“ஹையோ விடு” பைக் அவன் வீட்டு வாசலில் பிரேக்கிட்டு நிற்க, குதித்து இறங்க நினைத்தாள்.
“அடடா என்ன அவசரம் புள்ள உனக்கு புகுந்த வீட்ட பாக்கறதுக்கு? அப்புறமா பாக்கலாம். மாமன்கிட்ட இப்படி நெருக்கமா உக்காரு புள்ள” அவள் தொடையில் கைவைத்து இறங்காமல் தடுத்து கிட்ட இழுத்து நெருக்கியவன் அவள் கூந்தலில் முகம் புதைத்து முகர்ந்தான்.
பன்னீர் ரோஜா சூடியிருந்ததால் அதே வாசனையை அவள் கூந்தலும் பிரதிபலித்தது.
“அது என்னவோ புள்ள. முன்ன எல்லாம் இதுமாதிரி நினைச்சுக் கூடப் பாத்ததில்ல. உங்கிட்ட இப்படி மயங்கிப் போவேன்னு” இருகையாலும் அவளை கட்டிக்கொண்டு அவள் கன்னத்தில் மீசையால் தேய்த்தான்.
சுள்ளேனக் குத்த, நெளிந்து விலகி “உன்கூட இருக்கறத யாரவது பார்த்துட்டா அண்ணன்கிட்ட சொல்லி வைப்பாங்க. அப்புறம் நான் செத்தேன்”
அவள் விழிகள் அவர்கள் இருந்த பகுதியை எச்சரிக்கை உணர்வோடு ஆராய்ந்தது. யாராவது பார்த்துட்டு போய் சொன்னா தேவையில்லாத பிரச்சனை வருமே, ஏற்கனவே அண்ணனுக்கும் இவனுக்கும் வாய்க்கா தகராறு இருக்கு. இப்ப இதுவும்னா இவனை கொன்னே போட்டாலும் ஆச்சரியமில்லை. யோசிக்கவே அச்சமாயிருந்தது அவளுக்கு.
“இந்தாரு புள்ள நம்ம தோப்புக்குள்ள ஈ கூட தெரியாம வராது. அம்புட்டு பயம் எம்மேல. அதனால தேவையில்லாம யோசிக்காத” தொடையில் வைத்த கரத்தை அங்கேயே நடமாட விட்டான்.
“அதெப்படி வராம போவாங்க. இங்க வேலைக்கு வருவாங்கள்ள” அவன் கரத்தின் மீது ஒரு அடி வைத்துக் கேட்டாள்.
“அவனுங்க வடக்கால பக்கம் தோப்போட நின்னுடுவானுங்க புள்ள. இங்குட்டு பாரு நம்ம ஊடு கிழக்கால பாத்து இருக்குது. வீட்டுப்பக்கம் ஒரு காக்கா குருவி அண்டாதுன்னா பாத்துக்க” தன்னை தடுத்த விரல்களை நெறித்து பிடித்தான்.
“அப்ப நா ஆரு புள்ள” அவள் பக்கம் குனிந்து கன்னத்தில் நச்சென இச்சொன்று வைத்தான்.
“ஏய்” கன்னத்தை அழுந்த துடைத்தாள்.
“இது சும்மா புள்ள. எச்சில் படாத இடமே இல்லன்னு ஆக்குறேன் பாரு ஓ உடம்புல” அவள் கன்னத்தில் இதழ் மட்டும் தீண்டி, “பதிலுக்கு நீயும் எச்சில்படுத்தலாம் புள்ள” சொன்னான் அந்த நினைப்பில்.
“ஆமா இந்தம்மிணி என்னமோ வெளிநாட்டுல இருக்க மாதிரி பேசிட்டு கிடக்கா. இவ நம்மளவுக்கு ஆவாளான்னு கூட தெரியாம இவகிட்ட விழுந்து கிடக்கேன்” உதட்டை பிதுக்கி வானம் பார்த்தவனுக்கு ஒன்னும் புரியலை.
“இன்னைக்கு நாள் ஹெவியா இருக்கும்னு தோணுதே” கைகளை உயர்த்தி சொடக்கெடுத்தவன், தோப்புக்குள் போனான்.
அவன் அப்பாறு இருந்தா காலத்துல. வாழை மஞ்சள்னு விளைச்சல் பார்த்த பூமி அது. அவர் போனப்புறம் எடுத்துப் பண்ண ஆளில்லை அங்க. அதுக்கு அப்புறம் ஒரு வருஷம் ரெண்டு வருஷம் காடுகரை எல்லாம் சும்மாதான் கிடந்தது.
