அத்தியாயம் 1
சோழபுரம்,
அழகான வயல்வெளி நிறைந்த சுற்றிலும் மலைகள் சூழ்ந்த ஒரு ஊர் தான் சோழபுரம். அந்த ஊரில் பெரிய வீடுன்னு கேட்டா தெரியாதவர்களே இருக்க மாட்டாங்க.
முன்னாடி காலத்தில் அந்த வீட்டை சேர்ந்தவங்க தான் ஊர் பஞ்சாயத்து பன்றது ஊர் திருவிழா வந்தால் எல்லாமே அவர்கள் தலைமையில் தான் நடத்துவாங்க. இப்போ ஊர் எல்லாம் முன்னேற்றம் அடைந்து விட்டது. அதனால் அந்த மாதிரி எதுவும் இல்லை. அப்போதும் அந்த ஊரில் அந்த வீட்டை தான் எதற்கும் முன்னிலையில் வைத்திருக்கும்.
இப்போ அந்த பெரிய வீட்டில் வேலைகள் படுவேகமாக நடந்து கொண்டிருந்தது. ஊர்க்காரர்கள் எல்லாம் அங்கே தான் கூடி இருந்தனர். அப்படி எதற்கு கூடி இருந்தாங்கனா
பெரிய வீட்டின் பெரியய்யா ராஜன் அவர்களோட மூத்த மகனுக்கு நிச்சயம். அதான் ஊரே திரண்டு வந்திருந்தனர். ராஜன்கு இரண்டு மகன்கள். மூத்தவன் சோழன், தனி நெய்தல் தான் அவங்களோட குடும்ப தொழில் அதையே விரும்பி செய்து வரான். இரண்டாவது சேரன், அவனும் டெக்ஸ்டைல் தொழிற்சாலை வைத்து பாத்துட்டு இருக்கான்.
இன்று சோழன்கு தான் நிச்சயம். பெண் வீட்டார் அவர்களுக்கு தூரத்து சொந்தம் தான். எதோ விஷேசத்தில் பார்த்து விட்டு ராஜனிடம் கேட்டனர். அவரும் எப்படியாவது சோழன்கு கல்யாணம் பண்ணி ஆகனும்னு எதுவும் விசாரிக்காமல் சரின்னு சொல்லிட்டார். ஏன்னா சோழன் பொண்ணுங்க கல்யாணம்னு சொன்னாலே தலை தெறிக்க ஓடிடுவான். அதான் 29 வயது முடிய போகிறது இன்னும் கல்யாணம் பண்ணாமல் சுற்றி கொண்டு இருக்கிறான்.
பெண் பார்க்க கூட ஏதோ காரணம் சொல்லி தப்பி விட்டான். இப்போ எப்படி இவ்வளவு பேர் இருக்கும்போது தப்பிப்பதுன்னு அவனோட அறைல நடந்து கொண்டே யோசித்து கொண்டிருந்தான். பெண் வீட்டாரும் வந்து விட்டனர். மாப்பிள்ளையை அழைத்து வாங்கன்னு சொன்னதும் ராஜன் சேரா போய் அண்ணன அழைச்சிட்டு வான்னு சொல்றாரு.
சேரனும் ஐயய்யோ அய்யனார்ட நம்மள மாட்டி விட்டுட்டாரே இந்த ஐயா(அப்பாவ தான் ஐயான்னு சொல்றாங்க) அண்ணா வேற செம கடுப்புல இருந்தாரே என்ன பண்ண போறாரோ கடவுளே கூடவே இருந்து இந்த பச்சபிள்ளைய நீதான் பா காப்பாத்தணும்னு வேண்டிட்டே போறான். அண்ணானு கதவுல கை வச்சதும் கதவ திறந்தது பாத்தா சோழனே கிளம்பி ரெடியா வந்துட்டான்.
சேரன், அண்ணா கீழே ஐயா வர சொன்னாங்கனு சொல்றான். அவன ஒரு பார்வை பார்த்துவிட்டு கீழே போறான். இப்போ நான் என்ன சொன்னேன்னு என்னை முறைச்சுட்டு போறாரு. இந்த குடும்பத்தில் பிறந்துக்கு இன்னும் என்னவெல்லாம் பாக்கனுமோனு பொலம்பிட்டே போறான்.
இருவரும் கீழே இறங்கி வந்ததும் நிச்சயம் ஆரம்பிச்சிட்டாங்க. சோழன் யாரையும் பார்க்கவே இல்லை யாருக்கு வந்த விருந்தோ அவன் பாட்டுக்கு இருந்தான். ராஜன் தான் எப்படியாவது சோழன்கு கல்யாணம் ஆகிடனும்னு வேண்டிக் கொண்டு இருந்தார். நிச்சய தாம்பூலம் மாற்றி இன்னும் 15 நாட்களில் கல்யாணம் என்று தேதி குறித்தனர்.
சோழன் தான் தேதி குறித்தை கூட கண்டு கொள்ளாமல் ஏதோ யோசனையிலே இருந்தான். அனைவரும் விருந்து சாப்பிட சென்றனர். அப்போதும் நான் அப்புறமா சாப்பிடுறேன் சொல்லி விட்டு தன்னோட அறைக்கு போய்ட்டான்.
இங்கே சோழன் இப்படி இருக்க மும்பையில் தனக்கு இன்னும் 15 நாட்களில் கல்யாணம் நடக்க போகிறது என்றே தெரியாமல் ஒருத்தி இழுத்து போர்த்தி தூங்கிக் கொண்டிருந்தாள். இவங்களுக்கு எப்படி கல்யாணம் ஆகப்போகிறது என்பதை போக போக பார்ப்போம்.
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்.👌👌👌👌👏👏👏👏🥰🥰🥰🤩🤩🤩😍😍❤️❤️❤️❤️❤️