தேவ் மாமா என்ற வெரோனிகாவிடம் என்னங்க அண்ணி என்றான் தேவச்சந்திரன். இன்னைக்கு பிரகாஷ் மாமா பர்த்டே நாங்க எல்லோரும் அவங்களுக்கு விஷ் பண்ண போகிறோம் நீங்களும் வருகிறீர்களா என்றாள் வெரோனிகா.
அவன் தயங்கி நிற்க என்ன மாமா அவர் உங்க தம்பி தானே என்ற வெரோனிகாவிடம் என்கிட்ட பேச மாட்டான் அண்ணி என்றான் தேவ். அட அவர் பேசலைனா என்ன நீங்க பேசுங்க உங்க தம்பி தானே விட்டுக் கொடுக்க மாட்டிங்களா என்ற வெரோனிகாவிடம் வரேன் அண்ணி என்ற தேவ் அவர்களுடன் சென்றான்.
அறைக்கதவு தட்டப் படவும் எவன்டா அவன் நடு ராத்திரியில் தூக்கத்தை கெடுத்துக்கிட்டு என்ற பிரகாஷ் உறங்கிக் கொண்டு இருக்க அறைக் கதவு மீண்டும் தட்டப்பட்டது. ஜன்னல் கதவுகள் வேறு பட படவென அடித்திட அவன் அலறி அடித்து எழுந்து பார்த்தாள் மணி பனிரெண்டு. இந்த நேரத்தில் யாரு நம்ம தூக்கத்தைக் கெடுக்கிறது என்று கதவைத் திறந்தான்.
ஹாப்பி பர்த்டே பிரகாஷ் என்று மொத்த குடும்பமும் கத்திட அம்மா பேய் என்று அவன் அலறி விழுந்தான். ஒரு நிமிடம் கண்ணைக் கசக்கி அவன் பார்த்திட தேவ் சென்று விளக்கை ஒளிர விட்டான்.
ஐய்யோ நம்ம வீட்டு ஆளுங்க தானா அடப்பாவிகளா நடுசாமத்தில் எனக்கு பிறந்த நாள் கொண்டாடவில்லைனு யாருடா அழுதா இப்படி நல்லா தூங்கிட்டு இருந்தவனை நடுராத்திரி பனிரெண்டு மணிக்கு கதவைத் தட்டி தூக்கத்தைக் கெடுத்து எழுப்பி மொத்தக் குடும்பமும் பேய் மாதிரி ஹாப்பி பர்த் டே பிரகாஷ்னு கத்துறானுகளே என்று புலம்பியவனை அனைவரும் முறைத்திட ஐயோ, மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசிட்டோமோ என்ற பிரகாஷ் திரு திருவென விழித்தான்.
என்ன மாமா நாங்க எல்லோரும் பேயா என்ற வெரோனிகாவிடம் இல்லை அண்ணி என்றவன் தலையை சொறிய சரி, சரி போங்க போயி பல்லு விளக்கிட்டு வாங்க கேக் வெட்டலாம் என்றாள் வெரோனிகா. பல்லு விளக்கவா என்றவனிடம் பின்னே ஊத்த வாயோட கேக் சாப்பிடுவாங்களா என்ற வெரோனிகா அவனைப் பிடித்து இழுத்து குளியலறைக்குள் தள்ளி விட்டாள்.
அண்ணியா இது பிசாசு இப்படி நடுசாமத்தில் பல்லு விளக்குனு பாத்ரூம்க்குள்ள தள்ளி விடுதே என்று நினைத்தவன் பல் துலக்கி விட்டு வெளியே வர ஹாப்பி பர்த் டே பிரகாஷ் மாமா என்று கேக்கை நீட்டினாள் வெரோனிகா.
மொத்த குடும்பமும் அவனுக்கு வாழ்த்து சொல்லிட பிரகாஷ் கேக்கினை வெட்டியவன் முதல் பீஸை தன் அப்பத்தாவிற்கு ஊட்டியவன் அடுத்த பீஸ் கேக்கை அவனது அம்மா, பெரியம்மா இருவருக்கும் ஊட்டிவிட்டான். அடுத்த பீஸ் ரோனிக்கு ஊட்டியவன் தாங்க்ஸ் அண்ணி என்றிட எதற்கு மாமா தாங்க்ஸ் எல்லாம் என்றாள் வெரோனிகா.