கருணா டீக்கடைதான் அன்றைய பொழுதுபோக்கு அவனுக்கு. கடைக்கு போவான் டீ குடிப்பான் இங்க வீட்டுப்பக்கம் வந்து மரத்தடில படுத்துக்குவான்.
அவனோட திமிர் அந்த ஊருல இருக்க அத்தனை ஜனங்களுக்கும் அத்துப்படி. அதனால் அவனை சாப்பிட்டியா தூங்குனியான்னு கேக்க கூட பயந்து ஒதுங்கிப் போவார்கள்.
அதையும் மீறி அவன் சோர்ந்த முகத்தைப் பார்த்து,”என்னப்பா சாப்பிட்டியா?” கேட்டால் அன்றைய நாள் கேட்டவனுக்கு கெட்ட நாளாகத்தான் விடியும்.
நிலம் சும்மா இருக்கேன்னு குத்தகைக்கு கேட்டு நான் நீன்னு ஆட்கள் வர,
கருணாவின் காதிலும் இதைப் போட்டு வைத்தார்கள்.
“ஏப்பா சத்யா. நிலத்தை சும்மாவே போட்டு வைக்காதப்பா. ஒண்ணா நீ நின்னு பாரு. இல்லாட்டி அடுத்தவனுக்கு குத்தகைக்கு விடு அவன் வெள்ளாமை பண்ணட்டும். ரெண்டுக்கும் ஆவாம இப்படியே கிடந்தா வெட்டியா போவுமேப்பா” பெஞ்சில் படுத்திருந்த சத்யனிடம் பேச்சுக் கொடுத்தார் கருணா.
மத்தியான நேரம் கடையில் யாரும் இல்லை அப்போது. சத்யாதான் கருணாவுக்கு துணையாக கடைக்கு போவான். ஊர் விஷயம் எல்லாத்தையும் அவனிடம் கொட்டுவார் கருணா. அவன்கிட்டே சொன்னா ஒண்ணுக்கு நாளா பரப்பமாட்டான். அவனோடே சொன்னா விஷயம் கரைந்து போவும் அதனால் எதுவாக இருந்தாலும் தைரியமாக சொல்லுவார்.
“இல்லண்ணா அடுத்தவன் கைல தரதுக்கு விருப்பமில்லை. கண்ட கெமிக்களையும் கொட்டி நாசமாக்கிப்புடுவான். பொண்ணும் மண்ணும் ஒண்ணு, அடுத்தவன் கண்ணு கூட படாம பாதுகாக்கணும்”
அவன் தத்துவத்தில் சிரிந்துவிட்ட கருணா “அப்படிப் போடு. அப்ப நீ பாரு”
“நா என்ன பண்ணட்டும். அந்த அளவுக்கு தெரியாதுண்ணே”
“நா ஒன்னு சொல்றேன் கேளு. பேசாம தென்னங்கன்னு பத்தடிக்கு ஒன்னு நட்டு வையி. தண்ணி வசதிதான் இருக்கே. தண்ணி கட்ட யாரையாவது வச்சுக்கோ மாச மாசம் அவனுக்கு பணத்தை கொடு போதும். நீ ஓடியாடி வேலை பாக்கணும்னு அவசியம் இல்லப்பா. உரத்தை ஒழுங்கா வச்சா அதுவே தானா வளர்ந்துகிடும். மரம் காய்க்கு வந்தா உன் காட்டுல மழைதாண்டா” கருணா யோசனை சொல்ல.
அதை சிந்தித்தவனுக்கு அதுவும் நல்ல வழியாகத்தான் இருந்தது.
சும்மா கிடக்கறதுக்கு எதுவோ ஒன்னு வளர்ந்துட்டு போவட்டுமே என அடுத்த மாசமே தென்னந்தோப்பாக மாற்றிவிட்டான் அவன் நிலங்கள் முழுவதையுமே.
வருஷம் போவ, இப்பொழுது பொன்னாய் கொட்டுகிறது நிலத்தில். மட்டை முதல் நார் வரை குப்பையாய் போவும் எல்லாமே காசுதான் அங்கே. காசுபணம் கொட்டிக்கிடக்கிறது அவனிடம்.
ஓட்டுவீடுதான் அதை மாத்திக் கட்ட மனசு வராம அப்படியே விட்டுவிட்டான். இரண்டு அறைகள், ஆசாரம் பணம் வைக்க பிடிக்க ஜன்னல் இல்லாத ஒரு அறை துணிகள் வைக்கன்னு வீடு வசதியாகத்தான் இருக்கு.
