ஐ லவ் யூ டேஞ்சரஸ் டார்லிங் 3

4.3
(6)

அத்தியாயம் – 3

அடுத்த நாள் கல்லூரிக்கு விரைவாகவே வந்து விட்டான் ரிஷிவர்தன். கூடவே சிவா சபரி இருவரும் வாள் பிடித்து வந்துவிட,

“இன்னும் என்னடா அவளை காணல..” நொடிக்கு நொடி கை கடிகாரத்தை திருப்பி பார்த்து கேட்டே, ஏன்டா வந்தோம் எனும் அளவிற்கு நினைக்க வைத்து விட்டான்.

“ப்ச்.. உசுர வாங்காத டா.. உனக்கு தான் அவ வீடு தெரியும்ல நேரா போய்ட்டு அவள்ட்டே கேட்டு வர்ற வேண்டியது தானே.. ஏன் இன்னும் வரலைன்னு” சபரி ஏதோ எரிச்சலில் சொல்லிட, கற்பூரமாக பிடித்துக்கொண்டான் ரிஷி.

“தேங்க்ஸ் டா மச்சா ஐடியா கொடுத்ததுக்கு..” அவன் கன்னத்தில் முத்தமிட்டு, உஃப்.. உஃப்.. கூலிங் க்ளாஸை ஊதி கண்ணில் மாட்டிக்கொண்டு, துள்ளி குதித்து இருசக்கர வாகனத்தில் ஏறி புழுதி கிளப்ப பறந்திருக்க,

“என்ன டா இவன், சும்மா பேச்சிக்கு சொன்னத சீரியஸா எடுத்துட்டு இந்த ஸ்பீடு போறான்.. அந்த புள்ளையோட அண்ணன் பாத்தா பிரச்சனை வருமே டா..” சபரி தலையை பிடித்து பதறி போனான்.

“சும்மா சும்மா தொடை நடுங்காத மச்சா, பிரச்சனை வந்தா ரிஷி சமாளிச்சிடுவான்.. அங்க பாரு வந்து கூட மேரி வர்றா, அழகா இருக்கா இல்ல..” அவன் தோளை சுற்றி கைபோட்டு, தோள் சட்டையின் நூலை கிள்ளி கிள்ளி எடுத்து, வெட்கதில் நெளிந்தவனை கேவல லுக் விட்ட சபரி,

“சட்டை புதுசு டா.. நூல உருவி பனியனோட நிக்க உட்டுடாத..” வெடுக்கென அவன் கரத்தை தட்டிவிட்டவனாக,

“இப்டியே ஒவ்வொருத்தியா பாத்து சைட் அடிச்சே பைத்தியம் புடிச்சி சாவு.. நான் கிளாஸுக்கு போறேன்” நண்பனை முறைத்த சபரி வகுப்பு நோக்கி நடையை கட்டினான்.

இங்கே ராகவ் டிப்டாப்பாக தயாராகி உணவு மேசையில் வந்தமர, சீதா அவன் அருகே நின்று பார்த்து பார்த்து பரிமாறவும், சுற்றி முற்றி கண்ணை சுழல விட்ட ராகவ், சட்டென மடிப்பு விழுந்த மனைவி இடையில் நறுக்கென கிள்ளி, ஹக்.. மான் போல் துள்ள வைத்தான் கள்ளன்.

“என்னங்க இது பழக்கம், எப்பப்பாரு இடுப்புல கிள்ளி வைக்கிறது..” சட்டென சேலையை சரி செய்து கணவனை முறைத்து சிணுங்க,

“நான் கிள்ள தானே டி, நீயும் என் முன்னாடி இடுப்ப காட்டிட்டு நிக்கிற” என்றவனும் நார்மல் இறுக்கம் மோட் இல்லாமல், மனைவியிடம் குறும்பு கண்ணனாக சீண்டி வம்பிழுத்தான்.

“அச்சோ காலைலையே உங்க அலும்பு தாங்கல.. பிள்ளைங்க வர்ற நேரம் ஒழுங்கா சாப்பிடுங்க..” கணவனின் விழுங்கும் பார்வையில் குப்பென சிவந்த சீத்தா, மேலும் ஒரு இடியாப்பத்தை வைக்க ரசித்து உண்ட ராகவ்,

“இந்த ஷைனஸ் தான் டி, உன்ன இன்னும் எனக்கு ப்ரைட்டா காட்டி, கிக்கு ஏத்துது.. ஆமா இது என்ன கன்னத்துல”

“எதுங்க..” அவள் தொட்டு பார்க்க,

“இது டி..”

“ஹான்..”

