதை நீங்க ஞாபகம் வச்சுக்கோங்க என்ற அர்ஜுன் வீட்டிற்கு கிளம்பினான்.
என்னாச்சுடா இவனுக்கு என்ற கிஷோரிடம் அவனுக்கு நாம கிண்டல் பண்ணுறது பிடிக்கலைனா விட்றலாம். ரோனி நமக்கும் ப்ரண்ட் தானே நம்ம ப்ரண்ட்ஸ் பற்றி நாமளே தப்பா எதுவும் சொல்லிடக் கூடாது என்றான் விஷால். சரி ஓகேடா என்ற கிஷோரும் அவனது வீட்டிற்கு கிளம்பினான்.
என்ன சொல்லுற அர்ச்சு என்ற விவேக்கிடம் என்னத்த சொல்ல அம்மா நம்ம விசயத்தை சொன்னதில் இருந்து கோபமா இருக்காங்க. சரி அண்ணாகிட்ட சொல்லலாம்னு நினைத்தால் அவரும், ரோனியும் தலை ஆடி கொண்டாட போயிருக்காங்க என்றவள் சோகமாக அமர்ந்தாள்.
நான் அம்மாகிட்ட சொல்லிட்டேன் அர்ச்சு. அம்மா நமக்கு சப்போர்ட் தான் அதனால நீ கவலைப் படாதே என்றவன் நம்ம கல்யாணம் கட்டாயம் நடக்கும் என்றவன் நேரம் ஆச்சு நீ வீட்டுக்கு கிளம்பு என்றான். அவளும் சரியென்று கிளம்பினாள்.
என்ன சுசீ ஏன் ஒரு மாதிரி இருக்க என்ற மலர்கொடியிடம் இல்லைக்கா இந்தப் பொண்ணு இல்லாதது வீடே வெறிச்சோடி இருக்குதுல. அவள் வாய் ஓயாமல் நம்ம கிட்ட பேசிட்டே இருப்பாள். அதை செய்கிறேன், இதை செய்கிறேன்னு அவளோடவே பொழுது போகுமா இப்போ அவள் இல்லாதது கை ஒடஞ்சது போல இருக்கு என்றார் சுசீலா.
ஆமாம் சுசி அவள் நம்ம கூட தானே அதிக நேரம் இருப்பாள். எனக்கும் ரோனி இல்லாமல் இருக்கிறது ஒருமாதிரி தான் இருக்கு என்றவர் சரி சரி எங்கே போயிட்டாள் நாளைக்கு வந்துருவாள் என்று சமையல் வேலையை கவனிக்க ஆரம்பித்தார் மலர்கொடி.
என்னடி உன் புருசனோட சந்தோசமா இருக்கியா என்ற வசந்தியிடம் சந்தோசமா இருக்கிறேன் பெரியம்மா என்றாள் வெரோனிகா. நாள் எதுவும் தள்ளிப் போயிருக்கா என்ற வசந்தியிடம் அக்கா என்ன கேள்வி கேட்கிறிங்க அவள் சின்னப் பொண்ணு பள்ளிக்கூடம் போகுற வயசுல பிள்ளை பெத்துக்கனுமா என்றார் பூங்கொடி.
என்னடி இது வம்பா போச்சு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சா அடுத்த கேள்வி விசேசம் எப்போ தானே என்ற வசந்தி நான் கூட உங்க அத்தானை கல்யாணம் பண்ணிக்கும் பொழுது பதினாறு வயசு பொண்ணு தான் என்றார் வசந்தி.
பதினேழு வயசிலே சக்தியை பெத்துட்டேன் என்றதும் அப்போ வேற, இப்போ வேற. இந்த வயசுல இவள் மாசமா இருந்தால் மைனர் பொண்ணை ரேப் பண்ணிட்டாருனு நம்ம மாப்பிள்ளை மேல நாம கம்ப்ளையண்ட் கொடுக்காமலே நடவடிக்கை எடுப்பாங்க. மைனர் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சதுக்கு மொத்த குடும்பமும் கம்பி எண்ண வேண்டியது தான் என்ற பூங்கொடி நீ உள்ளே போடி என்று மகளை அனுப்பி வைத்தார்.
இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இந்த ஆட்டம் போடுற என்ற வசந்தி அவளும் என் பொண்ணு தானே. வினோதா கிட்ட என்ன கேட்பேனோ அதைத் தானே நான் ரோனிகிட்ட கேட்டேன் என்று புலம்பிட நான் எங்கே ஆட்டம் போட்டேன். அவளுக்கும், வினோதாவுக்கும் உள்ள வயசு வித்யாசம் கூடவா உங்களுக்கு புரியவில்லை என்ற பூங்கொடி உங்களுக்கு என்ன பிரச்சனை நல்ல நாள் பெரிய நாள் எதாச்சும் வந்துட்டாள் போதும் எதாச்சும் சொல்லி வம்பு வளர்க்கிறதே வேலையா போச்சு என்று பூங்கொடி சென்று விட்டார்.
ஆமாம்டி நான் தான் கலகக்காரி. எல்லாம் நான் பெத்த கடன்காரியை சொல்லனும் அமோகமா வாழ வேண்டிய வாழ்க்கையை கெடுத்துட்டு ஒரு கேடு கெட்டவனோட ஓடிப் போனாளே என்றார் வசந்தி.