வீட்டுக்கு வெளியே அடுப்பங்கரை, பக்கத்துல மளிகை சாமான் பாத்திரங்கள் வைக்க ஒரு அறை அங்கேயும் இருந்தது. அவன் தேவைக்கு அதுவே போதும் என நினைத்தவன் வீட்டை ஒன்னும் பண்ணாமல் விட்டுவிட்டான்.
சண்டை போடும் காலத்தில் காதல் வரவில்லை. இப்பொழுது காதல் வந்த காலத்தில் சண்டை சச்சரவு வேண்டாம்னு நினைத்தான். ஆனால் அவனை தேடி அவனுக்கே தெரியாமல் ஆரம்பித்த வம்பு வந்தது.
ஏலத்தில் நல்ல விலைக்கு விற்று லாபத்தை எடுத்த கருப்புச்சாமி, “அண்ணா போனுல அம்மா இருக்கறாங்க” அவன் பக்கம் ஓடிவந்து போன் தந்தான்.
அம்மா எதுக்கு எனக்கு கூப்பிடுது கிழவிக்கும் அதுக்கும் சண்டை முத்திடுச்சா? சிந்தனையோடு பேசினான்.
“டேய் அன்பு அப்பாவ யாரோ கார விட்டு அடிச்சிட்டாங்கடா” சுலோச்சனா அழுகை குரல் கேட்டு துடித்துப் போனான் கருப்பன்.
“அழுவாதம்மா. என்ன விஷயம்னு சொல்லு இதோ நா அங்கதா வரேன்”
“அன்பு நீ வீட்டுக்கு வராத. ஹாஸ்பிட்டல் வந்துரு நேரா” பேரை சொன்னவர் வாயில் கைக்குட்டையை வைத்து சத்தம் வராமல் அழுதார்.
“ஆரு கண்ணு பட்டிச்சோ. எம்மவனுக்கு இப்படி ஆவிருச்சே” ஒப்பாரி வைத்தவரை அடக்க முடியாமல் எப்படா மகன் வருவான் என வாசலையே பார்த்தார் சுலோச்சனா.
அத்தியாயம் 20
சுலோச்சனா நடை உடையில் அவள் தோற்றத்தில் படித்த பெண் என்பது தெளிவாக, அவர் அருகே வந்த சிஸ்டர், “மேம் ஆயாவை சைலண்டா இருக்க சொல்லுங்க. டாக்டர் வந்தா எங்களைத்தான் சத்தம் போடுவார்”
ஆழமாட்டாதபடிக்கு சொன்ன சிஸ்டரை பார்த்த சுலோச்சனா, “அந்த ஆயாதான் எனக்கு மாமியார் சிஸ்டர். இப்ப சொல்லுங்க. உசுரை காப்பாத்துற உங்களையே என்ன சேதின்னு கேக்குது. நான் சொன்னா அந்தம்மா கேட்குமா?” கேள்வியாய் பார்த்தார்.
“சாரி மேம். விடுங்க நானே பேச்சு வாங்கிக்கறேன்” சிஸ்டர் சொல்லிவிட்டார். மருமகளே நடுங்கும் போது தான் எம்மாத்திரம்.
“பாப்பா” சுலோச்சனா உறவுகள் அங்கே வந்து சேர்ந்தனர்.
அதைக் கேட்டும் கேட்காத பாவனையில் பக்கத்தில் உட்கார்ந்த அப்பாவிடம் உரையாட ஆரம்பித்தார். இப்போது கேட்பதுக்கு இது நேரமில்லை, தன் பிறந்த வீட்டை கேவலப்படுத்தவே இந்தம்மா வாயை பிடுங்குதுன்னு தெரிஞ்சும் அது ஓட்டை வாயில் விழ சுலோச்சனாவுக்கு பைத்தியமா, ‘நேரம் வரட்டும் அப்ப பேசிக்கறேன் கிழவி உன்னை’ என விட்டுவிட்டார்.
கருப்புச்சாமி உள்ளே வர, “என்ற பேராண்டி வந்துட்டான்” எங்கே சுலோச்சனா உறவுகள் தன் பேரனை அவங்க பக்கம் இழுத்துடுவாங்களோ என பயந்த ராமாயி குடுகுடுவென ஓடியது அவன் அருகே.
