விதியின் முடிச்சு..(42)

4.2
(6)

என்ன பேசுற நீ தனியா எப்படி போவ பத்து நாள் தானே பொறுக்க மாட்டியா என்றவனிடம் நீங்க என்னை அனுப்பி வைக்கவில்லைனா நான் தனியாவே போவேன் என்றவளை முறைத்தவன் ஓஓ அவ்வளவு தூரம் மேடம் பெரிய மனுஷி ஆகிட்டிங்களா என்றான் உதயச்சந்திரன்.

ஏன் நான் என்ன ஒன்றும் தெரியாத சின்னப் பொண்ணா இன்னும் இரண்டு வாரத்தில் எனக்கு பதினெட்டு வயசு என்றவளிடம் என்ன பிரச்சனை உனக்கு ஏன் என் கூட சண்டை போடுற என்றான் உதயச்சந்திரன்.

ஆமாம் உங்களோட சண்டை போடுறது தானே என்னோட வேலை என்றவளிடம் இப்போ அது தானே பண்ணிட்டு இருக்க உனக்கு என்னடி பிரச்சனை என்றான் உதய் கோபமாக.

எனக்கு என்ன பிரச்சனை என்ற வெரோனிகா அதான் உங்களுக்கு என்னை பிடிக்கவில்லையே அப்பறம் எனக்கு என்ன பிரச்சனை இருந்தால் உங்களுக்கு என்ன என்றவள் கோபமாக சென்றிட ரோனி நில்லு என்றவன் அவளது கைகளைப் பிடித்தான்.

என்னடி உன் பிரச்சனை சொன்னால் தானே எனக்கு தெரியும் என்றவனிடம் என்ன சொல்லனும். எப்படி மாமா உங்களுக்கு கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா என்ன பிரச்சனைனு கேட்கிறிங்க உங்களுக்கு என் மேல காதல் வராதுனு சொன்னப்ப எல்லாம் சும்மா விளையாட்டுக்கு சொல்லுறிங்கனு தான் நினைச்சேன். ஆனால் இப்போ தான் புரியுது உங்களுக்கு ஏன் என்மேல காதல் வராதுனு என்றாள் வெரோனிகா.

ஏன் எனக்கு உன் மேல காதல் வராது நீ என்ன சொல்லுற என்றவனிடம் ஏன்னா உங்களுக்கு தான் வேற பொண்ணோட கல்யாணம் முடிஞ்சு ஒரு குழந்தையும் இருக்கே என்றாள் வெரோனிகா. அவளைப் பார்த்து புன்னகைத்தவன் அப்போ இத்தனை நாளா இதனால தான் மேடம் என்கிட்ட பேசக் கூட இல்லையா என்றான் உதயச்சந்திரன்.

மாமானு கூட கூப்பிடுறதில்லை என்றவன் நீ என்னை அவ்வளவு சீப்பா நினைச்சுட்டில ரோனி என்றவன் அன்னைக்கு நீ ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ல பார்த்தது நான் இல்லை. என்னோட தம்பி தேவச்சந்திரன். நாங்க இரண்டு பேரும் இரட்டையர்கள் என்றான் உதயச்சந்திரன்.

மாமா என்றவளிடம் இனிமேல் அப்படி கூப்பிடாதே வெரோனிகா. அன்னைக்கு என்னம்மோ சொன்ன உங்க வாசம் எனக்கு தெரியும் மாமா. உங்களை மாதிரி  வேற ஒருத்தர் என் முன்னே நின்றால் என் உள்ளுணர்வு சொல்லும் மாமான்னு அன்னைக்கு உன்னோட உள்ளுணர்வு சொல்லவில்லையா வெரோனிகா என்றான் உதயச்சந்திரன்.

மாமா அது என்றவளிடம் வேண்டாம் என்னை அப்படி கூப்பிடாதேன்னு சொல்லிட்டேன் என்றவன் உன் மனசுல என்னைப் பற்றி அப்போ என்ன நினைச்ச நான் வேற பொண்ணை கல்யாணம் பண்ணி , குழந்தை இருக்கும் பொழுது உன்னை கல்யாணம் பண்ணிட்டேன்னு தானே. அந்த அளவு நான் கேவலமான பிறவியா வெரோனிகா.

