May 2025

அசுரனின் குறிஞ்சி மலரே.. 8

குறிஞ்சி மலர்.. 8 வானம் மழை மேகங்களை சுமந்து கொண்டு மப்பும் மந்தாரமுமாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தது. சூரியனை வெகு பிரயதனப்பட்டு மேகங்கள் மூடி கிடக்க, வாயு பகவானும் வெகு பிரயத்தனப் பட்டு மேகங்களைக் கலைத்து சூரியனை வெளிக்கொணர முயன்று கொண்டிருந்தார். தனக்கு கொடுக்கப்பட்ட மாட்டுத் தொழுவத்தின் வாசலில் அமர்ந்து கொண்டு, மழை வருமா? வராதா? என்பது போல விரல் நகங்களைக் கடித்துக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தாள் பூங்கோதை. பூங்கோதை ஜீவோதயத்திற்கு வந்து இன்றோடு ஐந்து நாட்களாகி […]

அசுரனின் குறிஞ்சி மலரே.. 8 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 7

குறிஞ்சி மலர்.. 7 மரங்களை ஊடறுத்து வந்த மெல்லிய தென்றல் காற்று, தேகம் வருடிச் செல்ல, காற்று கலைத்து விட்டுச் சென்ற கூந்தலை ஒரு கையால் ஒதுக்கி விட்டபடி திரும்பிப் பார்த்தாள் பூங்கோதை. அவள் வரும்போது இருந்த மாட்டுத் தொழுவத்திற்கும் இப்போது இருக்கும் மாட்டுத் தொழுவத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. எல்லாம் அவளின் கை வண்ணம் தான். மேலே வேயப்பட்டிருந்த ஓலை தவிரத் திறந்த வெளியாக இருந்த மாட்டுத் தொழுவம், கீழே குப்பை கஞ்சலாகப் பார்ப்பதற்கே அழுக்குப்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 7 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 6

குறிஞ்சி மலர்..6 தென்றல் காற்று பூ மரங்களின் ஊடே புகுந்து அப்பால் நகர்கையில், தன் குளுமையோடு பூக்களின் சுகந்தத்தையும் ஏந்திக் கொண்டே நகர்ந்தது. அத்தனை இதமான சுகந்தத்தை எங்கும் பரப்பும், பூமரங்களைக் கொண்ட தெருவின் முனையில் தான் ஜேம்ஸ்ஸின் ஜீவோதயம் அமைந்திருந்தது. வீடு அமைந்திருந்த தெருவில் மட்டும் தான் வாசனை மரங்கள் ஏராளமாக இருந்தன ஆனால், ஜேம்ஸின் பங்களா அமைந்திருந்த வளாகத்தில், வாசனைப் பூக்களுக்கு மட்டும் பஞ்சம். அங்கே நின்ற பூ மரங்கள் வாசனையுள்ள பூக்களைப் பூக்காமல்,

அசுரனின் குறிஞ்சி மலரே.. 6 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 5

குறிஞ்சி மலர்..5 தெற்கிலிருந்து வீசிய காற்றின் வேகத்தில், சாளரக் கதவுகளுக்குப் போடப் பட்டிருந்த திரைச் சீலைகள், தேசியக்கொடி பறப்பது போல பறந்து கொண்டேயிருந்தன. பூ மரங்களில் இருந்த பூக்களும் காற்றோடு சேர்ந்து வந்து அந்தப் பெரிய மொட்டை மாடியில், பூமழை தூவியது போலக் கொட்டிக் கிடக்க, அங்கே போடப் பட்டிருந்த பெரிய இருக்கையில் அமர்ந்து கொண்டு, மேலே வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான் ஜேம்ஸ்பீட்டர். அவன் மேல் விழுந்த ஒன்றிரண்டு பூக்களை, எரிச்சலோடும் அலட்சியத்தோடும் தட்டி விட்டவனின் கரம்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 5 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 4

குறிஞ்சி மலர்.. 4 காலை நேர இளங்காற்று அவசரம் இல்லாமல், சாமரம் வீசுவது போல வீசிக் கொண்டிருக்க, காலைச் சூரியனும் தன் சேவைக்கு வந்திருந்தான். அந்தப் பெரிய வீட்டின் ஒரு பக்கமாகத் தனியாக இருந்த அறையின், சாளரக் கம்பிகளின் ஊடாக உள்ளே நுழைந்த சூரியக் கதிர்கள், கீழே படுத்துக் கிடந்த பூங்கோதை மீது, தம் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்ச, அவளோ போர்த்தியிருந்த சேலையை இழுத்து முகத்தை மூடிக் கொண்டு விட்ட தூக்கத்தைத் தொடர்ந்தாள். அவள் காலை நேரத்தில்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 4 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 3