“உன் மாமியா செமகட்டை பாப்பா. இந்த வயசிலும் எப்படி ஓடுது பாரு”
யோசித்த கருப்பனுக்கு எதுவா இருந்தாலும் மனசுல போட்டு குழப்பறதுக்கு இன்னைக்கே கேட்டுப்புடனும்னு தோன, கிளம்பிவிட்டான்.
பைக்கில் அமர்ந்து தன் முன் அன்னத்தை அமர்த்தியிருந்த சத்தியசீலன், அவள் கன்னத்தை விரலால் உரசினான்.
“நான் போகணும். என்னை விட்டுடு” சத்தியசீலனின் இரும்புப்பிடியில் இருந்து விலகத் துடித்தவளை கட்டிப்பிடித்தவன்
“போகலாம் புள்ள இரு என்ன அவசரம் இப்போ” தன் இளமையை தூண்டும் பெண்ணை அறிய ஆத்திரம் வந்தது அவனுக்கு. இத்தனை நாளு இது தெரியாம போச்சே தெரிஞ்சிருந்தா அப்பவே இவளை தூக்கியிருப்பனே வெசனப்பட்டான்.
அசுர வேகத்தில் படர்ந்த விரல்கள் அதிமென்மையில் போக்கிடம் மறந்து அங்கேயே கள்ளுண்ட நாகமாய் பின்னியது.
மோகம் கொண்டவன் அங்கேயே கழுத்தில் முகத்தைப் புதைத்து சேயாய் பசியாற நினைக்க, அவன் வேகத்தில் மிரள மிரள முழித்தாள். அனுமதியில்லாத தீண்டலில் தன்மானம் சீண்டப்பட அழுகை பொத்துக்கொண்டு வந்தது.
“அன்னம்” அவன் என்னவோ சொல்ல அதை காதில் கேட்டவளுக்கு அவமானத்தில் மளுக்கென கண்ணீரும் முட்டிக்கிட்டு வந்தது, கண்ட இடத்தில் கைவைக்கறதும் அதை அசிங்கமாய் வர்ணிப்பதையும் கேட்க நாராசமாய் இருந்தது அவளுக்கு.
‘எனக்கு பிடிக்கவே இல்ல’ மனதில் குமுறினாள்.
“பிடிக்கலைன்னா இன்னும் எதுக்கு இங்க இருக்க அவனை தள்ளிவிட்டுட்டு ஓடிப்போ” உள்ளம் உறைத்தது.
“கைய எடுங்க” அவள் குரல் அவளுக்கே கேட்காமல் கத்தினாள்.
“அன்னம்ம்ம்” கரங்களின் அழுத்தம் கூட
வலி மிகுதியில் “அய்யோ முதல்ல கையை எடுங்க. நெருப்பா சுடுதே” அவன் கரத்தில் படபடவென அடித்தாள். அவள் மனது பேயாய் கூச்சலிட்டது.
பைக்கிலிருந்து குதித்து இறங்கியவள் ஓட நினைக்க, தன் பக்கத்தில் நிக்க வைத்தவன், “கண்ட இடத்துல கைவைக்கறான் விட்டுட்டு ஓடிப்போலாம்னு நெனச்சு விட்டுட்டு போவ பாக்குறியா கண்ணு?”
“விடு போவணும்” கையை விடுவிக்க துடித்தாள்.
“அட நில்லு கண்ணு. எம்மனசுல நீதா பொண்டாட்டின்னு முடிவாச்சு. அவசரப்பட்டு தொட்டுப்புட்டேன். அதுக்கு அச்சாரம் தரவேணும்” சொல்லிவிட்டு அவள் கழுத்தில் தங்க செயின் ஒன்றை போடப்போக.
“வேண்டாம் விடு” தலையை பின்னுக்கிழுத்து தடுக்க முயன்றவளை விடாப்பிடியாக பிடித்து செயினை மாட்டிவிட்டான்.
கூடப்பிறந்தவனை அங்கே எதிர்பார்க்காத அன்னம் விக்கித்துப் போய் நின்றாள்.
சத்தியசீலனை சுதாரிக்க விடாமல் அடுத்தடுத்து தாக்கினான் கருப்புச்சாமி.
தயாளனை யாரோ அடித்துப்போட்ட வெறியில் இங்கே வந்தவன் மனது பார்த்த காட்சியில் இவன்தான் பெத்தவனை அடிச்சிருப்பான் என அடித்துச் சொல்ல, “தங்கச்சி மேல கைவைக்கற அளவுக்கு வந்துட்டியா” அவன் மீது பாய்ந்தான்.