அந்த அந்தி மாலை வேளையோ காரிருள் மேகங்களால் இருள் சூழ்ந்து இரவு வேளை போல் கருமை பூசி கொண்டு காட்சி அளித்தது. சற்று நேரத்தில் அடை மழை வெளுத்து வாங்க போகிறது என்பதற்கு சாட்சியாக..
அங்கே ஜன்னலினோடு வெறித்த பார்வை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவனின் இதயமோ வழக்கத்திற்கு மாறாக படபடவென தன் துடிப்பை அதிகரித்திருந்தது.
வழக்கமாக எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் கூட அதனை இலகுவாக கையாளும் குணம் கொண்டவனுக்கோ ஏன் என்றே புரியாத இனம் புரியாத பதட்டம் அவனின் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்திருந்தது.
அவன் ‘பாரிவேந்தன் எம்பிபிஎஸ் எம் எஸ் மகப்பேறு மருத்துவன்’ என்ற பெயர் பலகைக்கு முன்னாள் இருந்த சாய்வு இருக்கையில் இருந்தவனின் பார்வையோ ஜன்னலினோடு மெல்ல மெல்லிய தூரலாக தொடங்கி அடை மழையாக இடி மின்னலுடன் வெளுத்துக் கொண்டிருக்கும் மழையையே விழி அகலாது பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
இப்பொழுது தான் சிக்கலான நிலைமையில் இருந்த தாயையும் சேயையும் அறுவை சிகிச்சை மூலம் நல்லபடியாக காப்பாற்றினான். அவனின் முகமும் உடல் மொழியும் அவனின் சோர்வை எடுத்துக் கூறியது.
அவனின் பிரத்தியேக செவிலியர் ரம்யா, “டாக்டர் இதுக்கு அப்புறம் எமர்ஜென்சி பேஷண்ட்ஸ் யாரும் இல்ல நீங்க வேணும்னா வீட்டுக்கு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க” என்றாள் பரிவான குரலில்.
அவள் ஒன்றும் இன்று நேற்று அவனுக்கு தெரிந்தவள் அல்ல. சிறு வயது முதலே முத்துலட்சுமி எஜுகேஷனல் ட்ரஸ்ட் மூலமாக இலவசமாக பள்ளி, கல்லூரி பயின்றவள்.
இறுதியில் இவர்களின் முத்துலட்சுமி மருத்துவமனையிலேயே பணியாற்றத் தொடங்கினாள். அவளின் கடின உழைப்பும் சுறுசுறுப்பும் பாரிவேந்தனுக்கு பிரத்யேக செவிலியர் ஆக உதவி செய்தது.
ரம்யாவிற்கு ஆமோதிப்பாக தலையசைத்தவனும் வீடு நோக்கி புறப்பட தயாரானான். இன்று ஏனோ வழக்கத்திற்கு மாறாக உடல் சோர்வுடன் மனசோர்வும் சேர்ந்து கொள்ள சொல்லல்லா படபடப்பு அவனை தொற்றிக் கொண்டது.
அது ஏன் என்பதற்கான காரணம் தான் அவனுக்கு விளங்கவில்லை. ஒரு வேளை தன் தாய்க்கு ஏதேனும் ஆபத்தாக இருக்குமோ வீடு சென்று அவரைப் பார்த்தால் தன் மனநலம் சற்று தேறும் என்று எண்ணியவனும் உடனே வீடு நோக்கி புறப்பட தயாராகினான்.
அச்சமயம் வேகமாக பாரிவேந்தனின் அறை கதவை தட்டிவிட்டு உள்ளே புயலென நுழைந்த செவிலியர் ஒருத்தி, “டாக்டர் ஒரு எமர்ஜென்சி கேஸ் உடனே உங்களை டாக்டர் லிலாவதி அழைச்சிட்டு வர சொன்னாங்க. ஒரு பேஷண்டுக்கு பெயின் வந்திடுச்சு பட் குழந்தையை கொடி சுத்தி இருக்கிறதால் கொஞ்சம் கிரிட்டிக்கல்லா இருக்கு” என்று தான் வந்ததற்கான காரணத்தையும் கூறினாள்.