இந்த பதினோரு மாதம் நாம இரண்டு பேரும் ஒரே அறையில் தான் இருக்கிறோம். நான் என்னைக்காவது இரவில் வெளியில் செல்வதை நீ பார்த்திருக்கியா என்றவனிடம் இல்லை என்றாள். அப்பறம் எப்படி என்னை சந்தேகப் படுற என்றவனிடம் மாமா அவங்க உங்களை மாதிரி இருக்கவும் குழம்பிட்டேன் என்றவள் அன்று கண்ட கனவையும் கூறிட ஓஓ அதனால தான் அப்போ நீ என்கிட்ட முகம் கொடுத்து கூட நீ பேசலையா என்றான்.

அவள் மௌனமாகிட இப்பவும் உனக்கு சந்தேகம் இருந்தால் ஒரு பத்து நிமிசம் என்றவன் யாருக்கோ போன் செய்தான்.

ஹலோ என்ற தேவச்சந்திரனிடம் நான் உதயச்சந்திரன் பேசுகிறேன் நீயும், உன் குடும்பமும் கொஞ்சம் எங்க வீட்டுக்கு வர முடியுமா என்றான் உதயச்சந்திரன். என்ன விசயம் என்ற தேவச்சந்திரனிடம் நான் உன்கிட்ட பர்மிசன் கேட்கவில்லை நீ வரணும் இது என்னோட ஆர்டர் என்றவன் போனை வைத்தான்.

ஸ்ரீஜா கிளம்பு என்ற தேவச்சந்திரனிடம் எங்கே என்றாள் ஸ்ரீஜா. நம்ம வீட்டுக்கு உதய் நம்மளை அங்கே வரச் சொன்னான் என்றவனை முறைத்தவள் நாம அங்கே போக வேண்டாம்னு அன்னைக்கே சொன்னேன்ல என்றவளிடம் நாம அங்கே வரணும்கிறது அவனோட ஆர்டர் வா என்றவன் மனைவி குழந்தையுடன் தன் தந்தையின் வீட்டிற்கு கிளம்பினான்.

இன்னும் பத்து நிமிசம் உன் சந்தேகத்திற்கான பதில் கிடைச்சுரும் என்றவனிடம் மாமா நான் உங்களை சந்தேகப் படவில்லை என்றாள் வெரோனிகா. சந்தேகம் படாமல் தான் என் கூட இத்தனை நாளா பேசாமல் இருந்தியா வெரோனிகா என்றான் உதயச்சந்திரன். மாமா அது என்றவளிடம் தயவுசெய்து என்னை அப்படி கூப்பிடாதே வெரோனிகா என்றான். ஏன் மாமா என்றவளிடம் நீ என்னை புரிஞ்சுகிட்டனு நினைச்சேன்.

அந்த வினித்ரா மேடம்கிட்ட பேசுன விசயம் தெரிஞ்சப்ப நீ நடந்துகிட்ட முறையை நினைச்சு எவ்வளவு பெருமைப் பட்டேன் தெரியுமா. நம்ம மனைவிக்கு நம்ம மேல எவ்வளவு நம்பிக்கை, மரியாதைன்னு ஆனால் நீ என்னை சந்தேகம் பட்டிருக்க என்றவன் வாசலில் கார் சத்தம் கேட்கவும் என் கூட வா என்று அவளை இழுத்துச் சென்றான்.

எங்கே வந்திங்க என்ற மலர்கொடியிடம் உதய் தான் எங்களை வரச் சொன்னான் என்றான் தேவ். அவன் சொன்னால் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் இரண்டு பேரும் கிளம்பி வந்துருவிங்களா என்றார் மலர்கொடி. அம்மா என்று ஏதோ கூற வந்தவனின் கன்னத்தில் அறைந்தவர் யாருக்கு யாருடா அம்மா பொறுக்கி எனக்கு இருக்கிறது ஒரே மகன் தான். என் உதய் மட்டும் தான் என்றார் மலர்கொடி.

