ஐ லவ் யூ டேஞ்சரஸ் டார்லிங் 2

4.4
(5)

அத்தியாயம் – 2

படபடக்கும் நீள் விழிகள் மிரள சுற்றும் முற்றும் நோட்டமிட்டபடி தன் முன்னே நின்றிருக்கும் பெண்ணின் செயலை இமை வெட்டாமல் பார்த்த ரிஷியின் அதரம் மௌனப் புன்னகையில் மலர்ந்தன.

“ஹேய் லுக், சீனியர் கூப்ட்டா விஷ் பண்ண தெரியாதா..” எங்கோ பார்த்தவளின் கவனத்தை சொடக்கிட்டு அழைத்து தன் புறம் திருப்பி இருந்தான்.

“க்.குட் மார்னிங் சீனியர் அண்ணா..” ஒரே வார்த்தையில் அவனை பஞ்சர் செய்ய, சிவா சபரி இருவரும் வாய் பொத்தி சிரிப்பதை கண்டு பற்களை கடித்த ரிஷி,

“சீனியர் மட்டும் போதும், அண்ணா எல்லாம் இதோ நிக்கிறானுங்கலே இவனுங்கல சொல்லி கூப்பிடு புரிஞ்சிதா” சற்றே அதட்டலாக சொன்னதை கேட்டு, ம்ம்.. என்றாள் லேசாக தலையாட்டி.

“பாக்க அழகா இருக்க, உன் பேர் என்ன?” ஒற்றை புருவம் ஏற்றி தன் பெயரை கேட்ட ரிஷியை கண்கள் சுருங்க பார்த்தவளாக,

“ஆராதனா” என்றாள் மெல்லிய பூங்காற்று குரலில்.

“ஆராதனா.. ஆரா.. ஸ்வீட் நேம்ல..” தனக்கு தானே சொல்லிக்கொண்ட ரிஷி,

“ம்ம்.. உன் டீடைல்ஸ் எல்லாம் கிளியரா சொல்லு?” அடுத்த கேள்வியை தொடுக்க,

“ஏன்டா இலவச சேவை மையம் தொடங்கி அந்த பொண்ணுக்கு ஏதாச்சி ஃபேவர் பண்ண போறியா” என்ற சபரி காலை ஓங்கி மிதித்த ரிஷி,

“என்ன அமைதியா நிக்கிற பதில் சொல்லு..” மீண்டும் கேட்டவனை கூர்மையாக நோக்கிய ஆராதனா, “இவனுக்கு பதில் சொல்லலைனா நம்மள விட மாட்டான் போலையே..” மனதில் நினைத்தவளாக,

“நான் திருச்சி, SR காலேஜ்ல ஃபர்ஸ்ட் இயர் CSE கம்ப்லீட் பண்ணேன்.. அண்ணாக்கு இங்க நியூ ப்ராஜெக்ட் கிடைச்சிருக்கு, சோ பேமிலியா சென்னைக்கு மாறி ஒன் மந்த் ஆகுது. இப்ப இங்க செகண்ட் இயர் ஜாயின் பண்ணி இருக்கேன் சீனியர்..” சுருக்கமாக தன் பையோவை சொல்லி முடிக்க, இந்த தகவல் மட்டும் போதுமா அவனுக்கு!

“உனக்கு வெறும் அண்ணன் மட்டும் தானா இல்ல அக்கா தங்கச்சி யாராவது இருக்காங்களா?”

“அண்ணனும் நானும் தான் சீனியர்..”

“ஓகே.. வீட்டு அட்ரஸ் சொல்லு..” என்றதும்,

“எதுக்கு..” படபடப்பானாள் ஆரா.

“சீனியர் கேட்டா யோசிக்காம ஆன்ஸர் பண்ணனும்.. சும்மா ஏன் எதுக்குனு பதில் கேள்வியெல்லாம் கேக்க கூடாது..” பைக்கில் இருந்து பொத்தென குதித்திறங்கி ஆருவின் முன் நிற்கவும், பெண்ணின் நெஞ்சிக்கூட்டுக்குள் அதிர்வலை உண்டானது.

“இங்க தான் பல்லாவரத்துல” தயக்கமாக முகவரி சொன்ன ஆரு, “ப்ளீஸ் வீட்டு பக்கமெல்லாம் வந்துடாதீங்க சீனியர், என் அண்ணா ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. அவர்க்கு பசங்களோட பேசுறது பழகுறதெல்லாம் சுத்தமா பிடிக்காது..” எங்கே விலாசம் தேடி வந்து தன்னை சிக்கலில் சிக்க வைத்து விடுவானோ என்ற பயத்தில், அவள் மனப்பாட செய்யுள் வாசிக்க, காதை குடைந்தான் ரிஷி.

