January 2025

17. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 17   பசுமை நிறைந்த வயல்களில் நெற்கதிர்கள் அசைந்தாடி பரத நாட்டியம் பயில, வெள்ளைக் கொக்குகள் வரிசையாய் அவற்றை ரசித்துக் கொண்டிருந்தன.   கார் கண்ணாடி வழியாக அக்காட்சிகளைப் பார்த்த ஜனனிக்கு பள்ளிப் பருவ நினைவுகள். பள்ளிக்கூடம் முடித்து வந்து நந்திதா, மகிஷா இருவருடனும் அந்த வயலுக்கு வந்து ஓட்டப்பந்தயம் நடாத்துவாள்.   அவர்கள் மூவருள்ளும் அப்படியொரு பிணைப்பு. நந்திதா அமைதியானவள். அதிகம் பேச மாட்டாள். ஜனனி தேவைக்கேற்ப […]

17. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

16. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 16   மாரிமுத்துவின் பார்வை மகிஷா மீது படிய, அதிர்ந்து போனது அவளுள்ளம். இருபது வயது இளஞ்சிட்டு அவள். திருமணம் என்பதை அவள் என்றென்றும் நினைத்துப் பார்த்ததில்லையே.   “மகி…!!” என்று அழைக்க, அவ்வழைப்பின் காரணம் புரிந்து போனது அனைவருக்கும்.   சத்யாவுக்கு அவர் கொடுக்கப் போகும் புதல்வி மகிஷா என்பதை யூகிக்கும் முன், “அப்பா” என்றழைத்திருந்தாள் ஜனனி.   அவரது பார்வை ஜனனி மீது கடுமையாகப் படர்ந்தது.

16. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

15. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 15   “அண்ணா…!!” தன்யாவின் அழைப்பில், அவன் விழிகள் மலர்ந்தன.   “நீ மட்டும் இல்லை டா. நீயும் வந்திருக்கலாம்ல தனு?” மேகலை கேட்க, “என்னமோ பெத்தெடுத்த மாதிரி பேசுறாங்க. அண்ணா, அம்மானு சொன்னா உடனே அவளையும் குடும்பத்தில் ஒருத்தியா பார்த்துட வேண்டியது” தேவனின் முனகல் ரூபனை மட்டும் வந்தடைய, அவனை முறைத்துப் பார்த்தான்.   “நான் தான் படிச்சிட்டு இருக்கேன்லம்மா. சரியா நாளைக்குன்னு பார்த்து செமஸ்டர் எக்ஸாம்

15. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

14. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 14   ‘ராஜ் மஹால்’ திருமண மண்டபம் அலங்கார தோரணங்களில் எழிலுடன் திகழ்ந்தது.   “வாவ் அழகா இருக்குல்ல டாடி?” அதன் வாயிலில் நின்று ஆச்சரியமாகப் பார்த்தான் யுகன்.   சத்யாவுக்கு அவற்றை ரசிக்கும் மனநிலை கொஞ்சமும் இல்லை. அவன் வாழ்வில் அனைத்தும் தன் கை மீறி நடப்பது போல் இருக்க, வெறுத்துப் போயிருந்தான் சத்யா.   “டாடி! இந்த அலங்காரங்களைப் பாருங்க. செம்ம இல்ல?” என்று மீண்டும்

14. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

13. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 13   “நம்ம வீட்டு பக்கத்தில் இருக்கிற மண்டபம் எவ்ளோ நல்லாருக்கு. அதை விட்டு ஊர் எல்லையில் மண்டபம் எடுத்திருக்கார் அப்பா” சலித்துக் கொண்டான் ஜனனி.   “கட்டிக்கப் போறவளே சும்மா இருக்கா. உனக்கு அப்பாவை குறை சொல்லாம பொழுது விடியாது” ஜெயந்தி உடைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்.   நாளை நந்திதாவுக்கு திருமணம். இன்று காலையில் மண்டபத்திற்குச் செல்ல வேண்டும் என்றிருந்தார் மாரிமுத்து. மூத்த மகளின் கல்யாணத்திற்கு

13. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

12. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 *ஜீவனின் ஜனனம் நீ…!!* 💕   ஜனனம் 12   லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சத்யாவுக்கு சிந்தனை வேறு பக்கம் சென்றது. யுகனின் தாய்க்கான ஏக்கம் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.   லேப்டாப்பை மூடி வைத்தவன் மகனைத் தேடிச் செல்ல, “யுகி எங்கே?” ரூபனிடம் கேட்டான்.   “தேவ் கூட இருந்தான். போய் பாருங்கண்ணா” அவன் ஏதோ எழுதிக் கொண்டிருக்க, அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தானே தேவ்வின் அறை நோக்கி நடந்தான்.

12. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

11. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 *ஜீவனின் ஜனனம் நீ…!!* 💕   ஜனனம் 11   “என்னக்கா சொல்லுற? ராஜ் அண்ணா பேசலயா உன் கூட?” ஜனனி சொன்னதைக் கேட்டு மகிஷா அதிர்ச்சியோடு கேட்க, “ம்ம். கல்யாணம் முடிவு பண்ணியாச்சாம்” கண்ணீர் வற்றிப் போயிருந்தது அவள் விழிகளில்.   அவளது அலைபேசியில் மேசேஜ் வரும் சத்தம். அதைக் கண்டும் காணாமல் இருக்க, ராஜீவ் அழைத்திருந்தான்.   அலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியில் சென்ற ஜனனிக்கு ஆன்ஸ்வர் செய்து காதில் வைப்பதற்குள் கை

11. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 31

அரண் 31 குளியலறைக்குள் வள்ளியுடன் உள்ளே சென்ற துருவன் சும்மாவா இருப்பான் தனது காதல் லீலைகளில் திளைக்கத் தொடங்கியவன் அதிலிருந்து மீளவே மனமின்றி  இருந்தான். பின்பு வள்ளி துருவன் செய்த சேட்டைகளினாலும், குறும்புகளினாலும் மீண்டும் குளித்துவிட்டு இருவரும் வெளியே வந்தனர். வந்ததும் துருவன் நேரத்தை பார்க்க நேரம் ஒரு மணி எனக் காட்டியது. “என்ன அற்புதம் ஒரு மணி ஆயிடுச்சு நாம இன்னும் சாப்பிடவே இல்ல உனக்கு பசிக்கலையா..?” “இல்லங்க..” “இரு ரூமுக்கு சாப்பாட ஆர்டர் பண்ணி

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 31 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் –

அரண் 30 அழைப்பினை துண்டித்து விட்டு திரும்ப துருவன் இமைக்காமல் அற்புதவள்ளியை பார்த்து கொண்டிருந்தான். துருவனின் எதிர்பாராத அந்தப் பார்வையின் வீச்சு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வள்ளிக்கு ஏதோ ஊடறுத்து செல்வது போல இருந்தது. அந்தப் பார்வையை எதிர்கொள்ள திராணியற்று அற்புதவள்ளி வெட்கத்துடன் தலைக்கவிழ அவளது கன்னச் சிவப்பைக் கண்டு சிரித்த வண்ணம், “என்னவாம் உங்க அத்தை..” அவன் கேட்கும் கேள்வி சிறிது நேரம் அவளது காதில் விழவே இல்லை காலையில் நடந்த அனைத்து விடயங்களும்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 06

வாழ்வு : 06 அந்த இரவு நேரத்தில் பாலத்தின் மீது ஏறி நின்றாள் சம்யுக்தா. தொட்டுத் தாலி கட்டிய கணவன் ஏமாற்றி விட்டான். தாய் வீட்டுக்குச் செல்லலாம் என்றால் தாயோ இவள் ஒரு அநாதை என்ற பட்டத்தைக் கொடுத்து வெளியே அனுப்பி விட்டார். சொந்த பந்தம் எதுவும் இல்லாமல், தனக்கென்று ஒரு உறவு இல்லாமல் யாருக்காக இந்த வாழ்க்கை…? எதற்காக இந்த வாழ்க்கை..? என்று எண்ணம் தான் சம்யுக்தாவிற்கு தோன்றியது.  இதற்கு மேல் இந்த உலகத்தில் இருந்து

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 06 Read More »

error: Content is protected !!