“ப்ச்.. இதோ இது..” எக்கி அவள் பஞ்சி கன்னத்தில் விரலால் தடவி பச்சக்கென ஒரு இச் வைக்க, சிலிர்த்த அதிர்வுடன் சிணுங்கி புன்னகைத்தாள் சீதா.

“அண்ணி ரொமான்ஸ் முடிஞ்சிதுன்னா சீக்கிரம் சொல்லுங்க, எனக்கு காலேஜ்க்கு டைம் ஆச்சி..”

“ஆமா மம்மி எனக்கும் ஸ்கூலுக்கு டைம் ஆச்சி..”

உள்ளிருந்து இருவரும் கொடுத்த சத்தத்தில், கணவன் மனைவி இருவருமே ஒரு நொடி தடுமாறி சங்கடத்தில் விழித்தாலும், ராகவ் சட்டென இயல்பாகிட, “எல்லாம் உங்களால” மெல்ல கடிந்த சீதாக்கு தான் ஐயோயென்றானது.

மேசையில் அமர்ந்த இருவருக்கும் உணவை பரிமாறிய சீதா, ஆருவின் குறும்பு புன்னகை கண்டு ஒழுங்கா சாப்பிடும் படி கண்ணை உருட்டி காட்டினாள், கூச்ச முறைப்போடு.

உண்டு முடித்ததும், அலுவல் கல்லூரி பள்ளி என மூவரும் புறப்பட தயாராகி வெளியே வந்தவர்களாக, காரில் ஏற முற்படும் வேலையில் தான் ஆருவின் இதயம் தாறுமாறாக எகிறி குதித்தது.

ராயல் யமஹாவில் ஸ்டைலாக அமர்ந்திருந்த கண்ணழகனை கண்டதும், “அச்சச்சோ இவன் எப்டி இங்க.. ஒருவேளை நம்மள தான் தேடி வந்திருக்கானோ..” யோசனை கலந்த பீதியோடு அவனை பார்த்தது தான் தாமதம். கூலிங் க்ளாஸ் தூக்கி ஒன்றை கண்ணை அடித்த மாத்திரத்தில் அதிர்ந்து விழித்த ஆரு, ராகவின் சத்தத்தில் அடித்து பதறி காருக்குள் ஏறிய பின்னும் பதட்டம் நீங்கவில்லை.

“பத்திரமா காலேஜ் போய்ட்டு வா ஆரு.. ஷாம் இன்னைக்கு ஃபுல் டே ஸ்கூல் சமத்தா படிச்சிட்டு வரணும் சரியா..” மகன் தலையை வருடி விட்ட சீதா கணவனுக்கு பளிச்சிட்ட முகத்துடன் கையசைக்க, கருப்பு கூலர் வழியே மனைவியை கண்ணில் நிரப்பிக்கொண்டு மெல்ல காரை நகர்த்தினான் ராகவ்.

கார் நகர நகர அதனை தொடர்ந்து வந்த ரிஷியும் ஆருவை கண்டு கை காட்டிட, செய்வதறியாமல் பேய் முழி முழிக்கும் தங்கையை, மிர்ரர் வழியே ராகவ் கண்டானோ!

“வாட் ஹேப்பெண்ட் ஆரு..” அண்ணனவன் குரலில் தன்னை மீட்டெடுத்தவளாக,

“நத்திங் அண்ணா..” என்ற ஆரு, தங்கள் காரை தாண்டி சீறி பறந்த ரிஷியின் பின் புறத்தை கண்ட பின் தான் சற்று ஆசுவாசம் அடைந்தாள்.

“என்ன மச்சா போன வேகத்துல திரும்பி வந்துட்ட, உன் ஆள பாத்தியா இல்லையா” கல் பெஞ்சில் அமர்ந்து சைட் அடித்துக்கொண்டிருந்த சிவா, ரிஷியை கண்டதும் ஓடி வந்து விட்டான்.

“அதெல்லாம் பாத்தாச்சு டா, இப்ப பாரு பார்ட்டி தானா என்ன தேடி வரும்..” அவன் சொல்லி முடிக்கவில்லை, ராகவ் கிளம்பியதும் ரிஷியை தேடி அவசரமாக நடந்து வந்தாள் ஆராதனா.

“மச்சா.. சொன்ன மாறியே இங்க தான் வர்றா டா..” சிவா சொல்ல,

“கண்டுக்காத மச்சா என்ன பண்றான்னு பாப்போம்” என்ற ரிஷி அவளை கண்டுகொள்ளாதவன் போல சிவாவோடு அரட்டையில் இருக்க,

“சீனியர்ர்ர்ர்..” ஆருவின் அனல் குரல் கேட்டதும், ஒன்றும் அறியாதவனாக அவளை ஏறிட்டான் ரிஷி.