அம்மா என்று வந்த உதயச்சந்திரனிடம் எதற்காக உதய் இந்த பொறுக்கியை வரச் சொன்ன என்றார் மலர்கொடி. அன்னைக்கு இவனைப் பார்த்துட்டு நான் தான்னு தப்பா  நினைச்சுட்டாள் உங்க மருமகள். அவளோட சந்தேகத்தை ஒரு கணவனா நான் தீர்த்து வைக்கனும் அப்போ தான் எங்களோட இல்லற வாழ்க்கையில் பிரச்சனை வராது என்றான் உதயச்சந்திரன்.

பாரு வெரோனிகா அன்னைக்கு நீ பார்த்தது என்னை இல்லை இவனைத் தான் இவன் என் தம்பி தேவச்சந்திரன், இவங்க அவனோட மனைவி ஸ்ரீஜா என்றான்.

அம்மா இனிமேல் இவங்க இங்கேயே தங்கட்டும் என்றவனிடம் உதய் என்று மலர் ஏதோ சொல்ல வர நான் சொல்கிறேன்லம்மா என்ற உதயச்சந்திரன் வெரோனிகாவை தன்னறைக்கு இழுத்துச் சென்றான்.

 

இப்போ சந்தேகம் தீர்ந்து விட்டதா வெரோனிகா என்றவனிடம் மாமா என்று அவள் கூற வர அவளை அவன் முறைத்தான். நீங்க முறைத்தாலும் நான் அப்படித் தான் கூப்பிடுவேன் மாமா என்னை மன்னிச்சுருங்க என்னால நீங்கள் இல்லாமல் வாழ முடியாது மாமா. உங்களை எங்கே இழந்துட்டேனோங்கிற தவிப்பு, பயம் எல்லாம் தான் என்றவள் கண்கள் கலங்கி அவனது கால்களைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

அவளைத் தூக்கி நிறுத்தியவன் என்னைப் பாரு என்றான். அவள் குனிந்திருக்க எனைப் பாரு வெரோனிகா என்று அவளது முகத்தை நிமிர்த்தினான். எனக்கு உன்னைப் பிடிக்கும். உன்னை காதலிக்கவில்லைனு தான் சொன்னேன் அதற்காக உனக்கு துரோகம் பண்ணிட்டு இன்னொருத்தி கூட வாழ்வேன்னு நினைக்கிறதா. என்னோட வாழ்க்கையில் யாரு வந்திருந்தாலும் சரி நீ தான் என்னோட மனைவி். ஒருவேளை நாளைக்கு உனக்கும் என்னை பிடிக்காமல் வேறு வாழ்க்கையை நீ தேர்ந்தெடுக்க முடிவு எடுத்தாலும் உனக்கு துணையா தான் இருப்பேன் என்றவன் சென்று விட்டான்.

அவன் சென்ற பிறகு அவள் அழுது கொண்டே இருந்தாள். எத்தனை நேரம் அழுதாளோ அப்படியே உறங்கிப் போனாள்.

உதய் நீ என்ன பண்ணிருக்க என்ற நெடுமாறனிடம் அவனும் உங்க மகன் தானப்பா என்றான் உதயச்சந்திரன். மகனா என்னைக்கு நீ கட்டிக்க இருந்த பொண்ணை அவன் கல்யாணம் பண்ணினானோ அப்பவே அவனை தலை முழுகிட்டேன். நீ எவ்வளவு அவமானம் பட்டு நின்ன அதை உன் அப்பா அவ்வளவு சீக்கிரம் மறந்துருவேனா என்ற நெடுமாறனிடம் நானே மறந்துட்டேன் அப்பா என்றான் உதயச்சந்திரன். நீ மறக்கலாம் உதய் என்னால மறக்கவே முடியாது என்றவர் அவன் இந்த வீட்டில் இருக்க கூடாது என்றார். அவனுக்காக இல்லைப்பா அந்த குழந்தைக்காக பெரியவங்க பண்ணின தப்பில் அந்த குழந்தை தான் கஷ்டம் படுது என்ற உதயச்சந்திரன் தன் தந்தையிடம் எனக்காக நீங்க அவங்களை ஏத்துக்கனும் என்றான்.

