விதியின் முடிச்சு..(16)

4.7
(11)

என்ன பிரகாஷ் கம்ப்ளையண்ட் கொடுத்துட்ட தானே இன்ஸ்பெக்டர் என்ன சொன்னாரு என்ற நெடுமாறனிடம் இன்ஸ்பெக்டரிடம் பேசியதைப் பற்றி கூறினான் பிரகாஷ்.

 

என்னோட தப்பு தான் அண்ணா அவனைப் பற்றி சரியா விசாரிக்காமல் என்ற இளமாறனிடம் விடு இளமாறா அதை பேசி எந்த பிரயோஜனமும் இல்லை என்ற நெடுமாறன் உதய் எங்கே என்றார்.

 

அவன் ரோனியை அழைச்சுட்டு வெளியே போயிருக்கான் மாமா என்ற சுசீலாவிடம் சரிம்மா என்றார் நெடுமாறன்.

 

எங்கே போறோம் மாமா என்றவளிடம் தெரியலை எங்கேயாச்சும் போகலாம் என்றான் உதயச்சந்திரன். சினிமாவுக்கு போகலாமா என்றவனிடம்  வேண்டாம்  என்றாள். ஏன் ஒரு மாதிரி இருக்க என்றான். இல்லை என்றவளின் கையைப் பிடித்தவன் இதோ பாரு என்ன நடந்திருந்தாலும் சரி அதை மறக்க முயற்சி பண்ணு என்றான் உதயச்சந்திரன்.

 

மாமா அது வந்து என்றவள் அழ ஆரம்பிக்க என்ன வெரோனிகா  இது குழந்தை மாதிரி அழுதுகிட்டு என்ன நடந்துச்சுனு உனக்கு என் கிட்ட எப்போ சொல்லத் தோணுதோ அப்போ சொல்லு. அவனை வேற கேஸ்ல தான் அரஸ்ட் பண்ணி இருக்கு. அதற்கு காரணம் நீ தான். நீ கட்டாயம் கோர்ட்டுக்கோ, போலீஸ் ஸ்டேசனுக்கோ வர மாட்ட அதனால தான் என்றான்.

 

இது அசிங்கம் மாமா வெளியே தெரிந்தால் பார்க்கிறவங்க எல்லோரும் என்னை கேவலமா பேசுவாங்க. ஸ்கூலில் கூட எல்லோரும் என்னைக் கிண்டல் பண்ணுவாங்க. மாமா எனக்கு விசம் இருந்தால் வாங்கிக் கொடுங்க நான் செத்துப் போயிடுறேன் என்றவளின் கன்னத்தில் பளாரென்று அறைந்தான் உதயச்சந்திரன்.

 

கன்னத்தைப் பிடித்து அமர்ந்தவளின் முகத்தை நிமிர்த்தியவன் பைத்தியமாடி நீ இப்போ என்ன நடந்துச்சுனு விசம் வாங்கித் தரச் சொல்லுற. விசம் குடிச்சு சாகுற அளவுக்கு நீ என்ன தப்பு பண்ணின என்றான் உதயச்சந்திரன்.

 

மாமா அவன் என்னை தொடக்கூடாத இடத்தில் எல்லாம் என்றவள் மீண்டும் அழுதிட என்னைப் பாரு வெரோனிகா இது வெறும் உடம்பு தான். மண்ணுல மக்கிப் போற உடம்பு அதை அவன் தொட்டது தப்பு தான். ஆனால் அதற்கு உன்னை நீயே தண்டிக்க நினைக்கிறது தப்பு.

 

இந்த சதைப்பிண்டத்தை  மட்டும் ஆசைப்படுறவன் நல்ல பிறப்பும் கிடையாது. ஏன் ஆம்பளையே கிடையாது. அந்தப் பொறுக்கியை ஒரு வெறிபிடிச்ச ஏதோ ஒரு மிருகம்னு நினைச்சுக்கோ. அது சும்மா உன்னை பிராண்டிருச்சு அவ்வளவு தான்.

 

இதற்கு எல்லாம் உடைஞ்சு போயி மூலையில் கிடக்க ஒன்றும் நீ பிறக்கவில்லை. உன்னோட பயணமும், பாதையும் இன்னும் எவ்வளவோ இருக்கு. அதனால தான் சொல்கிறேன் உன் கூட எப்பவுமே நான் இருக்கேன்.