“நேத்து நான் அவ்வளவு தூரம் சொல்லியும் எதுக்கு சீனியர், என் வீட்டு பக்கம் வந்தீங்க..” அவள் அடைந்த பீதி காரணமாக, சிறு கோபம் வெளி வந்தது.

“வீட்டு பக்கமா தானே வந்தேன், என்னவோ உன் வீட்டுக்குளே வந்தது போல ஓவரா துள்ளுற.. ஆமா சீனியர்கிட்ட இப்டி தான் சத்தமா பேசுவாங்களா..” அலட்சிய தொனியில் கேட்டவன், ‘இவ நீச்சல் போட்டதையே எட்டி பாத்துட்டேன்.. வீட்டு பக்கம் வந்தத பெருசா பேசிட்டு வந்துட்டா..” உதட்டசைவில் முனங்கிய ரிஷி, மஞ்சள் சுடிதாரில் நேர்த்தியாக வந்திருந்த அவள் அழகை கூலர் வழியே மேலிருந்து கீழ் பார்த்தான்.

“இப்டித்தான் சீனியர், ஏற்கனவே நான் படிச்ச காலேஜ்ல ஒருத்தன், சொல்ல சொல்ல கேக்காம உங்கள போலவே வீண் விதண்டாவாதம் பண்ணான்.. கடைசில என் அண்ணன் கண்ணுல சிக்கி அவன் கரியரையே ஒன்னும் இல்லாம ஆக்க துணிஞ்சுட்டார்..

அதான் முன்னெச்சரிக்கையா உங்ககிட்ட சொன்னேன்.. இதுக்கு மேல உங்க விருப்பம் சீனியர்..” தோளை குலுக்கிய ஆரு, ‘நல்லா அவனை பயமுறுத்திட்டோம் இனிமே நம்ம வழில கிராஸ் ஆக மாட்டான்’ என்ற எண்ணத்தோடு அவள் வகுப்பிற்கு சென்றிருக்க, ‘அப்டித்தான் டி வாலண்ட்ரியா கிராஸ் ஆவேன்’ இவனும் கங்கணம் கட்டினானோ!

மாலை கல்லூரி விட்டு செல்லுகையில் மீண்டும் பார்த்து விட்டாள் ரிஷியை. ஒவ்வொரு நாளும் இதே கதை தொடர, ஆருவின் அச்சம் அதிகரித்து விட்டது.

கல்லூரியில் எங்காவது பார்த்தால் அப்பட்டமாக அவன் பார்க்கும் பச்சை பார்வையில், நடு நெஞ்சி சில்லிட்டு ஒருமாதிரி குறுகுறுப்பு தோன்றும்.

“உங்க அண்ணன் உம்மேல உயிரையே வச்சிருக்கார் ஆருமா.. எனக்காக ஷாம்க்காக அவர் யோசிக்கிறதை விட உனக்காக யோசிக்கிறது தான் அதிகம்.. அவர் ஆசையெல்லாம் நீ நல்லா இருக்கணும், எப்பேர்ப்பட்ட சூழ்நிலையும் சமாளிக்கிற விதமா தைரியமான பொண்ணா நீ உன் சொந்தக்காலுல நிக்கணும்.. அதன்பிறகு தான் கல்யாணம் குடும்பம் எல்லாம்.

மனசை எங்கும் எதிலும் சிதறவிடாம கவனமா படிக்க மட்டும் செய்யணும் சரியா..” அன்னை இடத்தில் இருந்து அவ்வப்போது சீதா சொல்லும் அன்பு கலந்த கண்டிப்பு பேச்சி, மனம் தடுமாறும் வேளையில் நினைவு வந்து போக,

“என் அண்ணன் மனச எந்த ஒரு சூழ்நிலையிலும் தவிக்க வச்சிட கூடாது” என ஆழ மூச்செடுத்து மனதை திடப்படுத்திக்கொள்வாள்.

அவள் திடமெல்லாம் எத்தனை நாட்களுக்கு நீளுமோ! அழகனின் கொத்தும் பார்வையும், அவனது மேனரிசமும் பருவபெண்ணுக்கே உண்டான ஆசைகள் நெஞ்சில் சுரக்க செய்ய, முடிந்து மட்டும் அவன் பார்வையில் சிக்காமல் தப்பிக்க நினைத்தாள் ஆராதனா.

ஆனால் வேடன் வளையில் புள்ளிமான் சிக்காமல் போன சரித்திரம் இல்லையே! சிக்கும் நாளும் விரைவாகவே வந்தது.

தொடரும்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.3 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!