அவள் கூறியதை கேட்டவன் நொடியும் தாமதிக்காது அவளோடு ஓட்டமும் நடையுமாக பிரசவ அறைக்குள் நுழைந்தான். செல்லும் வழியிலேயே நோயாளியின் உடல் நலம் பற்றியும் கேட்டு அறிந்து கொண்டான்.
அவளை சுற்றி மூன்று, நான்கு செவிலியர்களும் ஒரு பெண் மருத்துவரும் சூழ்ந்து இருந்தனர்.
பாரிவேந்தனை பார்த்த உடனேயே பெண் மருத்துவர், “வாங்க டாக்டர் இவ்வளவு நேரம் எல்லாம் நார்மலா தான் போயிட்டு இருந்துச்சு. குழந்தையுடைய தலை கூட திரும்பி வந்திடுச்சு எல்லாமே சரியான பொசிஷன்ல தான் இருந்தது. இப்போ திடீர்னு குழந்தை கழுத்துல கொடி சுத்தின போல இருக்கு.
அதனால் ஆபரேஷன் பண்றது தான் பெட்டர் ஆப்ஷனா இருக்கும்னு தோணுது. இல்லைனா மதர் பேபி ரெண்டு பேரைமே காப்பாத்துறது ரொம்ப கஷ்டம் டாக்டர்” என்று கடகடவென அங்கே அதீத வலியில் துடித்துக் கொண்டிருப்பவளின் மருத்துவ அறிக்கையை கொடுத்தார்.
ஒரு நொடி அவர் கூறியதை கேட்டவன் தன் முகத்தில் எந்த ஒரு பதட்டத்தையும் அவசரத்தையும் காட்டாமல் அங்கே வலியில் துடித்துக் கொண்டிருப்பவளின் அருகில் சென்று அவளின் வயிற்றில் கையை வைத்து பரிசோதித்து விட்டு அவளிடம் எதுவோ கூற அவளின் முகத்தை பார்த்தான்.
இத்தனை நேரமும் கொஞ்சமே கொஞ்சமாக படபடவென அடித்துக் கொண்டிருந்த அவனின் இதயமோ இப்பொழுது ரயில் வண்டிக்கு நிகராக தடதடவென ஓடத் தொடங்கியது.
அதில் சுற்றம் மறந்து தன் இதயத்தின் மீது கையை வைத்தவனுக்கு சூழல் என்றோ தன் கையை மீறி சென்று விட்டது அப்பட்டமாக விளங்கியது.
எப்பொழுதுமே நிதானமாகவும் பதட்டம் இன்றியும் அனைத்து சூழ்நிலைகளையும் கையாளும் பாரிவேந்தன் இப்படி தடுமாறி நிற்பதை பார்த்த பெண் மருத்துவர், “என்னாச்சு டாக்டர் எனி ப்ராப்ளம்?” என்றார் மெல்லிய குரலில்.
அவரின் குரலில் சுதாரித்த பாரிவேந்தன் தான் இருக்கும் சூழலை உணர்ந்து, “ந.. நத்திங்..” என்று விட்டு மருத்துவனாக தன் கடமையை கையில் எடுத்துக் கொண்டான்.
அடுத்த சில மணி நேரங்கள் அனைவருக்குமே பெரும் போராட்டமாக தான் இருந்தது. ஒரு வழியாக தாய்க்கும் குழந்தைக்கும் எந்த பிரச்சனையும் இன்றி சுகப்பிரசவமாகவே அப்பெண்ணை குழந்தையை பிரசவிக்க செய்திருந்தான்.
இதற்கு தானே இவன் புகழ்பெற்றவன். எப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையாக இருந்தாலும் சரி அதை இலகுவாக கையாண்டு நல்ல முறையில் தாயையும் குழந்தையையும் பாதுகாத்து விடுவான்.
இன்றும் அவனின் திறமையை பறைசாற்றும் விதமாக ஒரு பிரசவத்தை பார்த்து இருக்கிறான்.
அப்பெண்ணின் வலி நிறைந்த கதறல் சத்தமும் அழுகையுமே அவ்வறை முழுவதையும் நிறைத்திருந்தது. முதல் அனுபவம் அவளுக்கும் இதைப் பற்றி எதுவும் தெரியவில்லை. சொல்லிக் கொடுக்கவும் அருகில் யாரும் இல்லை.