 

சும்மா சும்மா அழக்கூடாது. கண்ணீர் ரொம்ப விலை மதிக்க முடியாதது. அதை உரிய மனிதர்களுக்காக மட்டும் தான் சிந்தனும். உன்னோட கண்ணீரை சும்மா ரோட்டுல போற பொறுக்கிக்காக எல்லாம் வீணடிக்காதே என்றவன் சினிமா வேண்டாம்னு சொல்லிட்ட சாப்பிடவாச்சும் போகலாமா என்றான்.

 

சரி என்றவளின் கண்ணீரைத் துடைத்தவன் இனிமேல் சும்மா சும்மா அழவே கூடாது என்றிட அவளும் சரியென்று தலையாட்டினாள்.

 

 

என்ன சாப்பிடுற என்றவன் உனக்கு ஐஸ்கிரீம்னா ரொம்ப பிடிக்கும் தானே என்றான். சரி நாம இப்போ ரோனிக்குட்டிக்கு பிடிச்ச ஐஸ்கிரீம் எல்லாம் சாப்பிடப் போகிறோம் என்றான்.

 

மாமா என்றவளிடம் என்ன என்றான் உதயச்சந்திரன். முதல் தடவை என்னை ரோனினு கூப்பிட்டுருக்கிங்க என்றாள் வெரோனிகா. அதற்கு சிரித்தவன் ஆமாம் இன்னைக்குத் தான் உன்னை அப்படி கூப்பிட்டுருக்கேன் என்றிட இனிமேல் அப்படியே கூப்பிடுங்க மாமா என்றாள். சரிங்க ரோனிக்குட்டி என்றவன் சாப்பிடு என்று கூறிட அவளும் அமைதியாக சாப்பிட்டாள்.

 

உணவு முடித்து விட்டு இருவரும் ஐஸ்கிரீம் சப்பிட்டனர். இப்போ நைட் ஷோ  சினிமா போகலாமா என்றவனிடம் சரிங்க மாமா என்றாள்.

 

இருவரும் நல்ல காமெடி படத்திற்கு சென்றனர். அவளும் சிரித்தபடி சினிமா பார்த்துக் கொண்டிருந்தாள். சினிமா முடிந்த பிறகு இருவரும் வீட்டிற்கு கிளம்பினர். அவள் காரிலே உறங்கி விட்டாள்.

 

வீட்டிற்கு வந்தவன் அவளை எழுப்பிட அவள் அசதியில் எழாமல் இருக்க சரியென்று அவளை கைகளில் ஏந்திக் கொண்டான்.

 

என்னப்பா இவ்வளவு நேரம் ஆச்சு என்ற மலர்கொடியிடம் நீங்க இன்னும் தூங்கவில்லையா அம்மா என்றான் உதயச்சந்திரன்.

 

என்னப்பா நீங்க இரண்டு பேரும் பத்திரமா வீட்டுக்கு வரும் வரை எப்படி எனக்கு தூக்கம் வரும் என்றவர் தூங்கிட்டாளா என்றிட ஆமாம் அவளுக்கு தலையில் அடிபட்டது வலிக்குதுனு சொன்னாள் என்றான்.

 

சரிப்பா அவளை நீ ரூம்க்கு தூக்கிட்டுப் போ நான் கதவை சாத்திடுறேன் என்ற மலர்கொடி கதவை சாத்திட உதயச்சந்திரன் வெரோனிகாவை தன்னறைக்கு தூக்கிச் சென்றான்.

 

அவளை மெத்தையில் படுக்க வைத்துவிட்டு போர்வை போர்த்தி விட்டான். அவன் சென்று ஷோபாவில் படுத்து உறங்கி விட்டான்.

 

நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவள் திடீரென்று ஐயோ ப்ளீஸ் என்னை விட்டுரு என்னை விட்டுரு என்று அலறி எழுந்திட அவளது சத்தத்தில் கண்விழித்தவன் ரோனி என்னாச்சு என்றிட சந்துரு மாமா சந்துரு மாமா என்று அவள் பயத்தில் நடுங்கிட அவள் மனதில் மாலை நடந்த சம்பவத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்பதை உணர்ந்தவன் ஒன்றும் இல்லை பயப்படாதே நான் இருக்கேன்ல பயப்படக்கூடாது என்று அவளை சமாதானம் செய்தான். என்னை விட்டு போயிறாதிங்க மாமா பயமா இருக்கு என்றாள்.

