அத்தியாயம் 4
என்ன அக்கா மாப்பிள்ளை வீட்ல இருந்து இன்னும் வரல. ஒரு வேலை அவங்களுக்கு பிடிக்கலயோ என்று கிட்சனில் வேலை செய்து கொண்டே ஜோதியிடம் கேட்க?
தெரியலையே இரு அவர்கிட்ட கேட்கலாம் என்று ஹாலுக்குள் வர
அருணாச்சலம் போனில் பேசிக் கொண்டிருந்தார்…
அவர் மனைவியிடம் “ஒரு அரைமணி நேரத்தில் வந்திடுவாங்க மா” என்றார்…
கௌசல்யா அவரிடம் “மாமா ஏதும் ப்ராப்ளம் இல்லைங்க தானே.. என்று கேட்க?”
இல்லை மா” அவங்க வந்துட்டு தான் இருக்காங்க”..
இப்ப தான் வீட்டுக்கு எப்படி வரதுன்னு ரூட் சொல்லிட்டு இருந்தேன்..
நீ தேவை இல்லாமல் டென்ஷன் ஆகாத என்று கூறினார்…
கண்ணன் கௌசல்யாவிடம் ” கௌசல்யா போய் ரிலாக்ஸா இரு… அவங்க வீட்டில வந்திட்டு இருக்காங்க…. இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவாங்க…. என்று கூறினார்…
அண்ணி ஸ்நாக்ஸ் எல்லாம் ரெடி தானே.. எதாவது வாங்கனுமா ? என்று கேட்க..
இல்லைங்க தம்பி எல்லாம் ரெடியா இருக்கு என்று கூறினார்…
ரூம்க்குள்ளே மனதிற்குள் ஒரு பட்டிமன்றமே நடத்திக்கொண்டு இருந்தாள் பிரகதி…
அவளுக்கோ படபடப்பாக இருந்து…
இன்னும் வரல போல என்று யோசித்துக் கொண்டிருந்தவளின் அறை கதவு தட்டப்பட…
கதவை திறந்தாள் அம்மா, பெரியம்மா அவள் அறைக்குள் நுழைந்து…
அவள் சிறிது ஒப்பனை செய்து கொண்டே “பிரகதி மாப்பிள்ளை வீடு இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவாங்க டா”..
நாங்க சொன்ன பிறகு நீ வெளியே வந்தா போதும் என்றனர்…
அவள் சரியென்று தலையாட்டினாள்…
அழகா இருக்க என்று கன்னம் வழித்து திருஷ்டி எடுத்தனர்…
அப்பொழுது கார் வரும் சத்தம் கேட்டது…
பாப்பா அவங்க வந்துட்டாங்க நாங்க வெளியே போறோம்…
ரிலாக்ஸாக இரு என்று சொல்லி விட்டு வெளியே சென்றனர்…
அவளுக்கோ படபடப்பு அதிகம் ஆனதே தவிர குறையவில்லை…
கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது…..
வாசலில் அண்ணா அண்ணா என்று கூப்பிடும் குரல் கேட்டது…
அனைவரும் வெளியே வந்து பார்த்தபோது அவர்கள் வீட்டுக்கு அருகில் கடை வைத்திருக்கும் முருகன் வந்திருந்தார்..
என்னப்பா முருகா என்று கேட்க?
“நம்ம வீட்டு வழி கேட்டு வந்திருந்தாங்க.. விசாரிச்சப்ப நம்ம பிரகதி பாப்பாவ பொண்ணு கேட்டு வரதா சொன்னாங்க. அதனால தாங்க நானே கூட்டிட்டு வந்துட்டேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்”…
அரவிந்த் வீட்டினர் அனைவரும் காரில் இருந்து இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தார்கள்…
சரிங்க நீங்க பாருங்க என்று சொல்லி முருகன் கிளம்பிவிட்டார்…
அருணாச்சலம், கண்ணனும் கேட் அருகே சென்று அரவிந்த் வீட்டு முறை வரவேற்றனர்…
சுகுமாரன் அருணாச்சலத்திடம் கொஞ்சம் லேட்டாயிடுச்சுங்க ஏதும் தப்பா நினைச்சுக்காதீங்க? என்று கூறினார்..
அருணாச்சலம் பரவாயில்லங்க இதுல என்ன இருக்கு தப்பா நினைக்கிறதுக்கு..
வாங்க வீட்டுக்குள்ள போகலாம் என்று வந்த அனைவரையும் வரவேற்றார்..