“ஹேய் ஸ்டாப்.. என்னை என்ன காலேஜ் வர்ற பொண்ணுங்க அட்ரஸ் கேட்டு, அவங்க வீடு தேடி போயி வம்பு பண்றவன்னு நினைச்சியா.. ஏதோ நியூ ஜாய்னியா இருக்கியேனு உன்ன பத்தி தெரிஞ்சிக்க கேட்டேன் அவ்வளவு தான் மத்தபடி வேற ஒன்னும் இல்ல.. நீ கிளாஸ் போலாம் கெளம்பு..”

மீன் விழிகள் உருல வெகுளிப்பெண்ணாக நின்றிருந்தவளை அழுத்தமாக பார்த்தபடி ரிஷி உரக்க சொன்னது தான் தாமதம், விட்டால் போதும் என பச்சை நிற அனார்கலி அசைந்தாட, விரிந்த சில்கி கூந்தல் சிணுங்க வகுப்பறை நோக்கி ஓடிய ஆராதனை பெண்ணை விழிகள் இமைக்காது பார்த்துக்கொண்டே நின்றான் ரிஷிவர்தன்.

“அப்புறம் என்ன மச்சா, ஊரு பேரு அட்ரஸ் எல்லாம் கேட்டு தெரிஞ்சிகிட்டாச்சி, இனிமே பொறுத்தம் மட்டும் தான் பாக்கி.. அதுவும் இன்னைக்கே பாத்து பேசி முடிச்சிடலாமா எப்டி..” அவன் தோள் இடித்து கேலி செய்த சிவா சபரியை துரத்தி பிடித்து அடித்து நண்பர்கள் மூவரும் சிறுவர்கள் ஆகிய அழகிய தருணமானது அஃது.

மதியம் கல்லூரி முடித்து ஆரு காத்திருக்க, காலை வந்த அதே ஃபெராரியில் சரியாக மகனை அழைத்துக்கொண்டு வந்து விட்டான் ராகவ்.

“அத்தைஇஇ..” ஷாமின் உற்சாக குரலில்,

“ஷாம் குட்டி..” என்ற ஆருக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது.

“ஆரு கம் ஃபாஸ்ட்.. உங்கள வீட்ல விட்டு நான் திரும்ப ஆபிஸ் போகணும்..” ராகவ் அவசரப்படுத்த, காரின் பின் சீட்டில் அவள் ஏறியதும் வீடு செல்லும் வரை ஷாமோடு ஒரே அரட்டை தான்.

அவசரத்திற்கு கிடைத்த வீடு என்றாலும் பார்க்க ஓரளவுக்கு ஆடம்பரத்தை தாங்கியே இருந்தது. ராகவ் தந்தை மிகவும் வசதி, பிறவியிலேயே கால்கள் செயலிழந்த சுபாவை காதல் திருமணம் செய்துகொண்ட பின், ஏழு ஆண்டுகள் கழித்து தவமிருந்து பிறந்தான் ராகவ்.

அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு யாருமே எதிர்பாராத வகையில் மற்றுமொரு பொக்கிஷமாக பிறந்தவள் தான் ஆராதனா. இத்தனை ஆண்டுகள் தங்காத கரு காலம் கடந்து தங்கிவிட போகிறதா என அலட்சியமாக விட்டதன் விளைவு, ரோஜா மொட்டு மலர்ந்து விட்டது.

ராகவ்க்கு குட்டி தங்கை என்றால் அத்தனை பிரியம். தந்தை முகம் காணும் முன்னவே அண்ணனவன் அறைவனைப்பில் தான் முழுக்க அவள் வளர்ந்தது அனைத்தும். தனது 25 வயதில் தந்தையை இழந்தவன், தற்போது 35 வயது ஆகிறது இதுநாள் வரை கடினமாக உழைக்கிறான்.

தாய், தங்கை, அன்பான மனைவி, மகன் அனைவரையும் பொறுப்பாக கவனித்து கொள்கிறான். இத்தனை பொறுப்போடு இருப்பவன் தந்தைக்கு தந்தையாக பாசத்தை கொட்டி தங்கையை வளர்ப்பவன், அவள் வாழ்வின் நலனுக்காக சற்றே கண்டிப்புடன் நடந்துகொள்வதில் தவறேதும் இல்லையே!

