செம்பாவும் கோகிலாவும் வீட்டிற்கு வந்து சேர வாசலிலே நின்றிருந்தனர் ராசாத்தி, சந்திரா, நல்லசிவம் மூவரும். சமர் அவர்களை வீட்டின் முன் விட்டுவிட்டு உடனே அங்கிருந்து கிளம்பி விட்டான்.
“ஏன்டி, இவ்வளவு நேரம் உங்களுக்கு வேலை அப்பவே முடிந்திருக்குமே, இவ்வளவு நேரம் அங்கே என்ன பண்ணிட்டு இருந்தீங்க” என ராசாத்தி கேட்க
“அம்மா கிளம்புற நேரத்துல ஒரு அவசர கேஸ் வந்தது, அதான் கொஞ்ச நேரம் ஆயிடுச்சு” என்றால் கோகிலா.
“சரி ரெண்டு பேரும் குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்” என ராசாத்தி சொல்லவும் அப்போதுதான் சந்திராவிற்கு ஞாபகம் வந்தது. இரண்டு தெரு தள்ளி ஒருவர் செம்பாவிடம் துணி தைக்க கொடுத்திருக்க, நாளைக்கு வெளியே செல்ல வேண்டும் துணி தைத்துவிட்டாளா?” என கேட்டு வந்தது..
செம்பா பக்கத்து தெரு வள்ளி அக்கா துணி தைக்க தந்தாங்கலாமே, நாளைக்கு வெளியே போறாங்களாம். வேணும்னு கேட்டாங்க, நீ தச்சு வச்சிருக்கியா? என சந்திரா கேட்டதும்..
“ஆமாம்மா… பீரோ மேலே இருக்குற பையில் வைத்திருந்தேன். நீங்களே எடுத்து கொடுத்திருக்கலாம்ல”
நானும் தேடிப் பார்த்தேன்டி எனக்கு எந்த துணிண்னு சரியா தெரியலை. அவளை வந்து பார்னு சொன்னால் எனக்கு நேரம் இல்லை செம்பா வந்தால் கொடுத்துவிட சொல்லுங்க காலையில் முதல் வண்டிக்கு போகனும்னு சொல்லிட்டு போறாள்..
அதை கொண்டு கொடுத்துட்டு வந்துடுறியா செம்பா என்றதும் கோகிலா
“அத்தை அதை நான் கொண்டு கொடுக்கிறேன். செம்பா ரொம்ப டயர்டா இருக்காள் அவள் தூங்கட்டும்” என்றாள்.
செம்பா பைக்ல போய்ட்டு கொடுத்துட்டு வந்துருவா, நீ நடந்ததுல போகணும் உனக்கு வண்டி ஓட்ட வேற தெரியாது.
பக்கத்து தெருதானே அத்தை. நானே கொண்டு குடுத்துடுவேன்.
“சரி அப்போ சாப்பிட்டு போ” என இருவரும் தயாராகி உடையை மாற்றி விட்டு வர, சாப்பாடு பரிமாறினார் சந்திரா. கோகி சாப்பிட்டுவிட்டு துணியை வாங்கிக்கொண்டு கிளம்பினாள்.
துணியை கொடுத்துவிட்டு திரும்ப வரும்போது ஏதோ மனதிற்குள் லேசாக பயமாக இருந்தது. மனம் படபடவென அடிக்க “ஏன் ஒரு மாதிரியா பயமா இருக்கு, கோகி நீ பயப்படுற ஆள் இல்லையே” என்றவள் சுற்றிமுற்றி பார்த்தாள். யாரும் இருப்பது போல இல்லை. ஏதோ ஒரு சத்தம் கேட்பது போல இருக்க திரும்பி பார்த்தாள், அப்போதும் யாரும் இல்லை. மீண்டும் நடக்க ஆரம்பித்தவள் பயந்தபடியே “ஒரு பொண்ணு கொஞ்சம் அழகா இருந்துடகூடாது பேய், பிசாசுங்க கூட விட்டு வைக்க மாட்டாங்க போல, ஒருவேளை என் அழகுல மயங்கி பாலோவ் பண்றாங்களா இருக்குமோ” என நினைத்தபடியே செல்ல, மறுபடியும் யாரோ தன் பின்னால் வருவது போல தோன்ற கோகிலா திரும்பவும் அவள் வாயை பொத்திய மூவரில் ஒருவன், அவளை தூக்கி தோளில் அப்படியே தூக்கிக் கொண்டு காட்டிற்குள் நுழைய, கால்களை அங்கும்மிங்கும் ஆட்டி தப்பிக்க பார்த்தாள். முடியாமல் போக அவளை தூக்கிருந்தவனின் தோளில் பற்கள் தடம் பதித்து இரத்தம் வரும் அளவுக்கு கடிக்க, வலி தாங்கமுடியாமல் அவளை கீழே போட்டான். உடனே சுதாரித்துக்கொண்டு ஓடினாள் கோகி.