பெண்கள் இருவருக்கும் அரவிந்தை பார்த்ததுமே திருப்தியாக புன்னகைத்துக் கொண்டனர்…
இருவருமே ஒருவரையொருவர் பார்த்து சிரித்தும் கொண்டனர்..
அவர்கள் அமர்ந்தவுடன் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தனர்…
பிறகு சுகுமார் அவர் குடும்பத்தினரை அறிமுகம் செய்து வைத்தார்…
தேவகி, மூத்த மகன் அபிஷேக் அவன் மனைவி திவ்யா.. அவர்களுடைய மகள்.. பிறகு அரவிந்தை அறிமுகம் செய்து வைத்தார்…
அவனும் அவர்களை பார்த்து சிரித்து வைத்தான்..
அவனுக்கும் ஒரு மாதிரி இருக்க கொஞ்சம் படபடப்பாக உணர்ந்தான்..
ஜோதி நக்ஷத்திராவை வாங்கிக்கொண்டு அவளுக்கு விளையாட்டு காட்ட ஆரம்பித்தார்.. குழந்தையும் அவரோடு ஒட்டிக்கொண்டது…
பிறகு கண்ணன் அவரது குடும்பத்தினரை அறிமுகம் செய்து வைத்தார்..
அவரது அண்ணன் அருணாசலம் அண்ணி ஜோதி,தன் மனைவி கௌசல்யா என்று கூறினார்…
எங்களுக்கு எல்லாம் எங்க அண்ணன் அண்ணி தான் எங்களுக்கு எல்லாம் என்று கூறினார் கண்ணன்..
தேவகி பிரகதி எங்கே என்று கேட்க?
அவ ரூம்ல இருக்கா என்றவுடன்..
அருணாச்சலம் தன் மனைவியிடம் பிரகதி ய அழைச்சிட்டு வா என்க அவர் சென்றார்..
அதற்குள் கௌசல்யா கிட்சன் சென்று காஃபியை கப்களில் ஊற்றி ட்ரேயில் அடுக்கி எடுத்து வந்து பிரகதியிடம் கொடுத்தார்…
அவளோ ஜோதியின் கையைப் பற்றிக் கொண்டு எனக்கு பயமா இருக்கு என்றாள்…
அடியே எல்லாம் வெளியே வெயிட் பண்றாங்க என்று ட்ரேயை கையில் கொடுத்து எல்லார்க்கும் கொடு என்றார்..
மூச்சை நன்றாக உள்ளிழுத்து எப்படியோ ஹாலுக்கு வந்து காஃபியை ஒவ்வொருவருக்கும் கொடுத்தாள்.தேவகி சிரித்த முகத்துடன் வாங்கி கொள்ள அவரைத் தொடர்ந்து சுகுமார் மற்றும் திவ்யா வாங்கிக்கொண்டனர். பிறகு
அருகருகே இரு நபர்கள் அமர்ந்து இருக்க யார் மாப்பிள்ளை என்று தெரியவில்லை அவளுக்கு…
என்ன மா யோசிக்கிற காஃபி கொடு என்றார் பெரியப்பா..
பிரகதி பெரியம்மாவை பார்க்க. அவரோ “ரெட் ஷர்ட்ல இருக்கவர் தான் அரவிந்த் டா என்றார்”…
அவள் அடுத்து அபிஷேகிடம் காஃபியைக் கொடுக்க.. ஹாய் மா நான் அபிஷேக், அரவிந்தோட அண்ணன் என்று சொல்ல அவனைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தாள்..
அடுத்து அரவிந்திடம் காஃபியை நீட்ட அவன் காஃபி எடுக்கும் போது அவளைப் பார்த்து கண் சிமிட்ட அவளுக்கு பதறிப் போனது… உடனே கிட்சனுக்குள் சென்று விட்டாள்.. அவளுக்கு முகம் சிவந்து விட்டது…
இந்த செயலை கண்ட அபிஷேக் அவன் தோளில் மெலிதாக இடித்தான்.
அரவிந்த்க்கும் மெல்லிய முறுவல் தோன்றியது..
அண்ணனை பார்த்துக்கொண்டு தலை குனிந்து கொண்டான்..
அவர்களுக்கு ஸ்நாக்ஸ் கொடுத்தார் கௌசல்யா…
சிறிது நேரம் பொதுவாக உரையாடல் நடந்தது…
பிறகு சுகுமார் எங்களுக்கு பிரகதிய ரொம்பவே பிடிஞ்சிருக்கு என்று பேச்சுவார்த்தையை தொடங்க..
நாங்க பிரகதி கிட்ட தம்பியோட ஃபோட்டோ எதுவும் காட்டல….அதனால தான் அவ கொஞ்சம்கன்ஃப்யூஸ் ஆகிட்டா என்று சொல்ல..