அனைவரும் அவனுக்கு வாழ்த்து சொல்லி விட்டு அவரவர் அறைக்கு சென்ற பிறகு இந்திரஜா மட்டும் நின்றிருந்தாள். என்ன இந்து நீ போகவில்லையா என்றவனிடம் ஹாப்பி பர்த் டே பிரகாஷ் என்றாள். தாங்க்ஸ் இந்து என்றவனிடம் உனக்கு என்னை பிடிக்கும்னு தெரியும் பிரகாஷ் ஆனால் நீ வீட்டு பெரியவங்க மனசுல என்ன இருக்குனு தெரியாமல் ஆசையை வளர்த்துக்க கூடாதுன்னு யோசிக்கிற. நான் இங்கே வரும் பொழுது உதய் மாமாவை கல்யாணம் பண்ணிக்கனும்கிற எண்ணத்தில் தான் வந்தேன். வந்த பிறகு தான் எனக்கு தெரிஞ்சது அவருக்கு கல்யாணம் முடிஞ்சுருச்சுனு அவர் மேல காதல் எல்லாம் கிடையாது. ஸ்ரீஜாவுக்காக மட்டும் தான் அவரை கல்யாணம் பண்ணிக்க நினைச்சேன்.
ஆனால் உன்னை நிஜமாவே ரொம்ப பிடிச்சதனால தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிறியானு சூசகமா அன்னைக்கு கேட்டேன். நீ உன்னோட பதிலை அர்ச்சனாகிட்ட சொன்னது எனக்கு தெரியும். உன்னோட நிலைமை புரியுது பிரகாஷ் என் அக்கா கூட உதய் மாமாவை லவ் பண்ணிட்டு கடைசி நேரத்தில் தேவ் மாமாவைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அடம் பிடிச்சாளே அது போல நானும் பண்ணிருவேனோன்னு நீ பயப்படுகிறாயோ என்னவோ என்றவளிடம் இந்து அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நீ ஏன் என்றவனிடம் இல்லை பிரகாஷ் நீ அப்படி நினைக்கிறது தப்பில்லை என்றவள் ஆனால் சத்தியம் பிரகாஷ் உன்னைத் தவிர வேற யாரையுமே நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்றவள் வெட்கத்தை விட்டு சொல்கிறேன் எனக்கு உன்னை பிடிச்சுருக்கு. ஐ லவ் யூ என்றவள் உன்னோட பதிலை நீ சொல்ல வேண்டாம் பிரகாஷ் என்றவள் சரி நீ தூங்கு என்று அவள் கிளம்பிட அவளது கையைப் பிடித்தான்.
என்னடி ஐ லவ் யூ சொல்லிட்டு என் பதிலை கேட்காமல் போற என்றவனிடம் உன்னோட பதிலைத் தான் நீ அன்னைக்கே அர்ச்சனாகிட்ட சொல்லிட்டியே பெரிய மாமா சம்மதம் சொன்னால் மட்டும் தான் என்னை கல்யாணம் பண்ணிப்பேன்னு என்றாள் இந்திரஜா.
ஆமாம் இப்பவும் பெரியப்பா சம்மதம் சொன்னால் தான் உன்னை கல்யாணம் பண்ணிக்குவேன் ஆனால் லவ் பண்ண யாருடைய பர்மிசனும் தேவை இல்லையே என்றான் பிரகாஷ். பிரகாஷ் என்றவளின் கண்கள் விரிய இதழ்கள் புன்னகைக்க அவளது விரிந்த விழிகளைக் கண்டவன் ஐ லவ் யூ இந்து. ஐ லவ் யூ சோமச் என்றவன் நான் உன்னை தான் விரும்புகிறேன் . பெரியப்பாவோட சம்மதம் கிடைச்ச பிறகு கல்யாணம் பண்ணிக்கலாம் அதுவரை லவ் பண்ணலாம் என்றவனைக் கட்டிக் கொண்டாள் இந்திரஜா.