‘ஐயோ எந்த எடுபட்ட நாயிங்கன்னு தெரியலையே, என்னை ஏன் துரத்துறாங்க? அம்மா தாயே!, நானே ஒரு ப்ளோவ்ல ஓடுறேன். யாரும் குறுக்க வந்துடாமல் இருக்கனும். ஒடு கோகி ஓடு” என கூறியபடி வேகமாக ஓடினாள்.
“டேய் ஓடுறாள். அவளை புடிங்க, அவளை மட்டும் இன்னைக்கு விட்டுட்டோம். மருதுக்கு பதில் சொல்ல முடியாது போங்கடா” என தன் அடியாட்களை விரட்டினர் மருதுவின் அடியாட்கள்.
கோகிலா அதற்கு மேல் ஓட முடியாமல் ஒரு மரத்தின் மூட்டிற்குள் ஒதுங்கி நின்று கொண்டாள். ஊரை விட்டு தள்ளியிருந்த வயல்வெளி பகுதியில் நின்றிருந்தாள். அவர்களில் ஒருவன் கோகி ஒளிந்து இருப்பதை பார்த்துவிட்டு மெதுவாக பின்புறம் வர, அங்கே கிடந்த சருகை அவன் மிதித்ததும் சத்தம் கேட்டு திரும்பியவள், தன்னை ஒருவன் நெருங்கி விட்டான் என நினைத்தது மறுபடியும் ஓட்டம் பிடித்தாள், மூச்சு வாங்கியபடி ஓடி வரும் போது தன் முன்னாள் வந்தவன் மீது மோதி இருவரும் கீழே விழுந்தனர்.
விழுந்ததில் இருவரின் கால், கைகளிலும் லேசான சிராய்ப்பு ஏற்பட “எவன்டா அவன் நானே உயிரை கையில பிடிச்சிட்டு ஓடுறேன். இடையிலே இந்த கௌசிக் வருவேன்ற மாதிரி வந்தது” என பொங்கி எழுந்தால் கோகி. அங்கே நின்றிருந்தவனை பார்த்து “ஏன்டா நெட்டமரம் உனக்கு கண்ணு தெரியலையா, இப்படித்தான் கரடி மாதிரி வந்து மோதுவியா, அவ அவ உயிர கையில பிடிச்சு ஓடிட்டு இருக்காள் இவன் என்னனா, விளக்கெண்ணெய் மாதிரி வந்து நிக்கிறான் விளக்கெண்ணெய், சுத்தி பார்க்க வேற இடமே கிடைக்கலையா” என மூச்சி விடாமல் அவனை திட்ட, அவனோ யார்ரா இந்த பைத்தியம் என அவளை மேலும் கீழும் பார்த்தான். அவனின் தோள்பட்டை உயரம் கூட இருக்க மாட்டாள் கோகி.
“யார விளக்கெண்ணெய்னு சொன்ன, ஓங்கி ஒரு அரை விட்டேன்னு வச்சுக்கோ உன் முகரை பேந்துரும். ஆளை பாரு, இந்த இருட்டுல நீ இப்படி பேய் மாதிரி ஓடி வருவன்னு நான் என்ன கனவா கண்டேன் குள்ள கத்திரிக்கா”.
“ஏய் யார பார்த்துடா குள்ள கத்திரிக்காய்ன்னு சொன்ன?”
“டாவா, இங்கே நீ மட்டுதான்டி நிற்க்கிற, உன்னை பார்த்து தான் சொன்னேன்டி. குள்ள கத்திரிக்கா குள்ள கத்திரிக்காய்டிடிடிடி” என சத்தமாக குரல் கொடுக்க,
“உன்னை” என அங்கே கோகி கல்லை தேட, அவளை துரத்திக் கொண்டு வந்தவர்கள் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அவர்களைப் பார்த்ததும் பயந்து அவனின் பின்னால் சென்று நின்றாள்.
“இப்போ எதுக்கு என் பின்னாடி வந்து நிற்கிறிங்க ஹிரோயின் மேடம். அவனுங்களை நான் அடிக்க மாட்டேன். நான் ஒன்னும் ஹீரோ கிடையாது.”