உனக்காக அவங்களை பொறுத்துக்கிறேன் உதய் ஆனால் ஏற்றுக் கொள்ள முடியாது என்ற நெடுமாறன் சென்று விட இந்திரஜா அங்கு வந்தாள்.

மாமா என்றவளிடம் என்ன இந்து என்றான் உதயச்சந்திரன். மாமா அன்னைக்கு ரோனி உங்களை வேணும்னு சந்தேகப் படவில்லை அன்னைக்கு ஸ்ரீஜா அவளை வெறுப்பேத்திட்டு இருந்தாள். அந்த நேரம் தேவ் மாமா வரவும் ரோனி நீங்க தான் அதுன்னு தப்பா புரிஞ்சுகிட்டாள். என்னை மன்னிச்சுருங்க மாமா  நீங்க ரோனியை திட்டினதை நானும் கேட்டேன்.

அவளுக்கு உங்களுக்கு தம்பி இருக்கிற விசயம் தெரியுமா என்ற இந்திரஜாவிடம் தெரியாது என்றான் உதயச்சந்திரன். அப்போ அவள் என்ன பண்ணுவாள் மாமா. உங்களைப் போல உருவத்தில் ஒரு தம்பி இருக்கிற விசயம் தெரிந்திருந்தால் அந்தப் பொண்ணு உங்களை சந்தேகம் படப் போகுதா என்ன. அது மட்டும் இல்லாமல் அவள் சின்னப் பொண்ணு அவளோட இடத்தில் இருந்து கொஞ்சம் யோசிச்சு பாருங்க.

உள்ளுணர்வு சொல்வதெல்லாம் அந்த நேரத்தோட சூழ்நிலையைப் பொறுத்தது. அவள் முன்னே திடீரென்று உங்களைப் போல ஒருத்தர் வரவும் அவளால யோசிக்க முடியவில்லை அவ்வளவு தான் என்றாள் இந்திரஜா.

 

மாமா வெரோனிகா கூட பழகிப் பார்த்ததில் சொல்கிறேன் அவள் ரொம்ப நல்ல பொண்ணு மாமா. உங்க மேல உயிரையே வச்சுருக்கிறாள். அவள் மேல கோபம் படாதிங்க ப்ளீஸ் என்றாள் இந்திரஜா. அவள் மேல கோபம் பட்டு நான் எங்கே போகப் போறேன் இந்து அவள் மேல எனக்கு எந்த கோபமும் இல்லை என்றவன் அப்பறம் தாங்க்ஸ் இந்து என்று விட்டு தன் அறைக்கு சென்றான்.

உறங்கிக் கொண்டிருந்த வெரோனிகாவின் முகத்தின் வீக்கமே சொல்லியது அவள் எவ்வளவு அழுதிருக்கிறாள் என்று. அவளது தலையை கோதியவன் வெரோனிகா என்று அவளை எழுப்பினான். மெல்ல எழுந்தவளிடம் உன் டிரஸ் எல்லாம் எடுத்து வை நாளைக்கு உன்னை உன் ஊருக்கு பஸ் ஏற்றி விடுகிறேன் என்றான்.

அவனை மலங்க மலங்க பார்த்தவள் நான் போகவில்லை மாமா என்றாள். ஏன் போகவில்லை நீ தானே உன் அம்மாவை பார்க்கனும்னு ஆசைப் பட்ட அதனால கிளம்பு என்றான். மாமா என்று அவள் ஏதோ கூற வர நீ எல்லாம் எடுத்து வச்சுட்டு சொல்லு என்றவன் பால்கணிக்கு சென்றான்.

மாமா என்றவள் என்ன இவரு நான் அப்போ கோபத்தில் ஊருக்கு போறேன்னு சொன்னேன். இப்போ தான் என் கோபம் எல்லாம் அர்த்தமே இல்லாமல் போச்சே என்று வருந்தியவள் மாமா என்று அவனைத் தேடிச் சென்றவள் அதிர்ந்தபடி நின்றுவிட்டாள்.

 

…..தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.2 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!