 

உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன். உன் கூட தானே இருக்கேன் என்ற உதயச்சந்திரனைக் கட்டிக் கொண்டவள் கண்களை இறுக்கமாக மூடிக் கொள்ள பயப்படாதே கண்ணை மூடித் தூங்கு என்று அவளது தலையைக் கோதி விட்டான்.

 

 

அவள் உறங்கியதும் அவன் எழ நினைக்க அவனது சட்டையை அவள் இறுக்கமாக பிடித்துக் கொண்டு உறங்கினாள். அவனும் அமைதியாக அமர்ந்திருக்க அப்படியே கண்ணயர்ந்து விட்டான்.

 

அர்ஜுன் சாப்பிடாமல் தூங்கக் கூடாதுனு எத்தனை முறை சொல்லிருக்கேன் என்று வந்தார் அர்ஜுனின் அம்மா கிரிஜா. பசிக்கவில்லை அம்மா என்ற அர்ஜுனிடம் ஏன்டா என்றார் கிரிஜா.

 

மாலை பள்ளியில் வெரோனிகாவிற்கு நடந்த விசயத்தைக் கூறியவன் பாவம்மா ரோனி ரொம்ப நல்ல பொண்ணு என்றிட சரிப்பா இப்போ நாம என்ன பண்ண முடியும். அந்த வாட்ச்மேனை தான் போலீஸ் பிடிச்சுட்டாங்களே அப்பறம் என்ன என்றார் கிரிஜா. அந்த வாட்ச்மேன் யாருன்னு தெரியுமா என்றவனிடம் யாரு என்றார் கிரிஜா.

 

 

நம்ம பின்வீட்டில் இருந்தாங்களே கனகா அக்கா அவங்க புருசன் என்றான் அர்ஜுன். அந்த கொலைகாரப் பயலாடா வாட்ச்மேன். பாவம் அந்தப் பொண்ணு கனகாவை கழுத்தை நெறிச்சு கொன்னுட்டு அவள் தற்கொலை பண்ணிகிட்டாள்னு ஊரையே நம்ப வச்ச படுபாவியாச்சே என்ற கிரிஜா நல்லவேளை அந்தப் பொண்ணு ரோனிக்கு எதுவும் ஆகாமல் காப்பாத்திட்டிங்க என்றார்.

 

ஆமாம் அம்மா என்றவனுக்கு சாப்பாடு ஊட்டியவர் அந்த பொண்ணு மேல உனக்கு என்ன அர்ஜுன் அக்கரை என்றார் கிரிஜா. அவள் என்னுடைய ப்ரண்ட் என்றான் அர்ஜுன். ப்ரண்ட் மட்டும் தானா என்றவரிடம் எனக்கு அவளைப் பிடிக்கும் அம்மா. அவளுக்கு பிடிக்குமான்னு தெரியவில்லை.

 

பிடிக்கலைனாலும் தொல்லை பண்ண மாட்டேன் என்றவனது நெற்றியில் முத்தமிட்ட கிரிஜா நீ என்னோட வளர்ப்பு தப்பு பண்ண மாட்டே என்றார்.

 

உங்களைப் பார்த்து பார்த்து தானே வளர்கிறேன் சத்தியமா எந்த தப்பும் பண்ண மாட்டேன் என்ற மகனை உறங்கச் சொல்லி விட்டு தன்னறைக்குச் சென்றார் கிரிஜா.

 

 

கிரிஜா கண்களை மூடி கண்ணீர் சிந்தினார். தனது வாழ்வின் ஒரே பிடிமானம் அன்பு மகன் அர்ஜுன் தான். முடிந்த அளவு அவனை நல்ல முறையில் வளர்த்திருப்பதை நினைத்து மனதிற்குள் சந்தோசம் அடைந்தார்.

 

 

 

என்னம்மா ஏன் ஒரு மாதிரியா இருக்கிங்க என்ற அர்ச்சனாவிடம் இல்லைடி விடிஞ்சு இவ்வளவு நேரம் ஆச்சு இந்த ரோனியை இன்னும் காணோம் என்றார் மலர்கொடி. அவளுக்கு இன்னைக்கு ஸ்கூல் லீவு தானேம்மா என்ற அர்ச்சனவிடம் இல்லைடி அவளைப் பற்றி தான் உனக்கு தெரியுமே நேற்று நடந்த விசயத்தை மனசுக்குள்ள போட்டு குழப்பிட்டு இருப்பாளோன்னு ஒரே கவலையா இருக்கு என்றார் மலர்கொடி.