குறிஞ்சி மலர்.. 3 வெள்ளை நிறத் தாமரை மலர்களும் மொட்டுகளும் என நிரம்பி வழிந்த தாமரைத் தடாகத்தின், கரையோரமாக விரிந்து கிடந்த புல்வெளியில் நின்று பார்க்கையில், வட திசையில் பெரிய அரசமரத்துக்குக் கீழே கருங்கல்லால் செதுக்கப் பட்டிருந்த, அமர்ந்த நிலை புத்த பகவானின் சிலை மனதுக்கு அமைதியைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அந்தப் புத்த பகவானின் சிலையையே பார்த்தபடி நின்றிருந்தார் வியாகேசு. அவர் நின்றிருந்த இடத்தில் இருந்து, பத்து கிலோமீற்றர் தூரத்தில் இருந்த கோல்ட் ஸ்டார் ரெஸ்ரோரன்டில், ஜேம்ஸ்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 3 Read More »

12. காதலோ துளி விஷம்

விஷம் – 12 யாழவனோ இன்றோடு மருத்துவமனைக்குச் சென்று மூன்று நாட்கள் ஆகியிருந்தன. அனைத்து வேலைகளையும் வீட்டில் இருந்தே பார்த்துக் கொண்டான் அவன். அங்கே சென்றால் மனதைப் பிசையும் உணர்வு தோன்றுவதை அவனால் தவிர்க்க இயலாமல் போனதன் காரணமாக மருத்துவமனைக்குச் செல்வதையே நிறுத்தி விட்டான் அவன். அனைத்துப் பெண்களையும் போல அர்ச்சனாவையும் கடந்து விட முடியவில்லையே என அவனுடைய மனம் அக்கணமும் அங்கலாய்த்துக் கொண்டுதான் இருந்தது. அதே கணம் அவனுடைய அறைக் கதவு தட்டப்பட “எஸ் கம்

12. காதலோ துளி விஷம் Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே..2

குறிஞ்சி மலர்..2 காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்த வேப்ப மரத்தின் கீழே, வெயில் தீண்டாமல் பாதுகாப்பாக இருப்பது போல, அந்த ஓட்டு வீடு அமைந்திருந்தது. வெளியே மரத்தின் கீழே சாய்மனைக் கட்டில் போட்டு, அதில் சாய்ந்தமர்ந்து கொண்டு, வெத்திலையை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தார், அந்த ஓட்டு வீட்டின் ராணி திரிலோகநாயகி. அவரது ஆனந்தமான அந்த வேலையைக் குழப்புவது போல, வீட்டின் வெளி வாசலில் காரின் கோர்ன் சத்தங் கேட்கவே, நம் வீட்டுக்கு யாருப்பா அது காரில் வருவது

அசுரனின் குறிஞ்சி மலரே..2 Read More »

அன்னமே 2

அத்தியாயம் 2 ஒரு கம்பில் எலுமிச்சம் பழத்தை கட்டி முடிஞ்சு வைத்திருந்தது. “தூஊ இவனெல்லாம் பெரிய மனுஷன்னு சுத்திக்கிட்டு இருக்கானே. இப்படியாப்பட்ட வேலையை பண்றதுக்கு குட்டையில விழுந்து சாவலாம்” கம்பை மண்ணிலிருந்து உருவி ஓரமாய் நட்டுவிட்டு நடந்தாள். “இதுக்கெல்லாம் பயந்தா எப்படி பொழைக்கறது?” வரப்பில் நடந்தவள், சும்மா போகாமல் கடலைச் செடியை வேரோடு பிடுங்கி ஒவ்வொன்றாய் சாப்பிட்டவாறே நடந்தாள். “ஏண்டி கருவாச்சி முள்ளு வேலி போட்டு வச்சிருக்கன், மந்திருச்சு கட்டிவச்சிருக்குது. எதுக்குடி உள்ள வந்த?” மண்வெட்டியை தோளில்

அன்னமே 2 Read More »

11. காதலோ துளி விஷம்

விஷம் – 11 அதிர்ந்து சிலை போல நின்றுவிட்டவளை நெருங்கிய யாழவனோ “என்ன அச்சு தேங்க்ஸ் சொல்லலையா..?” எனச் சிரிப்போடு கேட்க, “ஐயோ.. அங்கேயே நில்லுங்க.. பக்கத்துல வந்தா அவ்வளவுதான்..” என்றவள் இரண்டடி பின்னால் நகர்ந்து நிற்க, புருவங்களைக் கேள்வியாக உயர்த்தினான் அவன். “எங்க ஊர்ல நாங்க இப்படியெல்லாம் தேங்க்ஸ் சொல்ல மாட்டோம்.. த.. தப்புத் தப்பா பேசுறீங்க..” என்றாள் அவள். “வாட் ஜஸ்ட் ஹக்ல என்ன இருக்கு..?” வியந்து போய் கேட்டான் அவன். “வாட்..? ஜெஸ்ட்

11. காதலோ துளி விஷம் Read More »

error: Content is protected !!