இப்பொழுது அவனது வலிய கரங்கள் அவளது முகத்தை தன் கையில் ஏந்திருக்க, அவளது மென்மையான இதழ்கள் அவனுடைய அழுத்தமான இதழ்களை தனக்குள் சிறைவைத்திருக்க, அப்பொழுது,
” இல்லை ” என்றபடி தன் உறக்கத்தில் இருந்து கண்விழித்தாள் மதுமதி .
” ச்ச இவனை போய் நாம ச்ச ச்ச என்ன மது நீ ” என்று படுக்கையில் இருந்து எழுந்திருக்க முனைந்தவளுக்கு ஏதோ இடுபாடு கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டது போல அசையவே சிரமமாக இருந்தது.
விழிகளை தன்னை சுற்றி சுழலவிட்டவள் மறுகணமே அதிர்ந்து முழித்தாள். அவளுடைய கரங்களும் கால்களும் சிறைப்பட்டிருந்தது.
கழுத்திலும் , முகத்திலும் அவனுடைய தாடியும் மீசையும் குறுகுறுக்க, இதயம் வேகமாக துடித்தது.
ஒருவித பதட்டம் தனக்குள் பரவுவதை உணர்ந்தவள் உடனே விழி மூடி விட்டாள் .
‘ இவன் எப்படி இங்க ?அதுவும் இவ்வளவு பக்கத்துல. ‘ என்று மனதிற்குள் எண்ணியவளுக்கு நேற்று இரவு நடந்த அனைத்தும் நினைவிற்கு வர கண்களை இன்னும் இருக்கமாக மூடி ஆழமாக மூச்செடுத்தவள் ,
” எல்லாம் பண்ணிட்டு மறந்து கொடுத்துட்டா சரியா போய்டுமா? அரக்கா” என திட்டியபடி மெல்ல நிமிர்ந்து அவனை பார்த்தாள் .
அவனது ரோமம் மேலும் குத்தியது ,
‘ அஹ ஒவ்வொரு முடியா அப்படியே பிச்சு பிச்சு போடணும் போல இருக்கு ம்ம்ம் ‘ என வசைபாடியவளை,
‘என்ன பண்ணிட்டு இருக்க மதி உடனே எழுந்து போ ‘ என அவளது சுய உணர்வு அறிவுறுத்தியது.
உடனே மெல்ல சத்தம் வராமல் எழுந்து கொண்டவள்,
” மருந்து குடுத்துட்டு அப்படியே போக வேண்டியது தான பக்கத்திலே படுத்திருக்கான் மான்ஸ்டர் ” என திட்டவும் அருகில் இருந்த பூ ஜாடி கண்ணில் பட, அவளது மனமோ ‘ அப்படியே ஓங்கி அடித்தால் தான் என்ன ? ‘என கேட்டது .
உடனே அதை கையில் எடுத்தவள். பூனை போல பதுங்கி அவன் அருகில் வந்தாள்.. நேற்று வரை அரக்கனாக இருந்தவன் இப்பொழுது அப்பாவி குழந்தை போல மெல்லிய குறட்டை சத்தத்துடன் உறங்கிக்கொண்டிருந்தான்.
கொலைகாரன் என்று சத்தியம் செய்தால் கூட நம்ப முடியாது அவ்வளவு அப்பாவியாக தெரிந்தான்.
முகத்தில் கடுமை இல்லை குரூரம் இல்லை. அவன் மேல் அது வரை இருந்த கோபம் எல்லாம் சூடு நீரில் போட்ட சக்கரை தூளாக நொடியில் மறைந்திருந்தது .
” எனக்கு ஒன்னுனா உன்னால தாங்கிக்கவும் முடியல. அதே நேரம் என்னை காயப்படுத்தவும் செய்யிற , ஏன் டா. ?என்ன தான் என்கிட்ட இருந்து உனக்கு வேணும் ?” என்றவள் .
தன் கையில் இருந்த பூ ஜாடியை பார்த்தாள் ,’ ச்ச என்னையும் இவனை மாதிரி மாதிடுவான் போலையே ‘ என்று தன்னை தானே கடிந்து கொண்டவள் , பூஜாடியை எடுத்த இடத்திலே வைத்துவிட்டு ,
“நீ என்னை அவ்வளவு கஷ்டப்படுத்துற. ஆனா என்னால உன்னை காயப்படுத்துற மாதிரி நினைக்க கூட முடியல ” என்றவள்.
விலகியிருந்த போர்வையை அவனது மார்பு வரை இழுவிட்டுவிட்டு , அவன் உறங்குவதற்கு தலையணையை சரியாக தலைக்கு அடியில் வைத்தவள் அவனது சிகையை மென்மையாக வருடிவிட்டு ,
” மேனியுபிளேடர் ” – ‘சரியான சூழ்ச்சிக்காரன் ‘ என புன்னகையுடன் கூறியவள் குளியல் அறைக்குள் நுழைந்துகொண்டாள்.