 

அண்ணா இருக்காரே அவளை அவர் சரி பண்ணிடுவாரு அதனால நீங்க எதையும் யோசிக்காதிங்க. அவள் மறந்தாலும் நீங்க மறக்க மாட்டிங்க போல முதலில் அந்த விசயத்தை உங்க மனசுல இருந்து தூக்கிப் போடுங்க என்ற அர்ச்சனா தன் ஸ்கூட்டரில் கிளம்பினாள்.

 

 

உறக்கம் கலைந்து எழுந்த வெரோனிகா உதயச்சந்திரனின் சட்டையைப் பிடித்தபடி அவனது மார்பில் தலை வைத்து படுத்திருப்பதைக் கண்டு பட்டென்று எழுந்து கொண்டாள். அச்சோ நான் எப்படி இப்படி என்று தன் தலையில் தானே அடித்துக் கொண்டவள் எழுந்து குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

 

அவளுக்கு ஏனோ மனதில் ஒரே வெட்கமாக இருந்தது. என்ன நடந்தது என்று யோசித்தவளுக்கு இரவில் தான் பயந்து அலறியது. தன்னை சமாதானம் செய்து அவன் உறங்க வைத்தது எல்லாம் நினைவில் வர அவன் மீது லேசாக இருந்த விருப்பம் காதலாக மாறியதுடன் அவன் மீது மரியாதையும் கூடியது.

 

குளித்து முடித்து வந்தவள் மெல்ல படிகளில் இறங்கி கீழே வர எழுந்துட்டியா என்ற சுசீலா மருமகளுக்கு காபியை கொடுத்தார். அத்தை ஸாரி தூங்கிட்டேன் என்றவளிடம் லீவு தானடி இன்னும் கொஞ்சம் நேரம் கூட நீ தூங்கிருக்கலாமே என்றார்.

 

அவள் சிரித்து விட்டு அமைதியானவள் அத்தை என் மேல கோபம் இல்லையே என்றாள். என்ன கோபம் என்ற மலர்கொடியிடம் நேற்று ஸ்கூலில் என்று ஆரம்பித்தவள் மௌனமாகிட அதை புரிந்து கொண்ட சுசீலாவும், மலர்கொடியும் உன் மேல என்ன தப்பு கோபம் பட இதோ பாரு ரோனிம்மா அது ஒரு கெட்ட கனவு.

 

சும்மா அதையே நினைக்காதே இன்னைக்கு உனக்கு லீவு தானே வா வந்து சமையல் வேலையைப் பாரு என்றார் மலர்கொடி. ஆமாம் இன்னைக்கு எனக்கும், அக்காவுக்கும் ரெஸ்ட் நீ தான் சமைக்கனும் என்று சுசீலாவும் கூறிட வெரோனிகா சரியென்று சமையல் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.

 

 

உறக்கத்திலிருந்து எழுந்தவன் அறையெங்கும் அவளைத் தேடிட அவள் எங்கும் இல்லை. எங்கே போனாள் இவள் என்றவன் எழுந்து குளித்து விட்டு வர அவனது மொபைல் போன் ஒலித்தது.

 

அந்த நேரம் சரியாக அவனுக்கு காபி எடுத்துக் கொண்டு வந்தாள் வெரோனிகா. மொபைலில் தெரிந்த பெயரைக் கண்டு குழம்பியவள் அவனிடம்  காபியை நீட்டிட தாங்க்ஸ் என்றவன் மொபைலை அட்டன் செய்தான்.

 

 

என்ன கிளம்பாமல் நிற்கிற என்றவனிடம் ஒன்றும் இல்லை என்று ஓடினாள். ஆனாலும் அவள் மனதில் அவனது மொபைலில் தெரிந்த

பெயர் அவளது மனதை குழம்பச் செய்தது.

 

அப்படி என்ன பெயரா இருக்கும்🤔🤔🤦‍♀️

 

 

…தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

1 thought on “விதியின் முடிச்சு..(16)”

Leave a Reply to Henrietta1556 Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!