“அதான் எனக்கு தெரியுமே, நீங்க ஒன்னும் ஹீரோ கிடையாது. காமெடிமேன். ஒழுங்கா அவங்களை விரட்டி விடுங்க”
“ஏய் அவனுங்களை பார்த்தியா எப்படி இருக்காங்கன்னு, அங்கே பாரு ஜிம் பாடி மாதிரி இருக்கானுங்க. நான் நோஞ்சான் மாதிரி இருக்கிறேன்”
“திங்கிற சோறு எல்லாம் நீ பனைமரம் வளத்தியில் வளர்றதுக்கு போய்ருக்கும்”
“ஆமாம்மா தாயே!, ஆளை விடு” என அவன் விலக பார்க்க…” ப்ளீஸ் எனக்காக ஹெல்ப் பண்ணுங்களேன், அவங்க எனக்கு யாருன்னு தெரியலை, போகும் போது வாயை பொத்தி கடத்திட்டு போக பார்க்கிறாங்க, கடத்திட்டு போய் எங்கேயாவது வித்துட்டாங்கன்னா, நான் என்ன பண்றது? நான் பாவம் இல்லையா.” என முகத்தை பச்சகுழந்தைபோல கோகி செய்ய,
“நீ உன் வாயை முதல்ல திறந்து பேசிருந்தால் அவனுங்க உன்னை கடைத்திருக்கவே மாட்டானுங்களே”
“அவனை முறைத்தாள் கோகி.”
“என்ன முறைக்கிற, உதவி கேட்பது இப்படியா கேட்பாங்க,”
“வேற எப்படி கேட்பார்களாம்?”
“பவ்யமாக, மரியாதையா கேட்கனும் குள்ள கத்திரிக்காய்”
“எனக்கெல்லாம் சாதாரணமா பேச வராது, நான் இப்படித்தான் பேசுவேன்”
“நல்லா பேசின போ” என சலித்து கொண்டான் கோகுல்.
“யோவ் இப்ப காப்பாற்றுவியா மாட்டியா?”
“மரியாதை, மரியாதை”
“ப்ளீஸ் சார் கொஞ்சம் காப்பாத்துங்களேன், அவங்களை விரட்டி விடுங்களேன்” என கோகி கெஞ்சுவது போல் பாவ்லா செய்ய,
“அவர்களின் புறம் திரும்பினான், யாருடா நீங்க உங்களை யாருடா அனுப்பி வச்சது”
“ஆமா உன்கிட்ட விலாவரியா அட்ரஸ் கொடுத்திட்டுதான் அடிப்பாங்க” என கோகி நக்கல் செய்ய
“ஏய் நீ என்ன சும்மா சும்மா அடி அடின்ற, அவங்களை பாரு அவங்களை அடிக்க முடியுமா? அவனுங்க ஒன்னா சேர்ந்து என்னை கைமா பண்ணிடுவாங்க”
“அதெல்லாம் பண்ண மாட்டாங்க பாக்க அப்படி இருந்தாங்கன்னா அவங்கள வீக்காதான் இருப்பாங்க. நீ ஒல்லியா இருந்தாலும் ஸ்ட்ராங்கா இருப்ப” என கோகி கோகுலுக்கு பாடம் எடுக்க…
“பரவாயில்லையே நல்லா மோட்டிவேஷன் பண்றியே!”
“நான் நர்ஸ் இல்லையா” என கெத்து காட்டினாள் கோகி…
“ ஓஹ்… நீங்க நர்ஸா சூப்பர். நான் டாக்டர்”
“எதே!”
“என்னை நீ பார்த்தது இல்லையா, ஆனால் நான் உன்னை பார்த்திருக்கேனே”
“என்னை நீ எப்போ பார்த்த, நான் ஏன் உன்னைய பாக்கணும்”
“நீ என்ன பாக்க வேண்டாம் நான் உன்னை பார்த்து இருக்கேன்னு சொன்னேன்” என்றான் கோகுல்.
“என்னை நீ எப்போ பார்த்த?”
“உங்க ஊர் திருவிழாவுல”
“ஓஹ் திருவிழாவுல வர்ற அழகான பொண்ணுங்களை சைட் அடிச்சிட்டு இருந்தியா”
“கண்ணுக்கு அழகா பொண்ணுங்க போகும்போது ரசிக்கிறது தப்பில்லையே. தப்பா தான் நடந்துக்க கூடாது. அந்த அழகான பொண்ணுங்க கூட்டத்துல உன் முகம் எப்படி என் கண்ணுல பட்டதூன்னு இப்போ வரைக்கும் தெரியலை.”
“சரிதான். எனக்கு நான் அழகுதான் டாக்டரே”
“நைஸ். நான் இந்த ஊர்ல பாலா இருக்கான்ல, அவங்க வீட்டுக்கு வந்து இருக்கேன் என் பெயர் கோகுல்” என்றதும் நன்றாக புரிந்து கொண்டால் சமருடன் மெடிக்கல் கேம்புக்காக வந்த டாக்டர்கள்” என்று
நைஸ் மீட்டிங் டாக்டரே,என்னை காப்பாற்ற கடவுளா உன்னை அனுப்பி வச்சிருக்கார்”
Very nice sister..