வீட்டில் இருவரையும் விட்டுவிட்டு மீண்டும் ராகவ் கார் அலுவல் நோக்கி விரைந்து சென்றிட, “அண்ணிஇஇ.. அம்மாஆஆ..” இருவர் குரலும் ஒருசேர ஒளிக்கவும்,

“இவ்வளவு நேரம் உங்களுக்காக காத்திருந்து இப்ப தான் அத்தைக்கு சாப்பாடு கொடுக்க உள்ள போனேன்.. அதுக்குள்ள எவ்வளவு சத்தம்” செல்ல அதட்டல் போட்டபடி உள்ளிருந்து ஓடி வந்தாள் ராகவ் மனைவி சீதா.

“செம்ம பசி அண்ணி, என்ன லஞ்ச் இன்னைக்கு வெஜ் புலாவ் தானே..” ஆரு உரிமையாக கேட்டுக்கொண்டே உணவு மேசையில் அமர்ந்து, மூடி வைத்திருந்த உணவுகளை திறக்கப்போக பட்டென அடி விழுந்தது அவள் கரத்தில்.

“ப்ச்.. அண்ணி..” ஆரு சிணுங்க,

“ஹாண்ட் வாஷ் பண்ணிட்டு வந்தா சாப்பாடு.. உனக்கும் தான் ஷாம் போ” சீதாவின் கண்டிப்பு குரலில் இரண்டும் பேய் முழி முழித்தபடி கை கழுவி வந்ததும், ஆருக்கு பிடித்த வெஜ் புலாவை ஆசையாக பரிமாறி, ஷாம்க்கு பிடித்த தயிர் சாதத்தை அன்பாக ஊட்டி விட்டாள் சீதா.

“காலேஜ்லாம் பிடிச்சிருக்கா ஆரு”

“ஓகே தான் அண்ணி.. ஒரு டூ த்ரீ டேஸ்ல பழகிடும்..” வாயில் உணவை வைத்து குதப்பியபடியே பதில் தந்தாள்.

“பாக்க மூக்கும் முழியுமா லட்சணமா இருக்க ஆருமா, எல்லார் கண்ணும் ஒரே போல இருக்காது.. காதல் அது இதுன்னு மனசு தடுமாறுற வயசு, நம்ம தான் மனசை அலைபாய விடாம எல்லா பக்கமும் கவனமா இருக்கணும்.. முதல்ல படிப்பு அப்புறம் தான் மத்த எதைபற்றியும் யோசிக்கணும் புரிஞ்சிதா ஆரு..”

அன்னையின் கண்டிப்பு அண்ணிடம் இருந்து வருகிறது என்றால், சீதாவே அவளுக்கு மறுதாயாக மாறியதால் வந்த உரிமையில் வந்தது. ஆருவும் சீதாவின் அன்பையும் கண்டிப்பையும் அனுபவத்து உணர்ந்துகொண்டிருப்பவள் தானே, ஆகையால் அமைதியாக அவளது சொல்லுக்கு இணங்க “சரி அண்ணி.. சரி அண்ணி..” என பணிவாக பதில் தந்தவள் மனதிலும் அதே உருக்கம் இல்லாமல் இல்லை.

“சரி சாப்ட்டு இவனை பாத்துக்கோ ஆரு, நான் துர்க்கை கோவிலுக்கு போயி விளக்கு போட்டு வந்திடறேன்” என்ற சீதா சிறு கூடையில் பூ எலுமிச்சை நெய் திரி கற்பூரம் தீப்பெட்டி அனைத்தையும் வைத்து எடுத்துக்கொண்டு தெருமுக்கில் இருந்த துர்க்கை கோவிலுக்கு சென்றாள்.

“அத்தை மதியம் வந்ததும் ஸ்விம்மிங் பண்ணலாம்னு சொன்னீங்களே போலாமா..” ஆர்வமாக ஷாம் குதிக்க,

“போலாம் டா, வெயிட் பண்ணு அத்தை போயி நைட் ட்ரெஸ் மாத்திட்டு வந்திடறேன்” என்ற ஆரு, விறுவிறுவென சென்று முழங்கால் வரையிலான பேண்ட்டும், குட்டி கை வைத்த மெல்லிய மேல் பனியனும் மாட்டிக்கொண்டு இருவருமாக வெளியே ஓடினர்.

வீட்டின் காம்பவுண்டுக்குள் பெரிய அளவிலான கண்ணை கவரும் நீச்சல் குலம், வட்ட வடிவில் தனித்துவமாக கட்டப்பட்டு நீல நிறத்தில் அலையாக மின்னி, மனதை இதமாக்கும் உணர்வோடு அத்தனை கவர்ச்சியாக இருந்தது.