சரி, சரி நைட்டு நேரம் ரொம்ப கட்டிப் பிடிக்காதே அப்பறம் ஏதாச்சும் தப்புத் தண்டா நடந்தால் நான் பொறுப்பு இல்லைப்பா என்றவனது மார்பில் குத்திய இந்திரஜா போடா எருமை என்றாள். எதே எருமையா ஏன்டி சொல்ல மாட்டிங்க நானே சன்னிலியோன் கூட குளுமணாலியில் குதுகலமா டூயட் பாடிட்டு இருக்கும் பொழுது எழுப்பி ஹாப்பி பர்த் டே சொல்லி என் தூக்கம், கனவு எல்லாத்தையும் கெடுத்து விட்டுட்டு இப்போ ஐ லவ் யூ சொல்லி கட்டிப் பிடிச்சுட்டு நிற்கிற. அப்பறம் நான் என்ன பண்ண முடியும் சொல்லு என்றவனது காதை திருகியவள் ஏன்டா பொறுக்கி எப்போ பாரு சன்னிலியோன், பன்னிலியோன்னு ஏன்டா அவளை பத்தியே பேசுற என்றாள் இந்திரஜா.
ஏன்டி ஒரு வயசுப் பையன் அதுவும் என்னை மாதிரி ஒரு முரட்டு சிங்கிள் கனவுல சன்னிலியோன் வராமல் பின்ன சாகப் போற கிழவியா வரும் என்றவனை முறைத்தவள் யோவ் மாம்ஸ் நீ முரட்டு சிங்கிளா என்றிட இப்போ தானே டார்லிங் நாம மிங்கிள் அதுக்கு முன்னே மாமா சிங்கிள் அன்ட் யங் தானே என்று காலரைத் தூக்கி விட்டவனின் தலையில் கொட்டியவள் ஆமாம் இவரு பெரிய தனுஷ் சிங்கிள் அன்ட் ஐயம் யங் போடா லூசு என்றாள் இந்திரஜா.
என்னடி கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் மாமனை பொசுக்குனு லூசுனுட்ட என்றவனை முறைத்தவள் லூசு மாதிரி பேசினால் லூசுனு தானடா சொல்லுவாங்க. இப்பவே பழகிக்கோ உன் அண்ணி ரோனி மாதிரி வாங்க மாமா, போங்க மாமானு எல்லாம் மரியாதை கொடுத்து கூப்பிட மாட்டேன். டேய் பிரகாஷ் மாமானு தான் கூப்பிடுவேன் என்றாள் இந்திரஜா.
அடிப்பாவி நீ எல்லாம் என் அண்ணி மாதிரி வர முடியுமா என்ற பிரகாஷிடம் அவளை மாதிரி தானே சான்ஸே இல்லை. அது சிங்கிள் பீஸு, தனி பீஸு. அவளோட கேரக்டர் சுத்தமா வேற மாதிரி என்றவளிடம் ஆமாம் என் அண்ணா மேல அவ்வளவு லவ் என்றவன் சிரித்தான்.
அண்ணி புராணம் பேச ஆரம்பித்தாள் ராத்திரி முழுக்க பத்தாது அதனால நாம நாளைக்கு பேசலாம் இப்போ தூக்கம் வருதுடி நீ கிளம்பு என்றவனை முறைத்தவள் என்ன நான் போனதும் நீ சன்னிலியோன் கூட ரொமான்ஸ் பண்ணனுமா என்றாள் இந்திரஜா.
அடியே அது நான் சிங்கிள்ளா இருந்தப்படி இப்போ தான் மாமா உன் கூட மிங்கிள் ஆகிட்டேன்லடி அப்பறம் என்னம்மா என்றவன் என் செல்லப் பொண்டாட்டி நிஜமாகவே தூக்கம் வருதுடி ப்ளீஸ் என்றவன் கொட்டாவி விட சரி சரி பிழைச்சுப்போ என்றவள் சென்று விட அவன் சென்று படுத்து உறங்கினான்.