பாவம், அவளும் என்ன தான் செய்வாள். செய்யாத தவறுக்கு பழியையும் பாவத்தையும் சுமந்து கொண்டவளுக்கு பரிசாக இந்த குழந்தையும் கிடைத்துவிட்டது.
முதல் முறை கையில் குழந்தையை அவன் தான் ஏந்தினான். அவனின் உடல் முழுவதும் அப்படி ஒரு சிலர்பு. ஏதோ தன் பொருள் தன்னிடமே வந்துவிட்ட நிம்மதி..
இதுவரை அவனும் எத்தனையோ பிரசவங்களை பார்த்து இருக்கிறான். பல குழந்தைகளை இதே கைகளால் தங்கி இருக்கிறான். ஆனால் இது ஒன்றும் அப்படி இல்லையே.. இது அவனுடைய குழந்தை ஆயிற்றே.. யாரும் கூறாமலே அவனுக்குள் அந்த பொறுப்புணர்வு ஏற்பட்டு விட்டது.
ஆம், இது அவன் குழந்தை தான். பாரிவேந்தனுக்கு மனைவி ஆகாமலேயே அவனுடைய குழந்தையை ஈன்றெடுத்திருக்கிறாள் இந்த பாவப்பட்ட பெண்.
ஆனால் குழந்தைக்கு தந்தையே பாரிவேந்தன் தான் என்ற உண்மையை அவளிடம் யார் கூறுவது..
ஆம், இந்த குழந்தைக்கு தந்தை யார் என்று தெரியாமல் தான் ஈன்றெடுத்திருக்கிறாள். குழந்தையை பிரசவித்த நொடி நன்றியுடன் பாரிவேந்தனை ஒரு பார்வை பார்த்தாள். அவ்வளவு தான் அப்படியே மயக்க நிலைக்கு சென்று விட்டாள்.
அவளை சுத்தப்படுத்தி மற்ற விஷயங்களை எல்லாம் அப்பெண் மருத்துவர் பார்த்துக் கொள்ள. தன் கையில் ஏந்திய குழந்தையுடன் சற்று தள்ளி நின்றவனை ஒரே நேரத்தில் பல வகையான கலவையான உணர்வுகள் ஆட்கொண்டது.
குற்ற உணர்ச்சி, நிம்மதி, ஆற்றாமை, இயலாமை, கோபம், வெறுப்பு, பெருமை என அனைத்தும் கலந்த கலவையாய் உணர்வு ஊற்றெடுக்க முகத்தில் எதை காட்டுவது என்று தெரியாமல் அப்படியே உறைந்து போய் நின்று இருந்தான்.
இப்படி ஒரு நாள் தன் வாழ்நாளில் வரும் என்பதை அவன் கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டான்.
தேடினான் தான்.. தன்னால் முடிந்தவரை அவளை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்று முயற்சி செய்து பார்த்தான்.
ஆனால் விதி இவர்களை ஒருவரை ஒருவர் சந்திக்கவே விடவில்லை. எங்கெங்கோ அழைத்து சென்று எப்படி எல்லாமோ இவர்களை அலைக்கழித்து இறுதியில் இப்படித்தான் இவர்கள் சந்திக்க வேண்டும் என்று எழுதிவிட்டது போலும்.
இப்பொழுதாவது கிடைத்தார்களே என்ற நிம்மதி பெருமூச்சு தான் அவனிடம்.
செவிலியரோ வெகு நேரமாக அவனிடமிருந்து குழந்தையை வாங்கி சுத்தம் செய்ய காத்திருந்தவள். அவன் சற்று நிதானித்ததும் அவனிடமிருந்து குழந்தையை வாங்கி சுத்தப்படுத்தினாள்.
பொதுவாக இப்படி பிரசவம் முடிந்து விட்டால் உடனடியாக பாரிவேந்தன் அவ்விடத்தை விட்டு வெளியேறி விடுவான். ஏனைய வேலைகளை எல்லாம் மற்றவர்களே பார்த்துக் கொள்வார்கள்.
ஆனால் இப்பொழுது அப்படி செல்ல முடியாதே சற்று தயக்கத்துடன், “இவங்க ரிலேட்டிவ்ஸ் யாராவது வந்திருக்காங்களா? குழந்தையை யாரிடம் கொடுக்கணும்?” என்றான் செவிலியரிடம்.