யாரு கேடு கெட்டவன். அந்த கேடு கெட்டவனோட தங்கச்சியைத் தான் உங்க மகனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுருக்கிங்க அதை மறந்திடாதிங்க என்றார் பூங்கொடி. கூடப் பிறந்தால் தான் அண்ணன்னு இல்லையே என்ற பூங்கொடியிடம் அத்தை விடுங்க ஏன் பேச்சை வளர்க்கிறிங்க. நம்ம ரோனி தலை ஆடிக்கு வந்திருக்கிறாள். இந்த நேரம் இப்படி நீங்க இரண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருந்தால் அவளும், அவள் புருசனும் என்ன நினைப்பாங்க. அவங்க வந்தது பிடிக்காமல் நீங்க இப்படி பண்ணுறிங்கனு நினைக்க மாட்டாங்களா என்றாள் தேன்மொழி.
அவள் வந்தது பிடிக்காமல் தானே இப்படி பேசுறாங்க என்ற பூங்பொடி கோபமாக சென்று விட நான் அப்படி நினைப்பேனா தேனு என்றார் வசந்தி. எனக்கு மனசுல சின்ன வருத்தம் இருக்கு அது கூட வினோதா மேல தானே தவிர ரோனி மேல இல்லை. அவள் என்ன பேச்சு பேசிட்டாள் பாரேன் என்ற வசந்தி கண் கலங்கிட அவரை சமாதானம் செய்தாள் தேன்மொழி.
என்னம்மா நீங்க ஏன் பெரியம்மா கூட எப்ப பாரு சண்டை போட்டுட்டே இருக்கிங்க. எங்க வீட்டில் என் இரண்டு அத்தையும் எவ்வளவு அந்நியோன்யமா இருக்காங்க தெரியுமா என்றாள் வெரோனிகா. உன் பெரியம்மா மாதிரி அவங்க பொறாமை பட்டதில்லையே என்ற பூங்கொடியிடம் அம்மா என்று அவள் ஏதோ கூற வர நீ போ போயி உன் வேலையைப் பாரு என்று திட்டிவிட்டு சென்றார் பூங்கொடி.
என்ன மச்சான் இது நீங்க வேண்டாம்னு சொல்லுறிங்க என்ற சக்திவேலிடம் இல்லை மச்சான் வெரோனிகாவுக்கு பிடிக்காது. அவள் கிட்ட குடிக்க மாட்டேன்னு சொல்லிட்டு வந்துட்டு அதை மீறி இப்போ குடித்தால் அவளோட நம்பிக்கையை உடைச்சது மாதிரி ஆகிடும் அதனால வேண்டாம் என்றான் உதயச்சந்திரன்.
அதற்கு மேல் அவனை வற்புறுத்தாமல் சரி கள்ளு குடிக்க வேண்டாம் இந்த வாத்துக்கறியாவது சாப்பிடுங்க என்றான் சக்திவேல். முயல்கறி தான் ஏற்பாடு பண்ணிருப்பேன். ஆனால் மாமன், மச்சானுக்குள்ள முயல்கறி விருந்து ஆகாது என்ற சக்தியைப் பார்த்து புன்னகைத்தவன் கறியை சாப்பிட்டான்.
என்ன சக்தி யாரு இது விருந்தாளியா என்ற செல்வத்தை முறைத்தான் சக்திவேல். மச்சான் நீங்க வாங்க நாம போகலாம் என்று உதயச்சந்திரனை அழைத்துக் கொண்டு செல்ல எழுந்தவனை மீண்டும் வம்பிழுத்தான் செல்வம். என்ன மச்சான் தங்கச்சி புருசனாச்சேன்னு விசாரித்தால் இப்போ தான் ரொம்ப முறுக்கிட்டு போகிற என்றவனிடம் உன் தம்பி பண்ணின காரியத்திற்கு உன் கூட ஒட்டி உறவாடுவாங்களா போயிரு மரியாதையா என்ற சக்திவேல் கோபமாக பேசிட செல்வமும் ஏதோ சொல்ல வர ப்ளீஸ் விடுங்க. எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசுங்க.
இரண்டு பேருமே கொஞ்சம் நிதானம் இல்லாமல் இருக்கிங்க என்ற உதய் சக்தியை அழைத்துச் சென்றான்.
பங்காளி நீங்க சொல்றதால நானும் கேட்டுக்கிறேன். எங்க ரோனி தங்கமான பிள்ளை நல்லபடியா பார்த்துக்கோங்க என்றான் செல்வம்.
யாரு மச்சான் அவரு என்ற உதயச்சந்திரனிடம் தேன்மொழியோட பெரியப்பா மகன் எங்க பூங்கொடி சித்தியோட அண்ணன் மகன் என்றான் சக்தி.
இவனோட தம்பிகூட தான் அந்த ஓடுகாலி ஓடிப்போனாள் என்றான் சக்தி கோபமாக. அவனை ஒரு வழியாக வீட்டிற்கு இழுத்து வந்தான் உதயச்சந்திரன்.
என்ன பண்ணி வச்சுருக்க பூங்கொடி உங்க இரண்டு பேருடைய இந்தியா_ பாகிஸ்தான் சண்டை எப்பவுமே தீராதா. பொண்ணும், மாப்பிள்ளையும் விருந்துக்கு வந்த நேரமும் இப்படித் தான் சண்டை போடுவிங்களா என்று தலையில் அடித்துக் கொண்டார் கதிரேசன்.
உங்க அண்ணி பண்ணுறது எல்லாம் தப்பாவே தெரியாது என்ற பூங்கொடியிடம் நீ தான் விட்டுக் கொடுத்துப் போனால் தான் என்ன என்ற கதிரேசன் நம்ம பொண்ணு கல்யாணம் முடிஞ்சு வந்திருக்கிறாள். அவளுக்கு யாரோட சாபமும் வரவே கூடாதுனு நான் நினைக்கிறேன். நீ அதை
புரிஞ்சுக்கவே மாட்ட என்று கோபமாக சென்று விட்டார் கதிரேசன்..
…தொடரும்…