நீச்சல் குலத்தருகில் வந்ததும் குட்டி உடலை ரப்பர் பந்தாக வளைத்த ஷாம், “யா.. ஹூ..” என கத்தியபடியே பல்டி அடித்து பொத்தென உள்ளே விழுந்த வேகத்தில், வெயிலின் தாக்கத்தில் சூடாக இருந்த தண்ணீர் ஆரு முகத்தில் தெறித்ததில், கைகளை தடுப்பாக அமைத்து இமைகள் மூடி முகத்தை திருப்பினாள் கலகல சிரிப்போடு.

“நீங்களும் குதிங்க அத்தை ஜாலியா இருக்கு..” ஜாக்கி ஜான் படம் போட்ட குட்டி ஜட்டியில் தலையில் ஹெட் கேப் போட்டு, கண்ணில் கண்ணாடி அணிந்து, சிறிய கை கால்களை அசைத்து உற்சாகமாக நீந்தினான் ஷாம்.

ஷாமை தொடர்ந்து ஆருவும் நீச்சல் குலத்தில் குதித்தவளாக, இருவரும் ஒன்றாக நீந்தி, ப்லோடிங் புட்பாலை ஒருவருக்கொருவர் தூக்கிப் போட்டு பிடித்து, சிரித்து பேசி விளையாட தொடங்கினர்.

“இ.இன்னும் எவ்வளவு நேரம் டா இப்டியே குனிஞ்சி நிக்க, இன்னையோட என் இடுப்பு எலும்பு ஒடஞ்சிது..” சிவாவின் மூச்சி முட்டும் குரல் ஒருபக்கம் முடியாமல் ஒலிக்க,

“உனக்காவது இடுப்பு எலும்யோட முடிஞ்சி, எனக்கு மூச்சே நின்னுடும் போல டா.. அப்பா என்ன கனம் கனக்குறான் மாடு.. அங்க என்னவோ அட்ரஸ் தேடி வந்து வம்பு பண்றவனா நானுனு, பெரிய இவனாட்டம் அந்த பொண்ணுகிட்ட பேசிட்டு, இப்ப என்ன பண்ணிட்டு இருக்கான் பாரு கேடுகெட்டவன்..” மூச்சி திணறிய சபரி, லேசாக தலை தூக்கி பார்த்தான்.

சிவா சபரி இருவரும் குனிந்து நிற்க, இருவர் முதுகின் மீதும் ஒவ்வொரு காலை வைத்து ஏறி கம்பவுண்ட் சுவரை இறுக்கமாக பிடித்தபடி, நீச்சல் குலத்தில் முங்கி விளையாடும் ஈர தாமரையின் அழகினை அணுஅணுவாக கண்ணில் நிரப்பிக்கொண்டிருந்தான் ரிஷிவர்தன்.

ஆரு விலாசம் சொன்னதோடு அமைதியாக சென்றிருந்தால் இவனும் அமைதியாக கடந்திருப்பானோ என்னவோ! “வீடு தேடி வந்து விடாதே” என அச்சத்தில் சொன்ன வார்த்தை ரிஷி மனதில் என்ன தாக்கத்தை ஏற்ப்படுத்தியதோ!!

“மீறி வந்தா என்ன செய்வாளாம்”

வீம்புக்கென அவளை பின் தொடர்ந்து வந்தவன், வந்ததற்கு அவளை சிறு பயம் காட்டி செல்லலாம் என நினைத்து காம்பவுண்ட் சுவர் ஏறி குதிக்க முற்பட்ட ரிஷி, பேச்சிக்குரல் கேட்டதும் அசையாது நின்றவனாக, சத்தம் வந்த திசையினை பார்த்தான்.

திடீரென கண்ணுக்கு குளிர்ச்சியாக கிட்டிய பெண்ணின் மெல்லிய ஆடை கண்டே விழிகள் அதிர்ந்தவன், பொத்தென அவள் நீரில் குதித்து முழுதாக நனைந்து எழுந்த வடிவான வனப்பழகில் மதிமயங்கிய உணர்வில் சிலையாகி விட்டான் ரிஷி.

அன்றிலிருந்து சும்மா

விளையாட்டு என எண்ணி ஒவ்வொரு முறையும் ஆருவை வம்பிழிக்க ஆரம்பித்த ரிஷி, அப்போது நினைத்தும் பார்த்திருக்கவில்லை. என்றாவது ஒருநாள் விளையாட்டு வினையாகும் என்பதை.

அழகு பேராபத்து, அவ்வழகு இருவரில் யார் வாழ்க்கையை சீர்குலைக்க காத்திருக்கிறதோ!

சம்பவம் இருக்கு காத்திருங்கள்

தொடரும்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!