“அவங்க ஹஸ்பண்ட் வந்திருக்காங்க சார்” என்று கூறியது தான் தாமதம் ஏற்கனவே பல வகையான உணர்வுகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தவனுக்கு இப்பொழுது கண்ணை கட்டி காட்டில் விட்ட நிலை தான்.
‘ஹஸ்பெண்டா! அப்போ இவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சா.. அப்போ இந்த குழந்தை.. ஒருவேளை எங்களுக்குள்ள நடந்தது எல்லாத்தையும் மறந்துட்டு புதுசா வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சிட்டாளோ’ என்று எண்ணியவாறு தளர்ந்த நடையுடன் கதவை திறந்து கொண்டு அவன் வெளியேறவும்.
செவிலிய பெண் அங்கே நின்றிருந்த ஆடவனிடம் அக்குழந்தையை ஒப்படைக்கவும் நேரம் சரியாக இருந்தது.
ஆசையாக குழந்தையை தன் கையில் வாங்கிக் கொண்டவனின் முகத்திலோ அவ்வளவு மகிழ்ச்சி. வேற்று குழந்தையாக இருந்திருந்தால் அவனின் முகத்தில் ஏன் இத்தனை மகிழ்ச்சி தென்பட வேண்டும்.
அப்படி என்றால் இது இவர்கள் இருவருக்குமான குழந்தையா.. இவ்வளவு நேரம் நான் தான் தவறாக எண்ணி மகிழ்ந்து விட்டேனா என்று தனக்குத்தானே ஏதேதோ சிந்தனையில் உழன்றபடியே வெளியேறியவன்.
தன் அறைக்குள் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு உடனே வீடு நோக்கி புறப்பட்டும் விட்டான். இதற்கு மேல் அவனால் ஒரு நொடியும் அங்கே நிற்க முடியவில்லை. மனதை போட்டு எதுவோ அழுத்துவது போன்ற உணர்வு.
எத்தனை மாதங்களாக அவளைத் தேடிக் கொண்டிருக்கிறான். இப்பொழுது தன் முன்னே இருந்தும் பலன் இல்லாமல் போய்விட்டதே. அப்படி உண்மையிலேயே அவளுக்கு திருமணம் ஆகி இருந்திருந்தால் அவளிடம் பழையதை பற்றி எல்லாம் பேசவே கூடாது.
அவள் வாழும் வாழ்க்கையை அவள் நிம்மதியாக வாழட்டும். தன்னால் அவளின் வாழ்க்கை மீண்டும் நாசமாக நானே ஒரு காரணமாக இருக்கக் கூடாது என்று மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டான்.
இங்கே இவன் இப்படி குழம்பி போய் கிடக்க. அங்கே அவளோ இது எதையுமே அறியாமல் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.
பல மாதங்களுக்கு முன்பு அவன் விட்ட பிழை தான் இப்பொழுது வேரூன்றி விருட்சமாகி வளர்ந்து நிற்கிறது என்பதை அறியாத அவன் மனமோ தனக்கு தானே ஏதேதோ கேள்வி எழுப்பி மருகிக் கொண்டு இருந்தது.
அவனின் அனைத்து கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டிய காரிகையோ அவனின் மனதை தெளிவு படுத்தாமல் அவனை மேலும் வாடி வதங்க செய்து தான் மட்டும் நிம்மதியான தூக்கத்தில் இருந்தாள்.
தான் விட்ட பிழை தான் என்று அவன் நினைத்திருக்க.
பிழையே செய்யாமல் தான் என்ன பிழை செய்தோம் என்பதை அறியாமலே இத்தனை மாதங்கள் தண்டனையை அ
வள் அனுபவித்து விட்டாள்.
இருவரின் பிழையால் உருவாகி இருக்கும் அந்த உயிருக்காக இவர்கள் ஒன்று சேர்வார்களா..
Very very interesting… Waiting for your next episode….
Thank you dear 😊
Super Anti hero story ya pa
Over violence lam irukathu da but Nala irukum padichi parunga
Super weekly ethana ud Anti hero story ya pa
Anti hero nu ninachi eluthala dear padichitu nengale solunga 😅. Weekly 3 uds varum