என்ன இந்து இவ்வளவு நேரம் என்ன பண்ணின என்ற அர்ச்சனாவிடம் ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்தேன் என்றாள் இந்திரஜா. யார் கூட என்ற அர்ச்சனாவிடம் என் பிரகாஷ் மாம்ஸ் கூட தான் என்ற இந்திரஜா நடந்தவற்றைக் கூறிட ஏய் சூப்பர்டி என்றாள் அர்ச்சனா. அப்போ இனி நீ தான் என் அண்ணியா என்றவளிடம் ஆமாம்டி நாத்தனாரே என்றவள் அவளைக் கட்டிக் கொண்டு சுற்றினாள்.
அடியே போதும்டி எனக்கு தட்டாமாலை சுத்திட்டு வருது என் விவேக்கிற்கு நான் வேணும்டி என்றிட அவளை விட்டவள் சென்று மெத்தையில் படுத்துக் கொண்டு தலையனையைக் கட்டிக் கொண்டு படுத்துக் கொண்டாள்.
அவளைப் பார்த்து புன்னகைத்த அர்ச்சனா தானும் சென்று படுத்துக் கொண்டாள்.
இதுவரை நாங்க நம்ம வீட்டில் யாரோட பிறந்தநாளுக்கும் பனிரெண்டு மணிக்கெல்லாம் விஷ் பண்ணினதே இல்லை ரோனி என்றவனிடம் இனிமேல் இப்படித் தான் மாமா என்றவள் சென்று படுத்துக் கொள்ள அவனும் மெத்தையின் மறுபுறம் படுத்துக் கொண்டாள்.
அப்பறம் ரோனி என்றவனிடம் என்ன மாமா என்றாள் வெரோனிகா. அப்பா நம்ம பிரகாஷ்க்கும், இந்துவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பிரியப் படுகிறார். அதை பிரகாஷ்கிட்ட சொல்லி அவனோட விருப்பம் என்னனு தெரிஞ்சுக்க சொன்னாரு என்ற உதயச்சந்திரனிடம் நாளைக்கே பிரகாஷ் மாமாகிட்ட கேட்டிருங்க மாமா. நம்ம வீட்டில் நடக்கப் போற அடுத்த கல்யாணமாவது சந்தோசமா நடக்கனும் என்றாள். அடுத்து ஒன்று இல்லை இரண்டு கல்யாணம் நடக்கப் போகுது என்ற உதயச்சந்திரனிடம் இரண்டா என்றாள் வெரோனிகா.
ஆமாம் பிரகாஷ், இந்திரஜா ; அப்பறம் அர்ச்சனா, விவேக் என்ற உதயச்சந்திரனிடம்அர்ச்சனா அண்ணிக்கும் கல்யாணமா வாவ் சூப்பர் என்றவள் மாமா பேசாமல் நாம ஏன் இன்னொரு முறை கல்யாணம் பண்ணிக்க கூடாது என்றாள் வெரோனிகா.
என்னது திரும்பவும் உன்னையவே கல்யாணம் பண்ணிக்கனுமா என்றவனிடம் இல்லை செத்துப்போன என் அப்பத்தாவை கல்யாணம் பண்ணிக்கோங்க என்றாள் வெரோனிகா.
எதேய் செத்துப்போன அப்பத்தாவா அடிப்பாவி அப்பறம் உங்க தாத்தா என்ன பண்ணுவாரு அவரு அப்பறம் உன்னைத் தேடி வந்துறப் போறாரு என்றான் உதயச்சந்திரன். மாமா என்றவள் அவனது மார்பில் குத்திட ஆஆ அம்மா ஆஆ என்றவன் வலிக்குதுடி என்றான். வலிக்கட்டும் நல்லா வலிக்கட்டும் என்றவள் சரி தூங்குவோமா
என்றிட சரி தூங்குவோம் குட்நைட் என்றான்.
…..தொடரும்….