அரவிந்திடம் பிரகதி வீட்டு ஆட்கள் பேசிக் கொண்டிருந்தனர்..
பிரகதியிடம் வந்த திவ்யா “அவளை அறிமுகப் படுத்திக் கொள்ள” இருவருக்குமே சகஜமாக பேசிக்கொண்டு இருந்தார்கள்..
அங்கு வந்த தேவகி பிரகதியிடம் அவளை பற்றி அவள் படிப்பு பற்றி விசாரிக்க, இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள்…
தேவகிக்கு பிரதியை மிகவும் பிடித்து விட்டது…
தேவகி இளைய மகனிடம் சென்று ஆலோசித்துக் கொண்டு இருக்க..
அம்மா நீங்களே பேசிட்டு இருந்தா எப்படி ? பிரகதிகிட்ட பேச வைங்க என்றான்…
ஏண்டா! அவசர படாதே… நான் பேசறேன் என்றார்…
அம்மா அன்னைக்கு அந்த ஃபங்சன்ல பார்க்கும் போதே எனக்கு அந்த பொண்ண பிடிச்சிருந்தது என்றான்..
டேய் கொஞ்சம் அமைதியா இரு. அந்த பொண்ணுக்கு இன்னைக்கு காலையில தான் நாம வரது தெரியும்.. கொஞ்சம் டைம் கொடு டா.. அவ நெர்வஸா இருக்கா என்றார்..
ஒரு வேலை அவளுக்ளுக்கு என்ன பிடிக்கலைன்னு சொன்னா என்ன பன்றது என்று கேட்டான்?
அவளுக்கு பிடிக்கலனா என்ன பண்றது..
வேற பொண்ணு பார்க்கலாம் என்றார் அவனை வெறுப்பேற்ற …
எனக்கு அவள ரொம்பவே பிடிஞ்சிருக்கு மா…
டேய் அவங்க வீட்டில அவ கிட்ட பேசிட்டு இருக்காங்க வெயிட் பண்ணு என்றார் தேவகி…
இதே நேரம் பிரகதியிடம் அவள் வீட்டார் பேசிக் கொண்டிருந்தனர்…
மாப்பிள்ளைய பிடிச்சிருக்கா? என்று கேட்க..
அவங்க ரொம்ப நல்ல மாதிரி தான் தெரிய ராங்க…
அரவிந்த் நல்லா எதார்த்தமா தான் பேசுறாங்க என்று அவளிடம் அவனைப் பற்றி கூறினார்கள்…
சரி சரி நம்மளே பேசிட்டு இருந்தா எப்படி?
மாப்பிள்ளை பொண்ணு கிட்ட தனியா பேச ஆசைப்பட்டார் போல அவரோட அம்மா சொன்னாங்க என்றார்…
சரி நான் பிரகதிய மாடிக்கு அழைச்சிட்டு வரேன். நீங்க அரவிந்த மாடிக்கு அழைச்சிட்டு போங்க என்றார் ஜோதி..
அம்மா நான் பேச போகலமா எனக்கு பயமா இருக்கு என்றாள் பிரகதி…
கௌசல்யாவின் கையை அழுத்தமாக பற்றி கொண்டாள் பிரகதி.
அக்கா அவ பயப்படுறா போல கண்டிப்பா பேசணுமா என்று கௌசல்யா கேட்க?
முதல்ல அவங்க போய் பேசட்டும்…
அப்ப தான அவ முடிவு சொல்ல கரெக்டா இருக்கும் என்றார் அவள் தந்தை…
மாடியில் இருவருக்கும் பேச ஏற்பாடு செய்தனர்..
பிரகதி குனிந்து தலை நிமிராமல் அரவிந்த் அருகில் நின்றாள்…
அரவிந்த் பேசப் பேச அவளுக்கு கூச்சமாக இருந்தது….
இவர்கள் இருவரும் பேசி முடித்து கீழே வரும் போது அவர்களின் நிச்சயத்திற்கு தேதி குறித்துக் கொண்டிருந்தனர் பெற்றோர்கள்..
பிரகதியின் முகம் எந்தவித பதட்டமும் இல்லாமல் சிரித்த முகமாக இருக்க. அவள் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது..இருந்தாலும் கௌசல்யா மகளை தனியாக அழைத்துச் சென்று கேட்டார்..
அவளும் சம்மதம் கூறிவிட்டாள்..
அரவிந்த் பிரகதி கிட்ட என்ன பேசிருப்பாங்க …அடுத்த எபில பார்க்கலாம்…